புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_m10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_m10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_m10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_m10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10 
2 Posts - 2%
prajai
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_m10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10 
2 Posts - 2%
mini
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_m10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10 
1 Post - 1%
Guna.D
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_m10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10 
1 Post - 1%
Barushree
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_m10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_m10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10 
1 Post - 1%
Rutu
கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_m10கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 ) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடப் பழமொழிகள் ! (141 – 150 )


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 11, 2021 8:46 pm


கன்னடப் பழமொழிகள் ! (51 – 60 )

51. எல்லா வீட்டுத் தோசையிலும் ஓட்டை இருக்கும் !!
(‘ எல்லாரெ மனெ தோசேனு தூதே ! ‘ )

52. எருது மலைக்கு இழுத்தால் , எருமை தண்ணீருக்கு இழுக்கிறது !
( ‘ எத்து ஏரிகேளீத்து, கோண நீரிகேளீத்து ! ’ )

53. எல்லோரும் பாடுபடுவது வயிற்றுக்காகவும், கிழியாத துணிக்காகவும்தான் !
(‘ எல்லாரு மாடுவுது ஹொட்டேகாகி கேணு பட்டேகாகி ! ’ )

54. எல்லா விளக்கும் விளக்கல்ல ! சத்திய வாக்கே விளக்கு!
(‘ எல்லா பெளகு பெளகல்ல , சத்யத நுடியே பெளகு ! )

55. எந்த வழியில் பண்ணிப் பார்த்தாலும் , ஒருத்தருக்கு வேலை பார்ப்பது கஷ்டம் !
(‘ எந்தூ ஒப்பர சேவே மாடாதே பலு கஷ்டா ! ‘ )

56. தண்டனை, பத்து மடங்கு பலன் தரும் !
(‘ தண்டம் தஸ குணம் பவேத் ! ’ )

57. தான தானங்களைவிட நிதானம் சிறந்தது !
(’ தான தானகிந்த நிதானா தொட்டது !‘ )

58. திக்குகள் பல சென்றாலும் துக்கம் நீங்காது !
( ‘ திக்கு திக்கிகே ஹோதரு துக்கா தப்பது !’)

59. பணமே பெரியப்பா !
(‘ துட்டே தொட்டப்பா ! ’)

60. கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டார் !
(‘ தேவரு வரா கொட்டரு , பூஜாரி வரா கொடா ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 16, 2021 11:55 am

கன்னடப் பழமொழிகள் ! (61 – 70 )

61. தூரத்து மலை மிருதுவானது !!
(‘ தூரத பெட்டா நுண்ணகே ! ‘ )

62. எல்லோரும் சிவனை மறந்தால், கைலாசம் அழிந்துவிடும் ! எல்லோரும் சிவனை நினைந்தால், உலகம் அழிந்துவிடும் !
( ‘ எல்லரு சிவனெ மறதரே கைலாசவே ஹாலக்கு ! எல்லரு சிவனெ நெனதரே இல்லியே ஹாலக்கு  ! ’ )

63. உடம்பு அழியும் ; புகழ் அழியாது !  
(‘ அளிவிதே காயா, உளிவுதே கீர்தி ! ’ )

64. மருமகனல்ல , என் மகளின் கணவன் ! (எப்படிச் சொன்னாலும் பொருள் ஒன்றுதான் என்ற கருத்தினது)    
(‘ அளியா அல்லா , மகளெ கண்டா !  )

65. கிளியாக நடந்துகொண்டாலும் , ஒரு தொந்தரவு ஏற்பட்டால்,நாகமாய் மாறுவாய் !
(‘ ஆடிதரே அரகினி , காடிதரே நாகர காட்ட ! ‘ )

66. அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே !
(‘ அளூ கண்ட்ஸன்னு நகூ ஹெண்ஸன்னு நம்ப பாரது ! ’ )

67. கால தாமதத்தால் அமுதமும் விஷமாகும்  !
(’ ஆலஸ்யாத் அம்ருதம் விஷம் !‘ )

68. அணையப்போகும் விளக்கு , பிரகாசமாய் எரியும்  !
( ‘ ஆலுவ தீபக்கே காந்தி ஹெச்சு  !’)

69.  தந்தையின் சொல், யானை பலம் !  
(‘ அப்பன மாத்து ஆனைய பலா ! ’)

70. அண்ணன் தம்பியைப் பிரிக்காதீர்   !  
(‘ அண்ணா தம்மன பேரே மாட பேடா  ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 24, 2021 1:28 pm

நன்றி சிவா அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 24, 2021 1:48 pm

கன்னடப் பழமொழிகள் ! (71 – 80 )

71. ஆரோக்கியமே செல்வம் !
(‘ ஆரோக்கியவே பாக்யா ! ‘ )

72. ஐயோ பாவம் என்றால் , ஆயுசு பாதியாகும் !
(பிறருக்கு இரக்கப்படப் போய்த் துன்பம் அடைதலைக் குறித்தது)
( ‘ அய்யோ பாப ’ அந்த்ரே அர்த ஆயிஸ்ஸு ! ’ )

73. ஆடுபவர் ஆடிவிடலாம்; பார்ப்பவர்க்கே நாணம்!
(‘ ஆடுவவ ஆடிதே நோடுவவகே சிக்கு ! ’ )

74. தவளையைப் பார்த்துப் பயப்பட்டவன் மேலே அத் தவளையே பாய்ந்தது போல !
(‘ அஞ்சினவனெ மேலே கப்பு ஹாரிதங்கே ! )

75. கெட்ட கனவு கண்டால் , எழுந்திருந்து உட்கார் !
(‘ அல்லதெ கனசு கண்டரே எத்து குந்த்ரு ! ‘ )

76. ஆமாம் போடவேண்டிய வீட்டில் ‘ஆமாம் ஐயா!’ இல்லை போடவேண்டிய வீட்டில் ‘இல்லை ஐயா’ !
(‘ ஹௌதுஸ்ஸன மனெயல்லி , ஹௌதுஸ்ஸார், அல்லஸ்ஸன மனெயல்லி அல்லஸ்ஸார் ! ’ )

77. பல் இருக்கும் போது கடலை இல்லை ! கடலை இருக்கும்போது பல் இல்லை !
(’ ஹல்லித்தாஹா கட்லே இல்லா ; கட்லே இத்தாஹா ஹல்லில்லா !‘ )

78. ‘அதோ பிசாசு’ என்றால் , ‘இதோ வந்தேன் ஜன்னல் வழியே ’ என்றது போலே !
( ‘ ஹோத்யா பிசாச்சி அந்த்ரே வந்தே ஹவாக்சிலி அந்த்தந்தே !’)

79. அழிந்து போன ஊரில் தங்கிவிட்டவனே தலைவன் !
(‘ ஹாலூரிகே உளிதவனே கௌடா ! ’)

80. ஜெயித்தவன் தோத்தான்; தோத்தவன் செத்தான் !
(நீதிமன்றத்தில் பெற்ற ‘வெற்றி’ குறிக்கப்படுகிறது ! )
(‘ கெத்தோனு ஸோத்தா, ஸோத்தோனு ஸத்தா ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)


***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 24, 2021 7:33 pm

கன்னடப் பழமொழிகள் ! (81 – 90 )

81. ஆண் பிள்ளை சோம்பிக் கெட்டான் ! பெண் பிள்ளை சிரித்துக் கெட்டாள் !
(‘ கண்டு குளித்துக் கெட்டா , ஹென்னு கிசிது கெட்டா ! ‘ )

82. கணவன் இருக்கும் போது புத்தி இல்லை! புத்தி வந்தபோது கணவன் இல்லை !
( ‘ கண்டா இத்தாஹா புத்தி இல்லா, புத்தி பந்தாஹா கண்டா இல்லா ! )

83. சந்தனத்தைச் சாம்பலாக்கி உடலில் பூசியது போல !
(‘ கந்தத கொரடு சுட்டு பூதிய தந்து பூசித ஹாகே ! ’ )

84. பிள்ளை பிறந்த பிறகு , முழுசா ஒரு வாழைப் பழத்தைத் தின்னும் பாக்கியம் தாய்க்கு இல்லை !
(‘ மக்களு ஹுட்டித மேலே , தாயிகே இடீ பாளெ ஹன்னு தின்னுவ பாக்ய வில்லா ! )

85. பூவுக்கும் வண்டுக்கும் இடையே சரசம் நடப்பது போல ! )
(தும்பிகூ ஹுவ்வுகூ ஸரஸ வித்தந்தே ! )

86. பட்டால்தான் புத்தி வரும் !
(‘ கெட்டனகெ புத்தி பரது ! ’ )

87. குலத்தின் சிறப்பை நா காட்டும் !
(’ குலக்கெ நாளிகெ ப்ரமானா !‘ )

88. பொன் எதையும் சாதிக்கும் !
( ‘ காஞ்சனம் கார்ய சித்திஹ் !’)

89. சிவபூசை வேடக்காரனின் பூவும் இலையும் தெண்டம் !
(‘ கள்ளன சிவபூஜிகெ ஹூபத்ரி தண்டா ! ’)

90. மக்களை அறியாத அரசனும் வியாதியை அறியாத வைத்தியனும் ஒன்றே !
(‘ யோக்யதெ அறியத தொரெ ரோக அறியத வைத்ய ஒந்தே ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com & Ujwal Nargund YouTube)






முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 24, 2021 7:44 pm

கன்னடப் பழமொழிகள் ! (91 – 100 )

91. பட்டினி இருந்து விடலாம் , பிறர் தரும் உபத்திரவம் தாங்க முடியாது !
(‘ உபவாஸ இரபஹுது , உபத்ர தாளலாகது ! ‘ )

92. யுத்த நேரத்தில் கத்தி பழகியது போல !
( ‘ யுத்த காலதேளி கத்தி கல்தந்தே ! )

93. மூன்று வருடத்துப் புத்தி நூறு வருடம் வரை !
(‘ மூரு வருஷத புத்தி நூறு வருஷாவரெ ! ’ )

94. யோகி தேடியது யோகிக்கே , போகி தேடியது போகிக்கே !
(‘ யோகி தந்தத்து யோகிகெ , போகி தந்தத்து போகிகெ ! )

95. துன்பம் வரும்போது மட்டும் வெங்கடரமணன் ! )
( சங்கட பந்தாக வெங்கடரமணா ! )

96. காத்திருப்பவனே நன்கு வாழ்வான் !
(‘ காயிதவெ பாளியானு ! ’ )

97. வேண்டாத மனைவியின் தயிரிலும் கல் !
(’ ஒள்ளத கண்டனிகெ மொசரல்லி கல்லு ! ‘ )

98. எந்த வருத்தமுமே இல்லாத கணவனின் மனைவி,, கல்யாணமான கைம்பெண் !
( ‘ யாவ சிந்தேனு மாட தூன கெண்டத்தி , கண்டித்தா முண்டெ !’)

99. அறிவுப் பூர்வச் சொற்களைச் சிறார்களிடமிருந்தும் கேட்டுக்கொள்க !
(‘ யுக்திய வார்த்தெ சிக்களிந்தாதரு கேளிகோ ! ’)

100. மன மகிழ்ச்சியே பாதிச் சக்தியைத் தரும் !
(‘ சந்தோஷம் ஸங்கம் பலம் ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் Ujwal Nargund YouTube)


***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 25, 2021 11:36 am


[b]கன்னடப் பழமொழிகள் ! (101 – 110 )[b]

101. உடுத்துவது ஒப்பனை செய்வதே சிறுமியின் கவலை !
(‘ உட்டரே , கொட்டரே ,புட்டக்கே சிந்தா ! ‘ )

102. அதிகப் பேச்சு வீட்டைக் கெடுக்கும்; அதிக விதை வயலைக் கெடுக்கும் !
( ‘ மாத்து ஹெச்சி மனெ கெட்டித்து; பித்து ஹெச்சி ஹொளெ கெட்டித்து ! )

103. பஞ்சாங்கம் தொலைந்துவிட்டால், நட்சத்திரங்களும் போய்விடுமா? !
(‘ பஞ்சாங்க ஹோதரே நக்ஷத்திரவூ ஹோதீதே ? ’ )

104. அன்னமிட்ட வீட்டில் கன்னமிடாதே !
(‘ அன்னா ஹாக்கித மனெகெ கன்னா ஹாக்க பேடா ! )

105. ஆச்சாரியரின் மந்திரத்தை விட , அவர் வாய் தூற்றும் எச்சில் அதிகம் ! )
( ஆச்சார்யரிகெ மந்த்ர கிந்த உகுளே ஜாஸ்தி ! )

106. காசிருந்தால் கைலாசம் !
(‘ காசித்தரே கைலாசா ! ’ )

107. தண்ணிக்குள்ளே ஹோமம் வளர்த்தது போலே !
(’ நீரினல்லி ஹோமா மாடிதந்த்தே ! ‘ )

108. அப்பா வைத்தார் ஆலமரத்தை; நான் கொன்றது அதிலிருந்த பறவைகளை !
( ‘ அப்பா ஹாக்கித ஆலத மரக்கே நேனு ஹக்கி கொன்டந்த்தே !’)

109. தவறு செய்தவரின் பாவம், புறம் பேசுவோர் வாய் நிறைய !
(‘ மாடிதவர பாபா ஆடிதவர பாயல்லி ! ’)

110. எருமை மாட்டுக்கு முன்னே கின்னரம் வாசித்தது போலே !
(‘ கோனன முந்தே கின்னரி பாரிசினந்த்தே ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் Ujwal Nargund YouTube & byegi.com )

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 26, 2021 11:11 am

கன்னடப் பழமொழிகள் ! (111 – 120 )

111. குருடர்களின் இராச்சியத்தில் ஒற்றைக் கண்ணுக்காரனே ராஜா !
(‘ குருடர ராஜ்யதல்லி ஒக்கண்ணனே ராஜா ! ‘ )

112. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணு !
( ‘ சாவிரா சுள்ளு ஹேளி ஒந்து மதுவே மாடு ! )

113. யாருடையதோ துட்டு , போவது எல்லம்மன் யாத்திரை !
(‘ யாரதோ துட்டு , எல்லம்மன ஜாத்ரெ ! ’ )

114. நிறை குடம் ததும்பாது !
(‘ தும்பின கொட துளுகுவு தில்லா ! )

115. குரைக்கிற நாய் கடிக்காது ! )
( பொகளுவ நாயி கச்சுவுதில்லா ! )

116. உப்பிட்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே !
(‘ உப்பு திந்த மனெகெ த்ரோஹம் பகெய பேடா! ’ )

117. இரண்டு கை தட்டினால்தான் ஓசை !
(’ எரடு கை சேரிதே சப்பாளி ! ‘ )

118. கத்தியை விட எழுது கோல் பலமிக்கது !
( ‘ கத்திகிந்த லேகனி மேலு !’)

119. சொல்வது போலவே செய் !
(‘ நுடிதந்த்தே மாடு ! ’)

120. தாயைப் போல பிள்ளை , நூலைப் போல சேலை !
(‘ தாயி னந்த்தே மகளு , நூலி னந்தே தாரெ ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் byegi.com & Amazing World of AROO YouTube )

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 27, 2021 11:17 am

[b]கன்னடப் பழமொழிகள் ! (121 – 130 )[b]
121. இரும்பு சூடாக இருக்கும்போதே தட்ட வேண்டும் !
(‘ கப்பின பிசி இத்தாகலே தட்ட பேக்கு ! ‘ )

122. பெண்ணால் கெட்டவன் இராவணன் , மண்ணால் கெட்டவர் கௌரவர் !
( ‘ ஹெண்ணிந்தா ராவணா கெட்ட, மண்ணிந்தா கௌரவா கெட்டா ! )

123. மங்கள ஆரத்தியால் உஷ்ணம் உண்டாகும் ; தீர்த்தத்தால் குளிர்ச்சி உண்டாகும் !
(‘ மங்களாரத்தி தகொண்ட்ரே உஷ்ணா , தீர்த்த தகொண்ட்ரே ஸீதெ ! ’ )

124. தாய் புகட்டிய புத்தி , சாகும் வரை !
(‘ தாயி கசிலிசித புத்தி , சாயுவ தனகா ! ’ )

125. சிரிப்பவர் சொர்க்கத்துக்கு ! அழுபவர் நரகத்துக்கு ! )
( ’ நகுவவரு ஸ்வர்க்கக்கே , அழுவவரு நரகக்கே ! )

126. இன்றைய தோல்வி , நாளைய வெற்றி !
(‘ இந்தின சோலு , நாளெய கெலுவு ! ’ )

127. படிப்பு கால் பங்கு , புத்தி முக்கால் பங்கு !
(’ ஓது ஒக்காலு . புத்தி முக்காலு ! ‘ )

128. கட்டிலுக்குக் கால் எத்தனை என்றால் , மூன்றும் மற்றொன்றும் என்றானாம் !
( ‘ மல்லி மல்லி மஞ்சக்கே எஷ்டு காலு அந்தரே , மூரு மத்தொந்து அந்திலந்தே !’)

129. பாலில் எலுமிச்சை பிழிந்துவிட்டது போலே !
(‘ ஹாலி னல்லி ஹுல்லி ஹின்திதந்தே ! ’)

130. பாம்பும் சாகவேண்டும் , கம்பும் முறியக்கூடாது !
(‘ ஹாவு சாயபேக்கு , கோலு முரிபாரது ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் Amazing World of AROO YouTube ; RamyaLakshman Balagokula YouTube & byegi.com)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 28, 2021 11:34 am

கன்னடப் பழமொழிகள் ! (131 – 140 )

131. கழுதைக்கு என்ன தெரியும் கஸ்தூரி வாசனை ?
(‘ கத்தாய்கேனு கொத்து கஸ்தூரி வாசனெ ? ‘ )

132. ஏழையின் வீடு சாப்பிட நன்று ! பணக்காரரின் வீடு பார்க்க நன்று !
( ‘ படவரெ மனெ ஹொட்டெ சென்னா , தொட்டவர மனெ நோட சென்னா ! )

133. உள்ளங்கைப் புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு ?
(‘ அங்கை ஹுண்ணிகெ கண்ணடி யாக்கே ? ’ )

134. உண்மையானதையே கண்டாலும், ஆதாரத்தைக் கொண்டுபார் !
(‘ சத்யவாகி கண்ரூ , ப்ரமானிசி நோடு ! ’ )

135. நெருப்பில்லாமல் புகையாது ! )
( ’ பெங்க்கி இல்லதே, ஹொகே யேலல்லா ! )

136. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது !
(‘ மூர்த்தி சிக்கதாதரு , கீர்த்தி தொட்டது ! ’ )

137. கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே !
(’ கள்ளன்னா நம்பிதரு குள்ளன்னா நம்ப பாரது ! ‘ )

138. கொடுத்தது தனக்கு ! மூடி வைத்தது மற்றோர்க்கு !
( ‘ கொட்டிது தனகே ! பச்சிட்டிது பராரிகே !’)

139. பசி ருசி அறியாது ! தூக்கம் படுக்கை அறியாது !
(‘ ஹசிவிகே ருச்சி பேடா ! நெதிரிகே மஞ்சே பேடா ! ’)

140. நாய் குரைத்தால் தேவலோகம் பாழாகுமா ?
(‘ நாயி பொகலித்தரே தேவலோகா ஹாலாகுத்தே ? ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் byegi.com)

***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக