புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி
Page 1 of 1 •
-
"கூட மேல கூட வெச்சி கூடலூரு போறவளே...’ பாட்டைக்
கேட்டிருக்கிறீர்களா? அந்தப் பாடலின் உணர்வை,
கேட்பவருக்கு நெருக்கமாக்கும்விதமாக அதில் `சாரங்கி'
இசைக்கப்பட்டிருக்கும்.
அதை வாசித்தவர் மனோன்மணி. தென்னிந்திய அளவில்
அதிகம் பரிச்சயமில்லாத இசைக்கருவி, சாரங்கி. அதை
வாசிப்பவர்கள்கூட மிகச் சொற்பமான எண்ணிக்கையில்
தான் இருக்கிறார்கள். அவர்களில், தனிச் சிறப்புடன்
எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் மனோன்மணி.
சமூக ஊடகங்களில் இவரின் இசைக்கு ஏராளமான ரசிகர்கள்.
அவர் வீட்டுக்குச் சென்றபோது முதலில் `வெல்கம்' சொன்னது
அவரின் மகன் சுமந்த். மனோன்மணியைச் சந்தித்த இசைப்பொழுதிலிருந்து...
`` `சாரங்கி' மனோன்மணியைப் பற்றிச் சொல்லுங்களேன்?’’
``சின்ன வயதிலிருந்தே மியூசிக்ல ஆர்வம். அதுக்குக் காரணம்
என் அம்மா. அவங்க தில்ரூபாங்கிற இசைக்கருவியை வாசிச்சிட்டு
இருக்காங்க. அப்பப்போ அம்மாவின் தில்ரூபாவை எடுத்து
வாசிச்சுப் பார்ப்பேன். முறையான பயிற்சியெல்லாம் கிடையாது.
ஆனா, `இப்போ மியூசிக்கெல்லாம் வேண்டாம். நல்லா படிச்சு,
நல்ல வேலைக்குப் போ’ன்னாங்க. அம்மா சொன்னதுபோல
எம்.சி.ஏ படிச்சிட்டு ஐ.டி வேலைக்குப் போயிட்டேன்.’’
``ஐ.டி வேலையிலிருந்து இசைத் துறைக்கு வந்தது எப்படி?’’
``காலையில கிளம்பிப் போய் ராத்திரி வரைக்கும் ஆபீஸுல வேலை
பார்க்குறது எனக்குச் சலிச்சுப் போயிடுச்சு. என் கல்யாணத்துக்கு
அப்புறம் சின்ன வயதிலேருந்தே காதலாக இருந்த சாரங்கியை
வாசிக்க ஆசைப்பட்டேன். சாரங்கி வாசிக்கிறது ரொம்பக் கஷ்டம்னு
தெரியும். அதனால, சாரங்கி வாங்கி, நானே ப்ராக்டீஸ்
பண்ணிட்டிருந்தேன். ஆனா, எந்தவொரு கலையையும் குருவோட
துணையில்லாம கத்துக்க முடியாதுனு புரிஞ்சுது.
யாரிடம் கத்துக்கலாம்னு தேடிட்டு இருந்தேன். டெல்லியில இருக்கிற
உஸ்தாத் குலாம் சபீர் கானைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அஞ்சு
வருஷமா அவர்கிட்டதான் சாரங்கி வாசிக்கக் கத்துட்டு இருக்கேன்.
இதுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்கறது என் கணவர் தங்கமணி.
அவர் எனக்கு அறிமுகமானதே என் அம்மாவோட இசையிலிருந்துதான்.
பாடல்கள்ல அம்மா வாசிச்ச பகுதியை மட்டும் கட் பண்ணி,
கேட்டுட்டு இருந்தாங்க. அவருக்கு இருந்த இசை ஆர்வம்தான்
எங்களைச் சேர்த்தது. இப்பவும் நான் டெல்லிக்கு கிளாஸுக்குப்
போயிருக்கிற நாள்கள்ல பையனைப் பார்த்துகிற வரைக்கும்
என் வளர்ச்சியில அவ்வளவு அக்கறையோட இருக்கார்.
டெல்லிக்குப் போயிட்டா சில சமயம் திரும்பி வர 20 நாள்கள்கூட
ஆகிடும்.’’
``ஐந்து வருடங்களாக டெல்லிக்குச் சென்றுவருகிறீர்களா?’’
``ஆமாம், குருஜியோட மகன் முராத் அலி கான் ஃபேஸ்புக்கில்
இருக்கிறார். அவரிடம் எனக்குச் சாரங்கி கற்றுக்கொடுக்கக் கேட்டேன்.
தன்னோட அப்பாவிடம் கற்றுக்கொள்ள அவர்தான் வழிகாட்டினார்.
இப்ப நான் அவங்க வீட்டுல ஒரு பொண்ணு.
ஆரம்பத்துல இரண்டு, மூணு முறை ஹாஸ்டலில் தங்கிட்டு, அவங்க
வீட்டுக்குப் போயிட்டு இருந்தேன். அதனால், சாயந்தரம்
ஹாஸ்டலுக்குத் திரும்பிடணும்கிறதால ரொம்ப நேரம் கிளாஸ்ல
இருக்க முடியாது. இதைக் கவனிச்ச குருஜி, அந்தத் தெருவிலேயே
இருக்கிற அவரின் மகளோட வீட்லேயே என்னைத் தங்க சொல்லிட்டார்.
அங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நான் கற்றுக்கொள்ள விஷயம்
இருந்துச்சு. ஏன்னா, குருஜியின் குடும்பத்துல எல்லாருமே சாரங்கி
வாசிப்பாங்க. இரவு பத்து மணிக்கு மேல அப்பா, மகன், பேரன்னு
எல்லோரும் சாரங்கி வாசிக்க ஆரம்பிச்சா இரவு ஒரு மணிக்கு மேலேயும்
வாசிச்சிட்டே இருப்பாங்க.
அந்த இடமே உணர்ச்சிப்பிழம்பா இருக்கும். ஒரு சில நாள்கள்ல என்னைக்
கட்டுப்படுத்த முடியாம அழுதிருக்கேன். ஒவ்வொரு முறை அவங்க
வீட்டைவிட்டுக் கிளம்பும்போதும் ரொம்பக் கஷ்டமா இருக்கும்.
அடுத்த நாளே அங்கே வந்துரணும்னு தோணும். ஒரு கச்சேரியில
குருஜியோட சேர்ந்து வாசிச்ச நாளை மறக்கவே முடியாது. நிகழ்ச்சி
ஆரம்பிக்கிற வரைக்கும் பயமும் பதற்றமும் கலந்து இருந்துச்சு.
நிகழ்ச்சி முடியும்போது கனவுல இருந்ததுபோல உணர்ந்தேன்.’’
``மற்ற இசைக்கருவிகளைவிட, சாரங்கி வாசிக்கிறது சிரமமாச்சே?’’
``ஆமா, இதை வாசிக்கும்போது நகங்களை ஒட்டியிருக்கும் விரல்
பகுதியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். பயிற்சி எடுக்கும்போது
பல நாள்கள் அந்தப் பகுதியில ரத்தம் கசிஞ்சிருக்கு. அதை மீறியும்
சாரங்கி மேல பெரிய காதல். அதுதான் இதை இடைவிடாம கற்றுக்
கொள்ள வெச்சுது.
தென்னிந்தியாவிலேயே சாரங்கி வாசிக்கிற பெண் அநேகமாக நான்
மட்டும்தான்னு நினைக்கிறேன். அம்மாவும் இப்படித்தான். தில்ரூபா
வாசிக்கிறதுல தனித்துவமாகத் தெரியுறாங்க. அதுபோல நானும்
ஆகணும்.’’
``அம்மா என்ன சொல்றாங்க?’’
``மியூசிக்கெல்லாம் வேண்டாம்னு சொன்ன அம்மா, நான் சாரங்கி
வாசிக்கிறதைக் கேட்டு மனசார வாழ்த்தினாங்க. ரெக்கார்டிங்
நடக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய டெக்னிக்கல் விஷயங்களைச்
சொன்னாங்க. மற்றபடி `நீயா தேடிக் கத்துக்கோ...'
- இதுதான் அம்மா அடிக்கடி சொல்றது. சொல்றது மட்டுமல்ல,
அந்தளவுக்குச் சுதந்திரத்தையும் கொடுக்கிறாங்க.
ஏன்னா, அம்மாவும் என்னை மாதிரி கல்யாணத்துக்கு அப்புறம்தான்
தில்ரூபா வாசிக்க ஆரம்பிச்சாங்க. 30 வருஷத்துக்கு மேல வாசிச்சிட்டு
இருக்காங்க. கிட்டத்தட்ட எல்லா மியூசிக் டைரக்டர் கூடவும் வொர்க்
பண்ணியிருக்காங்க.
தாத்தாவைப் பற்றி அம்மா நிறையச் சொல்லியிருக்காங்க.
தாத்தா ஏ.பி.சண்முகம், தபேலா இசைக்கலைஞர். ஒருநாள் வீட்டுக்கு
வந்த தயாரிப்பாளர் ஒருத்தர் பரண் மேல இருந்த தில்ரூபாவைப்
பார்த்து, அதை எடுத்து வாசிக்கச் சொல்லியிருக்கார்.
அதிலேருந்து அம்மாவின் பயணம் தில்ரூபாவோடுனு ஆகிடுச்சு.’’
``சீன வயலினும் வாசிப்பீங்களாமே?’’
``ஏ.ஆர்.ரஹ்மான் சார் வெளிநாட்டுக்குப் போனப்போ,
`எர்ஹு'ங்கிற (Erhu) சைனீஸ் வயலினை வாங்கி, எங்க
அம்மாவுக்கு கிஃப்ட்டா கொடுத்திருக்காங்க. அதை அம்மா
என்கிட்ட கொடுத்திட்டாங்க.
நான் அதில் வாசிச்சுப் பழகினேன். ரஹ்மான் சாரிடம்
ஒருமுறை வாசிச்சுக் காட்டினேன். ஒரு இந்திப் படத்துல
எர்ஹு வாசிக்க வாய்ப்புக் கொடுத்தார்.
யுவன்சங்கர் ராஜா, `சண்டக்கோழி’ படத்துல `என்னமோ
நடக்கிறதே...'ங்கிற பாடலில் வாசிக்க வைத்தார். எர்ஹு
வாசிக்கிறது ரொம்பக் கஷ்டம். அதோட அந்த இசை
நம்மோட சூழலுக்குப் பொருத்தமானது இல்லையோனு
நினைக்கிறேன்.’’
``வேற என்னென்ன படங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள்?’’
``இமான் சார்தான் முதல் வாய்ப்பைத் தந்தார். `மைனா’வில்,
`கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்...’, `ரம்மி’யில `கூட மேல, கூட
வெச்சு’, `சொப்பனச் சுந்தரி நான்தானே...’ இன்னும்
நிறையப் பாடல்கள் இருக்கு.
ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், அனிருத், ஹிப்ஹாப் தமிழா,
ஜிப்ரான் இவங்ககூடயும் வொர்க் பண்ணியிருக்கேன்.’’
``சோகமான மனநிலையை வெளிப்படுத்துவதற்காகத்தான்
சாரங்கியைப் பயன்படுத்துவார்களா?’’
``பெரும்பாலான நேரத்தில் அப்படித்தான். கதையில் மரணம்
நடந்தால், அப்போ சாரங்கி பின்னணி இசையாக வரும்.
ஆனா, இது இப்போ மாறி வருது. சந்தோஷமான
தருணங்கள்லயும் சாரங்கி இசை பயன்படுத்தப்படுது.
`சொப்பன சுந்தரி...’ பாடலே அப்படியானதுதானே.
நாட்டுப்புறச் சூழலுக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனா,
சாரங்கி வாசிக்கும்போது ரொம்பவும் ஃபீல் பண்ணித்தான்
வாசிக்க முடியும். சில நேரங்கள்ல என்னையும் அறியாம
அழுதிருக்கேன்.’’
``உங்களின் மியூசிக் வீடியோ சோஷியல் மீடியாவில் பிரபலமாகப்
பேசப்படுகிறதே?’’
`` `சாரங்கி' தென்னிந்திய ரசிகர்களுக்குப் பெரிய அளவில்
அறிமுகமாகலை. அதனால, சினிமாப் பாடல்களை வாசிச்சு
வீடியோ செய்ய ப்ளான் பண்ணினேன். என் ஃப்ரெண்ட் ஷ்யாம்
பெஞ்சமினோடு சேர்ந்து, அதை எடுத்து சோஷியல் மீடியாவில்
அப்லோடு செஞ்சேன்.
ஆனா, அதுக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும்னு நான்
நினைக்கலை. சாரங்கியை அறிமுகப்படுத்தறதுதான் நோக்கம்.
ஆனா, எங்க வீடியோவுக்கு நெகிழ்ச்சியான கமென்ட்ஸ் வர்றதைப்
பார்க்கும்போது திருப்தியான ஒரு வேலையைச் செஞ்சிட்டு
இருக்கோம்னு நினைக்கிறேன்.’’
``வீடியோவுக்கான பாடல்களை எந்த அடிப்படையில் தேர்வு
செய்கிறீர்கள்?’’
``உணர்வுபூர்வமான பாடல்களைத்தான் முதலில் செலக்ட்
பண்ணுவேன். என்னைப் பொறுத்தவரை இளையராஜா சாரின்
எல்லாப் பாடல்களையுமே அப்படிச் சொல்வேன்.
வார்த்தைகளோடு அந்தப் பாடல்களைக் கேட்டுட்டு
இருந்தவங்களுக்கு சாரங்கி இசை மூலமாகக் கொண்டு சேர்க்க
நினைத்தேன். அதை சரியா செய்யறேனு நினைக்கிறேன்.
இதில் பட்ஜெட் மட்டும்தான் பிரச்னை. செலவுகளை நான்தான்
பார்த்துகிறேன். என் கணவரும் அதற்கு ஒத்துழைக்கிறதாலதான்
நிறைவா செய்ய முடியுது.’’
``உங்கள் வாசிப்பில், உங்கள் குடும்பத்தினருக்குப் பிடித்த
பாடல்கள் எவை?’’
``என் அப்பாவுக்கு `உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது...'
பாடலும், கணவருக்கு `சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலும்
பிடிக்கும். பையன் சுமந்த், என்னோட ரொம்ப கறாரான விமர்சகர்.
வாசிக்கும்போது நான் என்ன தப்பு செய்யறேனு கண்டு
பிடிக்கிறதுதான் சாரோட வேலை. சுமந்த், கீ போர்டு கிளாஸுக்குப்
போயிட்டு இருக்கான்...’’
(மனோன்மணி இப்படிச் சொன்னதும் கீ போர்டில் இசைத்துக்
காட்டுகிறார் சுமந்த்).
``இசைத் துறையில் உங்களின் அடுத்தகட்டத் திட்டம் என்ன?’’
``நம் ஊரில் தனி நபராகச் செய்யும் மியூசிக் ஆல்பத்துக்குப் பெரிய
அளவில் வரவேற்பு இருப்பது இல்லை. ஆனா, இப்போ சோஷியல்
மீடியாவெல்லாம் வளர்ந்திருப்பதால் சாரங்கியை மையப்படுத்தி,
இயற்கை சார்ந்த கான்செப்ட்டில் ஆல்பம் தயாரிக்கவிருக்கிறேன்.
தனியாக மியூசிக் கம்போஸ் செய்தும் வருகிறேன்.''
'சாரங்கி' இசையோடு மனோன்மணியின் பெயரும் திக்கெட்டும்
ஒலிக்கட்டும்!
-வி.எஸ்.சரவணன்
நன்றி-விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
அறியாத தகவல்கள். நன்றி
அதென்ன சொப்பன சுந்தரி பாடல் ?
அதென்ன சொப்பன சுந்தரி பாடல் ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
வீர சிவாஜி என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்:
”சொப்பன சுந்தரி நான்தானே”
--------
படம்- வீர சிவாஜி
இசை- டி.இமான்
படல்- அருண்ராஜா காமராஜ்
பாடியவர்- வைக்கம் விஜயலட்சுமி
-
---------------------------
சொப்பன சுந்தரி நான் தானே
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே
சொப்பன சுந்தரி நான் தானே
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே
இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே
சோம்பல் இல்லாமலே கலிப்பேனே
மீண்டும் இன்பம் மீண்டும்
தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ……
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி
ஏ நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி
மார்கழியை சித்திரையாய் மாத்திடுமே முத்தம் ஒன்னு
பூக்கடையே இங்கேவந்து பூஜை பன்னும் கிட்டே நின்னு
இராத்திரிக்கும் தூக்கத்துக்கும் எப்பவும் இராசியில்லை
ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சமில்லை
மூங்கிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல
எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம் மாறவில்ல
அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும் சங்கமும் இங்கேதான்
சங்கமம் ஆகத்தான் காதல்தான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
நன்றி ராம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|