புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
6 Posts - 60%
heezulia
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:07 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Tamil_News_large_2620911

பாட்டுத்தலைவனாக சிகரம் தொட்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காலையில் சுப்ரபாதமாக, மாலையில் துள்ளல், 'டிஸ்கோ' கீதங்களாக, இரவில் நிம்மதியாக உறங்க தாலாட்டு பாடலாக வீட்டுக்கு வீடு கேட்டுக் கொண்டே இருக்கும் பாலுவின் பாட்டு. கற்கண்டு குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரில் கலந்தவர்.
இவரது சாகாவரம் பெற்ற பாடல்கள், காற்றில் கலந்து, உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.'ஹரிகதை' சொல்லும் கலைஞரான தந்தை சாம்பமூர்த்தியிடம் இருந்து இசை ஆர்வம், எஸ்.பி.பி.,க்கு பிறந்தது. இளம் வயதில் ஹார்மோனியம், புல்லாங்குழல் கற்றார். பின் ஆந்திராவின், ஜே.என்.டி.யு., காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கில் பி.இ., சேர்ந்தார்.

தொடரும்....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:08 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233703264_2620911

உடல்நிலை பாதிப்பால், படிப்பை தொடர முடியாமல் போக சென்னைக்கு வந்து, ஏ.எம்.ஐ.இ., படித்தார். 1964ல் சென்னையில் உள்ள ஆந்திர கலாசார மையம் நடத்திய பாடல் போட்டியில் முதல் பரிசு பெற, மீண்டும் இசை பக்கம் பயணிக்க துவங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து சில பாடல்களை பாடி காட்டினார். 'தமிழ் தெரியுமா' என்று எம்.எஸ்.வி., கேட்க, 'பேசத் தெரியும், படிக்க தெரியாது' எனக் கூறியிருக்கிறார். 'உனக்கு பாட வாய்ப்பு தருகிறேன். தமிழை நன்றாக கற்றுக் கொள்' என்ற எம்.எஸ்.வி., அறிவுரைப்படி தமிழ் கற்றார். எம்.எஸ்.வி., கூறிய படியே இவருக்கு, ஹோட்டல் ரம்பா படத்தில் வாய்ப்பு தந்தார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:08 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233711812_2620911

இப்படம் வெளியாகவில்லை. பின் எம்.எஸ்.வி., இசையில் சாந்தி நிலையம் படத்தில், 1969ல் சுசிலாவுடன் இணைந்து, 'இயற்கை என்னும் இளைய கன்னி...' எனும் முதல் பாடலை பாடினார்.

இப்படம் வெளிவரும் முன், 1969 மே 1ல் எம்.ஜி.ஆரின், அடிமைப்பெண் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசிலாவுடன் இவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா...' பாடல், 'ஹிட்' ஆனது. இது தமிழில் இவரது முதல் பாடலாக வெளிவர, ரசிகர்களின் இதயங்களில் அழுத்தமாக இடம் பிடித்தார்.

தொடரும்....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:09 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233715569_2620911


'நெல்லுார்' நாயகன்



இயற்பெயர் : ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம்
சினிமா பெயர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
புனைப்பெயர் : பாலு, எஸ்.பி.பி.,பிறப்பு : 4.6.1946
பிறந்த இடம் : நெல்லுார், ஆந்திரா
பெற்றோர் : தந்தை சாம்பமூர்த்தி, தாய் சகுந்தலாம்மா
சகோதரி : எஸ்.பி.சைலஜா - பாடகி
மனைவி : சாவித்ரி
குழந்தைகள் : சரண் - மகன், பல்லவி - மகள்
சினிமா அனுபவம் : 1966 -- 2020



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:10 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233720725_2620911


எம்.ஜி.ஆர்., வாய்ப்பு



அடிமைப்பெண் படத்தில் புலமைப்பித்தன் எழுதிய, 'ஆயிரம் நிலவே வா...' பாடலை எஸ்.பி.பி., பாடுவதாக இருந்தது. ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், எஸ்.பி.பி.,க்கு காய்ச்சல். வேறு பாடகரை வைத்து பாடலை பதிவு செய்யவா என, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., 'பத்திரிகையில் எம்.ஜி.ஆர்., நிராகரித்த குரல் என எழுதுவர். அது, சகாப்தம் படைக்க போகிற இளைஞனின் வாழ்க்கையை வீணாக்கிவிடும். படப்பிடிப்பை தள்ளி வைக்கிறேன்' என்றார்.
சில மாதம் கழித்து, எஸ்.பி.பி.,யை பாட அழைத்த போது, அவரால் நம்ப முடியவில்லை. பாடலை முடித்ததும், எம்.ஜி.ஆரை சந்தித்து நன்றி கூறினார்.

அப்போது, எம்.ஜி.ஆர்., 'என் படத்தில் பாடுவதாக நண்பர்களிடம் தெரிவித்திருப்பாய். வாய்ப்பு கிடைத்தும் பாடும் வாய்ப்பு தடைபட்டால், நீ ராசியில்லாதவன் என' பிறர் கூறத்தொடங்கி விடுவர். நீ வளர வேண்டியவன். உனக்காகவே இப்பாட்டு காத்திருந்தது' என்றார். இப்பாடலை இலங்கை வானொலி மூலம் உலகம் எங்கும் ஒலிக்கச் செய்தார், எம்.ஜி.ஆர்.,



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:10 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233725540_2620911



கடவுள் மொழி



கடவுள் பேசும் மொழி என்று ஏதாவது இருந்தால், அது தான் இசை. மிகவும் புனிதமானது. அனைத்து மொழிகளிலும் இசையை பயன்படுத்தலாம். உலகளாவிய தன்மை கொண்டது இசை.-எஸ்.பி.பி.,



குருவே சரணம்



தெலுங்கு இசையமைப்பாளர் கோதண்டபாணி மூலம் அறிமுக பாடல் பாடினார். படம்: ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா.(டிச.15, 1966). தன் 'ரிக்கார்டிங்' தியேட்டருக்கு, 'கோதண்டபாணி' என பெயர் சூட்டி, குருவுக்கு நன்றி செலுத்தினார், எஸ்.பி.பி.,வெள்ளித்திரையில்மனதில் உறுதிவேண்டும், கேளடி கண்மணி, சிகரம், குணா, தலைவாசல், திருடா திருடா, காதலன், உல்லாசம், ரட்சகன், பிரியமானவளே, நாணயம் என பல தமிழ் படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர வேடமேற்றும் நடித்தார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:11 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233730971_2620911


சிரிப்பு... சிறப்பு...

சில பாடல்களுக்கிடையே எஸ்.பி.பி., உதிர்க்கும் சிரிப்பு, அதன் சுவையை அதிகரிக்கும். பல குரலில் பாடுவது இவருக்கே உரிய தனித்தன்மை

பன்முக திறன்

நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், 'டப்பிங் ஆர்டிஸ்ட்' என அனைத்திலும் முத்திரை பதித்த சாதனையாளர்.

40,000

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தவர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:12 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233735136_2620911

விருதுகள்:

தேசிய விருது -6

* 1979ல் சங்கராபரணம் - தெலுங்கு - 'ஓம்கார நாதானு...'
* 1981 ஏக் துஜே கே லியே - ஹிந்தி - 'தேரே மேரே பீச் மே...'
* 1983 சாஹர சங்கமம் - தெலுங்கு - 'தகிட ததிமி...'
* 1988 ருத்ர வீணா - தெலுங்கு - 'செப்பாலனி உண்டி...'
* 1995 சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷ்ரா கவய் - கன்னடம் - 'உமண்டு குமண்டு...'
* 1996 மின்சார கனவு - தமிழ் - 'தங்கத் தாமரை மகளே...'

பத்ம விருதுகள்:

* 2001 - 'பத்மஸ்ரீ'
* 2011 - 'பத்ம பூஷண்'கலைமாமணி
* 1981- தமிழக அரசின், 'கலைமாமணி' விருது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:13 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233744955_2620911

பிலிம்பேர் விருது

* 1989 - மைனே பியார் கியா (ஹிந்தி) படத்தில் 'தில் தீவானா...' பாடலுக்காக, 'பிலிம்பேர்' விருது
* 2007 - மொழி -- தமிழ் படத்திற்கு, 'பிலிம்பேர்' விருது
* 1969 - அடிமைப் பெண், 'சாந்தி நிலையம்...' 1990ல் கேளடி கண்மணி படத்தில் பாடியதற்காக தமிழக அரசின் சினிமா விருது.

* தெலுங்கில் பாடகர், சிறந்த இசையமைப்பாளருக்கான, 'நந்தி விருது'

கர்நாடக அரசு, சினிமா விருது,

கேரள அரசின், ஹரிவராசணம் விருது

* பல பல்கலை, 'டாக்டர்' பட்டம்.

ஜேசுதாஸ் மீது பாசம் !

ஆரம்பத்தில் ஜேசுதாஸ் பாடல்களையே கச்சேரிகளில் பாடினேன். அப்போது பயபக்தியுடன் பார்த்தேன். இருவரும் கச்சேரிகளில், ஒரே மைக்கில் பாட துவங்கியபோது நட்பு அதிகமானது. அது அழகான பந்தம். சகோதரரைவிட அதிகம் நேசிக்கிறேன். அவரது குரல், கடவுள் கொடுத்த வரம்.
-எஸ்.பி.பி.,



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:14 pm


என் தம்பி கொடுத்த உணவு



ஒருமுறை பாரிசில் கச்சேரி முடித்து ஓட்டல் திரும்பினேன். அறையில் சாப்பாடு எதுவும் இல்லை. அப்போது கதவை டக்... டக்... என, தட்டும் ஓசை கேட்டது. 'ரூம் சர்வீஸ்' என்ற குரலுடன் என் தம்பி, சோறும் சட்னியும் கொண்டு வந்தான். அவன் வெளிநாட்டு பயணங்களின் போது ரைஸ் குக்கர், குழம்பு மசாலா, நெய் கொண்டு செல்வான். என்னா ருசி...என் தம்பி பாலு கொடுத்த உணவை மறக்க முடியுமா... எங்களது நட்பு ஜென்மம் ஜென்மமாக தொடரக் கூடியது.
-ஜேசுதாஸ்


துளிகள்



* சினிமாவிற்கு வருவதற்கு முன் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கருடன் இணைந்து மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தினார்.

* தேவராஜன் இசையமைப்பில் கடல்பாலம் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் கால்பதித்தார்.

* கமல், ரஜினி, விஜயகாந்த் என, அவரவர் உச்சரிப்புக்கு தகுந்தவாறு பாடும் வல்லமை பெற்றவர்.

* ஜெமினிகணேசன், நாகேஷ், கமல், மோகன், பாக்யராஜ், அர்ஜுன், கிரிஷ் கர்னாட், அனில் கபூர், சல்மான் கான் என, முன்னணி நட்சத்திரங்களுக்கு, 'டப்பிங் ஆர்டிஸ்டாக' பணிபுரிந்தார்.

* ஏக் துஜே கே லியே படத்தில், 'தேரே மேரே பீச் மே...' என்ற பாடலை பாடி, ஹிந்தி திரையுலகில் கணக்கை துவக்கினார்.

* கேளடி கண்மணியில் 'மண்ணில் இந்தக் காதல்...' அமர்க்களம் படத்தில், 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...' பாடல்களை மூச்சுவிடாமல் பாடினார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக