புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_lcapஐயமிட்டுண் -நீதிக்கதை I_voting_barஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
ஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_lcapஐயமிட்டுண் -நீதிக்கதை I_voting_barஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_lcapஐயமிட்டுண் -நீதிக்கதை I_voting_barஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
ஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_lcapஐயமிட்டுண் -நீதிக்கதை I_voting_barஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_lcapஐயமிட்டுண் -நீதிக்கதை I_voting_barஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_lcapஐயமிட்டுண் -நீதிக்கதை I_voting_barஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_lcapஐயமிட்டுண் -நீதிக்கதை I_voting_barஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_lcapஐயமிட்டுண் -நீதிக்கதை I_voting_barஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
ஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_lcapஐயமிட்டுண் -நீதிக்கதை I_voting_barஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
ஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_lcapஐயமிட்டுண் -நீதிக்கதை I_voting_barஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
ஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_lcapஐயமிட்டுண் -நீதிக்கதை I_voting_barஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_rcap 
2 Posts - 1%
Abiraj_26
ஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_lcapஐயமிட்டுண் -நீதிக்கதை I_voting_barஐயமிட்டுண் -நீதிக்கதை I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயமிட்டுண் -நீதிக்கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 27, 2021 6:46 am

இல்லை என்று வந்த ஏழைகளுக்கு பிச்சை இட்டு தானும்
உண்ண வேண்டும் என்பது இதன் பொருள்.
இல்லாதவர்களுக்கு பிச்சை இடுவது தருமங்களுள்
சிறந்தது.

“வறியார்க்கொன்றீவதேயீகை”என்று இதனை பாராட்டி
கூறி இருக்கின்றார்கள் முன்னோர்.
தரும சிந்தனையை வளர்ப்பதற்கு இச்செய்கை அவசியம்
வேண்டும்.

மகா பாரத யுத்தத்தில் வெற்றியடைந்த தரும புத்திரர்
பிறரால் எளிதாகச் செய்ய இயலாத அசுவமேதமென்கிற
யாகம் ஒன்று செய்தார்.

பற்பல நாட்டின் அரசர்களும் வேதாகம புராணங்களில்
மேன்மை அடைந்த வேதியர்களும், தவ சிரேஷ்டர்களும்,
முனிவர்களும் அங்கு வந்து கூடி இருந்தனர்.

அந்தச் சமயத்தில் ஒரு கீரிப்பிள்ளை தனது பாதி உடம்பு
தங்கம் போலப் பிரகாசிக்க அங்கு வந்து வெள்ளமாய்
ஓடும் தானம் செய்கின்ற தண்ணீரில் விழுந்து புரண்டது.

அங்குள்ளோர் அதைப்பார்த்து அதிசயப்பட்டனர்!

தருமபுத்திரர் கீரிப்பிள்ளையை பார்த்து :

“கீரியே உன் பாதி உடம்பு ஏன் பொன்னிறமாக இருக்கிறது?
இங்கு வந்து ஏன் இப்படிப் புரளுகிறாய்” என்று கேட்டார்.

இதைக்கேட்ட கீரிப்பிள்ளை தன் கதையை சொல்ல
ஆரம்பித்தது.

“ஐயா அரசரில் சிறந்தவரே! நான் வசித்துவரும் காட்டில்
ஓர் ஏழை முனிவர் தமது மனைவி, மகன், மருமகளோடு
வாழ்ந்து வந்தார்.

காட்டில் உள்ள காய் கனி கிழங்கு இவையே அவர்களுக்கு
உணவு.

ஒரு தடவை மழையே இல்லாமல் இவையும் கூடக் கிடைப்பது
அரிதாகி விட்டது.

அப்பொழுது காட்டில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களை
சிறிது சிறிதாகச் சேகரித்து அதனை மாவாக அரைத்து
சாப்பிட்டார்கள்.

சில நாட்களில் அந்த தானியங்களும் கிடைப்பது குறைந்து
விட்டது. அதன் பிறகு மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு
முறைதான் சாப்பாடு என்று ஆகிவிட்டது.

ஒரு நாள் எங்கெல்லாமோ தேடி கிடைத்த சிறிது
தானியங்களைச் சேகரித்துக் கொண்டு வந்து பக்குவப்படுத்தி
நான்கு நாட்களுக்கப்புறம் நான்கு பேரும் பகிர்ந்து உண்ணப்
போகும் சமயத்தில்,

எங்கிருந்தோ முதியவர் ஒருவர் அங்கு வந்து
”ஐயா பெரியோர்களே நான் சாப்பிட்டு பத்து நாட்கள் ஆகி
விட்டது, பசி தாங்க முடியவில்லை தயவு செய்து உணவு சிறிது
அளிக்கவேண்டும்” என்று மிகவும் கெஞ்சி பிச்சைக் கேட்டு
நின்றார்.

கண்கள் பஞ்சடைந்து அதிக களைப்பினால் அவரால் நிற்கக்
கூட முடியவில்லை.

அதைப் பார்த்த முனிவர் தன் பசியைப் பொருட்படுத்தாது
அந்த பிச்சைக் காரருக்கு தனது பங்கு உணவைக் கொடுத்து
உபசரித்தார்.

அஃது அந்த முதியவருக்கு போதவில்லை, அதை அறிந்த மற்ற
மூவரும் தத்தமது பங்கையும் கொடுத்தனர்.

முதியவரும் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு அவர்களை
மனதார வாழ்த்திச் சென்றார். அவர் அந்த இடத்தை விட்டுச்
சென்ற அடுத்த நொடி அங்கு தேவர்களின் புஷ்பக விமானம்
ஒன்று வந்து அந்த நால்வரையும் ஏற்றிச் சென்றது.

அன்ன ஆகாரமின்றி பற்பல இடங்களிலும் அலைந்து திரிந்து
பசியால் வருந்திய நான் அந்த இடத்திற்கு வந்த போது அங்கு
நடந்த அதிசயங்களைக் கண்டேன்.

பிறகு அந்தக் குடிசையின் உள்ளே புகுந்து கீழே சிந்திக்கிடந்த
மாவை உண்ணும்போது அஃது என் மேலெல்லாம் ஒட்டிக்
கொண்டது.

அந்த மாவு ஒட்டிக் கொண்ட என் உடம்பின் பாகங்கள் எல்லாம்
மாற்றுக்குறையாத தங்கமாக மின்னியது!

அதைக்கண்டு ஆச்சர்யம் அடைந்து அந்த முனிவர் செய்த
தருமத்தின் பெருமையை வியந்து மகிழ்ந்திருந்தேன்.

பொன்னிறமான எனது பாதி உடல் எனக்கு அந்தத் தருமத்தின்
சிறப்பை எப்பொழுதும் நினைப்பூட்டுகின்றது, தருமபூபதியே”
என்று கூறிய கீரி மேலும்..

”எனது உடம்பின் மற்றொரு பாதியும் பொன் நிறமாக வேண்டி
தாங்கள் செய்த தான ஜலத்தில் விழுந்து புரண்டேன்.

ஆனால் எனது வாலின் கடைசியில் உள்ள இரண்டொரு முடிகள்
மாத்திரமே பொன் நிறமாக மாறி இருக்கிறது, ஆதாலால் நீங்கள்
செய்யும் அசுவமேதத்தைவிட அந்த முனிவர் செய்த அதிதி
பூஜையே மிகவும் சிறந்தது!”

என்று அங்கு கூடி இருந்த எல்லோருக்கும் கேட்கும்படியாகச்
சொல்லி விட்டு தன் இருப்பிடம் தேடி அங்கிருந்து ஓடிச்
சென்றது கீரிப்பிள்ளை.
-
நீதிக்கதை பதிவிட்டவர்- மீனாமுத்து (ஆத்திசூடி கதைகள்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக