புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயில குத்து - சினிமா Poll_c10வாயில குத்து - சினிமா Poll_m10வாயில குத்து - சினிமா Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வாயில குத்து - சினிமா Poll_c10வாயில குத்து - சினிமா Poll_m10வாயில குத்து - சினிமா Poll_c10 
3 Posts - 8%
heezulia
வாயில குத்து - சினிமா Poll_c10வாயில குத்து - சினிமா Poll_m10வாயில குத்து - சினிமா Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வாயில குத்து - சினிமா Poll_c10வாயில குத்து - சினிமா Poll_m10வாயில குத்து - சினிமா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வாயில குத்து - சினிமா Poll_c10வாயில குத்து - சினிமா Poll_m10வாயில குத்து - சினிமா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயில குத்து - சினிமா


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Oct 08, 2020 1:04 pm


 “சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது. உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மனம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது.

கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடைய செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவை கட்டமைத்தார்கள்?

சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம், தப்பில்லை. இலைமறை காய்மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத்தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? நான் கலாச்சார சீர்கேடு எனக்கூவும் நபரல்ல, ஆனால் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன்.

கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து ரசிப்பவன். ஆனால் “இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப்பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தை போதிக்கவா முன்வந்தோம்?

இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக்கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது… நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன். இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண்மக்கள் இல்லையா? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன்.

இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதெற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என்று அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன்.சமூக சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்.. எத்தனை குழந்தை சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சித்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத்தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்துகொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

(பாரதிராசா - புதியதலைமுறை)

வாயில குத்து -2
வர்மம் படம் ஆபாசக் காட்சிகள்,வசனங்களுடன் வந்திருக்கிறது. நடிப்பு மோசம். அப்பாவின் இடத்தை அவரால் பிடிக்க முடியாது.அதற்காக இப்படியா?

ஆங்கில சினிமா பார்ப்பவர்களுக்குத் தெரியும்,ஹாலிவூட்டில் இப்போது ஆபாசக் காட்சிகள் குறைய,அந்த இடத்தை இந்தியா பிடித்து வருகிறது.அரசு ஆபாச இணையத் தளங்களை தடை செய்கிறது.ஆனால் மக்களிடம் நேரடியாக செல்லும் சினிமாவை கண்டு கொள்வதில்லை.வருமானம் காரணமா?

இது எனது கருத்து மட்டுமே! உங்களுக்குப் பிடிக்கலாம்.மாதர் அமைப்புகள் ஒதுங்கி விட்டன.ஒருசமயம் அவர்களுக்குப் பிடிக்கிறதோ என்னவோ?



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 09, 2020 7:28 am

இதற்கு இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் பதில்
அளித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கிய டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரை
முன்வைத்து, ட்விட்டரில் கூறியதாவது:

டிக் டிக் டிக் படம் 1981-ல் வெளியானது. இதைப் பார்த்து
கூசாத கண்ணு இப்போ கூசுதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தினமணி

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 09, 2020 5:15 pm

ஆபாச பட இயக்குநரின் அடுத்த படைப்பான ‘’இரண்டாம் குத்து’’படத்தினை கடுமையாக சாடியிருந்தார் இயக்குநர் பாரதிராஜா. திரையுலகின் மூத்த கலைஞர் என்ற முறையில் அவர் கண்டித்திருந்ததை அலட்சியம் செய்துவிட்டு, பதிலுக்கு அவரையே நக்கல் அடித்திருந்தார் ஆபாச இயக்குநர் சந்தோஷ் பி சுப்பிரமணியன்.

“இரண்டாம் குத்து” என்று ஒரு படம், அதன் போஸ்டர்கள், டீசர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதைப் பற்றி பொதுவெளியில் பேசக் கூட அருவெறுப்பு அடையும் அளவுக்கு வக்கிரமாக இருந்தன. இப்படியும் இருப்பார்களா மனிதர்கள் என்ற அளவுக்கு எனக்கு நினைக்கத் தோன்றியது. இந்தப் படத்திற்கு திரையுலகம் சரியான எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லையோ என்ற கேள்வி எனக்குள் இருந்தது. ஒருவேளை அவ்வாறு செய்து அதுவே இந்த
படத்திற்கு விளம்பரம் போல் ஆகி விடலாம் என்பதால் அனைவரும் பேசாமல் இருந்து இருக்கலாம்.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில் நேற்று பூனைக்கு இயக்குநர் இமயமே தெரிவித்த கண்டனம் மிகச் சரியானதே. அதில் தெளிவாக இது போன்ற படங்களால் ஏற்படும் சமூகக் கூச்சத்தை, சீரழிவை,பொதுவெளியில் பெண்கள் இழிவு செய்யப்படும் அபாயத்தைச் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஏற்கனவே திரையுலகத்தைப் பற்றிய பல தவறான பிம்பங்கள் சமூகத்தில் இருக்கின்றன. அது போதாது என்று இந்த கரோனா நேரத்திலும் இது போன்ற படங்கள் ஏழரையைக் கூட்டுகின்றன. ஈவ் டீசிங் பிரச்சனைகளை சிறிது காலமாகத்தான் தமிழகம் சந்திக்காமல் இருந்து வருகிறது. இது போன்ற கீழ்த்தரமான படம் இளைஞர்களின் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யோசிக்க வேண்டாமா?

“விசாரணை”, “அறம்” போன்ற அற்புத படைப்புகள் வெற்றி பெறும் காலத்தில் இது போன்ற படங்கள் எதை நோக்கிக் கொண்டு செல்கின்றன நம் மக்களை என்று யோசித்துப் பாருங்கள். பாரதிராஜாவின் கோபத்தில் இருக்கும் நியாயம் புரியும். அதற்குப் பதில் தெரிவித்து இருந்தார் இந்த கலைப்படைப்பின் இயக்குநர்! பாரதிராஜாவின் “டிக் டிக் டிக்” படத்தைக் குறிப்பிட்டு கண் இப்போது கூசுகிறதோ? என்று எழுதி இருந்தார். இது போன்ற அரைவேக்காட்டுத்தனமான பதில்களைப் படித்தால் எரிச்சல் தான் வருகிறது. டிக் டிக் டிக் படத்தில் என்ன ஆபாசத்தைப் பார்த்தார் என்று புரியவில்லை.

டிக் டிக் டிக் பட வில்லன் பெண்களின் உடல்களில் வைரங்களைக் கடத்துவார், கமல் எப்படி அதைக் கண்டு அறிகிறார் என்பது கதை. ஒரே ஒரு பாட்டில் கதாநாயகிகள் நீச்சல் உடையில் தோன்றுவதைத் தவிர வேறு எந்த இடத்திலும் கவர்ச்சியான காட்சிகள் இருக்காது.

சொல்லப் போனால் கதைக்குத் தேவைப்பட்டால் கூட அந்தப் படத்தில் எந்தக் காட்சியும் அப்படி வைக்கப்பட வில்லை. படத்தில் பல இடங்களில் அது போன்ற காட்சிகளின் அவசியம் இருந்தும் பாரதிராஜா தவிர்த்து இருக்கிறார். அந்த பாட்டில் கூட அந்த மூன்று பெண்களின் நாகரீக வாழ்க்கையை எடுத்துக் காட்டுவது போன்ற ஒரு சீன்தான் அந்த நீச்சல் உடைக் காட்சி. அந்தக் காலக்கட்டத்தில் அது போன்ற வாழ்க்கை பணக்காரப் பெண்களுக்கே சாத்தியம் குறைவுதான். எனவே இந்த மூன்று கதாநாயகிகளின் வாழ்க்கையை தனித்துக் காட்டுவதற்காக வைக்கப்பட்ட காட்சியாகத்தான் அந்த நீச்சல் உடை சீனை நான் பார்க்கிறேன்.

இதில் என்ன ஆபாசத்தைப் பார்த்தார் இந்த “இரண்டாம் குத்தின்” இயக்குநர் என்று புரியவில்லை. சொல்ல வேண்டுமே என்று சொல்லக் கூடாது. அதுவும் யாரைப் பார்த்து என்று நினைக்கையில் எனக்கு நிலைகொள்ள வில்லை.

“வேதம் புதிது” போன்ற படத்தை எடுத்த பாரதிராஜாவோ, சத்யராஜோ சாருஹாசனோ வெறும் பணத்திற்காகவா அந்தப் படத்தில் உழைத்தார்கள்? பதில் சொல்ல இயலுமா “இருட்டு அறையில் முரட்டு குத்து” இயக்குநரே!

ஜாதிய, மத சமூகத்தைத் தாண்டியது மனித நேயம் என்பதைத் தன் படங்களில் உணர்த்தியவர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் என்ற பெயர் ஒன்றும் சும்மா வரவில்லை, அதன் பின்னால் இந்தச் சமூகத்தின் மேல் பாரதிராஜா வைத்து இருக்கும் கோபம், அக்கறை, பரிவு அனைத்தும் இருக்கின்றன என்பதை மனதில் வையுங்கள்.

அனைத்துக் குழந்தைகளின் கைகளிலும் மொபைல் இருக்கிறது. இது போன்ற சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள். அது கரோனாவை விட மோசமான பரவல்.

வயது வந்த பிள்ளைகளை வைத்து இருக்கும் பெற்றோர்களின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்கள். இன்று பரியேறும் பெருமாள் போன்ற அற்புதமான படம் வெளிவந்து ரசிகனின் மனதில் ஒட்டுமொத்தமாக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, அதே நேரத்தில் வெற்றியும் பெறும் காலத்தில் இருக்கிறோம். அதைக் கீழே இழுக்காதீர்கள், “இரண்டாம் குத்தின்” இயக்குநரே! என்று கடுமை காட்டியிருக்கிறார் ‘எட்டுத்திக்கும் மதயானை’ தங்கசாமி .

(இணையம்)


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக