புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
1 Post - 4%
Guna.D
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
1 Post - 4%
mruthun
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
2 Posts - 1%
manikavi
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
2 Posts - 1%
mruthun
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_m10“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 27, 2021 11:43 am

“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி Vikatan%2F2019-05%2F55a59b0e-e5d4-46d7-a754-b3000d593fb7%2F362p1.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-

"கூட மேல கூட வெச்சி கூடலூரு போறவளே...’ பாட்டைக்
கேட்டிருக்கிறீர்களா? அந்தப் பாடலின் உணர்வை,
கேட்பவருக்கு நெருக்கமாக்கும்விதமாக அதில் `சாரங்கி'
இசைக்கப்பட்டிருக்கும்.

அதை வாசித்தவர் மனோன்மணி. தென்னிந்திய அளவில்
அதிகம் பரிச்சயமில்லாத இசைக்கருவி, சாரங்கி. அதை
வாசிப்பவர்கள்கூட மிகச் சொற்பமான எண்ணிக்கையில்
தான் இருக்கிறார்கள். அவர்களில், தனிச் சிறப்புடன்
எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் மனோன்மணி.

சமூக ஊடகங்களில் இவரின் இசைக்கு ஏராளமான ரசிகர்கள்.
அவர் வீட்டுக்குச் சென்றபோது முதலில் `வெல்கம்' சொன்னது
அவரின் மகன் சுமந்த். மனோன்மணியைச் சந்தித்த இசைப்பொழுதிலிருந்து...


`` `சாரங்கி' மனோன்மணியைப் பற்றிச் சொல்லுங்களேன்?’’



``சின்ன வயதிலிருந்தே மியூசிக்ல ஆர்வம். அதுக்குக் காரணம்
என் அம்மா. அவங்க தில்ரூபாங்கிற இசைக்கருவியை வாசிச்சிட்டு
இருக்காங்க. அப்பப்போ அம்மாவின் தில்ரூபாவை எடுத்து
வாசிச்சுப் பார்ப்பேன். முறையான பயிற்சியெல்லாம் கிடையாது.

ஆனா, `இப்போ மியூசிக்கெல்லாம் வேண்டாம். நல்லா படிச்சு,
நல்ல வேலைக்குப் போ’ன்னாங்க.  அம்மா சொன்னதுபோல
எம்.சி.ஏ படிச்சிட்டு ஐ.டி வேலைக்குப் போயிட்டேன்.’’


``ஐ.டி வேலையிலிருந்து இசைத் துறைக்கு வந்தது எப்படி?’’



``காலையில கிளம்பிப் போய் ராத்திரி வரைக்கும் ஆபீஸுல வேலை
பார்க்குறது எனக்குச் சலிச்சுப் போயிடுச்சு. என் கல்யாணத்துக்கு
அப்புறம் சின்ன வயதிலேருந்தே காதலாக இருந்த சாரங்கியை
வாசிக்க ஆசைப்பட்டேன். சாரங்கி வாசிக்கிறது ரொம்பக் கஷ்டம்னு
தெரியும். அதனால, சாரங்கி வாங்கி, நானே ப்ராக்டீஸ்
பண்ணிட்டிருந்தேன். ஆனா, எந்தவொரு கலையையும் குருவோட
துணையில்லாம கத்துக்க முடியாதுனு புரிஞ்சுது.

யாரிடம் கத்துக்கலாம்னு தேடிட்டு இருந்தேன். டெல்லியில இருக்கிற
உஸ்தாத் குலாம் சபீர் கானைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அஞ்சு
வருஷமா அவர்கிட்டதான் சாரங்கி வாசிக்கக் கத்துட்டு இருக்கேன்.
இதுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்கறது என் கணவர் தங்கமணி.
அவர் எனக்கு அறிமுகமானதே என் அம்மாவோட இசையிலிருந்துதான்.

பாடல்கள்ல அம்மா வாசிச்ச பகுதியை மட்டும் கட் பண்ணி,
கேட்டுட்டு இருந்தாங்க. அவருக்கு இருந்த இசை ஆர்வம்தான்
எங்களைச் சேர்த்தது. இப்பவும் நான் டெல்லிக்கு கிளாஸுக்குப்
போயிருக்கிற நாள்கள்ல பையனைப் பார்த்துகிற வரைக்கும்
என் வளர்ச்சியில அவ்வளவு அக்கறையோட இருக்கார்.
டெல்லிக்குப் போயிட்டா சில சமயம் திரும்பி வர 20 நாள்கள்கூட
ஆகிடும்.’’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 27, 2021 11:47 am



``ஐந்து வருடங்களாக டெல்லிக்குச் சென்றுவருகிறீர்களா?’’


``ஆமாம், குருஜியோட மகன் முராத் அலி கான் ஃபேஸ்புக்கில்
இருக்கிறார். அவரிடம் எனக்குச் சாரங்கி கற்றுக்கொடுக்கக் கேட்டேன்.
தன்னோட அப்பாவிடம் கற்றுக்கொள்ள அவர்தான் வழிகாட்டினார்.
இப்ப நான் அவங்க வீட்டுல ஒரு பொண்ணு.

ஆரம்பத்துல இரண்டு, மூணு முறை ஹாஸ்டலில் தங்கிட்டு, அவங்க
வீட்டுக்குப் போயிட்டு இருந்தேன். அதனால், சாயந்தரம்
ஹாஸ்டலுக்குத் திரும்பிடணும்கிறதால ரொம்ப நேரம் கிளாஸ்ல
இருக்க முடியாது. இதைக் கவனிச்ச குருஜி, அந்தத் தெருவிலேயே
இருக்கிற அவரின் மகளோட வீட்லேயே என்னைத் தங்க சொல்லிட்டார்.

அங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நான் கற்றுக்கொள்ள விஷயம்
இருந்துச்சு. ஏன்னா, குருஜியின் குடும்பத்துல எல்லாருமே சாரங்கி
வாசிப்பாங்க. இரவு பத்து மணிக்கு மேல அப்பா, மகன், பேரன்னு
எல்லோரும் சாரங்கி வாசிக்க ஆரம்பிச்சா இரவு ஒரு மணிக்கு மேலேயும்
வாசிச்சிட்டே இருப்பாங்க.

அந்த இடமே உணர்ச்சிப்பிழம்பா இருக்கும். ஒரு சில நாள்கள்ல என்னைக்
கட்டுப்படுத்த முடியாம அழுதிருக்கேன். ஒவ்வொரு முறை அவங்க
வீட்டைவிட்டுக் கிளம்பும்போதும் ரொம்பக் கஷ்டமா இருக்கும்.

அடுத்த நாளே அங்கே வந்துரணும்னு தோணும். ஒரு கச்சேரியில
குருஜியோட சேர்ந்து வாசிச்ச நாளை மறக்கவே முடியாது. நிகழ்ச்சி
ஆரம்பிக்கிற வரைக்கும் பயமும் பதற்றமும் கலந்து இருந்துச்சு.
நிகழ்ச்சி முடியும்போது கனவுல இருந்ததுபோல உணர்ந்தேன்.’’


``மற்ற இசைக்கருவிகளைவிட, சாரங்கி வாசிக்கிறது சிரமமாச்சே?’’



``ஆமா, இதை வாசிக்கும்போது நகங்களை ஒட்டியிருக்கும் விரல்
பகுதியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். பயிற்சி எடுக்கும்போது
பல நாள்கள் அந்தப் பகுதியில ரத்தம் கசிஞ்சிருக்கு. அதை மீறியும்
சாரங்கி மேல பெரிய காதல். அதுதான் இதை இடைவிடாம கற்றுக்
கொள்ள வெச்சுது.

தென்னிந்தியாவிலேயே சாரங்கி வாசிக்கிற பெண் அநேகமாக நான்
மட்டும்தான்னு நினைக்கிறேன். அம்மாவும் இப்படித்தான். தில்ரூபா
வாசிக்கிறதுல தனித்துவமாகத் தெரியுறாங்க. அதுபோல நானும்
ஆகணும்.’’


``அம்மா என்ன சொல்றாங்க?’’



``மியூசிக்கெல்லாம் வேண்டாம்னு சொன்ன அம்மா, நான் சாரங்கி
வாசிக்கிறதைக் கேட்டு மனசார வாழ்த்தினாங்க. ரெக்கார்டிங்
நடக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய டெக்னிக்கல் விஷயங்களைச்
சொன்னாங்க. மற்றபடி `நீயா தேடிக் கத்துக்கோ...'
- இதுதான் அம்மா அடிக்கடி சொல்றது. சொல்றது மட்டுமல்ல,
அந்தளவுக்குச் சுதந்திரத்தையும் கொடுக்கிறாங்க.

ஏன்னா, அம்மாவும் என்னை மாதிரி கல்யாணத்துக்கு அப்புறம்தான்
தில்ரூபா வாசிக்க ஆரம்பிச்சாங்க. 30 வருஷத்துக்கு மேல வாசிச்சிட்டு
இருக்காங்க. கிட்டத்தட்ட எல்லா மியூசிக் டைரக்டர் கூடவும் வொர்க்
பண்ணியிருக்காங்க.

தாத்தாவைப் பற்றி அம்மா நிறையச் சொல்லியிருக்காங்க.
தாத்தா ஏ.பி.சண்முகம், தபேலா இசைக்கலைஞர். ஒருநாள் வீட்டுக்கு
வந்த தயாரிப்பாளர் ஒருத்தர் பரண் மேல இருந்த தில்ரூபாவைப்
பார்த்து, அதை எடுத்து வாசிக்கச் சொல்லியிருக்கார்.
அதிலேருந்து அம்மாவின் பயணம் தில்ரூபாவோடுனு ஆகிடுச்சு.’’


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 27, 2021 11:48 am


``சீன வயலினும் வாசிப்பீங்களாமே?’’

``ஏ.ஆர்.ரஹ்மான் சார் வெளிநாட்டுக்குப் போனப்போ,
`எர்ஹு'ங்கிற (Erhu) சைனீஸ் வயலினை வாங்கி, எங்க
அம்மாவுக்கு கிஃப்ட்டா கொடுத்திருக்காங்க. அதை அம்மா
என்கிட்ட கொடுத்திட்டாங்க.

நான் அதில் வாசிச்சுப் பழகினேன். ரஹ்மான் சாரிடம்
ஒருமுறை வாசிச்சுக் காட்டினேன். ஒரு இந்திப் படத்துல
எர்ஹு வாசிக்க வாய்ப்புக் கொடுத்தார்.

யுவன்சங்கர் ராஜா, `சண்டக்கோழி’ படத்துல `என்னமோ
நடக்கிறதே...'ங்கிற பாடலில் வாசிக்க வைத்தார். எர்ஹு
வாசிக்கிறது ரொம்பக் கஷ்டம். அதோட அந்த இசை
நம்மோட சூழலுக்குப் பொருத்தமானது இல்லையோனு
நினைக்கிறேன்.’’

``வேற என்னென்ன படங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள்?’’

``இமான் சார்தான் முதல் வாய்ப்பைத் தந்தார். `மைனா’வில்,
`கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்...’, `ரம்மி’யில `கூட மேல, கூட
வெச்சு’, `சொப்பனச் சுந்தரி நான்தானே...’ இன்னும்
நிறையப் பாடல்கள் இருக்கு.

ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், அனிருத், ஹிப்ஹாப் தமிழா,
ஜிப்ரான் இவங்ககூடயும் வொர்க் பண்ணியிருக்கேன்.’’

``சோகமான மனநிலையை வெளிப்படுத்துவதற்காகத்தான்
சாரங்கியைப் பயன்படுத்துவார்களா?’’

``பெரும்பாலான நேரத்தில் அப்படித்தான். கதையில் மரணம்
நடந்தால், அப்போ சாரங்கி பின்னணி இசையாக வரும்.
ஆனா, இது இப்போ மாறி வருது. சந்தோஷமான
தருணங்கள்லயும் சாரங்கி இசை பயன்படுத்தப்படுது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 27, 2021 11:48 am


`சொப்பன சுந்தரி...’ பாடலே அப்படியானதுதானே.
நாட்டுப்புறச் சூழலுக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனா,
சாரங்கி வாசிக்கும்போது ரொம்பவும் ஃபீல் பண்ணித்தான்
வாசிக்க முடியும். சில நேரங்கள்ல என்னையும் அறியாம
அழுதிருக்கேன்.’’

``உங்களின் மியூசிக் வீடியோ சோஷியல் மீடியாவில் பிரபலமாகப்
பேசப்படுகிறதே?’’

`` `சாரங்கி' தென்னிந்திய ரசிகர்களுக்குப் பெரிய அளவில்
அறிமுகமாகலை. அதனால, சினிமாப் பாடல்களை வாசிச்சு
வீடியோ செய்ய ப்ளான் பண்ணினேன். என் ஃப்ரெண்ட் ஷ்யாம்
பெஞ்சமினோடு சேர்ந்து, அதை எடுத்து சோஷியல் மீடியாவில்
அப்லோடு செஞ்சேன்.

ஆனா, அதுக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும்னு நான்
நினைக்கலை. சாரங்கியை அறிமுகப்படுத்தறதுதான் நோக்கம்.
ஆனா, எங்க வீடியோவுக்கு நெகிழ்ச்சியான கமென்ட்ஸ் வர்றதைப்
பார்க்கும்போது திருப்தியான ஒரு வேலையைச் செஞ்சிட்டு
இருக்கோம்னு நினைக்கிறேன்.’’

``வீடியோவுக்கான பாடல்களை எந்த அடிப்படையில் தேர்வு
செய்கிறீர்கள்?’’

``உணர்வுபூர்வமான பாடல்களைத்தான் முதலில் செலக்ட்
பண்ணுவேன். என்னைப் பொறுத்தவரை இளையராஜா சாரின்
எல்லாப் பாடல்களையுமே அப்படிச் சொல்வேன்.

வார்த்தைகளோடு அந்தப் பாடல்களைக் கேட்டுட்டு
இருந்தவங்களுக்கு சாரங்கி இசை மூலமாகக் கொண்டு சேர்க்க
நினைத்தேன். அதை சரியா செய்யறேனு நினைக்கிறேன்.
இதில் பட்ஜெட் மட்டும்தான் பிரச்னை. செலவுகளை நான்தான்
பார்த்துகிறேன். என் கணவரும் அதற்கு ஒத்துழைக்கிறதாலதான்
நிறைவா செய்ய முடியுது.’’

``உங்கள் வாசிப்பில், உங்கள் குடும்பத்தினருக்குப் பிடித்த
பாடல்கள் எவை?’’

``என் அப்பாவுக்கு `உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது...'
பாடலும், கணவருக்கு `சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலும்
பிடிக்கும். பையன் சுமந்த், என்னோட ரொம்ப கறாரான விமர்சகர்.
வாசிக்கும்போது நான் என்ன தப்பு செய்யறேனு கண்டு
பிடிக்கிறதுதான் சாரோட வேலை. சுமந்த், கீ போர்டு கிளாஸுக்குப்
போயிட்டு இருக்கான்...’’
(மனோன்மணி இப்படிச் சொன்னதும் கீ போர்டில் இசைத்துக்
காட்டுகிறார் சுமந்த்).

``இசைத் துறையில் உங்களின் அடுத்தகட்டத் திட்டம் என்ன?’’

``நம் ஊரில் தனி நபராகச் செய்யும் மியூசிக் ஆல்பத்துக்குப் பெரிய
அளவில் வரவேற்பு இருப்பது இல்லை. ஆனா, இப்போ சோஷியல்
மீடியாவெல்லாம் வளர்ந்திருப்பதால் சாரங்கியை மையப்படுத்தி,
இயற்கை சார்ந்த கான்செப்ட்டில் ஆல்பம் தயாரிக்கவிருக்கிறேன்.
தனியாக மியூசிக் கம்போஸ் செய்தும் வருகிறேன்.''

'சாரங்கி' இசையோடு மனோன்மணியின் பெயரும் திக்கெட்டும்
ஒலிக்கட்டும்!

-வி.எஸ்.சரவணன்
நன்றி-விகடன்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 27, 2021 8:07 pm

அறியாத தகவல்கள். நன்றி 

அதென்ன சொப்பன சுந்தரி பாடல் ?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 27, 2021 10:08 pm

வீர சிவாஜி என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்:
”சொப்பன சுந்தரி நான்தானே”


--------
படம்- வீர சிவாஜி
இசை- டி.இமான்
படல்- அருண்ராஜா காமராஜ்
பாடியவர்- வைக்கம் விஜயலட்சுமி

-
---------------------------

சொப்பன சுந்தரி நான் தானே
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே
சொப்பன சுந்தரி நான் தானே
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே

இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே
சோம்பல் இல்லாமலே கலிப்பேனே
மீண்டும் இன்பம் மீண்டும்
தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ……
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி
ஏ நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி

மார்கழியை சித்திரையாய் மாத்திடுமே முத்தம் ஒன்னு
பூக்கடையே இங்கேவந்து பூஜை பன்னும் கிட்டே நின்னு
இராத்திரிக்கும் தூக்கத்துக்கும் எப்பவும் இராசியில்லை
ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சமில்லை

மூங்கிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல
எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம் மாறவில்ல
அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும் சங்கமும் இங்கேதான்
சங்கமம் ஆகத்தான் காதல்தான்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 27, 2021 10:09 pm



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 28, 2021 8:53 pm

நன்றி ராம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக