புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
6 Posts - 20%
viyasan
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 12, 2020 11:57 am

First topic message reminder :

இது என்னுடைய முதல் குறுங்கதை.... படித்து உங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள் உறவுகளே ! புன்னகை...படிப்பவர்கள் குறைந்த பக்ஷம் ஒரு ஸ்மைலியாவது பதிலாக போடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.....புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

காலை இல் எழுந்திருக்கும்பொழுதே எங்கோ மெல்லிய அழுகுரல்களும் பேச்சுக்குரல்களும் கேட்டது. ஆனால் கண்களைத் திறந்ததுமே அந்த சப்தங்கள் மெல்ல மெல்ல அடங்கிவிட்டன. ஆழ்ந்து சுவாசித்தேன், இதுவரை நான் நுகர்ந்து அறியாத சுகந்தம். ஆழ்ந்து மூச்சை இழுத்து, அந்த வாசத்தை நன்கு நுகர்ந்து சுவாசத்தை வெளியே விட்டேன். ஆனாலும் என்னால் அது இன்ன வாசனை என்று சொல்லத்தெரியவில்லை. அதே போல குளிரும் அல்லாத வெயிலும் அல்லாத இதமான ஒருவித தட்பவெட்ப நிலை என்னை சூழ்ந்து  இருந்ததை என்னால் உணரமுடிந்தது.

நான் எங்கேயோ போவது போல இருந்தது. போவது என்று கூட சொல்ல முடியாது, பறப்பது போலிருந்தது. இது கனவு என்றே எண்ணுகிறேன். நானாவது பறப்பதாவது. போன வாரம் என்னவரின் சதாபிஷேகத்தின் போது நடக்கவே நான் சிரமப்பட்டேன். மேடை இல் நாற்காலி தான் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டேன். இதோ நேற்று நடந்த என் பேரனின் ஸீமந்ததிற்கும் என்னால் ஓடியாடி வேலை செய்யமுடியவில்லை. உட்கார்ந்த படிக்கு ஆட்களை ஏவிக்கொண்டிருந்தேன். நானாவது பறப்பதாவது. ஆனாலும் அப்படித்தான் தோன்றியது. கண்களை நன்கு திறந்து பார்த்தேன். என்னுடைய இரண்டு பக்கத்திலும் மிக மிக அழகிய பெண்கள், வெள்ளை  வெளேர்  என்கிற மிக அழகிய உடையுடன்,  கருணை வழியும் கண்களுடன் என்னை பார்த்து புன்சிரிப்பு சிரித்தனர். என் கைகளை அவர்கள் ஆதுரத்துடன்  பிடித்துக்கொண்டிருந்தனர்.

ஓ, இவர்கள் பிடித்துக்கொண்டிருப்பதால் தான் என்னால் வலி இல்லாமல் நடக்க முடிகிறதா... இல்லை இல்லை பறக்க முடிகிறதா என்று எண்ணிக் கொண்டேன். இவர்கள் யாராக இருக்கும் ...கேட்கலாமா என்று நினைத்தேன். ஆனால் சுற்றுப்புறத்தில் நான் பார்த்த காட்சிகள் என்னை கேள்விகேட்க விடாமல் என் வாயை அடைத்து விட்டன. ஆம் அத்தனை அழகான கண் கவர் காட்சிகள். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என மரங்கள். நான் முன்பின் பார்த்திராத பூ மற்றும் காய்கனி வர்க்கங்கள். ஆச்சர்யமான பாதை. ஆனால் வெகு நீளமான பாதை.

பறப்பது என்று சொல்கிறேனே தவிர, அது வான் வெளி இல் பறப்பது போல தோன்றவில்லை. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் நகர்வது அல்லது ஊர்ந்து செல்வது போல இருந்தது எனக்கு. நன்றாக பராக்கு பார்த்துக்கொண்டே அவர்களுடன் சென்றேன். என் வீட்டு மனிதர்கள் ஏன் என்னுடன் இல்லை என்கிற பிரக்ஞையே எனக்கு அப்பொழுது இல்லை. ஏதோ பிகினிக் செல்லும் குழந்தை யைப் போல குதூகலமான மனத்துடன் சென்றுகொண்டிருந்தேன் அவர்களுடன். முடிவில்லாத பயணமாக அது இருந்தாலும் அதில் எனக்கு சம்மதமே என்று தோன்றியது . அத்தனை அழகான வழி அது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 6:43 pm

T.N.Balasubramanian wrote:முதல் பதிவை படிக்கும் போதே எப்பிடி பட்ட கதையாக இருக்குமென யோசிக்கமுடிந்தது.
இருப்பினும் வழக்கமான பின்னல்கள் இருக்குமே . தொடருங்கள். 

ரமணியன் 

@krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1331011

மிக்க நன்றி ஐயா.....புன்னகை..... டைப்பிங்கில் ஏற்பட்ட பிழைத்திருத்தத்தை திருத்தி விட்டேன் ஐயா... புதிதாக கிருஷ்ணா ஒரு APP download செய்து கொடுத்தான்...அதில் இன்னும் பழகவில்லை... அதுதான் எழுத்துப் பிழைகள்... புன்னகை
.
.
நான் தொடருகிறேன் ஐயா நீங்களும் தொடருங்கள் புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 6:45 pm

ayyasamy ram wrote:மேடை இல் நாற்காலி

ஒரு மாளிகை இன் வாசலில் விட்டு

கிண்ணி இல் இருந்ததை

-
மேடையில்

மாளிகையின்

கிண்ணியில்
-
என சேர்த்து எழுதுவதே சிறப்பு
-
கதை... மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 3838410834
-
தொடரவும்
மேற்கோள் செய்த பதிவு: 1331016

நன்றி அண்ணா... ஐயாவிற்கு சொன்ன பதில் தான் அண்ணா... இனி கவனமாக இருக்கிறேன் புன்னகை ... தொடர்ந்து படியுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 6:46 pm

T.N.Balasubramanian wrote:என்னாச்சு ...  5 நாளாச்சு .....E பாஸ் கிடைக்கவில்லையா? மாமி ஏதாவது சொல்லுவாங்க என்று பார்த்தால் ? 


ரமணியன் 

@krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1331359

இதோ வந்துவிட்டேன் ஐயா....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 6:47 pm

ஒரு சில நிமிடங்களுக்கு எதுவுமே ஓடவில்லை எனக்கு. கொஞ்சம் வருத்தமாக இருந்தது. சென்ற ஒருவாரமாக எல்லோருடனும் மிகவும் மகிழ்ச்சியாக கழித்தாகிவிட்டது. அதில் ஒரு குறையும் இல்லை. ஆனால் அந்த கொலுசுகளை என் கையால் குழந்தைகளுக்கு போட்டு விட்டிருப்பேன், கனகாபிஷேகம் செய்து கொண்டு இருப்பேன்...ஹூம்...போகட்டும் ஒரு வார்த்தை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வந்திருக்கலாம். என்றாலும், படுத்து எல்லோரையும் சிரமப்படுத்தாமல் சுமங்கலியாக இங்கு வந்து சேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி. என் வேண்டுதலுக்கு பெருமாள் செவி சாய்த்ததில் பரம திருப்தி எனக்கு. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கோவிந்தா என்று கையெடுத்து கும்பிட்டேன்.

அவர்கள் அனைவரும் நலமுடன் வாழ அனுகிரகம் செய் கோவிந்தா. என்னுடைய பிரிவைத்தாங்கிக்கொள்ள நல்ல மனோதிடத்தை அவர்களுக்கு அருள் என்று வேண்டிக்கொண்டேன். வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலை இல் இருக்கிறேன் நான்.
எத்தனை நாட்கள் வாழ்ந்து விட்டு வந்தாலும், ஏதாவது ஆசை விட்டுத்தான் போய் இருக்கும்...அதனால் எத்தனை சந்தோஷமாய் இருந்து விட்டு வந்தோமோ அத்தனை நிம்மதி என்று மன அமைதி கொள்ள வேண்டும் என புரிந்து கொண்டேன்.

இந்த நேரத்திற்குள் ஒரு 7 - 8 தடவைகள் எனக்கு அந்த பெண், சரி அது தான் செத்தாச்சே, இப்பொழுது புரிந்தது அவர்கள் எல்லோரும் தேவதைகள் என்று. வெய்ட் வெய்ட் , தேவதைகள் வந்து…… எம கிங்கரர்கள் வருவதற்கு பதில் என்னை அழைக்க தேவதைகள் வந்தார்கள் என்றால்.....வாவ் சரி...சரி, நானும் ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்து இருக்கிறேன் போல இருக்கிறது. எனக்கு சந்தோஷத்தில் ஆடவேண்டும் போல் இருந்தது.

ம்ம்.. என்ன சொல்ல வந்தேன் என்றால், எனக்கு தாகமோ பசியோ வருகிறது என்று நான் உணரும் பொழுது, அந்த தேவதை ஒரு புன்னகையுடன் எனக்கு உணவளித்தாள்... எப்படி என்று எனக்கு புரியவில்லை. இத்தனை நேரம் எனக்கு ஸ்னாக்ஸ் தந்தவள் இந்த முறை ஒரு தட்டு நிறைய உணவுவகைகளைக் கொண்டுவந்து கொடுத்தாள். அந்த பெண்ணுக்கு முன்பு தந்தாளே அப்படி.ஹாங்...இப்பொழுது தான் நான் அந்தப் பெண்மணி இன் நினைவு வந்து திரும்பிப்பார்க்கிறேன்... அவர்களை காணவில்லை... எழுந்து போய்விட்டார் போலும்...நான் என் நினைவுகளில் மூழ்கி இருக்கும்பொழுது அவர்கள் போய்விட்டிருக்க வேண்டும்.ம்ம்.. சரி எனக்கு என்ன உணவு வந்துள்ளது என்று பார்த்தேன்.

அதைத்திறந்ததுமே தெரிந்து விட்டது இது எதிலுமே உப்பு இல்லை என்று.அடப்பாவிகளா, நான் எத்தனை அருமை அருமையாக என் குடும்பத்துக்கு சமைத்து போட்டேன், எத்தனை பேருக்கு சமையல் சொல்லிக் கொடுத்துள்ளேன், எனக்கு நீங்க கொடுக்கும் மரியாதை இது தானா என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அதைப் பற்றி எல்லாம் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ. இது இவர்கள் வழக்கமாக இருக்கலாம். ஏதோ பசி நேரத்திற்கு நான் சொல்லாமலே கொண்டுவந்து இருக்கும் இடத்தில் தருகிறார்கள் அதுவும் அன்பாக...இதை நாம் குறை சொல்லக் கூடாது என்று எண்ணியவளாக அதை உண்ண ஆரம்பித்தேன்.

தவிர்க்க முடியாமல், மனதில் உப்பிலி அப்பன் கோவில் நினைவுக்கு வந்தது. அன்பான இளம் மனைவி உப்பு இல்லாமல் சமைத்ததை அன்பாக உண்ட பெருமாள் இல்லையா அவர்...மனதார அவரை வணங்கினேன்.... இந்த உணவும் அப்படித்தான் , எனக்கு அன்பாக, மனதார ஒருவர் தரும் பொழுது அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் சிறந்தது என்று நினைத்தேன்.... மண்டைக்குள் ஒரு பிளாஷ்...அடக்கடவுளே, இதில் உள்ள அன்பு இந்த தேவதை இன் அன்பு இல்லை, என் கணவருடையது என் மகனுடையது என்று இந்த மர மண்டைக்குப் புரிந்தது .

என்ன இது, காலை இல் இருந்து நான் ஏன் இப்படி இருக்கிறேன்...எதிலும் ரொம்ப ஷார்ப் என்று பேர் வாங்கிய நானா இப்படி...என்ன ஆச்சு எனக்கு... கொஞ்சம் அமைதியாக யோசிப்போம்... என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு, கோர்வையாக யோசித்தேன்.....

அடக்கடவுளே...இது என் பத்து சாப்பாடு.....

தொடரும்......



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 6:50 pm

lakshmi palani wrote:மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 103459460 மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1331053

மிக்க நன்றி லக்ஷ்மி தொடர்ந்து வாருங்கள்...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 6:52 pm

காலை இல் இருந்து நடந்தவைகள் ஒவ்வொன்றாக என் நினைவுக்கு கொண்டுவந்தேன். நான் இங்கு கொண்டுவரப்பட்டேன்...அதாவது அழைத்துவரப்பட்டேன்....எனக்கு கொடுக்கப்பட்ட உணவு கள் எல்லாமே என் கணவர் என் மகன் அனுப்பியது. அதாவது எனக்காக கல் ஊன்றி, நித்யவதி அவர்கள் செய்யும் பொழுது தான் எனக்கு அந்த ஸ்னாக்ஸ் மற்றும் தாகத்துக்கு குடிக்கவும் கிடைத்தது. இதோ என் முன் இருக்கும் உணவு என்னுடைய பத்துக்கு கொட்டியது. கடவுளே....என்ன மாதிரி உணர்வு என்னைத்தாக்கியது என்று என்னால் விளக்கமுடியவில்லை... இங்கு நான் வந்து 10 நாட்கள் ஆகிவிட்டன அவர்கள் கணக்கில்...ம்ம்... சுபம் ஆனதும் தான் அந்த மேடை இல் இருக்கும் பெரிய தேவதை என்னை அழைத்து, நான் போகவேண்டிய இடத்துக்கு அனுப்பும்.
இங்கு என்னை சுற்றி நடப்பவைகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். இங்கு பல வண்ணங்களில் தேவதைகள் இருக்கிறார்கள் என்று சொன்னேன் அல்லவா, அவர்களில் சிவப்பு உடை அணிந்தவர்கள் தான் எங்களுக்கு உதவியவர்கள். மஞ்சள் உடை அணிந்தவர்கள் இங்குள்ளவர்களை வேறு இடங்களுக்கு கூட்டிச்செல்கிறார்கள்.

பச்சை உடை அணிந்தவர்களும் நீல நிற உடை அணிந்தவர்களும் கூட இங்கு இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பணி எனக்கு என்ன வென்று விளங்கவில்லை.இதுவரை நான் ஒரே ஒரு ஆண் தேவதையை மட்டுமே பார்த்தேன். அவரும் யார் , என்ன செய்கிறார் என்று எனக்குத்தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். ஸ்வர்ண தானம், கோ தானம் , குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமிர சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிராமணர்களுக்கு அளித்தல் வேண்டும். குடைதானம், ஜீவன் செல்லும் போது குளிர்ந்த நிழலில் அழைத்துச் செல்ல உதவும்.. மரவடி தானம், குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும்.

இப்படியெல்லாம் நான் கருட புராணத்தில் படித்து இருக்கிறேன். அதெல்லாம் என் குடும்பத்தினர் செய்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். அதனால் தான் எனக்கு இங்கே எந்த தொந்தரவும் இல்லாமல் நன்றாக இருக்கிறேன் என்று எண்ணுகிறேன். ஆனால், என்னை அழைத்து வந்த முறை.... அதற்கும் கருட புராணத்துக்கும் மிகவும் வித்தியாசம் இருந்தது... இது எனக்கு மிகவும் குழப்பத்தைத் தந்தது... இது பற்றி யாரைக் கேப்பது....ம்ம்.... என்று யோசித்தவாறு இருந்தேன்....இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா தெரியவில்லை என்றாலும், நான் இங்கு தான் காத்திருக்கவேண்டும்....

ஆனால் இதற்குள்ளாகவா பத்து நாட்கள் ஓடிவிட்டன என்றும் யோசனையாக இருந்தது. ஆனால் மற்றொன்றும் எனக்கு உரைத்தது. அதாவது, நாம் இருக்கும் உலகத்தின் ஒருவருட காலம் நம் மேல் லோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள். அதனால்தான் நாம் ஸ்ரார்த்தம் செய்யும்போது, அவர்களுக்குத் தினமும் உணவு கிடைக்கிறது. நான் இப்பொழுது இங்கு வந்து இருந்தாலும், ட்ரான்சிட் பிரியடில் இருக்கிறேன். அதாவது, நாம் ஏதாவது வெளிநாட்டுக்கு செல்லும்பொழுது, நடுவில் வேறு ஒரு நாட்டில் இறங்கி மற்றும் ஒரு விமானத்தை பிடிக்க காத்திருப்போம். அப்பொழுது நம் நிலை என்னவோ அது தான் என் நிலையும் இப்பொழுது.

இன்னும் விளக்க வேண்டுமானால், இந்தியாவில் ஒருநேரம் இருக்கும் பொழுது ஸே, பத்துமணிக்கு இங்கிருந்து கிளம்பி 2 - 2 1/2 மணி நேரத்தில் பெஹரினை அடைகிறது. அங்கு ஒருமணி நேரம் காத்திருந்தால் தான் அடுத்த விமானம் சௌதிக்கு . அப்பொழுது அங்கு காத்திருக்கும் பொழுது எந்த மணியைப் பார்ப்பது....இந்தியாவின் கணக்கில்லா அல்லது சௌதி கணக்கில்லா.... அதேபோலத்தான் நீங்கள் பயணிக்கும் பொழுதும்.....சரிதானே.....ஆனால் ஒன்ஸ் நீங்க உங்களின் டெஸ்டினேஷனை போய்ச்சேரும் பொழுது, அப்போதிலிருந்து அந்த நேரம் தான் உங்கள் நேரம். உங்கள் போன் மற்றும் வாட்ச்சின் நேரத்தை நீங்கள் மாற்றி வைத்துக் கொள்ளவீர்கள் தானே . அது போலத்தான் என் நிலைமையும் இப்பொழுது.


இது பற்றி நான் ஆழ்ந்த யோசனை இல் இருக்கும்பொழுதே, அந்த மேடை தேவதை என்னை கண்களாலே அழைத்தாள். நான் எழுந்து அவளருகே சென்றேன். அவளருகே நான் சென்றதும் ஒரு பச்சை தேவதை இடம் என்னை ஒப்படைத்தாள். அவள் என் கைகளைப் பிடித்து வேறு ஒரு கதவின் அருகில் அழைத்து சென்றாள். இப்பொழுதுதான் நான் ஒன்றை உணர்ந்தேன். அதாவது, எழுந்து கொள்வதிலோ நடப்பதிலோ எனக்கு எந்த வலியும் இல்லை....உடல் உபாதைகள் எதுவுமே இல்லை. என் உடல் மிகவும் லேசானதாக உணர்ந்தேன். கருட புராணத்தில் சொன்னது போல இது சூக்ஷும உடலா அல்லது என்னால் என்னை பார்க்க முடியுமா என்று ஒரு குறு குறுப்பு என் மனதிற்குள். போகும் வழி இல் எங்காவது கண்ணாடி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நான் எங்கு சென்றாலும் அந்த மிக இனிமையான கானம் என்னைத்தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

என்னை கையைப் பிடித்து அழைத்துச் சென்ற அந்த தேவதை ஒரு ஆதுரத்துக்காகத்தான் என் கையைப் பிடித்துக் கொண்டு இருந்தாளே தவிர என்னைத்தாங்கிப் பிடிக்க வில்லை. நாங்கள் இருவரும் கதவைத் திறந்து கொண்டு நடந்தோம். அங்கு ஒரு மிகப்பெரிய பிரெஞ்சு விண்டோ இருந்தது.... அங்கிருந்து மந்திரங்கள் ஓதுவது போன்ற மெல்லிய சப்தம் கேட்டது....அதே நேரம் எங்கள் முதுகிற்கு பின் மற்றும் ஒரு கண்ணாடி கதவு தோன்றியது . அதாவது இரண்டு பெரிய பெரிய கண்ணாடிக்கு கதவுகளுக்கு நடுவே நாங்கள் நின்றுகொண்டு இருந்தோம்.

அங்கே நான் கண்ட காட்சிகள்.....என் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டேன் நான்......என்னை அறியாமல் அந்த தேவதை இன் கையையும் அழுத்தமாக பற்றிக்கொண்டேன்......

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 18, 2020 7:39 pm

நான் படித்த எல்லா கதைகளாயும் படித்த SK,  என் கதையை படிக்கவில்லையே..... ஒன்னும் புரியல

@SK ................. ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 18, 2020 8:40 pm

கதையுடன் இணைந்த விளக்கம் சாஸ்திரப்படி இருக்கிறது.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 19, 2020 8:45 pm

T.N.Balasubramanian wrote:கதையுடன் இணைந்த விளக்கம் சாஸ்திரப்படி இருக்கிறது.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1331572

நன்றி ஐயா... தொடர்ந்து வாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 19, 2020 8:46 pm

மந்திரங்கள் ஓதிக்கொண்டிருந்த பக்கம் நான் என் கணவரை பார்த்தேன்...ஓ... இன்று 12 வது நாள், அது தான் அவர்கள் குழி தர்ப்பணம் செய்து என்னையும் பித்ருக்களுடன் சேர்த்துவிடுவார்கள். அதனால் பின்னால் திரும்பாமலே என்னால் உணரமுடிந்தது, அங்கே என் பித்ருக்கள் இருப்பார்கள் என்று. ஆமாம், நான் திரும்பி அந்த கதவைப் பார்த்தேன். அங்கு, என் அம்மா அப்பா, மற்றும் இருவருக்கும் அப்பா அம்மா, மற்றும் அவர்களின் அப்பா அம்மா என மூன்று தலைமுறை மனிதர்கள் அதாவது என்னுடைய பித்ருக்கள் இருந்தார்கள்.

ஆனால் இவர்கள் எல்லோருமே ஏதோ நிழல் போல இருந்தார்கள். என்னை வரவேற்க காத்திருந்தார்கள், அதாவது புதிய வரவை எதிர்நோக்கி இருந்தாற்போல எனக்குத் தோன்றியது. அந்த சடங்கு முடியும் வரை நாங்கள் பார்த்துக் கொண்டே நின்று கொண்டு இருந்தோம். 'எதிர் காலத்தில் நீங்கள் அங்கு தான் செல்லவேண்டி இருக்கும்', இப்பொழுது நாம் போகலாம் என்று மிக இனிமையான குரலில் அந்த பெண் தேவதை சொல்லியது. உடனே அந்த காட்சிகள் மறைந்தன.

என்னை மீண்டும் அழைத்தது வந்து நான் முன்பு இருந்த ஹாலில் விடடாள் அந்த தேவதை. எனக்கு மீண்டும் உணவு வந்தது. இது கல்யாண சாப்பாடு போல நன்றாக இருந்தது. நானும் நன்கு சாப்பிட்டேன். நான் இதை முடித்ததும் எனக்கு அந்த மேடை தேவதைடமிருந்து அழைப்பு வரும் என்று தெரியும். நான் சாப்பிட்டு முடித்தது தான் தாமதம், சரியாக என்னை பார்த்து புன்னகைத்தாள் அவள்.

ஹூம்....ஒரு பெருமூச்சுடன் எழுந்து போனேன். மேற்கொண்டு என்ன என்பது தெரியவில்லை... அது என்ன என்று பார்க்கவேண்டியது தான். எப்பொழுது நான் என் மூதாதையர்களை பார்க்கமுடியும்.... வெறும் பாட்டி தாத்தாவைத்தான் பார்க்க முடியுமா அல்லது மற்ற உறவுகளையும் பார்க்க முடியுமா... அவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்களா என்று கேட்க வேண்டும்... நிறைய அளவளாவ வேண்டும் என்றல்லாம் எனக்குள் தோன்றியது. ஆனால் இவையெல்லாம் சாத்தியமா என்று எனக்குத் தெரியாது. ஆவல் இருந்தது என்னவோ நிஜம்.

இப்பொழுது என்னுடன் ஒரு நீல நிற பெண் தேவதை வந்தாள்....என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள். நான் இதுவரை அந்த மாளிகை இல் இருந்து யாரும் வெளியே போனதைப் பார்க்காததால் அவளின் இந்த செய்கை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. என் ஆச்சர்யத்தை அவள் கவனித்தாள் என்றாலும் ஒன்றும் பேசவில்லை. இருவரும் வேறு ஒரு மாளிகைக்கு சென்றோம். அது நான் முன்பு பார்த்தது போல பல மடங்கு பெரியதாக இருந்தது. உள்ளே வரும்பொழுதே அழகிய நீரூற்றுகள், நிழல் தரும் மரங்கள், புதுவிதமான பூக்கள் காய் கனிகள் என எங்கும் சுபிக்ஷமாக இருந்தது. அந்த மாளிகை இன் உள்ளே நுழைந்த அந்த தேவதை, அங்கு இருந்த மற்றோரு தேவதை இடம் என்னை ஒப்புவித்துவிட்டு மறைந்து விட்டாள்.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக