புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_m10ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 15, 2021 7:23 pm

First topic message reminder :

* ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது
* தாலிபான் ஆட்சியின் இருண்ட நாட்கள் திரும்புகிறதோ என்ற அச்சத்தில் பெண்கள்
* ஆப்கான் தலைநகர் காபுலை கைப்பற்றிய தாலிபான்கள்


ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்..!


#ஆப்கானிஸ்தான் நிலத்தின் ஒவ்வொரு அங்குல பகுதியிலும் #தலிபான் களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆப்கானிஸ்தான் பெண்கள் நரகம் போன்ற சித்திரவதைகளை அனுபவித்த சகாப்தத்தை நினைவூட்டுகிறது. 1996 மற்றும் 2001 க்கு இடையில், நாடு #தாலிபான் களால் ஆளப்பட்டது. அது பெண்களுக்கான இருண்ட காலம். இது மிகவும் மோசமான காலகட்டம். பெண்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கியது.

பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகள் போல் வாழ்ந்தனர்




ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தாலிபான் காலத்தில், பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகளாக வாழ்ந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது படிக்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஒரு ஆண் உறவினர் துணையோடு தான் செல்ல வேண்டும். இருப்பினும், #தலிபான்கள் பல மாகாணங்களைக் கைப்பற்றிய பிறகு இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு இளம் பெண் இறுக்கமான ஆடை அணிந்திருந்ததால் தாலிபான்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது.

நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததற்காக தாக்குதல்




வீடுகளை விட்டு வெளியேறி, காபூலில் சாலையோரத்தில் அல்லது பூங்காக்களில் தஞ்சமடையும் குடும்பங்களின் நிலைமையை விவரித்துள்ளது அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கை ஒன்று . இந்த குடும்பங்களில் ஒன்று வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தகர் மாகாணத்தைச் சேர்ந்தது, அங்கு பெண்கள் ரிக்ஷாவில் வீட்டுக்குச் சென்ற போது, அவர்கள் நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது #தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள பகுதி.

பெண்கள் சந்தித்த இருண்ட காலம் திரும்புகிறதா




சமீபத்திய நாட்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இந்த கொடூர சம்பவங்கள், 2001 -க்கு முன்பு இருந்த பழைய தலிபான் ஆட்சியை மக்களுக்கு நினைவூட்டியது. 1996 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் நுழைந்தபோது, காபூலைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் #ஜெர்மினா கக்கருக்கு ஒரு வயது. அவரது தாயார் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அவரை வெளியே அழைத்துச் சென்றார், அப்போது சாப்பிட அவர் முகத்தில் இருந்த முக்காட்டை அகற்றினார், இதன் காரணமாக ஒரு தலிபான் போராளி அவரை கடுமையாக தாக்கினார். 'இன்று மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால், நாம் மீண்டும் அந்த இருண்ட நாட்களுக்குத் திரும்புவோம் என்று எனக்குத் தோன்றுகிறது' என அவர் கூறுகிறார்

அந்த நேரத்தில், தலிபான்கள் விபச்சார குற்றச்சாட்டின் கீழ் பகிரங்கமாக பெண்களை தூக்கில் தொங்க விடுவது, தலையை வெட்டுவது மற்றும் பெண்களைக் கல்லால் அடிப்பது போன்ற கொடூர சம்பவங்களை அரங்கேற்றினர். இப்போது பெண்கள் அந்த இருண்ட காலம் திரும்புமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.





ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2021 6:11 pm

ஆப்கனில் இந்திய தூதரக அலுவலகங்களில் தலிபான்கள் சோதனை?


ஆப்கனில் கந்தகார் மற்றும் ஹெராட் பகுதியில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களுக்குள் புகுந்து தலிபான் பயங்கரவாதிகள் சூறையாடியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும், மூடப்பட்டு கிடந்த தூதரகங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், ஆவணங்களை தேடியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களையும் எடுத்து சென்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இது எதிர்பார்க்கப்பட்டது தான். உலக நாடுகளுக்கு தலிபான் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகளை மீறி செயல்பட்டுள்ளது கவலை அளிக்கிறது என தெரிவித்து உள்ளார்.

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஆப்கனில், இந்திய தூதரகம் காலி செய்யப்படுவதை விரும்பவில்லை. இந்திய ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என கத்தாரில் உள்ள தலிபான் அலுவலகத்தில் இருந்து இந்திய அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தூதரகங்களில் தலிபான்கள் சூறையாடியுள்ளனர்.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2021 6:13 pm

ஆப்கனில் வீடு வீடாக சோதனை நடத்தும் தலிபான்


அமெரிக்கா மற்றும் நேடோ படையினருக்கு உதவியவர்களை தேடி, தலிபான் பயங்கரவாதிகள் வீடு வீடாக சென்று சோதனை நடத்துவதாக ஐ.நா.,வின் ரகசிய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க வெளியேற்றத்தை தொடர்ந்து, ஆப்கனில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால், ஏராளமானோர் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்கின்றனர். அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்தாலும், ஆயிரக்கணக்கானோர் வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தலிபான்களின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தயாரித்த ரகசிய அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அதை தயாரித்தவர்கள், தங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேடோ படைகளுக்கு உதவி செய்தவர்களை வீடு வீடாக சென்று தலிபான்கள் தேடி வருகின்றனர்.
காபூல் விமான நிலையம் நோக்கி செல்பவர்களையும் மிரட்டி வருகின்றனர். தங்களின் பேச்சை கேட்காதவர்களை ஷரியத் சட்டத்தின்படி தண்டனை வழங்குகின்றனர். நேடோ மற்றும் அமெரிக்க படைகளுக்கு உதவியர்கள், இணைந்து செயல்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை, தலிபான்கள் கொடுமைப்படுத்தும் அபாயம் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

நிருபர்கள் உறவினர் சுட்டுக்கொலை



இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ‛ டெயுட்சே வெல்லே' பத்திரிகை நிருபர்கள் இருவரை, அவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று தலிபான்கள் வீடு வீடாக சோதனை நடத்தினர். ஆனால், தற்போது அவர்கள் ஜெர்மனிக்கு சென்று விட்டனர். அவர்கள் கிடைக்காத கோபத்தில், நிருபர்களின் உறவினர்கள் மீது கடுமையாக தாக்கினர். அதில், ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். சிலர் தப்பி சென்று விட்டனர்.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2021 6:22 pm

ஆப்கானில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தவிப்பு!
காபூல் விமான நிலைய வழியில் தடுப்பு!
இந்தியத் தூதரகங்களைச் சோதனையிட்ட தலிபான்கள்!
நமது பலத்தையும், பொறுமையையும் சோதித்துப் பார்க்க அனுமதித்து விடக் கூடாது.


ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நேச நாடுகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தங்களது படைகளை விலக்கிக் கொள்ளும் என்று ஜோ பைடன் அறிவித்த பிறகு, தலிபான்களின் காபூலை நோக்கிய முன்னேற்றம் வேகம் எடுத்தது. 15 தினங்களுக்கு முன்பாக ஆகஸ்ட் 15 ஆம் தேதியே தலிபான்கள் காபூலைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் பின்பலத்தோடு பிரதமராக இருந்த அஷ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். ஆப்கானின் நிலை ஒவ்வொரு நாளும் மோசமாகிக் கொண்டு வருவதை இந்திய அரசு மிகவும் எச்சரிக்கையுடன் கவனித்து வந்ததாகவே நாம் கருதினோம். மத்திய அரசு ஜூலை மாதம் நான்காவது வாரத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள் பலரை இரவோடு இரவாகத் தனி விமானத்தில் அழைத்து வந்தது. ஆனால், அன்று அழைத்து வரப்பட்டவர்களில் பலர் உயர் அதிகாரிகள் மட்டுமே. இந்திய அரசின் அனுமதியுடன் அங்கு பணியாற்றச் சென்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் எனப் பலரும் இன்று வரை இந்தியாவுக்குத் திருப்பி அழைத்து வரப்படாததும், அதனால் அவர்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் வரும் செய்திகள் நமக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்தியத் தூதரக உயர் அதிகாரிகளை அழைத்து வந்ததை போன்ற துரித நடவடிக்கைகளைத் தொடர்ந்திருந்தால் இதுபோன்ற ஒரு சிக்கலான சூழல் வந்திருக்காது.

கடந்த 20 வருடமாக மிக மிகப் பின்தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நாடாளுமன்றம், பெரிய நூலகம், மிகப்பெரிய அணைக்கட்டு போன்ற கட்டமைப்புகளையெல்லாம் உருவாக்கித் தந்ததை சிறிதும் கூட எண்ணிப் பார்க்காமல் காந்தகார் மற்றும் காபூலில் பூட்டிக்கிடந்த இந்தியத் தூதரகங்களைக் கூட ஒவ்வொரு அங்குலமாகச் சோதனையிட்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் இந்திய மக்களிடத்தில் பெரும் கோபத்தை உண்டாக்குகிறது.

நகரின் பல பகுதிகள்; காபூல் நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தியத் தூதரக குடியிருப்புகளிலிருந்து கூட இந்தியர்களை காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வர முடியாத அளவிற்கு அங்கே தலிபான்களுடைய தடுப்பு நடவடிக்கைகள் மிக மோசமாக இருக்கின்றன. நேற்றைய தினம் இந்தியர்களை அழைத்து வரச் சென்ற இந்திய விமானப்படை விமானம் வெறும் 40 இந்தியர்களோடு மட்டுமே திரும்பி வந்திருக்கிறது. இன்னும் எத்தனை இந்தியர்கள் ஆப்கானில் சிக்கித் தவிக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் கூட நம்மிடம் சரியாக இல்லை.

இப்பொழுது காபூல் விமான நிலையம் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டிலிருந்தாலும் காபூல் நகரம் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தினால் எவரும் எளிதில் விமான நிலையத்தை நெருங்க முடியாத நிலை இருக்கிறது. பத்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க பத்து மணி நேரமும், சில தருணங்களில் ஒரு நாள் கூட ஆகிவிடுவதாகவும் சொல்கிறார்கள். காபூல் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆப்கான் மக்களுக்கும் தலிபான்களுக்கும் நடைபெறும் மோதல்கள், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகள் போன்ற மிக ஆபத்தான நிலை அங்கு உருவாகி இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் ’நிலைமை’ என்னவாகுமோ? என்ற அச்சம் எல்லோரிடமும் எழுந்திருக்கிறது.

காபூல், காந்தகார் உள்ளிட்ட அனைத்து ஆப்கான் பகுதிகளிலும் சிக்கித் தவிக்கக் கூடிய இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்புடன் உடனடியாக அழைத்து வர வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. தேவைப்பட்டால் நமது இராணுவத்தையும் ஆப்கானிஸ்தானில் இறக்குவதற்குக் கூட இந்தியா தயங்கக் கூடாது. இது ஆப்கான் இந்தியர்களின் பாதுகாப்பு பிரச்சினை மட்டுமல்ல, 140 கோடி இந்திய மக்களின் கௌரவப் பிரச்சினையும் கூட. இந்தியாவின் கௌரவத்தை தலிபான்கள் எவ்விதத்திலும் சோதித்துப் பார்க்க அனுமதித்து விடக் கூடாது. ஜனநாயக ரீதியாக அமைந்த அரசுகளிடம் பேசுவதைப் போன்ற மெல்லிய அணுகுமுறைகள் அடிப்படைவாத தலிபான்களிடம் எவ்வித பலனையும் தராது.

எனவே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மிகவும் துரிதப்படுத்த வேண்டும்; அதே சமயத்தில் தலிபான்களிடத்தில் இந்தியா சிறிதும் இரக்கம் காட்டாது என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் தலிபான்களை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்; தேவைப்படும் பட்சத்தில் உரிய அவசர அதிரடி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆப்கானிலுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு தயங்கக் கூடாது என்பதுமே அனைத்து இந்திய மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

ஆப்கானில் இந்தியர்கள் தொடர்ந்து தவிக்க இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது!
இந்தியாவின் பலத்தையும், பொறுமையையும் தலிபான்கள் சோதித்துப் பார்க்க ஒரு கணமும் அனுமதிக்கக் கூடாது!

தேவைப்படும் பட்சத்தில் உரிய அவசர அதிரடி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆப்கான் இந்தியர்களை மீட்க இந்திய அரசு தயங்கக் கூடாது

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.




ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2021 7:59 pm


ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க தாலிபான்கள் அனுமதிப்பதில்லை.
அதேவேளையில், பெண்கள் படிக்கவும் பணியாற்றவும் கூட அவர்கள் அனுமதிப்பதில்லை.





தாலிபான்கள் பெண்களை கொன்று அவர்களின் உடல்களை சில நேரங்களில் நாய்களுக்கு உணவாக வழங்குவார்கள் என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.



ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் கதேரா. தாலிபான்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளான அவர்,  தனது சிகிச்சைக்காக கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் தங்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் போலீஸாக பணியாற்றிய கதேரா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணி முடிந்து வீடு திரும்பியபோது தாலிபான்கள் அவரை வழிமறித்துள்ளனர்.

அவரது அடையாள அட்டையை பார்த்ததோடு துப்பாக்கியாக தொடர்ச்சியாக சுட்டுள்ளனர். கத்தியாலும் குத்திய தாலிபான் தீவிரவாதிகள், கதேராவின் கண்களை தோண்டி எடுத்தனர். அப்போது அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதேரா சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார்.

தற்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், இது தொடர்பாக நியூஸ் 18 ஊடகத்துக்கு பேட்டியளித்த கதேரா, “ அவர்கள் முதலில் எங்களை (பெண்கள்) கொடுமைப்படுத்துவார்கள், பின்னர் தண்டனைக்கான எடுத்துக்காட்டாக எங்கள் உடல்களை வீசிவிட்டு செல்வார்கள். சில நேரங்களில் நாய்களுக்கு உணவாக எங்கள் உடல் வீசப்படும்.

அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்த நான் அதிர்ஷ்டசாலி,  ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியின் கீழ் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் வாழ்வது நரகத்துக்கு ஒப்பானது” என்று கூறியுள்ளார். தாலிபான்களுக்கு அடிபணியவில்லை என்றால் பெண்களாக இருந்தாலும் யாராக இருந்தாலும் வீதிகளில் மரணத்தை சந்திப்பார்கள் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் லஜ்பத் நகர் பகுதியில் உள்ள கஸ்தூர்பா நிகேதன் வழக்கமான சலசலப்பை இழந்து காணப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் வசிக்கும் காலனியாக இப்பகுதி தற்போது களையிழந்து காணப்படுகிறது. அங்கு இருப்பவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களின் உறவினர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் இயலாமல் வேதனையில் உழன்று வருகின்றனர்.

ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க தாலிபான்கள் அனுமதிப்பதில்லை அதேவேளையில், பெண்கள் படிக்கவும் பணியாற்றவும் கூட அவர்கள் அனுமதிப்பதில்லை என்று கூறும் கதேரா, ’பின்னர் பெண்கள்  என்ன செய்ய முடியும் , இறக்கவா முடியும்? குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு மட்டும்தான் பெண்கள் என்று நீங்கள் நினைத்தாலும், மருத்துவ வசதி இல்லாமல் எப்படி குழந்தை பெற்றுகொள்ள முடியும்’ என்று கேள்வி எழுப்புகிறார்.

‘கடந்த 20 ஆண்டுகளில் நாங்கள் என்ன உருவாக்கினோம் என்பதை கற்பனை செய்ய இந்த உலகத்திற்கு கடினமாக இருக்கும்.  நாங்கள் கனவுகள் உருவாக்கி இருந்தோம். தற்போது அவை போய்விட்டன. எங்களுக்கு அனைத்தும் முடிந்து விட்டன. நாட்டை கைப்பற்றுவதற்கு முன்பே அரசாங்கத்தில் பணீயாற்றும் பெண்கள், பெண் காவலர்கள் போன்றவர்கள் தாலிபான்களால் வேட்டையாடப்பட்டனர்.  தாலிபான்கள் இஸ்லாத்துக்கு கறை’ என்றும் அவர் கூறியுள்ளார்.

News18




ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2021 8:03 pm

சீனாவால் ஆப்கானின் வளர்ச்சியில் உதவ முடியும்: சீனா மீது தாலிபான் கொண்டுள்ள நம்பிக்கை


ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகித்துள்ளது என்றும் நாட்டின் புனரமைப்பிற்கு சீனா செய்ய நினைக்கும் உதவிகள் வரவேற்கத்தக்கது என்றும் தாலிபானின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் சீன அரசு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் பரபரப்பான பல சம்பவங்கள் நடந்து விட்டன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட ஆப்கானின் கிட்டத்தட்ட அனைத்து நகரங்களையும் தாலிபான் தன்வயப் படுத்தியது. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பித்து ஓடினார். ஆப்கான் மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஆப்கான் குடிமக்கள் பாதுகாப்புக்காக பிற நாடுகளுக்கு செல்ல முயன்று வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த முந்தைய தாலிபான் ஆட்சியின் போது விதிக்கப்பட்ட இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான நிபந்தனைகளை தாலிபான் மீண்டும் கொண்டு வருமோ என்ற அச்சம் வெகுவாக உள்ளது.

இந்த நிலையில், சக்திவாய்ந்த நாடாக இருக்கும் சீனா ரஷ்யா மற்றும் அமெரிக்காவைப் போலல்லாமல், ஆப்கானிஸ்தானில் எந்த வித சண்டைகளிலும் ஈடுபடவில்லை என்பதால், தலிபான்களைக் கையாள்வது, அந்த நாட்டுக்கு மிக எளிதாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

"சீனா ஒரு பெரிய பொருளாதாரம் மற்றும் திறன் கொண்ட ஒரு பெரிய நாடு. ஆப்கானிஸ்தானின் புனரமைப்பு, மறுவாழ்வு, வளர்ச்சி ஆகியவற்றில் சீனாவால் மிகப் பெரிய பங்கு வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று ஷகீன் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரு நேர்காணலில் சிஜிடிஎன் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

கடந்த மாதம் வடக்கு சீன துறைமுக நகரமான தியான்ஜினில் தாலிபான் குழுவுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்திப்பு நடத்தினார். அப்போது, ​​ஆப்கானிஸ்தான் ஒரு மிதமான இஸ்லாமிய கொள்கையை ஏற்றுக்கொள்வதை சீனா விரும்பும் என்று அவர் கூறினார்.

சீனா தனது மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் மத தீவிரவாதத்தை ஒரு சீர்குலைக்கும் சக்தியாக மேற்கோள் காட்டியுள்ளது. பிரிவினைவாத சக்திகளுக்கு தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் பயன்படும் என்று நீண்டகாலமாக தன் கவலைகளையும் வெளிப்படுத்தி வந்துள்ளது.

தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான் கை ஓங்கியுள்ள நிலையில், சீனா தன் சாய்வை ஆப்கான் பக்கம் திருப்பிக்கொண்டுள்ளது. இது சீனாவின் குள்ளநரித்தனத்துக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2021 8:04 pm

விமானத்தில் இருந்து விழந்தது கால்பந்து வீரர் - அதிர்ச்சி தகவல்!


19 வயதான சாகி அன்வாரி, ஆப்கானிஸ்தான் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடியவர். விமானங்களின் சக்கரங்கள், இறக்கைகளில் அமர்ந்து ஆபத்தமான முறையில் பயணம் செய்து உயிரிழந்தவர்களில் சாகி அன்வாரியும் ஒருவர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான விமானத்தில் சென்றபோது அவர் உயிரிழந்தார். இளம் கால்பந்து வீரரின் மறைவுக்கு சக வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜகி அன்வரியின் உடல் பாகங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பத்திரிகையாளர் பாபக் தக்வேய் கூறுகையில், “அமெரிக்காவின் C-17A விமானத்தின் தரையிறங்கும் கியரை பிடித்து காபூலை விட்டு வெளியேற முயன்ற இளைஞர்களில் ஜகி அன்வரியும் ஒருவர். இவர் ஆப்கானிஸ்தானின் தேசிய இளைஞர் கால்பந்து அணியின் வீரர்” என தெரிவித்தார்.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2021 8:13 pm

ஆப்கானிஸ்தானின் பிரபல பூங்காவை தாலிபான்கள் எரித்துள்ளனர்.


ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அந்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர் உடனடியாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபரின் மாளிகையைப் பிடித்த தலிபான்கள் அங்கு ஆட்டம் போட்டனர், அதேபோல் குழந்தைகளைபோல் சிறுவகை கார்களை போட்டு கையில் துப்பாக்கியுடன் வீடியோ வெளியிட்டு இன்று உலகையே அதிர வைத்தனர்.

ஏற்னவே சீனா, பாகிஸ்தான் நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், தலிபான்களின் பழமைவாதம் பற்றிய பேச்சுகள் உலகம் முழுவதும் எதிரொளிக்கிறது.

இந்நிலையில் அஷ்ராப் கானி ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் ஓமன் நாட்டிற்குத் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியானது.

உலகமே ஆப்கானிஸ்தானை உற்றுநோக்கியுள்ள நிலையில், தற்போது அந்நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சாலே தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அதிபர் நாட்டை விட்டு ஓடிவிட்டதால், சட்டப்பூர்வமான நானே அதிபர் என அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,காபூலைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் உள்ள தாலிபான்கள் நேற்று விளையாட்டுப் பூங்காவில் துப்பாக்கியுடன் விளையாடினர்.

இன்று, நேற்று விளையாடி மகிழ்ந்த பூங்காவை அவர்களை தீ வைத்து எரித்துச் சாம்பலாக்கினர். இதுகுறித்து வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும், இஸ்லாமியர்களுக்கு எதிரான சிலைகள் பூங்காவில் இருந்ததால் இதை எரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.



ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2021 8:15 pm


ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் இந்த வேகத்தில் கைப்பற்றியது உலகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு மற்றும் ராஜீய நிபுணர்களை திகைக்க வைத்திருக்கிறது.

காபூல் நகரம் வீழ்ச்சியடைந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் செய்திருக்கும் முதலீடுகளையும், உடைமைகளையும் விட்டுவிட்டு வெளிநாடுகள் அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரிகளையும் குடிமக்களையும் அவை மீட்டு வருகின்றன.

தாலிபன்களின் வெற்றி தெற்காசிய நாடுகளின் புவிசார் அரசியலில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படத்தக்கூடும். இது இந்தியாவுக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கலாம்.

ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கப் போகும் பாகிஸ்தான் மற்றும் சீனவுடனான எல்லைச் சிக்கல்கள், பதற்றமான உறவுகள் ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய காரணிகளாக இருக்கும்.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான எல்லை, அதிக கட்டுப்பாடு இல்லாதது. இது இரு தரப்பு உறவில் மிக முக்கியமான அம்சம். இப்போது ஆப்கானிஸ்தானில் பெரிய அளவில் செயலாற்ற வேண்டும் என்று சீனாவும் விரும்புகிறது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, தாலிபன் தலைவர்கள் கடந்த மாதம் பெய்ஜிங்கில் சந்தித்தார். ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் சீனா இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்தப் புதிய புவிசார் அணிசேர்க்கை "அனைத்தையும் தலைகீழாக மாற்றும்" என்கிறார் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் கவுதம் முகோபாத்யாயா.

காபூலில் இருந்த ஜனநாயக அரசு, மேற்கத்திய நாடுகள், மற்றும் இந்தியா போன்ற பின ஜனநாயக நாடுகளுக்கும் இடையேயான ஓர் கூட்டணியாக ஆப்கானிஸ்தான் இதுவரை இருந்து வந்தது. ஆனால் "மகா ஆட்டத்தின்" புதிய ஆட்டக்காரர்களாக பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான், சீனா ஆகிய நாடுகளை உலகம் இனி பார்க்கக்கூடும்

இதை இந்தியாவுக்கு இழப்பாகவும் பாகிஸ்தானுக்கு பெரிய வெற்றியாகவும் பலர் கருதுகின்றனர். ஆனால் இது மிகவும் மேலோட்டமான பார்வை என்கிறார் இந்தியாவின் முன்னாள் அரசுமுறை அதிகாரி ஜிதேந்திரநாத் மிஸ்ரா. ஏனென்றால் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லையை தாலிபன்கள் ஒருபோதும் அங்கீகரித்தது இல்லை. இது பாகிஸ்தானுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியது.

"தங்களது எல்லையை தாலிபன்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. இதற்கே முன்னுரிமை அளிக்கும்" என்று கூறினார் முகோபாத்யாயா..

இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சி அமைவது இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானுக்கு உத்திசார் ஆதாயத்தை அளிக்கிறது என்பதும் உண்மைதான்.

"இஸ்லாமாபாத் தான் எப்போதும் விரும்பிவந்த ஒன்றை இப்போது பெற்றிருக்கிறது" என்கிறார் வாஷிங்டனில் உள்ள வில்சன் மையத்தின் சிந்தனைக் குழுவின் துணை இயக்குநர் மைக்கேல் குகல்மேன். அது தன்னால் எளிதில் செல்வாக்குச் செலுத்த முடிகிற ஓர் ஆப்கானிஸ்தானிய அரசாங்கம்.

"ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய கேந்திர இலக்குகள் உள்ளன" என்று கூறுகிறார் குகல்மேன். "இந்த நேரத்தில் அது தன்னை மிகப்பெரிய வெற்றியாளராக பார்க்கிறது."

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவு அல்லது ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானியுடன் தங்களுக்கு இருந்த மந்தமான உறவுகளால் பாகிஸ்தான் கவலையில் இருந்தது. தங்களது பொருளாதார நிலையும் அவர்களுக்கு சிக்கலாக இருந்தது.

இப்போது தாங்கள் தான் வெற்றியாளர் என்று பாகிஸ்தான் நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. ஏனெனில் சீனாவுடனான "அனைத்துச் சூழல்" நட்பும் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், பெய்ஜிங் அதன் வலிமையை காட்ட இப்போது தயங்கவில்லை. "சீனா தனது சொந்த விதிகளின்படி இப்போது ஆட்டத்தை ஆட முடியும்," என்கிறார் மிஸ்ரா.

சீனாவிற்கு ஆப்கானிஸ்தானில் பொருளாதார நோக்கங்கள் உண்டு. அதிகரித்துவரும் கனிமங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய சீனா நினைக்கிறது. ஆனால் அதைவிட முக்கியமாக கிழக்கு துர்கஸ்தான் இஸ்லாமிய இயக்கம்(ETIM) ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படுவதற்குத் தடை விதிக்க தாலிபன்களை சீனா வலியுறுத்தும். சீனாவில் இஸ்லாமியர் ஆதிக்கம் உள்ள ஜின்ஜியான் மாகாணத்தில் அமைதியின்மைக்கு காரணம் இந்த இயக்கமே என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

சீனாவும் பாகிஸ்தானும் "ஆப்கானிஸ்தானில் ஒருவரது முதுகில் மற்றவர் சவாரி செய்யும்" என்று முகோபாத்யாயா கூறுகிறார். அதே நேரத்தில் கடந்த காலங்களில் மற்ற உலக வல்லரசுகளைப் போல எந்த வலையிலும் சீனா விழுந்துவிடக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கிறார்.

ரஷ்யாவும் ஈரானும் ஒரே பாதையில் இருப்பதாகத் தெரிகிறது. அவை தங்களது தூதரகங்களைக் காலி செய்யவில்லை. இரு நாடுகளின் தூதர்களும் காபூலில் இன்னும் பணியாற்றி வருகிறார்கள்.

ஆக, இந்தியா இப்போது என்ன செய்யலாம்? பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யாவைப் போல இந்தியா ஒருபோதும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மிகப்பெரிய பங்கு வகித்ததில்லை. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் பண்பாட்டு உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா எப்போதும் முனைப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது. கல்வி, வேலை அல்லது மருத்துவ சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள்..

"இன்றைய சூழலில் ஆப்கானிஸ்தானுக்கு நல்ல வாய்ப்புகள் என்று ஏதுமில்லை. மோசமானவை அல்லது மிக மோசமான வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன" என்று கூறுகிறார் மிஸ்ரா.

தாலிபன் அரசை அங்கீகரிப்பதா வேண்டாமா என்பது இப்போது இந்தியா முன்னிருக்கும் மிகப்பெரிய சவால். ரஷ்யாவும் சீனாவும் தாலிபன்களின் அரசை ஏற்றுக்கொள்ளும்போது, இந்தியாவின் நிலை கடினமாகிவிடும். 1999-ஆம் ஆண்டைப் போல தாலிபன் அரசை பாகிஸ்தான் அங்கீகரிக்க வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தாலிபன்களுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு வழியைத் திறந்து வைப்பதே இந்தியாவுக்கு இருக்கும் சிறந்த வழி. ஆனால் தாலிபன்களுடனான இந்தியாவின் உறவின் வரலாற்றைக் கருத்தில் கொண்டால் இது கசப்பானதாகவே இருக்கப் போகிறது.

1999-ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியவர்களுக்கு தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்தனர். இந்தச் சம்பவம் இந்தியர்களின் நினைவில் செதுக்கப்பட்டிருக்கிறது. 1996 மற்றும் 1999 க்கு இடையேயான கால கட்டத்தில் தலிபான்களுடன் சண்டையிட்ட வடக்குக் கூட்டணி எனப்படும் ஆயுதக் குழுவுடன் இந்தியா எப்போதும் நெருக்கமான உறவைப் பேணி வருகிறது.

தாலிபன்கள் காபூலைக் கைப்பறிவிட்டதால், பிராந்தியம் ஸ்திரமாக இருக்கவும், சொந்த நலனைப் பாதுகாக்கவும்கடந்த காலக் கசப்புகளை ஒதுக்கிவைக்கவே இந்தியா விரும்பும். தாலிபன்கள் வெற்றி பெற்றிருப்பதால் கிடைத்திருக்கும் ஊக்கத்தைப் பயன்படுத்தி ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ-தாய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற கவலையும் இருக்கிறது.

"இந்தியா கத்தி மீது நடக்க வேண்டிய தருணம் இது" என்கிறார். லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியரும், ஆப்கானிஸ்தான் பற்றிய புத்தகத்தின் ஆசிரியருமான அமலேந்து மிஸ்ரா

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியம், முஜாஹிதீன்களின் அடுத்த இலக்காக மாறிவிடாமல் இருப்பதை உறுதி செய்ய ஓர் உத்தி இந்தியாவுக்குத் தேவைப்படலாம்.

தாலிபான்களுடன் இந்தியா தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும் என்பதுடன், தாலிபன் எதிர்ப்பு அணியுடன் பணியாற்றுவதில் எந்த அளவுக்கு ஆர்வங்காட்ட வேண்டும் என்பதை இந்தியா முடிவு செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தாலிபான்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்காக ஓர் அணியைத் திரட்ட மேற்கு நாடுகள் திட்டமிடுகின்றன. தாலிபன் அரசுக்கு எதிரான ஒரு கூட்டணிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் வடக்குக் கூட்டணி மீண்டும் அணி சேர்ந்து தாலிபன்களுக்கு எதிராகச் சண்டையிடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அதேபோல அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கும் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே யார் பெரியவன் என்ற போட்டிக்கான களமாக ஆப்கானிஸ்தான் மாறவும் வாய்ப்பிருக்கிறது.

எனவே இந்தியாவுக்கு எளிதான வழிகள் ஏதும் இல்லை. ஆனால் இந்தியாவின் முடிவுகள் பிராந்திய அமைதி மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

வெப்துனியா




ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2021 7:35 pm

ஆப்கனில் தலிபான் ஆட்சி: அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலா?


சர்வதேச ஊடகங்களில் சில நாள்களாக அதிகளவு பேசப்பட்ட பெயர் தலிபான். ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது முழு ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது.

அமெரிக்கப்படைகள் பின்வாங்கப்பட்டதன் விளைவாக, ஆப்கன் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிய தலிபான்கள் தற்போது அதிபர் மாளிகையையும் கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்க கட்டமைப்பில் ஆப்கானிஸ்தான் மக்கள் எந்தவித பலனையும் அனுபவிக்கவில்லை என்றாலும், தலிபான்களின் பிடியில் தற்போது நாடு சிக்கியுள்ளது மேலும் அவர்களை வாட்டி வதைக்கவே செய்யும் என்று அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் பெண்கள் உள்பட அந்நாட்டு மக்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற பதற்றம் எழுந்துள்ளது. இந்த அச்சம் அண்டை நாட்டின் பாதுகாப்பிலும் எதிரொலிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின், அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியன் நாடுகளுக்கும் இடையே பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு சோவியத் யூனியன் ஆதரவு என இரண்டு பக்கங்களில் நின்றன.

அப்போது, சோவியத் யூனியனின் ஆதரவோடு 1978ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றினர். இருப்பினும், ஓராண்டில் அவர்களது ஆட்சி கவிழ்க்கப்பட்டு 1979-ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி சோவியத் யூனியன் ஆப்கனுக்குள் புகுந்து ஆட்சியை கைப்பற்றியது.

இதையடுத்து சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்கா, பாகிஸ்தான் ஆதரவோடு சோவியத் படைகளுக்கு எதிராக தீவிர தாக்குதலை மேற்கொள்ள தொடங்கின.

சோவியத் யூனியன் படைகளுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு மேல் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சோவியத் யூனியன் படைகள் 1989ஆம் ஆண்டு பின் வாங்கின.

1992 முதல் முஜாகிதீனின் 7 இஸ்லாமிய பிரிவுகளுக்கு இடையே அதிகாரத்தைப் பகிர ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கிடையே 1994ஆம் ஆண்டு முஜாகிதீனின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து முல்லா ஓமர் தலைமையில் தெற்கு காந்தகாரில் தலிபான் படையினராக உருவெடுத்தார்கள்.

தலிபான்களின் தொடர் தாக்குதலால், 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 26இல் தலைநகர் காபூல் கைப்பற்றப்பட்டது. முல்லா ஓமர் தலைமையிலான தலிபான்கள் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பையேற்றனர்.

முல்லாவின் ஆட்சியில், கடுமையான பிற்போக்குவாத செயல்கள் கடுமையாக பின்பற்றப்பட்டன. ஆண்கள் கட்டாயமாக தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இவற்றை மீறினால் மரண தண்டனையும் விதித்தனர்.

இதற்கிடையே, அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தின் மீது 2001 செப்டம்பர் 11ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்திய அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், தலிபான்களின் பாதுகாப்பில் இருந்தார்.

இந்நிலையில், செப்டம்பர் இறுதிக்குள் பின்லேடனை ஒப்படைக்குமாறு ஆப்கனில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் தலிபான்களுக்கு இறுதி எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை பொறுப்படுத்தாமல் இருந்த ஆப்கன் மீது அமெரிக்காவின் படைகள் தாக்குதல் நடத்தின. நவம்பர் 13ஆம் தேதி காபூலுக்குள் புகுந்த அமெரிக்க படைகள் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதன்பின், அமெரிக்க ஆதரவுடன் ஹமீத் கர்சாயின் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆப்கனின் பாதுகாப்பிற்காக லட்சக்கணக்கான வீரர்களை அமெரிக்கா அனுப்பியது. பல்லாயிரம் கோடி டாலா்களை செலவிட்டு ஆப்கன் அரசையும் ராணுவத்தையும் அமெரிக்கா கட்டமைத்தது.

ஆனால், ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளித்த அமெரிக்கா, ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பிற்கும், நாட்டு மக்களின் படிப்பறிவை மேம்படுத்தவும் எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை.

இதனால், தலிபான் அமைப்புகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சேரத் தொடங்கியதன் விளைவு மீண்டும் தலிபான்கள் வலுப்பெற்று நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கினர்.

2018ஆம் ஆண்டு பாதிக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அவ்வப்போது அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தினாலும், இறுதியில் தலிபான்களின் கைகளே ஓங்கின.

பிப். 29, 2020இல் அமெரிக்கா - தலிபான் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது. அமெரிக்கப் படைகள் அடுத்த 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது.

அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் ஊடகப் பிரிவுத் தலைவர் தாவா கான் மேனாபால், இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனியல் சித்திகி உள்ளிட்டோரை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.

ஆனால், ஆப்கன் படையினா் தலிபான்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முழுவீச்சில் போராடவில்லை. அதற்குப் பதிலாக ஆயுதங்களைப் போட்டுவிட்டு அவா்கள் தப்பியோடினா். அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மூலம் உதவி செய்தாலும், சில ஆப்கன் படையினா் தலிபான்களுடன் மிதமான மோதலில் மட்டும் ஈடுபட்டனா்.

கடந்த 10 நாள்களிலேயே பல முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். ஏராளமான படைப் பிரிவுகள் மோதல் இல்லாமலேயே தலிபான்களிடம் சரணடைந்தன. இந்த நிலையில், தலைநகா் காபூலின் புறநகா்ப் பகுதிகள் வரை முன்னேறி வந்த தலிபான்கள், சண்டையை தற்காலிகமாக நிறுத்திவைத்தனா். காபூலை ரத்தம் சிந்தாமல் அமைதியான முறையில் ஒப்படைக்குமாறு ஆப்கன் அரசை அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினா்.

இதனிடையே, தலைநகரில் ரத்த வெள்ளத்தை ஏற்படுத்த விரும்பாததால் ஆட்சிப்பொறுப்பை விட்டு செல்வதாக தெரிவித்த அதிபா் அஷ்ரஃப் கனி, ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டைவிட்டு வெளியேறினார்.

இதையடுத்து, காபூலுக்குள் புகுந்த தலிபான்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர். மேலும், ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஆகஸ்ட் 16ஆம் தேதி தலிபான் செய்தி தொடர்பாளர் முகமது நயீம் அறிவித்தார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலிபான்களின் கருத்தியல்களை வலுவாகப் பின்பற்றும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் வங்கதேசம் (ஜேஎம்பி) பயங்கரவாத இயக்கம் தெற்காசியாவில் மீண்டும் வலுப்பெற வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.

மேலும், இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பிரச்னைகள் இருந்து வரும் நிலையில், தலிபான் அரசுக்கு பாகிஸ்தானும் சீனாவும் ஆதரவு அளித்திருப்பது, இந்தியாவிற்கான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

தலிபான்களால் பிற நாட்டினருக்கு ஒருபுறம் பிரச்னை இருந்தாலும், சொந்த நாட்டை மீண்டும் பிற்போக்குத்தன்மைக்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்றும் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

தினமணி




ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2021 8:16 pm


ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலைய ஓடுதளம். அமெரிக்க போர்த்தளவாட விமானம் 640 பேருடன் வானில் பறக்க ஆயத்தமாகிறது. விமானத்தின் முன்பாக ஆயிரக்கணக்கானவர்கள் நிற்கிறார்கள். விமானத்தின் இறக்கைகள், டயர்களுக்கு மேல் என எங்கும் மக்கள் தொற்றிக்கொண்டிருக்கிறார்கள். விமானம் வானில் பறக்க, 500 அடி உயரத்திலிருந்து மூன்று நான்கு பேர் விழும் காட்சிகள் நேரலையில் வெளியாகி, உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. நாம் வாழும் காலத்தின் மிக அவலமான காட்சி அது!

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து விலகிய ஒரு வாரத்துக்குள் அவர்கள் இருபது ஆண்டுகளாக உருவாக்கிய அரசும் ராணுவமும் சீட்டுக்கட்டு மாளிகையைப்போல் சரிந்து விழுந்தன. ஆப்கன் ராணுவம் படிப்படியாக தாலிபன்கள் வசம் சரணடைந்தது. தாலிபன் படைகள் வடக்கிலிருந்து ஒவ்வொரு நகரையும் கைப்பற்றி காபூல் நோக்கி வந்தன. காபூல் நகரமே, தன்னை தாலிபன்கள் வசம் ஒப்படைப்பதற்காகக் காத்திருந்தது போலவே காட்சியளித்தது. 2001-ல் அமெரிக்கா ஆப்கன் மீது தனது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இதுவரை 167 லட்சம் கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. இருப்பினும், இந்தப் படைகளால் ஒரு சில தினங்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஏன் இவை எல்லாம் நடைபெறுகின்றன?

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலக நாடுகள் தங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளை பலப்படுத்தி, நவீன அரசுகளின் வழியே பலன்களை மக்களுடன் பகிர தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தன. அதுபோலவே ஆப்கானிஸ்தானும் ஒரு குடியரசாக மலரத் தொடங்கியது. நகரங்களின் அடிப்படைக் கட்டமைப்புகள், விமான நிலையங்கள், நவீன தொழிற்சாலைகள், பல்கலைக்கழகங்கள், பெண்களுக்குக் கல்வி என புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆனால், ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் வாழும் பஸ்தூன் பழங்குடிகளின் தலைமையால் நவீன மாற்றங்களை ஏற்க முடியவில்லை. இதற்கு எதிர்வினையாக அங்கு 1970-களின் இறுதியில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. அப்போது ஆப்கன் அரசு உதவி நாடியதும், ரஷ்யப் படைகள் உள்ளே நுழைந்தன.

மறுபக்கம் ரஷ்யப் படைகளை வெளியேற்றுவதற்காக அமெரிக்கா, இரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பஸ்தூன்களின் படைகளுக்கு ஆயுதங்களைக் கணக்கின்றி கொடுத்தன. `முஜாஹிதீன்கள்’ என்று தங்களை அழைத்துக்கொண்ட இந்தப் படைகளுக்கு பணமும் ஆயுதங்களும் தங்கு தடையின்றி கிடைக்க எல்லா வகையான ஏற்பாடுகளையும் அமெரிக்கா செய்தது. 1988-ல் வெளியான சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ‘ராம்போ 3’-ல், வீரம் செறிந்த யுத்தத்தைச் செய்துகொண்டிருக்கும் முஜாஹிதீன்களிடம் சென்று ஆயுதங்களை வெற்றிகரமாகக் கொடுப்பதுதான் கதாநாயகனின் பணி.

முஜாஹிதீன்கள், ஆப்கன் அரசு, ரஷ்யப் படைகள் எனும் இந்த முக்கோண யுத்தத்தில் 1982-ல் மூன்று கோடி மக்கள் அகதிகளாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தனர். ஒன்றரைக் கோடி மக்கள் இரானுக்குச் சென்றார்கள். தெற்கு இரானின் ஒவ்வொரு நகரத்திலும் பெரும் எண்ணிக்கையில் வாழும் ஆப்கன் அகதிகளை நான் நேரில் சென்றபோது பார்த்திருக்கிறேன். அவர்களின் நிலை அவலத்திலும் அவலம்!

1986-ல் கார்மல், 1992-ல் நஜிபுல்லா எனத் தொடர்ந்து ஆட்சி மாற்றங்கள்... பிறகு புரட்சிகள், எதிர்ப்புரட்சிகள் ஏற்பட்டு 1994-ல் ஆப்கானிஸ்தான், தாலிபன் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. தாலிபன்கள் ஷரியத் எனும் முஸ்லிம் சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்தினர். 2001-ல் தாலிபன்களின் தலைவரான முல்லா முகம்மத் ஒமர் ஆப்கானிஸ்தானிலுள்ள பாமியான் புத்தர் சிலைகளைத் தகர்க்க உத்தரவிட்டார். பெண்கள் பள்ளிக்கூடம், கல்லூரி, வேலைக்குச் செல்வதைத் தடை செய்தனர். இவற்றை எதிர்த்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா, ஆப்கனில் உள்ள ‘அல்கொய்தா’தான் இதைச் செய்ததாகக் கருதியது. அமெரிக்கப் படைகள் ஆப்கன்மீது பெரும் தாக்குதலைத் தொடங்கின. 2002-ல் அமெரிக்கா அங்கு ஒரு காபந்து அரசை உருவாக்கியது. அதன் பின்னணியில் 2002-ல் தேர்தல் மூலம் ஹமித் கர்ஸாய் வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 2009-ல் மீண்டும் அவர் தேர்தலில் வெற்றிபெற்றார். 2014 மற்றும் 2019-களில் அஷ்ரஃப் கானி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நான்கு தேர்தல்களுமே நியாயமாக நடத்தப்பட்டனவா என்கிற சந்தேகங்கள் ஆப்கனில் வலுவாகவே இருக்கின்றன. 2002 முதல் 2021 வரை அமெரிக்கா நிறுவிய பாவைக்கூத்து ஜனாதிபதிகளின் கீழ் பலவீனமான, ஊழல் மலிந்த அரசுகள்தான் ஆப்கனை ஆட்சி செய்தன. அப்போதும் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் பல தொடரவே செய்தன.

2015 முதலே ரஷ்யா, இரான் ஆகிய நாடுகள் தாலிபன்களுக்குத் தங்களின் உதவிக்கரத்தை நீட்டின. வேறு குழுக்கள் அங்கு வலுப்பெறுவதைத் தடுக்கவே ராஜதந்திரமாகச் செய்வதாக அவர்கள் கருதினார்கள். அதேசமயம், அமெரிக்க உளவுத்துறைக்கு தாலிபன்கள் வலுப்பெற்றுவருவது பற்றிய தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதற்காக அமெரிக்காவுக்கும் தாலிபன் தலைமைக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் தோஹாவில் 2020, பிப்ரவரியில் கையெழுத்தானது. அதன்படி, கடந்த 18 ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே நீடித்துவந்த போர் முடிவுக்கு வந்தது. அடுத்த 14 மாதங்களில் அதாவது, ‘செப்டம்பர் 2021-ல் அமெரிக்கா தனது படைகளை முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக்கொள்ளும்’ என்று இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் தாலிபன்களிடம் எவ்வகையான சலுகைகளையும் அமெரிக்காவால் பெற முடியவில்லை.

மார்ச் 2021-ல் மாஸ்கோவில் நிகழ்ந்த சர்வதேச அமைதிக் கருத்தரங்கில் தாலிபன்களின் தலைவர்கள் பத்துப் பேர் கலந்துகொண்டனர். தாலிபன்கள் கை ஓங்கியதிலிருந்தே அண்டை நாடுகள் தாலிபன் தலைமையுடன் நெருக்கம் பாராட்டத் தொடங்கின. பல நாடுகள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கடந்த சில மாதங்களாகவே தாலிபன்களின் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

இன்னொரு பக்கம் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி ராணுவத் தலைமையையும் அதிகாரிகளையும் மாற்றிக்கொண்டேயிருந்தார். நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ராணுவ வீரர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனால், ராணுவத்தின் தலைமை சுகபோக வாழ்வை அனுபவித்துவந்தது. ராணுவத்துக்கான நிதி, ஆயுதங்கள், உணவு உள்ளிட்டவை காபூலிலிருந்து கிளம்பினாலும் கள வீரர்களை வந்தடையவில்லை. ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டு கள்ளச்சந்தைக்கு வந்தன. அமெரிக்கா கொடுத்த ஆயுதங்களெல்லாம் கள்ளச்சந்தையின் மூலம் தாலிபன்களின் கைகளுக்கு வந்து சேர்ந்தன என்றால் நிலைமையை யூகித்துக்கொள்ளுங்கள். ராணுவத்தின் வலிமை என்ன என்பதை அறிந்த ராணுவ வீரர்கள், மெல்ல தாலிபன்கள் வசம் சரணடைவதையே தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் செயலாகக் கருதினார்கள்.

2021, செப்டம்பர் மாதம்தான் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாகத் திரும்ப வேண்டும். ஆனால், ஒரு மாதம் முன்னராக, ஆகஸ்ட் முதல் வாரமே தங்களின் படைகளோடு, உளவுப்பிரிவையும் அழைத்துக்கொண்டது அமெரிக்கா. அவர்கள் வெளியேறிய ஒரே வாரத்தில், வடக்கிலிருந்து தாலிபன்கள் ஒவ்வொரு நகரமாகக் கைப்பற்றிவந்தனர். ஆகஸ்ட் முதல் வாரம் தாலிபன் படைகள் ஆப்கனின் வடக்கு எல்லைப்புற மாகாணங்களான குந்தூஸ், சர்-ஏ-புல், ஜன்ஜான்- ஐக் ஆகியவற்றைக் கைப்பற்றின. கான்சி மாகாணத்துக்குள் தாலிபன்கள் நுழைந்தபோது, அதன் ஆளுநர் அலுவலகத்தின் சாவிக்கொத்தைப் பூச்செண்டுகளுடன் தாலிபன்கள் வசம் வழங்கினார். ஆகஸ்ட் 14 அன்று ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி தனது மாளிகையிலிருந்து அமெரிக்கத் தூதரகத்துக்குச் சென்று, அங்கிருந்து தனது நெருங்கிய சகாக்களுடன் உஸ்பெகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றார்.

பாலஸ்தீன அழிப்பு, அரபு உலக எண்ணை வளக் கொள்ளை என விரிந்த அமெரிக்காவின் பார்வையில் ஆப்கானிஸ்தானும் ஒரு பலிகடாதான். ஆப்கானிஸ்தான் மக்கள் இந்த ஆட்டத்தில் ஏதும் அறியாது தங்களின் தலைமுறைகளை, வாழ்க்கையைத் தொலைத்து நிர்கதியாக நிற்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் செறிவிழந்த யுரேனியத்தால் செய்யப்பட்ட குண்டுகளை அமெரிக்கா பாவித்ததன் விளைவாகக் குழந்தைகள் இன்றும் குறைபாடுகளுடன் பிறக்கின்றன.

இருபது ஆண்டுகளாக இவ்வளவு கோடிகளைச் செலவிட்டு அமெரிக்கா எதைச் சாதித்தது? அதைவிட விலை மதிக்க முடியாதது, அங்கு ஆறுபோல் ஓடிய மனித ரத்தம். இந்த இருபது ஆண்டுகளில் அங்கு இரண்டரை லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவும் ரஷ்யாவும் வெளியுறவுக் கொள்கை எனும் பெயரில் தங்களின் அகம்பாவத்தை நிரூபிக்க ஆப்கானிஸ்தானின் வரலாற்றையே பாழ்ப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்போதும் அமெரிக்காவின் தோல்வியை விவாதிப்பதைவிடவும், தாலிபன்களைக் கிண்டல் செய்யவே உலக ஊடகங்கள் நம்மைப் பயிற்றுவித்திருக்கின்றன. நிச்சயம் தாலிபன்கள் ஒன்றும் ஆப்கானிஸ்தானை நவீனத்துக்கு அழைத்துச் செல்லப்போவதில்லைதான். அடிப்படைவாதிகள் உலகெங்கும் காலச்சக்கரத்தைப் பின்னோக்கியே அழைத்துச் செல்வார்கள் என்பதுதான் வரலாறு நமக்குக் கற்பித்திருக்கிறது.

ஆப்கன் பல்வேறு பழங்குடிகள் வாழும் நாடு. இதில் பஸ்தூன் பழங்குடிகளே 40 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கிறார்கள். இப்போது தாலிபன்கள் வெறும் பஸ்தூன்களின் அமைப்பாக இல்லாமல் டாஜிக்ஸ், ஹசாரஸ் முதலான பிற பழங்குடியினரும் கலந்த அமைப்பாக வலுப்பெற்றிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய அரசு உருவாகி, அது எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பதைக் காண இந்த உலகமே ஆவலாகக் காத்திருக்கிறது. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் இதில் என்ன மாதிரியாகப் பங்காற்றவிருக்கிறார்கள் என்பதே புவியரசியலை நிர்ணயிக்கும்.

காபூல் நகரத்தில் பெண்கள், தங்கள் உரிமைக்காகப் பதாகைகளை ஏந்தி தாலிபனின் ஆயுதம் ஏந்திய படைகளுக்கு முன்பாக போராடத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்துக்கு பதிலாகக் கிடைக்கவிருப்பது நல்ல முடிவுகளா அல்லது தோட்டாக்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

அ.முத்துக்கிருஷ்ணன் @ விகடன்




ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக