புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 15, 2021 8:48 pm

சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் OE5FOYW

🌷 அத்திமரத்தினால் ஆன திருமேனி என்பதால் அந்த வரதராஜ பெருமாளுக்கு "#அத்திவரதர்" என்ற திருநாமம் ஏற்பட்டது.

🌷 அதே போன்று #கோழிகுத்தி என்னும் இடத்தில் 800 ஆண்டுகள் பழைமையான வேரோடு கூடிய ஓர் அத்தி மரத்தினால் ஆன பெருமாள் #திருமேனி வழிபாட்டில் இருக்கிறது.

🌷 மேலும் அந்த மரத்தின் வேர் பல இடங்களிலும் பரவியிருக்கிறது .இத்தகைய சிறப்புகளையுடைய திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மூவலூருக்கு வடக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் 'கோழிகுத்தி' எனும் கிராமத்தில் உள்ளது.

🌷 இங்கு தான் #ஸ்ரீவானமுட்டி பெருமாள் கோவில் இருக்கிறது.

🌷 இந்தப் பெருமாள் 14 அடி உயரத்தில் விஸ்வரூப தரிசனம் அருள்கிறார்.

🌷 'இவரைத் தரிசனம் செய்தால் திருப்பதி சீனிவாச பெருமாளையும் சோளிங்கர் யோக நரசிம்மரையும் காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாகத் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

🌷 #கோடிஹத்தி எனும் பெயர் தான் மருவி 'கோழிகுத்தி' என்றாகி விட்டது என்கிறார்கள்.

🌷 ‘சாபவிமோசனபுரம்’ என்பது தான் கோடிஹத்தியின் பூர்வ பெயர்.

🌷 சமஸ்கிருதத்தில் ‘ஹத்தி’ என்றால் கொலை என்று பொருள்.

🥀 பிப்பலர் என்ற #மகரிஷி மாபெரும் தவசீலர். இறை பக்தியில் எந்தக் குறையும் வைக்காமல் எந்த நேரமும் இறைவனை வணங்கி வந்தார்.

🥀 பிப்பலர் தன்னை நாடி வந்த அன்பர்கள் பலருக்கும் நல்வழி காட்டி ஆசி வழங்கி வந்தார்.

🥀 ஒரு முறை சரும நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த பிப்பலர்,‘
‘பரந்தாமா... பார்த்திபா...! இறைப் பணியில் இயன்ற அளவு ஈடுபட்டு என்னையே உனக்கு அர்ப்பணித்திருக்கிறேன். என் பக்தியில் என்ன குறை கண்டாய் நீ?எனக்கு ஏன் இப்படி ஒரு வேதனை?சருமத்தில் சோதனை? இதற்குத் தீர்வு கிடையாதா?’’ என்று மன்றாடினார்.

🥀 அன்று இரவு பிப்பலரது கனவில் காட்சி தந்த எம்பெருமான் ,‘‘பிப்பலரே!போன ஜென்மத்தில் நீர் அரசனாக இருந்து ஹத்தி (கொலை) செய்திருக்கிறாய். அதன் பலனாகத் தான் இந்த சரும நோய், உன் உடலில் தங்கி வேதனை அளிக்கிறது.அந்தப் பாவ தோஷம் நீங்க வேண்டுமானால், காவிரிக் கரையோரம் உன் யாத்திரையைத் தொடங்கு. மூவலூரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர் உனக்கு வழி காட்டுவார். அதன் பின் சரும நோய் நீங்கிப் பொன் உடல் பெறுவாய் நீ!’ ’என்று அருளிவிட்டு மறைந்தார்.

🥀 அதன்படி காவிரிக் கரையோரம் தனது யாத்திரையைத் தொடங்கிய பிப்பலர், வழியில் உள்ள தலங்களை எல்லாம் தரிசித்து உளமார வழிபட்டு மூவலூரை அடைந்தார்.

🥀 மூவலூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரரை உருக்கமாக வழிபட்டார். மனம் மகிழ்ந்த ஈஸ்வரன்,‘ ‘பிப்பலரே!வடக்கு நோக்கிச் செல்., உன் வாட்டம் தீரும்!’’ என்றார்.

🥀 பிப்பலரும் அப்படியே வடக்கு நோக்கிச் சென்று காவிரி நதியில் பகவானைப் பிரார்த்தித்தபடி நீராடினார்.

🥀 ஏதோ ஓர் உள்ளுணர்வு உந்த, அவர் கால்கள் நடக்கத் தொடங்கின. சிறிது தொலைவில் உயர்ந்து வளர்ந்திருந்த ஓர் அத்தி மரம் அவர் கவனத்தைக் கவர்ந்தது.

🥀 மரத்தை நெருங்கினார். அப்போது அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. விஸ்வரூபமான தன் உருவத்தைக் காட்டி நான்கு கைகளுடன் ஸ்ரீமந் நாராயணன் சங்கு சக்கர கதாதரணாக அபயஹஸ்தம் காட்டி வானளாவ உயர்ந்து நின்று பிப்பலருக்கு காட்சி அளித்தார்.

🥀 உடனே பிப்பலரின் உடலில் இருந்த சரும வியாதி முற்றிலுமாக மறைந்தது. அவர் உடல் தங்கமயமாக ஜொலித்தது.

🥀 சரும நோயிலிருந்து விடுபட்ட பிப்பலர்,பின்னர் காவிரிக் கரையிலேயே ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து தவத்தில் ஈடுபட்டார். இதையொட்டி ஓடும் காவிரி தீர்த்தத்தைப் 'பிப்பல மகரிஷி தீர்த்தம்' என்று அழைக்கிறார்கள்.

🥀 இங்கு நீராடினால் ஸ்ரீவானமுட்டிப் பெருமாளின் அருளால் மூழ்குபவரின் மெய்ப் பிணி, பாவப் பிணி, பிறவிப் பிணி ஆகிய மூன்றும் நீங்கும் என்கிறார்கள்.

💐 பிற்காலத்தில் இந்தத் தலத்தின் மகிமையை அறிந்த அரசர் ஒருவர், தான் போர் மூலம் புரிந்த கொலைப் பாவத்தைப் போக்க 48 நாள்கள் பிப்பல தீர்த்தத்தில் நீராடி தவம் இருந்து வழிபட்டார். அப்போதும் அந்த அரசருக்குக் காட்சிதந்தார் ஸ்ரீ வானமுட்டி பெருமாள்.

💐 மெய் சிலிர்த்த அரசன் தேர்ந்த சிற்பிகளைக் கொண்டு பகவான் காட்சி தந்த அத்திமரத்தில் பெருமாளின் உருவத்தைச் செய்யச் சொல்லி கோவில் எழுப்பி வழிபட்டான்.

💐 பெருமாள் காட்சி தந்த இடத்துக்கு முன்னால் உள்ள குளம், ‘விஸ்வரூப புஷ்கரணி’ என்று அழைக்கப்படுகிறது.

💐 இங்கு பெருமாளுக்கு இடப் பக்கத்தில் பூதேவித் தாயாரின் சிறு விக்கிரகம் உள்ளது. தாயாருக்கெனத் தனி சந்நிதி இல்லை. ஒரே ஒரு பிராகாரம் தான் இருக்கிறது.

💐 ஸ்ரீ பிரகலாதனுக்கு அருள் செய்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி தான் இங்கே உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார்.

💐 ஸ்ரீ யோக நரசிம்மர் இரண்டு கைகளில் #சங்கு_சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார்.

💐 இந்த #ஸ்ரீ_நரசிம்ம_மூர்த்தி எந்தவொரு கொடிய துன்பத்தையும் நொடியில் போக்கி அருள்பவர் கிரகக் கோளாறுகள், பகைவர்கள் தொல்லை, கடன் தொல்லை, வியாதிகளில் இருந்து விடுபட இவரை வழிபட்டால் நல்லது.

💐 பிரதோஷ காலத்தில் இந்த நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் அங்காரக தோஷம் நிவர்த்தியாகும். மன நிம்மதி ஏற்படும் என்கிறார்கள் பக்தர்கள்.

💐 கோழிகுத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாள் அத்திமரத்தால் எழுந்தருளியிருப்பதால் கருவறையில் எந்த வித விளக்குகளும் ஏற்றப்படுவதில்லை. அபிஷேகங்கள் நடைபெறாது.

💐 இத் திருக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு’சப்தஸ்வர ஆஞ்சநேயர்’ என்று பெயர். இந்தத் திருமேனியின் மீது 7 இடங்களில் தட்டினால் '#சரிகமபதநி' என்று சப்தஸ்வரங்களும் எழுகின்றன. மேலும் ஆஞ்சநேயர் வாலில் கட்டப்பட்டுள்ள மணியைத் தலை மீது தூக்கி வைத்துள்ளார்.

💐 சப்தஸ்வர ஆஞ்சநேயரை வழிபட்டால் #சனி_தோஷம் விலகுமாம்.தீராத தோல் வியாதிகள் நீங்க சனி தோஷத்திலிருந்து விடுபட வாழ்வில் செல்வ வளம் பெருக கோழிகுத்தி வானமுட்டி பெருமாளைத் நாமும் தரிசிப்போம்!

ஆன்மீகச் சோலை



சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Sun Aug 15, 2021 10:08 pm

சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் 103459460 சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் 1571444738

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 16, 2021 8:11 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 16, 2021 8:26 pm

நல்ல தகவல்  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக