புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 22, 2020 8:12 pm

First topic message reminder :

அன்று காலையில் தான் ராகவ பட்டரின் அன்பு மகளுக்கு கல்யாணம் நடந்து முடிந்திருந்தது. எல்லோரும் சாப்பிட்டாச்சு, இனி மாலை தான் வரவேற்பு. கொஞ்சம் நிம்மதியாக அமர்ந்திருந்தார் அவர். மனம் அன்பு மகள் கோதையைப் பற்றி அசை போட்டது. ஏதோ நேற்று பிறந்தது போல இருந்தது, அவளைப் பிரிவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கப் போகிறது அவருக்கு. ஏன் அவளுக்குமே இந்த கோவிலையும் நந்தவனத்தையும் பிரிந்து போவது என்பது எப்படி சாத்தியமாகப் போகிறதோ தெரியவில்லை. அவள் அத்தனை நெருக்கம் இந்த காளிங்க நர்தன பெருமாளுக்கும் அந்த நந்தவனத்திற்கும். ஆம் அவள் வீட்டில் இருந்த நேரத்தைவிட இங்கு செலவிட்ட நேரம் தான் அதிகம்.
என்னவோ சின்ன வயதில் இருந்தே, அதாவது அவள் நடக்க ஆரம்பித்த போதே அவருடன் கோவிலுக்கு கிளம்பிவிடுவாள். கொஞ்சமும் படுத்த மாட்டாள். அமைதியாக உட்கார்ந்து கொண்டு அப்பா பெருமாளுக்கு ஆராதனை செய்வதைப் பார்த்தபடி இருப்பாள். சோறு தண்ணீ கேட்கமாட்டாள், அழமாட்டாள். இப்படியும் ஒரு பெண்ணிருக்குமா என்று இவர்கள் அதாவது பெற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
அவள் பிறந்த நேரம் அப்படி என்று பேசிக்கொள்வார்கள். ஆமாம், அவள் பிறந்தது ஒரு ஆடிப்பூர நன்னாளில். அதனால் தான் ஆசையாகக் கோதை என்று பெயர் வைத்தார்கள். அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது என்று சொல்வார்கள். அப்படிபட்ட பெண் இவள்.


ஆம், ராகவா பட்டருக்கு ஏற்கனவே இரண்டு பெண்களும் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். இவள் கடைசி பெண்; செல்லப் பெண்.

முதலில் அப்பாவுடன் கோவிலுக்கு சென்று வந்தவள், கொஞ்சம் கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு தானாகவே சின்ன சின்ன கைங்கர்யங்கள் செய்ய ஆரம்பித்தாள். மடப்பள்ளி மாமா பிரசாதம் கொண்டு வந்தால், இவள் எல்லோருக்கும்
பிரசாதம் வாங்கிக் கொள்ள இலைகளை கொடுப்பாள்.

குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பாள். அதுபோல சின்ன சின்ன வேலைகள் செய்ய ஆரம்பித்தாள்.

இவர்கள் இருந்தது கும்பகோணத்தை ஒட்டிய ஒரு சிறு கிராமம். அதில் ஒரு காளிங்க நர்தன கிருஷ்ணர் கோவில் இருந்தது.

கிராமத்திலுள்ள மக்கள் இவர்களுக்கு உதவி செய்தார்கள் இவர்கள் கோவிலைப் பார்த்துக் கொண்டார்கள்.
அதாவது ராகவ பட்டர் மாமா கோவிலின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அவர்களின் குடும்ப தேவைகளை கிராமத்து மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஊரை விட்டு வெளியேறியவர்கள் கூட கோவிலுக்கு பணம் அனுப்புவதையோ உத்சவங்களில் முடிந்த போது கலந்து கொள்வதையோ விட்டுவிடவில்லை. எனவே இவர்களுக்கு சாப்பாட்டிற்கும் தங்குவதற்கு எந்த கஷ்டமும் இல்லை ஓரளவு வசதியாக இருந்தார்கள்.

சின்ன கோவில் தான் அது என்றாலும் மிகவும் வரப்பிரசாதி அந்த காளிங்க நர்த்தன கிருஷ்ணர் அதனால் பக்தர்கள் வருகைக்கு குறைவு ஒன்றும் இல்லை. எனவே கோவிலில் பூஜைகள் நன்றாகவே நடந்து வந்தன. ஒரு சின்ன நந்தவனமும் அதை ஒட்டியே இருந்தது இரண்டு மூன்று பசு மாடுகளையும் அவர்கள் பராமரித்தார்கள். கோவிலுக்கு என்றே நில புலங்களும் இருந்தன.

எனவே ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் வீட்டில் இருக்கும் எல்லோருமே அந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 26, 2020 10:19 pm

அவர்கள் ஒரு மாதமாக இவ்வாறு நிறைய கோவில்கள் பார்த்துக் கொண்டு வருவதாக சொன்னார்கள். அதில் இவர்களின் இந்தக் கோவில் மிகவும் பிடித்துவிட்டதாகவும் சொன்னார்கள். எல்லாம் பார்த்து ஆனதும், இவர்கள் அவர்களுக்கு அன்றய ஸ்பெஷல் பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல், வடை மற்றும் புளியோதரை தந்தார்கள். அவர்களுக்கு அது தேவாம்ருதமாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு தண்ணீரும் அருந்திவிட்டு விடை பெற்றார்கள்.
பிரசாதம் மிக அருமை என்று சொல்லி, யார் செய்தது என்று கேட்டர்கள். கோதை இன்று தான் செய்ததாக சொன்னாள். அன்று தன் மாமியார் மாமனாரின் திருமண நாள் என்பதால் ஸ்பெஷலாக வீட்டில் செய்தது என்று சொன்னாள்.


அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்ற ஓரிரு நிமிடங்களில் மீண்டும் உள்ளே வந்தார்கள் அந்த என்ஆர்ஐ மாமா வரதராஜனும், லக்ஷ்மி மாமியும். அவர்களைப் பார்த்த பட்டர் மாமா, என்ன எதாவது மறந்து வைத்து விட்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர், அதெல்லாம் ஒன்றுமில்லை,
உங்களிடம் கொஞ்சம் தனியாக பேசவேண்டும் என்று சொன்னார். ஓ அதற்கு என்ன பேசலாமே என்று இவர் சொல்வதற்குள், யாரோ ஒருவர் அர்ச்சனைக்கு வரவே மாமா கொஞ்சம் இருங்கள் வருகிறேன் என்று சொல்லி உள்ளே சென்றார்.

இவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர் மீண்டும் பேச ஆரம்பிக்கும்போது வேறு ஒரு ஜோடி அர்ச்சனை என்று வந்தார்கள். அவர் மீண்டும் கொஞ்சம் இருங்க என்று சொல்லி சென்றார். அரைமணி போய்விட்டது. உடனே மாமா சொன்னார் இங்கு இருந்தால் இந்த மாதிரி தான் யாராவது வந்து கொண்டிருப்பார்கள் அதனால் இப்போது அரைமணியில் கோயில் நடை சார்த்தி விடுவோம். நீங்கள் எல்லோரும் நம் அகத்துக்கு வந்து விடுங்கள். சாப்பிட்டு விட்டு நிதானமாய் பேசலாம். அப்புறம் சாயரக்ஷை தான் கோவில். அங்கு நிதானமாக பேசலாம். என்று சொன்னார்.

அவர்கள் கொஞ்சம் யோசித்தார்கள்; உங்களுக்கு எதற்கு சிரமம் என்று சொன்னர்கள். இவர்கள் அதெல்லாம் ஒன்றும் இல்லை , இது எங்களின் வழக்கம் தான் என்று சொன்னதும்,சரி என்று ஒப்புக் கொண்டார்கள்.


அன்று ராஜகோபால் மாமா தம்பதிகளுக்கு கல்யாண நாள் என்பதால், வீட்டில் தடபுடலான விருந்து ஏற்பாடாகி இருந்தது. பெரிய சம்பந்தி ஏற்கனவே வந்திருந்தார்கள். கோவில் வேலைகளை முடித்துக் கொண்டு வருவதாக கோதையின் அம்மாவும் அப்பாவும் சொல்லி இருந்தார்கள். தங்களுக்காக சாப்பிடக் காத்து இருக்க வேண்டாம் என்றும் முன்பே சொல்லி இருந்தார்கள்.

இந்த நிலையில் இவர்கள் வருவதால், வீட்டில் சொல்லித் தேவையான ஏற்பாட்டைக் கவனிக்க, நானும், கோதையும் இப்பொழுதே வீட்டுக்கு போய் வேண்டிய ஏற்பாடு செய்து விடுகிறோம் என்று சொல்லி கோபாலனும் கோதையும் உடனே வீட்டிற்கு கிளம்பினார்கள்.

வீட்டில் போய் சொன்னார்கள்; ராஜி மாமியும் ஒண்ணும் பிரச்சனை இல்லை என்று சொல்லி இன்னொரு சாதம் வைத்தார்கள். அவர்கள் வரவும் இவர்கள் எல்லாவற்றையும் தயார் செய்து வைக்கவும் சரியாக இருந்தது.

மருமகள்கள் இருவரும் மாமனார் மாமியாரை ஒன்றாக உட்கார வைத்து சாப்பாடு போட வேண்டும் என்று எண்ணி இருந்தார்கள் இப்போது இந்த மாமா மாமி வந்ததால் கொஞ்சம் யோசித்தார்கள் பிறகு அவர்களும் இவர்களை சேர்ந்து அமரச்சொல்லவே, பெரியவர்கள் 6 பேரும் அமர்ந்து கொண்டார்கள் இரண்டு பிள்ளைகளையும் அவர்களுடன் அமரச் செய்தார்கள். நாங்கள் இருவருமே எல்லோருக்கும் பரிமாறுவோம் என்று சொல்லி எல்லோரையும் உட்கார வைத்து நன்றாக தலை வாழை இலை போட்டு, ஒவ்வொன்றாக பரிமாறினார்கள்.

இரண்டு கறியமுது, ஒரு பொரித்த கூட்டு, ஒரு அவியல், ஒரு குழம்பு, ஒரு சாற்றமுது ,ஒரு பச்சடி சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பளம், தயிர், ஊறுகாய் என்று நல்ல முழுசாப்பாடாக இருந்தது. ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் இப்படி சாப்பிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டே மாமியும் மாமாவும் திருப்தியாகச் சாப்பிட்டார்கள்.

தொடரும்..



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 26, 2020 10:20 pm

எல்லாமே மிகவும் அருமையாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டார்கள் .நாங்கள் இந்த சக்கரை பொங்கலும் புளியோதரையும் கோவிலிலேயே ஏற்கனவே சாப்பிட்டோம் என்றாலும் அதன் ருசி மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டுகிறது என்று சொல்லி கேட்டு போட்டுக்கொண்டார்கள்.

மீண்டும் யார் செய்தது என்று விசாரித்தார்கள். கோதை தான் செய்தாள் என்று ராஜி மாமி சொன்னாள். நான் என்னுடைய பாட்டி தாத்தாவிடம் கற்றுக்கொண்டது என்று கோதை சொன்னாள்.

இது மட்டும் தான் தெரியுமா அல்லது வேறு பல பிரசாதங்களும் தெரியுமா என்று கேட்டர்கள். ம்ம்.. இன்னும் நிறையத் தெரியும் மாமா என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் கோதை. ஒருவாரம் பத்து நாள் இங்கிருங்கோ, ஒவ்வொன்னா செய்து பெருமாளுக்கு அம்சையம் செய்யலாம் என்று சொல்லி சிரித்தாள் ராஜி.


வரதராஜனும், லக்ஷ்மியும் ஒருவரை ஒருவர் பார்த்து தலை ஆட்டிக் கொண்டார்கள். சாப்பிட்டு கைகழுவிய பிறகு வெற்றிலை பாக்கு எடுத்து வைத்திருந்தார்கள். தோட்டத்தில் சேர் போட்டு வைத்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் அங்கு போய் உட்கார்ந்து கொண்டார்கள். அதற்குள் இவர்கள்; கோதையும் அவள் மன்னி ஜானகியும் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு, சாப்பிட்டு விட்டு வந்தார்கள்.

அவர்கள் அப்படி வருவதற்குள் இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த என்ஆர்ஐ மாமா ராஜ
கோபாலன், நான், எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஆனால் உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் எனக்கு வேண்டியது ஒன்று உங்களிடம் உள்ளது அதை எனக்குத் தந்து உதவுவீர்களா என்று கேட்டார்.

இவருக்கு எதுவுமே புரியவில்லை, எனவே, மாமா உங்களுக்கு வேண்டியது என்ன என்று சொல்லுங்கள். மேலும் நான் உங்களை இன்று காத்தால தானே பார்த்தேன், அப்படி இருக்க உங்களுக்கு வேண்டியது என்று சொல்கிறீர்கள்…எனக்கு ஒன்றும் புரியவிலை. தெளிவாக போட்டு உடைத்து விடுங்கோ என்றார்.

அவரும் உடனே, ஒரு மாதமாக நாங்கள் 6 பேரும் இங்கு ஒரு வேலையாகத்தான் வந்தோம். எல்லா கோயில்களுக்கும் போய் போய் வருகிறோம். எங்களின் அமெரிக்கா கோவிலுக்கு ஒரு நல்ல பட்டரைத் தேடி வருகிறோம். எங்கும் எங்களுக்குத் திருப்தியாக இல்லை. ஆனால் உங்கள் கோவிலில், உங்கள் மகனைப் பார்த்ததும் எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. இருந்தாலும் உங்கள் வயதான காலத்தில் நீங்கள் அவரை எங்களுடன் எங்கள் நாட்டுக்கு அனுப்பிவைபீர்களா என்று கொஞ்சம் யோசனையாக இருக்கிறது. அதுதான், இத்தனை பீடிகை என்று சொன்னார்.


சுற்றி வளைத்து பேசாதீர்கள் கேளுங்கள் என்றவுடன் அவர் சட்டென்று கேட்டு விட்டார் ஆனால் இவர்களுக்கு தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ஒருவரை ஒருவர் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் பேச்சைக் கேட்டவாறே வந்த மூத்த மருமகள் பவித்ரா, “அப்பா நீங்க எதுவும் தப்பா நினைக்கவில்லை என்றால் நான் ஒன்று சொல்கிறேன். நம்மூரில் இப்போது ஸ்வாமி இல்லை என்று சொல்கிற கோஷம் தான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து கொண்டு நம் மதம் மற்றும் கலாசாரத்தைப் பரப்ப கஷ்டப்படுகிறோம். ஆனால் பாருங்கள், அதே நேரத்தில் அவர்கள் எவ்வளவு ஆசையாக கூப்பிடுகிறார்கள். அதனால் இதை தட்டிக் கழிக்க வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன் எங்கிருந்தால் என்ன நமக்கு பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் அவ்வளவுதானே நீங்கள் இதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். இது என் வேண்டுகோள் என்று சொல்லி விட்டாள்.


காலையில் கோவிலில் அவ்வளவு அழகாக விளக்கம் அளித்தார் என்று அந்த மாமா சொல்லிக்கொண்டிருந்தது தன் கணவன் என்று அவள் எண்ணிக்கொண்டாள் அதனால்தான் உடனடியாக அப்படி சொன்னாள். அவளுடைய கணவன் சைகை மூலம் அது நான் இல்லை, தம்பி என்று கை காட்டுவதை அவள் கவனிக்கவே இல்லை. தன் கணவன் தான் அமெரிக்கா போகப் போகிறான் என்று எண்ணிக்கொண்டு மிகவும் சந்தோஷமாக ஒப்புதல் அளித்தாள் அவள்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lakshmi palani
lakshmi palani
பண்பாளர்

பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Postlakshmi palani Thu Nov 26, 2020 11:30 pm

அழகான கதை கிருஷ்னாம்மா. கோவிலும் நந்தவனமும் கன் முன்னே வருகிறது.இன்னொரு கோதை. நன்றி.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 28, 2020 12:14 pm

lakshmi palani wrote:அழகான கதை கிருஷ்னாம்மா. கோவிலும் நந்தவனமும் கன் முன்னே வருகிறது.இன்னொரு கோதை. நன்றி.

மேற்கோள் செய்த பதிவு: 1336200

ம்ம்.. புன்னகை..மிக்க நன்றி லக்ஷ்மி ...தொடருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 28, 2020 12:46 pm

இதற்குள் கோதையும் வந்து சேர்ந்தாள். எல்லோரும் ஏதோ அதிர்ச்சியில், மௌனமாக இருப்பது போல தோன்றியது அவளுக்கு. என்ன ஏது என்று தெரியவில்லை.

அப்போது அந்த மாமி தான் வாம்மா, இங்க வந்து உட்கார் என்று சொல்லி அவளைத் தன் பக்கத்தில் அமரச் செய்து கொண்டார். ஒன்றுமில்லை, இன்று காலையில் உன் கணவன் அவ்வளவு அழகாக அழகான ஆங்கிலத்தில் கோவிலைப் பற்றியும் பெருமானை பற்றியும் சொன்னது எங்களுக்கு பரம சந்தோஷம். இது போல ஒரு பக்தி சிரத்தையான, விஷயமறிந்த ஒரு அர்ச்சகரை தான் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம்
அதனால் தான் அவரை எங்களுடன் அமெரிக்காவிற்கு கூப்பிட்டுக் கொண்டு செல்ல இருக்கிறோம். அதற்கான அனுமதியை உன் மாமனாரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்.


கோதைக்குத் தலை சுற்றாத குறைதான். என்னது, அமெரிக்காவுக்கா? என்று கேட்டாள். ம்ம்.. நீ ஒன்றும் பயப்பட வேண்டாம் அவரை மட்டுமல்ல உன்னையும் சேர்த்துதான் என்று சொன்னார். என்ன நானா என்று கேட்டாள் அவள். ஆமாம் நீதானே சொன்னாய் அந்த நைவேத்ய பிரசாதங்களை எல்லாம் நீ செய்தாய் என்று. இவள் ஆமாம் என்று சொன்னாள். பின்னே அங்கு மட்டும் பெருமாளுக்கு நைவேத்யம் வேண்டாமா அம்மா? என்று எதிர் கேள்வி கேட்டாள் அந்த மாமி.

உன் பிரசாத பக்குவமும், கோவிலுக்கு நீ செய்து கொண்டிருந்த தொண்டுகளும் எங்கள் ஆறு பேரையுமே கவர்ந்துவிட்டது. இத்தனை சின்ன வயதில் எத்தனை அர்ப்பணிப்பு உனக்கு, இது போன்றதொரு பெண்ணால் தான், அங்குள்ள சுகபோகங்களில் மயங்கித் தவிக்காமல், அங்கிருந்து கொண்டும் தாமரை இலை நீராகத் தன் சேவைகளைப் பெருமாளுக்குத் தொடந்து செய்யமுடியும் என்பது எங்களின் எண்ணம், எனவே தட்டாமல் எங்களுடன் புறப்படுமா என்றாள் மாமி.

மேலும் தொடர்ந்தார் மாமா. நீங்கள் இருவரும் வந்து அங்கு எங்களுடைய கோவில் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். அங்கு கோவில் பூஜை புனஸ்காரங்களை கோபாலனும், மடப்பள்ளி பொறுப்பை நீயும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அம்மா.

கொஞ்ச நாளில் உனக்குக் கீழே ஆட்கள் போட்டுவிடலாம். அங்கு வருபவர்களுக்கு இங்குள்ளது போல நீ ஸ்லோகங்கள் சொல்லித்தரலாம், கோலம் சொல்லித் தரலாம் உனக்கு என்ன தெரியுமோ எல்லாம் சொல்லித் தரலாம்; நந்தவனத்தை பராமரிக்கலாம், கோசாலையையும் பராமரிக்கலாம். இங்கு செய்யும் சேவைகளையே அங்கு வந்து செய்யுங்கள் என்று தான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

உங்கள் இருவருக்கும் தனித்தனியே சம்பளம் உண்டு. இருக்க வீடும் உணவும் உண்டு. கோவில் பிரஸாதங்களும் உண்டு. முதலில் சம்பளம் மட்டும் தருவோம், ஆனால் பிறகு கோவிலே உங்களுடையது ஆகும்; ஆனாலும் சம்பளம் எடுத்துக் கொள்ளலாம் என்றார். இவர்களுக்கு புரியவில்லை. அவரே தொடர்ந்தார். ஆமாம் நீங்கள் ஒரு வேளை, சிறிது காலத்துக்குப் பிறகு எங்களுக்கு வேலை போய்விட்டால் என்ன செய்வது என்று குழம்பக் கூடாது என்றுதான் இந்த ஏற்பாடு. அதாவது, இப்பொழுது கட்டியுள்ள கோவில் எங்களின் சொந்தக் கோவில். அதைக் கட்டும் பொழுதே, தனி மடப்பள்ளி, கூடவே 6 டபுள் பெட் ரூம் பிளாட்டுகளும் கட்டிவிட்டோம். அதில் ஒன்றில் நீங்கள் தங்கிக் கொள்ளலாம். அது கோவில் வளாகத்திலேயே உள்ளதால் உங்களுக்கு வந்து போவது சுலபம்.
தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 28, 2020 12:47 pm

நீங்கள் அங்கு வந்து உங்களுக்கு கிரீன் கார்டு கிடைத்ததும், இந்தக் கோவிலுக்கு நீங்களும் உரிமையாளர் அதாவது எங்கள் 6 பேருடன் நீங்கள் இருவரும் ஓனர். என்று ஆகும். அதை நாங்கள் இப்பொழுதே டாக்குமெண்ட்டில் போட்டு விடுவோம். எனவே எதிர் காலத்தைப் பற்றிக் கவலை இல்லாமல் கிளம்பலாம் நீங்கள் என்று சொன்னார்.


அங்கு கோவிலுக்குக் காலையில் வந்த அந்த இரண்டு அமெரிக்கர்களும் அதே எண்ணத்துடன் தான் எங்களை, உங்களிடம் பேசச் சொல்லி விட்டு சென்றார்கள். அவர்களுக்கு உங்களை மிகவும் பிடித்து விட்டது என்று சொன்னார். இவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தன் கணவனையும் மாமனாரையும் பார்த்து விழித்தாள். இதற்குள் ஜானகிக்கும் அவர்கள் சின்னவனைத் தான் கூப்பிடுகிறார்கள் என்று தெரிந்து போனது. சரி, யாருக்கு என்ன ப்ராப்தமோ அது தான் கிடைக்கும் என்று எண்ணினாள். இவர்கள் இருவரும் அங்கு சென்று நல்லபடிக்கு இருக்க வேண்டும் என்று பெருமாளை வேண்டிக் கொண்டாள்.


கோதைக்கு ‘சட்’ டென்று, தன் அப்பாவிடம் ஜோசியர் சொன்னது நினைவுக்கு உறைத்தது. “ஆனாலும் இவள் அமெரிக்காவில் செட்டில் ஆவாள்” என்று சொன்னார் அல்லவா அதற்கு அமெரிக்க மாப்பிள்ளையை பண்ணிக் கொள்ள வேண்டியது ஒன்றுதான் வழி என்று இல்லை, இங்கேயே கல்யாணம் பண்ணிக் கொண்டு, இங்கிருந்து அங்கு போய் பெருமாள் கைங்கர்யம் செய்ய முடியும். என்கிற வழி தங்களுக்குத் தோன்றாதது ஏன் என்று எண்ணினாள்.

அதே போல், அங்கு போய், ‘போக வாழ்வு’ தான் வாழ வேண்டும் என்ற அவசியமில்லை; அங்கு போயும் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய முடியும் என்று அவளுக்கு அப்போது தான் தெரிந்தது, மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள்.

இவள் இப்படி யோசனையில் இருந்த போதே பட்டர் மாமாவும், பெரிய பிள்ளை ராமனும், கோபாலனும் தங்களின் சம்மதத்தை தெரிவித்தார்கள். மாமியார் ராஜியும் ஜானகியும் கூட தங்களின் சம்மதத்தை தெரிவித்துவிட்டார்கள். இதைப் பார்த்த கோதையும் மிகவும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டாள். இந்த நேரம் அப்பா இங்கிருந்தால் எத்தனை எத்தனை சந்தோஷப் பட்டிருப்பார், கோவில் நடை சார்த்தியதும் வருகிறேன் என்று சொன்னவர்களை இன்னும் காணவில்லையே, இன்று கூட்டம் அதிகமோ என்று நினைத்தாள்.

அதே நேரம் வாசல் மணியை யாரோ அடித்தார்கள். யார் என்று பார்ப்பதற்காக எழுந்து போனாள்; பார்த்தால் வந்தது அப்பா அம்மா. அவளுக்கு மிகவும் சந்தோஷமாக போனது வாங்க வாங்க என்று சந்தோஷமாக கூப்பிட்டாள். என்ன இன்னைக்கு வரவேற்பெல்லாம் பலமாக இருக்கிறது அம்மா? என்று சிரித்தார் அப்பா. மேலும் தொடர்ந்து, இன்று உங்கள் மாமனார் மாமியார் திருமண நாள் அல்லவா அதுதான் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், பூஜை செய்து பிரசாதம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தார்கள்.

கோபாலனும் எழுந்து போய் வாங்கோ என்று வரவேற்றான். அவர்கள் உள்ளே வந்ததும், மிக நல்ல நேரத்தில் தான் வந்து இருக்கின்றீர்கள் என்று சொல்லி அவர்களை பட்டர் மாமாவும் வரவேற்றார். “இந்த என் ஆர் ஐ தம்பதிகள் உங்கள் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அமெரிக்கா கூப்பிட்டுக் கொண்டு போகிறார்கள் அங்கு கோவிலைப் பார்த்துக் கொள்ள வேண்டுமாம் அங்கு பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டுமாம் என்று சொன்னார்கள்” என்றார் பட்டர் மாமா.

சரி, அதற்கு நீங்கள் என்ன முடிவெடுத்தீர்கள் என்று கேட்டார் அப்பா. எங்கள் எல்லோருக்கும் இதில் பூரண சம்மதம். ஆனால் உங்களிடமும் ஒருவார்த்தை கேட்டுக்கொள்ள வேண்டும் என்று கோபாலன் நினைக்கிறான் என்று சொன்னார் அவர்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 28, 2020 12:48 pm

இவர் உடனே, ம்ம். எங்களுக்கு சம்மதம் இல்லையானால் இவர்களை இத்தனை தூரம் அனுப்புவேனா என்று எதிர் கேள்வி கேட்டார். அவர் என்ன சொல்கிறார் என்று யாருக்கும் புரியவில்லை. சிரித்துக் கொண்டே தன் பெண்ணைப் பார்த்து
என்னம்மா, “ அமெரிக்கா போகிறாயா என்று கேட்டார். அவள் உடனே மகிழ்ச்சியாக தலையை ஆட்ட, அது என்ன பெருமாள் என்றும் கேட்டு விட்டாயா? என்று கேட்டார் அப்பா இன்னும் இல்லை பெருமாள் கோயில் என்று மட்டுமே சொன்னார்கள் என்று சொன்னாள். ம்ம் அதையும் கேள் அம்மா என்றார் அப்பா.

இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று அவளுக்குப் பட்டது. அவள் அந்த அமெரிக்க மாமாவை, மாமா, அது என்ன பெருமாள் மாமா என்று கேட்டாள். அவர் சிரித்துக் கொண்டே, அதுவாம்மா, காளிங்க நர்த்தன கிருஷ்ணர் என்று சொன்னாரே பார்க்கணும். இவளால் நிற்கவே முடியவில்லை, அத்தனை இன்ப அதிர்ச்சி அது. ஆஹா, எந்த முகத்தை பார்த்து பார்த்து வளந்தேனோ அவர்க்கே அங்கே போய் சேவை செய்யப்போகிறேன். என்ன கருணை அப்பா உன் கருணை என்று மனம் புலம்பியது, கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது.

ஆமாம் அம்மா, இவர் நம் கிராமத்தை சேர்ந்தவர், வெகு காலத்துக்கு முன் அமெரிக்கா போய்விட்டார். அங்கு நம் கிருஷ்ணருக்கு கோவில் எழுப்ப வேண்டும் என்பது இவரின் அவா. அதனால், அச்சு அசல் நம் காளிங்க நர்தன கிருஷ்ணரைப் போலவே மூர்த்தி செய்து எடுத்துக் கொண்டு போனார். அப்போதே கேட்டார் பார்த்துக் கொள்ள நல்ல தம்பதிகள் வேண்டும் என்று….உனக்கு அப்பொழுது தான் கல்யாணம் ஆகி இருந்தாதா, அதனால் கோவில் கட்டுமான வேலைகள் முடியட்டும் பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று நான் தான் தடுத்து விட்டேன். இன்று மீண்டும் வந்து கேட்டார், நான் தான் இங்கு அனுப்பிவைத்தேன். அவருக்கும் உங்களைப் பிடிக்கவேண்டும், உங்களுக்கும் அங்கு போக விருப்பம் இருக்க வேண்டுமே என்றார் அப்பா.

இரு கண்களிலும் வந்த கண்ணீர் நிற்கவே இல்லை அவளுக்கு.
கையெடுத்து வணங்கினாள் தன் தந்தையை. கோபாலன் அருகில் வந்து, சரி சரி, எதுக்கு கலங்குகிறாய், நாம் போகலாம். என்று சொன்னான். எப்போதும் நாம் காணத்துடிக்கும் அதே பெருமாள், கைங்கர்யம் செய்து வந்த, செய்து கொண்டிருக்கும் அதே காளிங்க நர்த்தன பெருமாளை அங்கு போய் பார்க்க போகிறோம் அவருக்கு கைங்கர்யம் செய்யப் போகிறோம் என்று நினைத்து மிகவும் ஆனந்தப் பட்டாள்.

அப்பா அர்த்த புஷ்டியுடன் அவளைப் பார்த்தார்; அமெரிக்காவா, வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன உன்னையே எப்படி ஒப்புக்கொள்ள வைத்தான் பார்… இப்போது எப்படி ஒப்புக் கொண்டாய் பார்த்தாயா என்று சொல்வது போல இருந்தது அவரின் பார்வை. அமெரிக்கவிலும் இருந்து கொண்டு, ஆனால் உன்னுடைய அபிலாஷைகளுக்கும் நீ வாழ்ந்த வாழ்வுக்கும் ஒரு குறையும் இல்லாமல் எப்படி சாமர்த்தியமாய் உன்னை அங்கு அழைக்கிறான் பார்த்தாயா அம்மா என்று வாயால் கேட்டார். அதற்கான பதில் இவளிடம் இல்லாததால் பதில் பேசமுடியாதவள் ஆனாள். ஆனால் மனதில், அவன் சங்கல்ப்பம் யாருக்குத் தெரியும் என்று நினைத்துக் கொண்டாள். சந்தோஷமாக அப்பாவைப் பார்த்து சிரித்தாள், வானத்தை நோக்கி கைகளைக் குவித்தாள்.

அன்புடன்,
கிருஷ்ணாம்மா 😊



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2020 9:00 pm

பின்னூட்டம் எழுதுங்க ....... பின்னூட்டம் எழுதுங்க ............ பின்னூட்டம் எழுதுங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக