புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
16 Posts - 52%
ayyasamy ram
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
14 Posts - 45%
cordiac
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
265 Posts - 52%
heezulia
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
163 Posts - 32%
Dr.S.Soundarapandian
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
18 Posts - 4%
prajai
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
5 Posts - 1%
Barushree
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
2 Posts - 0%
cordiac
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_m10சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 9:12 pm

[You must be registered and logged in to see this image.]

சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’
எனத் தலைவி தன் துயரத்தினைச் சிட்டுக் குருவியிடம்
பகிர்ந்துகொள்ளும் செயலிலிருந்து, குடும்ப உறுப்பினர்
போல சிட்டுக் குருவி நம்முடன் வாழ்வதை சினிமா
பாடல்கள் மூலம் நாம் உணரலாம்.

மனிதனுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சிட்டுக் குருவியினைப்
பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களிலும் அபரிமிதமாகக்
காணப்படுகின்றன. சங்க கால மக்கள் இயற்கையை விரும்பி
வாழ்ந்தார்கள்.

இலக்கியங்களிலும் இயற்கையைப் பதிவு செய்ததோடு
இயற்கையைப் போற்றவும் செய்தனர்.

தன் துணையின்பால் அன்புகொண்ட ஆண் சிட்டுக் குருவி,
தன் துணை முட்டையிடுவதற்கு மென்மையான படுக்கை
அமைத்த நிகழ்வு குறுந்தொகைப் பாடல் ஒன்றில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.

தலைவியிடம் ஊடல் கொண்டு பரத்தையிடம் சென்ற தலைவன்
தலைவியிடம் மீண்டும் சேர விரும்பி ஊடலை நீக்கப் பாணனை
அனுப்புவதைப் பதிவுசெய்யும் அந்தப் பாடலை எழுதியவர்
வண்ணக்கன் தாமோதரனார்.

யாரினும் இனியன் பேரன் பினனே

உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்

சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்

யாணர் ஊரன் பாணன் வாயே
(குறுந்தொகை, 85).
மருதத் திணையினைச் சார்ந்த இப்பாடலின் பொருளானது,
சிட்டுக் குருவிக் குடும்பம் ஒன்றில் காதல் வாழ்க்கை நடத்துகின்றது.
ஊரினுள் வாழும் துள்ளல் நடையினை உடைய ஆண் குருவி,
கர்ப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு நல்ல இடத்தை அமைத்துத்
தரும் பொருட்டு, சாறு பொதிந்த இனிய கோலை உடைய
கரும்பினது மணம் வீசாத வெண்மையான மென்மையான
பூக்களைக் கோதி எடுக்கும் புது வருவாயை உடைய ஊருக்குத்
தலைவன்.

இப்பாடலின் மூலம் சிட்டுக் குருவியின் உயரிய பண்பு
வெளியிடப்படுகிறது. தோழி தலைவனிடம் தவறினை நினைத்து
வருந்துமாறு கூறுகின்றாள்.

ஆனால் நற்றிணைப் பாடலில் வரும் சிட்டுக் குருவி குறுந்தொகைத்
தலைவன் போல வேற்றுப் புலம் சென்று அங்குள்ள பேடையுடன்
சிறிது காலம் தங்கிப் பின் தன் மனை நோக்கித் திரும்புகிறது.

அப்பொழுது அதன் பேடை, ஈங்கை பூப்போன்ற தன் குஞ்சுகளுடன்
கூட்டினுள் வர இயலாதவாறு தடுத்துத் துரத்துகிறது. இவ்வாறு
துரத்தப்பட்ட குருவி, மாலை வேளையில் பெய்யும் மழையில்
நனைந்தவாறே பக்கத்தில் தங்கியிருக்கிறது.

இதனைக் கண்ணுற்ற பேடை தம் சேவலின் மீது இரக்கமுற்று
உள்ளே வருமாறு அழைக்கிறது.

மயக்கமுற்ற நிலையில் காணப்படும் குருவியோ துணைவியின்
அழைப்பினைப் புரிந்துகொள்ளாத நிலையில் காணப்படுகிறது.
இக்காட்சி நற்றிணை,181-ல் வருகிறது.
பாடலை இயற்றியவர் பெயர் கிடைக்கவில்லை.

சங்க காலப் பாடல்களில் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள்
தற்காலத்தில் வெளிவரும் பாடல்களில் இயற்கையைப் பற்றிய
வர்ணனைகள் குறைந்துவிட்டதாக வருத்தம் தெரிவிக் கின்றனர்.

இயற்கையைப் பற்றிய வர்ணனைகளோ குருவி போன்ற
உயிரினங்கள் பற்றிய குறிப்புகளோ அருகி வருகின்றன.
சங்க காலந்தொட்டே தமிழர் தம் வாழ்வோடு இணைந்த சிட்டுக்
குருவியை இலக்கியத்திலும் காப்பதும் நமது கடமையல்லவா?
---
முனைவர் மாரியப்பன்
நன்றி-இந்துதமழ் திசை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:28 pm


சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’’

- அருமையான திலங் இராகப் பாடல்!
நான் எனது தாவர ஆராய்ச்சிக்காக ஆங்காங்கே செல்லும்போது , சில இடங்களில் அகல இலையின் பின்புறம் சிட்டுக்குருவி கூடுகட்டியிருப்பதைப் பார்த்துள்ளேன்!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக