புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போற்றுவோம் பெண்களை
Page 1 of 1 •
-
நம் நாட்டில் பெண் என்பவள் கடவுளாகவும், தாய்த்திரு நாட்டின் வடிவாகவும் போற்றப்படுகிறாள். ஆனால் இன்று அவள் இவ்வாறு போற்றப்படுகின்றாளா என்றால் விடை மவுனமாகத்தான் இருக்கும். இந்த மவுனத்திற்கு காரணம் என்ன என்றால் எதற்காக பெண்ணை இவ்வாறு போற்ற வேண்டும் என்ற ஆண் ஆதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடு தான்.
பண்டைய காலத்தில் பெண்கள் மதிக்கப்பட்டு போற்றப்பட்டனர் என்பதற்கு சான்றாக விளங்கியது பெண் ஆதிக்க சமூக வரலாறுகள். ஆனால் எப்படி இச்சமுதாயம் ஆண் ஆதிக்க சமுதாயமாக மாறியது என்பதை கவனித்தால் ஓர் உண்மை தெரிய வரும். பல நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்தாலும், பல அந்நிய நாட்டு படையெடுப்புகளால், இந்திய பெண்களின் பாதுகாப்பு பெரிய சவாலாக அமைந்தது. எனவே பெண்களை பாதுகாக்க அவர்களை வீட்டினுள் பூட்டி வைக்க துவங்கினர். பின் அதுவே மரபாகி இந்திய சமுதாயம் ஆண் ஆதிக்க சமுதாயமாக மாறியது.
பெண்களும் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆண்கள் இட்ட கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். இவையே பெண்ணை அடிமைப்படுத்தும் காரணியாகவும், மூடநம்பிக்கையாகவும் தொடர்ந்து பின் தொன்று தொட்டு வரும் பாரம்பரியமாகவும், கலாசாரமாகவும் மாறி விட்டது.
பாரம்பரியமும்,கலாசாரமும்
பெண்ணின் இலக்கணம், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கணவனே கண் கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், கற்பு நெறி மாறா சீதையை போல், கண்ணகி போல் போன்ற பல இலக்கணங்களை பின்பற்ற பெண்களை ஆண்கள் பழக்கி விட்டனர். பெண் என்பவள் எதை கொடுத்தாலும், அதை பாதுகாத்து பன்மடங்காக பெருக்கி தருபவள். உதாரணத்திற்கு சிறிய முதலீட்டை லட்சமாக பெருக்கி தருபவள் பெண்கள் தான்.
இதை போல ஆண்களால் வரையறுக்கப்பட்ட பெண்ணின் இலக்கணத்தை பாதுகாத்து பன்மடங்காக பெருக்கி விட்டாள், இவை அனைத்தும் பெண்களை அடிமைப்படுத்தும் காரணிகள் என்று அறியாமலேயே. இன்று இந்த வரையறுக்கப்பட்ட பாரம்பரியத்தை எந்த பெண்ணாவது மீறினால் அந்த பெண்ணை விமர்சிக்கவும், பழிக்கவும் செய்பவள் முதலில் மற்றொரு பெண்ணாகவே இருக்கிறாள். இதுவே ஆண் ஆதிக்க சமுதாயம் வளர துாண்டுகோலாக மாறிவிட்டது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பெண்ணியம்
பெண்கள் மூட, பாரம்பரிய நம்பிக்கைகளுக்கும், கலாசார நம்பிக்கைகளுக்கும் அடிமைப்பட்டு ஆணின் நிழலாகவும், கருவியாகவும் கைப்பாவையாகவும், வீட்டையும், குழந்தைகளையும் காக்கும் ஒரு இயந்திரமாகவும் செயல்பட்ட வந்த நிலை கண்டு வெகுண்டு எழுந்த பெண்ணியவாதிகள் ராஜாராம் மோகன்ராய், மகாத்மா காந்தி, பாரதியார், பாரதிதாசன் போன்ற ஆண்களே. ராஜாராம் மோகன்ராய் சதி (உடன்கட்டை ஏறுதல்) என்ற சமூக கொடுமையை ஒழிக்க துணைபுரிந்து பெண்ணை காப்பாறிய பொழுதும், பெண்ணின் உரிமைகள் அவளுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. ஆனால் இந்திய சுதந்திர போரட்டத்தின் போது மற்ற பெண்ணியவாதிகள் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களின் உரிமைக்காக மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என குரல் கொடுக்க வைத்தது ஜான்சிராணி என்ற பெண்மகளின் வீரதீரச் செயலே.
ஆணுக்கு நிகராக
பெண்ணியம் என்பது சாதாரண வீட்டு பெண்களுக்கு ஒரு மடை திறந்த கதவாக செயல்பட்ட போதும், இன்றும் பெண்கள் முழுமையாக பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுபடவில்லை என்பதே உண்மை. இதற்கு காரணம் இரு விதமான பெண்ணியம் நம் சமூகத்தில் உள்ளது தான். ஒன்று பெண்ணிற்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறும் போது மறுபடியும் ஆண் இனத்தை காக்கவும், இந்த நாட்டை காக்கவும் உதவும் ஓர் உத்தியாகவே பெண்கள் காணப்படுகிறார்கள். எனவே கல்வியும், வேலைவாய்ப்பும் மட்டுமே பெண்களுக்கு போதுமா, அவர்களை ஆணுக்கு நிகராக நிறுத்தி விடுமா என்றால் இவை மட்டும் போதாது என்ற உண்மை புலப்படும்.
ஏனெனில் இன்றும் பெண்கள் பழைய நம்பிக்கைகளையும் ஆண்களால் வரையறுக்கப்பட்ட பெண்ணின் இலக்கணத்தையும் உடும்பு பிடியென பிடித்து வைத்திருக்கிறாள். மற்ற பெண்களை பழிக்கிறாள். துன்புறுத்தவும் செய்கிறாள். சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதன் அர்த்தம் என்ன என்றால் தீய செயல்களை செய்வதற்கு அச்சப்பட வேண்டும். தெரியாமல் தீய செயல்களை செய்து விட்டால் அதைக்கண்டு நாணப்பட வேண்டும். குழந்தையை போன்ற நல்ல மனம் படைத்தவராக இருக்கவேண்டும் என்பதே மடம் என்பதன் பொருள். தீய செயல்களை பற்றி பேசவே வெறுப்பு கொள்ள வேண்டும் என்பதே பயிர்ப்பு என்பதன் அர்த்தம். இப்பொழுது புரியும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பது பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் ஏன் மனித இனத்திற்கே பொருந்தும் ஒரு பஞ்ச் என்று.
தனிமனித ஒழுக்கம்
கற்பு என்பதை இருபாலருக்கும் பொதுவாக வைப்போம் என்று பாரதியார் கூறிய கூற்றிலிருந்து விளங்கும் ஓர் உயரிய கருத்து என்ன என்றால் கற்பு என்று கூறி பெண்ணை இழிவுபடுத்தாதே பெண்ணின் ஆளுமையை தடுக்க நினைக்காதே என்பதே. தனி மனித ஒழுக்கம் என்பது இரு பாலருக்கும் தேவை. இங்கு அனைவரும் வரலாற்றின் உண்மையை உணர வேண்டும். கற்பு நெறி சோதிக்கப்பட்ட பொழுது சீதை தீக்குளித்தாள்.
ஆனால் பின்னாளில் மறுபடியும் அவளின் கற்பு நெறி விமர்சனத்திற்கு வந்த பொழுது ராமனை பிரிந்து சென்றாள். இது ஏன் தெரியுமா தன் வயிற்றில் வளரும் குழந்தைகளின் உயிரைக்காக்க எண்ணி. இந்த தாய்மை உணர்வை போற்ற வேண்டாமா. சீதை கூறிய பெண்ணியத்தை உணர வேண்டும் அல்லவா. பெண்களை பழிப்பதை நிறுத்தி பெண்ணை பெண்மையை போற்றுவோம். இப்படி பெண்ணியம் பேசிக் கொண்டு ஆண்களை பெண்களின் வாழ்க்கையிலிருந்து பிரித்து விட முடியுமா.
சிவனும் சக்தியும்
சிவனும் சக்தியும் சேர்ந்தால் தான் இந்த பிரபஞ்சம் இயங்கும். எனவே ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் மற்றொருவரின் ஆற்றலை முக்கியத்துவத்தை தங்களது வாழ்க்கையில் உணர வேண்டும். கணவன், தன் மனைவிக்கு ஒரு கணவனின் கடமையை தவிர நல்ல தந்தையாகவும், சகோதரனாகவும் மகனாகவும் நண்பனாகவும் மாறும் பொது அந்த பெண்ணின் வாழ்வு மலர்கிறது; மணம் வீசுகிறது என்பதை ஒவ்வொரு ஆணும் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தினங்களை, பெண்கள் உரிமையை பற்றி மட்டும் பேசும் தினமாக அல்லாமல், பெண்ணின் சக்தியை ஆண்கள் போற்றும் தினமாகவும், பெண்களை தங்களுக்கு நிகராக நிலை நிறுத்தும் தினமாகவும் கொண்டாடினால் ஆணும், பெண்ணும் சரிநிகர் சமமாக சிங்க நடை போட்டு சிகரத்தை அடைவாளர்கள் என்பது உறுதி.
தன்னை அடிமைப்படுத்தும் காரணிகளை உடைத்து இன்று தன்னையும் ஒரு தனிமனிதனாக ஆசிரியராக, மருத்துவராக, பஸ், விமானம், ஆட்டோ ஓட்டுனராக, வழக்கறிஞர்களாக, நீதிபதியாக, எழுத்தாளராக, மேலும் பல துறைகளில் வெற்றி படிக்கட்டுகளில் பணித்து கொண்டு இருப்பவராக இருக்கும் அத்தனை சிங்கப்பெண்களையும் கைத்தட்டி பாராட்டுவோம்.
-முனைவர் எ.ஆர்.உமா, பேராசிரியர் , சரஸ்வதி நாராயணன் கல்லுாரிமதுரை
நன்றி-தினமலர்
பெண்கள் மூட, பாரம்பரிய நம்பிக்கைகளுக்கும், கலாசார நம்பிக்கைகளுக்கும் அடிமைப்பட்டு ஆணின் நிழலாகவும், கருவியாகவும் கைப்பாவையாகவும், வீட்டையும், குழந்தைகளையும் காக்கும் ஒரு இயந்திரமாகவும் செயல்பட்ட வந்த நிலை கண்டு வெகுண்டு எழுந்த பெண்ணியவாதிகள் ராஜாராம் மோகன்ராய், மகாத்மா காந்தி, பாரதியார், பாரதிதாசன் போன்ற ஆண்களே. ராஜாராம் மோகன்ராய் சதி (உடன்கட்டை ஏறுதல்) என்ற சமூக கொடுமையை ஒழிக்க துணைபுரிந்து பெண்ணை காப்பாறிய பொழுதும், பெண்ணின் உரிமைகள் அவளுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. ஆனால் இந்திய சுதந்திர போரட்டத்தின் போது மற்ற பெண்ணியவாதிகள் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களின் உரிமைக்காக மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என குரல் கொடுக்க வைத்தது ஜான்சிராணி என்ற பெண்மகளின் வீரதீரச் செயலே.
ஆணுக்கு நிகராக
பெண்ணியம் என்பது சாதாரண வீட்டு பெண்களுக்கு ஒரு மடை திறந்த கதவாக செயல்பட்ட போதும், இன்றும் பெண்கள் முழுமையாக பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுபடவில்லை என்பதே உண்மை. இதற்கு காரணம் இரு விதமான பெண்ணியம் நம் சமூகத்தில் உள்ளது தான். ஒன்று பெண்ணிற்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறும் போது மறுபடியும் ஆண் இனத்தை காக்கவும், இந்த நாட்டை காக்கவும் உதவும் ஓர் உத்தியாகவே பெண்கள் காணப்படுகிறார்கள். எனவே கல்வியும், வேலைவாய்ப்பும் மட்டுமே பெண்களுக்கு போதுமா, அவர்களை ஆணுக்கு நிகராக நிறுத்தி விடுமா என்றால் இவை மட்டும் போதாது என்ற உண்மை புலப்படும்.
ஏனெனில் இன்றும் பெண்கள் பழைய நம்பிக்கைகளையும் ஆண்களால் வரையறுக்கப்பட்ட பெண்ணின் இலக்கணத்தையும் உடும்பு பிடியென பிடித்து வைத்திருக்கிறாள். மற்ற பெண்களை பழிக்கிறாள். துன்புறுத்தவும் செய்கிறாள். சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதன் அர்த்தம் என்ன என்றால் தீய செயல்களை செய்வதற்கு அச்சப்பட வேண்டும். தெரியாமல் தீய செயல்களை செய்து விட்டால் அதைக்கண்டு நாணப்பட வேண்டும். குழந்தையை போன்ற நல்ல மனம் படைத்தவராக இருக்கவேண்டும் என்பதே மடம் என்பதன் பொருள். தீய செயல்களை பற்றி பேசவே வெறுப்பு கொள்ள வேண்டும் என்பதே பயிர்ப்பு என்பதன் அர்த்தம். இப்பொழுது புரியும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பது பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் ஏன் மனித இனத்திற்கே பொருந்தும் ஒரு பஞ்ச் என்று.
தனிமனித ஒழுக்கம்
கற்பு என்பதை இருபாலருக்கும் பொதுவாக வைப்போம் என்று பாரதியார் கூறிய கூற்றிலிருந்து விளங்கும் ஓர் உயரிய கருத்து என்ன என்றால் கற்பு என்று கூறி பெண்ணை இழிவுபடுத்தாதே பெண்ணின் ஆளுமையை தடுக்க நினைக்காதே என்பதே. தனி மனித ஒழுக்கம் என்பது இரு பாலருக்கும் தேவை. இங்கு அனைவரும் வரலாற்றின் உண்மையை உணர வேண்டும். கற்பு நெறி சோதிக்கப்பட்ட பொழுது சீதை தீக்குளித்தாள்.
ஆனால் பின்னாளில் மறுபடியும் அவளின் கற்பு நெறி விமர்சனத்திற்கு வந்த பொழுது ராமனை பிரிந்து சென்றாள். இது ஏன் தெரியுமா தன் வயிற்றில் வளரும் குழந்தைகளின் உயிரைக்காக்க எண்ணி. இந்த தாய்மை உணர்வை போற்ற வேண்டாமா. சீதை கூறிய பெண்ணியத்தை உணர வேண்டும் அல்லவா. பெண்களை பழிப்பதை நிறுத்தி பெண்ணை பெண்மையை போற்றுவோம். இப்படி பெண்ணியம் பேசிக் கொண்டு ஆண்களை பெண்களின் வாழ்க்கையிலிருந்து பிரித்து விட முடியுமா.
சிவனும் சக்தியும்
சிவனும் சக்தியும் சேர்ந்தால் தான் இந்த பிரபஞ்சம் இயங்கும். எனவே ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் மற்றொருவரின் ஆற்றலை முக்கியத்துவத்தை தங்களது வாழ்க்கையில் உணர வேண்டும். கணவன், தன் மனைவிக்கு ஒரு கணவனின் கடமையை தவிர நல்ல தந்தையாகவும், சகோதரனாகவும் மகனாகவும் நண்பனாகவும் மாறும் பொது அந்த பெண்ணின் வாழ்வு மலர்கிறது; மணம் வீசுகிறது என்பதை ஒவ்வொரு ஆணும் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தினங்களை, பெண்கள் உரிமையை பற்றி மட்டும் பேசும் தினமாக அல்லாமல், பெண்ணின் சக்தியை ஆண்கள் போற்றும் தினமாகவும், பெண்களை தங்களுக்கு நிகராக நிலை நிறுத்தும் தினமாகவும் கொண்டாடினால் ஆணும், பெண்ணும் சரிநிகர் சமமாக சிங்க நடை போட்டு சிகரத்தை அடைவாளர்கள் என்பது உறுதி.
தன்னை அடிமைப்படுத்தும் காரணிகளை உடைத்து இன்று தன்னையும் ஒரு தனிமனிதனாக ஆசிரியராக, மருத்துவராக, பஸ், விமானம், ஆட்டோ ஓட்டுனராக, வழக்கறிஞர்களாக, நீதிபதியாக, எழுத்தாளராக, மேலும் பல துறைகளில் வெற்றி படிக்கட்டுகளில் பணித்து கொண்டு இருப்பவராக இருக்கும் அத்தனை சிங்கப்பெண்களையும் கைத்தட்டி பாராட்டுவோம்.
-முனைவர் எ.ஆர்.உமா, பேராசிரியர் , சரஸ்வதி நாராயணன் கல்லுாரிமதுரை
நன்றி-தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பெண் என்பவள், வளர்ச்சிக்கு வேண்டிய
அகப் பண்புகளை பேணும் இயற்கைச் செல்வம்
-
-காபெட்
-----------------------------------
-
தாய், தாரம், தோழி, சகோதரி என பல பரிமாணம்
எடுப்பவள் பெண்.
அதே வேளையில் வலிமைக்கும் மென்மைக்கும்
எடுத்துக்காட்டாக இருப்பவள்.
-
------------------------------------
-
உயிர் சுமந்தவள் தாயாகிறாள்
பாசம் சுமந்தவள் தங்கையாகிறாள்
உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள்
நேசம் புரிந்தவள் மனைவியாகிறாள்
பெண்ணினிறி அமையாது உலகு!
-
----------------------------------
அகப் பண்புகளை பேணும் இயற்கைச் செல்வம்
-
-காபெட்
-----------------------------------
-
தாய், தாரம், தோழி, சகோதரி என பல பரிமாணம்
எடுப்பவள் பெண்.
அதே வேளையில் வலிமைக்கும் மென்மைக்கும்
எடுத்துக்காட்டாக இருப்பவள்.
-
------------------------------------
-
உயிர் சுமந்தவள் தாயாகிறாள்
பாசம் சுமந்தவள் தங்கையாகிறாள்
உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள்
நேசம் புரிந்தவள் மனைவியாகிறாள்
பெண்ணினிறி அமையாது உலகு!
-
----------------------------------
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உயிர் சுமந்தவள் தாயாகிறாள்
பாசம் சுமந்தவள் தங்கையாகிறாள்
உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள்
நேசம் புரிந்தவள் மனைவியாகிறாள்
பெண் இன்றி அமையாது உலகு!
பாசம் சுமந்தவள் தங்கையாகிறாள்
உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள்
நேசம் புரிந்தவள் மனைவியாகிறாள்
பெண் இன்றி அமையாது உலகு!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
“பாரம்பரியத்தை எந்த பெண்ணாவது மீறினால் அந்த பெண்ணை விமர்சிக்கவும், பழிக்கவும் செய்பவள் முதலில் மற்றொரு பெண்ணாகவே இருக்கிறாள். இதுவே ஆண் ஆதிக்க சமுதாயம் வளர துாண்டுகோலாக மாறிவிட்டது.”-
பெண்ணியம் பேசுவோரே புரிந்துகொள்ளுங்கள்!
பெண்ணியம் பேசுவோரே புரிந்துகொள்ளுங்கள்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|