புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
95 Posts - 66%
heezulia
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
5 Posts - 3%
prajai
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
2 Posts - 1%
Sathiyarajan
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
1 Post - 1%
Safiya
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
473 Posts - 52%
heezulia
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
20 Posts - 2%
i6appar
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
13 Posts - 1%
prajai
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்லுக்குள் ஈரம் Poll_c10கல்லுக்குள் ஈரம் Poll_m10கல்லுக்குள் ஈரம் Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லுக்குள் ஈரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 6:26 am

[You must be registered and logged in to see this image.]
-
"மனம் என்ன கல்லோ' என்போம், கடுமையான மனத்தை
இவ்வாறு கூறுகின்றோம். அவ்வாறான கடுமையான மனம்
உடையவர்கள் வேடர்கள்.

விலங்குகளை வேட்டையாட கடுமையான மனம் வேண்டும்.
அம்பு பட்ட மானும், புலியும், சிங்கமும் துடிதுடித்துச் சாவதை
காணும் திண்ணிய நெஞ்சம் இருக்க வேண்டும்.

அவற்றை அறுத்து சுட்டுப் பொசுக்க வேட்டுவச்சியும் பாவம்
புண்ணியம் பாராதவளாக இருத்தல் அவசியம்.

ஆனால், எவ்வளவு கடினமானவர்களுக்கும் யாரோ ஒருவரிடம்
அன்பு செலுத்தும் ஈரம் இருக்கும். அப்படியான கல்லுக்குள்
ஈரத்தைக் கவிதை ஆக்குகிறது 18 வரிகள் கொண்ட
புறநானூற்றுப் பாடல் ஒன்று. வீரை வெளியனார் இயற்றிய
இப்பாடல் இந்த வித்தகத்தைப் புரிகிறது.

பரிசு பெற்ற புலவர், பரிசில் நாடிவரும் புலவரை ஆற்றுப்படுத்தி,
அதாவது வழிகாட்டி அனுப்பி வைப்பதாக அமைந்த பாடல் இது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 6:27 am


காட்டு வழியாகப் போகும்போது, "வேடன் ஒருவன் வீட்டில்
தங்கிச் செல்லலாம்' என்கிறார். வேடனைப் பற்றி கூற வந்தவர்,
அவன் மனைவியின் அருள் குணத்தை சுட்டிக் காட்டுகிறார்.

பந்தல் போன்ற நிழல் தரும் பலாமரம், அதன் நிழலில்
வேட்டையாடும் அந்த வேட்டுவன் ஒரு நார்க் கட்டிலில்
உறங்குகிறான். வேடன் வீட்டில் பார்வை மான் ஒன்று
கட்டப்பட்டிருக்கிறது. அந்த மானை பார்வைக்கு வைத்து,
அதைக் கடித்துக் குதற, பாய்ந்து வரும் கொடிய விலங்குகளை
வேட்டையாடுவது வேடர்கள் வழக்கம்.

"பார்வை மடப்பிணை' என்பதால் அது ஒரு பெண்மான்.
வீட்டில் கட்டி வளர்ப்பதால், அந்த மானுக்கு ஆண் மானுடன்
கூடி மகிழும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவதே இல்லை.
அந்தப் பெண்மான் புணர்ச்சிக்கு ஏங்கியிருக்கிறது.
வாசலில் மான் தோலில் தினையரிசி காய்கிறது.

இந்த நேரத்தில் கட்டியிருக்கும் பெண் மானிடம் ஆண் மான்
ஒன்று வந்து விளையாடுகிறது. புணர்ச்சியில் ஈடுபட இருக்கும்
நேரம். காட்டுக் கோழிகள் தினை அரிசியைக் கொத்துகின்றன.

அன்றைய இரவு உணவுக்கான தினையரிசி அது. காட்டுக்
கோழிகள் தின்றுவிட்டால் வேடனும் வேட்டுவச்சியும் பசித்த
வயிற்றுடன் படுக்க வேண்டியதுதான்.

கோழியை விரட்ட வேடனின் மனைவி விரைந்து வருகிறாள்.
கல்லை எடுத்தவள் மான்களைப் பார்த்துவிட்டாள். கிடைக்காத
புணர்ச்சி கிடைக்க இருக்கும் வேளையில், சத்தம் கேட்டு வேடன்
விழித்துக் கொண்டால் ஆண் மானை வேட்டையாடிவிடுவான்.
போனால் போகட்டும் என்று அமைதியாகத் திரும்புகிறாள்.

வேடனின் மனைவியின் உள்ளத்தில் ஈரம் கசிகிறது.
அந்தக் காட்சியைக் காட்டி, அந்த வேடன் வீட்டில் நாம் தங்கிச்
செல்லலாம் என்று வழிகாட்டுகிறார்.

பார்வை மானின் புணர்ச்சிக்காக தினை அரிசியை இழந்து
பசித்திருக்கத் துணியும் வேட்டுவச்சியின் மேன்மையான
கருணையுள்ளம் இப் பாடலில் காட்டப்படுகிறது.

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தெனப்
பார்வை மடப் பிணை தழீஇப் பிறிதோர்
தீர் தொழில் தனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர் நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே
பிணை வயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இவ் வழங்காமையின் கல்லென ஒலித்து...

(புறநா.320)

---
By -திருவாரூர் இரெ.சண்முகவடிவேல்
நன்றி-தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக