by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
டோக்கியோ ஒலிம்பிக் 2020
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதித்தது என்ன?
120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில்
இருக்கும் இடம் தெரியாது. பதக்கப் பட்டியலில் கடைசி வரிசையில்தான் இடம்பிடிக்கும். திறமைக்குப்
பஞ்சமில்லை என்றாலும் ஏனோ இந்திய வீரர்களுக்கு எப்போதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது
எட்டாக்கனிதான். இதையும் தாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாக முத்திரை பதித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் முதல் ஒலிம்பிக்ஸ் பதக்கமே சர்ச்சைக்குரியது. இந்தியா, 1900 பாரிஸ் ஒலிம்பிஸில்,
நார்மன் பிச்சர்ட் என்கிற ஆங்கிலே ய வீரரை அனுப்பியது. அவரும் அத்லெடிக்கில் இரண்டு
வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். ஆனால், நார்மன் இங்கிலாந்து சார்பாக கலந்துகொண்டதாக
ஒரு சர்ச்சை பின்னால் கிளம்பியது. 1908க்குப் பிறகுதான் விளையாட்டு வீரர்கள், ஒரு நாட்டின்
சார்பாக ஒலிம்பிக்ஸூக்கு அனுப்பப்பட்டார்கள். அதற்கு முன்புவரை, வீரர்கள் தங்கள் விருப்பத்துடன்
கலந்துகொண்டதால், நார்மனின் சாதனைக்கு இங்கிலாந்தும் உரிமை கோருகிறது. ஆனால்,
ஒலிம்பிக் ஆவணங்களில், நார்மன் இந்தியராகவே குறிப்பிடப்பட்டுள்ளார். அதன்பிறகு 1920
பெல்ஜியம் ஒலிம்பிக்ஸில்தான், ஒரு குழுவை அனுப்பியது இந்தியா. 5 இந்திய வீரர்கள்
கலந்துகொண்ட அந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை.
1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்ஸில், இந்திய ஹாக்கி அணி தம் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
அதற்குப் பிறகு, அடுத்த ஆறு ஒலிம்பிக்ஸிலும் இந்திய ஹாக்கி அணி தங்கத்தை மட்டுமே வென்றது.
அதற்குப் பிறகு, இரண்டு ஒலிம்பி க்ஸ்களில் தங்கம் வென்று, எட்டு முறை முதலிடம் பிடித்தது.
கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்குப் பிறகு
28 வருடங்கள் கழித்து, முதல்முறையாக தனி நபராக இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தந்தார்
அபினவ் பிந்திரா.
1980க்கு முன்னால், ஹாக்கி அணி பெற்றுக்கொடுத்த பதக்கங்களைத் தவிர இந்தியாவுக்கு 1952
ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் கே.டி. ஜாதவ் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
ஒலிம்பிக்ஸில், முதல் பதக்கம் பெற்ற இந்தியர் என்கிற பெருமையை அடைந்தார். 1980க்குப் பிறகு
அடுத்த மூன்று ஒலிம்பிக்ஸ்களில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை. இந்திய ஹாக்கி
அணியின் தரமும் இந்தக் காலகட்டத்தில் குறைந்து, மற்ற அணிகளோடு போட்டி போடமுடியாத நிலை
ஏற்பட்டது.
1996, 2000 ஒலிம்பிக்களில் லியாண்டர் பெயஸ், கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் வெண்கலப்
பதக்கங்களையும் 2004ல் ரதோர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்கள். 2008 பீஜிங்
ஒலிம்பிக்ஸில்தான் இந்திய அணி அதிக பதக்கங்களைப் பெற்றது. ஒரு தங்கமும் இரண்டு
வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. இந்திய அணி வேறு எந்த ஒலிம்பிக்ஸிலும் 3
பதக்கங்களைப் பெற்றது கிடையாது என்பதால் நாடே அதைக் கொண்டாடியது. அதிலும் ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டியில்
தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார்.
குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் (வெண்கலம்) பெற்றுத் தந்தார்
விஜேந்தர் சிங்.
2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மேலும் அமர்க்களமாக அமைந்தது. மல்யுத்த வீரர் சுஷில் குமார்
வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் விஜய் குமாருக்கு வெள்ளி கிடைத்தது.
ஒலிம்பிக்ஸில் பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை
என்கிற பெருமையைப் பெற்றார் சானியா நெவால். இதனால் இந்தியாவில் ஒரு பாட்மிண்டன் அலையை உண்டாக்கினார். அதேபோல குத்துச்சண்டையிலும் வெண்கலம் வென்று
சாதனை படைத்தார் மேரி கோம். துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங்கும் மல்யுத்தத்தில் யோகேஸ்வர்
தத்தும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2 வெள்ளி
4 வெண்கலப் பதக்கங்கள் என மொ த்தமாக 6 பதக்கங்கள் கிடைத்தன. அதற்கு முன்பு இந்தியா
இத்தனை பதக்கங்களைப் பெற்றதில்லை.
ஆனால் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2-ஆக சுருங்கியது.
மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். பாட்மிண்டனில் பி.வி. சிந்து வெள்ளிப்
பதக்கம் வென்று இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.
டோக்கியோவில் இந்தியாவுக்கு எப்படியும் 10 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.வி. சிந்து (பாட்மிண்டன்), செளரப் செளத்ரி, மானு பாக்கர், திவ்யான்ஸ் பன்வார், இளவேனில்,
யாஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா, (துப்பாக்கிச் சுடுதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்),
மீராபாய் சானு (எடை தூக்குதல்), ரவி தாஹியா, பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் (மல்யுத்தம்), அமித்
பங்கால் (குத்துச்சண்டை) போன்ற வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள் என்கிற நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளார்கள். இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பலிக்கட்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை 1-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இவ்வளவு தூரம் முன்னேறி சாதனை படைக்கும் என யார் எண்ணியிருக்க முடியும்? ஒரு கட்டத்தில் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருந்த இந்திய அணி இன்று அரையிறுதியில் விளையாடவுள்ளது. இது உண்மைதானா என இந்திய ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளார்கள்.
முதல் சுற்றில், உலகின் முதல்நிலை அணியான நெதா்லாந்திடம் வீழ்ந்தது இந்தியா. 2-வது ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை அணியான ஜொ்மனியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 1-4 எனத் தோற்றது. அயர்லாந்தை இந்திய அணி 1-0 என வீழ்த்தியது. தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்த வந்தனா கட்டாரியா, ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றாா்.
இந்த வெற்றியின் மூலம், 5 ஆட்டங்களில் 6 புள்ளிகளைப் பெற்று ‘ஏ’ குரூப்பில் 4-ஆவது இடத்தில் இருந்தது இந்தியா. 5-ஆவது இடத்திலிருந்த அயா்லாந்து தனது கடைசி ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கான காலிறுதி வாய்ப்பு பறிபோகும் நிலையிலிருந்தது. எனினும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அயா்லாந்து 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்தியா 4-ஆவது இடத்தில் நிலைத்து காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மிகவும் வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 22-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலமாக இந்தியாவின் குர்ஹித் கெளர் கோல் அடித்து அசத்தினார். இந்திய அணியின் தடுப்பாட்டம் இன்று மிகவும் சிறப்பாக இருந்தது. கோல் கீப்பர் சவிதா பல ஷாட்களைத் தடுத்து ஆஸ்திரேலிய அணியை ஒரு கோல் அடிக்கவும் விடாமல் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இதனால் மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்தியது.
2016-ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தமுறை முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி காலிறுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை நேற்று வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது, கடந்த 49 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். அடுத்த நாளே இந்திய மகளிர் அணியும் நம்பமுடியாத வெற்றியை அடைந்து சாதனை படைத்துள்ளது.
இந்திய ஹாக்கிக்குப் பொன்னான தருணம் இது. இரு அணிகளும் இன்னும் இரு வெற்றிகளைப் பெற்று தங்கம் பெற வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் விருப்பம். கனவு பலிக்குமா?
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் அரையிறுதி ஆட்டங்கள்
ஆகஸ்ட் 3: இந்திய ஆடவர் ஹாக்கி அணி vs பெல்ஜியம் - காலை 7 மணி (இந்திய நேரம்)
ஆகஸ்ட் 4: இந்திய மகளிர் ஹாக்கி அணி vs ஆர்ஜெண்டினா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நன்றி ஐயா..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
ஆமாம் தலைப்பில் இதுவரை ஆக அதிகமான பதக்கங்கள்.
ஆக .......அதிகமான வார்த்தை சேர்ப்போ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1349440T.N.Balasubramanian wrote:நல்ல தகவல் .நன்றி.
ஆமாம் தலைப்பில் இதுவரை ஆக அதிகமான பதக்கங்கள்.
ஆக .......அதிகமான வார்த்தை சேர்ப்போ?
-
ஆக .......அதிகமான வார்த்தை சேர்ப்புதான்!
இப்போது வாட்சப்-ல ஆக....என்ற மிகை வார்த்தை
சேர்க்கப்படுவதைக் காணலாம்!
-
லாவ்லினா
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர்
டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை
போட்டியில் இந்தியாவின் லாவ்லினா துருக்கி வீராங்கனை
புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில்
லாவ்லினா தோல்வியைத் தழுவினார்.
இதன் மூலம் லாவ்லினா வெண்கலப் பதக்கம் பெற்றார்.
ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும்,
பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும் வென்றுள்ளனர்.
மூன்றாவதாக லாவ்லினா பதக்கம் வென்றுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
மாலைமலர்
-
இன்று காலை ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று
போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா
கலந்து கொண்டார்.
-
இவர் தனது முதல் வாய்ப்பில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து
அசத்தினார். இதன்மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்
வாய்ப்பை பெற்றார்.
-
ஆகஸ்ட் 7-ம் தேதி ஈட்டி எறிதலுக்கான இறுதிச்சுற்று போட்டி
நடைபெற உள்ளது.
-
மாலைமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
நம்முடைய வீரர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையோ ? தெரியவில்லை.
அரை இறுதி வரை வந்து பிறகு சொதப்பிவிடுகிறார்கள்!
நம்முடைய அரசும் இவர்களை ஊக்குவிக்க போதிய வசதிகளை எல்லா மாநிலங்களிலும் உண்டாக்கி
சிறப்பு முகாம் ஒரு இடத்தில அமைத்து ஏற்பாடுகளை கவனிக்கவேண்டும்.நம்மை விட சிறிய தேசங்களில் சிறிய ஜனத்தொகையில் அரிய பரிசுகளை வென்று செல்கிறார்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
» டோக்கியோ ஒலிம்பிக்- இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் தகுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தமிழக வீராங்கனை பவானிதேவி அசத்தல்..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|