புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
74 Posts - 47%
heezulia
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
5 Posts - 3%
prajai
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
4 Posts - 3%
Jenila
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
2 Posts - 1%
jairam
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
1 Post - 1%
M. Priya
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
1 Post - 1%
kargan86
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
9 Posts - 4%
prajai
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
6 Posts - 3%
Jenila
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
4 Posts - 2%
Rutu
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
2 Posts - 1%
jairam
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடச் சிறுவர் கதைகள் (50)


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 02, 2022 6:50 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (1)

தூங்கிக் காலத்தைக் கழிக்காதே !

“பிள்ளைங்களா! சீக்கிரம் எழுந்திருங்கள்! எழுந்திருந்து பல்லை விளக்கிச், சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புங்க!” எனத் தாய் அதட்டினாள். “சீக்கிரம்! நேற்று லேட்டா போனதுமாதிரி இன்றும் போகக் கூடாது!” என்று துரிதப் படுத்தினாள்!

“சரி! வாங்க கூட்டிட்டுப் போறேன்! பள்ளிக்கு நடந்து போகக் கொஞ்சம் நேரம் ஆகும்! அதுவரை ஒரு கதை சொல்கிறேன்!” என்று தாய் கூறச், “சொல்லுங்க சொல்லுங்க” என்றனர் பிள்ளைகள்.
தாய் கதை சொன்னாள்.

ஒரு காட்டில் சில முயல்கள்! அவைகளுக்குள் ஒரு தலைவன்!

ஒரு நாள் தலைவன் முயல், பிற முயல்களைக் கூட்டியது; ஒரு முயல் மட்டும் வரவில்லை! கூப்பிடப் போன முயலிடம், ‘எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!என்னைத் தொந்தரவு செய்யாதே! போ!’ என்றது தூங்கும் முயல். “இல்லை! நம் தலைவர் நல்ல விஷயங்களைக் கூறவுள்ளார்! அவர் அனுபவசாலி! நீ இப்படித் தூங்காதே! ” என்றது கூப்பிடப் போன முயல். அதற்கும் தூங்கும் முயல் மசியவில்லை!

முயல் கூட்டத்தில், தலைவன் முயல், “கேளுங்க முயல்களே! மழைக்காலம் வரப்போகுது! காரட்டுகளை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலம் பார்த்து நரிகள் நம்மைத் தாக்கும்! பாதுகாப்பாக நாம் வேறு இடம் சென்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; இங்கு இருக்கக் கூடாது!” என்றது.

தலைவன் முயல் சொன்னது போலவே சில நரிகள் வந்தன! நரிகள், “ அட! ஒரு முயலையும் காணோமே! எல்லாம் போய்விட்டனவே! இன்று நாம் பட்டினிதான்! என்று புலம்பின!
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த முயல், “ஹாவ்! … தூக்கம் தூக்கமா வருது!...எங்கே யாரையும் காணலை? ” என்று விழிக்கவே, நரிகள் அதைப் பார்த்துவிட்டன! அவை அத் தூங்குமூஞ்சி முயல் மீது பாய்ந்து கொன்று, தின்றன!

“பிள்ளைகளே! கேட்டீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? சோம்பல் பட்டுக்கொண்டு , எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது என்பது புரிகிறதா?” எனத் தாய் கூறவும், பிள்ளைகள், “புரிகிறது! புரிகிறது!என்று உரக்கத் தலையாட்டிக் கூறினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 03, 2022 10:54 am

கன்னடச் சிறுவர் கதைகள் (2)

பிறரை மட்டமாக நினையாதே !

ஒரு காட்டில் , ஒரு மரம் இருந்தது!அதில் சில அணில்கள் வாழ்ந்தன! அதில் ஒரு அணில்,நல்ல திரட்சியாகச் சற்றுப் பெருத்து இருந்தது!அதனால் தன்னைப் பெரியவனாக நினைத்துக் கொண்டு, ஒரு நாள், “நான்தான் இக் காட்டின் ராஜா! என் சொற்படி நீங்கள் கேட்க வேண்டும்!” என்றது!

“அப்படியா? உன்னைப் பார்த்தால் எனக்குப் பயமாக இல்லையே! நீ எப்படி ராஜா?”என்றது ஒரு சின்ன அணில்! ஆனால் தடித்த அணில் விடவில்லை!

தடித்த அணில், மிரட்டித் “தினமும் எனக்கு உணவைக் கொண்டுவந்து தரவேண்டும்” என்று எனக் கூறி, அவ்வாறே தினமும் பிற அணில்கள் கொண்டுவந்து தரும் கனிகள் முதலியவற்றை உண்டு கொழுத்தது!

தடித்த அணிலுக்குப் பாடம் கற்பிக்கப் பிற அணில்கள் முடிவு செய்தன!

ஒருநாள், சில கற்களுக்கு வண்ணங்கள் பூசிப், பழங்கள்போலக் கொடுத்தன!
தடித்த அணில் ஒன்றை எடுத்துக் கடிக்கவே, சில பற்கள் உடைந்துபோயின! “ஐயோ! இனி நான் எதுவும் கடிக்க முடியாதே!” என்று துன்பத்திற்குள்ளானது!

மற்ற அணில்கள், “ஹா ஹா ….இப்போது புரிகிறதா? இவை பழங்கள் அல்ல! கல்லுகள்! நல்லா ஏமாந்தியா? எங்களையா ஏவுகிறாய்?” என்று சொல்லிச் சிரித்தன!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர்
சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKootvKannada)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 03, 2022 12:03 pm

பாடம் புகட்டும் அருமையான கதைகள்.
நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 03, 2022 2:03 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 04, 2022 2:07 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (3)

ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை !

“தத்தா! எனக்குக் கணிதத்தில் ஐம்பதுக்கு ஐம்பது மார்க் !” என்ற பேரனைப் பாராட்டினார் தாத்தா. “தாத்தா எனக்கு ஐம்பதுக்கு முப்பத் தேழு மட்டும்தான்!” என்றாள் பேத்தி. “சபாஷ்!” என்றார் தாத்தா ! “என்ன தாத்தா? முப்பத் தேழுதான் மார்க் என்கிறேன்; சபாஷ் என்கிறீர்களே?” என்று கேட்டாள் பேத்தி. “ஆமாம் இருவரையும் நான் பாராட்டுகிறேன்! இதற்கு ஒரு கதை கூறுகிறேன் கேள்” என்று கதை கூறலானார் தாத்தா.

ஒரு காட்டில் யானையும் ஒட்டகச் சிவிங்கியும் இருந்தன. ஆனால் இருவரும் நண்பர்களாக இல்லை! ஒட்டகச் சிவிங்கி, யானையைப் பார்த்துப் பொறாமைப் பட்டது! “எனக்கு யானைக்கு உள்ளது போலத் துதிக்கை இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? யானை துதிக்கையால் நீரை உறிஞ்சிக் குடிக்கிறது! நீரைப் பீச்சி அடிக்கிறது!...என்னால் முடியவில்லையே” எனப் பொறாமை கொண்டது!

ஒட்டகச் சிவிங்கி,வளைந்த ஒரு குழாயை மூக்கில் நீளமாகச் செருகிக் கொண்டு நீருக்குள் குழாயை விட்டது! குழாயை நீர் அடித்துச் சென்றது! அருகே இருந்த யானை சிரித்தது! “உன்னைப் போல எனக்குத் துதிக்கை இல்லையே என்று கவலையாக இருக்கிறது” என்றது ஒட்டகச் சிவிங்கி! அதற்கு யானை , “அப்படியா? எனக்கும்தான் உன்னைப் போன்ற நீண்ட கழுத்து இல்லை என வருத்தமாக இருக்கிறது! நீளமான கழுத்து இருந்தால் , உயரமான மரத்து இலைகளை நான் தின்ன முடியும் அல்லவா?”என்றது யானை!
“அப்படியா?” என்றது ஒட்டகச் சிவிங்கி! “ஆமாம்! உனக்கு உள்ளது என்னிடம் இல்லை! எனக்கு உள்ளது உன்னிடம் இல்லை! இதிலே என்ன வேறுபாடு? இருவரும் சமம்தானே?” என்றது யானை!

“இப்போ தெரிகிறதா? நான் ஏன் இருவரையும் பாராட்டினேன் என்று?” என்றார் தாத்தா!

“ஆமாம்! அவன் கணிதத்தில் மார்க் அதிகம் எடுப்பான்! நான் அவனைவிட நன்றாக ஓடுவேன்! இருவரும் சமம்தான்!” என்றாள் பேத்தி!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKootvKannada)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 04, 2022 2:38 pm

நல்ல கதை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 04, 2022 5:58 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 05, 2022 9:32 am

கன்னடச் சிறுவர் கதைகள் (4)

இரண்டு பச்சைக் கிளிகள் !

இரண்டு கிளிகள் இருந்தன!

ஒரு கிளி, பக்கத்தில் கிடந்த பச்சை மிளகாயைப் பார்த்தது! “ஐ! இப்போது இதுபோதும்!”என்று சொல்லிகொண்டே, மிளகாயைக் கொத்திச் செல்ல வந்ததது!
இன்னொரு பெரிய கிளியும் அதே மிளகாய் அருகே வந்து நின்றது! “இந்தப் பச்சை மிளகாய் என்னது! எனக்குத்தான்” என்றது பெரிய கிளி!

“இல்லை! நான்தான் முதலில் வந்தேன்! என்னது இந்தப் பச்சை மிளகாய்!” என்றது சின்னக் கிளி!

“சரி! இரண்டு பேரும் சண்டை போடலாம்! யார் ஜெயிக்கிறாரோ அவருக்கு இம் மிளகாய்!” என்ரது பெரிய கிளி!

“ஐயோ! சண்டை வேண்டாம்! நீயே எடுத்துக்கோ!” என்றது சின்னக் கிளி.
“அது சரி! உன் காலில் என்ன காயம்?” எனக் கேட்டது சின்னக் கிளி.

“அது ஒரு வேட்டைக்காரன் பொறியில் மாட்டிக்கொண்ட வெட்டுக்காயம்”என்றது பெரிய கிளி.
“அப்படியா? உனக்கு ஒரு தம்பிகூட உண்டல்லவா?” – கேட்டது சிறிய கிளி.

“ஆமாம்! உனக்கு எப்படித் தெரியும்?” என்றது பெரிய கிளி.

“உன் பக்கத்தில் பொறியில் மாட்டிக்கொண்டது நான்தான்! நீ என் அண்ணன்! ” என்றது சின்னக் கிளி!

“ஓ! தம்பிகூடத்தான் நான் சண்டை போட்டுள்ளேனா?”- என்றது பெரிய கிளி!

“அது சரி! நீ ஏன் மூர்க்கமாக இருக்கிறாய்?” கேட்டது சின்னக் கிளி!

“அது அந்த வேட்டைக்காரன் வீட்டில் வளர்ந்ததால்! ஒருநாள் அவன் சொன்னதை எல்லாம் நான் திருப்பிச் சொல்லவே , அவன் என்னைத் துரத்திவிட்டான்!” என்றது பெரிய கிளி.

“ஓகோ! அதுதானா அந்த மூர்க்கப் புத்தி உனக்கும்?”
எனச் சொன்னது சின்னக் கிளி.

“சரி! நீ எப்படிச் சாந்தமாக இருக்கிறாய்?” – கேட்டது பெரிய கிளி.

“நான் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தேன்; அங்குள்ளோர் தருவதை உண்பேன்!” என்று விடை கூறியது சின்னக் கிளி.

“ஓ! அதுதான் சாந்தப் புத்தியா?” – பெரிய கிளி.

“இதற்குத்தான் சொல்வார்கள்- சகவாசம் நன்றாக இருக்க வேண்டும் என்று” – என முடித்தது சிறிய கிளி!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 06, 2022 9:50 am

கன்னடச் சிறுவர் கதைகள் (5)

ஆடும் நரியும் !

நரி ஒன்று, ஒரு காட்டில் இருந்த கிணற்றுச் சுவரில் நரி நின்றுகொண்டிருந்த போது , கால் இடறிக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டது! வெளியே வர முடியவில்லை!யாராவது வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டு தவித்தது!

அப்போது, அங்கு தண்ணீர் தேடிக்கொண்டு ஒரு ஆடு வந்தது! கிணற்றுக்குள் இருந்த நரியைப் பார்தது ! ஆடு, நரியிடம், “நரியே! எனக்குக் கொஞ்சம் நீர் தருகிறாயா?” என்று கேட்டது. அதற்கு நரி, “இந்தத் தண்ணீர் மிக ருசி! இதுபோல் எங்குமே இல்லை! இதைக் குடிக்க நீயும் உள்ளே குதித்து வா!” என்றது நரி!

ஆடும், அதை நம்பிக் கிணற்றில் குதித்தது!

உடனே நரி, ஆட்டின் மேல் ஏறி, கிணற்றுக்கு வெளியே குதித்து விட்டது!

“நரியே! என்னை வெளியே கொண்டுவா! எப்படி வெளியே வருவது?” என்று ஆடு பரிதாபமாக நரியிடம் கேட்டது!

“நீ ஒரு முட்டாள் ஆடு! கிணற்றுக்குள் குதித்தால் எப்படி மேலே வருவது என யோசிக்காதவன் நீ! நீ நல்லா அனுபவி!”என்று கூறிவிட்டுக் காட்டுக்குள் ஓடியது நரி!

இதனால்தான் ஒரு காரியம் செய்வதற்கு முன்னே நன்கு ஆலோசித்துச் செய்யவேண்டும் என்கிறார்கள்!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 06, 2022 3:20 pm

இரெண்டு பச்சை கிளிகள் கதை அருமை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக