புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த தானம் Poll_c10ரத்த தானம் Poll_m10ரத்த தானம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
ரத்த தானம் Poll_c10ரத்த தானம் Poll_m10ரத்த தானம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ரத்த தானம் Poll_c10ரத்த தானம் Poll_m10ரத்த தானம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ரத்த தானம் Poll_c10ரத்த தானம் Poll_m10ரத்த தானம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ரத்த தானம் Poll_c10ரத்த தானம் Poll_m10ரத்த தானம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த தானம் Poll_c10ரத்த தானம் Poll_m10ரத்த தானம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
ரத்த தானம் Poll_c10ரத்த தானம் Poll_m10ரத்த தானம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ரத்த தானம் Poll_c10ரத்த தானம் Poll_m10ரத்த தானம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ரத்த தானம் Poll_c10ரத்த தானம் Poll_m10ரத்த தானம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ரத்த தானம் Poll_c10ரத்த தானம் Poll_m10ரத்த தானம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த தானம்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jan 20, 2010 8:18 pm





ரத்த தானம் என்பது ரத்தம் தேவைப்படுவோருக்கு ஒருவர் ரத்தம் கொடுத்து உதவுவதாகும்.

இல்லாத ஒருவருக்கு இருக்கும் ஒருவர் கொடுத்து உதவும்போது அங்கு தேவை நிறைவடைகிறது. இதனைத்தான் தானம் என்கிறோம்.

ரத்தம் என்பது யாருக்கும், எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம். விபத்து, அறுவை சிகிச்சை, நோய் என எந்த காரணத்திற்காகவும் ரத்தம் தேவைப்படலாம். அப்பொழுது ரத்த தானம் செலுத்த விரும்புபவரை தேடி அவரிடம் இருந்து ரத்தம் பெற்று நோயாளிக்கு செலுத்துவது என்பது இயலாத காரியம்.

எனவே தான் ரத்த வங்கிகள் செயல்படத் துவங்கின. அதாவது, ரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களிடம் இருந்து ரத்தத்தைப் பெற்று அதனை பாதுகாத்து, ரத்தம் தேவைப்படும்போது அதனை அவர்களுக்குக் கொடுத்து உதவும் ஒரு அமைப்புதான் ரத்த வங்கியாகும்.

ரத்தம் என்பது என்ன?

ரத்தத்தில் மூன்று விதமான செல்கள் இணைந்திருக்கும். அதாவது வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், ரத்தத்தை உறைய வைக்கும் அணுக்கள் ஆகியவையாகும்.

ரத்தத்தில் இருக்கும் சிவப்பணு, நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் செல்லும். பின்னர் அப்பகுதிகளில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை நுரையீரலுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

வெள்ளை அணுக்கள் படை வீரர்களைப் போன்று செயல்படுவார்கள். உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிப்பது, வேறு ஏதேனும் கிருமிகள் உடலுக்குள் நுழைந்தால் அவற்றை அழிப்பது போன்ற வேலைகளைச் செய்யும்.

ரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் என்ன செய்யும் என்று சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. நாமே உணர்ந்திருப்போம், நமக்கு ஏதேனும் சிறய காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் 5 நிமிடங்களிலேயே வெளியே வந்த ரத்தம் உறைந்து மேலும் ரத்தக் கசிவு நிறுத்தப்படுகிறது. ரத்தத்தை உறைய வைக்கும் மிக முக்கிய வேலையை செய்யும் செல்கள் பிளேட்லெட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.

ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா என்ற செல்கள் குளுகோஸ், கொழுப்பு, புரதம், நொதிப்பு மற்றும் ஹார்மோன்களை சுமந்து செல்லும் அமைப்பாக செயல்படுகின்றன.

ரத்தத்தின் வகைகள்

ரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது ஏ, பி, , ஏபி ஆகும். இந்த 4 வகைகளில் மனிதன் ஏதாவது ஒரு வகையாகத்தான் இருப்பான்.

அதிலும் ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய ரத்த அமைப்புகள் உள்ளன.

ஒவ்வொருவரும் தங்களது ரத்த வகையை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ரத்த தானம் பெறுவதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது ஏ வகை ரத்தம் கொண்டவர்கள் ஏ வகை ரத்தத்தை மட்டுமே தானமாகப் பெறலாம். இது எல்லா வகை ரத்தத்திற்கும் பொருந்தும்.

ஆனால் ஏதாவது மிகுந்த நெருக்கடியான நேரங்களில் வேண்டுமானால் எந்த ஒரு ரத்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஓ வகை ரத்தத்தை அவருக்கு செலுத்தலாம். அதேப்போன்று ஏபி ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு எந்த வகை ரத்தத்தையும் அளிக்கலாம்.

ரத்த வங்கிகளின் வேலை

ரத்தத்தை தானமாக அளிப்பவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தத்தை முழுமையான பரிசோதனைக்கு அனுப்புகின்றனர்.

அதாவது, எய்ட்ஸ், பால்வினை நோய், மலேசியா, மஞ்சள் காமாலை போன்று ஏதாவது நோய் தாக்கியிருப்பவரின் ரத்தமா என்பது நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையில் அவை சுத்தமானது என்று தெரியவந்த பிறகுதான் ர‌த்த வங்கியின் பாதுகாப்பு முறைக்கு தயார் ஆகிறது.

ரத்த பாதுகாப்புக்கான முறைகள் கையாளப்பட்டு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.

இதுபோன்று தானமாக பெறப்பட்ட ரத்தம் சுமார் 35 நாட்கள் வரை பாதுகாக்கப்படும். அதற்குள் பெறப்பட்ட ரத்தத்தை பயன்படுத்திவிடுவது நல்லது.

தற்போது நவீன தொழில்நுட்பத்தின் வாயிலான ரத்தத்தில் உள்ள செல்களைத் தனித்தனியேப் பிரித்து பாதுகாக்கும் முறை வந்துவிட்டது.

அதாவது ரத்தத்தில் உள்ள சிவப்பணு, வெள்ளை அணு, ரத்தத்தை உறைய வைக்கும் செல், பிளாஸ்மா என எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்தெடுத்து அவற்றை பாதுகாத்து வைக்கலாம்.

ரத்த வங்கிகள் தாங்கள் பெறும் ரத்தத்தில் 85 விழுக்காடு ரத்தத்தை இப்படி பிரித்துத்தான் பாதுகாக்கின்றன.

ஏனெனில் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளில் பலருக்கு முழு ரத்தமும் தேவைப்படாது. உதாரணத்திற்கு, ஹ்யூமோக்ளோபின் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு சிவப்பணுக்கள் மட்டுமே தேவைப்படும். தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு பிளாஸ்மா செல்கள் மட்டுமேத் தேவைப்படும். விபத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ரத்த உறையாதவர்களுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் மட்டுமேத் தேவைப்படும்.

அந்த சமயங்களில் நோயாளிக்குத் தேவையான ரத்தத்தில் இருந்து தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டிருக்கும் செல்கள் மட்டும் அவர்களுக்கு அளிக்கப்படும்.

எனவே ஒருவர் அளிக்கும் ரத்தத்தின் மூலமாக பலர் பயனடையும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் பல்வேறு ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

ரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது ரத்தம் செலுத்த நினைத்தாலோ, பாரத் பிளட் பேங்க், இந்தியன் பிளட் டோனர்ஸ், பிளட் கிவ்வர்ஸ், ஜீவன், பிளட் டெனேஷன், ஆப், ரெட் கிராஸ், ரோட்டரி பிளட் பேங்க் ஆகிய அமைப்புகளின் இணையதளங்களை நாடலாம்.

இந்தியாவில் மொத்தமாக 2,212 ரத்த வங்கிகள் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. அதில், மஹாராஷ்டிராவில் 270 ரத்த வங்கிகளும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 240 ரத்த வங்கிகளும், ஆந்திராவில் 222 ரத்த வங்கிகளும் செயல்படுகின்றன.

ரத்தத்தை தானமாக அளிப்போம். உயிர்களைக் காப்பாற்றுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக