புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னடச் சிறுவர் கதைகள் (50)
Page 1 of 8 •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
கன்னடச் சிறுவர் கதைகள் (1)
தூங்கிக் காலத்தைக் கழிக்காதே !
“பிள்ளைங்களா! சீக்கிரம் எழுந்திருங்கள்! எழுந்திருந்து பல்லை விளக்கிச், சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புங்க!” எனத் தாய் அதட்டினாள். “சீக்கிரம்! நேற்று லேட்டா போனதுமாதிரி இன்றும் போகக் கூடாது!” என்று துரிதப் படுத்தினாள்!
“சரி! வாங்க கூட்டிட்டுப் போறேன்! பள்ளிக்கு நடந்து போகக் கொஞ்சம் நேரம் ஆகும்! அதுவரை ஒரு கதை சொல்கிறேன்!” என்று தாய் கூறச், “சொல்லுங்க சொல்லுங்க” என்றனர் பிள்ளைகள்.
தாய் கதை சொன்னாள்.
ஒரு காட்டில் சில முயல்கள்! அவைகளுக்குள் ஒரு தலைவன்!
ஒரு நாள் தலைவன் முயல், பிற முயல்களைக் கூட்டியது; ஒரு முயல் மட்டும் வரவில்லை! கூப்பிடப் போன முயலிடம், ‘எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!என்னைத் தொந்தரவு செய்யாதே! போ!’ என்றது தூங்கும் முயல். “இல்லை! நம் தலைவர் நல்ல விஷயங்களைக் கூறவுள்ளார்! அவர் அனுபவசாலி! நீ இப்படித் தூங்காதே! ” என்றது கூப்பிடப் போன முயல். அதற்கும் தூங்கும் முயல் மசியவில்லை!
முயல் கூட்டத்தில், தலைவன் முயல், “கேளுங்க முயல்களே! மழைக்காலம் வரப்போகுது! காரட்டுகளை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலம் பார்த்து நரிகள் நம்மைத் தாக்கும்! பாதுகாப்பாக நாம் வேறு இடம் சென்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; இங்கு இருக்கக் கூடாது!” என்றது.
தலைவன் முயல் சொன்னது போலவே சில நரிகள் வந்தன! நரிகள், “ அட! ஒரு முயலையும் காணோமே! எல்லாம் போய்விட்டனவே! இன்று நாம் பட்டினிதான்! என்று புலம்பின!
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த முயல், “ஹாவ்! … தூக்கம் தூக்கமா வருது!...எங்கே யாரையும் காணலை? ” என்று விழிக்கவே, நரிகள் அதைப் பார்த்துவிட்டன! அவை அத் தூங்குமூஞ்சி முயல் மீது பாய்ந்து கொன்று, தின்றன!
“பிள்ளைகளே! கேட்டீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? சோம்பல் பட்டுக்கொண்டு , எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது என்பது புரிகிறதா?” எனத் தாய் கூறவும், பிள்ளைகள், “புரிகிறது! புரிகிறது!என்று உரக்கத் தலையாட்டிக் கூறினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKooTv)
***
தூங்கிக் காலத்தைக் கழிக்காதே !
“பிள்ளைங்களா! சீக்கிரம் எழுந்திருங்கள்! எழுந்திருந்து பல்லை விளக்கிச், சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புங்க!” எனத் தாய் அதட்டினாள். “சீக்கிரம்! நேற்று லேட்டா போனதுமாதிரி இன்றும் போகக் கூடாது!” என்று துரிதப் படுத்தினாள்!
“சரி! வாங்க கூட்டிட்டுப் போறேன்! பள்ளிக்கு நடந்து போகக் கொஞ்சம் நேரம் ஆகும்! அதுவரை ஒரு கதை சொல்கிறேன்!” என்று தாய் கூறச், “சொல்லுங்க சொல்லுங்க” என்றனர் பிள்ளைகள்.
தாய் கதை சொன்னாள்.
ஒரு காட்டில் சில முயல்கள்! அவைகளுக்குள் ஒரு தலைவன்!
ஒரு நாள் தலைவன் முயல், பிற முயல்களைக் கூட்டியது; ஒரு முயல் மட்டும் வரவில்லை! கூப்பிடப் போன முயலிடம், ‘எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!என்னைத் தொந்தரவு செய்யாதே! போ!’ என்றது தூங்கும் முயல். “இல்லை! நம் தலைவர் நல்ல விஷயங்களைக் கூறவுள்ளார்! அவர் அனுபவசாலி! நீ இப்படித் தூங்காதே! ” என்றது கூப்பிடப் போன முயல். அதற்கும் தூங்கும் முயல் மசியவில்லை!
முயல் கூட்டத்தில், தலைவன் முயல், “கேளுங்க முயல்களே! மழைக்காலம் வரப்போகுது! காரட்டுகளை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலம் பார்த்து நரிகள் நம்மைத் தாக்கும்! பாதுகாப்பாக நாம் வேறு இடம் சென்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; இங்கு இருக்கக் கூடாது!” என்றது.
தலைவன் முயல் சொன்னது போலவே சில நரிகள் வந்தன! நரிகள், “ அட! ஒரு முயலையும் காணோமே! எல்லாம் போய்விட்டனவே! இன்று நாம் பட்டினிதான்! என்று புலம்பின!
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த முயல், “ஹாவ்! … தூக்கம் தூக்கமா வருது!...எங்கே யாரையும் காணலை? ” என்று விழிக்கவே, நரிகள் அதைப் பார்த்துவிட்டன! அவை அத் தூங்குமூஞ்சி முயல் மீது பாய்ந்து கொன்று, தின்றன!
“பிள்ளைகளே! கேட்டீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? சோம்பல் பட்டுக்கொண்டு , எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது என்பது புரிகிறதா?” எனத் தாய் கூறவும், பிள்ளைகள், “புரிகிறது! புரிகிறது!என்று உரக்கத் தலையாட்டிக் கூறினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKooTv)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
கன்னடச் சிறுவர் கதைகள் (2)
பிறரை மட்டமாக நினையாதே !
ஒரு காட்டில் , ஒரு மரம் இருந்தது!அதில் சில அணில்கள் வாழ்ந்தன! அதில் ஒரு அணில்,நல்ல திரட்சியாகச் சற்றுப் பெருத்து இருந்தது!அதனால் தன்னைப் பெரியவனாக நினைத்துக் கொண்டு, ஒரு நாள், “நான்தான் இக் காட்டின் ராஜா! என் சொற்படி நீங்கள் கேட்க வேண்டும்!” என்றது!
“அப்படியா? உன்னைப் பார்த்தால் எனக்குப் பயமாக இல்லையே! நீ எப்படி ராஜா?”என்றது ஒரு சின்ன அணில்! ஆனால் தடித்த அணில் விடவில்லை!
தடித்த அணில், மிரட்டித் “தினமும் எனக்கு உணவைக் கொண்டுவந்து தரவேண்டும்” என்று எனக் கூறி, அவ்வாறே தினமும் பிற அணில்கள் கொண்டுவந்து தரும் கனிகள் முதலியவற்றை உண்டு கொழுத்தது!
தடித்த அணிலுக்குப் பாடம் கற்பிக்கப் பிற அணில்கள் முடிவு செய்தன!
ஒருநாள், சில கற்களுக்கு வண்ணங்கள் பூசிப், பழங்கள்போலக் கொடுத்தன!
தடித்த அணில் ஒன்றை எடுத்துக் கடிக்கவே, சில பற்கள் உடைந்துபோயின! “ஐயோ! இனி நான் எதுவும் கடிக்க முடியாதே!” என்று துன்பத்திற்குள்ளானது!
மற்ற அணில்கள், “ஹா ஹா ….இப்போது புரிகிறதா? இவை பழங்கள் அல்ல! கல்லுகள்! நல்லா ஏமாந்தியா? எங்களையா ஏவுகிறாய்?” என்று சொல்லிச் சிரித்தன!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர்
சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKootvKannada)
***
பிறரை மட்டமாக நினையாதே !
ஒரு காட்டில் , ஒரு மரம் இருந்தது!அதில் சில அணில்கள் வாழ்ந்தன! அதில் ஒரு அணில்,நல்ல திரட்சியாகச் சற்றுப் பெருத்து இருந்தது!அதனால் தன்னைப் பெரியவனாக நினைத்துக் கொண்டு, ஒரு நாள், “நான்தான் இக் காட்டின் ராஜா! என் சொற்படி நீங்கள் கேட்க வேண்டும்!” என்றது!
“அப்படியா? உன்னைப் பார்த்தால் எனக்குப் பயமாக இல்லையே! நீ எப்படி ராஜா?”என்றது ஒரு சின்ன அணில்! ஆனால் தடித்த அணில் விடவில்லை!
தடித்த அணில், மிரட்டித் “தினமும் எனக்கு உணவைக் கொண்டுவந்து தரவேண்டும்” என்று எனக் கூறி, அவ்வாறே தினமும் பிற அணில்கள் கொண்டுவந்து தரும் கனிகள் முதலியவற்றை உண்டு கொழுத்தது!
தடித்த அணிலுக்குப் பாடம் கற்பிக்கப் பிற அணில்கள் முடிவு செய்தன!
ஒருநாள், சில கற்களுக்கு வண்ணங்கள் பூசிப், பழங்கள்போலக் கொடுத்தன!
தடித்த அணில் ஒன்றை எடுத்துக் கடிக்கவே, சில பற்கள் உடைந்துபோயின! “ஐயோ! இனி நான் எதுவும் கடிக்க முடியாதே!” என்று துன்பத்திற்குள்ளானது!
மற்ற அணில்கள், “ஹா ஹா ….இப்போது புரிகிறதா? இவை பழங்கள் அல்ல! கல்லுகள்! நல்லா ஏமாந்தியா? எங்களையா ஏவுகிறாய்?” என்று சொல்லிச் சிரித்தன!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர்
சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKootvKannada)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பாடம் புகட்டும் அருமையான கதைகள்.
நன்றி
நன்றி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னடச் சிறுவர் கதைகள் (3)
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை !
“தத்தா! எனக்குக் கணிதத்தில் ஐம்பதுக்கு ஐம்பது மார்க் !” என்ற பேரனைப் பாராட்டினார் தாத்தா. “தாத்தா எனக்கு ஐம்பதுக்கு முப்பத் தேழு மட்டும்தான்!” என்றாள் பேத்தி. “சபாஷ்!” என்றார் தாத்தா ! “என்ன தாத்தா? முப்பத் தேழுதான் மார்க் என்கிறேன்; சபாஷ் என்கிறீர்களே?” என்று கேட்டாள் பேத்தி. “ஆமாம் இருவரையும் நான் பாராட்டுகிறேன்! இதற்கு ஒரு கதை கூறுகிறேன் கேள்” என்று கதை கூறலானார் தாத்தா.
ஒரு காட்டில் யானையும் ஒட்டகச் சிவிங்கியும் இருந்தன. ஆனால் இருவரும் நண்பர்களாக இல்லை! ஒட்டகச் சிவிங்கி, யானையைப் பார்த்துப் பொறாமைப் பட்டது! “எனக்கு யானைக்கு உள்ளது போலத் துதிக்கை இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? யானை துதிக்கையால் நீரை உறிஞ்சிக் குடிக்கிறது! நீரைப் பீச்சி அடிக்கிறது!...என்னால் முடியவில்லையே” எனப் பொறாமை கொண்டது!
ஒட்டகச் சிவிங்கி,வளைந்த ஒரு குழாயை மூக்கில் நீளமாகச் செருகிக் கொண்டு நீருக்குள் குழாயை விட்டது! குழாயை நீர் அடித்துச் சென்றது! அருகே இருந்த யானை சிரித்தது! “உன்னைப் போல எனக்குத் துதிக்கை இல்லையே என்று கவலையாக இருக்கிறது” என்றது ஒட்டகச் சிவிங்கி! அதற்கு யானை , “அப்படியா? எனக்கும்தான் உன்னைப் போன்ற நீண்ட கழுத்து இல்லை என வருத்தமாக இருக்கிறது! நீளமான கழுத்து இருந்தால் , உயரமான மரத்து இலைகளை நான் தின்ன முடியும் அல்லவா?”என்றது யானை!
“அப்படியா?” என்றது ஒட்டகச் சிவிங்கி! “ஆமாம்! உனக்கு உள்ளது என்னிடம் இல்லை! எனக்கு உள்ளது உன்னிடம் இல்லை! இதிலே என்ன வேறுபாடு? இருவரும் சமம்தானே?” என்றது யானை!
“இப்போ தெரிகிறதா? நான் ஏன் இருவரையும் பாராட்டினேன் என்று?” என்றார் தாத்தா!
“ஆமாம்! அவன் கணிதத்தில் மார்க் அதிகம் எடுப்பான்! நான் அவனைவிட நன்றாக ஓடுவேன்! இருவரும் சமம்தான்!” என்றாள் பேத்தி!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKootvKannada)
***
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை !
“தத்தா! எனக்குக் கணிதத்தில் ஐம்பதுக்கு ஐம்பது மார்க் !” என்ற பேரனைப் பாராட்டினார் தாத்தா. “தாத்தா எனக்கு ஐம்பதுக்கு முப்பத் தேழு மட்டும்தான்!” என்றாள் பேத்தி. “சபாஷ்!” என்றார் தாத்தா ! “என்ன தாத்தா? முப்பத் தேழுதான் மார்க் என்கிறேன்; சபாஷ் என்கிறீர்களே?” என்று கேட்டாள் பேத்தி. “ஆமாம் இருவரையும் நான் பாராட்டுகிறேன்! இதற்கு ஒரு கதை கூறுகிறேன் கேள்” என்று கதை கூறலானார் தாத்தா.
ஒரு காட்டில் யானையும் ஒட்டகச் சிவிங்கியும் இருந்தன. ஆனால் இருவரும் நண்பர்களாக இல்லை! ஒட்டகச் சிவிங்கி, யானையைப் பார்த்துப் பொறாமைப் பட்டது! “எனக்கு யானைக்கு உள்ளது போலத் துதிக்கை இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? யானை துதிக்கையால் நீரை உறிஞ்சிக் குடிக்கிறது! நீரைப் பீச்சி அடிக்கிறது!...என்னால் முடியவில்லையே” எனப் பொறாமை கொண்டது!
ஒட்டகச் சிவிங்கி,வளைந்த ஒரு குழாயை மூக்கில் நீளமாகச் செருகிக் கொண்டு நீருக்குள் குழாயை விட்டது! குழாயை நீர் அடித்துச் சென்றது! அருகே இருந்த யானை சிரித்தது! “உன்னைப் போல எனக்குத் துதிக்கை இல்லையே என்று கவலையாக இருக்கிறது” என்றது ஒட்டகச் சிவிங்கி! அதற்கு யானை , “அப்படியா? எனக்கும்தான் உன்னைப் போன்ற நீண்ட கழுத்து இல்லை என வருத்தமாக இருக்கிறது! நீளமான கழுத்து இருந்தால் , உயரமான மரத்து இலைகளை நான் தின்ன முடியும் அல்லவா?”என்றது யானை!
“அப்படியா?” என்றது ஒட்டகச் சிவிங்கி! “ஆமாம்! உனக்கு உள்ளது என்னிடம் இல்லை! எனக்கு உள்ளது உன்னிடம் இல்லை! இதிலே என்ன வேறுபாடு? இருவரும் சமம்தானே?” என்றது யானை!
“இப்போ தெரிகிறதா? நான் ஏன் இருவரையும் பாராட்டினேன் என்று?” என்றார் தாத்தா!
“ஆமாம்! அவன் கணிதத்தில் மார்க் அதிகம் எடுப்பான்! நான் அவனைவிட நன்றாக ஓடுவேன்! இருவரும் சமம்தான்!” என்றாள் பேத்தி!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKootvKannada)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல கதை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னடச் சிறுவர் கதைகள் (4)
இரண்டு பச்சைக் கிளிகள் !
இரண்டு கிளிகள் இருந்தன!
ஒரு கிளி, பக்கத்தில் கிடந்த பச்சை மிளகாயைப் பார்த்தது! “ஐ! இப்போது இதுபோதும்!”என்று சொல்லிகொண்டே, மிளகாயைக் கொத்திச் செல்ல வந்ததது!
இன்னொரு பெரிய கிளியும் அதே மிளகாய் அருகே வந்து நின்றது! “இந்தப் பச்சை மிளகாய் என்னது! எனக்குத்தான்” என்றது பெரிய கிளி!
“இல்லை! நான்தான் முதலில் வந்தேன்! என்னது இந்தப் பச்சை மிளகாய்!” என்றது சின்னக் கிளி!
“சரி! இரண்டு பேரும் சண்டை போடலாம்! யார் ஜெயிக்கிறாரோ அவருக்கு இம் மிளகாய்!” என்ரது பெரிய கிளி!
“ஐயோ! சண்டை வேண்டாம்! நீயே எடுத்துக்கோ!” என்றது சின்னக் கிளி.
“அது சரி! உன் காலில் என்ன காயம்?” எனக் கேட்டது சின்னக் கிளி.
“அது ஒரு வேட்டைக்காரன் பொறியில் மாட்டிக்கொண்ட வெட்டுக்காயம்”என்றது பெரிய கிளி.
“அப்படியா? உனக்கு ஒரு தம்பிகூட உண்டல்லவா?” – கேட்டது சிறிய கிளி.
“ஆமாம்! உனக்கு எப்படித் தெரியும்?” என்றது பெரிய கிளி.
“உன் பக்கத்தில் பொறியில் மாட்டிக்கொண்டது நான்தான்! நீ என் அண்ணன்! ” என்றது சின்னக் கிளி!
“ஓ! தம்பிகூடத்தான் நான் சண்டை போட்டுள்ளேனா?”- என்றது பெரிய கிளி!
“அது சரி! நீ ஏன் மூர்க்கமாக இருக்கிறாய்?” கேட்டது சின்னக் கிளி!
“அது அந்த வேட்டைக்காரன் வீட்டில் வளர்ந்ததால்! ஒருநாள் அவன் சொன்னதை எல்லாம் நான் திருப்பிச் சொல்லவே , அவன் என்னைத் துரத்திவிட்டான்!” என்றது பெரிய கிளி.
“ஓகோ! அதுதானா அந்த மூர்க்கப் புத்தி உனக்கும்?”
எனச் சொன்னது சின்னக் கிளி.
“சரி! நீ எப்படிச் சாந்தமாக இருக்கிறாய்?” – கேட்டது பெரிய கிளி.
“நான் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தேன்; அங்குள்ளோர் தருவதை உண்பேன்!” என்று விடை கூறியது சின்னக் கிளி.
“ஓ! அதுதான் சாந்தப் புத்தியா?” – பெரிய கிளி.
“இதற்குத்தான் சொல்வார்கள்- சகவாசம் நன்றாக இருக்க வேண்டும் என்று” – என முடித்தது சிறிய கிளி!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , infobells.com)
***
இரண்டு பச்சைக் கிளிகள் !
இரண்டு கிளிகள் இருந்தன!
ஒரு கிளி, பக்கத்தில் கிடந்த பச்சை மிளகாயைப் பார்த்தது! “ஐ! இப்போது இதுபோதும்!”என்று சொல்லிகொண்டே, மிளகாயைக் கொத்திச் செல்ல வந்ததது!
இன்னொரு பெரிய கிளியும் அதே மிளகாய் அருகே வந்து நின்றது! “இந்தப் பச்சை மிளகாய் என்னது! எனக்குத்தான்” என்றது பெரிய கிளி!
“இல்லை! நான்தான் முதலில் வந்தேன்! என்னது இந்தப் பச்சை மிளகாய்!” என்றது சின்னக் கிளி!
“சரி! இரண்டு பேரும் சண்டை போடலாம்! யார் ஜெயிக்கிறாரோ அவருக்கு இம் மிளகாய்!” என்ரது பெரிய கிளி!
“ஐயோ! சண்டை வேண்டாம்! நீயே எடுத்துக்கோ!” என்றது சின்னக் கிளி.
“அது சரி! உன் காலில் என்ன காயம்?” எனக் கேட்டது சின்னக் கிளி.
“அது ஒரு வேட்டைக்காரன் பொறியில் மாட்டிக்கொண்ட வெட்டுக்காயம்”என்றது பெரிய கிளி.
“அப்படியா? உனக்கு ஒரு தம்பிகூட உண்டல்லவா?” – கேட்டது சிறிய கிளி.
“ஆமாம்! உனக்கு எப்படித் தெரியும்?” என்றது பெரிய கிளி.
“உன் பக்கத்தில் பொறியில் மாட்டிக்கொண்டது நான்தான்! நீ என் அண்ணன்! ” என்றது சின்னக் கிளி!
“ஓ! தம்பிகூடத்தான் நான் சண்டை போட்டுள்ளேனா?”- என்றது பெரிய கிளி!
“அது சரி! நீ ஏன் மூர்க்கமாக இருக்கிறாய்?” கேட்டது சின்னக் கிளி!
“அது அந்த வேட்டைக்காரன் வீட்டில் வளர்ந்ததால்! ஒருநாள் அவன் சொன்னதை எல்லாம் நான் திருப்பிச் சொல்லவே , அவன் என்னைத் துரத்திவிட்டான்!” என்றது பெரிய கிளி.
“ஓகோ! அதுதானா அந்த மூர்க்கப் புத்தி உனக்கும்?”
எனச் சொன்னது சின்னக் கிளி.
“சரி! நீ எப்படிச் சாந்தமாக இருக்கிறாய்?” – கேட்டது பெரிய கிளி.
“நான் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தேன்; அங்குள்ளோர் தருவதை உண்பேன்!” என்று விடை கூறியது சின்னக் கிளி.
“ஓ! அதுதான் சாந்தப் புத்தியா?” – பெரிய கிளி.
“இதற்குத்தான் சொல்வார்கள்- சகவாசம் நன்றாக இருக்க வேண்டும் என்று” – என முடித்தது சிறிய கிளி!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , infobells.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னடச் சிறுவர் கதைகள் (5)
ஆடும் நரியும் !
நரி ஒன்று, ஒரு காட்டில் இருந்த கிணற்றுச் சுவரில் நரி நின்றுகொண்டிருந்த போது , கால் இடறிக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டது! வெளியே வர முடியவில்லை!யாராவது வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டு தவித்தது!
அப்போது, அங்கு தண்ணீர் தேடிக்கொண்டு ஒரு ஆடு வந்தது! கிணற்றுக்குள் இருந்த நரியைப் பார்தது ! ஆடு, நரியிடம், “நரியே! எனக்குக் கொஞ்சம் நீர் தருகிறாயா?” என்று கேட்டது. அதற்கு நரி, “இந்தத் தண்ணீர் மிக ருசி! இதுபோல் எங்குமே இல்லை! இதைக் குடிக்க நீயும் உள்ளே குதித்து வா!” என்றது நரி!
ஆடும், அதை நம்பிக் கிணற்றில் குதித்தது!
உடனே நரி, ஆட்டின் மேல் ஏறி, கிணற்றுக்கு வெளியே குதித்து விட்டது!
“நரியே! என்னை வெளியே கொண்டுவா! எப்படி வெளியே வருவது?” என்று ஆடு பரிதாபமாக நரியிடம் கேட்டது!
“நீ ஒரு முட்டாள் ஆடு! கிணற்றுக்குள் குதித்தால் எப்படி மேலே வருவது என யோசிக்காதவன் நீ! நீ நல்லா அனுபவி!”என்று கூறிவிட்டுக் காட்டுக்குள் ஓடியது நரி!
இதனால்தான் ஒரு காரியம் செய்வதற்கு முன்னே நன்கு ஆலோசித்துச் செய்யவேண்டும் என்கிறார்கள்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , infobells.com)
***
ஆடும் நரியும் !
நரி ஒன்று, ஒரு காட்டில் இருந்த கிணற்றுச் சுவரில் நரி நின்றுகொண்டிருந்த போது , கால் இடறிக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டது! வெளியே வர முடியவில்லை!யாராவது வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டு தவித்தது!
அப்போது, அங்கு தண்ணீர் தேடிக்கொண்டு ஒரு ஆடு வந்தது! கிணற்றுக்குள் இருந்த நரியைப் பார்தது ! ஆடு, நரியிடம், “நரியே! எனக்குக் கொஞ்சம் நீர் தருகிறாயா?” என்று கேட்டது. அதற்கு நரி, “இந்தத் தண்ணீர் மிக ருசி! இதுபோல் எங்குமே இல்லை! இதைக் குடிக்க நீயும் உள்ளே குதித்து வா!” என்றது நரி!
ஆடும், அதை நம்பிக் கிணற்றில் குதித்தது!
உடனே நரி, ஆட்டின் மேல் ஏறி, கிணற்றுக்கு வெளியே குதித்து விட்டது!
“நரியே! என்னை வெளியே கொண்டுவா! எப்படி வெளியே வருவது?” என்று ஆடு பரிதாபமாக நரியிடம் கேட்டது!
“நீ ஒரு முட்டாள் ஆடு! கிணற்றுக்குள் குதித்தால் எப்படி மேலே வருவது என யோசிக்காதவன் நீ! நீ நல்லா அனுபவி!”என்று கூறிவிட்டுக் காட்டுக்குள் ஓடியது நரி!
இதனால்தான் ஒரு காரியம் செய்வதற்கு முன்னே நன்கு ஆலோசித்துச் செய்யவேண்டும் என்கிறார்கள்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , infobells.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இரெண்டு பச்சை கிளிகள் கதை அருமை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 8
|
|