புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ட்ரிபிள்ஸ் - (நினைவலைகள்) லா. ச. ராமாமிருதம்
Page 1 of 1 •
கண்ணனும் நானும் அசோக் நகரிலிருந்து வட பழனிக்கு சைக்கிளில் போய்க் கொண்டிருந்தோம். டபிள்ஸ். ஸ்தூபியிலிருந்து வடபழனிக்கு த்ரு ஒரே சாலை. ஆனால் கண்ணன் என்னவோ, மடக்கி, திருப்பி, குறுக்குத் தெருவுகளில் நுழைந்து சென்றான். ட்ராஃபிக் வேளையாம். நான் நம்பவில்லை. இன்றைக்கு அவன் மூட் இப்படி என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
சைக்கிள் வெண்ணையில் வழுக்கிக்கொண்டு போயிற்று. சென்ற பாதை வெண்ணயாக இல்லை. மேடு பள்ளம், கரடு முரடு. ஆனால் கண்ணனிடம் வண்டி, வயலின் வில்லாகப் பேசிற்று.
"கண்ணா, நீ சைக்கிளில் Aceதான். ரொம்ப நாளாகச் சொல்ல வேண்டுமென்றிருந்தேன்."
அவன் ஒன்றும் பூரித்துப் போகவில்லை. 'உங்களுக்கு சைக்கிளைப் பற்றி ஒன்றும் தெரியாது'. வாஸ்தவம், ஆனால், சுட்டிக் காட்டியது பிடிக்கவில்லை. ஆனால், பையன்கள் வயது ஏறிக்கொண்டு வருகிறார்கள்.
சட்டென வாய்விட்டுச் சிரித்தான். "அப்பா, நினைப்பு வரது உங்களுக்கு சைக்கிளில் பாலன்ஸ் கிடையாது, இல்லையா? ஏறுவதற்காக, இடது பக்கம் ப்ளாட்பாரம், மேடு, ஒரு கல்லையேனும் தேடிண்டு போவேளே!
நாங்கள் மூவரும் சிரிப்போம். ஹரி சொல்வான். "டேய் கண்ணா, உன் அப்பா இப்படியே பாதி தூரம் ஏற இடம் தேடிக்கிட்டு, சைக்கிளைத் தள்ளிக் கிட்டுப் போயிடுவாரு மிச்சப் பாதிக்கு ட்ராஃபிக் கெடுபிடி. அதுக்கும் தள்ளிக்கிட்டே போயிடுவாரு ஆபீஸும் வந்துடும்."
ரோசப்பட்டுப் பிரயோசனம்? ஆனால் இவன்கள் என்ன பழி தீர்த்துக் கொள்கிறான்கள்?
'நீதான் என்னையும் சேர்த்து வைத்து நன்றாக ஓட்டுகிறாயே!" என்றேன்.
"என்னப்பா, ஒரு நாளா, இரண்டு நாளா? அம்மா வயிற்றுள் சிசுவா, காலை உதைக்கிறபோதே, சைக்கிள் மிதியில்தான்."
கண்ணனும் கதை எழுதுகிறான்.
"நான் தான் சொன்னேனே, நீ Ace."
"அப்படிச் சொல்வதற்கில்லை. ஹரிக்கு அப்புறம் தான் நான்."
"அப்படியா?" ஹரி, கண்ணன், நாகராஜன், பள்ளி நாளிலிருந்தே ஒரு ஜமா. இன்னும் ஜமா.
"ஒரு சம்பவம் நினைவுக்கு வரது, சொல்லட்டுமா ?"
அவன் என் பதிலுக்குக் காத்திருக்கவில்லை.
அப்போது மூணாவது ஃபாரம் நான். நான் என்ன, நாங்கள். மேற்கு மாம்பலம் பள்ளி. ஒரு சனிக்கிழமை வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு சினிமா போனோம். மாட்டினி, சைதாப்பேட்டை நூர்ஜஹான். ட்ரிபிள்ஸ். நான் சைக்கிள் Bar, ஹரி மிதிச்சான், நாகராஜன் பின்னால் carrier. ஷோ முடிஞ்சு திரும்பி வரோம்.
வாத்தியார் படம், டிஷூ, டிஷூ. உடம்பிலே, மனசிலே, படம் ஊறிப்போய் ஒரே குஷியிலிருந்தோம். ஒரு சினிமா மெட்டை, கோரஸ்ஸா முப்பது குரலில் பாடிண்டு-நாங்கள் சைக்கிளில் இல்லை- பனிச்சறுக்கில் Ski விளையாடிக் கொண்டிருந்தோம்.
வழியில் ஒரு டீ கடை வந்தது. வெளியில் போட்ட பெஞ்சில் உட்கார்ந்தபடி, ஒரு சிவப்புத் தலைப்பா 'டீ' குடிச்சிண்டிருந்தது. எங்களைப் பார்த்து விட்டது.
டபிள்ஸே அப்போ சட்டப்படி குற்றம்.
சட்டெனத் திரும்பி மறைவதற்கோ, இறங்குவதற்கோ சந்து கூட இருந்தது. ஆனால் நாங்களா இறங்குவோம்? எங்களுள் புகுந்து கொண்டிருப்பது யார்? அந்தப் பெஞ்சை உராய்ந்தாற் போலேயே நீந்திக் கொண்டு போனோம். போற போக்கில் ஹரி, போலீசுக்காரனுக்கு "டாட்டா!" அடிச்சான். நான்தான் சொன்னேனே. மூன்று ஹீரோக்கள் ஒரே கதாநாயகியை நந்தவனத்தில் ஒடிப்பிடிச்சு விளையாடறோம். ரெண்டுபேர் பாடினால் டூயட். மூணுபேர் பாடினால், அதுக்கு என்ன அப்பா வார்த்தை?
Dream sequence இலிருந்து முரட்டுத்தனமாகச் சுய நினைவுக்குக் கொண்டு வரப்பட்டோம்.
"டேய் ! நில்லுங்கடா !"
திருப்பிப் பார்த்தால், சைக்கிளில் துரத்திண்டு வரான்.
ஹரி, சும்மா, ஸ்பீடை வாரினான். போலீஸ்காரன் பின்னால் புள்ளியாகிவிட்டான். ஆனால் அது என்ன மந்திர வாதமோ, எங்களுக்கு முன்னால், பக்கவாட்டில், இரண்டு சந்துகளிலிருந்து, சைக்கிளில் இரண்டு காவல் புலிகள் எதிர்ப்பட்டு, குறுக்கே வெட்டி, எங்களை மடக்கி விட்டன. இவங்க எங்கிருந்து, எப்படி?...
துரத்தியவனும் வந்து சேர்ந்தான்.
"வாங்க, ஸ்டேஷனுக்குப் போவோம். ஏம்பா, நீங்க பள்ளியிலே படிக்கிறீங்களா, ஸ்ர்க்கலில் வேலை பார்க்கிறீங்களா? கேஸ் பதிவாகிவிட்டது. சைக்கிளும் பிடுங்கப்பட்டது.
"சொல்லிட்டேன். தப்புப் பேர் தப்பு விலாசம் தந்தீங்க இதுக்குமேல் தண்டா. திங்கள் கிழமை, சைதாப்பேட்டை கோர்ட்டில் 'டா'ண்ணு 9 மணிக்கு ஆஜர். இது க்ளாஸ்-க்கு கட்' அடிக்கிற மாதிரியில்லை. கோர்ட். ஞாபகமிருக்கட்டும்."
சைக்கிள் கடைக்காரனுக்குச் சொல்லிக்கலாம். தெரிஞ்சவன்தான். நாள் முழுக்கவே hire அப்போ ஒரு ரூபாய்தான். அவசரமா மூணு குயர் கணக்கு நோட் வாங்கட்டா வெளியில் நிக்கணும்னு வீட்டில் சொல்லிக்கலாம்.
ஆனால் கோர்ட்டில் தீட்டிடுவானே! உள்ளே தள்ளிட்டான்னா? நினைக்கவே பயமாயிருக்கே! மீட்க யார் வருவா? நடந்ததை வீட்டில் சொல்லவே தென்பில்லை. என்ன கிடைக்கும்னு தெரியும். என்னதான் செய்வோம்? தெரு முனைப் பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டு, தப்புக் கேட்டுண்டு, தப்பிக்க வழிகாட்டச் சொல்ல, அதுக்கே கற்பூரம் கொளுத்தக் கால் ரூபாயேனும் வேணுமே! அஞ்சு பைசாவுக்கு இங்கே வழியில்லே.
அன்னி ராவுக்கு, ஞாயிற்றுக்கிழமை பூரா, நாங்கள் மூவரும் எங்களுக்குள் சபை கூட்டிக் குமைந்தும், வழி தென்படவில்லை. இதோ திங்களும் விடிந்துவிட்டது. பிள்ளையார் கைவிட்டுவிட்டார். அம்மா, முப்பாத்தம்மா நீயே கதி, ஊஹாம் தைரியம் கொடுக்கவில்லை. பயம், எச்சில் முழுங்க முடியல்லே.
'ஸ்பெஷல் க்ளாஸ்'னு சொல்லிட்டுக் கிளம்பு முன், கடைசி முறையாக அண்ணன், தம்பிமார், தங்கச்சியைப் பார்த்துக் கொண்டேன். அம்மா, அம்மா, மறுபடியும் எப்பவோ ?
எங்களுக்கது முன்னாலேயே 249 காத்துக் கொண் டிருந்தான்.
"மொத்தம் மூணு நிமிஷம் தான். மாஜிஸ்ட்ரேட்டோடு வாதம் பண்ணாதீங்க. கேட்ட கேள்விக்கு உடனே ஒப்புக்கிடுங்க தெரியுதா?"
தலையை ஆட்டினோம். ஹரிக்குக் கண் துளும்பிற்று. அவனைக் கேட்டால், என்னைச் சொல்வான். நாகராஜன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். அவன் எப்பவுமே அழுத்தம்தான். மொத்தத்தில் எங்கள் வயதின் இயற்கைத் தன்மை தலை காட்ட ஆரம்பித்துவிட்டது. வெளியே ஜிகினா. உள்ளே பிசுபிசு-
"Order! Order! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்!"
சைக்கிள் வெண்ணையில் வழுக்கிக்கொண்டு போயிற்று. சென்ற பாதை வெண்ணயாக இல்லை. மேடு பள்ளம், கரடு முரடு. ஆனால் கண்ணனிடம் வண்டி, வயலின் வில்லாகப் பேசிற்று.
"கண்ணா, நீ சைக்கிளில் Aceதான். ரொம்ப நாளாகச் சொல்ல வேண்டுமென்றிருந்தேன்."
அவன் ஒன்றும் பூரித்துப் போகவில்லை. 'உங்களுக்கு சைக்கிளைப் பற்றி ஒன்றும் தெரியாது'. வாஸ்தவம், ஆனால், சுட்டிக் காட்டியது பிடிக்கவில்லை. ஆனால், பையன்கள் வயது ஏறிக்கொண்டு வருகிறார்கள்.
சட்டென வாய்விட்டுச் சிரித்தான். "அப்பா, நினைப்பு வரது உங்களுக்கு சைக்கிளில் பாலன்ஸ் கிடையாது, இல்லையா? ஏறுவதற்காக, இடது பக்கம் ப்ளாட்பாரம், மேடு, ஒரு கல்லையேனும் தேடிண்டு போவேளே!
நாங்கள் மூவரும் சிரிப்போம். ஹரி சொல்வான். "டேய் கண்ணா, உன் அப்பா இப்படியே பாதி தூரம் ஏற இடம் தேடிக்கிட்டு, சைக்கிளைத் தள்ளிக் கிட்டுப் போயிடுவாரு மிச்சப் பாதிக்கு ட்ராஃபிக் கெடுபிடி. அதுக்கும் தள்ளிக்கிட்டே போயிடுவாரு ஆபீஸும் வந்துடும்."
ரோசப்பட்டுப் பிரயோசனம்? ஆனால் இவன்கள் என்ன பழி தீர்த்துக் கொள்கிறான்கள்?
'நீதான் என்னையும் சேர்த்து வைத்து நன்றாக ஓட்டுகிறாயே!" என்றேன்.
"என்னப்பா, ஒரு நாளா, இரண்டு நாளா? அம்மா வயிற்றுள் சிசுவா, காலை உதைக்கிறபோதே, சைக்கிள் மிதியில்தான்."
கண்ணனும் கதை எழுதுகிறான்.
"நான் தான் சொன்னேனே, நீ Ace."
"அப்படிச் சொல்வதற்கில்லை. ஹரிக்கு அப்புறம் தான் நான்."
"அப்படியா?" ஹரி, கண்ணன், நாகராஜன், பள்ளி நாளிலிருந்தே ஒரு ஜமா. இன்னும் ஜமா.
"ஒரு சம்பவம் நினைவுக்கு வரது, சொல்லட்டுமா ?"
அவன் என் பதிலுக்குக் காத்திருக்கவில்லை.
அப்போது மூணாவது ஃபாரம் நான். நான் என்ன, நாங்கள். மேற்கு மாம்பலம் பள்ளி. ஒரு சனிக்கிழமை வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு சினிமா போனோம். மாட்டினி, சைதாப்பேட்டை நூர்ஜஹான். ட்ரிபிள்ஸ். நான் சைக்கிள் Bar, ஹரி மிதிச்சான், நாகராஜன் பின்னால் carrier. ஷோ முடிஞ்சு திரும்பி வரோம்.
வாத்தியார் படம், டிஷூ, டிஷூ. உடம்பிலே, மனசிலே, படம் ஊறிப்போய் ஒரே குஷியிலிருந்தோம். ஒரு சினிமா மெட்டை, கோரஸ்ஸா முப்பது குரலில் பாடிண்டு-நாங்கள் சைக்கிளில் இல்லை- பனிச்சறுக்கில் Ski விளையாடிக் கொண்டிருந்தோம்.
வழியில் ஒரு டீ கடை வந்தது. வெளியில் போட்ட பெஞ்சில் உட்கார்ந்தபடி, ஒரு சிவப்புத் தலைப்பா 'டீ' குடிச்சிண்டிருந்தது. எங்களைப் பார்த்து விட்டது.
டபிள்ஸே அப்போ சட்டப்படி குற்றம்.
சட்டெனத் திரும்பி மறைவதற்கோ, இறங்குவதற்கோ சந்து கூட இருந்தது. ஆனால் நாங்களா இறங்குவோம்? எங்களுள் புகுந்து கொண்டிருப்பது யார்? அந்தப் பெஞ்சை உராய்ந்தாற் போலேயே நீந்திக் கொண்டு போனோம். போற போக்கில் ஹரி, போலீசுக்காரனுக்கு "டாட்டா!" அடிச்சான். நான்தான் சொன்னேனே. மூன்று ஹீரோக்கள் ஒரே கதாநாயகியை நந்தவனத்தில் ஒடிப்பிடிச்சு விளையாடறோம். ரெண்டுபேர் பாடினால் டூயட். மூணுபேர் பாடினால், அதுக்கு என்ன அப்பா வார்த்தை?
Dream sequence இலிருந்து முரட்டுத்தனமாகச் சுய நினைவுக்குக் கொண்டு வரப்பட்டோம்.
"டேய் ! நில்லுங்கடா !"
திருப்பிப் பார்த்தால், சைக்கிளில் துரத்திண்டு வரான்.
ஹரி, சும்மா, ஸ்பீடை வாரினான். போலீஸ்காரன் பின்னால் புள்ளியாகிவிட்டான். ஆனால் அது என்ன மந்திர வாதமோ, எங்களுக்கு முன்னால், பக்கவாட்டில், இரண்டு சந்துகளிலிருந்து, சைக்கிளில் இரண்டு காவல் புலிகள் எதிர்ப்பட்டு, குறுக்கே வெட்டி, எங்களை மடக்கி விட்டன. இவங்க எங்கிருந்து, எப்படி?...
துரத்தியவனும் வந்து சேர்ந்தான்.
"வாங்க, ஸ்டேஷனுக்குப் போவோம். ஏம்பா, நீங்க பள்ளியிலே படிக்கிறீங்களா, ஸ்ர்க்கலில் வேலை பார்க்கிறீங்களா? கேஸ் பதிவாகிவிட்டது. சைக்கிளும் பிடுங்கப்பட்டது.
"சொல்லிட்டேன். தப்புப் பேர் தப்பு விலாசம் தந்தீங்க இதுக்குமேல் தண்டா. திங்கள் கிழமை, சைதாப்பேட்டை கோர்ட்டில் 'டா'ண்ணு 9 மணிக்கு ஆஜர். இது க்ளாஸ்-க்கு கட்' அடிக்கிற மாதிரியில்லை. கோர்ட். ஞாபகமிருக்கட்டும்."
சைக்கிள் கடைக்காரனுக்குச் சொல்லிக்கலாம். தெரிஞ்சவன்தான். நாள் முழுக்கவே hire அப்போ ஒரு ரூபாய்தான். அவசரமா மூணு குயர் கணக்கு நோட் வாங்கட்டா வெளியில் நிக்கணும்னு வீட்டில் சொல்லிக்கலாம்.
ஆனால் கோர்ட்டில் தீட்டிடுவானே! உள்ளே தள்ளிட்டான்னா? நினைக்கவே பயமாயிருக்கே! மீட்க யார் வருவா? நடந்ததை வீட்டில் சொல்லவே தென்பில்லை. என்ன கிடைக்கும்னு தெரியும். என்னதான் செய்வோம்? தெரு முனைப் பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டு, தப்புக் கேட்டுண்டு, தப்பிக்க வழிகாட்டச் சொல்ல, அதுக்கே கற்பூரம் கொளுத்தக் கால் ரூபாயேனும் வேணுமே! அஞ்சு பைசாவுக்கு இங்கே வழியில்லே.
அன்னி ராவுக்கு, ஞாயிற்றுக்கிழமை பூரா, நாங்கள் மூவரும் எங்களுக்குள் சபை கூட்டிக் குமைந்தும், வழி தென்படவில்லை. இதோ திங்களும் விடிந்துவிட்டது. பிள்ளையார் கைவிட்டுவிட்டார். அம்மா, முப்பாத்தம்மா நீயே கதி, ஊஹாம் தைரியம் கொடுக்கவில்லை. பயம், எச்சில் முழுங்க முடியல்லே.
'ஸ்பெஷல் க்ளாஸ்'னு சொல்லிட்டுக் கிளம்பு முன், கடைசி முறையாக அண்ணன், தம்பிமார், தங்கச்சியைப் பார்த்துக் கொண்டேன். அம்மா, அம்மா, மறுபடியும் எப்பவோ ?
எங்களுக்கது முன்னாலேயே 249 காத்துக் கொண் டிருந்தான்.
"மொத்தம் மூணு நிமிஷம் தான். மாஜிஸ்ட்ரேட்டோடு வாதம் பண்ணாதீங்க. கேட்ட கேள்விக்கு உடனே ஒப்புக்கிடுங்க தெரியுதா?"
தலையை ஆட்டினோம். ஹரிக்குக் கண் துளும்பிற்று. அவனைக் கேட்டால், என்னைச் சொல்வான். நாகராஜன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். அவன் எப்பவுமே அழுத்தம்தான். மொத்தத்தில் எங்கள் வயதின் இயற்கைத் தன்மை தலை காட்ட ஆரம்பித்துவிட்டது. வெளியே ஜிகினா. உள்ளே பிசுபிசு-
"Order! Order! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்!"
சிம்மாசனத்தில் அமர்ந்தவர் முகத்தைப் பார்த்ததும், மூவருக்குமே வயிற்றில் புளியைக் கரைத்தது. இவர் எங்கே இங்கு வந்தார்? இவர் நம் தெருக் கோடியில் இருப்பவர்னா? வேலை நேரம் போக, மிச்சத்துக்கு ஹானரரி மாஜிஸ்ட்ரேட் வேறயா? ஐயையோ! நாங்கள் திரும்பி, வீட்டைப் பார்த்த மாதிரிதான்!
கத்தரிக்காய்க்குக் காலும் கையும் முளைத்த மாதிரி, கட்டை குட்டையா, தன் குட்டைக்கு ஈடு செய்ய, ஜே.பியில் சாவிக் கொத்தைக் குலுக்கியபடி எகிறி எகிறி நடந்து செல்கையில், எத்தனை முறை, குள்ளா குள்ளா கோழி முட்டை, குள்ளன் பிள்ளை வாத்து முட்டை! என்று கத்தியிருக்கிறோம்! ஓரொரு சமயம் தெரு முனையில் நின்று, எங்களைத் திரும்பிப் பார்ப்பார். பார்க்கட்டுமே! இப்போ வட்டியும் முதலுமா எங்களைப் பார்த்து விடுவார்.
எங்கள் பெயர்களைக் கூவ ஆரம்பித்ததுமே, எழுந்து போய் எதிரில் நின்றோம்.
"ட்ரிபிள்ஸ் போனிங்களா?"
‘போனோம்."
"ரூபா வெச்சிருக்கீங்களா?"
தலையை ஆட்டினோம். மெய்யாவே, வாயை அடைந்துவிட்டது. ஆனால் தேம்பல் சப்தம், யாரு?
"ஹூம். இனிமேல் செய்யாதிங்க ஆல்ரைட். வெளியிலே ரைட்டர்கிட்டே சீட்டு வாங்கிட்டு ஸ்டேஷனுக்குப் போய் சைக்கிளை விடுதலை வாங்கிக்கங்க".
கனவா? நனவா?? நிமிண்டிப் பார்த்துக்கொள்ளக் கூட வழியில்லை.
"இறங்குங்க. நெக்ஸ்ட்!"
வெளியில் 249 காத்துக் கொண்டிருந்தான்.
"பரவாயில்லை, அதிர்ஷ்டசாலிங்கதான். குண்டு மிளகா உங்களை எப்படி சும்மா விட்டாரு இதையே தனியா ஒரு சிங்கிள் டீ மேலே யோசிக்க வேண்டிய சமாச்சாரம்."
அவன் கேட்பது எங்களுக்குத் தெரியவில்லையா? ஆனால் ஓட்டாண்டியா நிக்கறோமே!
"பரவாயில்லே தம்பிங்களா, குன்னிப் போயிடாதிங்க, சின்னப் பையன்க, படிக்கிற பசங்கன்னு அன்னிக்கு சும்மாவே விட்டிருப்பேன். ஆனால் உங்களில் எவன்? 'டாட்டா' காட்டினதும் ரோஷம் பொங்கிச்சு, டிபார்ட்மெண்டா, கிள்ளுக்கீரையா?"
"ஸார், ஸார்-" ஒற்றை விரலை வினயமாக நீட்டிக் கொண்டு, இது நான்.
"என்ன தம்பி" எண்ணாலேயே அவனை அழைத்து, 'ஸாரை' எங்கு கண்டான்.
"நீங்கள் இவ்வளவு நல்லவர்னு எங்களுக்குத் தெரியாது. இனிமேல் இப்படிச் செய்யமாட்டோம். சத்யமா!"
முதுகைத் தட்டிக் கொடுத்தான். "பரவாயில்லே தம்பி! எல்லாமே நடக்கறதுதான். இல்லாட்டி, டிபார்ட்மெண்ட் பிழைக்கறதெப்படி?"
"ஸார், நாங்கள் ஸ்டேஷனுக்குப் போய் வண்டியை மீட்டுண்டு, பள்ளிக்கூடம் போய்ச் சேர்றதுக்குள்ளே ரொம்ப லேட் ஆயிடும்."
"சாயங்காலம் மீட்டுக்கங்க. அவசரமில்லே."
"இல்லை, இப்பவே மீட்டுண்டுதான் போவணும். எங்களுக்கு வேறு வழியில்லே. ஸார், ஒரு ரிக்வெஸ்ட், அவன் கண்களில் வினாக்குறி மேலும் கீழுமாகக் குதித்தது.
"ட்ரிபிள்ஸுக்கு..." அந்த ஒரு செக்கெண்டு திகைப்பில் என் அர்த்தம் தோய்ந்ததும், ஆளைப் பிடுங்கிண்டு ஒரு சிரிப்பு வந்தது பாருங்கோ- நாங்கள் பிய்த்துக் கொண்டோம்.
சிரிப்பே சம்மதம் தவிர, எங்கள் ஹெட்மிஸ்ட்ரெஸ் ஒரு முழி முழிச்சாள்னா, அந்தக் கிலிக்கு நாங்கள் 249 என்ன 249, 378, 875 எல்லாமே சமாளிக்கத் தயார்.
"அட்வெஞ்சர் எப்படி? அப்பா, ஒண்ணு. இதில் அப்பாக்களுக்கு ஒரு நீதியிருக்கிறது. பிள்ளைகளிடம் எப்பவும் இருக்கிறபடியா பத்து ரூபாய்க்கேனும் குறையாமல் கொடுக்க வெக்கணும். என்ன சொல்றேள்?"
நான் சொல்ல என்ன இருக்கிறது?
இது இளைஞர் ஆண்டு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
அந்த காலத்தில் அதிகம் பேர் ரசித்திருப்பார்கள்.அந்த கால நிலைமை உரித்து வைத்துள்ளார் லா ச ரா .நானும் எனது அண்ணனும் சைக்கிளில் போவோம். போலீசை தூரத்தில் பார்த்தாலேயே இறங்கிவிடுவோம்.
அந்த காலத்தில் சைக்கிளுக்கு வருடாந்திர வரி 2 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கி சைக்கிள் பிரேக் பக்கத்தில் இணைக்கவேண்டும்.
மலரும் நினைவுகள்.ரசித்தேன்.
இந்த காலத்து சிறுவர்களுக்கு கதையே புரியாமல் ஆச்சரியப்படுவார்கள்.
நன்றி ராம்.
அந்த காலத்தில் சைக்கிளுக்கு வருடாந்திர வரி 2 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கி சைக்கிள் பிரேக் பக்கத்தில் இணைக்கவேண்டும்.
மலரும் நினைவுகள்.ரசித்தேன்.
இந்த காலத்து சிறுவர்களுக்கு கதையே புரியாமல் ஆச்சரியப்படுவார்கள்.
நன்றி ராம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|