உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.by T.N.Balasubramanian Today at 22:30
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Today at 22:22
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Today at 22:08
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Today at 22:01
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Today at 21:56
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Today at 15:37
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Today at 15:22
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Today at 15:20
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 15:18
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 13:39
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Today at 1:26
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Today at 1:22
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Today at 1:17
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 19:37
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 16:48
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 16:47
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 14:46
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 10:30
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 8:10
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 8:07
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 8:03
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 15:22
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri 12 Aug 2022 - 14:50
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 13:50
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 12:04
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:57
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:33
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:31
» உலகநாதர்
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:24
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:21
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:20
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:17
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 11:16
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri 12 Aug 2022 - 7:15
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Fri 12 Aug 2022 - 1:24
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Fri 12 Aug 2022 - 1:21
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu 11 Aug 2022 - 19:55
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu 11 Aug 2022 - 19:53
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu 11 Aug 2022 - 19:51
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu 11 Aug 2022 - 17:30
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu 11 Aug 2022 - 17:11
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu 11 Aug 2022 - 17:10
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu 11 Aug 2022 - 17:09
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu 11 Aug 2022 - 17:07
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu 11 Aug 2022 - 17:06
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu 11 Aug 2022 - 17:04
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu 11 Aug 2022 - 17:02
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
Rajana3480 |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
| |||
lakshmi palani |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
2 posters
Page 1 of 2 • 1, 2 

நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
நிதர்சனம்!
டிவியைத் திருப்பிக் கொண்டே வந்தவள் இந்த சானலில் அப்படியே வைத்தாள். அதில் எழுத்தாளர் ஒருவர் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தார். என்ன தான் சொல்கிறார் கொஞ்சம் கேட்போமே என்று அப்படியே வைத்தாள் லலிதா.
“பெரும்பாலும் ஆணோ பெண்ணோ திருமணத்தை படிப்போ அல்லது வேலை விஷயத்திற்காக தள்ளிப் போடுவதை பார்க்கலாம். உங்கள் வீட்டில் அப்படியாரேனும் சொன்னால் கொஞ்சம் கவனியுங்கள் பெற்றவர்களே, என்று சிரிப்புடன் சொன்னார்.
தொடர்ந்து, ஏனென்றால் அவர்கள், சரியான வயதில் தனக்கான துணையை சேர்த்துக்கொண்டு இரண்டையும் ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் ஒன்றுக்கொன்று இடைஞ்சல் வராமல் அனுபவிக்கலாம்; தனது வேலைக்கோ அல்லது படிப்புக்கோ இது சரிப்பட்டு வராது எனில் டாடா சொல்லி விடை பெறலாம்; அனாவசிய தடங்கல்கள் இல்லை; எங்கிற எண்ணத்தில் அவர்கள் இருக்கக் கூடும். அதிர்ச்சி அடையாதீர்கள். நான் சொல்லும் இந்த வாழும் முறை கண்டிப்பாக பரவிக்கொண்டு இருக்கிறது…மேலும் பரவவும் செய்யும்.
இந்த கலாச்சாரம் பரவக்காரணம், திருமணத்தில் பிரிய நினைக்கும்போது அதற்கு தடை கற்களாக நிற்கும் சமுதாயமும், சட்டமும், விவாகரத்து ஆனவர் என்ற பட்டமும் தான். Living in இல் இத்தடைகள் எதுவும் இல்லை. பிரிய நினைத்தால் அடுத்த நிமிடம் புது மாப்பிள்ளை, புது பெண் தான். பிடிக்காதவர் கூட வாழ யாரும் நிர்பந்திக்க முடியாது இதில். ஆனால் என்ன, ஆண் எப்பொழுதுமே ஆண் தான், ஆனால் பெண்ணுக்கு???? ஏற்கனவே எத்தனை எத்தனை பெயர்கள் உண்டு???? அவர்கள் இந்தப் பெண்களுக்கு என்ன பெயர் வைப்பார்களோ?
இதில் நன்மை என்று எதுவும் எனக்குத் தோன்றவில்லை, தீமை என்று பார்த்தால், எந்த நம்பிக்கையில் வாழ்க்கை நகர்கிறது என்று அவர்களுக்கே தெரியாது. அங்கே உண்மையான காதலோ விட்டுக்கொடுத்தலோ இல்லை. வெறும் கொடுத்தல் எடுத்தல் உறவு மட்டுமே. எந்த நேரத்திலும் தன் துணை தன்னிடம் இருந்து விடை பெறலாம் என்றால் பிறகு என்ன வாழ்க்கை. அங்கே கண்டிப்பாக மிகுந்த மன உளைச்சலுக்கு இடம் உள்ளது.
எது எப்படியோ, அவர் விருப்பத்திற்கு வாழ்வது அவர் உரிமை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் யாரிடமும் நிலையாக இல்லாமல் பல பேருடன் வாழ்ந்து விட்டு, கடைசியில எல்லா உண்மையும் மறைத்து ஒரு அப்பாவி ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து அவர் வாழ்கையில் விளையாடாமல் இருந்தால் சரி. என்றார்.
அவரின் பேச்சைக் கேட்டவர்கள் எல்லோருமே சிரித்தர்கள். அவர் தொடர்ந்தார்…
இந்த முறையால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டி வரவேற்கலாம். ஆனால் பெண்களின் நிலை? இரண்டாவது ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்துவாழ முயற்சிப்பார்கள். அதுவும் தோல்வியடைந்தால் தனியாக வாழத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள் எழுதப்படாத நியதியாக தாயிடமே இருக்கும். அவர்களும் குழந்தையை வளர்த்துக்கொண்டு தங்கள் மிச்ச காலத்தை நகர்த்துவார்கள்.
தகப்பன் இல்லாத குழந்தைகளாக வளரும். நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் பொருளாதார ரீதியாக சிக்கல் இருக்காது. குறைந்த சம்பளம் அல்லது கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.
வெளி நாட்டில் இது போல் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் நாட்டுக்கு இது சரியான முறையாக இருக்கலாம். அவர்கள் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொண்டு இந்த முறையை பின்பற்றி முதலில் நட்பாக இருந்து பின்னர் சேர்நது வாழ்ந்து பின்னர் துணையாக்கிக் கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது மிகச் சிறந்த முறையாகவே தோன்றுகிறது. அப்படி இணைபவர்களால் காலம் முழுவதும் சந்தோஷமாக சேர்ந்துவாழ முடியும். நல்லமுறைதான் ஆனால் அது அவர்கள் நாட்டிற்கு மட்டும் பொருந்தும்.
மிருகங்களுக்குக்கூட இத்தகைய சட்டதிட்டங்கள் உண்டு தெரியுமோ?... ஒரு ஒழுங்கு உண்டு. அவற்றை அவை மீறுவது இல்லை பாருங்கள். பக்கத்துத் தெரு நாய் நம் தெருவில் நுழைந்துவிடட்டும் அவ்வளவுதான் இந்தியா பாகிஸ்தான் வார்தான் நடக்கும். அது போல் அது அவர்கள் நாட்டுக் கலாசாரம், இது நம் நாட்டு கலாசாரம்.
அவர் பேச்சை மேலும் கேட்க முடியவில்லை அவளால், அதற்குள் ஒரு போன் வந்து விட்டது. டிவி இன் சத்தத்தைக் குறைத்துவிட்டு பேசினாள். ஏதோ விளம்பர கால். சே ! என்று சொல்லிவிட்டு டிவி பேச்சைக் கேட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க சானலை மாற்றினாள். ஏதோ ஆர்வமாகக் கேட்கப் போய் இப்படியெல்லாம் நடக்குமா என்று பதட்டப்பட்டாள். அவளுக்கும் 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்களே, பின் பதட்டம் வராதா என்ன?
தொடரும்....
டிவியைத் திருப்பிக் கொண்டே வந்தவள் இந்த சானலில் அப்படியே வைத்தாள். அதில் எழுத்தாளர் ஒருவர் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தார். என்ன தான் சொல்கிறார் கொஞ்சம் கேட்போமே என்று அப்படியே வைத்தாள் லலிதா.
“பெரும்பாலும் ஆணோ பெண்ணோ திருமணத்தை படிப்போ அல்லது வேலை விஷயத்திற்காக தள்ளிப் போடுவதை பார்க்கலாம். உங்கள் வீட்டில் அப்படியாரேனும் சொன்னால் கொஞ்சம் கவனியுங்கள் பெற்றவர்களே, என்று சிரிப்புடன் சொன்னார்.
தொடர்ந்து, ஏனென்றால் அவர்கள், சரியான வயதில் தனக்கான துணையை சேர்த்துக்கொண்டு இரண்டையும் ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் ஒன்றுக்கொன்று இடைஞ்சல் வராமல் அனுபவிக்கலாம்; தனது வேலைக்கோ அல்லது படிப்புக்கோ இது சரிப்பட்டு வராது எனில் டாடா சொல்லி விடை பெறலாம்; அனாவசிய தடங்கல்கள் இல்லை; எங்கிற எண்ணத்தில் அவர்கள் இருக்கக் கூடும். அதிர்ச்சி அடையாதீர்கள். நான் சொல்லும் இந்த வாழும் முறை கண்டிப்பாக பரவிக்கொண்டு இருக்கிறது…மேலும் பரவவும் செய்யும்.
இந்த கலாச்சாரம் பரவக்காரணம், திருமணத்தில் பிரிய நினைக்கும்போது அதற்கு தடை கற்களாக நிற்கும் சமுதாயமும், சட்டமும், விவாகரத்து ஆனவர் என்ற பட்டமும் தான். Living in இல் இத்தடைகள் எதுவும் இல்லை. பிரிய நினைத்தால் அடுத்த நிமிடம் புது மாப்பிள்ளை, புது பெண் தான். பிடிக்காதவர் கூட வாழ யாரும் நிர்பந்திக்க முடியாது இதில். ஆனால் என்ன, ஆண் எப்பொழுதுமே ஆண் தான், ஆனால் பெண்ணுக்கு???? ஏற்கனவே எத்தனை எத்தனை பெயர்கள் உண்டு???? அவர்கள் இந்தப் பெண்களுக்கு என்ன பெயர் வைப்பார்களோ?
இதில் நன்மை என்று எதுவும் எனக்குத் தோன்றவில்லை, தீமை என்று பார்த்தால், எந்த நம்பிக்கையில் வாழ்க்கை நகர்கிறது என்று அவர்களுக்கே தெரியாது. அங்கே உண்மையான காதலோ விட்டுக்கொடுத்தலோ இல்லை. வெறும் கொடுத்தல் எடுத்தல் உறவு மட்டுமே. எந்த நேரத்திலும் தன் துணை தன்னிடம் இருந்து விடை பெறலாம் என்றால் பிறகு என்ன வாழ்க்கை. அங்கே கண்டிப்பாக மிகுந்த மன உளைச்சலுக்கு இடம் உள்ளது.
எது எப்படியோ, அவர் விருப்பத்திற்கு வாழ்வது அவர் உரிமை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் யாரிடமும் நிலையாக இல்லாமல் பல பேருடன் வாழ்ந்து விட்டு, கடைசியில எல்லா உண்மையும் மறைத்து ஒரு அப்பாவி ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து அவர் வாழ்கையில் விளையாடாமல் இருந்தால் சரி. என்றார்.
அவரின் பேச்சைக் கேட்டவர்கள் எல்லோருமே சிரித்தர்கள். அவர் தொடர்ந்தார்…
இந்த முறையால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டி வரவேற்கலாம். ஆனால் பெண்களின் நிலை? இரண்டாவது ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்துவாழ முயற்சிப்பார்கள். அதுவும் தோல்வியடைந்தால் தனியாக வாழத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள் எழுதப்படாத நியதியாக தாயிடமே இருக்கும். அவர்களும் குழந்தையை வளர்த்துக்கொண்டு தங்கள் மிச்ச காலத்தை நகர்த்துவார்கள்.
தகப்பன் இல்லாத குழந்தைகளாக வளரும். நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் பொருளாதார ரீதியாக சிக்கல் இருக்காது. குறைந்த சம்பளம் அல்லது கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.
வெளி நாட்டில் இது போல் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் நாட்டுக்கு இது சரியான முறையாக இருக்கலாம். அவர்கள் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொண்டு இந்த முறையை பின்பற்றி முதலில் நட்பாக இருந்து பின்னர் சேர்நது வாழ்ந்து பின்னர் துணையாக்கிக் கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது மிகச் சிறந்த முறையாகவே தோன்றுகிறது. அப்படி இணைபவர்களால் காலம் முழுவதும் சந்தோஷமாக சேர்ந்துவாழ முடியும். நல்லமுறைதான் ஆனால் அது அவர்கள் நாட்டிற்கு மட்டும் பொருந்தும்.
மிருகங்களுக்குக்கூட இத்தகைய சட்டதிட்டங்கள் உண்டு தெரியுமோ?... ஒரு ஒழுங்கு உண்டு. அவற்றை அவை மீறுவது இல்லை பாருங்கள். பக்கத்துத் தெரு நாய் நம் தெருவில் நுழைந்துவிடட்டும் அவ்வளவுதான் இந்தியா பாகிஸ்தான் வார்தான் நடக்கும். அது போல் அது அவர்கள் நாட்டுக் கலாசாரம், இது நம் நாட்டு கலாசாரம்.
அவர் பேச்சை மேலும் கேட்க முடியவில்லை அவளால், அதற்குள் ஒரு போன் வந்து விட்டது. டிவி இன் சத்தத்தைக் குறைத்துவிட்டு பேசினாள். ஏதோ விளம்பர கால். சே ! என்று சொல்லிவிட்டு டிவி பேச்சைக் கேட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க சானலை மாற்றினாள். ஏதோ ஆர்வமாகக் கேட்கப் போய் இப்படியெல்லாம் நடக்குமா என்று பதட்டப்பட்டாள். அவளுக்கும் 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்களே, பின் பதட்டம் வராதா என்ன?
தொடரும்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
முழுவதுமாக எல்லா சானல்களையும் ஒர் சுற்று சுற்றி வந்தாள். இந்த சானல் வந்ததும் அனிச்கையாக மீண்டும் நிறுத்தி, அவரின் பேச்சை கேட்கலானாள். ஆம் அவர் இன்னும் பேசிக்கொண்டிருந்தார்.
இப்போதெல்லாம் பெண்கள் இதற்கெல்லாம் அச்சமடைவதில்லை. அறிவு வளர வளர, அன்பின் தன்மை குறையும்..அது தான் இயல்பு.அறிவு என்று நான் இங்கு குறிப்பிடுவது, knowledge (accumulation of information) இவ்விதமான அறிவுப் பசியோடு தான் உலகம் போய் கொண்டிருக்கிறது. அறிவு சேர சேர துணிவும், தன்னம்பிக்கையும் மேலோங்குகிறது. இவ்விரண்டும் மேலோங்கினால், தனித்துவம் மேலோங்குகிறது. தனித்துவம் மேலோங்கினால், மற்றவரிடம் இயைந்து போவது என்பது முடியாத காரியம் ஆகிறது.
நான், என் வாழ்க்கை, என் நலம் இவற்றிற்கு முன்னுரிமை தந்து, பிறர் நலம், பிறர் வாழ்க்கை என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இதில் பிறர் என்பது சொந்த அப்பா அம்மா, கூடப் பிறந்தவர்கள் என எல்லோரும் தான். ஆண் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை மாறி, இப்போது பெண்களும், சரி நிகர் சமானம் என்ற நிலையில், தனித்துவம் என்பது அவர்களையும் விட்டு வைக்கவில்லை.
நான் இப்படிச் சொல்வதால், பெண்ணை குற்றம் சொல்கிறேன் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளாதீர்கள். முன்பு போல், ஆணுக்கு கீழே அடங்கி இருந்த காலத்தில், ஒரு கை ஓசை போல, பிரச்சனை என்று வரும் போது, ஆணின் கை மேலோங்கியும், பெண் என்பவள் அதற்கு, அடங்கிப் போவதும் நடக்க ஏதுவாயிற்று. அதனால், குடும்பத்தில், சண்டை, சச்சரவு என்று வந்தாலும், ஒருவர் மட்டுமே அதை பெரிது படுத்திக் கொண்டிருப்பார்.மற்றொருவர், தழைந்து போயிருப்பார். ஒருமுறை இவர் தழைந்து போவார் மறுமுறை அவர் தழைந்து போவார்.
அதனால், மனஸ்தாபம் இருந்தாலும் , எப்படியும், ஆணைச் சார்ந்து தான் பெண் இருக்க வேண்டும் , ஆதலால், விவாகரத்து என்பது மட்டுப்பட்டிருந்தது.இப்போது, இருவருமே கோல் எடுக்கிறார்கள். ஆட குரங்காக யாருமே இல்லை என்பது தான் பிரச்சனையே. வாழ்க்கையை சகிப்புத்தன்மையோடு ஓட்டத் தெரியவில்லை. இம்மாதிரியான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இல்லாமல் வாழ ஆசைப்படும், பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கும் ஆண் பெண் நிறைய பேர்.
தங்கள் வாழ்க்கையில் தங்கள் பெற்றோர்கள், தங்கை, அக்கா, அண்ணண் என்று அவர்கள் வாழும் வாழ்கையை பார்த்து இப்படியெல்லாம் சகித்துக் கொண்டு அவனோடோ, அவளோடோ வாழ்ந்துதான் ஆக வேண்டுமா என்று பயந்து போனவர்கள் என்றே நினைக்கிறேன். எதற்கடா வம்பு, இப்படியே இருந்துவிட்டுப் போகலாம் என்று எண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள். அது ஆபத்து என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
ஆனால் பாருங்கள், அதிலும் இவர்களுக்குள் என்ன ஒரு திருட்டுத்தனம் இருக்கிறது. வீடு பார்க்கும் போதோ வெளியே செல்லும்போதோ அல்லது தங்கள் குடும்பத்துகேவோ இது தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். , தமது இணையின் பெயரையோ ஊரையோ சொல்ல மறுக்கிறார்கள். அண்மையில் இந்த மாதிரியான வாழ்க்கை நடத்தும் சிலருடனான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன்.
சொல்லி வைத்தமாதிரி அவர்களிடையேயும் தமது வாழ்க்கை இதுதான் என்று சொல்ல முடிகிறது ஆனால் பெயரை வெளியிட மறுக்கிறார்கள். அனைவரும் மேஜராகிவிட்டதால் அது தமது உரிமை என்கிறார்கள். சரி, உரிமை என்றே வைத்துக் கொள்ளுங்கள், ஆசைப்பட்டுதானே வாழ்கிறீர்கள்?.. அபோழுது தாராளமாக வெளியில் சொல்லிக் கொள்ளலாமே.. அது ஏன் முடியவில்லை உங்களால்?.. ஸோ, ஏதோ அதில் விரும்பத்தகாத ஒன்று உள்ளது என்று தானே அர்த்தம்?...
முடிவாக ஒன்று சொல்கிறேன், ஒரு பழமொழி உண்டு. முள் சேலையில் விழுந்தாலும் சேலை முள்ளில் விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான் என்று. இங்கு சேலை என்பது யாரைக் குறிக்கும். முள் என்பது யாரைக் குறிக்கும் என்று விளங்கியிருக்கும். பார்த்து நடந்து கொள்ளுங்கள், என்று அவர் தன் உரையை முடித்துக் கொண்டார்.
இந்த முறை வாசலில் யாரோ கூப்பிடும் ஒலி கேட்கவே, டிவியை அணைத்து விட்டு வாசலுக்கு விரைந்தாள் லலிதா.
தொடரும்.....
இப்போதெல்லாம் பெண்கள் இதற்கெல்லாம் அச்சமடைவதில்லை. அறிவு வளர வளர, அன்பின் தன்மை குறையும்..அது தான் இயல்பு.அறிவு என்று நான் இங்கு குறிப்பிடுவது, knowledge (accumulation of information) இவ்விதமான அறிவுப் பசியோடு தான் உலகம் போய் கொண்டிருக்கிறது. அறிவு சேர சேர துணிவும், தன்னம்பிக்கையும் மேலோங்குகிறது. இவ்விரண்டும் மேலோங்கினால், தனித்துவம் மேலோங்குகிறது. தனித்துவம் மேலோங்கினால், மற்றவரிடம் இயைந்து போவது என்பது முடியாத காரியம் ஆகிறது.
நான், என் வாழ்க்கை, என் நலம் இவற்றிற்கு முன்னுரிமை தந்து, பிறர் நலம், பிறர் வாழ்க்கை என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இதில் பிறர் என்பது சொந்த அப்பா அம்மா, கூடப் பிறந்தவர்கள் என எல்லோரும் தான். ஆண் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை மாறி, இப்போது பெண்களும், சரி நிகர் சமானம் என்ற நிலையில், தனித்துவம் என்பது அவர்களையும் விட்டு வைக்கவில்லை.
நான் இப்படிச் சொல்வதால், பெண்ணை குற்றம் சொல்கிறேன் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளாதீர்கள். முன்பு போல், ஆணுக்கு கீழே அடங்கி இருந்த காலத்தில், ஒரு கை ஓசை போல, பிரச்சனை என்று வரும் போது, ஆணின் கை மேலோங்கியும், பெண் என்பவள் அதற்கு, அடங்கிப் போவதும் நடக்க ஏதுவாயிற்று. அதனால், குடும்பத்தில், சண்டை, சச்சரவு என்று வந்தாலும், ஒருவர் மட்டுமே அதை பெரிது படுத்திக் கொண்டிருப்பார்.மற்றொருவர், தழைந்து போயிருப்பார். ஒருமுறை இவர் தழைந்து போவார் மறுமுறை அவர் தழைந்து போவார்.
அதனால், மனஸ்தாபம் இருந்தாலும் , எப்படியும், ஆணைச் சார்ந்து தான் பெண் இருக்க வேண்டும் , ஆதலால், விவாகரத்து என்பது மட்டுப்பட்டிருந்தது.இப்போது, இருவருமே கோல் எடுக்கிறார்கள். ஆட குரங்காக யாருமே இல்லை என்பது தான் பிரச்சனையே. வாழ்க்கையை சகிப்புத்தன்மையோடு ஓட்டத் தெரியவில்லை. இம்மாதிரியான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இல்லாமல் வாழ ஆசைப்படும், பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கும் ஆண் பெண் நிறைய பேர்.
தங்கள் வாழ்க்கையில் தங்கள் பெற்றோர்கள், தங்கை, அக்கா, அண்ணண் என்று அவர்கள் வாழும் வாழ்கையை பார்த்து இப்படியெல்லாம் சகித்துக் கொண்டு அவனோடோ, அவளோடோ வாழ்ந்துதான் ஆக வேண்டுமா என்று பயந்து போனவர்கள் என்றே நினைக்கிறேன். எதற்கடா வம்பு, இப்படியே இருந்துவிட்டுப் போகலாம் என்று எண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள். அது ஆபத்து என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
ஆனால் பாருங்கள், அதிலும் இவர்களுக்குள் என்ன ஒரு திருட்டுத்தனம் இருக்கிறது. வீடு பார்க்கும் போதோ வெளியே செல்லும்போதோ அல்லது தங்கள் குடும்பத்துகேவோ இது தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். , தமது இணையின் பெயரையோ ஊரையோ சொல்ல மறுக்கிறார்கள். அண்மையில் இந்த மாதிரியான வாழ்க்கை நடத்தும் சிலருடனான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன்.
சொல்லி வைத்தமாதிரி அவர்களிடையேயும் தமது வாழ்க்கை இதுதான் என்று சொல்ல முடிகிறது ஆனால் பெயரை வெளியிட மறுக்கிறார்கள். அனைவரும் மேஜராகிவிட்டதால் அது தமது உரிமை என்கிறார்கள். சரி, உரிமை என்றே வைத்துக் கொள்ளுங்கள், ஆசைப்பட்டுதானே வாழ்கிறீர்கள்?.. அபோழுது தாராளமாக வெளியில் சொல்லிக் கொள்ளலாமே.. அது ஏன் முடியவில்லை உங்களால்?.. ஸோ, ஏதோ அதில் விரும்பத்தகாத ஒன்று உள்ளது என்று தானே அர்த்தம்?...
முடிவாக ஒன்று சொல்கிறேன், ஒரு பழமொழி உண்டு. முள் சேலையில் விழுந்தாலும் சேலை முள்ளில் விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான் என்று. இங்கு சேலை என்பது யாரைக் குறிக்கும். முள் என்பது யாரைக் குறிக்கும் என்று விளங்கியிருக்கும். பார்த்து நடந்து கொள்ளுங்கள், என்று அவர் தன் உரையை முடித்துக் கொண்டார்.
இந்த முறை வாசலில் யாரோ கூப்பிடும் ஒலி கேட்கவே, டிவியை அணைத்து விட்டு வாசலுக்கு விரைந்தாள் லலிதா.
தொடரும்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
கதை படிக்க ஆர்வத்தை தூண்டுகிரது கிரிஷ்னாம்மா. தொடரட்டும். நன்றி.
lakshmi palani- பண்பாளர்
- பதிவுகள் : 88
இணைந்தது : 21/10/2018
மதிப்பீடுகள் : 28
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1333570lakshmi palani wrote:கதை படிக்க ஆர்வத்தை தூண்டுகிரது கிரிஷ்னாம்மா. தொடரட்டும். நன்றி.
நன்றி லக்ஷ்மி, இதோ தொடருகிறேன்....


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
லலிதா ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். அவளுடைய கணவர் ஒரு தனியார் கம்பெனியில் நல்ல உத்யோகத்தில் இருக்கிறார். அவர்களுக்கு மணி மணியாக 3 பெண்
குழந்தைகளும் ஆசை ஆசையாகப் பெற்ற ஒரு ஆண் குழந்தையும் உண்டு.
லலிதா மிக அழகி. நல்ல சிவப்பு. ஆனால் அவள் கணவர் பத்மனாபன் நல்ல
கறுப்பு. பெண்பார்த்துத்தான் கல்யாணம் நடந்தது அவர்களுக்கு.
இருவருக்கும் ஒருவரை ஒருவருக்குப் பிடித்திருந்தது, கல்யாணத்துக்கு
சம்மதித்தார்கள், கல்யாணமும் செய்து கொண்டார்கள். ஆனால், இவர்களைப்
பார்ப்பவர்கள் ஆளாளுக்கு கமெண்ட் அடிப்பார்கள்.
அரிசியும் எள்ளும் கலந்தது போல இருக்கிறார்கள், காக்காய் எலுமிச்சையை
தூக்கிக் கொண்டுவந்து விட்டது… இது போல் நிறைய.. ஆனால் அவைகள்
இவர்களைப் பாதித்தது இல்லை.
முதல் பெண் கிருஷ்ணா, அப்பாவைப் போல கருப்பு…இரண்டாவது பெண்
ரோஷனிமிக அழகு அம்மாவைப் போல. மூன்றாமவள் ஹரிணி மாநிறம்.
முதல் பெண் டீச்சர் வேலை பார்க்கிறாள். அடுத்தவள் ஐடி கம்பெனி இல்
தில்லி இல் வேலைக்கு சேரப்போகிறாள். அடுத்தவள் டிகிரி முதலாம் ஆண்டு
படிக்கிறாள். அவர்களின் ஆசை மகன் மகேஷ் +2 படிக்கிறான். அமைதியான
அன்பான குடும்பம்.
லலிதா கொஞ்சம் கண்டிப்பான பேர்வழி. அனாவசியமாக யாருடனும் பேச்சு
வைத்துக் கொள்ள மாட்டாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்கிற
டைப். தன் பெண்களையும் அப்படியே வளர்த்தாள். அனாவசியமாக ஊர்
சுற்றுவது, போனில் அரட்டை அடிப்பது எல்லாம் கிடையாது.
பத்மனாபனும் தன் ஒய்வு நேரங்களைத் தன் குடும்பத்துடன் மட்டுமே
செலவழிப்பார். எந்த கெட்ட பழக்கமும் இல்லதவர். குடும்பத்தை விட்டு
யாரும் தனியாக எங்கும் சென்றதில்லை, தங்கியதில்லை. இந்த நிலமையில்
தான் ரோஷனிக்கு தில்லிக்கு போஸ்டிங்க் வந்துள்ளது.
அது தான் இவர்களின் பெரும் கவலை இப்போழுது. வந்த வேலையை எப்படி
வேண்டாம் என்று சொல்வது?.. யாரைப் பார்த்தாவது இதே ஊருக்கு அந்த
வேலையை வாங்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவளோ தில்லி
போகத் துடிக்கிறாள். ‘3 மாதம் டிரெய்னிங்க் முடிந்ததும் போஸ்டிங் வேறு
இடத்திற்கு கிடைக்க வாய்ப்பு உண்டுமா, ப்ளீஸ், 3 மாதங்கள் தானே, நான்
போகிறேன் அம்மா “ என்று நச்சரிக்கிறாள்.
இந்த நிலமை இல் தான் லலிதா அந்த டிவி நிகழ்ச்சியைப் பார்த்தாள்
பதட்டப்பட்டாள். என்றாலும் யாரிடமும் எதுவும் அது பற்றிப் பேச்சே
எடுக்கவில்லை அவள். நம் வளர்ப்பு அப்படியெல்லம் போகாது என்று
நம்பினாள்.
பத்மனாபனும், அவள் போகட்டும் லலிதா, என்றாவது ஒரு நாள் நாம்
பெண்குழந்தைகளை விட்டுப் பிரியத்தானே வேண்டும், அதற்கு இது ஒரு
ஒத்திகையாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று சம்மதித்தார்.
இப்படியாக ரோஷனி தில்லி கிளம்பினாள். இவளுடன், தில்லி செல்லும்
அவளின் இரண்டு தோழிகளும் இருந்தது, பெற்றவர்களுக்கு நிம்மதியாக
இருந்தது. அவர்களில் ஒருத்திக்கு தெரிந்தவர் ஒருவர் மூலம் ஒரு PG இல் தங்க
ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
ரயில் வண்டி இல் ஏறினதுமே இவளுக்கு ஏதோ ஜெயிலில் இருந்து வெளியே
வந்து சுதந்திர வானில் பறப்பது போல இருந்தது. எல்லாமே மிக அழகாக
இருப்பது போலப் பட்டது. காற்றை இழுத்து முழுவதுமாக சுவாசித்தாள்.
தேவை இல்லாமல் சிரித்தாள். ரயிலடில் கூட அவள் குடும்பத்தார்தான்
கண்களில் நீர் கோர்க்க நின்றிருந்தார்கள். இவள் மிகவும் சந்தோஷமாகவே
கிளம்பினாள்.
தோழிகள் இருவரும் இவளைப்பர்த்து சிரித்தனர். என்னடி என்னப் பார்த்தால்
லூஸு போலத்தெரிகிறதா? என்றாள் இவள். அதற்கு அவள் லூஸு போல
இல்லை நீ லூஸேதான் என்றாள்.. இவள் உடனே, இல்லடி இது நாள் வரை
நாங்கள் யாரும் ஒருவரை ஒருவர் விட்டு வெளியே போனது இல்லை, மிகவும்
கட்டுப்பாடு என்று சொல்ல முடியாவிட்டலும், எதோ ஒரு விதத்தில் நம் மீது
அவர்களின் கண்கள் இருப்பதாகவே பட்டது. இப்பொழுது அது இல்லாதது
போல இருக்கிறதா, அந்த அனுபவம் மிகவும் இனிமையாக இருக்கிறது
அவ்வளவுதான் என்றாள்.
ஏற்பாடு செய்திருந்த PG போய் சேர்ந்தார்கள். அங்கு அத்தனை வசதிகள்
இல்லை என்றாலும், முதலில் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டுமே என்று
ஒப்புக் கொண்டார்கள். மூவரும் ஒன்றாக வந்தாலும் வேறு வேறு
அலுவலகத்திற்கு போக வேண்டியவர்கள்.
தொடரும்.....
குழந்தைகளும் ஆசை ஆசையாகப் பெற்ற ஒரு ஆண் குழந்தையும் உண்டு.
லலிதா மிக அழகி. நல்ல சிவப்பு. ஆனால் அவள் கணவர் பத்மனாபன் நல்ல
கறுப்பு. பெண்பார்த்துத்தான் கல்யாணம் நடந்தது அவர்களுக்கு.
இருவருக்கும் ஒருவரை ஒருவருக்குப் பிடித்திருந்தது, கல்யாணத்துக்கு
சம்மதித்தார்கள், கல்யாணமும் செய்து கொண்டார்கள். ஆனால், இவர்களைப்
பார்ப்பவர்கள் ஆளாளுக்கு கமெண்ட் அடிப்பார்கள்.
அரிசியும் எள்ளும் கலந்தது போல இருக்கிறார்கள், காக்காய் எலுமிச்சையை
தூக்கிக் கொண்டுவந்து விட்டது… இது போல் நிறைய.. ஆனால் அவைகள்
இவர்களைப் பாதித்தது இல்லை.
முதல் பெண் கிருஷ்ணா, அப்பாவைப் போல கருப்பு…இரண்டாவது பெண்
ரோஷனிமிக அழகு அம்மாவைப் போல. மூன்றாமவள் ஹரிணி மாநிறம்.
முதல் பெண் டீச்சர் வேலை பார்க்கிறாள். அடுத்தவள் ஐடி கம்பெனி இல்
தில்லி இல் வேலைக்கு சேரப்போகிறாள். அடுத்தவள் டிகிரி முதலாம் ஆண்டு
படிக்கிறாள். அவர்களின் ஆசை மகன் மகேஷ் +2 படிக்கிறான். அமைதியான
அன்பான குடும்பம்.
லலிதா கொஞ்சம் கண்டிப்பான பேர்வழி. அனாவசியமாக யாருடனும் பேச்சு
வைத்துக் கொள்ள மாட்டாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்கிற
டைப். தன் பெண்களையும் அப்படியே வளர்த்தாள். அனாவசியமாக ஊர்
சுற்றுவது, போனில் அரட்டை அடிப்பது எல்லாம் கிடையாது.
பத்மனாபனும் தன் ஒய்வு நேரங்களைத் தன் குடும்பத்துடன் மட்டுமே
செலவழிப்பார். எந்த கெட்ட பழக்கமும் இல்லதவர். குடும்பத்தை விட்டு
யாரும் தனியாக எங்கும் சென்றதில்லை, தங்கியதில்லை. இந்த நிலமையில்
தான் ரோஷனிக்கு தில்லிக்கு போஸ்டிங்க் வந்துள்ளது.
அது தான் இவர்களின் பெரும் கவலை இப்போழுது. வந்த வேலையை எப்படி
வேண்டாம் என்று சொல்வது?.. யாரைப் பார்த்தாவது இதே ஊருக்கு அந்த
வேலையை வாங்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவளோ தில்லி
போகத் துடிக்கிறாள். ‘3 மாதம் டிரெய்னிங்க் முடிந்ததும் போஸ்டிங் வேறு
இடத்திற்கு கிடைக்க வாய்ப்பு உண்டுமா, ப்ளீஸ், 3 மாதங்கள் தானே, நான்
போகிறேன் அம்மா “ என்று நச்சரிக்கிறாள்.
இந்த நிலமை இல் தான் லலிதா அந்த டிவி நிகழ்ச்சியைப் பார்த்தாள்
பதட்டப்பட்டாள். என்றாலும் யாரிடமும் எதுவும் அது பற்றிப் பேச்சே
எடுக்கவில்லை அவள். நம் வளர்ப்பு அப்படியெல்லம் போகாது என்று
நம்பினாள்.
பத்மனாபனும், அவள் போகட்டும் லலிதா, என்றாவது ஒரு நாள் நாம்
பெண்குழந்தைகளை விட்டுப் பிரியத்தானே வேண்டும், அதற்கு இது ஒரு
ஒத்திகையாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று சம்மதித்தார்.
இப்படியாக ரோஷனி தில்லி கிளம்பினாள். இவளுடன், தில்லி செல்லும்
அவளின் இரண்டு தோழிகளும் இருந்தது, பெற்றவர்களுக்கு நிம்மதியாக
இருந்தது. அவர்களில் ஒருத்திக்கு தெரிந்தவர் ஒருவர் மூலம் ஒரு PG இல் தங்க
ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
ரயில் வண்டி இல் ஏறினதுமே இவளுக்கு ஏதோ ஜெயிலில் இருந்து வெளியே
வந்து சுதந்திர வானில் பறப்பது போல இருந்தது. எல்லாமே மிக அழகாக
இருப்பது போலப் பட்டது. காற்றை இழுத்து முழுவதுமாக சுவாசித்தாள்.
தேவை இல்லாமல் சிரித்தாள். ரயிலடில் கூட அவள் குடும்பத்தார்தான்
கண்களில் நீர் கோர்க்க நின்றிருந்தார்கள். இவள் மிகவும் சந்தோஷமாகவே
கிளம்பினாள்.
தோழிகள் இருவரும் இவளைப்பர்த்து சிரித்தனர். என்னடி என்னப் பார்த்தால்
லூஸு போலத்தெரிகிறதா? என்றாள் இவள். அதற்கு அவள் லூஸு போல
இல்லை நீ லூஸேதான் என்றாள்.. இவள் உடனே, இல்லடி இது நாள் வரை
நாங்கள் யாரும் ஒருவரை ஒருவர் விட்டு வெளியே போனது இல்லை, மிகவும்
கட்டுப்பாடு என்று சொல்ல முடியாவிட்டலும், எதோ ஒரு விதத்தில் நம் மீது
அவர்களின் கண்கள் இருப்பதாகவே பட்டது. இப்பொழுது அது இல்லாதது
போல இருக்கிறதா, அந்த அனுபவம் மிகவும் இனிமையாக இருக்கிறது
அவ்வளவுதான் என்றாள்.
ஏற்பாடு செய்திருந்த PG போய் சேர்ந்தார்கள். அங்கு அத்தனை வசதிகள்
இல்லை என்றாலும், முதலில் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டுமே என்று
ஒப்புக் கொண்டார்கள். மூவரும் ஒன்றாக வந்தாலும் வேறு வேறு
அலுவலகத்திற்கு போக வேண்டியவர்கள்.
தொடரும்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
முதல் முதலாக அந்த பள பளப்பான பெரிய கட்டிடத்தில் காலடி
எடுத்துவைக்கும்போதே இனம் புரியாத சந்தோஷம் வந்தது அவளுக்கு. இனி
இங்கு தான் வேலை செய்யப் போகிறோம் என்கிற நினைவே அவள்
மகிழ்வுக்கு காரணம். இந்த ஆபீஸ் எப்படி இருக்குமோ, கூட வேலை
செய்பவர்கள் எப்படி இருப்பர்களோ என்கிற இயல்பான 'பட பட' ப்பு
அவளுள் இருந்தது. என்றாலும், அதை மீறிய ஒரு சந்தோஷம் இருந்தது
அவளுக்கு. நேரே மானேஜர் அறைக்கு சென்று தன் appointment ஆர்டர் ஐக்
காட்டினாள். அவரும் பெற்றுகொண்டு அவளை டீம் லீடர் க்கு அறிமுகப்
படுத்தி வைத்தார்.
அவனைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது இவளுக்கு. மிகவும்
கண்ணியமானவனாகத் தெரிந்தான். தன் பெயர் சாந்தகுமார் என்று அறிமுகம்
செய்து கொண்டான். இவளும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
அவன் பெயரைக் கேட்டதுமே, அவன் தமிழ் நாட்டை சேர்ந்தவன் என்று
புரிந்துகொண்டாள். ஆனால் அவன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினான். மிக
அழகான ஆங்கிலத்தில் இவளுடைய வேலைகள் என்னவென்று சொல்லி
கொடுத்தான். இவள் அவனுடன் பேச முயற்சித்து, அவனை சார் என்று
கூப்பிட்ட பொழுது தன்னை பேர் சொல்லிக் கூப்பிடும்படி சொன்னான்.
இன்றய கால கட்டத்தில் இது தான் வழக்கம் என்றும் சொன்னான்.
இவளுடன் அன்று மேலும் மூன்று பேர் புதியவர்கள் வந்திருந்தார்கள்
அவர்கள் மூவரும் ஆண்கள் வேறுவேறு மாநிலத்தவர்கள், அவர்கள் மூவருமே
ஆங்கிலத்திலேயே பேசினார்கள் அதனால் அவளால் சாந்தகுமார் இடம்
தமிழில் எதுவும் பேச முடியவில்லை. சரி உணவு இடைவேளையின் போது
பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள்.
இவளுக்கு அன்று காலை பிஜியிலிருந்து கிளம்பும் பொழுதே
கையிலேயே மதிய உணவுக்காக, சப்பாத்தியும் சப்ஜியும்
கொடுத்திருந்தார்கள். இரவும் அங்கு சப்பாத்தி சப்ஜி கிடைக்கும் என்று
சொன்னார்கள்.
அவளின் பிஜி யைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும். அங்கு
தினமும் வேறு வேறு காலை உணவு கொடுப்பார்களாம். போஹா என்று
சொல்லப்படும் அவல் உப்புமா, பிரட் சாண்ட்விச் மற்றும் பல பழங்கள் கலந்த
ஓட்ஸ் உணவு, தோசை, இட்லி என்று தினமும் ஒரு வகை தருவார்களாம்.
மதிய உணவிற்காக கையில் கட்டிக் கொடுத்து விடுவார்களாம். இரவும்
சப்பாத்தி சப்ஜி தான்.
எப்பொழுதாவது ஒரு வேளை உணவு வேண்டாம் என்றாலும் முன்பே
சொல்லிவிடலாமாம். இவை எல்லாமே அவளுக்கு புதியதாக இருந்தாலும்
பழகிக்கொள்ளத்தான் வேண்டும். இல்லை என்றால் தனி வீடு தான் பார்த்துக்
கொள்ள வேண்டும் என்று சொன்னர்கள். சாதம் வாரம் ஒரு முறைதான்
என்றும் சொன்னர்கள்.
உணவு இடைவேளையின் பொழுது இவள் சாந்தகுமாரிடம் தமிழில்
பேசினாள். அவனுக்கு அது மிகவும் ஆச்சரியத்தை அளித்தது நீங்கள் தமிழா
என்று கேட்டான். ஆமாம் என்று சொன்னாள் உங்களுடைய பெயரை
கொண்டு நான் நீங்கள் கன்னடப் பெண் என்று நினைத்து விட்டேன் என்று
சொன்னான். ரோஷினி என்ற பெயரைப் பார்த்ததுமா என்று சொல்லி
சிரித்தாள் நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் அழகாகவும் சிரிக்கிறீர்கள்
என்று ‘சட்’டென்று சொன்னான். பிறகு உடனே மன்னிக்கவும் முதல் முறை
பார்த்த போதே இப்படி பேசுவதற்கு, நான் யாரையும் பார்த்து இப்படிப்
பேசியது இல்லை என்று சொல்லி மீண்டும் மன்னிப்பு கேட்டான். இவள்
இட்ஸ் ஓகே என்று சொன்னாள். ஆனால் மனத்திற்குள் பட்டாம் பூச்சி
பறந்தது.
தொடரும்.....
எடுத்துவைக்கும்போதே இனம் புரியாத சந்தோஷம் வந்தது அவளுக்கு. இனி
இங்கு தான் வேலை செய்யப் போகிறோம் என்கிற நினைவே அவள்
மகிழ்வுக்கு காரணம். இந்த ஆபீஸ் எப்படி இருக்குமோ, கூட வேலை
செய்பவர்கள் எப்படி இருப்பர்களோ என்கிற இயல்பான 'பட பட' ப்பு
அவளுள் இருந்தது. என்றாலும், அதை மீறிய ஒரு சந்தோஷம் இருந்தது
அவளுக்கு. நேரே மானேஜர் அறைக்கு சென்று தன் appointment ஆர்டர் ஐக்
காட்டினாள். அவரும் பெற்றுகொண்டு அவளை டீம் லீடர் க்கு அறிமுகப்
படுத்தி வைத்தார்.
அவனைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது இவளுக்கு. மிகவும்
கண்ணியமானவனாகத் தெரிந்தான். தன் பெயர் சாந்தகுமார் என்று அறிமுகம்
செய்து கொண்டான். இவளும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
அவன் பெயரைக் கேட்டதுமே, அவன் தமிழ் நாட்டை சேர்ந்தவன் என்று
புரிந்துகொண்டாள். ஆனால் அவன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினான். மிக
அழகான ஆங்கிலத்தில் இவளுடைய வேலைகள் என்னவென்று சொல்லி
கொடுத்தான். இவள் அவனுடன் பேச முயற்சித்து, அவனை சார் என்று
கூப்பிட்ட பொழுது தன்னை பேர் சொல்லிக் கூப்பிடும்படி சொன்னான்.
இன்றய கால கட்டத்தில் இது தான் வழக்கம் என்றும் சொன்னான்.
இவளுடன் அன்று மேலும் மூன்று பேர் புதியவர்கள் வந்திருந்தார்கள்
அவர்கள் மூவரும் ஆண்கள் வேறுவேறு மாநிலத்தவர்கள், அவர்கள் மூவருமே
ஆங்கிலத்திலேயே பேசினார்கள் அதனால் அவளால் சாந்தகுமார் இடம்
தமிழில் எதுவும் பேச முடியவில்லை. சரி உணவு இடைவேளையின் போது
பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள்.
இவளுக்கு அன்று காலை பிஜியிலிருந்து கிளம்பும் பொழுதே
கையிலேயே மதிய உணவுக்காக, சப்பாத்தியும் சப்ஜியும்
கொடுத்திருந்தார்கள். இரவும் அங்கு சப்பாத்தி சப்ஜி கிடைக்கும் என்று
சொன்னார்கள்.
அவளின் பிஜி யைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும். அங்கு
தினமும் வேறு வேறு காலை உணவு கொடுப்பார்களாம். போஹா என்று
சொல்லப்படும் அவல் உப்புமா, பிரட் சாண்ட்விச் மற்றும் பல பழங்கள் கலந்த
ஓட்ஸ் உணவு, தோசை, இட்லி என்று தினமும் ஒரு வகை தருவார்களாம்.
மதிய உணவிற்காக கையில் கட்டிக் கொடுத்து விடுவார்களாம். இரவும்
சப்பாத்தி சப்ஜி தான்.
எப்பொழுதாவது ஒரு வேளை உணவு வேண்டாம் என்றாலும் முன்பே
சொல்லிவிடலாமாம். இவை எல்லாமே அவளுக்கு புதியதாக இருந்தாலும்
பழகிக்கொள்ளத்தான் வேண்டும். இல்லை என்றால் தனி வீடு தான் பார்த்துக்
கொள்ள வேண்டும் என்று சொன்னர்கள். சாதம் வாரம் ஒரு முறைதான்
என்றும் சொன்னர்கள்.
உணவு இடைவேளையின் பொழுது இவள் சாந்தகுமாரிடம் தமிழில்
பேசினாள். அவனுக்கு அது மிகவும் ஆச்சரியத்தை அளித்தது நீங்கள் தமிழா
என்று கேட்டான். ஆமாம் என்று சொன்னாள் உங்களுடைய பெயரை
கொண்டு நான் நீங்கள் கன்னடப் பெண் என்று நினைத்து விட்டேன் என்று
சொன்னான். ரோஷினி என்ற பெயரைப் பார்த்ததுமா என்று சொல்லி
சிரித்தாள் நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் அழகாகவும் சிரிக்கிறீர்கள்
என்று ‘சட்’டென்று சொன்னான். பிறகு உடனே மன்னிக்கவும் முதல் முறை
பார்த்த போதே இப்படி பேசுவதற்கு, நான் யாரையும் பார்த்து இப்படிப்
பேசியது இல்லை என்று சொல்லி மீண்டும் மன்னிப்பு கேட்டான். இவள்
இட்ஸ் ஓகே என்று சொன்னாள். ஆனால் மனத்திற்குள் பட்டாம் பூச்சி
பறந்தது.
தொடரும்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
@lakshmi palani உங்களின் பதிவுக்காகக் காத்திருக்கிறேன் லக்ஷ்மி 

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
பேச்சை மாற்ற விரும்பி, நீங்கள் மிக அழகாக ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள், அருமையாக விளக்குகிறீர்கள். என்று சொன்னாள். இருவரும் தங்களின் குடும்பங்களைப் பற்றி பேசிக் கொண்டார்கள் இவள் சொன்னாள் தனக்கு ஒரு அக்கா ஒரு தம்பி ஒரு தங்கை இருப்பதாக அப்பாவும் அம்மாவும் எல்லோருமாக சேர்ந்து பெங்களூரில் இருப்பதாக சொன்னாள். அவன் அதே போல தான் ஒரே மகன் என்றும் தன்னுடைய தாய் தந்தையர் செங்கல்பட்டு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இருப்பதாகவும் விவசாய குடும்பம் என்றும் சொன்னான்.
அவ்வளவுதான் இதற்குப் பிறகு சரளமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். இப்படியாக அவர்கள் பேச்சு துவங்கியது சில நேரங்களில் மற்றவர்ளுக்கு எதிரில் கூட இவர்கள் தமிழில் பேசி சிரிக்கத் தொடங்கினார்கள் .
சின்ன சின்னதாக மற்றவர்களைப் பற்றி கமென்ட் அடிக்கக் துவங்கினார்கள். இப்படி அவர்களின் நெருக்கம் அதிகமானது.
சமைக்கும் வேலை இல்லாததாலும், வேறு பொறுப்புகள் இல்லாததாலும், தினமும் மாலை வேளைகளில் ஆஃபீஸ் விட்டதும் தோழிகளுடன் டெல்லியில் ஒவ்வொரு இடமாக சுற்றி வந்தாள். சனி ஞாயிறுகளில் நேரம் கழித்து எழுந்தாள். துணி துவைத்தாள். அந்த பிஜியில் துணி துவைக்க மெஷின் வைத்திருந்தார்கள் அதேபோல அயன் செய்து கொள்ளவும் வசதி இருந்தது. எனவே எந்த ஒரு வேலைக்காகவும் யாரையும் சார்ந்து இல்லாமல் தானாகவே செய்து கொள்ள முடிந்தது.
இது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது தன்னுடைய வேலையை தானே செய்வது அதுவும் தனக்கு பிடித்த போது செய்வது என்பது அவளுக்கு சுகமாகவே இருந்தது. அம்மா சொல்வது போல இதை இங்கே வைக்காதே அதை அங்கே வைக்காதே சீக்கிரமே எழுந்திரு என்றெல்லாம் சொல்வதற்கு ஆள் இல்லை இங்கு அவள் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எப்பொழுது வேண்டுமானாலும் வெளியில் போய் வரலாம், யாருடனும் போகலாம் என்பது மிகமுக்கியமானது.
தோழிகளுடன் வெளியே போகும்பொழுது தான் இவள் பார்த்தாள் நிறைய பேர் தோழர்களுடன் ஜோடி ஜோடியாகச் சுற்றுவதை. இவளுக்கும் அந்த ஆசை வந்தது. தன் கருப்பு அக்காவுக்கு எப்பொழுது கல்யாணம் ஆவது, அப்புறம் தனக்கு ஆகி, கணவனுடன் இப்படி சுற்றுவது?....ஹூம்… அவளுக்கு கல்யாணம் ஆக எப்படியும் இன்னும் 3 -4 வருடங்களாவது ஆகும். அவளுக்கு இப்பொழுது பார்க்க ஆரம்பித்தாலே லேட் ஆகும். ஆனால் அவளோ இன்னும் 2 வருடங்கள் போகட்டும், தங்கையின் படிப்பு முடியட்டும் என்று சொல்லி இருக்கிறாள்.
அவள் அப்படி சொன்னதால், தானும் இப்பொழுது தன் சம்பளத்தின் ஒரு பகுதியை ஊருக்கு அனுப்பியாகவேண்டிய கட்டத்தில் தள்ளப்பட்டு இருக்கிறாள். இத்தனை நாள் அப்பா தானே எல்லாம் பார்த்துக் கொண்டார், தன்னையும் சேர்த்து..இப்பொழுது தான் என் செலவு இல்லையே அவர்களுக்கு… அது போதாதா?... நான் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை அங்கு வேறு அனுப்ப வேண்டுமா?....அவளுக்குத் தேவையே இல்லாமல் அக்கா மேலும் பெற்றவர்கள் மீதும் கோபம் வந்தது. தான் இத்தனை குறுகிய இடைவேளி இல் இத்தனை சுயநலவாதியானதைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை.
தொடரும்....
அவ்வளவுதான் இதற்குப் பிறகு சரளமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். இப்படியாக அவர்கள் பேச்சு துவங்கியது சில நேரங்களில் மற்றவர்ளுக்கு எதிரில் கூட இவர்கள் தமிழில் பேசி சிரிக்கத் தொடங்கினார்கள் .
சின்ன சின்னதாக மற்றவர்களைப் பற்றி கமென்ட் அடிக்கக் துவங்கினார்கள். இப்படி அவர்களின் நெருக்கம் அதிகமானது.
சமைக்கும் வேலை இல்லாததாலும், வேறு பொறுப்புகள் இல்லாததாலும், தினமும் மாலை வேளைகளில் ஆஃபீஸ் விட்டதும் தோழிகளுடன் டெல்லியில் ஒவ்வொரு இடமாக சுற்றி வந்தாள். சனி ஞாயிறுகளில் நேரம் கழித்து எழுந்தாள். துணி துவைத்தாள். அந்த பிஜியில் துணி துவைக்க மெஷின் வைத்திருந்தார்கள் அதேபோல அயன் செய்து கொள்ளவும் வசதி இருந்தது. எனவே எந்த ஒரு வேலைக்காகவும் யாரையும் சார்ந்து இல்லாமல் தானாகவே செய்து கொள்ள முடிந்தது.
இது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது தன்னுடைய வேலையை தானே செய்வது அதுவும் தனக்கு பிடித்த போது செய்வது என்பது அவளுக்கு சுகமாகவே இருந்தது. அம்மா சொல்வது போல இதை இங்கே வைக்காதே அதை அங்கே வைக்காதே சீக்கிரமே எழுந்திரு என்றெல்லாம் சொல்வதற்கு ஆள் இல்லை இங்கு அவள் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எப்பொழுது வேண்டுமானாலும் வெளியில் போய் வரலாம், யாருடனும் போகலாம் என்பது மிகமுக்கியமானது.
தோழிகளுடன் வெளியே போகும்பொழுது தான் இவள் பார்த்தாள் நிறைய பேர் தோழர்களுடன் ஜோடி ஜோடியாகச் சுற்றுவதை. இவளுக்கும் அந்த ஆசை வந்தது. தன் கருப்பு அக்காவுக்கு எப்பொழுது கல்யாணம் ஆவது, அப்புறம் தனக்கு ஆகி, கணவனுடன் இப்படி சுற்றுவது?....ஹூம்… அவளுக்கு கல்யாணம் ஆக எப்படியும் இன்னும் 3 -4 வருடங்களாவது ஆகும். அவளுக்கு இப்பொழுது பார்க்க ஆரம்பித்தாலே லேட் ஆகும். ஆனால் அவளோ இன்னும் 2 வருடங்கள் போகட்டும், தங்கையின் படிப்பு முடியட்டும் என்று சொல்லி இருக்கிறாள்.
அவள் அப்படி சொன்னதால், தானும் இப்பொழுது தன் சம்பளத்தின் ஒரு பகுதியை ஊருக்கு அனுப்பியாகவேண்டிய கட்டத்தில் தள்ளப்பட்டு இருக்கிறாள். இத்தனை நாள் அப்பா தானே எல்லாம் பார்த்துக் கொண்டார், தன்னையும் சேர்த்து..இப்பொழுது தான் என் செலவு இல்லையே அவர்களுக்கு… அது போதாதா?... நான் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை அங்கு வேறு அனுப்ப வேண்டுமா?....அவளுக்குத் தேவையே இல்லாமல் அக்கா மேலும் பெற்றவர்கள் மீதும் கோபம் வந்தது. தான் இத்தனை குறுகிய இடைவேளி இல் இத்தனை சுயநலவாதியானதைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை.
தொடரும்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
ஸோ, அக்காவின் ஜாதகம் எடுக்கவே இன்னும் 2 – 3 வருடங்கள் ஆகும் பிறகு, அவள் கலருக்கு யார் அவளைப் பண்ணிக் கொள்வானோ… அப்புறம் அந்தக் கடன் அடைபடவேண்டும், பிறகு தான் தன் முறை வரும். அதற்கு குறைந்தது 5 – 6 வருடங்களாவது ஆகிவிடும். அதற்குள் தான் கிழவியாகிவிடுவோம், இந்த இள வயதில் அனுபவிக்காமல் எப்பொழுது அனுபவிப்பது என்று தோன்றியது அவளுக்கு. இந்த அற்புதமான வெதரில், ஒரு ஆணுடன் கை கோர்த்துக் கொண்டு, அணத்துக் கொண்டு நடப்பது எத்தனை சுகம் தரும் என்று யோசித்தாள். யோசித்ததே சுகமாய் இருந்தது அவளுக்கு.
இப்படியே ஒரு மாதம் போனது இவளுக்கு கை நிறைய சம்பளம் வந்தது. எல்லோரும் ட்ரீட் கேட்டார்கள். அவ்வளவு பணத்தை அவள் இதற்கு முன் தன் கைகளில் பார்த்ததில்லை. இதிலிருந்து ஊருக்கு அனுப்பவே அவளுக்கு மனம் இல்லை. என்றாலும் போனில் பேசும்போது அம்மாவைக் கேட்டாள். அதற்கு, அம்மாவும் அப்பாவும், “ நீ தில்லி இல் தனியாக இருப்பதால் சம்பளம் எதுவும் எங்களுக்கு அனுப்ப வேண்டாம். நீயே வைத்துக் கொள். ஆத்திர அவசரத்துக்கு உதவும். உனக்கே ஏதாவது ஒரு நெருக்கடி வரும்போது தேவையாக இருக்கும். எனவே நீயே வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டர்கள். அது இவளுக்கு பெரும் நிம்மதியைத் தந்தது.
அதனால் இஷ்டப்படி, கண்டதையும் வாங்கிக் கொள்ள முடிவு செய்தாள். அலுவலகத்தில் எல்லோருக்கும் ட்ரீட் கொடுத்தாள். இந்த முறை தோழிகளுடன் செல்வதற்கு பதிலாக, சாந்தகுமாருடன் போகலாமா என்று யோசித்தாள். தனக்கான சேஃபான ஜோடி, சாந்தகுமார் என்று யோசித்தாள்.
மேலும் இரவு நேரம் கழித்து வருவதற்கு அவன் துணை உபயோகமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள் அதனால் அவனிடம் கேட்டாள் அவன் முதலில் கொஞ்சம் ‘பிகு’ செய்தான், பிறகு யோசித்துவிட்டு ஒப்புக் கொண்டான் என்றாலும் அதிக நேரம் வேண்டாம் 8 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.
எனவே இந்த வாரம் இவள் சாந்தகுமாருடன் டெல்லியைச் சுற்றிவந்தாள். தனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டாள். இருவருமாக வெளியே உணவு அருந்தினார்கள். மிகவும் மகிழ்ச்சியாக ரூமுக்கு திரும்பினாள். அவளுடைய தோழிகள் யாருடன் சென்றாய் என்று கேட்டபொழுது சாந்தா உடன் என்று சொல்லிவிட்டாள்.
தொடரும்....
இப்படியே ஒரு மாதம் போனது இவளுக்கு கை நிறைய சம்பளம் வந்தது. எல்லோரும் ட்ரீட் கேட்டார்கள். அவ்வளவு பணத்தை அவள் இதற்கு முன் தன் கைகளில் பார்த்ததில்லை. இதிலிருந்து ஊருக்கு அனுப்பவே அவளுக்கு மனம் இல்லை. என்றாலும் போனில் பேசும்போது அம்மாவைக் கேட்டாள். அதற்கு, அம்மாவும் அப்பாவும், “ நீ தில்லி இல் தனியாக இருப்பதால் சம்பளம் எதுவும் எங்களுக்கு அனுப்ப வேண்டாம். நீயே வைத்துக் கொள். ஆத்திர அவசரத்துக்கு உதவும். உனக்கே ஏதாவது ஒரு நெருக்கடி வரும்போது தேவையாக இருக்கும். எனவே நீயே வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டர்கள். அது இவளுக்கு பெரும் நிம்மதியைத் தந்தது.
அதனால் இஷ்டப்படி, கண்டதையும் வாங்கிக் கொள்ள முடிவு செய்தாள். அலுவலகத்தில் எல்லோருக்கும் ட்ரீட் கொடுத்தாள். இந்த முறை தோழிகளுடன் செல்வதற்கு பதிலாக, சாந்தகுமாருடன் போகலாமா என்று யோசித்தாள். தனக்கான சேஃபான ஜோடி, சாந்தகுமார் என்று யோசித்தாள்.
மேலும் இரவு நேரம் கழித்து வருவதற்கு அவன் துணை உபயோகமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள் அதனால் அவனிடம் கேட்டாள் அவன் முதலில் கொஞ்சம் ‘பிகு’ செய்தான், பிறகு யோசித்துவிட்டு ஒப்புக் கொண்டான் என்றாலும் அதிக நேரம் வேண்டாம் 8 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.
எனவே இந்த வாரம் இவள் சாந்தகுமாருடன் டெல்லியைச் சுற்றிவந்தாள். தனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டாள். இருவருமாக வெளியே உணவு அருந்தினார்கள். மிகவும் மகிழ்ச்சியாக ரூமுக்கு திரும்பினாள். அவளுடைய தோழிகள் யாருடன் சென்றாய் என்று கேட்டபொழுது சாந்தா உடன் என்று சொல்லிவிட்டாள்.
தொடரும்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
பறவைக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. இனி என்னாகுமோ. நல்ல முடிவாக தருக கிருஷ்னாமா. வனக்கம்.
lakshmi palani- பண்பாளர்
- பதிவுகள் : 88
இணைந்தது : 21/10/2018
மதிப்பீடுகள் : 28
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1334325lakshmi palani wrote:பறவைக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. இனி என்னாகுமோ. நல்ல முடிவாக தருக கிருஷ்னாமா. வனக்கம்.
@lakshmi palani மிக்க நன்றி லக்ஷ்மி, தொடருங்கள்

Last edited by krishnaamma on Thu 5 Nov 2020 - 21:54; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
அவள் தோழிகளும் மேற்கொண்டு யார் சாந்தா என்றெல்லாம் கேட்கவில்லை சரி என்று விட்டு விட்டார்கள். இவளுடைய உடைகள் மற்றும் இவள் வாங்கி வந்த பொருட்களப் எல்லாம் பார்த்து மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். இவள் அவர்களைப் பார்த்து நீங்கள் என்ன வாங்கினீர்கள் என்று கேட்ட பொழுது, ஒன்றும் வாங்கவில்லை என்று சொன்னார்கள். இவள் ஆச்சர்யமாய், என்ன எதுவும் வாங்க வில்லையா?... சம்பளம் வரவில்லையா? என்று கேட்டாள்.
சம்பளம் வந்தது, இங்கு எத்தனை தேவையோ அத்தனை வைத்துக் கொண்டு பாக்கியை ஊருக்கு அனுப்பிவிட்டோம் என்று சொன்னார்கள். அவர்கள் இவளைக் கேட்டார்கள், நீ அனுப்பவில்லையா? என்று. இவள் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல், இது என் பணம் நான் ஏன் அவர்களுக்கு அனுப்பணும் என்று எதிர் கேள்வி கேட்டாள். குறைந்த பக்ஷம், எங்க அம்மா அப்பா தான் என்னையே வைத்துக் கொள்ளச் சொன்னர்கள் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அதைக் கூட அவள் கௌரவக் குறைவாக நினைத்தாள்.
அவர்கள் இருவரும் ‘ஆ’ வென்று பார்த்தார்கள். இவளை நீ ரொம்பத்தான் மாறிவிட்டாய். என்று சொன்னர்கள். மாறியது இவள் தான் என்றாலும் இவளுக்கு அவர்கள் இருவரும் தன்னைப் பார்த்து பொறாமைப் படுவதாக பட்டது. இனி இவர்களிடம் எதுவும் காட்டக் கூடாது, சொல்லக் கூடாது என்று முடிவெடுத்தாள். அப்பொழுது வேறு ஒரு நிகழ்வும் அவள் மனதில் வந்து போனது. வந்த 2ம் நாளே, இவளுடன் அறையைப் பகிர்ந்து கொண்ட ஒரு பாம்பே பெண், இவள் தலைக்கு குளித்து தலையை ஆற வைத்துக் கொண்டிருக்கும் பொழுது இவளைப் பார்த்து வாவ்!, எத்தனை அருமையான தலை முடி உங்களுக்கு, இதை ஏன் பின்னி பின்னி போடுகிறீர்கள், அப்படியே லூஸ் ஆக விட்டால் மிகவும் லுக் ஆக இருக்கும் என்றாள். அவள் தன் பெயர் ஷில்பா என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.
இவள், ஐயோ அப்படி விடக்கூடாது என்று எங்க அம்மா சொல்வார்கள் என்றாள். அவள் சிரித்தவாறே இங்கே உங்க அம்மா இல்லையே என்று சொல்லிக்கொண்டே அறை இன் உள்ளே சென்று, சீப்பு ஹேர் டிரையர் எடுத்து வந்து அவளே இவளின் தலை முடிக்கு போட்டு விட்டாள். மேலும், தன் மேக் அப் கிட் லிருந்து ரூஜ் மற்றும் லிப்ஸ்டிக் எடுத்து போட்டு விட்டாள். இப்பொழுது பார் என்று கண்ணாடியில் இவளைக் காட்டினாள். இவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை, அத்தனை அழகாக இருந்தாள் அவள்.
வாவ்! மிக்க நன்றி என்று சொன்னாள் மிகவும் சந்தோஷமாக. இந்த வீக் எண்ட் நாம் இருவரும் ஒரு பியூட்டி பார்லருக்கு போகலாம், அங்கு முடியை லெவலாகவொ யூ ஷெப்பிலோ வெட்டிக்கொள்ளலாம், இன்னும் அழகாக இருக்கும் என்று சொன்னாள். இவள் அவளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொன்னாள்.அவள் அல்லவோ பெண், கொஞ்சம் கூட பொறாமை இல்லை அவளுக்கு…இவளுங்களைப்பார் என்று பொருமிக்கொண்டே தன்னுடைய அறைக்குச் சென்றாள்.
இப்படியாக மேலும் ஒரு மாதம் சென்றது. சாந்தகுமாருடனான நட்பு அதைத் தாண்டி தொடரும் போல இருந்தது. இவள் இந்த மாதம் முழுவதும் அவள் வெளியே போகும் போது அவனுடனேயே சென்றாள். அவன் அருகாமையை மிகவும் விரும்பினாள். அவனும் அதே போல இருப்பதாக அவளுக்குப் பட்டது.
கூடிய சீக்கிரம் அவனே அதை வாய்விட்டு சொல்வான் என்று நினைத்தாள், எதிர் பார்த்தாள். இல்லாவிட்டால் தானாவது இந்த டிரெய்னிங்க் முடிவுக்கு வருவதற்குள் சொல்லிவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
இந்த நிலையில் எல்லோரும் ட்ரெய்னிங் முடித்தவுடன் அவர்கள் எந்த இடத்தில் போக விருப்பம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அப்போது இந்தப் பெண் அதாவது ரோஷனி தான் இங்கேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக சொல்லி விட்டாள். ஏனென்றால் ஊருக்குப் போனால் சம்பளம் முழுவதும் வீட்டுக்கு தர வேண்டும் இங்கே நன்றாக செலவழித்து பழகி ஒரு பொறுப்பில்லாமல் இருந்து பழகிவிட்ட அவளுக்கு மீண்டும் அந்த வீட்டுக்குப் போவது கடினம் என்று பட்டது. அதற்கு பதிலாக இங்கேயே தொடரலாம் என்று தோன்றியது.
ஒரு நாள் இவள் சாந்த குமாரிடம் இது பற்றி கேட்டபொழுது அவன் சொன்னான் இங்கேயே தொடர்ந்து இரு என்று சொல்லி, தான் அவளை விரும்புவதாகவும் சொல்லி விட்டான். இவளும் அதற்காகத்தானே காத்திருந்தாள், உடனேயே மிகவும் சந்தோஷமாக, மீ டூ என்று சொல்லி விட்டாள். அதனால் இங்கேயே போஸ்டிங் போட சொல்லி ரெகமண்ட் செய்ய அவனையே கேட்டுக்கொண்டாள்.
ஆனால் அதே நேரம், அவளுக்கு பிஜியில் தொடர்ந்து இருக்கவும் விருப்பமில்லை. அதை சூசகமாக அவனிடம் தெரிவித்தாள்.
தொடரும் ....
சம்பளம் வந்தது, இங்கு எத்தனை தேவையோ அத்தனை வைத்துக் கொண்டு பாக்கியை ஊருக்கு அனுப்பிவிட்டோம் என்று சொன்னார்கள். அவர்கள் இவளைக் கேட்டார்கள், நீ அனுப்பவில்லையா? என்று. இவள் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல், இது என் பணம் நான் ஏன் அவர்களுக்கு அனுப்பணும் என்று எதிர் கேள்வி கேட்டாள். குறைந்த பக்ஷம், எங்க அம்மா அப்பா தான் என்னையே வைத்துக் கொள்ளச் சொன்னர்கள் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அதைக் கூட அவள் கௌரவக் குறைவாக நினைத்தாள்.
அவர்கள் இருவரும் ‘ஆ’ வென்று பார்த்தார்கள். இவளை நீ ரொம்பத்தான் மாறிவிட்டாய். என்று சொன்னர்கள். மாறியது இவள் தான் என்றாலும் இவளுக்கு அவர்கள் இருவரும் தன்னைப் பார்த்து பொறாமைப் படுவதாக பட்டது. இனி இவர்களிடம் எதுவும் காட்டக் கூடாது, சொல்லக் கூடாது என்று முடிவெடுத்தாள். அப்பொழுது வேறு ஒரு நிகழ்வும் அவள் மனதில் வந்து போனது. வந்த 2ம் நாளே, இவளுடன் அறையைப் பகிர்ந்து கொண்ட ஒரு பாம்பே பெண், இவள் தலைக்கு குளித்து தலையை ஆற வைத்துக் கொண்டிருக்கும் பொழுது இவளைப் பார்த்து வாவ்!, எத்தனை அருமையான தலை முடி உங்களுக்கு, இதை ஏன் பின்னி பின்னி போடுகிறீர்கள், அப்படியே லூஸ் ஆக விட்டால் மிகவும் லுக் ஆக இருக்கும் என்றாள். அவள் தன் பெயர் ஷில்பா என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.
இவள், ஐயோ அப்படி விடக்கூடாது என்று எங்க அம்மா சொல்வார்கள் என்றாள். அவள் சிரித்தவாறே இங்கே உங்க அம்மா இல்லையே என்று சொல்லிக்கொண்டே அறை இன் உள்ளே சென்று, சீப்பு ஹேர் டிரையர் எடுத்து வந்து அவளே இவளின் தலை முடிக்கு போட்டு விட்டாள். மேலும், தன் மேக் அப் கிட் லிருந்து ரூஜ் மற்றும் லிப்ஸ்டிக் எடுத்து போட்டு விட்டாள். இப்பொழுது பார் என்று கண்ணாடியில் இவளைக் காட்டினாள். இவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை, அத்தனை அழகாக இருந்தாள் அவள்.
வாவ்! மிக்க நன்றி என்று சொன்னாள் மிகவும் சந்தோஷமாக. இந்த வீக் எண்ட் நாம் இருவரும் ஒரு பியூட்டி பார்லருக்கு போகலாம், அங்கு முடியை லெவலாகவொ யூ ஷெப்பிலோ வெட்டிக்கொள்ளலாம், இன்னும் அழகாக இருக்கும் என்று சொன்னாள். இவள் அவளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொன்னாள்.அவள் அல்லவோ பெண், கொஞ்சம் கூட பொறாமை இல்லை அவளுக்கு…இவளுங்களைப்பார் என்று பொருமிக்கொண்டே தன்னுடைய அறைக்குச் சென்றாள்.
இப்படியாக மேலும் ஒரு மாதம் சென்றது. சாந்தகுமாருடனான நட்பு அதைத் தாண்டி தொடரும் போல இருந்தது. இவள் இந்த மாதம் முழுவதும் அவள் வெளியே போகும் போது அவனுடனேயே சென்றாள். அவன் அருகாமையை மிகவும் விரும்பினாள். அவனும் அதே போல இருப்பதாக அவளுக்குப் பட்டது.
கூடிய சீக்கிரம் அவனே அதை வாய்விட்டு சொல்வான் என்று நினைத்தாள், எதிர் பார்த்தாள். இல்லாவிட்டால் தானாவது இந்த டிரெய்னிங்க் முடிவுக்கு வருவதற்குள் சொல்லிவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
இந்த நிலையில் எல்லோரும் ட்ரெய்னிங் முடித்தவுடன் அவர்கள் எந்த இடத்தில் போக விருப்பம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அப்போது இந்தப் பெண் அதாவது ரோஷனி தான் இங்கேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக சொல்லி விட்டாள். ஏனென்றால் ஊருக்குப் போனால் சம்பளம் முழுவதும் வீட்டுக்கு தர வேண்டும் இங்கே நன்றாக செலவழித்து பழகி ஒரு பொறுப்பில்லாமல் இருந்து பழகிவிட்ட அவளுக்கு மீண்டும் அந்த வீட்டுக்குப் போவது கடினம் என்று பட்டது. அதற்கு பதிலாக இங்கேயே தொடரலாம் என்று தோன்றியது.
ஒரு நாள் இவள் சாந்த குமாரிடம் இது பற்றி கேட்டபொழுது அவன் சொன்னான் இங்கேயே தொடர்ந்து இரு என்று சொல்லி, தான் அவளை விரும்புவதாகவும் சொல்லி விட்டான். இவளும் அதற்காகத்தானே காத்திருந்தாள், உடனேயே மிகவும் சந்தோஷமாக, மீ டூ என்று சொல்லி விட்டாள். அதனால் இங்கேயே போஸ்டிங் போட சொல்லி ரெகமண்ட் செய்ய அவனையே கேட்டுக்கொண்டாள்.
ஆனால் அதே நேரம், அவளுக்கு பிஜியில் தொடர்ந்து இருக்கவும் விருப்பமில்லை. அதை சூசகமாக அவனிடம் தெரிவித்தாள்.
தொடரும் ....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
அவனும் முதலில் கொஞ்சம் யோசித்தான், இது சரிவருமா ரோஷனி, என்று கேட்டான். ம்ம்.. எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கு சாந்தா என்றாள். அவனும் தோளைக் குலுக்கிக் கொண்டு ஒப்புக் கொண்டான்.
இப்படி சேர்ந்து வாழ்வது டெல்லியில் இது சகஜம் என்றாலும் இவர்கள் இருவருக்கும் இது பழக்கம் இல்லை அல்லவா?, அதனால் கொஞ்சம் யோசித்தார்கள். ஆனாலும் ஆசை யாரை விட்டது கடைசியில் இருவரும் ஒன்றாக இருப்பது என்று முடிவெடுத்து விட்டார்கள். எனவே இருவரும் அவரவர் பிஜியைக் காலி செய்துவிட்டு ஒரு வீடு பார்க்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
ஆனால் தங்கள் தங்கள் வீட்டிற்கு இதுபற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். அதனால், அவளும், இங்கிருந்து போஸ்டிங் வேண்டாம், இங்கேயே தொடர விரும்புவதாக எழுத்திக் கொடுத்தது தான் தான் என்பதை தன் வீட்டுக்குச் சொல்லவில்லை. மூடி மறைக்கவே விரும்பினாள்.
அவளுடைய முடிவுகளில் அவன் எதுவும் தலையிடவில்லை அதேபோல அவனுடைய முடிவுகளில் அவள் தலையிடவில்லை. ஆனாலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருப்பது என்பதை மட்டும் இருவரும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.
அங்கு போக வேண்டுமானால் என்னென்ன தேவை, என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டார்கள். இருவரும் எவ்வளவு பணம் போட வேண்டும் என்று ஒரு தீர்மானம் போட்டுக் கொண்டார்கள். இருவரும் சேர்ந்து எல்லாம் செய்வது, செலவை இருவரும் சரிபாதி பங்கு போட்டுக் கொள்வது, பிறகு அவை எல்லவற்றையும் அனுபவிப்பது என்று.
அதாவது வீட்டுக்கு அட்வான்ஸ் முதல் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வரை என்னென்ன தேவை என்ற லிஸ்ட் போட்டார்கள். அதன் பிரகாரம் இருவரும் எத்தனை முன் பணம் போட வேண்டும் என்றும் பார்த்துக் கொண்டார்கள். அதற்குத் தகுந்தாற் போல் வீடு தேடத் துவங்கினார்கள்.
இப்படியாக, இவர்கள் வீடு தேடும் படலம் துவங்கியது அப்போது நண்பர்களிடம் சொல்லி வைத்தார்கள். அலுவலக நண்பர்களில் ஒருவன் இவர்களைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான். மற்றவனிடம் சொன்னான், இவனுக்கு மட்டும் எங்கோ மச்சம் இருக்குடா என்று.
அப்பொழுது எதேற்சயாக ஒரு வீடு பற்றி சாந்த குமாரின் நண்பன் ஒருவன் சொன்னான். ஆனால் அது கொஞ்சம் சிட்டியை விட்டுத் தள்ளி இருந்தது.
ஆனால் இவர்களுக்கு வசதியாக இருக்கும் போல தோன்றியது. அட்வான்ஸும், வாடகையும் கொஞ்சம் குறைவாக இருந்தது. ஆபீஸ் cab பிக்கப் செய்து கொள்ள வரும். எனவே, இவர்களுக்கு ஆபீஸ் வந்து போவதில் சிரமம் இருக்காது என்று தோன்றியது.
அது ஒரு மூன்று பெட்ரூம் பிளாட் அதில் உள்ளவர்கள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள். எனவே வீட்டை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள ஆள் தேடினார்கள். அவர்கள் திரும்ப வரும் பொழுது அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் இரண்டு அல்லது மூன்று வருடத்தில் திரும்பி வருவார்கள். அது வரை இவர்கள் அனுபவிக்கலாம் வாடகையும் மிகக்குறைவு அட்வான்சும் குறைவு ஆனால் வீட்டை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் இடையில் காலி செய்து கொண்டு போகக் கூடாது என்பது மட்டுமே அவர்களுடைய கண்டிஷன்.
உடனேயே இதற்கு இவர்கள் இருவரும் உடன்பட்டார்கள் ஏனென்றால் இருவருக்கும் அட்வான்ஸ் மட்டுமே ஏற்பாடு செய்தால் போதும் மற்றபடி வீட்டிற்கு என்னென்ன தேவையான சாமான்களோ அத்தனையும் அவர்கள் விட்டு விட்டு போகிறார்கள் அத்தனையும் இவர்கள் அனுபவிக்கலாம் ஒரு பைசா கூட எக்ஸ்ட்ரா போடாமல் அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உடனடியாக ஒப்புக் கொண்டார்கள்
இந்த பிஜியைக் காலி செய்துவிட்டு ஒரு நல்ல நாளில் இவள் அங்கு சென்றாள். இவள் தன்னுடைய வீட்டில் சொல்லும் பொழுது தன்னுடைய ட்ரெய்னிங் சக்ஸஸ்புல் ஆக முடிந்ததாகவும் தான் ஸ்டார் பர்ஃபாமர் என்றும் சொன்னாள். இபொழுது வாங்கும் சம்பளத்தை விட சம்பளம் இனி 2.5 மடங்கு அதிகமாக ஆகும் என்றும் சொன்னாள். அவளின் பெற்றோர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
எப்பொழுது ஊருக்கு வருவாய்? எங்கே போஸ்டிங்க் என்றெல்லாம் கேட்டார்கள். இவள் எல்லாம் விவரமாக சொன்னாள். ஆபிஸிலேயே இவளுடைய போஸ்டிங்க் தில்லி தான் என்று போட்டு விட்டதாக சொல்லி விட்டாள். இதில் அவளுடைய பெற்றோருக்கு மிகவும் வருத்தம். ஆனால் தான் பிஜியில் இருக்க விருப்பம் இன்றி ஒரு வீடு பார்த்து தங்கப் போவதாகவும் அவளுடன் சாந்தா என்று ஒரு தோழியும் தங்கப்போவதாகச் சொன்னாள். அது அவளின் சொந்தக்காரரின் வீடு என்றும் சொன்னாள்.
சரி அட்லீஸ்ட் குறைந்தபட்சம் தீபாவளிக்கு வந்து விட்டுப் போ மூன்று மாதம் ஆகிவிட்டது உன்னை பார்த்து என்று சொன்னார்கள். அவளும் சரி என்று சொல்லி போனை கட் செய்து விட்டு வந்தாள்.
ஆனால் இங்கு வந்து பார்த்தால் சாந்தகுமார் ஊருக்கு போவதைப் பற்றி யோசித்தான்.
தொடரும்.....
இப்படி சேர்ந்து வாழ்வது டெல்லியில் இது சகஜம் என்றாலும் இவர்கள் இருவருக்கும் இது பழக்கம் இல்லை அல்லவா?, அதனால் கொஞ்சம் யோசித்தார்கள். ஆனாலும் ஆசை யாரை விட்டது கடைசியில் இருவரும் ஒன்றாக இருப்பது என்று முடிவெடுத்து விட்டார்கள். எனவே இருவரும் அவரவர் பிஜியைக் காலி செய்துவிட்டு ஒரு வீடு பார்க்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
ஆனால் தங்கள் தங்கள் வீட்டிற்கு இதுபற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். அதனால், அவளும், இங்கிருந்து போஸ்டிங் வேண்டாம், இங்கேயே தொடர விரும்புவதாக எழுத்திக் கொடுத்தது தான் தான் என்பதை தன் வீட்டுக்குச் சொல்லவில்லை. மூடி மறைக்கவே விரும்பினாள்.
அவளுடைய முடிவுகளில் அவன் எதுவும் தலையிடவில்லை அதேபோல அவனுடைய முடிவுகளில் அவள் தலையிடவில்லை. ஆனாலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருப்பது என்பதை மட்டும் இருவரும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.
அங்கு போக வேண்டுமானால் என்னென்ன தேவை, என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டார்கள். இருவரும் எவ்வளவு பணம் போட வேண்டும் என்று ஒரு தீர்மானம் போட்டுக் கொண்டார்கள். இருவரும் சேர்ந்து எல்லாம் செய்வது, செலவை இருவரும் சரிபாதி பங்கு போட்டுக் கொள்வது, பிறகு அவை எல்லவற்றையும் அனுபவிப்பது என்று.
அதாவது வீட்டுக்கு அட்வான்ஸ் முதல் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வரை என்னென்ன தேவை என்ற லிஸ்ட் போட்டார்கள். அதன் பிரகாரம் இருவரும் எத்தனை முன் பணம் போட வேண்டும் என்றும் பார்த்துக் கொண்டார்கள். அதற்குத் தகுந்தாற் போல் வீடு தேடத் துவங்கினார்கள்.
இப்படியாக, இவர்கள் வீடு தேடும் படலம் துவங்கியது அப்போது நண்பர்களிடம் சொல்லி வைத்தார்கள். அலுவலக நண்பர்களில் ஒருவன் இவர்களைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான். மற்றவனிடம் சொன்னான், இவனுக்கு மட்டும் எங்கோ மச்சம் இருக்குடா என்று.
அப்பொழுது எதேற்சயாக ஒரு வீடு பற்றி சாந்த குமாரின் நண்பன் ஒருவன் சொன்னான். ஆனால் அது கொஞ்சம் சிட்டியை விட்டுத் தள்ளி இருந்தது.
ஆனால் இவர்களுக்கு வசதியாக இருக்கும் போல தோன்றியது. அட்வான்ஸும், வாடகையும் கொஞ்சம் குறைவாக இருந்தது. ஆபீஸ் cab பிக்கப் செய்து கொள்ள வரும். எனவே, இவர்களுக்கு ஆபீஸ் வந்து போவதில் சிரமம் இருக்காது என்று தோன்றியது.
அது ஒரு மூன்று பெட்ரூம் பிளாட் அதில் உள்ளவர்கள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள். எனவே வீட்டை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள ஆள் தேடினார்கள். அவர்கள் திரும்ப வரும் பொழுது அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் இரண்டு அல்லது மூன்று வருடத்தில் திரும்பி வருவார்கள். அது வரை இவர்கள் அனுபவிக்கலாம் வாடகையும் மிகக்குறைவு அட்வான்சும் குறைவு ஆனால் வீட்டை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் இடையில் காலி செய்து கொண்டு போகக் கூடாது என்பது மட்டுமே அவர்களுடைய கண்டிஷன்.
உடனேயே இதற்கு இவர்கள் இருவரும் உடன்பட்டார்கள் ஏனென்றால் இருவருக்கும் அட்வான்ஸ் மட்டுமே ஏற்பாடு செய்தால் போதும் மற்றபடி வீட்டிற்கு என்னென்ன தேவையான சாமான்களோ அத்தனையும் அவர்கள் விட்டு விட்டு போகிறார்கள் அத்தனையும் இவர்கள் அனுபவிக்கலாம் ஒரு பைசா கூட எக்ஸ்ட்ரா போடாமல் அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் உடனடியாக ஒப்புக் கொண்டார்கள்
இந்த பிஜியைக் காலி செய்துவிட்டு ஒரு நல்ல நாளில் இவள் அங்கு சென்றாள். இவள் தன்னுடைய வீட்டில் சொல்லும் பொழுது தன்னுடைய ட்ரெய்னிங் சக்ஸஸ்புல் ஆக முடிந்ததாகவும் தான் ஸ்டார் பர்ஃபாமர் என்றும் சொன்னாள். இபொழுது வாங்கும் சம்பளத்தை விட சம்பளம் இனி 2.5 மடங்கு அதிகமாக ஆகும் என்றும் சொன்னாள். அவளின் பெற்றோர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
எப்பொழுது ஊருக்கு வருவாய்? எங்கே போஸ்டிங்க் என்றெல்லாம் கேட்டார்கள். இவள் எல்லாம் விவரமாக சொன்னாள். ஆபிஸிலேயே இவளுடைய போஸ்டிங்க் தில்லி தான் என்று போட்டு விட்டதாக சொல்லி விட்டாள். இதில் அவளுடைய பெற்றோருக்கு மிகவும் வருத்தம். ஆனால் தான் பிஜியில் இருக்க விருப்பம் இன்றி ஒரு வீடு பார்த்து தங்கப் போவதாகவும் அவளுடன் சாந்தா என்று ஒரு தோழியும் தங்கப்போவதாகச் சொன்னாள். அது அவளின் சொந்தக்காரரின் வீடு என்றும் சொன்னாள்.
சரி அட்லீஸ்ட் குறைந்தபட்சம் தீபாவளிக்கு வந்து விட்டுப் போ மூன்று மாதம் ஆகிவிட்டது உன்னை பார்த்து என்று சொன்னார்கள். அவளும் சரி என்று சொல்லி போனை கட் செய்து விட்டு வந்தாள்.
ஆனால் இங்கு வந்து பார்த்தால் சாந்தகுமார் ஊருக்கு போவதைப் பற்றி யோசித்தான்.
தொடரும்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
ஆனால் இங்கு வந்து பார்த்தால் சாந்தகுமார் ஊருக்கு போவதைப் பற்றி யோசித்தான். பிறகு ஒப்புக் கொண்டான். இருவருமே அவரவர் ஊருக்கு போய்விட்டு வந்து, பிறகு சேர்ந்து வாழலாம் என்று யோசித்து விட்டு அவரவர்களின் பிஜியைக் காலி செய்துவிட்டு சாமான்களைக் கொண்டு வந்து இங்கு புதிய வீட்டில் போட்டு விட்டு கிளம்பினார்கள்.
மூன்று மாதங்கள் கழித்து வீட்டிற்கு போவதால் எல்லோருக்கும் அதுவும் தீபாவளி என்பதால் எல்லோருக்கும் பரிசு பொருள்கள் உடைகள் என்று தில்லி பாலிகா பஜாரில் வாங்கிக் கொண்டாள் அதேபோல சாந்தகுமாரும் வாங்கிக் கொண்டான்.
ரோஷினி முதல் நாளும் சாந்தகுமார் அடுத்த நாளும் கிளம்பினார்கள். இவள் பெங்களூரும் அவன் சென்னையும் சென்றார்கள். வீட்டுக்கு சென்றதும், எல்லோரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்… ஒரே போல, நீ மிகவும் மாறிவிட்டாய் என்று சொன்னார்கள். உன்னுடைய ஹேர் ஸ்டைல் முதற்கொண்டு மாறி இருக்கிறது, இருந்தாலும் மிக அழகாக இருக்கிறது என்று சொன்னார்கள். டெல்லி பெண் போலவே இருக்கிறாய் என்று சொன்னாள் அக்கா. இவள் சிரித்தாள்.கலரும் கூடி இருக்கிறது ரோஷனி என்றாள் அவள்.
அம்மா எல்லோருக்கும் பிடித்தது என்று பார்த்து பார்த்து ஸ்வீட் செய்து வைத்திருந்தாள். பட்டாசு கொளுத்தினார்கள், ராக்கெட் விட்டார்கள். வெகு நாட்களுக்குப் பிறகு எல்லோரும் சேர்ந்து உணவு உண்டார்கள். தீபாவளி பண்டிகை இனிமையாக கழிந்தது. இப்படியாக ஒரு வாரம் போனதே தெரியவில்லை இவள் ஊருக்குக் கிளம்பும் நாள் வந்தது. போன தடவை போல் இல்லாமல் இந்த முறை, கிளம்புவதற்கு மிகவும் த்ரில்லிங்காக இருந்தது அவளுக்கு.
போனமுறை வேறு மாதிரி த்ரில். பிஜி எப்படி இருக்கும் என்ன ஏது என்று தெரியாது, ஆபீஸ் தெரியாது, என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாது. இப்படிப் பல தெரியாதுகள்..ஆனால் , இப்போது…. தனி வீடு ..தன் வீடு … நினைக்கும்போதே சிலிர்த்தது அவளுக்கு.
இப்போதும் அது எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாது இருந்தாலும் ஒரு புது அனுபவம். அதற்காக அவள் காத்திருந்தாள்; மிகவும் ஆர்வமாக அந்தக் கணத்திற்காகக் காத்திருந்தாள் .
அம்மா எடுத்துவைத்த பக்ஷணங்கள் எல்லவற்றையும் எடுத்துக் கொண்டாள். பொடிவகைகள், புளிக்காய்ச்சல் என்று அம்மா எதேதோ பாக் செய்து கொடுத்தாள். எதாவது தேவை என்றால் போனில் கேளு சொல்லித்தருகிறேன். சமையல் அறைப்பக்கம் வந்ததே இல்லை, இதில் தனியாக இருக்கப் போகிறேன் என்கிறாய், நான் வேண்டுமானால் வந்து கொஞ்ச நாள் உன்னுடன் இருக்கட்டுமா என்று கேட்டாள். இவள் மிக அவசரமாக.. ஐயையோ..வேண்டாம் மா.. நான் பார்த்துப்பேன். அதுவும் அந்தப் பெண் நன்றாக சமைப்பாளாம். நான் கற்றுக் கொள்வேன். நிறைய you tube லும் இருக்கு மா. நீ கவலை படாதே என்றாள்.
மிகவும் சந்தோஷமாக எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள் ரோஷினி. ஏர்போர்ட்டில் இருந்து டாக்ஸி பிடித்து புதுக் குடித்தனத்திற்கு வந்து சேர்ந்தாள் அவளுக்கு முன்பே சாந்தகுமார் வந்து இருந்தான். அவனும் தன்னுடைய கிராமத்தில் இருந்து தீபாவளிப் பக்ஷணங்கள் கொண்டு வந்திருந்தான். அவை மிகவும் ருசியாகவும் வித்தியாசமானதாகவும் அவள் இதுவரை பார்த்தறியாததுமானவைகளாக இருந்தன.
ஒக்காரை, கம்பு உருண்டை, பொருள் விளங்கா உருண்டை, பயத்தம் உருண்டை என்று நிறைய கொண்டு வந்திருந்தான். இவள் அவற்றை மிகவும் விரும்பி உண்டாள். அதே போல அவன் இவள் கொண்டு வந்ததை சாப்பிட்டான்.
தொடரும்..............
மூன்று மாதங்கள் கழித்து வீட்டிற்கு போவதால் எல்லோருக்கும் அதுவும் தீபாவளி என்பதால் எல்லோருக்கும் பரிசு பொருள்கள் உடைகள் என்று தில்லி பாலிகா பஜாரில் வாங்கிக் கொண்டாள் அதேபோல சாந்தகுமாரும் வாங்கிக் கொண்டான்.
ரோஷினி முதல் நாளும் சாந்தகுமார் அடுத்த நாளும் கிளம்பினார்கள். இவள் பெங்களூரும் அவன் சென்னையும் சென்றார்கள். வீட்டுக்கு சென்றதும், எல்லோரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்… ஒரே போல, நீ மிகவும் மாறிவிட்டாய் என்று சொன்னார்கள். உன்னுடைய ஹேர் ஸ்டைல் முதற்கொண்டு மாறி இருக்கிறது, இருந்தாலும் மிக அழகாக இருக்கிறது என்று சொன்னார்கள். டெல்லி பெண் போலவே இருக்கிறாய் என்று சொன்னாள் அக்கா. இவள் சிரித்தாள்.கலரும் கூடி இருக்கிறது ரோஷனி என்றாள் அவள்.
அம்மா எல்லோருக்கும் பிடித்தது என்று பார்த்து பார்த்து ஸ்வீட் செய்து வைத்திருந்தாள். பட்டாசு கொளுத்தினார்கள், ராக்கெட் விட்டார்கள். வெகு நாட்களுக்குப் பிறகு எல்லோரும் சேர்ந்து உணவு உண்டார்கள். தீபாவளி பண்டிகை இனிமையாக கழிந்தது. இப்படியாக ஒரு வாரம் போனதே தெரியவில்லை இவள் ஊருக்குக் கிளம்பும் நாள் வந்தது. போன தடவை போல் இல்லாமல் இந்த முறை, கிளம்புவதற்கு மிகவும் த்ரில்லிங்காக இருந்தது அவளுக்கு.
போனமுறை வேறு மாதிரி த்ரில். பிஜி எப்படி இருக்கும் என்ன ஏது என்று தெரியாது, ஆபீஸ் தெரியாது, என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாது. இப்படிப் பல தெரியாதுகள்..ஆனால் , இப்போது…. தனி வீடு ..தன் வீடு … நினைக்கும்போதே சிலிர்த்தது அவளுக்கு.
இப்போதும் அது எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாது இருந்தாலும் ஒரு புது அனுபவம். அதற்காக அவள் காத்திருந்தாள்; மிகவும் ஆர்வமாக அந்தக் கணத்திற்காகக் காத்திருந்தாள் .
அம்மா எடுத்துவைத்த பக்ஷணங்கள் எல்லவற்றையும் எடுத்துக் கொண்டாள். பொடிவகைகள், புளிக்காய்ச்சல் என்று அம்மா எதேதோ பாக் செய்து கொடுத்தாள். எதாவது தேவை என்றால் போனில் கேளு சொல்லித்தருகிறேன். சமையல் அறைப்பக்கம் வந்ததே இல்லை, இதில் தனியாக இருக்கப் போகிறேன் என்கிறாய், நான் வேண்டுமானால் வந்து கொஞ்ச நாள் உன்னுடன் இருக்கட்டுமா என்று கேட்டாள். இவள் மிக அவசரமாக.. ஐயையோ..வேண்டாம் மா.. நான் பார்த்துப்பேன். அதுவும் அந்தப் பெண் நன்றாக சமைப்பாளாம். நான் கற்றுக் கொள்வேன். நிறைய you tube லும் இருக்கு மா. நீ கவலை படாதே என்றாள்.
மிகவும் சந்தோஷமாக எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள் ரோஷினி. ஏர்போர்ட்டில் இருந்து டாக்ஸி பிடித்து புதுக் குடித்தனத்திற்கு வந்து சேர்ந்தாள் அவளுக்கு முன்பே சாந்தகுமார் வந்து இருந்தான். அவனும் தன்னுடைய கிராமத்தில் இருந்து தீபாவளிப் பக்ஷணங்கள் கொண்டு வந்திருந்தான். அவை மிகவும் ருசியாகவும் வித்தியாசமானதாகவும் அவள் இதுவரை பார்த்தறியாததுமானவைகளாக இருந்தன.
ஒக்காரை, கம்பு உருண்டை, பொருள் விளங்கா உருண்டை, பயத்தம் உருண்டை என்று நிறைய கொண்டு வந்திருந்தான். இவள் அவற்றை மிகவும் விரும்பி உண்டாள். அதே போல அவன் இவள் கொண்டு வந்ததை சாப்பிட்டான்.
தொடரும்..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
இருவரும்குடித்தனம்செய்யவேண்டுமே, முதலில்மளிகைலிஸ்ட்போட்டுகொண்டார்கள். அவனிடம், சாந்தாஉன்னிடம்ஒன்றுசொல்லவேண்டும்என்றாள். என்னஎன்றுகேட்டான்அவன். அதற்குஅவள்கொஞ்சம்தயங்கியவாறே, எனக்குகொஞ்சம்கூடசமையல்தெரியாதுஎன்றுசொன்னாள். இதுசொல்வதற்குகொஞ்சம்கஷ்டம்தான்பட்டாள். வெட்கமும்பட்டாள். ஆனால்உண்மைஅதுதானே… இத்தனைநாட்கள்சொல்லாவிட்டால்பரவாயில்லை, இப்பொழுதுசொல்லியாகவேண்டியகட்டாயத்தில்உள்ளாளே. கொஞ்சநாளில்கற்றுக்கொண்டுவிடுகிறேன். அதுவரைவெளியில்சாப்பிட்டுசமாளிக்கலாம்என்றாள்.
ஆனால்அவன்கொஞ்சம்கூடகவலைப்படாமல், இட்ஸ்ஓகே , வெளியில்சாப்பிடவேண்டாம். நான்நன்றாகசமைப்பேன்என்றுசொன்னான். மேலும், சமையல்ஒன்றும்கஷ்டமோ , கடினமோஅல்லநீயும்சுலபமாககற்றுக்கொள்ளலாம்என்றுசொன்னான். இனிஇருவரும்ஒன்றாகத்தானேஇருக்கப்போகிறோம், நானேகற்றுக்கொடுக்கிறேன்என்றும்சொன்னான்.
அவனின்இந்தப்பதில், ஆச்சரியமாகஇருந்ததுஅவளுக்கு. அலுவலகத்தில்அவனுக்குநல்லபெயர்இருந்தது. எந்தவிதமானபிரச்சினையும்சுலபமாகதீர்த்துவிடுவான்மிகமிகக்கூர்மையானஅறிவுஎன்றுஅவனைப்புகழ்வார்கள்.
இப்போதுபார்த்தால்நன்றாகசமைக்கதெரியும்என்றுவேறுசொல்கிறான். இன்னும்என்னென்னதெரியும்அவனுக்கு? அவன்மீதுமதிப்புமிகுந்துகொண்டேபோனது. தான்மக்குஎன்றுஅவளுக்குதோன்றியது.
ஒருநொடிஅவள்தன்தந்தையைநினைத்துப்பார்த்துக்கொண்டாள். அவர்ஒருநாள்கூடஎதுவும்சமைத்ததுஇல்லை. அம்மாதான்எல்லாமேசெய்வாள். அக்காவாவதுஏதாவதுஅம்மாவிற்குஉதவுவாள்ஆனால்தான்உதவியதேஇல்லைஎன்பதைசௌகரியமாகமறந்தாள். அம்மாஉதவிக்குகூப்பிடும்பொழுதுதான்முக்கியமானஅசைன்மென்ட்இருக்கிறதுஎன்றுசொல்வாள்.
அப்பாவும், அவளைஏன்தொந்தரவுசெய்கிறாய்என்றுஉடனேஇவளின்சப்போர்ட்டுக்குவந்துவிடுவார். பிறகென்ன, இவள்அடுப்படிவேலைகளில்இருந்துதப்பித்துவிடுவாள். அப்படிஇருந்தவள்தான்இப்பொழுதுஇப்படிநினைக்கிறாள், சமைக்கத்தயாராகிவிட்டாள். தனக்குஎன்றுவரும்பொழுதுஎல்லோருக்கும்நேரம்பொழுதுஎல்லாமேஇருக்கும்என்றுநினைக்கிறேன்.அதைத்தான்மனம்இருந்தால்மார்கம்உண்டுஎன்றார்களோ?
லிஸ்ட்படிகடையில்மளிகைபொருட்கள்வாங்கிக்கொண்டார்கள். திங்கட்கிழமைதான்ஆபீஸ்என்பதால்இந்தசனிஞாயிறுவீட்டிலேயேகழித்தார்கள்வீட்டில்கிச்சனில், எல்லாவற்றையும்ரெடிசெய்துவைத்தார்கள்.
நாளைக்குஎன்னசமையல், அதற்குவேண்டியஎல்லாவற்றையும்எப்படிமுதல்நாளேஎடுத்துவைத்துக்கொள்வது, எப்படிஎதைமுன்னேசெய்யவேண்டும்எதைபிறகுசெய்யவேண்டும்என்றுசமையல்செய்முறைகளைஅவன்கற்றுக்கொடுத்தான்.
சமைக்கத்தான்தெரியாதேதவிரகாய்கறிகள்கட்பண்ணிதருகிறேன்; பாத்திரங்கள்அலம்பிதருகிறேன்என்றுசொன்னாள். அவன்சிரித்துக்கொண்டேசரிஎன்றுசொன்னான்இதுபோலஆளுக்குஒருவேலைசெய்தால்சிரமம்தெரியாதுஎன்றும்சொன்னான். வாஷிங்மெஷின்இருந்ததால்துவைக்கவும்பிரச்சினையாகஇருக்கவில்லை. அயன்பாக்ஸும்இருந்தது.
இருவரும்அவரவர்கள்வேலையைசரிவரசெய்தார்கள். அவன்அன்றேமிகவும்அருமையாகசப்பாத்திசப்ஜிசெய்தான். இவள், ஆவென்றுபார்த்துக்கொண்டேஇருந்தாள். அவன், ‘மெத்மெத்’ சப்பத்திக்கானமாவுஎப்படிகலப்பதுஎன்றுசொல்லிக்கொடுத்தான். வட்டவட்டமாகஅவன்இட்டசப்பாத்திகளைபார்த்துக்கொண்டிருந்தவள்எனக்கும்இப்படிவருமாஎன்றுகேட்டாள். கண்டிப்பாக, பழக்கம்தான்காரணம்என்றுசொன்னான். அவள்இதுநாள்வரைசாப்பிட்டபிஜிசப்பாத்தியைவிடஇதுமிகவும்மிருதுவாகநன்றாகஇருந்தது, சுவையாகவும்இருந்தது. அவனைமனதாரபாராட்டினாள்.
இப்படியாகஇவர்கள்குடித்தனம்செய்யஆரம்பித்தார்கள்ஆபீசுக்கும்திங்கள்கிழமைமுதல்ஒன்றாகபோய்வரஆரம்பித்தார்கள்ஆபீஸில்இருப்பவர்கள், இவர்களைகொஞ்சம்ஏறஏறஇறங்கப்பார்த்தார்கள்பிறகுஅவர்களேநமட்டுச்சிரிப்புசிரித்துக்கொண்டுபுரிந்துகொண்டார்கள்.
தொடரும்....
ஆனால்அவன்கொஞ்சம்கூடகவலைப்படாமல், இட்ஸ்ஓகே , வெளியில்சாப்பிடவேண்டாம். நான்நன்றாகசமைப்பேன்என்றுசொன்னான். மேலும், சமையல்ஒன்றும்கஷ்டமோ , கடினமோஅல்லநீயும்சுலபமாககற்றுக்கொள்ளலாம்என்றுசொன்னான். இனிஇருவரும்ஒன்றாகத்தானேஇருக்கப்போகிறோம், நானேகற்றுக்கொடுக்கிறேன்என்றும்சொன்னான்.
அவனின்இந்தப்பதில், ஆச்சரியமாகஇருந்ததுஅவளுக்கு. அலுவலகத்தில்அவனுக்குநல்லபெயர்இருந்தது. எந்தவிதமானபிரச்சினையும்சுலபமாகதீர்த்துவிடுவான்மிகமிகக்கூர்மையானஅறிவுஎன்றுஅவனைப்புகழ்வார்கள்.
இப்போதுபார்த்தால்நன்றாகசமைக்கதெரியும்என்றுவேறுசொல்கிறான். இன்னும்என்னென்னதெரியும்அவனுக்கு? அவன்மீதுமதிப்புமிகுந்துகொண்டேபோனது. தான்மக்குஎன்றுஅவளுக்குதோன்றியது.
ஒருநொடிஅவள்தன்தந்தையைநினைத்துப்பார்த்துக்கொண்டாள். அவர்ஒருநாள்கூடஎதுவும்சமைத்ததுஇல்லை. அம்மாதான்எல்லாமேசெய்வாள். அக்காவாவதுஏதாவதுஅம்மாவிற்குஉதவுவாள்ஆனால்தான்உதவியதேஇல்லைஎன்பதைசௌகரியமாகமறந்தாள். அம்மாஉதவிக்குகூப்பிடும்பொழுதுதான்முக்கியமானஅசைன்மென்ட்இருக்கிறதுஎன்றுசொல்வாள்.
அப்பாவும், அவளைஏன்தொந்தரவுசெய்கிறாய்என்றுஉடனேஇவளின்சப்போர்ட்டுக்குவந்துவிடுவார். பிறகென்ன, இவள்அடுப்படிவேலைகளில்இருந்துதப்பித்துவிடுவாள். அப்படிஇருந்தவள்தான்இப்பொழுதுஇப்படிநினைக்கிறாள், சமைக்கத்தயாராகிவிட்டாள். தனக்குஎன்றுவரும்பொழுதுஎல்லோருக்கும்நேரம்பொழுதுஎல்லாமேஇருக்கும்என்றுநினைக்கிறேன்.அதைத்தான்மனம்இருந்தால்மார்கம்உண்டுஎன்றார்களோ?
லிஸ்ட்படிகடையில்மளிகைபொருட்கள்வாங்கிக்கொண்டார்கள். திங்கட்கிழமைதான்ஆபீஸ்என்பதால்இந்தசனிஞாயிறுவீட்டிலேயேகழித்தார்கள்வீட்டில்கிச்சனில், எல்லாவற்றையும்ரெடிசெய்துவைத்தார்கள்.
நாளைக்குஎன்னசமையல், அதற்குவேண்டியஎல்லாவற்றையும்எப்படிமுதல்நாளேஎடுத்துவைத்துக்கொள்வது, எப்படிஎதைமுன்னேசெய்யவேண்டும்எதைபிறகுசெய்யவேண்டும்என்றுசமையல்செய்முறைகளைஅவன்கற்றுக்கொடுத்தான்.
சமைக்கத்தான்தெரியாதேதவிரகாய்கறிகள்கட்பண்ணிதருகிறேன்; பாத்திரங்கள்அலம்பிதருகிறேன்என்றுசொன்னாள். அவன்சிரித்துக்கொண்டேசரிஎன்றுசொன்னான்இதுபோலஆளுக்குஒருவேலைசெய்தால்சிரமம்தெரியாதுஎன்றும்சொன்னான். வாஷிங்மெஷின்இருந்ததால்துவைக்கவும்பிரச்சினையாகஇருக்கவில்லை. அயன்பாக்ஸும்இருந்தது.
இருவரும்அவரவர்கள்வேலையைசரிவரசெய்தார்கள். அவன்அன்றேமிகவும்அருமையாகசப்பாத்திசப்ஜிசெய்தான். இவள், ஆவென்றுபார்த்துக்கொண்டேஇருந்தாள். அவன், ‘மெத்மெத்’ சப்பத்திக்கானமாவுஎப்படிகலப்பதுஎன்றுசொல்லிக்கொடுத்தான். வட்டவட்டமாகஅவன்இட்டசப்பாத்திகளைபார்த்துக்கொண்டிருந்தவள்எனக்கும்இப்படிவருமாஎன்றுகேட்டாள். கண்டிப்பாக, பழக்கம்தான்காரணம்என்றுசொன்னான். அவள்இதுநாள்வரைசாப்பிட்டபிஜிசப்பாத்தியைவிடஇதுமிகவும்மிருதுவாகநன்றாகஇருந்தது, சுவையாகவும்இருந்தது. அவனைமனதாரபாராட்டினாள்.
இப்படியாகஇவர்கள்குடித்தனம்செய்யஆரம்பித்தார்கள்ஆபீசுக்கும்திங்கள்கிழமைமுதல்ஒன்றாகபோய்வரஆரம்பித்தார்கள்ஆபீஸில்இருப்பவர்கள், இவர்களைகொஞ்சம்ஏறஏறஇறங்கப்பார்த்தார்கள்பிறகுஅவர்களேநமட்டுச்சிரிப்புசிரித்துக்கொண்டுபுரிந்துகொண்டார்கள்.
தொடரும்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|