புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈரோடு நகரின் 149 ஆவது பிறந்த நாள் – இன்று
Page 1 of 1 •
-
ஈரோடு:
எ.எம்.மெக்ரிகர் என்ற ஆங்கிலேயர் தலைமையில் 7 நியமன உறுப்பினர்கள் கொண்ட ஈரோடு நகர பரிபாலன சபை 1871 செப்டம்பர் 16 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதுவே ஈரோடு வளர்ச்சிக்கு கால்கோள் நாட்டப்பட்ட நாள். அந்த வகையில் ‘மஞ்சள் மாநகரம்’ என்றழைக்கப்படும் ஈரோடு இன்று 149ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
இந்த நாளைப் போற்றும் வகையில் ஈரோடு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார் கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.ராசு.
இதுகுறித்து அவர் கூறியதாவது: 24 கொங்கு நாடுகளில் ஒன்றான பூந்துறை நாட்டின் பழம்பெரும் 32 ஊர்களில் ஈரோடும் ஒன்று. அதில் 4 கட்டமனையாக(மாகாணம்) 24 நாடுகளையும் பிரித்ததில், கட்டமனையின் தலைநகராக ஈரோடு விளங்கியது.
இங்கு ஒரு பெரிய மண் கோட்டை கட்டப்பட்டது. அதில் சிறுபடையும், தளவாய் கந்தாசாரம், சேனபாகம், சேர்வைகாரர், அட்டவணை போன்ற அதிகாரிகளும் இருந்தனர். மதுரை நாயக்கர், மைசூர் உடையார், திப்பு, ஹைதர் கம்பெனிப் போர்களில் ஈரோடு கோட்டை மிக முக்கிய இடம் பெற்றது. இவற்றால் ஈரோடு பெரும் அழிவைக் கண்டது. 2,000 வீடுகள் இருந்த ஈரோட்டில் ஆள் அரவமற்ற, 400 வீடுகளே எஞ்சின என்கிறார் ஸ்வார்ட்ஸ் பாதிரியார்.
திப்பு சுல்தான் மறைவுக்குப் பின் (1799), கம்பெனியினர் பவானியைத் தலைநகராகக் கொண்டு அமைக்கப்பட்ட நொய்யல் வடக்கு மாவட்டத்தில் ஈரோடு இருந்தது. 1804-ல் கோயம்புத்தூர் மாவட்டம் உருவானபோது, பெருந்துறை வட்டத்துக்கு உட்பட்ட ஒரு கிராமமாக ஈரோடு இருந்தது. பின்னர் 1868-ல் ஈரோடு வட்டம் உருவக்கப்பட்டது.
-
ஈரோடாக மாறிய ஈரோடை: பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையில் அமைந்ததால், ஈரோடை- ஈரோடு ஆயிற்று. அதேபோல் ஈரோடு, மறந்தை, உறந்தை, மயிலை, கபாலபுரி என்ற பெயர்களையும் பெற்றதை தல புராணம் கூறும். ஈரோடு கோட்டை, ஈரோடு பேட்டை என இரு பகுதியாக அழைக்கப்பட்டது.
கி.பி. 1282இல் வெட்டப்பட்ட காளிங்கராயன் கால்வாயால், ஈரோடு வளம் பெற்றது. கால்வாயின் கீழ் பெரும்பள்ளம் செல்ல 1282இல் பாலம் கட்டப்பட்டது. உலகப் பாலங்கள் நூலில் இது இடம் பெற்றுள்ளது. சோழர் காலக் கல்வெட்டு ‘ஈரோடான மூவேந்த சோழச் சதுர்வேத மங்கலம்’ என்று கூறுகிறது.
மூன்று, மூன்றாய் கோயில்கள்: ஈரோட்டில் மூன்று சிவன் கோயில், மூன்று பெருமாள் கோயில், மூன்று அம்மன் கோயில் சிறப்புமிக்கது. சோழர் கட்டிய கொங்கு நாட்டு முதல் கோயிலும் (907 இல் பள்ளிகொண்ட பெருமாள் கோவில்), முதல் கொங்குச் சோழன் மகிமாலய இருக்குவேள் ஆன வீரசோழன் கட்டிய கோயிலும் (932ல் மகிமாலீசுவரம்) காவிரிக் கரையில் கரிகாலன் கட்டிய கரிகால சோழீசுரமும் இங்குள்ளது.
கொங்கு நாட்டை வென்ற பிற அரசர்கள், ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் வந்து, கொங்கு நாட்டு அரசராக முடிசூடுவது வழக்கம். அதனால் இக்கோயில் ராஜ்ய அபிஷேக விண்ணகரம் எனப்பட்டது.
பெரியார் வீட்டில் தங்கிய மகாத்மா காந்தி: பெரியார் 1917ல் ஈரோடு நகராட்சி மன்றத் தலைவராகி, மூன்றாண்டு பதவி வகித்தார். ஈரோடு விடுதலை இயக்கத்தில் தன் பங்கைச் சிறப்பாகச் செலுத்தியது. ஈரோட்டுக்கு நான்கு முறை வந்த காந்தியடிகள் தம் இரண்டாவது வருகையின் போது, 1921, செப்டம்பர் 25ஆம் தேதி பெரியார் வீட்டில் தங்கினார்.
அன்று அவர் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் கள்ளின் கொடுமையைக் கூறினர். இதனால் காந்தியடிகள் கள்ளுக்கடை மறியலை காங்கிரஸ் திட்டங்களில் ஒன்றாகச் சேர்த்தார். இதுகுறித்து, 1921 டிசம்பர் 22இல் ‘யங் இந்தியா’ இதழில் ஈரோட்டுப் பெண்கள் என்ற தலைப்பில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.
கள்ளுக்கடை மறியலை நிறுத்தி வைசிராயிடம் பேசலாம் என்று சில தலைவர்கள் கூறியபோது, மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டு பெண்கள் இருவர் கையில் உள்ளது என்று காந்தியடிகள் கூறினார்.
-
வஉசி பூங்காவில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி
--
1860இல் அரசு தொடக்கப் பள்ளி: காந்தியடிகளுக்கு அவர் வாழும்போதே ஈரோட்டில் 1927 ஏப்ரல் 9 மற்றும் 1939 அக்டோபர் 1 ஆம் தேதி என இரண்டு சிலைகள் திறக்கப்பட்டன. கடந்த 1822ஆம் ஆண்டு கணக்கின்படி, ஈரோடு உள்ளிட்ட அன்றைய கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை 6 லட்சத்து, 38 ஆயிரத்து, 199 பேர். பள்ளி செல்பவர் எண்ணிக்கை, 8,930. படித்தோர் விழுக்காடு, 1.39 சதவீதம். அதிலும் பெண்கள் பள்ளி சென்றவர் 82 பேர் மட்டுமே. கடந்த 1860இல் ஈரோட்டில் அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இன்று அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியாக அது விளங்குகிறது. இதையடுத்து 1876இல் நகர பரிபாலன சபை டவுன் தொடக்கப்பள்ளியைத் தொடங்கியது.
முதல் கல்லூரி: தாசப்பையர், அண்ணாசாமி ஐய்யங்காரும் சேர்ந்து 1887இல் டவுன் உயர்நிலைப் பள்ளி தொடங்கி நடத்த முடியாமல், லண்டன் மிஷின் சபைக்கு விற்றனர். பெரியாரின் தந்தை வெங்கட நாயக்கரும், முதலாளி ஷேக் தாவூதின் தந்தையார் அலாவுதீன் சாயயும் (டாக்டர் அமானுல்லா பாட்டனார்) எல்லாச் சமூகத்தாரையும் இணைத்து 1899இல் மகாசன உயர்நிலைப்பள்ளி தொடங்கினர்.
ஜூலை 12, 1954இல் மகாசனக் கல்லூரியை ஆரம்பித்தனர். இதுவே மாவட்டத்தின் முதல் கல்லூரி, மகாசன கல்லூரி, சிக்கய்ய நாயக்கர் மகாசனக் கல்லூரியாகி, இன்று சிக்கய்ய நாயக்கர் கல்லூரியாக உள்ளது.
பாரதியின் கடைசி வெளியூர் பயணம்: கடந்த 1927 ஏப்ரல் 9 ஆம் தேதி மூன்றாம் முறை நகராட்சித் தலைவராக இருந்த சீனிவாச முதலியாரால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தண்ணீர் தொட்டி அருகே சீனிவாசா பூங்கா ஏற்படுத்தப்பட்டது. (பின்னர் பீப்பிள்ஸ் பார்க், வ.உ.சி., பூங்கா) காரனேஷன் ஹால் கட்டப்பட்டு அதில் காக்ஸ் ரீடிங் அறை திறக்கப்பட்டது. திறப்பு விழா செய்தவர் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயன். பெரியார் குடியரசு பதிப்பகம் தொடங்கி, 100-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டார்.வழக்குரைஞர் தங்கப்பெருமாள் பிள்ளை தொடங்கிய பாரதி வாசக சாலை ஆண்டு விழாவுக்கு, ஜூலை 31, 1921 இல் பாரதியார் வந்தார். இதுவே அவரின் கடைசி வெளியூர் பயணமாக அமைந்தது.
மஞ்சள் மாநகரம்: கடந்த 1973இல் நூற்றாண்டு விழாவை நகராட்சி கொண்டாடியது. 2007 டிசம்பர் 29இல் ஈரோடு நகராட்சி, மாநகராட்சி ஆனது. ஈரோடு மஞ்சள் சந்தை இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜவுளி உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளது. விசைத்தறியில் முன்னணியில் உள்ளது.
மத்திய, மாநில உதவியுடன் ஆசியாவிலேயே மிகப் பெரிதாக கட்டப்பட்டுள்ள டெக்ஸ்வெலி ஜவுளி விற்பனை மையம் ஈரோட்டில் உள்ளது. எண்ணெய் உற்பத்தி, லாரி போக்குவரத்தும் சிறப்பாக நடக்கிறது. தோல் தொழில் பெரிய அளவில் நடக்கிறது. புகழ் பெற்ற பெரிய பல்துறை மருத்துவமனைகள் பல உள்ளன.
போரையே வென்ற ஊர்: மரம் வளர்ப்பு, ஊனமுற்றோர் மறுவாழ்வில் சக்தி மசாலா நிறுவனம் சிறப்பாக பணியாற்றுகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற பல கட்டுமான நிறுவனங்கள் உள்ளன. 1944இல் ஈரோட்டில் முதலில் தொடங்கப்பட்ட கலைமகள் மேல்நிலைப் பள்ளியில், உலக அளவில் புகழ் பெற்ற அருங்காட்சியகம் உள்ளது.
பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி 1979 செப்டம்பர் 17இல் அமைக்கப்பட்ட மாவட்டத் தலைநகரான ஈரோடு, முன்பு ஏற்பட்ட போர்கள், புயல், பூகம்ப அழிவை வென்று, இன்று பல துறைகளிலும் முன்னேறி வருகிறது என்றார்.
-கே.விஜயபாஸ்கர்
தினமணி
- Sponsored content
Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|