புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_lcap'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_voting_bar'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_lcap'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_voting_bar'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_lcap'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_voting_bar'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_lcap'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_voting_bar'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_lcap'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_voting_bar'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_lcap'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_voting_bar'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_lcap'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_voting_bar'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_lcap'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_voting_bar'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_rcap 
8 Posts - 2%
prajai
'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_lcap'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_voting_bar'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_lcap'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_voting_bar'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_lcap'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_voting_bar'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_lcap'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_voting_bar'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_lcap'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_voting_bar'மாத்தி யோசி' ! - சிறுகதை  - by Krishnaamma :) I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 9:13 pm

மாத்தி யோசி ! by Krishnaamma 😊

அது ஒரு மகளிர் கலைக் கல்லூரி. ஆண்டு விழாவுக்காக ஏற்பாடு செய்திருந்தார்கள். வழக்கம் போல இறைவணக்கம், வரவேற்புரை என்று ஆனதும், கல்லூரி முதல்வர் தன் தோழி என்று சொல்லி ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெண்மணியை அறிமுகம் செய்தார். அவரும் வணக்கம் தெரிவித்து விட்டு பேச ஆரம்பித்தார்.

"அன்பு குழந்தைகளே, நான் இதுபோன்ற அரங்கங்களில் பேசியது இல்லை. நம் நாடு இன்று போகும் போக்கைக்கண்டு மனம் வெதும்பி உங்கள் முதல்வரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தான் என்னை ஊக்குவித்து இதை மாணவிகளின் முன் பேசுமாறு கேட்டுக்கொண்டார். நான் பேசுவதைக் கேட்டதும் யாரும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரவேண்டாம். கொஞ்சம் அமைதியாக யோசித்துப் பார்த்து பின் வந்தால் போதும். சரியா?" என்று அன்புடன் ஆரம்பித்தார். மாணவிகளிடம் மயான அமைதி. இந்த அம்மா என்னதான் சொல்லப்போகிறார்கள் என்று.

அவர் மீண்டும் ஆரம்பித்தார், " நான் கொஞ்ச நாட்களாகவே பார்த்துவருகிறேன், இப்பொழுது உள்ள வீடுகளில் சுவாமி அறை என்பதே இல்லை. வெகு காலத்துக்கு முன்பே அது ஸ்வாமி  ஷெல்ப் ஆகி இன்று இல்லாமலே போனது. அதுதான் நாம் இன்று இருக்கும் இந்த கோலத்திற்கு காரணம். எந்த பேப்பரைப் பார்த்தாலும் 14 வயது சிறுவன் 10 வயது சிறுமியிடம்... என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. மத மாற்றம் பற்றி சொல்லவே வேண்டாம். நான் யாரையும் அல்லது எந்த மதத்தையும் குறை சொல்ல இங்கு வர வில்லை. நாட்டு நடப்பை சொன்னேன்.  இது எப்படி ஸ்வாமி ரூம் உடன் கனைக்ட் ஆனது என்று நீங்கள் யோசிக்கலாம்.

ஆம் கண்டிப்பாக தொடர்பு இருக்கிறது. நாம் சுவாமி ரூமுக்கு எப்படி போவோம், சுத்த பத்தமாக, பய பக்தியுடன். ஸ்வாமி என்றால் எதுக்கு அதனிடம் பயம் ?..பக்தி மட்டும் போறாதா?...அவர் தானே நமக்கு எல்லாம் என்று நீங்கள் யோசிக்கலாம். அதை விளக்க ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

நீங்க உங்கள் வகுப்பறைக்கு காலை இல் உள்ளே நுழைகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் என்ன யோசிப்பீர்கள். நம் friend வந்துவிட்டாளா, என்ன கலர் டிரஸ் போட்டிருக்கா, நான் தான் நேற்று முதலில் வந்தேன், இன்று அவள் வந்துவிட்டாளா... இப்படி பலப்பல யோசனைகளுடன் நுழைவீர்கள் தானே?... படிப்பு, கிளாஸ் டெஸ்ட் ஒருபக்கம் இருந்தாலும் இப்படியும் யோசித்துக்கொண்டு, அவளை பார்த்துவிட்டால், "ஹாய்" என்று உற்சாகமாய் கத்துவீர்கள்  தானே?...

...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 9:13 pm

அதே உங்களை ஸ்டாப் ஒருவர் ஸ்டாப் ரூமுக்கு வரச்சொல்லி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

எப்படி செல்வீர்கள்?...கொஞ்சம் நடையை நிதானமாக்கி, ஒரு ஓரமாய் ஸ்டாப் ரூம் வாசலில் இருந்து உள்ளே எட்டிப்பார்ப்பீர்கள். கண்ணால் அந்த ஸ்டாப் எங்கு இருக்கிறார் என்று பார்த்துக் கொள்வீர்கள். பின் அவர் கண்ணில் படும்படி நிற்பீர்கள். சரிதானே?...பின் அவர் உங்களைப் பார்த்து கண் அசைத்து அல்லது பேர்சொல்லி கூப்பிட்டதும், உள்ளே போய் என்ன எது என்று தெரிந்து கொள்வீர்கள். சரியா?

மாணவிகள் கூட்டம் மிக மிக மௌனமாய் இருந்தது. அவர் தொடர்ந்தார்,
" அடுத்தது உங்கள் பிரின்சிபால் உங்களைக் கூப்பிட்டு அனுப்புகிறார். நீங்கள் அங்கு எப்படி செல்வீர்கள்?... மிக மிக பணிவுடன் அவரின் அறை வாசலை அடைந்து அவரின் அழை ப்பிக்காக காத்திருப்பீர்கள். பியூன் உங்களை உள்ளே போக சொன்னதும், சப்தநாடிகளும் ஒடுங்கி, பயந்து அந்த ஏசி சத்தம் மட்டுமே கேக்கும் அறைக்குள் நுழைவீர்கள். சில சமயங்களில் உங்கள் இருதயம் துடிப்பது கூட உங்களுக்கு துல்லியமாக கேட்கும் தானே?...இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் உங்கள் வகுப்பறைக்குப் போவது போல ஏன் இங்கு போகவில்லை?...என்ன பயம் பக்தி வேண்டி இருக்கிறது அவரிடம்?

ஏன் என்றால், அவர் இங்குள்ள 5000 மாணவிகளை கட்டி மேய்க்கிறார். அவர்களின் நல்லது கெட்டது பார்க்கிறார். எல்லோருக்கும் தலைவர். அப்படிப்பட்ட பொறுப்பான பதவியில் இருப்பவரை நம் தோழியைப் பார்க்கப் போவது போல ஜாலியாக போக முடியாது. சரிதானே?.. அப்படி ஒரு 5000 பேரைக் கட்டி ஆளும் மனிதருக்கே, இத்தனை மரியாதை என்றால், நம் அண்ட சராசரங்களை படைத்து காக்கும் அந்த ஸ்வாமி இடம் நமக்கு பய பக்தி இரண்டுமே வேண்டாமா? அந்த சன்னிதானத்தில் அமைதி காக்கவேண்டாமா?... அந்த ஸ்வாமி அறைக்கோ கோவிலுக்கோ பய பக்தியுடன் போகவேண்டாமா?...சொல்லுங்கள்?" என்றதுதான் தாமதம்...மாணவிகள் கரகோஷம் விண்ணைப்பிளந்தது.
..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 9:14 pm

இரண்டுநிமிட இடைவேளைக்குப் பிறகு அந்த அம்மா தொடர்ந்தார்கள், " இதற்கும் இன்றைய நாட்டு நடப்புக்கு என்ன தொடர்பு என்று நீங்கள் யோசிக்கலாம். அதை விளக்கவே இங்கு நான் வந்துள்ளேன். இன்று ஸ்வாமி ரூமே இல்லாவிட்டால்.. அப்பொழுது இந்த பய , பக்தி இன்று மிஸ்ஸிங். நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது, நாம் அதற்கு கட்டுப் பட்டுத்தான் இருக்கிறோம். என்கிற எண்ணமே வர வாய்ப்பே இல்லை. அதனால் நாம் என்னவேண்டுமானாலும் செய்யலாம், கேட்க ஆள் இல்லை என்கிற எண்ணம் குழந்தைகளுக்கு வந்துவிடுகிறது. இது அரக்க எண்ணம். இது வேரூன்றி வளர்கிறது என்கிற ஆபத்து கூடத் தெரியாமல் அம்மாவும் அப்பாவும் பணம் சம்பாதிக்க வெளியே போய்விடுகிறார்கள்.

அவர்களும் தங்களுக்கு உள்ள பிரச்சனை பிடுங்கல்களில் குழந்தைகளுக்கு தங்கள் சனாதன தர்மத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்க மறந்துவிடுகிறார்கள். இதனால் என்ன ஆகிறது, அவர்களுக்கும் மன அமைதி என்பது பழக்கத்தில் இல்லை குழந்தைகளுக்கோ அது பற்றித் தெரியவே தெரியாது. யாரைப் பார்த்தாலும் டென்ஷன், மனோ வியாதி என்று கஷ்டப்படுகிறார்கள். சிறு குழந்தைகளும் இதற்கு விதி விலக்கு இல்லை.

அதே, காலை மாலை இருவேளைகளிலும் ஒரு பத்து நிமிடங்கள் கை கால் அலம்பிக்கொண்டு, ஸ்வாமி முன்பு அமர்ந்து கொண்டு தனக்குப் பிடித்த பகவன் நாமாவளிகளை சொல்வது என்பது நம் மனோதிடத்தை அதிகப்படுத்தும். அந்த நேரத்தில் அந்த அமைதியான சூழ்நிலை இல் நம் மனம் ஒருமைப்படும். நம்மை நாம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், இறைவன் பால் மனத்தை செலுத்தவும் முடியும். அப்படி நம்மால் கொஞ்சநேரம் உலகத்தை மறந்து, சுற்றுப்புற சூழ்நிலைகளை மறந்து, மனத்தை ஒருமுகப்படுத்த முடியுமானால், அதுவே நம் பிரச்சனைகளை நன்கு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர உதவும்.சின்னக் சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் டென்ஷன் ஆகவேண்டியது இல்லை. நம்மால் கொஞ்சம் யோசித்து நல்ல முடிவுகள் எடுக்க இது உதவும்.

தெய்வங்களில் இரு வகை உண்டு. ஒன்று குலதெய்வம் மற்றது இஷ்டதெய்வம். இது உங்களில் எத்தனை பெருக்குத்தெரியும் என்று எனக்குத் தெரியாது.

..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 9:15 pm

குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியம். வருடம் ஒருமுறையாவது சென்று கும்பிடவேண்டும். இஷ்டதெய்வம் என்பது அதே குலதெய்வத்தின் , ஆனால் நம் மனம் கவர் உருவம். நாம் நாமாவளிகளோ அல்லது சின்ன சின்ன ஸ்லோகங்களோ சொல்லி வழிபட வழிபட மனம் அமைதி பெறும். நமக்கு வரும் கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ளவும், அண்டி நிற்கவும் நம்மைக் காக்கவும் அவர் இருக்கிறார் என்கிற மனோ தைரியத்தைத்தரும். அவர், நாம் மற்றவருக்கு நல்லது செய்தால் நமக்கு நல்லதும், நாம் தப்பு செய்தால் தண்டிக்கவும் செய்வார். என்று பெற்றவர்கள் தான் சொல்லித்தரவேண்டும்.

சின்ன சின்ன பெருமாள் கதைகளை குழந்தைகளுக்கு சொல்லவேண்டும். நம் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் சொல்லித்தரவேண்டும். இது குழந்தைகள் ஆரோக்கியமாய் , அதாவது மனோ விகாரங்கள் இல்லாமல் ஆரோக்கியமாய் வளர உதவும்.

நாங்கள் எல்லாம் சின்ன வயதில் இருக்கும் பொழுது எங்க அம்மா தினமும் எங்களுக்கு படுக்கும் முன் நெற்றி இல் விபூதி இடுவார். எந்தக் கெட்டக் கனவும் வராதிருக்க. பிறகு எல்லோருக்கும் சின்ன சின்ன சுவாமி கதைகள் சொல்லி தூங்க வைப்பர். கதை முடிந்ததும் நாங்கள் எல்லோரும் கைகளைக் கூப்பியபடி, "கோவிந்தா காப்பாத்து" என்று சொல்லிவிட்டு தூங்குவோம்.

ஒவ்வொரு பண்டிகையும் எதற்காக கொண்டாடுகிறோம், நம் வீட்டு வழக்கம் என்ன என்று சொல்லிக் கொடுப்பர். இன்று யாரையாவது கேளுங்கள், தெரியாது. அப்பா அம்மாக்கே தெரியமா என்று எனக்குத் தெரியாது. மிஞ்சிக் கேட்டால், நேரம் இல்லை என்று சொல்வார்கள். நாங்கள் சின்னவர்களாக இருந்தபோதும் இதே 24 மணி நேரம் தானிருந்தது ஒருநாளுக்கு. இப்பவும் அப்படித்தானே?..அப்போ இவர்களுக்கு மட்டும் நேரம் எப்படி இல்லாமல் போகும்????

................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 9:15 pm

ஏன் என்றால், இவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள். அதற்காக எதையும் விட்டுக் கொடுத்துவிடுகிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை. இருவரும் இப்படிப் போய்விட்டால் குழந்தைகளை யார் கவனிப்பது?.... வீட்டுப் பெரியவர்களை கொண்டு போய் ஹோம் இல் விட்டாகிவிட்டது. வேளைக்கு ஒரு வேலைக்காரி வந்து குழந்தைகளை பார்த்துக் கொள்வாள். அவளுக்குத் தெரிந்ததை சமைத்துப் போடுவாள். அவளுடனேயே வளரும் குழந்தைகள் அவள் பழக்க வழக்கங்களைத்தானே தெரிந்து கொள்ளும்?.. பணம் காசு நகைகள் என்று எல்லாவற்றையும் பூட்டி வைத்து விட்டு, அதைவிட உயர்வான நம் குழந்தையை, நம் வருங்காலத்தை, நம் தேசத்தின் எதிர்காலத்தை எவளோ ஒருத்தி இடம் ஒப்படைக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது?... சொல்லுங்கள்???... நாட்டு நடப்பை பார்த்துவிட்டு, தங்கள் குழந்தைகளை லிப்ட் இல் கூட தனியாக அனுப்ப பயந்து கொண்டு தானே இறங்கிவந்து அவர்களை பஸ் இல் ஏற்றும் அம்மாக்கள் இருக்கும் ஊரில் தானே வீட்டையே திறந்து போட்டுவிட்டு ஆபீஸ் போகும் அம்மாக்களும் இருக்கிறார்கள்?.. .. அப்படி இருக்கும்பொழுது நம் குழந்தைகள் முழு நாளும் யாருடனோ பொழுதைக் கழிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள் ஏன்? கொஞ்சம் யோசியுங்கள் பெண்களே !

நாளைய அம்மாக்கள் நீங்கள் தான்.

நான் வேலைக்கு போகின்ற பெண்களுக்கு எதிரி இல்லை. ஆனால் தான் படித்த படிப்பை எதற்காக en cash பண்ணவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள் என்று தான் எனக்கு ஆச்சர்யம். படிப்பு என்பது நம் புத்தியை வளரச்செய்யவே அல்லாது பணம் சம்பாதிக்க இல்லை என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள். ஒரு ஆண் படித்தால், அது அவனுக்கு மட்டுமே உதவும். ஆனால் ஒரு பெண் படித்தால், அது அவள் குடும்பத்துக்கே உதவும்.

எத்தனை பெரிய பொறுப்பு தங்கள் கைகளில் இருக்கிறது என்பதைக் கொஞ்சமும் அறியாமல் பணத்தின் பின்னே ஓடுகிறார்கள் பெண்கள். குழந்தைகளை வளர்த்து ஆளாக்கவேண்டிய எத்தனை பெரிய பொறுப்பு உங்கள் கைகளில் இருக்கிறது அதை முதலில் செவ்வனே செய்யவேண்டாம் நீங்கள்? ஒரு சாதாரண செடி கொடி கூட தன்னைப்போல தன் வம்சம் வளர விதைகளை செவ்வனே விட்டுச்செல்கிறது. ஆனால் ஆறறிவுடைய நாம்????

.................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 9:15 pm

ஒரு பெண் தான் வாங்கும் சம்பளத்தில் பாதி வேலைக்காரிக்கு தந்துவிடுகிறாள். அவள் நம் குழந்தைக்கு உணவு தருகிறாளா இல்லை அவள் சாப்பிடுகிறாளா என்கிற கவலை.  சில வேலைக்காரிகள் நம் வீட்டில், நமக்குத்தெரியாமல் குடித்தனமே செய்வார்கள். இப்படி எல்லாம் அல்லாட்டம் எதற்கு ?... எந்தக் குழந்தைக்காக என்று சொல்லிக் கொண்டு இவர்கள் வெளியே போகிறார்களோ, அந்தக்குழந்தைக்கு ஒரு உடம்பு சரி  இல்லை என்றால் இவர்களால் சில சமயங்களில், கூட இருக்க முடியாமல் போகும்... அப்போது மனம் என்ன பாடு படும்... அந்தக் குழந்தை கேட்டதா எனக்கு பணம் வேண்டும், கார் வேண்டும் என்று?... அம்மா வேண்டும் என்று தான் கேட்கும். அதை உங்களால் தர  முடியாதா?  

சர்வ நிச்சயமாக ஒன்று நான் சொல்வேன், எந்த வேலைக்குப் போகும் பெண்ணும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி இது..." நான் நல்ல அம்மாவாக இருக்கிறேனா?"... இத்தனை கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்துவிட்டு இந்தக் கேள்வி தேவை தானா?... விரலுக்கு ஏற்ற வீக்கம் இருந்தால் இந்தக் கஷ்டம் வருமா? சொல்லுங்கள்???

இங்கு நான் ஒன்று சொல்ல வேண்டும், நான் முதன் முதலில் தனிக்குடித்தனம் போகும்பொழுது என் அப்பா என்னை அழைத்தார். உனக்கு எதுவும் நான் பெரிதாக சொல்லப்போவது இல்லை. இத்தனைநாள் அம்மாவைப் பார்த்து வளர்ந்தவள், இப்பொழுது 2 வருடங்களாக அவ அம்மாவையும் நீ பார்த்து விட்டாய்.  என் பாட்டி தான் எனக்கு மாமியார்.  எனவே, குடித்தனத்தை கட்டு செட்டாக நடத்த நான் உனக்கு சொல்லித்தரத்தேவை இல்லை. உனக்கே தெரியும். என்றாலும்,  நான் உனக்கு ஒன்றே ஒன்று தான் சொல்வேன். இது என் அம்மா  எனக்கு சொன்னது...ஏனோ என்னால் அதை சரிவர செய்ய முடியவில்லை. ஆனால் சரியாக செய்தால்  மிக உயரத்தை  அடையலாம். என்று  பீ டிகை போட்டார். எனக்கோ ஆச்சர்யம் என்ன இது அப்பா இப்படி பேசுகிறார் என்று. குடும்பத்தை நிர்வகிப்பதில் கில்லாடி அவர். நான் மௌனமாக நின்றுகொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார், " குழந்தாய், உனக்கு எதெல்லாம் அவசியமோ அதெயெல்லாம் கண்டிப்பாக வாங்காதே"... என்றா ர் ...'என்னது அவசியமானதை வாங்கக்கூடாதா'?... 'பக்' என்று இருந்தது எனக்கு...சரியாக காதில் விழவில்லையா  என்ன? என்கிற  எண்ணத்துடன்," என்னப்பா?" என்றேன் ...'இரு இரு, நான் இன்னும் முடிக்கவில்லை...என்று சொல்லி தொடர்ந்தார்."'தவிர்க்க முடியாததை மட்டும் வாங்கு" என்றார்.
..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 9:16 pm

எனக்கு ஒருகணம் மூளை வேலை செய்யவில்லை. அவர் சொல்வதை ennaal உள் வாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஒரு நிமிட அமைதிக்குப் பின் 'புரியலைப்பா' என்றேன்.

சிரித்துக்கொண்டே சொன்னார், ' உனக்கு அவசியமானது எது தவிர்க்க முடியாதது எது என்று நான் ஒரு சின்ன லிஸ்ட் சொல்கிறேன், பிறகு புரியும் என்றார்'...நானும் 'உம்' என்றேன்.

'நீ இப்பொழுது தான் தனிக்குடித்தனம் போகிறாய், இங்குளள்து போல உனக்கும் டிவி, பிரிட்ஜ், மிக்சி இத்யாதி அவசியம் என்று எண்ணுகிறாய் ரைட்?' என்றார்.

'ஆமாம்' என்றேன், ஒன்றன் பின் ஒன்றாக வாங்க வேண்டும் என்று கணக்கு போடுகிறாய் சரியா என்றார். ஆமாம் என்றேன்... கடனை உடனை வாங்கி அவற்றை உபயோகிக்க துவங்குவாய். அது தான் வேண்டாம் என்று சொல்கிறேன். அவைகள் இல்லாமலே கூட குடித்தனம் நடத்த முடியும் தானே? ' யோசி ' என்றார்.

'ஆமாம்,இல்ல'? என்று எனக்குத் தோன்றியது. அவரே தொடர்ந்தார், ' ஆனால், நாளை சமையலுக்கு வேண்டிய அரிசி பருப்பு போன்றவைகள் இல்லாமல் உன்னால் வாழ முடியுமா ? என்றார்....முடியாது என்று தலை அசைத்தேன்.

'ம்ம்..இப்பொழுது புரிகிறதா அவசியத் தேவைகளுக்கும் தவிர்க்க முடியாத தேவைகளுக்கும் உள்ள வித் தித்தியாசம்..... நாம் காலம் தள்ள எவையெல்லாம் தேவையோ அவற்றை மட்டும் வாங்கிக்கொண்டு குடித்தனத்தை ஆரம்பி. ஓவர் நைட் இல் இங்குள்ள வீடுபோல செட்டப் செய்ய வேண்டும் என்று நினைக்காதே. கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேற்றம் தானே வரும். அகலக்கால் வைக்காதே, ஆற்றிலும் அளந்து போடு, கடனே வாங்காதே. ஒரு பழமொழி உனக்குத்தெரியும் என்று நினைக்கிறேன், ' ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பாவம் ? பானை பிடித்தவள் பாக்கியசாலி' என்று. அது தான் வாழ்க்கை. ஆண் நன்கு சம்பாதித்துப் போடுவான், அதைக் கொண்டு செட்டாக குடித்தனம் பெண் தான் செய்யவேண்டும். சமையல் ரூமில் தான் சிக்கனம் தேவை. என்ன' குப்பை கொட்டப்போகிறாய் நீ என்று நான் பார்க்கிறேன் என்று சொல்வார்கள்' முன்பு. அதாவது நாம் கொட்டும் குப்பையை வைத்தே நாம் குடித்தனம் செய்யும் அழகை கணித்துவிடுவார்கள். எத்தனை பண்டத்தை நாம் வீணடிக்கிறோம் என்று வைத்தே நம் பவிஷை சொல்லிவிடுவார்கள். அதனால் ஜாக்கிரதை' என்று சொன்னார்.
.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 9:18 pm

நான் 100 சதவிகிதம் அவர் சொன்னது போலவே தான் செய்தேன், வெற்றியும் பெற்றேன். ஆனால் தன் குழந் தைகளைத் தான் என்றுமே புகழக்கூடாது என்று சொல்வார்கள். அதனால் ஒருமுறை கூட அவர் என்னைக் 'நன்னா குடித்தனம் செய்கிறாய் அம்மா' என்று சொன்னதில்லை. என் அம்மாவிடம் சொல்லி பெருமைப்பட்டுளார் என்று நான் பிறகு அறிந்து கொண்டேன். நான் இன்று இத்தனை நன்றாக இருக்கிறேன் என்றால் அதற்கு அவரின் அறிவுரை தான் காரணம். பெரியவர்களின் சொல்பேச்சு கேட்டவர்கள், கேட்பவர்கள் வீணாவதே இல்லை.

எங்க அப்பா சொன்னதை அப்படியே இங்கு வேலைக்கு அப்பளை பண்ணுங்கள்.

"அவசியமாக இருக்கு என்று வேலைக்கு போகாதீர்கள்...தவிர்க்க முடியாவிட்டால் வேலைக்கு போங்கள்"

நான் சொல்ல வந்ததது புரிந்ததா குழந்தைகளே!.... Comfort ஆக இருக்கும் என்று அதிக சௌகர்யத்துக்காக வேலைக்கு போகாதீர்கள். உள்ளதைக் கொண்டு சந்தோஷப் படுங்கள். இல்லை எனக்கு வேலைக்குப் போக மிகவும் ஆசையாக இருக்கிறது என்று சொல்வீர்கள் ஆனால், கல்யாணத்துக்கு முன் போய் பாருங்கள். அது பொறுப்புகள் குறைவான காலம். சந்தோஷமாய் அனுபவியுங்கள். ஆனால் கல்யாணம் ஆனதும், கணவன், மாமியார் மாமனார் என்று வாழ பழகுங்கள். குழந்தைகளை எதிர்கொள்ளத்தயாராகுங்கள். மனதளவில் உங்களை திடமாக்கிக் கொள்ளுங்கள்.

பொழுது போகவில்லை என்று சொல்லாதீர்கள். இது COVID காலம்... எனவே எதுவும் வீட்டில் இருந்த படியே சாத்தியம் என்று உங்கள் கண் முன் நிரூபித்த காலம். கிட்டத்தட்ட ஆறுமாத காலமாய் வேலைக்குப் போகும் பெண்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே வீட்டு வேலையும், பார்த்துக் கொண்டு, கணவன், குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, வேலைக்காரியா வேறு உதவியோ இல்லாமல். அதாவது வெளி உணவு கூட இல்லாமல் 3 வேளையும் தாங்களே சமைத்து உண்டு, உடுத்திட்டு எல்லாம்தானே நடந்து கொண்டு இருக்கிறது?/???ம்ம் ..??? அத்தனை ஆற்றல் உண்டு பெண்களிடம். அதை வீணடிக்காதீர்கள். இதையே நீங்கள் தாராளமாய் தொடர்ந்து செய்யலாமே . உங்கள் தேவை என்னவோ அவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.
.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 9:18 pm

ஸோ, என்ன குறை உங்களுக்கு?... எதுக்கு வீட்டை விட்டு வெளியே போகணும் சம்பாதிக்க?...அதுவும் கணவன் குழந்தைகளை சரிவர கவனிக்காமல்?.... ஆச்சு குழந்தைகள் எத்தனை வருடங்கள் உங்களுடன் இருக்கப்போகிறார்கள் 15 - 16?... பிறகு மேற்படிப்பு அப்புறம் வேலை அப்புறம் கல்யாணம் என்று போய்விடுவார்கள்.. பின் உங்களுடன் இருக்கும் இந்த வருடங்களை நீங்கள் வீணடிக்கலாமா? அவர்களுடன் தானே கழிக்கவேண்டும். உங்களுதவி அவர்களுக்குத் தேவைப்படும்பொழுது அதைத்தருவது தானே முறை?

நீங்க ஒன்று கவனித்திருக்கிறீர்களா? கார்ப்பரேஷன் ஆட்கள், வீதி களில் பிளாட் பாரங்களில் மரக்கன்றுகள் நடுவார்கள். அந்த கன்றுகளை யாரும் எதுவும் செய்துவிடக்கூடாது, மாடு ஆடு சாப்பிட்டுவிடக்கூடாது என்று, இரும்பால் ஆன பாதுகாப்பு வளைவை வைத்திருப்பார்கள். அந்த செடி மரமாகி, அந்த பாதுகாப்பு வளையத்தை விட உயரமானதும், இனி அந்த மரம் ஒன்றும் ஆகாது என்று அந்த வளையத்தை எடுத்து விடுவார்கள்;. அப்படி அவர்கள் ஒரு செடிக்கே செய்யும் பொழுது, நாம், நம் குழந்தைகள் பாதுகாப்பாக இந்த சமூகத்தில் உலவும் வரை அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்துவிட்டு, பிறகு நம் கைகளை உருவிக் கொள்ளலாம் அல்லவா?....

வீட்டு வேலைகள் அதாவது உங்கள் தினசரி கடமைகள் முடிந்ததும், உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி என்ன வேண்டுமானாலும் படிக்கலாம். எந்த மொழியும் படிக்கலாம். ஒன்லைன் கோர்ஸ்ஸஸ் பண்ணலாம். வேலை செய்யலாம். ஒன்லைன் பிஸ்னஸ்ஸ் செய்யலாம் . எத்தனை எத்தன்னையோ கைத்தொழில்கள் உண்டு கற்றுக்கொள்ள.

விஜய காந்த் ஒரு படத்தில் சொல்வார், ' எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை மன்னிப்பு' என்று அது போல எனக்கு பிடிக்காத ஒரு சொற்றோடர்...' உன் காலில் நீ நில்லு' என்பது தான். இதைக் கேட்டாலே எனக்கு BP ஏறும். ஏன் வீட்டில் இருந்து குடித்தனம் நிறைவாக செய்யும் நாங்கள் எல்லாம் என்ன கட்டக் காலிலா நிற்கிறோம்??? எத்தனை அருமையாக பன்முகங்களிலும் புகழ் பெற்று இருக்கிறோம்?

.................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 9:19 pm

குழந்தைகளையும் வளர்த்து, பெரியவர்களையும் அனுசரித்து எங்களால் முயன்ற அளவு சிக்கனத்தையும் கடைப்பிடித்து குடும்பத்தை நடத்த வில்லையா?... பணம் சம்பாதித்தால் தான் ஆச்சா? அதைச் சிக்கனமாக செலவழித்து மீதியை சேமித்தாலும் கூட நம் குடும்பத்துக்கு நல்லதுதானே?... கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்தை உங்களுக்குத்தெரியும் தானே?...அவர் விளையாடும் பொழுது சொல்வார்கள் அவர் அடிக்கும் ரன்களுடன் அவர் தடுக்கும் நன்குகளும் சேர்ந்ததுதுதான் அவர் ஸ்கொர் தான் என்று. அது போலத்தான் இதுவும். இருவரும் சம்பாதித்தால்தான் சேர்க்கமுடியும் என்று எங்காவது விதி இருக்கிறதா என்ன ?.... அதே போல நிறைய பணம் இருந்தால் தான் சந்தோஷம் என்று விதி உள்ளதா?...இரண்டுமே இலை... சந்தோஷமாய் மன நிம்மதியோடு வாழ பணம் மட்டுமே தேவை இல்லை. அவை இரண்டும் நம் மனத்தில் இருக்கிறது. பணம் இருப்பவர்கள் மட்டுமே சந்தோஷமாய் வாழுவார்கள் என்று சொன்னால், அம்பானி, பிரில்லா மட்டுமே சந்தோஷமாய் வாழுகிறார்கள், ஒரு ஆட்டோ ஓட்டுனரோ ஒரு கிளார்க்கோ சந்தோஷமாய் வாழ வில்லையா? ...சொல்லுங்கள்????

நாங்கள் எல்லாம் படிக்கும் காலத்திலேயே கோலம் போடுவோம், சுவாமி மேடை இல் அரிசிமாவால் போடுவோம், வாசலில் கல்லுப் பொடியால் போடுவோம், வீட்டிற்குள் மாவரைத்து இழை கோலம் போடுவோம், வண்ணப்பொடிகளால் ரங்கோலி. தையல் வேலை செய்வோம், எங்களுக்கான துணிகளைத் தைத்துக் கொள்வோம், எம்பிராய்டரி போடுவோம், சம்கி , மணி வைத்து தைப்போம்... ஸ்பாஞ் ஷீட் களில் பொம்மைகள் செய்வோம்.... பூத்தொடுப்பது, கதை புத்தகங்கள் வாசிப்பது, ஸ்லோகங்கள் கேட்பது, கதாகால ஷேபங்களுக்கு போவது, சமைப்பது , விட்டு நிர்வாகம் என்று பலதும் கற்றுக்கொண்டோம். அம்மானை ஆடுவோம், பல்லாங்குழி ஆடுவோம், பாண்டி , தாயக் கட்டம் ,கும்மி கோலாட்டம் தட்டுவோம். பல்லாங்குழி சுங்கு எல்லாம் நியாப சக்தியை பெருக்கும் . வாய்ப்பாடு நன்றாக வரும்.கல்லுரலில் அம்மி இல் அரைத்திருக்கிறோம். எங்க அம்மா பாட்டி எல்லாம் உரலில் அரிசி குத்தி இருக்காளாம்... சொல்வார்கள். நம் விரல் நுனிகளுக்கு வெவேறு விதமான வேலைகள் கொடுத்து நம்மை நோய் நொடி இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள் அந்தக் காலத்துப் பெரியவர்கள்.

வருஷ சாமான்கள் வாங்கி காயவைப்போம். வத்தல் போடுவோம். புளி வாங்கி கொட்டை நீக்கி, காயவைத்து அடுக்கும்பொழுதே அதே புளியங்கொட்டை களை சேர்த்து வைத்து சுங்கு விளையாடுவோம். இந்தக் காலத்துப் பெண்களுக்கு இவையெல்லாம் வருமா? அல்லது தெரியுமா ?
...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக