புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
63 Posts - 40%
heezulia
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
314 Posts - 50%
heezulia
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_m10நாம் திராவிடர்கள் அல்ல - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் திராவிடர்கள் அல்ல


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2021 6:16 pm

First topic message reminder :

 தெலுங்கு மொழி பேசுபவர்கள் தங்களைத் #தெலுங்கர் என்றும், கன்னட மொழி பேசுபவர்கள் தங்களைக் #கன்னடர்கள் என்றும், மலையாள மொழி பேசுபவர்கள் தங்களை #மலையாளிகள் என்றும் பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் மட்டும்தான் நெஞ்சை நிமிர்த்தி நம்மைத் "#தமிழர்கள்' என்று சொல்லிக்கொள்ளாமல் "#திராவிடர்கள்' என்று சொல்லிக் கொள்கிறோம்.

 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு தென்னிந்தியாவை ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் "#திராவிடம்' என்ற சொல்லே வழக்கொழிந்து போயிருக்க வேண்டும். காரணம், தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ தன்னை "#திராவிடன்' என்ற பொதுவான சொல்லில் அழைத்துக் கொள்வதில்லை.

 வடமொழியில் "#தமிழ்' மொழியை "திராவிடம்' என்று குறித்துள்ளனர். குமாரிலபட்டர் என்னும் #வடமொழி அறிஞர், தென்னிந்திய மொழி இனத்தை "ஆந்திர - திராவிட பாஷா' என்று பதிவு செய்துள்ளார். திராவிட ஆய்வில் முதலில் ஈடுபட்ட வெள்ளையர்கள் "திராவிடம்' என்ற சொல்தான் "தமிழ்' என்றாகி இருக்க வேண்டும் என்ற முடிவுடன் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

 இதில் முக்கியப் பங்காற்றியவர் ராபர்ட் கால்டுவெல். வடமொழியில் "ள' என்ற எழுத்தும் "ட' என்ற எழுத்தும் ஒன்றுக்கொன்று மாறிவரும். "திராவிடம்' என்பது "திராவிளம்' என்றானதாம். அதேபோல் "வ' என்ற எழுத்தும் "ம' என்ற எழுத்தும் மாறிவரும். "திராவிடம்' என்பது "திராமிளம்' என்றாகிப் பின்னர் "த்ரமிளம்' என்றும் "தமிளம்' என்றும் "தமிள்' என்றும் நிறைவாகத் "தமிழ்' என்றானது என்பது ராபர்ட் கால்ட்வெல் பதிவு.
 சுற்றிவளைத்து வலியப் புனையப்பட்ட வேர்ச்சொல் ஆராய்ச்சி அது. அதாவது "திராவிடம்' என்ற வடமொழிச் சொல்லிருந்துதான் "தமிழ்' என்ற சொல் வந்தது என்று சொன்னதாகச் சொல்லி இருக்கிறார்.

 தமிழ் என்ற சொல்லின் சிறப்பே அதிலுள்ள "ழ' என்னும் எழுத்துதான். "ழ' என்னும் எழுத்து, வேறெந்த ஐரோப்பிய மொழிகளிலும் இல்லை. அவர்கள் வாயில் "ழ' என்னும் சொல் நுழையாததாலும், அவர்கள் மொழிகளில் "ழ' இல்லாததாலும், "தமிழ்' என்ற பெயரை அப்படியே சொல்லாமல் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டார்கள். நிறைவாக #ராபர்ட்_கால்டுவெல் சொன்ன "திராவிடம் என்ற சொல்லிலிருந்து தமிழ்' என்ற வாதமே நிலைத்துவிட்டது.

 "திராவிடம்' என்பது "திரமிழம்' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே ஆகும். "தமிழ்' மொழிக்குத் "திரமிழம்' என்றொரு பெயரும் உண்டு. "திரம்' என்றால் "உறுதி' மற்றும் "நிலை' என்று பொருள். "மிழம்' என்றால் "மொழி' என்று பொருள். ஆக "திரமிழம்' என்றால் "உறுதியான நிலையான மொழி' எனப் பொருள்படும்.

 "திராவிடம்' என்ற சொல்லிலிருந்து "தமிழ்' என்ற சொல் வரவில்லை. மாறாக "தமிழ்' அதாவது "திரமிழம்' என்ற சொல்லிலிருந்தே "திராவிடம்' என்னும் வடசொல் உருவானது.
 தமிழ் மொழிக்கு "திராவிடம்' என்ற பெயர் பழங்காலம் தொட்டே இருந்திருந்தால் "திராவிடம்' என்ற சொல் சங்க இலக்கியங்களில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். மூவாயிரம் ஆண்டு பழந்தமிழ் "தொல்காப்பியம்' இலக்கண நூலில் எங்குமே "திராவிடம்' என்ற சொல் இல்லை. "தமிழ்' என்ற சொல்லே வழங்குகிறது.

 தொல்காப்பியப் பாயிரத்தை எழுதிய #பனம்பாரனார் "தமிழ் கூறு நல்லுலகம்' என்றும் "செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்' என்றும் கூறுகிறார். தொல்காப்பியத்துக்குப் பின் வந்த பல நூல்களிலும் "தமிழ்' என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.

"திராவிடம்' என்ற சொல்லாட்சி எங்குமே காணப்படவில்லை.
 "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்' என்று #பாரதி பாடியதில் வியப்பில்லை. காரணம் "இனிமை' என்ற சொல்லுக்குப் பதிலாக "தமிழ்' என்ற சொல்லையே தமிழர்கள் பயன்படுத்தி மகிழ்ந்துள்ளனர்.

 "இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்' என்கிறது பிங்கல நிகண்டு. அதாவது, இனிமை, ஒழுங்கான இயல்பு ஆகியவற்றைக் குறிக்கத் "தமிழ்' என்ற ஒற்றைச் சொல்லே போதுமாம்.

 ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான "#சீவக_சிந்தாமணி' நூலின் ஆசிரியர் திருத்தக்கத் தேவர் "இனிமை பொருந்திய சாயலை உடைய பெண்கள்' என்று குறிப்பிட "தமிழ் தழீஇய சாயலவர்' என்று கூறுகிறார். அவர் "இனிமை' என்ற சொல்லுப் பதிலாகத் "தமிழ்' என்றே குறிப்பிடுகிறார்.

 தென்னிந்திய நல உரிமைக் கழகம், நீதிக் கட்சி, இவற்றின் நீட்சியாக திராவிடர் கழகம் ஆகியவை தொடங்கப்பட்ட போது தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழி பேசுவோர் அதில் உறுப்பினர்களாக இருந்தனர்.
 குறிப்பாக தமிழர்களை விடவும் மற்ற மொழியினரே பெரும்பான்மையாக இருந்தனர். எனவே "தமிழர் கழகம்' என்று பெயர் வைப்பதில் தயக்கம் இருந்திருக்கலாம். ஆகவே, ஈ.வெ.ரா. "திராவிடர் கழகம்' என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியதில் வியப்படைய ஏதுமில்லை.

 ஈ.வெ.ரா., "#திராவிடர்_கழகம்' தொடங்கியபோது, அதில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் அதிக அளவில் இணைந்தனர். தாங்கள் தமிழர்களல்ல என்பது அடையாளப்பட்டு விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வும் அதற்குக் காரணமாக இருக்கலாம். அதனால், "திராவிடர் கழகம்' என்று பெயர் சூட்டியதில் வியப்பில்லை.
 மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து தனித்தனி மாநிலங்கள் உருவான பின்னரும், "தமிழன்' என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளாமல் "திராவிடன்' என்று இங்குள்ள அரசியல் தலைவர்கள் அழைத்துக் கொள்வதன் காரணம்தான் தெரியவில்லை.

 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டவுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னை "சீஃப் மினிஸ்டர் ஆஃப் டமில்நாடு - பிரஸிடென்ட் ஆஃப் டிஎம்கே பிலாங்ஸ் டு டமிலியன் ஸ்டாக்' என்று கூறாமல் "சீஃப் மினிஸ்டர் ஆஃப் டமில்நாடு - பிரஸிடென்ட் ஆஃப் டிஎம்கே பிலாங்ஸ் டு திராவிடியன் ஸ்டாக்' என்று சொன்னதன் காரணம் என்ன?

 தமிழும், திராவிடமும் ஒன்றா? அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுந்தானே முதல்வர்? தென் இந்தியா முழுமைக்குமான (தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றை உள்ளடக்கிய) திராவிடத்தின் முதல்வரா? தமிழும், திராவிடமும் வேறு வேறு எனில் "டமிலியன் ஸ்டாக்' என்று சொல்லிக் கொள்வதில் என்ன தயக்கம்?

 வரலாற்று ரீதியாகப் பார்த்தால் 11-ஆம் நூற்றாண்டில் நிலவிய சோழ சாம்ராஜ்யமே தமிழர்களின் கடைசி சாம்ராஜ்யம் ஆகும்.
 இதன் பின்னர் தமிழகத்தை ஆண்டவர்கள் விஜயநகரப் பேரரசு (கிருஷ்ணதேவ ராயர்), நாயக்கர்கள் (திருமலை), மராட்டியர்கள் (சரபோஜி), சுல்தான்கள் / நவாப்புகள் (உருது), டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் 1947-இல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை பிரிட்டிஷ்காரர்கள்.
 இவர்கள் அனைவரும் தமிழர் அல்லாத தெலுங்கு, மராட்டியம், உருது, ஆங்கிலம் பேசும் வேறு வேறு மொழியினர். இவர்கள் தமிழ் மொழியை ஆதரித்தார்களா, இல்லையா என்பது வேறு விஷயம்.
 பிராமணர் அல்லாத இயக்கமாகத் தோன்றிய "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்', பின்னர் "நீதிக் கட்சி'யாகவும், "திராவிடர் கழக'மாகவும் உருமாறியது. பெயரில்தான் மாறுதலே தவிர மற்றபடி கொள்கை என்னவோ மூன்றுக்கும் ஒன்றுதான்.
 நீதிக் கட்சியின் தலைவர்களாக விளங்கிய பிட்டி தியாகராய செட்டி (தெலுங்கு), டி.எம். நாயர் (மலையாளம்) ஆகியோர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்ல.

 தமிழக முதல்வர்களாகப் பதவி வகித்த #சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர், முனுசாமி நாயுடு, ராமகிருஷ்ண ரங்கா ராவ், கர்ம வெங்கட் ரெட்டி, டி. பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா ஆகிய அனைவரும் தெலுங்கர்களே.

 காமராஜரும், அண்ணாவும் தேர்தலில் போட்டியிட்ட போது காமராஜரை "பச்சைத் தமிழன்' என்று சொல்லி ஈ.வெ.ரா. ஆதரித்தார். "காமராஜர் பச்சைத் தமிழன் என்றால் திமுக தலைவர் #அண்ணாதுரை யார்' என்ற கேள்வி அப்போதே எழுப்பப்பட்டது. ஈ.வெ.ரா. திமுகவினரின் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

 பிற்காலச் சோழர்களின் சாம்ராஜ்யம் வீழ்ந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் கடைசி 600 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கொண்டால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட தமிழக முதல்வர்களின் எண்ணிக்கையும், காலமும் மிகவும் சொற்பமே.
 பெயரில்தான் தமிழ்நாடு. ஆனால் ஆட்சி செய்த 90% பேர் வேற்று மொழிக்காரர்கள். அதிலும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டோரே அதிகம்.

 பல்லாயிரம் ஆண்டு பழமையான தமிழ் மொழி தனது பெயரை இன்னொரு மொழியிலிருந்து பெற்றது என்று கூறுவது அதன் தொன்மையையும், செம்மொழித் தகுதியையும் குறைப்பது போலாகும். ஆகவே, தமிழ் மொழிக்கு "தமிழ்' என்று பெயர் வைத்தவர்கள் தமிழர்கள்தானே தவிர வடமொழி பேசுவோரோ அல்லது வேறு மொழி பேசுவோரோ அல்ல என்பது தெளிவு.
 தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமையைத் தராமல் "திராவிடன்' என்று பொத்தாம்பொதுவாகப் பேசி, தமிழுக்கு உரிய எல்லாப் பெருமைகளையும், சிறப்புகளையும் தென் இந்தியாவைக் குறிக்கும் திராவிடத்துக்குத் தாரை வார்ப்பது நியாயம் அல்ல.

 தமிழகத்தில் வாழும் வேற்று மொழியினர் தங்களை "திராவிடர்கள்' என்ற குடையின் கீழ் அடையாளப்படுத்திக் கொள்ள ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட "தமிழன்' தன்னை "திராவிடன்' என்று சொல்லிக் கொள்வதற்கு இலக்கிய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஒற்றைக் காரணம்கூடக் காணக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
 
 தினமணி
 

T.N.Balasubramanian, jairam, Dr.S.Soundarapandian, ayyasamy ram and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Aug 22, 2021 12:27 am

திராவிடன் என சில சுயநலவாதிகள் சூட்டிய பெயரை தவிர்ப்போம்.. தமிழை தாய்மொழியாக கொண்டு தலைமுறை தலைமுறையாக வாழும் நாமே தமிழர்கள்..💪🏽💪🏽



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக