புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 7:06 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 5:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 5:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 3:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:29 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:53 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:09 am

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:42 am

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:40 am

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 8:34 am

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 8:32 am

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 8:31 am

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:55 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:54 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:53 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:53 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:51 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 7:39 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:37 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 6:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 1:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 9:30 am

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:29 am

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 9:28 am

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 am

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 am

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 9:21 am

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 6:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 6:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 6:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 7:12 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 5:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 3:23 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்காப்பிய இலக்கணம் (619)


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 09, 2022 5:44 am

First topic message reminder :

தொல்காப்பிய இலக்கணம் (570)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்ததாகத் தொல்காப்பியர் இடைச்சொற்களைப் பாகுபடுத்திக் காட்டுகிறார்:-

அவைதாம்
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுநவும்
வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி யாகி வருநவும்
இசைநிறைக் கிளவி யாகி வருநவும்
தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருசெய் குநவுமென்று
அப்பண் பினவே நுவலுங் காலை (இடையியல் 2)

‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக் குதவுநவும்’ – இரு சொற்கள் புணரும்போது, இடையே ஏதேனும் ஒரு பொருளுக்காக வருவனவும்,
‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்’ – வினைச் சொல்லில் காலம் , பால்,இடம் காட்டுபவைகளும்,
‘வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்’- வேற்றுமைப் பொருளைத் தரும் உருபுகளாக நிற்பவையும்,
‘அசைநிலைக் கிளவி யாகி வருநவும்’ – தனக்கெனப் பொருள் இலாது, தான் சார்ந்த பெயர் வினைகளோடு ஒட்டிநின்று அவற்றைச் சிறப்பிக்க உதவுவனவும்,
‘இசைநிறைக் கிளவி யாகி வருநவும்’ – செய்யுளில் இசையை நிறைக்க வருபவைகளும்,
‘தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்’ – கூறுபவர்களின் குறிப்புப் பொருளை வெளிப்படுத்த நிற்பவைகளும்,
‘ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும் என்று’ – வெவ்வேறு பொருட்களாக இருந்தாலும், ஏதோ ஒரு ஒப்புமையால் ஒன்றுபட்டு நிற்க உதவுபவைகளும்,
‘அப்பண் பினவே நுவலுங் காலை’ – ஆகத் திகழ்வதே இடைச்சொற்களாம்,உரைக்கப் புகின்!

இப்படி நடக்கும் இடைச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

1 . ’ புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுந’

பாட்டு +இன் + இனிமை = பாட்டின் இனிமை
இதில், ‘இன்’ எனும் சாரியை இடைச்சொல் , நடுவே வந்து , பொருளைத் தருகிறது; ‘பாட்டு’, ‘இனிமை’ என்று தனித் தனியாக நின்றால் பொருள் திரளாது என்பதைக் கவனிக்க!

2 . ‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருந’
வாழ்+ வ்+ஆன் = வாழ்வான்
இங்கே, ’வ்’எனும் இடைச்சொல்லாகிய எதிர்கால இடைநிலை வந்ததால்தான் ‘வாழ்வான்’ என்ற வினைச்சொல்லுக்குப் பொருளே ஏற்படுவதைக் காண்கிறோம்.

3 . ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந’

குமணனை வாழ்த்தினான் – இங்கே, ‘ஐ’ எனும் இடைச்சொல்லாகிய வேற்றுமை உருபுதான் தொடர்ப் பொருளையே நல்குவதைக் காணலாம்; இல்லையேல், ‘குமணன் வாழ்த்தினான’ என நின்று , வாழ்த்தியவன் குமணன் எனும் தவறான பொருள் அல்லவா ஏற்படும்?

4 . ‘அசைநிலைக் கிளவி யாகி வருந’
சேனாவரையரின் விளக்கம்- “அசைத்தல் – சார்த்துதல். பொருளுணர்த்தாது பெயரொடும் வினையொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசைநிலை யாயிற்று.அவை ‘அந்தில்’ முதலாயின. ‘புகழ்ந்திகு மல்லரோ பெரிதே’, ‘உரைத்திசினோரே’ எனச் சார்ந்த மொழியை வேறுபடுத்து நிற்றலின்,அசைநிலைச் சொல்லாயின என்பாரு முளர்”

இங்கே ஒன்றை நான் தெளிவுபடுத்த வேண்டும்!

‘அசைநிலை’ வேறு, ‘அசைச் சொல்’ வேறா?
உரையாசிரியர் சிலரின் நடை இந்த ஐயத்தை நமக்குத் தோற்றுவிக்கிறது!

அசைநிலை வேறு, அசைச் சொல் வேறு எனத் தொல்காப்பியர் கருதியிருந்தால், இடைச் சொற்களைப் பாகுபடுத்திக் கூறும் அவரின் பட்டியலில், இரண்டும் அல்லவா இடம் பெற்றிருக்க வேண்டும்?பட்டியலில் ‘அசைநிலைக் கிளவி’ என்ற ஒன்று மட்டும்தானே உள்ளது?

‘மா’ எனும் சொல், வியங்கோளை அடுத்துவரும் ‘அசைச் சொல்’ எனத் தொல்காப்பியர்(இடை.25) கூறச் ,சேனாவரையர், “அது வியங்கோளைச் சார்ந்து, ‘அசைநிலையாய் வரும்’’என்றார்.
இதனால், அசைநிலையும் அசைச் சொல்லும் ஒன்றுதான் என்பது தெளிவாகிற தல்லவா?
ஆகவே,
அசைநிலைக் கிளவி =அசைநிலைச் சொல் = அசைநிலை= அசைச் சொல் !

மேற் சேனாவரையர் உரையிற் கண்ட இரு அசைநிலைகளை வருமாறு பார்க்கலாம்-

புகழ்ந்திகு மல்லரோ பெரிதே – இதில், ‘இகும்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.
உரைத்திசினோரே - இதில், ‘இசின்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.

5 . ‘ இசைநிறைக் கிளவி யாகி வருந ’

இசையை நிறைக்க வரும் சொல் , இசைநிறை இடைச்சொல் எனப்படும்.
இசையை நிறைக்க – யாப்புக் குறையைப் போக்க
‘கடாஅக் களிற்றின்மேல்’ – இந்த இரு சீர்களில், முதற்சீரிலுள்ள ‘அ’வை எடுத்துவிட்டால், ‘கடாக்’ என்று ஒரே ஒரு நிரைஅசையாக மட்டும் நிற்கும்; சீர் கிடைக்காது;யாப்பிலக்கணம் பிழையாகும். ஆகவே சீர் ஏற்பட்டு, யாப்பிலக்கணம் செம்மையாக, ‘அ’ சேர்க்கப்படுகிறது; இதுவே இசை நிறைக்கப்படுதல்.
இங்கே ‘அ’ , இசைநிறைக்கும் இடைச்சொல்.

இன்னோர் எடுத்துக்காட்டு:
‘காடிறந் தோரே’ – இதில், இரண்டாம் சீரின் ஈற்றில் உள்ள ஏகாரமே இசைநிறைக்க வந்த இடைச்சொல். ஏன்?
ஈற்று ஏகாரத்தை எடுத்துவிட்டால், ‘தோர்’ என்பது மட்டுமே மிஞ்சும்; இஃது ஓர் அசைதானே தவிரச் சீர் ஆகாது; சீர் ஆக்கவேண்டும் என்பதற்காகவே ஈற்றில், ‘ஏ’ சேர்க்கப்படுகிறது; அஃதாவது, யாப்பியல் நோக்கில் சேர்க்கப்படுகிறது; இதனால்தான் ‘இசை நிறை’ எனப்படுகிறது.
6 . தத்தங் குறிப்பிற் பொருள்செய்குந

‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறம்235)- இதில், ‘மன்’ எனும் இடைச்சொல் வந்துள்ளது. ‘சிறு அளவிலான கள் இருந்தால் அவன் எனக்குத் தந்துவிடுவான்! அப்படிப்பட்ட அரசன் அவன் ! அது ஒரு காலம்!’ எனக் கடந்துபோன (கழிந்துபோன) செயலைக் குறிப்பது எது? ‘மன்’அல்லவா? இதனால், ‘மன்’ எனும் இடைச்சொல், கழிவுப் பொருளைக் குறிப்பால் தருகிறது என்கிறோம்!

7 . ‘ஒப்பில் வழியாற் பொருசெய்குந’

இதற்கும் உரையாசிரியரிடையே வேறுபட்டு கருத்துகள் உண்டு!

நம் விளக்கத்தை வருமாறு வைக்கலாம்.

காளை மாடும் மணி என்ற மனிதனும் ஒன்றா?
வேறு வேறுதானே?
இரண்டையும் ஒன்று எனக் கூற முடியாது என்பதே , ‘ஒப்பில் வழி’!
ஆனால், இப்படிப்பட்ட ‘ஒப்பில்வழி’யாக இருப்பினும் , சில உருபுகளைப் போட்டுப் நாம் விரும்பிய பொருளை வெளிப்படுத்துகிறோம்! இந்த உருபுகளை நாம் உவம உருபுகள் என்கிறோம்! இவைகள் இடைச்சொற்களே!

காளை அன்ன மணி – இங்கே , ‘காளை’ , ‘மணி’ ஆகியன ஒப்பில்வழிச் சொற்கள்; ஆனால், ‘அன்ன’ எனும் இடைச்சொல்லால், நம்மால் ஓர் ஒப்பீட்டைத் தர முடிந்துள்ளது!இதைத்தான் தொல்காப்பியர் தன் நூற்பாவில் குறித்துள்ளார்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 17, 2022 8:25 am

தொல்காப்பிய இலக்கணம் (580)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இனி, ‘மற்றையது’ எனும் இடைச்சொல்!:

மற்றைய தென்னுங் கிளவி தானே
சுட்டுநிலை யொழிய இனங்குறித் தன்றே (இடையியல் 16)

சேனாவரையரின் எடுத்துக்காட்டின்படி – ஒருவர் ஓர் ஆடையை உங்களுக்குக் காட்டுகிறார்; அது உங்களுக்குப் பிடிக்கவில்லை; அப்போது நீங்கள், ‘இது வேண்டாம், வேறொன்றைக் கொணருங்கள்’ என்கிறீர்கள்; இந் நேரத்தில், ‘மற்றையதைக் கொணருங்கள்’ என்றும் கூறலாம். ‘மற்றையது’ , இங்கே இடைச்சொல்.
இங்கு , மற்றையது – இன்னொன்று; இந்த ‘இன்னொன்று’ , இதே இனத்தில் , இதே பொருள் வகையில் இருக்கவேண்டும்; துணியைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது ‘மற்றையது’ , இன்னொரு துணியைத்தான் குறிக்குமே அல்லாமல், ‘இன்னொரு நகை’யைக் குறிக்காது!’. இதுவே ‘இனங்குறித்தல்’.
இனங்குறித்தன்று – இனத்தைக் குறித்தது
சுட்டு நிலை = சுட்டிப் பேசிக்கொண்டிருக்கும் பொருள்

நீங்கள் கேட்டபடி, இன்னொரு ஆடையைக் கடைக்காரர் உங்களுக்குக் காட்டுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்போது அவர், ‘மற்றையது இது’ எனக் கூறுகிறார் எனில், இங்கே ‘மற்றையது’, தன்னைத் தானே சுட்டிக்கொள்கிறது ; அதே இனத்தில் வேறு ஆடையைச் சுட்டாது. இந்த விளக்கமும் சேனாவரையரின் உரைக்கு மேல் விளக்கமே.

இங்கே நாம் பார்த்து மகிழ்ந்தது , 600,700 ஆண்டுகளுக்கு முந்தய தமிழகத்துக் காட்சியாகும்!
இவ்வாறு ‘ தொல்காப்பிய உரைக் காட்சிகள்’ என்பதே தனித்து ஆயத்தக்க ஆய்வுத் தலைப்பாக (Research Topic)உள்ளது! இந்த ஆய்வு இதுவரை நிகழ்த்தப்படவில்லை!

இப்போது – ‘மன்ற’ எனும் இடைச்சொல்!

மன்றெவென் கிளவி தேற்றஞ் செய்யும் (இடையியல் 17)

மன்ற என்னும் சொல், தெளிவைத் தரும் – இதுவே நூற்பாப் பொருள்.
தேற்றம் - தெளிவு

சேனாவரையரின் எடுத்துக்காட்டு – ‘மடவை மன்ற வாழிய முருகே’ (நற்றிணை 34)
மடவை மன்ற- நீ மடையன்தான்!
வாழிய முருகே – முருகனே வாழ்வாயாக!
- இங்கே ‘மன்ற’ எனும் இடைச்சொல்லானது, ஒரு தெளிவைத் தருவதற்காக ஆளப்பட்டுள்ளதை நோக்கலாம்; ‘மடையனே’, ‘மடையன்தான்’ , ‘மடவையே’ என்பன தெளிவைத் தருதல் காண்க.
இதற்கடுத்த இடைச்சொல் – ‘தஞ்சம்’!:

தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே (இடையியல் 18)

எண்மை – எளிமை

சேனாவரையரின் எடுத்துக்காட்டு – முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம் (புறம் 73)
முரசு கெழு தாயத்து – முரசானது முழங்கக் கூடிய எனது உரிமைச் சொத்தாகிய
அரசோ தஞ்சம் – அரசாட்சியை நான் கொடுப்பது எளிது
சோழன் நலங்கிள்ளி , தன் மீது நெடுங்கிள்ளி போர் தொடுத்தபோது கூறியது இது.
இங்கு, ‘தஞ்சம்’ எனும் இடைச்சொல் பயின்றுள்ளதை நோக்கலாம்.

‘உங்களையே தஞ்சம் என்று வந்தேன்’ என ஒரு பெண், ஆணிடம் கூறும் வேளையிl, ‘தஞ்சம்’, இடைச்சொல் அல்ல! பெயர்ச்சொல்!

நாம் பார்க்கபோகும் இடைச்சொல் ‘அந்தில்’!:

அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவியென்று
ஆயிரண் டாகும் இயற்கைத் தென்ப (இடையியல் 19)

இதற்குச் சேனாவரையர், “அந்தில் என்னுஞ் சொல் ‘ஆங்கு’ என்னும் இடப்பொருள் உணர்த்துவதும், அசைநிலையும் என இரண்டாம்” என்றார்.

(அ)இடைச்சொல் ‘அந்தில்’ ,என்பது ‘ஆங்கு’ எனும் பொருளில் – ‘வருமே சேயிழை அந்திற், கொழுநற் காணிய’ (குறுந். 293). ‘அணிகலன்களைப் பூண்ட பரத்தை அங்கே தலைவனைக் காண வருவாள்’ என்பது பாடற் கருத்து. இங்கே ‘அந்தில்’ எனும் இடைச்சொல்லானது, ‘ஆங்கு’ எனும் பொருளில் வந்துள்ளதை நோக்கலாம்.
(ஆ)இடைச்சொல் ‘அந்தில்’ ,என்பது அசைநிலையாய் வருவது – ‘அந்திற் கச்சினனன் கழலினன்’ (அகம் 76). ‘இடுப்பிலே கச்சையும் , காலிலே கழலையும் உடைய’ ஆட்டனத்தியை இந்த அடி பேசுகிறது.
ஆட்டனத்தி – ஆட்டன் அத்தி; ஆட்டன் – ஆட்டக்காரன் ; நடனக்காரன்.
மேலை அடியில்,’அந்தில்’ எனும் இடைச்சொல்லானது, பொருட் குறிப்பு ஏதுமின்றி, அசைநிலையாக வந்துள்ளதைக் காணலாம்.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 17, 2022 2:17 pm

தொல்காப்பிய இலக்கணம் (581)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது ‘கொல்’ எனும் இடைச்சொல்!:

கொல்லே ஐயம் (இடையியல் 20)

’கொல்’ எனும் இடைசொல்லானது ஐயப் பொருளில் வரும்.

‘குற்றி கொல்லோ மகன் கொல்லோ’ எனக் ‘கொல்’ ஐயத்துக்கண் வந்தது என்றார் சேனாவரையர்.
ஓர் உருவம் எதிரில் தெரிந்தது; அது மரக்கட்டையா? ஆளா? தெளிவில்லை!
இந்த நிலையில்தான் அவன் ‘குற்றி கொல்லோ மகன் கொல்லோ’ என்கிறான்; இங்கே ‘கொல்’ எனும் இடைச்சொல்லானது ஐயப் பொருளை வெளிப்படுத்து நிற்கக் காண்கிறோம்.

அடுத்த இடைச்சொல் நூற்பா –
எல்லே இலக்கம் (இடையியல் 21)

சேனாவரையர் , “எல் என்பது இலங்குதற்கண்” என உரை கூறுகிறார்.
இலக்கம் - இலங்குதல் – விளங்குதல்; விளங்கித் தோன்றுதல்; நலம்பெற்றுத் திகழ்தல்.

அவரது எடுத்துக்காட்டு – எல்வளை (புறம் 24)
எல்வளை – ஒளிமிகு, சிறப்பான வளையல்
இதில், ‘எல்’ எனும் இடைச்சொல்லானது ’இலக்கம்’ எனும் பொருளில் வந்தமை காணலாம்.
விளங்கித் தோன்றுதலுக்கும் ‘எல்’லுக்கும் என்ன தொடர்பு?
விளங்கவில்லை!
இந்தச் சிந்தனை, சேனாவரையருக்கு வந்துள்ளது!
அதனால்தான் , “எல் என்பது உரிச்சொல் நீர்மைத்து ஆயினும் , ஆசிரியர் இடைச்சொல்லாக ஓதினமையான், இடைச்சொல்லென்று கோடும்” என்றார்!
கோடும் – கொள்ளப்படும்
‘எல்’ எனும் சொல், அடிப்படையில் உரிச்சொல்லாகவே காணப்படினும், ஆசிரியர் இடைச்சொல் எனச் சொல்லிவிட்டதால் நாமும் அப்படியே எடுத்துக்கொள்வோம் என்பது சேனாவரையரின் தீர்ப்பு!
ஆசிரியர் - தொல்காப்பியர்
தொல்காப்பியரின் உரியியலில் ‘எல்’ இல்லை !
சேனாவரையர், தொல்காப்பியத்திற்கு எவ்வளவு மதிப்பளித்துள்ளார் என்பதை நாம் இங்கே நினைக்கவேண்டும்! இதுதான் பழந்தமிழ்க் கல்விமுறை (Ancient Educational System of Tamil Country)என்பதையும் நாம் உளங்கொள வெண்டும்!

மு.சண்முகம் பிள்ளை, தனது தொல்காப்பிய உரை நூலில் (முதற் பதிப்பு 2006), தந்துள்ள அடிக்குறிப்பு இங்கே எழுதத் தக்கது:
“இலக்கணக் கொத்து நூலாசிரியர் , ‘எல்லே விளக்கம்’ எனப் பாடம் கொண்டுள்ளனர். சொல்லதிகாரம் ஓர் ஏட்டுப் பிரதியில் ‘எல்லே இரக்கம்’எனப் பாடம் கோடற்கு ஏது உண்மையின் சிலர் ‘இரக்கம்’ எனப் பாடங் கொண்டு, ‘எல்லே இளங்கிளியே’ எனத் திருப்பாவையில் வரும் இப் பகுதியை உதாரணமாகக் காட்டுகின்றனர். இப் பாவை உரையாசிரியர் ‘எல்லே’ என்பதற்கு ‘என்னே’ எனப் பொருள் கொண்டுள்ளனர்.”
இக் கருத்து, தொல்காப்பியச் செம்பதிப்பு (Critical Edition of Tholkappiyam) ஆய்வு நோக்கில் இன்றியமையாததாகும்.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 18, 2022 5:48 am

தொல்காப்பிய இலக்கணம் (582)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , ‘ஆர்’ எனும் இடைச்சொல்!:

இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடிமே (இடையியல் 22)

இயற்பெயர் முன்னர்- இயற் பெயர்கள் முன்னாலே,
ஆரைக் கிளவி – ‘ஆர்’ எனும் சொல் வரும்போது,
பலர்க்குரி எழுத்தின் – ‘ர்’ எனும் எழுத்துக் கொண்டு
வினையொடு முடிமே – முடியும் வினைச்சொல் முடிவு பெறும்.

கன்ணன் , சோமன், குட்டுவன் , அந்துவன் , நரி, நாய், அக்காள், அத்தான் – எல்லாம் இயற் பெயர்களே!
‘ஆர்’ எனும் இடைச்சொல்லைக் , ‘கண்ணன்’ முன்னே போட்டுக், ‘கண்ணனார்’ என நீங்கள் எழுத ஆசைப்பட்டால், அந்தத் தொடரை எப்படி முடிப்பீர்கள்? இதற்கு விதிதான் மேலைத் தொல்காப்பியரின் நூற்பாவில் உள்ளது!
கண்ணன் வந்தான் √
கண்ணனார் வந்தான் ×
கண்ணனார் வந்தார் √
மூன்றாம் தொடர்தான், பலர்க்குரி எழுத்தான ‘ர்’ கொண்டு முடியும் வினையான ‘வந்தார்’ என்ற சொற்கொண்டு நிறைவு பெறுகிறது!

இதே ‘ஆர்’ எனும் இடைச்சொல்லானது, அசைநிலைக் கிளவியாகவும் வரும் என்பது அடுத்த நூற்பா:
அசைநிலைக் கிளவி ஆகுவழி யறிதல் (இடையியல் 23)

அசைநிலைக் கிளவி – ‘ஆர்’ எனும் அசைச் சொல்லானது,
ஆகுவழி அறிதல் – தொடர்களில் வரும்; அந்த இடங்கள் வரும்போது அறிந்துகொள்க!
சேனாவரையரின் எடுத்துக்காட்டு –
(i)பெயரினாகிய தொகையுமா ருளவே (தொல்.சொல். 67)
தொகையும் +ஆர் = தொகையுமார்
இங்கு, ‘தொகையும்’ என்பதன் ஈற்று ‘உம்’மை அடுத்து, ‘ஆர்’ இடைச்சொல் வந்துள்ளதைக் கவனிக்க.
(ii)எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே(தொல்.எழுத். 61)
செல்லும் +ஆர் = செல்லுமார்
இங்கு, ‘செல்லும்’ எனும் ‘உம்’ ஈற்று வினை முன்னர் , ‘ஆர்’ இடைச்சொல் வந்துள்ளதைக் காணலாம்.

சேனாவரையர், ‘இப்படிப்பட்ட இரு வகைகளில்தான் ‘ஆர்’ அசையாக வரும்; வேறு வழியில் வராது’ என்று குறிக்கிறார்; குறித்த கையோடு, ‘சிறுபான்மை பிறாண்டு வருமேனும் கொள்க!’ என்று ஒரு பாதுகாப்புக்காகச் சொல்லியும் வைத்துள்ளார்!
’பிறாண்டு’ என்றால், பக்கத்து ஆளைப் பிறாண்டுவதல்ல!
பிறாண்டு = பிற ஆண்டு ; பிற இடம்
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 18, 2022 3:03 pm

தொல்காப்பிய இலக்கணம் (583)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஆர்’ இடைச்சொல்லை அடுத்து, இரு இடைச்சொற்களைக் கையில் எடுக்கிறார் தொல்காப்பியர் :
ஏயுங் குரையும் இசைநிறை அசைநிலை
ஆயிரண் டாகும் இயற்கைய வென்ப (இடையியல் 24)

‘ஏ’ மற்றும் ‘குரை’ இரண்டு இடைச்சொற்களும் இசைநிறைக்கவும் அசைநிலைக்காகவும் வரும் என்பது நூற்பாக் கருத்து.

சேனாவரையர் எடுத்துக்காட்டுகளுக்கு விளக்கம் :

1 . ஏ – இசை நிறைக்க வரல்
ஏஎ யிஃதொத்த னென்பெறான் கேட்டைக் காண் (கலி.61)

இதில், முதற் சீருக்குக்காக – யாப்புக்காக – ‘ஏ’ எனும் இடைச்சொல் வந்துளது; இஃது எப்போதும் அளபெடையோடுதான் வரும் என்பதை முன்பே கண்டுள்ளோம்!

2 . ஏ – அசைநிலையாக வரல்
தெய்வச்சிலையார் எடுத்துக்காட்டு - ‘ஏ தெளிந்தேம்யாம்’
- இங்கே ‘ஏ’ , யாப்பு நோக்கில் வரவில்லை; வெறும் அசைநிலையாகவே இடப்பட்டுள்ளது.
3 . குரை- இசைநிறையாக வரல்
சேனாவரையர் எடுத்துக்காட்டு – ‘அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே’ (புறம் 5)
எடுத்துக்காட்டின் பொருள் – ‘கருணை மிக்க செயல் உனக்கு பெறுதற்கரிய அருமையுடைத்தது.’
ஈற்று நான்காம் சீருக்குக் ‘குரை’ எனும் இடைச்சொல் வேண்டும்; இல்லையாயின் அடி முழுமை பெறாது! ‘குரை’தான் வேண்டும் என்பதில்லை; வேறு எந்த இடைசொல்லை அந்த இடத்தில் எழுதினாலும் அதையும் ‘இசை நிறைக்க வந்தது’ என்றே குறிப்பர். இங்கே ‘குரை’யை வைத்து யாப்பைக் காப்பாற்றி உள்ளதால், ‘குரை’யானது, ‘இசைநிறை இடைச்சொல்’லானது.

4 . குரை – அசைநிலையாக வரல்
சேனாவரையர் எடுத்துக்காட்டு – ‘பல்குரைத், துன்பங்கள் சென்று படும்’ (குறள்1045)

இதில், முதற் சீரான ‘பல்குரை’ என்பதில், ‘குரை’ அசைநிலையாக வந்த அழகே அழகு! ‘குரை’ என்பதற்குப் பொருளே இல்லை(Expletive); ஒரு சீர் அசைப்புக்காகவே வந்துள்ளது. ‘குரை’தான் அசைப்புக்காக வரவேண்டும் என்பதில்லை; வேறு அசைகளும் வரலாம்,யாப்புக்கு ஊறு வராமல்!வள்ளுவர் தேர்ந்தெடுத்தது ‘குரை’!
அசைநிலை அமைப்பதிலும் நல்ல கவித்துவம் உள்ளது மேல் எடுத்துக்காடே சான்று! இலக்கியத் திறனாய்வில் (Literary Criticism) இது குறிப்பிடத் தக்கது!
‘கவித்துவ நோக்கில் அசைநிலைகள்’ (Expletives From Literary Criticism Standpoint) என்பதே தனித்து ஆயத்தக்க பெரிய ஆய்வுத் தலைப்பு!

இப்போது ‘மா’ எனும் இடைச்சொல்!:
மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல் (இடையியல் 25)

இதற்குச் சேனாவரையரின் ‘நச்’ உரை – “மாவென்னு மிடைச்சொல் வியங்கோளைச் சார்ந்து அசைநிலையாய் வரும்”.

‘மா’ எனும் இடைச்சொல்லானது,பெரும்பாலும், ஒரு வியங்கோட் சொல்லை அடுத்தே வரும்.

சேனாவரையரின் எடுத்துக்காட்டு – ‘புற்கை யுண்கமா கொற்கை யோனே’
தெய்வச்சிலையாரின் எடுத்துக்காட்டு – ‘ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’

உண்க , ஓர்க – இரண்டும் வியங்கோள் வினைச்சொற்கள்; இவற்றை அடுத்து, ‘உண்கமா’, ‘ஓர்கமா’ என்று ‘மா’எனும் இடைச்சொல் வந்துள்ளதைக் காணலாம்.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 19, 2022 5:26 am


தொல்காப்பிய இலக்கணம் (584)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முன்னிலை அசைச் சொற்களை இப்போது காட்டுகிறார் தொல்காப்பியர் :

மியாஇக மோமதி இகும்சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (இடையியல் 26)

சேனாவரையர் முதலானோரின் எடுத்துக்காட்டுகளை விளக்கமாகக் காணலாம்.

1. மியா – முன்னிலை அசைச்சொல்
‘கேண்மியா’ , ‘சென்மியா’ – என்பனவற்றில் ‘மியா’ வந்துள்ளதை நோக்கலாம்.
கேண்மியா = கேள் +மியா ; ’கேள்’ என்பதே பொருள்; ‘மியா’ , அசைச்சொல்.
சென்மியா = செல் +மியா ; ‘செல்’ என்பதே பொருள்; ‘மியா’ , முன்னிலை அசைச்சொல்;தனக்கு முன்னே நிற்பவரிடம் கூறுவதாக வருவதே ‘முன்னிலை.’

2 . இக – முன்னிலை அசைச்சொல்
“தண்டுறை ஊர காணிக எனவே ” – இவ்வடியில் ‘இக’ பயின்றுள்ளதைக் காணலாம்.
காணிக = காண்+ இக ;’காண்’என்பதே பொருள்; ‘இக’ முன்னிலை அசைச்சொல்.

3 . மோ- முன்னிலை அசைச்சொல்
சேனாவரையரின் காட்டு – ‘காமஞ் செப்பாது கண்டது மொழிமோ’ (குறுந். 2)
மொழிமோ – மொழி; சொல்லு. ‘மோ’ , இங்கு முன்னிலை அசைச்சொல்; தனக்கு முன்னே இருக்கும் வண்டைப் பார்த்துக் கூறுவதாக வந்துள்ள நடையைக் கவனிக்க.

4 . மதி - முன்னிலை அசைச்சொல்

‘உரைமதி வாழியோ வலவ’ என்பதில்,
உரைமதி –உரை; உரைப்பாய்
இதில் ‘மதி’ எனும் இடைச்சொல் வந்துள்ளது; இது முன்னிலை அசையாகவே நிற்கிறது;எதிரில் இருப்பவரைப் பார்த்து ‘உரை’ என்பதாக வருகிறதல்லவா?

5 . இகும் – முன்னிலை அசைச்சொல்

‘மெல்லம் புலம்ப கண்டிகும்’ - இங்கு, வந்துள்ள, கண்டிகும் = காண்.எதிரில் நிற்பானைப் பார்த்துக் கூறுவதாக அமைவதால் ‘இகும்’, முன்னிலை அசை ஆயிற்று ; ‘இகும்’ என்பதற்கு வேறு எப்பொருளும் இல்லை என்பதையும் கவனிக்க.

6 .இசின் – முன்னிலை அசைச்சொல்

‘காப்பும் பூண்டிசின் கடையும் போகலை’ (அகம் 7) ; இங்கு, பூண்டிசின் = பூண். தனக்கு முன்னே நிற்பாரிடம் மொழிவதாக இருப்பதால், ‘முன்னிலை’; ‘இசின்’ என்பதற்குப் பொருள் இல்லையாதலால், அசைச்சொல்.

மேல் ஆறு முன்னிலை அசைச்சொற்களையும் காட்டிய கையோடு தொல்காப்பியர் என்ன வரைகிறார் பாருங்கள் :

அவற்றுள்
இகுமுஞ் சின்னும் ஏனை யிடத்தொடும்
தகுநிலை யுடைய என்மனார் புலவர் (இடையியல் 27)

முதலில் ஆறு இடைச்சொற்களும் முன்னிலை அசைச்சொற்களாகவே வரும் என்று சொல்லிவிட்டு, இப்போது ‘ஆறில், ‘இகும்’, ‘ சின்’ ஆகிய இரண்டும் ஏனை இரு இடங்களிலும் வரும் என்று புலவோர் கூறுவர்’ என்கிறார்!

இப்படிச் சொல்வதற்கு என்ன காரணம்?

‘ஆறும் முன்னிலை அசைச்சொற்களாக வரும்’ என்பது தொல்காப்பியர் படித்த இலக்கணம்! அவர் காலத்திற்கு முன்பு இருந்த இலக்கணம்! ஆனால், அவர் காலத்தில் பல இலக்கியங்கள் புதிதாகத் தோன்றிவிட்டதால், இலகண வளர்ச்சி ஏற்பட்டது; வழக்கிலும் வளர்ச்சி ஏற்பட்டது; இவற்றை உள்ளடக்கி இலக்கணம் செய்யவேண்டிய பொறுப்பானது தொல்காப்பியருக்கு ஏற்பட்டது; அகத்தியம் முதலான பழைய நூற்கள் இருந்தாலும் வளர்ச்சிகளை உள்ளடக்கிப் புது இலக்கணம் எழுதும் தேவை ஏற்பட்டது; அப்படி எழுதப் புகுந்ததால்தான், வளர்ச்சி நிலைகளைப் பழைய இலக்கணத்திற்கு அடுத்து வைத்துச் சென்றுள்ளார். ‘புறனடை’ நூற்பாக்களையும் இக் கண்ணோட்டத்துடனே நாம் அணுக வேண்டியவர்களாக இருக்கிறோம்!

இப்போது நூற்பாவுக்கு வருவோம்:
“இகும், சின் ஆகிய அசைகள், முன்னிலை இடத்துக்கு மட்டுமல்லாது, தன்மை, படர்க்கை ஆகிய இடங்களிலும் பயின்று வரும்”என்பது நூற்பாப் பொருள்.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கிக் காண்போம்.

1 . இகும் – தன்மை, படர்க்கை இடங்களுக்கும் வரல்

‘கண்டிகும் அல்லமோ’ (ஐங்.121); கண்டிகும் – கண்டோம்;‘கண்டோம் அல்லவோ’ என்பது பொருள்; இங்கே ‘இகும்’ எனும் அசைநிலையாம் இடைச்சொல், தன்மை இடப்பொருளில் வந்துள்ளது தெரிகிறது.

‘புகழ்ந்திகும் அல்லரோ பெரிதே’; புகழ்ந்திகும் – புகழ்ந்தார்; ‘புகழ்ந்தார் அல்லரோ பெரிதே’ என்பது பொருள்; இங்கே ‘இகும்’ எனும் அசைநிலை இடைச்சொல், படர்க்கை இடப் பொருளில் நிற்கக் காண்கிறோம்.

2 . சின் – தன்மை, படர்க்கை இடங்களுக்கும் வரல்

‘கண்ணும் படுமோ என்றிசின் யானே’ ; என்றிசின் – என்றேன். இவண், ‘சின்’ எனும் அசைச்சொல்லானது, தன்மை வினையொடு வந்ததைப் பார்க்கிறோம்.

’யாரஃ தறிந்திசி னோரே’ (குறுந்.18); அறிந்திசினோர் – அறிந்தவர்; இங்கே, ‘சின்’னானது, படர்க்கை இடத்தில் பயின்றதைக் காணலாம்.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 19, 2022 3:09 pm

தொல்காப்பிய இலக்கணம் (585)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நாம் பார்க்கப்போவது , ‘அம்ம’!:

‘அம்ம’ என்பதும் ஓர் இடைச்சொல்தான்; ஆனால் அசைச்சொல் அல்ல! ‘ஒருவரை விளித்து ,இதைக் கேள்’ என்று கூறும் பொருளைத் தாங்கி வருவது இந்த இடைச்சொல்!தொல்காப்பியம் :

அம்ம கேட்பிக்கும் (இடையியல் 28 )

ஆனால், ‘அம்ம’ மேலே சொல்லப்பட்ட பொருளைத் தவிர வேறு பொருளில் வராது!

‘அம்ம வாழி தோழி’ (ஐங்.21)
’அம்ம வாழி தோழி’ (குறுந். 77)
- இந்த இரு இடங்களிலுமே ‘அம்ம’, கேட்பிக்கும் பொருளில் வந்த இடைச்சொல்தான்!

‘அம்ம’ வேறு, ‘அம்மா’ வேறு!
‘அம்மா’ எனும் பெயர்ச்சொல், தாயைக் குறிக்கும்; இஃது, இடைச்சொல் அல்ல.

அடுத்து நமக்கு அறிமுகமாக்கும் இடைச்சொல் – ‘ஆங்க’!:

ஆங்க உரையசை (இடையியல் 29)

ஆங்க – ‘ஆங்க’ எனும் இடைச்சொல்லானது,
உரையசைச் சொல்லாக வரும்.

சேனாவரையர் காட்டு - ‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டி’

இங்கே , ‘ஆங்க’வுக்குப் பொருள் ஏதுமில்லை; வெறும் அசையாகவே நிற்கிறது;ஆனால் இந்த அசை, ‘உரையசை’ எனக் குறிக்கப்படுகிறது.

உரை – கட்டுரை; புனைந்துரை; புனைவு செய்து உரைப்பது.
உரையாசிரியன்மார் கருத்துப்படி , அசைத்தல் = சேர்த்தல்; பிற சொல்லுடன் ஒரு சேர்க்கை
யாக ஒட்டி வருவது.
மேல் ‘ஆங்கே’, ‘அங்ஙகனே எனப் புனைந்துரைத்து நின்றது’ என்று விளக்கம் தந்தவர் நச்சர்.

நச்சர் உரையை முழுமையாகத் தருகிறேன்; இதில் இன்னொரு இலகண நுணுக்கமும் உங்களுக்குக் கிட்டும்!:
“ ‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டிக், கேள்வனை விடுத்துப் போகியோளே’ என்புழி, ‘அங்ஙனே’ எனப் புனைந்துரைத்து நின்றது.சிறிது பொருள் உணர்த்துவனவற்றை ‘உரையசை’ என்றும் , பொருள் உணர்த்தாது சொற்களை அசைத்து நிற்பனவற்றை ‘அசைநிலை’ என்றுங் கூறுதல் ஆசிரியர் கருத்தாதலை இரண்டு அதிகாரத்துங் கண்டுகொள்க!”

அங்ஙனே – அவ்விதமாக; அந்த வண்ணமே; அப்படியாக

இவ்விடத்தில், ‘உரையசை’த் தலைப்பின் கீழ்த் தமிழ் லெக்சிகன் தருவது அறியத் தக்கது – “Word which has lost much ot its original signification and is almost an expletive as ஆங்க; தன்னாற்றலைப் பெரும்பான்மையு மிழந்து சிறிது பொருளுணர்த்தி வரும் இடைச்சொல்.(தொல்.சொ.279,உரை) ” (Tamil Lexicon, Vol I.Part I, p.452, University of madras, Reprint, 1982)
லெக்சிகன் கருத்து நச்சர் உரையின் மேல் எழுந்தது. ‘சிறிது பொருள்’ என்ற நச்சர் கருத்தைத்தான், ‘தன்னாற்றலைப் பெரும்பான்மையும் இழந்து’ என லெக்சிகன் எழுதுகிறது.
அஃதாவது , ‘ஆங்க’வுக்கு இங்கே தனிப்பொருளில்லை; தனிப்பொருளை இழந்துவிட்டது; ஆனால், ‘ஆங்ஙனே’ என்ற யூகப் பொருள் , புனைவுப் பொருள், ’சிறிது பொருள்’ மட்டுமே தெரியவருகிறது; இதனால் இஃது ‘உரையசை’ ஆயிற்று.

அடுத்தது ‘ஒப்பில் போலி’!:

ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும் (இடையியல் 30)

காலையில் இருபது இட்லி சாப்பிட்டிருப்பான் போல, அதுதான் கத்தறான்! – இதில், ‘போல’ என்று எதையும் எதனோடும் ஒப்புமை கூறவில்லை; ஆனால், ‘போல’ எனும் சொல் (இதுதான் ‘போலி’) மட்டும் வந்துள்ளது; இதுவே ‘ஒப்பில் போலி’!
சேனவரையர் எடுத்துக்காட்டு – ‘மங்கலம் என்பதோர் ஊர் உண்டு போலும்’

‘போலும்’ என்ற உவமைச் சொல் வந்தாலும், தொடரில் எதையும் எதனோடும் ஒப்புமை கூறவில்லை! ஒப்புமை கூறாத ‘போலி’ , ஒப்பில் போலி!
இந்த ஒப்பில் போலிகளாகிய ‘போல’ , ‘போலும்’ ஆகியன ‘உரையசை’களே!ஏனெனில், இவை தம் பொருளாகிய உவமைப் பொருளில் வராமல் , ஒரு புனைவுப் பொருளில் வந்துள.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 20, 2022 12:27 pm

தொல்காப்பிய இலக்கணம் (586)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஒரே மூச்சில் , ஏழு இடைச்சொற்களாம் அசைநிலைச் சொற்களை அடுக்கித் தருகிறார் தொல்காப்பியர்:

யாகா
பிறபிறக் கரோபோ மாதென வரூஉம்
ஆயேழ் சொல்லு மசைநிலைக் கிளவி (இடையியல்31)

சேனாவரையர் முதலானோர் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கித் தரலாம்:

1 . யா – அசைநிலையாக வரல்
‘யா பன்னிருவர் மாணாக்கருளர் அகத்தியனார்க்கு’- இங்கே, ‘யா’ எனும் இடைச்சொல்லானது(Particle), அசைநிலையாக (Expletive) வந்துநிற்கக் காண்கிறோம். எடுத்துக்காட்டுத் தொடருக்குப் ‘ பன்னிருவர் மாணாக்கருளர் அகத்தியனார்க்கு’ என்பது மட்டுமே பொருள்; ‘யா’வுக்குப் பொருளில்லை.
‘யா’ எனும் அசைநிலை நமக்கு விநோதமாக உள்ளது!
ஆனால், இது வழக்கில் இன்றும் தமிழகத்தில் உள்ளது! நெல்லைப் பகுதியில் , ‘யா அவன் ஏமாத்துக்காரன்யா!’; ‘யா வாங்கின கடனைக் கொடுக்கணும்ல!’ என்றாங்கு தொடர்களில் ‘யா’வருகிறது; திரைப்பட வசனங்களிலும் இது கையாளப்பட்டுள்ளது!
இவ்வாறு நாம் தொல்காப்பியத்தை இன்றைய தமிழோடு ஒப்பிட்டு ஆய்வது நம் கடமை!
2 . கா – அசைநிலையாக வரல்
‘புறநிழற் பட்டாளோ இவளிவட் காண்டிகா’ (கலி.99:9) – இதற்கு, ‘உன் வெள்ளைக் கொற்றக் குடை அறநெறியை நிழலாகக் கொடுக்கிறது; அத்தகு குடையின் நிழலுக்குப் புறம்பே இவள் கிடக்கிறாளோ? இவளைப் பார்.’ என்பது பொருளாம்.
காண்டிகா = காண்டி= காண் = பார்
காண்டி + கா= காண்டிகா; கா – அசைநிலை ; பொருள் ஏதுமில்லை.

இலங்கை மட்டக்கிளப்புப் பகுதியில் , இன்றும், ‘வாகா = வா; போகா = போ’ என்றே வழங்குகிறது எனக் குறித்துளர்; இங்கெல்லாம், ‘கா’வானது பொருளற்ற அசைச்சொல்லாகவே நிற்பதைக் காண்கிறோம்.
3 . பிற– அசைநிலையாக வரல்
‘தான்பிற, வரிசை யறிதலில் தன்னுந் தூக்கி’ (புறம். 140:5,6)
(தான் – அரசன்; பிற – அசை; வரிசை – இரவலர்க்குக் கொடுத்தல்; அறிதலில் – அறிந்துள்ளதால்; தன்னும் – தனது உயர்வை ; தூக்கி – எண்ணி)
‘பிற ’ , இங்கே பொருளின்றி வந்தை அசைச்சொல்.

4 . பிறக்கு – அசைநிலையாக வரல்
‘நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய’ (புறம். 15:15)
‘உன்னை வெல்லலாம் என்ற ஆசையுடன் வந்தோரின் ஆசை ஒழிய’ என்பது இவ்வடியின் பொருள்; இங்கு, ‘பிறக்கு’ , அசைநிலை; பொருளற்றது.
இன்றைய வழக்கில், ‘பொறவு’ , ‘பின்னே’ ஆகியன இதற்கு இணையான அசைகளாக வருகின்றன!
‘அவன் விரட்டப்போறான் பொறவு’; ‘பொறவு அவன் வந்து உன்னைக் கேட்பான்’- இங்கெல்லாம் ‘பிறகு’ என்ற பொருள் மறைந்து, ஓர் அசைநிலையாகப் ‘பொறவு’ நின்றிடக் காண்கிறோம்.
‘போயிட்டு வந்துவிடு பின்னே’; ‘சரி பின்னே நான் வந்துடறேன்’- இங்கும் ‘பிறகு’ என்ற பொருள் மறைந்து, ஓர் அசைநிலையாகப் ‘பின்னே’ நின்றிடக் காண்கிறோம்.

‘தொல்காப்பிய நோக்கில் தற்கால அசைச்சொற்கள்’ (Expletives in present day Usage Under the Light of Tholkappiyam) – என்பதே தனி ஆய்வுத் தலைப்பு(Research Topic)!

5 . அரோ – அசைநிலையாக வரல்
‘நோதக இருங்குயில் ஆலுமரோ’ (கலி.33: 24,25)
‘நோவு செய்யும் குயில் பாடும்’ என்பதே பொருள்; ‘அரோ’வுக்குப் பொருளில்லை; அசையே.
6 . போ - அசைநிலையாக வரல்
‘பிரியின் வாழா தென்போ தெய்ய’
‘பிரிந்தால் வாழாது ’ என்பதே திரள் கருத்து; ‘போ’ , அசைச்சொல்லே.
இன்றைய வழக்கில் , ‘மாட்டிக்கிட்டான்; செத்தான் போ’ ; ‘பத்துமணிக்குச் சாப்பாடு போட்டிடலாம் போ’ என்றெல்லாம் கூறுவர்; இங்கெல்லாம் யாரையும் ‘போ’ என விரட்டவில்லை! ‘போ’ , பொருளற்ற அசையாகவே வருகிறது.

7 . மாது - அசைநிலையாக வரல்
‘விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவென் நெஞ்சே’ (நற். 178)
’அவரை நம்பிய என் நெஞ்சுக்கு இப்படித்தான் தோன்றுகிறது’ என்பதே பொருள் ; ‘மாது’ என்பதற்குப் பொருள் ஏதுமில்லை ; அசையே!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 21, 2022 7:47 am


தொல்காப்பிய இலக்கணம் (587)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சில அசைச் சொற்கள் இரட்டை இரட்டையாகவே வரும் ; தனியாக வராது!:

ஆக ஆகல் என்பது என்னும்
ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை (இடையியல் 32)

‘ஆக, ஆகல்,என்பது – இம் மூன்றும் தனித்து நின்று அசைநிலை ஆகமாட்டா’ – இது சேனாவரையர் உரை.

இவற்றை விளக்கிச் சேனாவரையர் நுவல்வதை நாம் வருமாறு எளிமைப்படுத்திக் காண்போம்:

1 . “நான் இப்படிப்பட்டவன்” என் ஒருவன் கூறியபோது, கேட்டவன், “ஆக ஆக” என்றால், கேட்டவன், சொன்னவனின் கருத்தை ஏற்கவிலை என்பது பொருள்; சொன்னவன் மீது , கேட்டவனுக்கு அன்பில்லை (இதுவே ‘ஆதரமில்வழி’) என்பது பொருள்.
கேட்டவன், “ஆக ஆக” என்பதற்குப் பதில், “ஆகல் ஆகல்” என்றாலும் இதே பொருள்தான்.

2 . “நீ இப்படிப்பட்டவன்” என் ஒருவன் கூறியபோது, கேட்டவன், “ஆக ஆக” என்றால், கேட்டவன், சொன்னவனின் கருத்தை ஏற்கவிலை என்பது பொருள்; சொன்னவன் மீது , கேட்டவனுக்கு அன்பில்லை என்று கொள்ளலாம்.
கேட்டவன், “ஆக ஆக” என்பதற்குப் பதில், “ஆகல் ஆகல்” என்றாலும் இதே பொருள்தான்.

3 . “அவன் இப்படிப்பட்டவன்” என் ஒருவன் கூறியபோது, கேட்டவன், “ஆக ஆக” என்றால், கேட்டவன், சொன்னவனின் கருத்தை ஏற்கவிலை என்பது பொருள்; சொன்னவன் மீது , கேட்டவனுக்கு அன்பில்லை என்பது கருத்து.
கேட்டவன், “ஆக ஆக” என்பதற்குப் பதில், “ஆகல் ஆகல்” என்றாலும் இதே பொருள் கொள்ளவேண்டும்.
4 . ஒருவன் ஒன்றைச் சொன்னபோது, கேட்டவன் , ‘என்பது என்பது’ என்றால், சொன்னவனின் கருத்தை ஆதரிக்கிறான் என்பது கருத்து; சிலபோழ்து, சொன்னவனின் கருத்தை எதிர்ப்பதற்கும், கேலி பேசுவதற்கும் இதே ‘என்பது என்பது’ வரும்.

ஏறத் தாழ இதுவே இளம்பூரணர் கருத்தும் தெய்வச்சிலையார் கருத்தும் ஆகும்;வெள்ளைவாரணர் சேனாவரையரின் கருத்தையே தந்துள்ளார். ஆனால், நச்சினார்க்கினியர் முற்றிலும் மாறுபடுகிறார்!
நச்சர், “ஆக ஆக என அடுக்கி வந்து, உடம்படாமையும் ஆதரமின்மையுமாகிய பொருள் தந்து நிற்கும் என்றல், அசைநிலைக்கு ஆகாமையின், அவ்வாறு கூறுதல் பொருளன்மை உணர்க!” என்கின்றார்!
‘பிரிவில் அசைநிலை’ என்பதற்கு நச்சர் கருத்து யாது?
நச்சர் கருத்து இதுதான் : “ ‘காரெதிர் கானம் பாடினேம் ஆக’ (புறம் 144:3) ……எனச் செயவென் எச்சம் முற்றாய்த் திரிவுழி, ஆக என்னும் இடைச்சொல் வந்து, அவற்றின் பொருளே உணர்த்திச் செயவென் எச்சமாய் நின்றது”.
சொற்கள் இரட்டித்து வந்து பொருள் தருவதை நமக்கு ஏற்கனவே ‘இரட்டைக் கிளவி’ கோடி காட்டியுள்ளது!ஆனால், இஃது, அசைச்சொல்லுக்கு ஆனதல்ல;இரட்டிப்பதற்கு மட்டுமே.
வழக்கில் இரட்டித்து அசைச்சொற்கள் வந்து பொருள் சொல்வதற்கான வேறு எடுத்துக்காட்டை நாம் காணவேண்டியவர்களாக இருக்கிறோம்; மேலாய்வுக்கு இடம் தருவது இது.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 21, 2022 1:59 pm


தொல்காப்பிய இலக்கணம் (588)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இடையியலில் நிற்கிறோம்!
இப்போது சிக்கலான ‘ஔ’!:-

ஈரள பிசைக்கும் இறுதியில் உயிரே
ஆயியல் நிலையுங் காலத் தானும்
அளபெடை யின்றித் தான்வருங் காலையும்
உளவென மொழிப பொருள்வேறு படுதல்
குறிப்பின் இசையால் நெறிப்படத் தோன்றும் (இடையியல் 33)

‘ஈரள பிசைக்கும்’ – இரண்டு மாத்திரை ஓசையில் ஒலிக்கும்,
‘இறுதியில் உயிரே’- சொல்லின் ஈற்றில் வராத ஔகாரம்,
‘ஆயியல் நிலையும் காலத்தானும்’ – பிரிவில் அசைநிலை என மேலே கூறப்பட்டவை போல இரட்டித்து நிற்கும் இடத்தும்,
‘அளபெடை இன்றித் தான் வரும் காலையும்’ – இரட்டிக்காமல் அளபெடையாக நிற்கும் இடத்தும், அளபெடை இன்றித் தான் வரும் இடத்தும்,
‘உளவென மொழிப பொருள்வேறு படுதல்’ - பொருளானது வேறுபடுதல் உண்டென்று கூறுவார்கள்;
‘குறிப்பின் இசையால் நெறிப்படத் தோன்றும்’ – அந்த வேறுபாடானது, சொல்பவனின் குறிப்பை ஒட்டி வரும் ஓசை வேறுபாட்டால் அறியப்படும்.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கினால்தான் புரியும்!:

1 . ஔஔ – இரட்டித்தல் (சிறப்புப் பொருளில்)
‘ஔஔ’ எனப் பிரிவில் அசையாக நின்று பொருள்படும்போது, கூறுவான் மதிப்புப்படக் கூறுகிறான் என்பது தெரியவரும் தொடர், தமிழிற் பண்டு இருந்துள்ளது!
‘ஔஔ அகத்தியர் தவம் செய்ததை அறிவீரா?’- இத் தொடரில், சொல்வான் அகத்தியரை மதித்து உயர்வாகக் கூறியுள்ளது எதனால் விளங்குகிறது? ‘ஔஔ’ என்ற பிரிவில் அசைநிலையாலும், அவனுடைய ஓசைக் குறிப்பாலும்!

தொல்தமிழில் இருந்த ‘ஔஔ’தான் , வெளிநாடு பரவி, ‘வாவ்’ ஆகியுள்ளது என மதிப்பிட இடம் உள்ளது! இதுபோன்ற பல சான்றுகளால்தான் ‘உலகின் முதன்மொழி தமிழ்’ என நம்மால் கூறமுடிகிறது!

2 . ஔஔ – இரட்டித்தல் (சிறப்பற்ற பொருளில்)

‘ஔஔ’ எனப் பிரிவில் அசையாக நிற்கும்போது, கூறுவான் மதிப்புக் குறைவாகக் கூறுகிறான் என்பது தெரியவரும் தொடரும் இருந்தது!
‘ஔஔ அவள் பாடியது போதும்’ – என்றால், அவள் பாடியது சரியில்லை என்பது பொருள்; இந்தக் குறிப்புப் பொருளைத்தரும் வகையில் வந்ததே ‘ஔஔ’ எனும் பிரிவில் அசைநிலை!
3 . ஔஉ – சிறப்புப் பொருளில்

‘ஔஉ குமணன் கொடை யாருக்கு வரும்?’- என்பது போன்ற தொடர் அந்தக் காலத்தில்- தொல்காப்பியர் காலத்தில் – இருந்துள்ளது! இங்கே ‘ஔஉ’ பேசப்படுபவரின் சிறப்புப் பற்றியதாக இருப்பதை நோக்கலாம்.

இங்கே ஒரு திராவிடமொழி ஆராய்ச்சி!
இன்றைய கன்னடத்தில், ‘ஔது = ஆமாம்’.
‘ஔது’ , கன்னடத்திற்கு எங்கிருந்து போனது?
தமிழிலிருந்து!
இதற்குச் சான்றுதான் நாம் இப்போது பார்த்தது! மேலோட்டமாக ஆய்ந்தால் இது நமக்குத் தெரியவராது! தொல்காப்பியத்தை நுணுக்கமாக ஆய்ந்தால்தான் தெரியவரும்! திராவிட மொழிகளின் ஆய்வுக்கு ஆடுகளமாக இருப்பது தொல்காப்பியம்!
’ஔஉ’, சிறப்புப் பற்றிய அசை எனக் கண்டோம்; இப் பொருளே ‘ஆமோதித்தல்’, அல்லது ‘ஏற்றுக்கொள்ளல்’ என விரிந்து , நடுவே ‘த்’ சேர்ந்து, ‘ஔது’ எனக் கன்னட மக்கள் நாவிற் புரண்டுள்ளது!
ஔ +த்+உ= ஔது (இதுவே ‘ஹவுது’)

4 . ஔ – சிறப்பு அற்ற பொருளில்
‘ஔ போதும் உன் கோபம்!’ என்ற மறைந்து போன பழந்தமிழ்த் தொடரில், அளபெடை இல்லாது ‘ஔ’க்குச் சிறப்புக் குறைவான பொருட் குறிப்பு இருந்துள்ளது!

‘ஔஔ’ – பிரிவில் அசைநிலை
‘ஔஉ’ – அளபெடை பெற்ற அசைநிலை எனும் இடைச்சொல்
‘ஔ’ - அளபெடை பெறாத இடைசொல்லாகிய அசைநிலை

மேலை ஆய்வால், ‘மறைந்து போன பழந்தமிழ்த் தொடர்கள்’ (Vanished Ancient Tamil Sentence Patterns )என்பதையே ஓர் ஆய்வுத் தலைப்பாகக் கொண்டு, உயர் ஆய்வு (High Level Research) செய்யலாம் என்பது தெரியவருகிறது!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 22, 2022 12:23 pm


தொல்காப்பிய இலக்கணம் (589)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சொல்பவனது ஓசைக்குறிப்பால் ,பொருளானது தெளிவுறும் அமையும் பிரிவில் அசைகளையும், பிரிந்து தனியாக வரக்கூடிய அசைகளையும் பற்றியதே அடுத்த நூற்பா:

நன்றீற்று ஏயும் அன்றீற்று ஏயும்
அந்தீற்று ஓவும் அன்னீற்று ஓவும்
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் (இடையியல் 34)

‘நன்றீற்று ஏயும்’ – ‘நன்றே’ எனும் சொல்லும்,
‘அன்றீற்று ஏயும்’ – ‘அன்றே’ என்னும் சொல்லும்,
‘அந்தீற்று ஓவும்’ – ‘அந்தோ’ என்பதும்,
‘அன்னீற்று ஓவும்’ – ‘அன்னோ’ எனும் சொல்லும்,
‘அன்ன பிறவும்’ – அப்படிப்பட்ட பிற சொற்களும்,
‘குறிப்பொடு கொள்ளும்’ – பேசுவானது குறிப்பை ஏற்று வரும்.

உரையாசிரியன்மார் உரைகளைத் தழுவி, மேலனவற்றை வருமாறு விளக்கலாம்.

1 . நன்றீற்று ஏ
‘நன்று’ எனும் சொல்லின் ஈற்றில் ‘ஏ’ பெற்ற சொல்.
நன்று + ஏ= நன்றே
‘நன்றே’ என்று அசையாக, முழுச் சொல்லாகக் கொள்ளவேண்டும்; ஏனெனில், பிரித்துப் பொருள் காண முற்பட்டால், ‘நன்று’ என்பது , குறிப்பு வினைமுற்றாக அமையும்; இடைச்சொல்லாக அமையாது; ஈற்று ‘ஏ’ மட்டுமே இடைச்சொல்லாக வரும்.
‘நன்றே’ என்பது , ‘நன்றே நன்றே’ எனப் பிரியாத அசைகளாகவும் வரும்; ஒன்று மட்டும் தனியாக ‘நன்றே’ என்றும் வரும். எப்படி வந்தாலும் , பேசுவானின் குறிப்பை ஏற்று வரத் தக்கதே.
‘நான் முயல் ஓவியம் வரைந்திருக்கிறேன் பாருங்கள்’ என ஒருவன் கூறினால், நீங்கள் அந்த ஓவியத்தை விரும்பவில்லை எனில் , அப்போது ‘நன்றே நன்றே’ என உங்களின் வெறுப்பைக் குறிப்பாகத் தெரிவிக்கலாம்; இதற்கு ‘நன்றே நன்றே’ என்ற பிரிவில் அசைநிலை தமிழில் இடம் தரும் என்பதே தொல்காப்பியம். உங்களுடைய அந்த வெறுப்புக் குறிப்பையே உரையாசிரியர்கள் ‘மேவாமைக் குறிப்பு’ என்கின்றனர்.
2 . அன்றீற்று ஏ

‘அன்று’ எனும் சொல்லின் ஈற்றில் ‘ஏ’ பெற்ற சொல்.
அன்று + ஏ= அன்றே
‘அன்றே’ என்று அசையாக, முழுச் சொல்லாகக் கொள்ளவேண்டும்; ஏனெனில், பிரித்துப் பொருள் காண முற்பட்டால், ‘அன்று’ என்பது , குறிப்பு வினைமுற்றாக அமையும்; இடைச்சொல்லாக அமையாது; ஈற்று ‘ஏ’ மட்டுமே இடைச்சொல்லாக வரும்.

முன் முயல் ஓவிய எடுத்துக்காட்டில், ‘நன்றே நன்றே’ என்பதற்குப் பதிலாக ‘அன்றே அன்றே’ எனக் கூறினாலும் அதே மேவாமைக் குறிப்பே.

‘அன்றீற்று ஏ’வுக்கு , மேவாமைக் குறிப்பு தவிர , தெளிவுப் பொருள் தரும் இடமும் தமிழில் உண்டு என்பார் சேனாவரையர்.

‘குமரன் அன்றே கம்பியை நிமிர்த்தியது’ - இதில், ‘அன்றே’ , தெளிவுப் பொருளில் வந்துள்ளதைக் காணலாம்.

3 .அந்தீற்று ஓ
அந்தீற்று ஓ - அந்தோ

‘அந்தோ’ எனும் அசை, ‘அந்தோ சுவர் இடிந்ததே!’ என்றபடி அடுக்காது தனியாக வந்தும், ‘அந்தோ அந்தோ வீடு தீப்பற்றியதே’ என அடுக்கியும் வந்து இரங்கற் குறிப்பை நல்கும்.

4 .அன்னீற்று ஓ
அன்னீற்று ஓ - அன்னோ
‘அன்னோ’ எனும் அசை, ‘அன்னோ தேர்வில் தோற்றானே!’ என்றபடி அடுக்காது தனியாக வந்தும், ‘அன்னோ அன்னோ மகன் இறந்தானே!’ என அடுக்கியும் வந்து இரங்கற் குறிப்பை நல்கும்.

5 . ‘அன்ன பிற’
சேனாவரையர், “அன்ன பிறவு மென்றதனான், ‘அதோ அதோ’ , ‘சோ சோ’ , ‘ஒக்கும் ஒக்கும்’ என்னுந் தொடக்கத்தன கொள்க” என்றார். இவை அடுக்கி வந்த அசைநிலைகள் !
நச்சர், இரக்கக் குறிப்புத் தரும் வேறு சில இடைச்சொற்களையும் எடுத்துக்காட்டுகளுடன் தருகிறார்:

1 . ‘அந்தோ’ – இடைச்சொல்
’அந்தோ எந்தை அடையாப் பேரில்’ (புறம். 261:1)

2 . ‘அன்னா’ - இடைச்சொல்
‘அன்னா அலமரும் ஆருயிரும்’

3 . ‘ஆ’ – இடைச்சொல்
ஆவம்மா அம்மாவென் அம்மா அகன்றனையே!(சீவக.1804)
ஆ+ அம்மா = ஆவம்மா; வ- உடம்படு மெய்; இடைச்சொல் , ‘ஆ’ .
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக