புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_vote_lcapநதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_voting_barநதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
நதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_vote_lcapநதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_voting_barநதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
நதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_vote_lcapநதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_voting_barநதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
நதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_vote_lcapநதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_voting_barநதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
நதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_vote_lcapநதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_voting_barநதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 22 Feb 2021 - 8:09

நதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள் 202102211920008893_Actress-Nadhiya-Poove-Poochudava-in-film-Director-Basil_SECVPF
-
பூவே பூச்சூடவா' என்ற பெயரில் தமிழில் வெளியாகி
பிரமாண்டமான வெற்றியை பெற்றது. அதையும் பாசில்தான்
இயக்கினார்.

நடிகை நதியா `நோக்காத்த தூரத்து கண்ணும் நட்டு' என்ற
மலையாள சினிமாவில் அறிமுகமானார். அவரை டைரக்டர்
பாசில் அறிமுகம் செய்தார். அந்த படம் `பூவே பூச்சூடவா' என்ற
பெயரில் தமிழில் வெளியாகி பிரமாண்டமான வெற்றியை
பெற்றது. அதையும் பாசில்தான் இயக்கினார்.

1985-ம் ஆண்டு வெளியான அந்த படம் 35 வருடங்களை கடந்த
பின்பும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது.
நீண்ட காலங்கள் ஆனபின்பும் அதே இளமைத் துள்ளலோடு
இப்போதும் நதியா நடித்துக்கொண்டிருக்கிறார்.

பூவே பூச்சூடவா படத்தில் நதியா உடனான தனது மலரும்
நினைவுகளை பாசில் பகிர்ந்துகொள்கிறார்!

"நான் அப்போது நிறைய சினிமாக்கள் பார்ப்பேன்.
அதில் ஒரு டெலிபிலிமில் அம்மா- மகள் உறவு மிக ஆழமாக
விளக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து வித்தியாசமாக பாட்டி- பேத்தி
உறவை மையப்படுத்தி கதையை உருவாக்க முடிவுசெய்தேன்.
உருவாக்கி, அதற்கு `நோக்காத்த தூரத்து கண்ணும் நட்டு' என்று
பெயர் சூட்டினேன்.

துள்ளல் நிறைந்த அந்த பேத்தி கதாபாத்திரத்தை பற்றி சிந்தித்த போது,
ரொம்ப சுறுசுறுப்பான நடிகை அதற்கு தேவை என்று தீர்மானித்தேன்.
அது புதுமுகமாக இருக்கவேண்டும் என்றும் விரும்பினேன். ஏற்கனவே
அறிமுகமாகியிருந்த நடிகை என்றால் கதாபாத்திரத்தின் ஈர்ப்பு
குறைந்துபோய்விடும். அதோடு அவள் ஒரு சோகத்தை மனதில் மறைத்துக்
கொண்டு சந்தோஷ முகமூடி அணிந்து செயல்படவேண்டும்.

அதை எல்லாம் கவனத்தில்கொண்டு அதற்கேற்ற நடிகையை தேடினேன்.
அது ஒரு கடினமான அனுபவமாக இருந்தது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 22 Feb 2021 - 8:11


எனது சகோதரர்கள் இரண்டு பேர் தோகாவில் வசித்தார்கள்.
அவர்களது நண்பரான மொய்து மும்பையில் வசித்தார்.
அவர்களது மகள் செரீனா கல்யாண விருந்து ஒன்றில் நடனமாடிய
வீடியோ ஒன்று எனக்கு கிடைத்தது. அதை கண்டதும் அந்த
பெண்ணை நேரில் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால்
மும்பைக்கு சென்றேன்.

மொய்துதான் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.
அப்போது செரீனா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்
கொண்டிருந்தார்.

நான் வெகுநேரம் காத்திருந்த பின்பு அவர் வீடு திரும்பினார்.
அவரை பார்த்ததும் நான் ஆச்சரியப்பட்டுப்போனேன். என் மனதில்
ஓடிக்கொண்டிருந்த கதாபாத்திரம் போலவே அவரது நடை, உடை,
பாவனை இருந்ததும் உற்சாகம் கொண்டேன். அவர்தான் கதாநாயகி
என்று அப்போதே முடிவுசெய்துவிட்டேன்.

அவரது கண்களும், முகமும் கவர்ந்தது. என் கையில் இருந்த சிறிய
கேமராவால் அவரது பல்வேறு முகபாவங்களை படமாக்கினேன்.
நான் கதையை சொன்னேன். ஆர்வத்தோடு செரீனா கேட்டார்.

நான் திரும்பி கொச்சி வந்து விமான நிலையத்தில் இறங்கியபோது
எம்.டி.வாசுதேவன் நாயர் சென்னைக்கு செல்ல அங்கே காத்திருந்தார்.
நான் அவரிடம் பல விஷயங்களை பேசிவிட்டு செரீனாவின்
போட்டோவையும் காட்டினேன். அவர் `வெரி எக்ஸ்பிரசிவ் ஐஸ்' என்று
கண்களை வர்ணித்தார்.

அந்த கதாபாத்திரத்திற்காக நான் சந்தித்த ஒரே பெண் அவர் மட்டுமே.."
என்று கூறும் பாசில், படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவங்களையும்
விவரிக்கிறார். செரீனா, நதியாவாக பெயர் மாறிய ருசிகரத்தையும்
விவரிக்கிறார்.

"ஷூட்டிங்குக்காக அவர், அம்மாவுடன் வந்திறங்கியபோது அழைத்து
வர நானும் விமான நிலையம் சென்றிருந்தேன். அப்போது அவர்
ஒரு கறுப்பு நிற கண்ணாடி அணிந்து வந்தார். அப்படி கண்ணாடி
அணிந்த ஒரு காட்சியையும் ஏற்கனவே நான் சேர்த்து வைத்திருந்ததால்,
நான் எதிர்பார்த்ததுபோல் எல்லாம் நடந்துகொண்டிருந்தது.

ஷூட்டிங்கில் நான் எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலை
ஏற்படவில்லை. நடிப்பும், இயல்பும் ஒரே மாதிரிதான் இருந்தது.
திரையில் பார்த்தபோது, எதிர்பார்த் ததைவிட காட்சிகள் சிறப்பாய்
அமைந் திருந்தது.

அந்த காலகட்டத்தில், ருமேனியாவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக்
வீராங்கனை நதியா கொமேனச்சி உலக அளவில் பிரசித்தி பெற்றவராக
இருந்தார். பத்திரிகைகளில் அடிக்கடி அவரது படங்களும், செய்திகளும்
வந்துகொண்டிருந்தன.

அதை பார்த்த எனது சகோதரன் `இந்த செரீனாவுக்கு பதிலாக அந்த
நதியாவை எடுத்து சேர்த்துவிட்டால் நன்றாக இருக்குமே!' என்றார்.
எனக்கும் அது சரியாக தோன்றியதால் `செரீனா மொய்து', `நதியா மொய்து'
ஆனார்.

அதுவே மக்கள் மனதில் நிலைக்கும் பெயராகிவிட்டது. முதல் படத்திலேயே
அவரது கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்து, காலங்கடந்து இன்றும்
அது மக்கள் மனதில் நின்றுகொண்டிருக்கிறது.

அந்த படம் பல்வேறு விருதுகளையும் பெற்றுத்தந்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 22 Feb 2021 - 8:12

1985-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்
`நோக்காத்த தூரத்து கண்ணும் நட்டு' ரிலீஸ் ஆனது.
ரிலீஸ்க்கு முன்பு படத்தின் கிளைமேக்ஸ் என்னை
கவலைக்குள்ளாக்கியது.

வினியோகஸ்தர்கள் உள்பட பலரும் என்னிடம் `ஆபரேஷன் சக்ஸஸ்'
என்ற ஒரு வார்த்தையையாவது இறுதிக்காட்சியில் சேருங்கள்
என்றார்கள். ஆனால் நானோ அதனை ஒரு கவிதை போன்று நிறைவு
செய்திருந்தேன். அவர் களது விருப்பத்திற்கிணங்க
`அவர்கள் காத்திருக்கிறார்கள்.. அவள் என்றாவது வருவாள் என்று..'
என எழுதி சேர்த்து நிறைவு செய்தேன்.

இன்று சிந்தி்த்தாலும் அதுவே அழகான முடிவாக தெரிகிறது.
மாறாக, இறுதிக் காட்சியில் ஆபரேஷன் தியேட்டரை எல்லாம்
காட்டியிருந்தால் படத்தின் அழகு போயிருக்கும்.

தமிழிலும் பூவே பூச்சூடவா என்ற பெயரில் சக்கைப்போடு போட்டது.

அதன் இரண்டாவது பாகத்தை டைரக்டு செய்யலாமா என்று சிறிது
காலம் யோசித்தேன். பின்பு அந்த முடிவை கைவிட்டுவிட்டேன்.
ஒரு படம் அதன் முழுமையை அடைந்துவிட்ட பின்பு அதில் இரண்டாவது
பாகம் உருவாகுவது ரொம்ப சிரமம்.

நோக்காத்த தூரத்து கண்ணும் நட்டு, மணிச்சித்ர தாழ் போன்ற
சினிமாக்கள் அதன் முழுமையை அடைந்துவிட்டன. அவைகளில்
இரண்டாம் பாகம் தயார் செய்தால், அந்த படங்களுக்கு இருக்கிற
நல்ல பெயர் போய்விடக்கூடும்"- என் கிறார், பாசில்.

தினத்தந்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக