புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
44 Posts - 61%
heezulia
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
2 Posts - 3%
viyasan
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
236 Posts - 43%
heezulia
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
21 Posts - 4%
prajai
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_m10மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 27, 2020 12:22 pm

மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? 2a
-

அது திரேதாயுகம். முப்பத்து முக்கோடி தேவர்களும்
அமராவதி எனும் தேவலோக நகரத்தின் வாயிலில்
இந்திரனின் வருகைக்காக காத்திருந்தனர்.

காண்போர் கண்கள் கூசும் அளவுக்கு ஒளி மிகுந்த
யானை அசைந்து நடந்து வந்து கொண்டிருந்தது.
இந்திரன் அதன் மீது அமர, தேவலோகமே தனக்குக்
கீழ் என தும்பிக்கையை வளைத்துக் காண்பித்தது.
இந்திரன் அதன் மஸ்தகத்தைத் தட்டிக் கொடுக்க,
கர்வம் அதன் சிரசின் உச்சியைத் தொட்டது.

அப்போது துர்வாசர் வைகுந்தத்திலிருந்து பிரசாதமாக
பூமாலையை பெற்றுக் கொண்டு அமராவதியின்
எல்லையை அடைந்தார். இந்திரன் இனிதே வரவேற்றான்.

தேவர்கள் இந்திரனை நோக்கி தலை தாழ்த்தி
வணங்கினார்கள். துர்வாசரை நோக்கி இருகரங்களையும்
தூக்கித் தொழுதார்கள். துர்வாசர் கண்கள் மூடி கரம்
குவித்தார்.

ஆனால், அந்த யானை ஆர்ப்பாட்டமாய் தும்பிக்கையை
தூக்கி ஆசியளித்தது. தேவர்கள் திகைத்தார்கள். துர்வாசர்
திடுக்கிட்டு தகுதிக்கு மீறி ஆரவாரிக்கிறதே எனக் கோபம்
கொண்டார். பிறகு தான் கொண்டுவந்திருந்த பூமாலையை
இந்திரனிடம் நீட்டினார்.

இந்திரன் கீழே இறங்காது கால் அகட்டி அந்த மாலையை
பெற்றுக் கொண்டான். மென்மையான மாலை மலை
போல் கனத்தது. ஒரு கணம் தடுமாறியவன் கர்வம் பொங்க
திமிறிக் கொண்டிருந்த யானையின் தலையில் வைத்தான்.
அது அதிர்ந்தது.

துதிக்கையை வளைத்து பூமாலைப் பற்றியது.
தூக்கிப் பார்த்தது. முடியாது போகவே முழுவலிமையோடு
இழுத்தது.

அது எம்பெருமானின் பிரசாதம் என்று தேவர்கள்
அலறினார்கள். அடங்காத அந்தக் களிறு வானத்தில் தூக்கிச்
சுழற்றியது. சட்டென்று தரையில் அறைந்து, காலால் அழுத்தி
மிதித்தது. உடனே பெருங்குரலெடுத்து அந்த யானை அலறி
கால் மடங்கிச் சரிந்து வீழ்ந்தது. ஈரேழ் உலகமும் இருள்
சூழ்ந்தது.

தூக்கியெறியப்பட்ட இந்திரன் நாராயணின் பாதம் பற்றினான்.
தேவர்களின் நிலையை அறிந்த அசுரர்கள் இதுதான் சமயம்
என்று போர் தொடுத்தார்கள். தேவர்கள் அசுரர்களின்
தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் தவித்தனர்.

‘வாருங்கள் பாற்கடலை கடையலாம். கிடைக்கும் அமுதத்தை
பங்கிட்டுக் கொள்ளலாம்’என்ற எம்பெருமானின் அறிவுரையை
அசுர சேனாதிபதிகளிடம் தேவர்கள் ஆசையாகப் பேசினர்.
அசுரர்கள் அமிர்தமா என வாய் பிளந்தனர்.

பேரலைகளால் கொந்தளித்துக் கிடந்த பெருங்கடலின்
மையமாக நிமிர்ந்திருந்த மேருவின் உச்சியில் சூரியனின்
பொன்கிரணங்கள் பட்டு பாற்கடல் தங்கமாக தகதகத்திருந்தது.

வாசுகி எனும் மாபெரும் பாம்பை மேருவைச் சுற்றி வலிமையாக
இறுக்கினார்கள். எம்பெருமானான மகாவிஷ்ணு பாற்கடல்
பரந்தாமன் எவராலும் பிளக்க முடியாத, வஜ்ஜிரம் போன்ற
ஓடுகளையுடைய கூர்மம் எனும் ஆமை வடிவில் அவதரித்து
மேருவின் கீழ் அமர்ந்தார். மேரு நிலை பெற்றது.

மேரு எனும் மந்திர மலையை தேவர்களும் அசுரர்களும்
ஆளுக்கொரு பக்கம் வாசுகிப் பாம்பைப் பற்றி இடதும், வலதுமாக
சுழற்ற அகிலமே அதிர்ந்தது. காட்டாற்றின் வேகத்தில் தோன்றும்
நீர்ச் சுழலாக பெருவட்டச் சக்கரத்தின் மையத்திலிருந்து
அற்புதமான விஷயங்கள் பொத்துக் கொண்டு கிளர்ந்தெழுந்தன.

திவ்ய வடிவோடு திருமகள், வெண் குதிரையான உச்சைச்சிரவஸ்,
அதிவேகத்தோடும், ஐராவதம் என வந்ததைப் பார்த்து
பரவசமாயினர்.

அதன் பிறகு ஆலகாளம் என்ற கடும் விஷத்தை வாசுகி கக்கியது.
அதன் கடும் நெடியில் தேவர்களும், அசுரர்களும் கலங்கித்
தவித்தனர். கயிலை நாயகனின் திருவடி பற்றினர்.

ஈசன் கலங்காது அதைத் தன் கண்டத்தின் மேலேற்றி அடைத்து
திருநீலகண்டனாக காட்சி தந்தான். இறுதியில் பேரொளி
பெருமையத்தின் நடுவே நிறைந்து தளும்பிய அமிர்தகுடம்
மேலெழுந்தது.

ஆராவமுதனான நாராயணன் அமிர்தத்தை அள்ளி எடுத்து
வந்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 27, 2020 12:25 pm

பாற்கடல் பரந்தாமனின் திருமார்பில் நிரந்தரமாக தான்
உறைய வேண்டும் எனும் பேரவா கொண்டாள் மஹாலட்சுமி.
த்ரைலோகி தலத்தை அடைந்தாள். அங்கு உறையும்
கல்யாணசுந்தரேஸ்வரரை வேண்டி அத்தலத்தில் அமர்ந்தாள்.

ஈசனை எவ்வாறு பூஜிப்பது என்று தவித்தாள்.
மனசீகமான பூஜையைத் தாண்டி ஏதேனும் புஷ்பங்களால்
அர்ச்சித்தால் என்ன என்று நினைத்தாள். புஷ்பங்கள் அர்ச்சனை
முடிப்பதற்குள் வாடிப்போகுமே என்று கவலையுற்றாள்.
அந்தப் பிரதேசத்தில் பட்ட மரம் ஒன்றிருந்தது. அதன் கீழ் சென்று
அமைதியாக அமர்ந்தாள்.

சட்டென்று அவளுக்குள் மின்னலாக யோசனைக் கீற்று
வெளிப்பட்டது. தன் உயிர் திரட்சியாக விளங்கும்
பிராணனைக் கொண்டு ஈசனை வழிபட்டாள். அந்தப் பிராணன்
இடகலை, பிங்கலை, சுழிமுனை என்று மூன்றாகப் பிரிந்து
ஈசனை அடைந்தது. அதேசமயம் அவள் அமர்ந்த அந்த மரம்
துளிர்க்கத் துவங்கியது.
பச்சைமாமலைபோல் மேனியனின் நிறம் அதில் படர்ந்தது.

திருமகளிடமிருந்து வெளிப்பட்ட பேராற்றல் மிகுந்த பிராண
சக்தியானது, மூவிதழாகப் பிரிந்தது. சிறு சிறு இலை வடிவம்
கொண்டது. தனித்தனியாக இருந்தாலும் ஒரு சிறு காம்பின்
மூலம் இணைந்தது. விருட்சத்தில் இலைகள் அதிகமாயின.
அடுத்தடுத்து அடர்ந்த கானகமாக பெருகின.

இடையறாத அதிர்வுகளாலும், பக்தியின் வெம்மையாலும்
அந்த மூவிலைகளின் வாசமும், ஈசனின் சாந்நித்தியமும்
அவ்விடத்தை நிறைத்தன.

விஸ்வம் எனும் பிரபஞ்சத்தையே அசைக்கும் ஈசனுக்கு
உரியதாக அந்த இலைகள் இருந்ததால் வில்வம் எனும் பெயர்
பெற்றது. ஈசனுக்குச் செய்யும் பூஜையில் ரத்னம்போல தனித்
தன்மை பெற்றது. மஹாலட்சுமியின் சொரூபமாக அந்த
மூவிலைகளும் விளங்கின.

தொடர்ந்து தவம் புரிந்து வில்வ தளங்களால் அன்னை
அர்ச்சித்தாள். வைகுந்த வாசன் த்ரைலோகி எனும் அந்தத்
தலத்தில் சயனக்கோலத்தில், பாற்கடலில் எவ்வாறு பள்ளி
கொண்டிருக்கிறானோ அவ்வாறே இங்கும் ஒயிலாகக் கிடந்தார்.

பெருங்கருணைகொண்டு, திருமகளை தன்னிலிருந்து
எப்போதும் பிரியாத வண்ணம் தம் திருமார்பில் சேர்த்துக்
கொண்டார்.

ரிஷபாரூட சர்வேசனாக விளங்கும் சுந்தரேஸ்வரரை
தரிசிப்பதற்காக பாற்கடல் பரந்தாமன் பூவுலகு
வந்திறங்கினார். ரிஷபாரூடராக தரிசித்தார். இவ்வாறு
திருமகள் எம்பெருமானோடு இணைந்த வைபவமும்,
வில்வம் எனும் புனித இலைகள் உருவெடுத்ததே
இத்தலத்தில்தான். வில்வமரம் பூரண லக்ஷ்மி கடாட்சம் மிகுந்த
மரமாகும்.

திருமகள் தவம் செய்தமையால் புரம் என்றும் அழைக்கலாம்.
இத்தலமே தற்போது திரிலோகி என அழைக்கப்படுகின்றது.
இத்தலம் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகில் உள்ளது.

இதுவே மஹாலட்சுமி உத்பவித்ததாக கூறப்படும் புராணக்
கதை.
-
-------------------------
நன்றி- குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக