புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_m10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_m10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10 
3 Posts - 7%
heezulia
சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_m10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_m10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_m10சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84174
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 4 Feb 2021 - 14:18

சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Vikatan%2F2021-02%2F13d49e82-66f7-4058-9d34-2dbe75c50068%2FAP21033582320985.jpg?rect=0%2C205%2C3500%2C1969&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-

சர் டாம் மூர் தனது நூறாவது பிறந்தநாளுக்குள் 1,000 பவுண்ட் நிதி
திரட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது வீட்டு தோட்டத்தில்
நூறு சுற்றுகள் நடக்க முடிவு செய்தார்.
இதன்பிறகு நடந்தது எல்லாமே அதிசயங்களும், அற்புதங்களும்தான்!

கேப்டன் சர் டாம் மூரின் நினைவாக நாளை சென்னை டெஸ்ட்டில்
கறுப்பை பட்டை அணிந்தபடி இங்கிலாந்து வீரர்கள் விளையாட
இருக்கிறார்கள். உலகமே கொண்டாடும் இந்த டாம் மூர் யார்?

2020 கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நேரம்...
உலகமே வெறிச்சோடி மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக்
கிடந்த போது அந்த 100 வயது இளைஞன் துணிச்சலாக வெளியே
இறங்கினார்.

இங்கிலாந்தின் மருத்துவமனைகளில் உயிரை பணயம் வைத்து,
களத்தில் போராடிய மருத்துவ வீரர்களுக்காக நிதி திரட்ட தீர்மானித்தார்
டாம் மூர். அறுபது வயது தாண்டினாலே மூட்டு வலி, முட்டி வலி என
மூலையில் முடங்கிப்போகும் மக்கள் மத்தியில், வயதானாலும் அந்த
துணிச்சலும் மிடுக்கும் கொஞ்சமும் குறையாமல் களத்தில் இறங்கினார்
கேப்டன் சர் டாம் மூர்.

கடந்த ஆண்டு அதாவது ஏப்ரல் 6,2020 அவருக்கு 100 வயது.
நூறாவது பிறந்தநாளுக்குள் 1,000 பவுண்ட் நிதி திரட்ட வேண்டும் என்ற
குறிக்கோளுடன் தனது வீட்டு தோட்டத்தில் நூறு சுற்றுக்கள் நடக்க முடிவு
செய்தார்.
இதன்பிறகு நடந்தது எல்லாமே அதிசயங்களும், அற்புதங்களும்தான்!

முதலில் அக்கம்பக்கத்து வீட்டினரின் கவனத்தை ஈர்த்த இவரது நடை
பின் படிப்படியாக இங்கிலாந்து மக்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த
உலகையும் கவனிக்கவைத்தது. நூறு ஆயிரமாகி, ஆயிரம் லட்சமானது.
1000 பவுண்ட் நிதி திரட்ட முடிவெடுத்து நடந்தவருக்கு 39 மில்லியன்
பவுண்ட், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 387 கோடி ரூபாய் நிதி
திரண்டது.

வயதில் சதம் அடித்த இந்த தாத்தாவின் கோரிக்கைக்காக பணம் உலகம்
முழுவதும் இருந்தும் வந்து குவிந்தது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84174
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 4 Feb 2021 - 14:20

சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Vikatan%2F2021-02%2F8eef43e9-f090-43fb-b130-d3867d871a3a%2FAP21033581365790.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-

முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான கேப்டன் டாம்,
இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு மூத்த
அதிகாரியாக இந்தியாவிலும், பர்மாவிலும் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில்
டியூக் ஆஃப் வெலிங்டன் ரெஜிமென்ட் (Duke of Wellington's Regiment)-ல்
சேர்ந்தார். பின்னர் 1940-ம் ஆண்டில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும்
அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1941-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி இரண்டாவது லெஃப்டினென்ட்டாக
நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் இந்தியாவில் 9வது பட்டாலியன் படைக்கு
(9 டி.டபிள்யூ.ஆர்) மாற்றப்பட்டு ஆரம்பத்தில் மும்பைக்கும் பின்னர்
கொல்கத்தாவுக்கும் அனுப்பப்பட்டார்.

அக்டோபர் 1, 1942இல் போர்- லெஃப்டினென்ட்டாகவும், அக்டோபர் 11, 1944-ல்
தற்காலிக கேப்டனாகவும் பதவி உயர்வு பெற்றார். அவர் அப்போது பர்மா
என்று அழைக்கப்பட்ட மேற்கு மியான்மாரின் அரக்கனிலும் (Arakan)
பணியாற்றினார். பிரிட்டிஷ் ராணுவத்திடம் ஜப்பான் சரணடைந்த பின்னர்
சுமத்ராவில் பணியாற்றிய போது கேப்டனாக பதவி உயர்த்தப்பட்டார்.

Soldiers can sometimes make decisions that are smarter than the orders
they have been given.
என்ற பிரபலமான கூற்று ஒன்று உள்ளது. கோவிட் -19 நோய் தொற்றின் போது,
பதற்றத்திலும், பயத்திலும் மக்கள் உறைந்து நின்ற போது, கேப்டன் டாம்
“இது ஒரு யுத்த காலத்தை போன்ற சூழல். இதில் முதல் களத்தில் நின்று
போரிடும் வீரர்களான மருத்துவர்களும், மருத்துவ உதவியாளர்களுக்கும்,
பின் வரிசையில் நிற்கும் நாம் தகுந்த ஆயுதங்களை வழங்க வேண்டும்.

அதற்கான எனது முயற்சியாக £1,000 நிதி திரட்டும் பொருட்டு, எனது
தோட்டத்தில் நூறு சுற்றுக்கள் நடக்கப் போகிறேன்” என செம துணிச்சலோடு
அறிவித்தார்.
-
சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?! Vikatan%2F2021-02%2F4720782f-5f26-41a8-bb5e-34c04ddc38a7%2FAP21033582606436.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
இந்த அசாத்திய முயற்சி மூலம் கேப்டன் டாம் மூர் இங்கிலாந்து வீடுகளின்
செல்லப் பெயரானது. எம்ஜிஆர் ஸ்டைலில் 'நாளை நமதே' என்கிற இவரது
'Tomorrow will be a good day' சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது.
ஜூலை மாதம் விண்ட்சர் கோட்டையில் (Windsor Castle) நடந்த ஒரு சிறப்பு
விழாவில் இங்கிலாந்து மகாராணியால் (knighted) கௌரவிக்கப்பட்டார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84174
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 4 Feb 2021 - 14:20



மைக்கேல் பாலுடன் (Michael Ball) இணைந்து தனது 99 வயதில் கேப்டன் மூர்
பாடிய You'll Never Walk Alone என்ற ஆல்பமானது விற்பனையில் சக்கை
போடு போட்டது. இதன் வருமானமும் அதே தொண்டுக்கே பின்னர் வழங்கப்பட்டது.

அவரது 100-வது பிறந்தநாளில், உலகெங்கிலும் உள்ள அவரது அபிமானிகள்
வாழ்த்து மழையால் நனைத்து விட்டனர். சரமாரியாக வந்து குவிந்த 1000க்கும்
மேற்பட்ட வாழ்த்து அட்டைகளோடு, இங்கிலாந்து ராணி மற்றும்
பிரதமரிடமிருந்தும் வாழ்த்துக்களைப் பெற்றார்.

அத்தோடு அவர் இரண்டாம் உலகப் போரின்போது பணியாற்றிய '1-வது
பட்டாலியன் தி யார்க்ஷயர் ரெஜிமென்ட்'டால் (1st Battalion The Yorkshire Regiment)
கெளரவ கர்னலாகவும் பதவி உயர்த்தப்பட்டார்.

ஏற்கெனவே கேன்சர் உள்பட பல நோய்களால் அவதிப்பட்ட கேப்டன் மூர்,
சென்ற வாரம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இங்கிலாந்தின்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால் அவருக்கு
கொரோனா தடுப்பூசி போட முடியவில்லை. மூச்சு திணறலால் அவதிப்பட்ட
கேப்டன் டாம் மூர், இரண்டு நாட்களுக்கு முன்னர் (02-02-2021) உயிரிழந்தார்.

"எங்கள் தந்தை வாழ்க்கையின் கடைசி ஆண்டு குறிப்பிடத்தக்கது.
அவர் மீண்டும் புத்துயிர் பெற்றார். இதுவரை கனவிலும் காணாத
சந்தோஷங்களை அனுபவித்தார். ஒரு குறுகிய காலத்திற்குள்
பல இதயங்களில் இடம் பிடித்து விட்டார். எம் இதயங்களில் என்றென்றும்
உயிரோடு இருப்பார்" என அவரது மகள்கள் உருக்கமாகப் பேசியிருக்கிறார்கள்.

இங்கலாந்து பிரதமரின் வீட்டு முன் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது.
இங்கிலாந்தின் வெம்பிலி ஸ்டேடியம், பிளக்பூல் டவர், லண்டன் ஐ, பிக்கடலி சர்கிள்
போன்ற பல இடங்களில் கேப்டன் மூரின் உருவம் தாங்கிய விளக்குகள் அணையாது
ஒளிர்ந்து தம் அஞ்சலியை மௌனமாக செலுத்திக்கொண்டிருக்கின்றன.

சில நேரங்களில் சிறிய வெற்றிகளும் பெரிய இதயங்களும் வரலாற்றின்
போக்கையே மாற்றும் என்பார்கள். அதே போல கேப்டன் டாம் மூரின் இந்த சிறிய
வெற்றிக்கு, பல பெரிய இதயங்கள் செய்த பங்களிப்பு, கொரோனா எனும்
இருண்ட பக்கங்களில் ஒரு பசுமையான நிறத்தை தீட்டிச் சென்றுள்ளது!
-
-----------------------
-றின்னோஸா
நன்றி- விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 4 Feb 2021 - 18:47

வயது என்றுமே ஒரு தடை இல்லை என தன்னுடைய ஒவ்வொரு நடையிலும்
வெளிப்படுத்திய கேப்டன் மூர் -மரியாதை கலந்த வணக்கங்கள்.
அவர் ஆத்மா சாந்தி அடைவதாக
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக