புதிய பதிவுகள்
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 7:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 7:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
57 Posts - 51%
heezulia
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
35 Posts - 31%
Dr.S.Soundarapandian
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
1 Post - 1%
Rutu
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
1 Post - 1%
raajmithun
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
245 Posts - 44%
heezulia
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
223 Posts - 40%
Dr.S.Soundarapandian
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
24 Posts - 4%
i6appar
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
13 Posts - 2%
prajai
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 திதிநித்யா தேவியர்கள் Poll_m10 திதிநித்யா தேவியர்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திதிநித்யா தேவியர்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82995
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 9:16 am

 திதிநித்யா தேவியர்கள் 11
-


தேவி பராசக்திக்கு அவள் அற்புத லீலைகளை விளக்க
ஆயிரம் திருநாமங்கள்.

அதில் ‘ப்ரதிபன் முக்யராகாந்த திதி மண்டல பூஜிதா’
என்றும், ‘நித்யா பராக்ரமாடோப நிரீஷண ஸமுத்ஸுகா’
என்றும் இரு நாமங்கள்.

அதாவது, ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான திதி
தேவதைகளால் பூஜிக்கப்படுபவள்; நித்யா தேவதைகளின்
பராக்கிரமத்தைக் காண்பதில் ஆசையுள்ளவள் என அந்த
இரு நாமங்களின் பொருள்.

ஒவ்வொரு திதியிலும் அம்பிகையை முறைப்படி பூஜிக்க
வேண்டும் என்று தந்த்ரசாஸ்திரங்களில் சொல்லப்
பட்டுள்ளது.

இம்மாதிரியான பூஜா விசேஷங்களால் வழிபடப்படுபவள்
என்றும் பொருள் கொள்ளலாம். ‘பிரதிபன்’ என்பது,
முதல் நித்யா தேவியான காமேஸ்வரியையும் ‘ராகா’ என்பது
பதினைந்தாம் நித்யாவான சித்ராவையும் குறிக்கும் என்பது
ஸ்ரீவித்யா உபாசகர்களில் மிகச் சிறந்தவரும் அம்பிகையின்
பரிபூரண அருளைப் பெற்றவருமான பாஸ்கரராயரின்
கருத்தாகும்.

இந்த திதி நித்யாக்கள் என்பவர் யார், யார்; அவர்களின்
பராக்கிரமங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

ஸ்ரீலலிதா பரமேஸ்வரியான ராஜராஜேஸ்வரியை ஸ்ரீசக்ர
வடிவத்தில் வழிபடும் முறையே ஸ்ரீவித்யா உபாசனை என
போற்றப்படுகிறது. அதில் பிந்து ஸ்தானம் எனப்படும்
மையப்புள்ளியில் அம்பிகை காமேஸ்வரனோடு இணைந்து
காமேஸ்வரியாக திருவருட்பாலிக்கிறாள்.

அந்த பிந்து ஸ்தானத்தைச் சுற்றியுள்ள முக்கோணத்தின்
மூன்று பக்கங்களிலும் ஐந்து ஐந்து பேர்களாக இந்த
பதினைந்து திதி நித்யா தேவியரும் வீற்றிருந்து அருள்கின்றனர்.

ஸ்ரீசக்ரம், பிரபஞ்சம், நமது உடல், மந்திரம், குரு இவை ஐந்தும்
ஒன்றே என உணர்ந்து நம்மை நாமே வழிபடும் முறையே
‘‘ஸ்ரீவித்யா’’உபாஸனை பூஜை முறையாகும்.

இந்த ஸ்ரீவித்யாவின் பிரதம தேவதையான ஸ்ரீபராபட்டாரிகா
என வேதங்கள் போற்றும் மகாநித்யாவான லலிதாம்பிகை
ஸ்ரீசக்ரத்தின் பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள்.

இத்தேவியின் கலைகள் பதினைந்தாகப் பிரிந்து ஒவ்வொரு
கலையும் ஒவ்வொரு தேவியாக வடிவம் பெற்று பதினைந்து
திதி நித்யா தேவியர்களாக அம்பிகையைச் சுற்றி கொலு
வீற்றருள்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82995
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 9:19 am


இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.
பதினைந்து பீஜங்களும் பதினைந்து நித்யைகளின்
வாசகங்களாக விளங்குவதால் பஞ்சதசாக்ஷரி வித்யைக்கும்,
நித்யா தேவியர்க்கும் வேறுபாடு இல்லை.

ஒரு மாதம் கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்ல பக்ஷம்
(வளர்பிறை) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு
பக்ஷமும் பதினைந்து நாட்கள் உடையதாக்கப்பட்டிருக்கிறது.

அமாவாசை திதி முதல் பவுர்ணமி திதி வரை மீண்டும்
பவுர்ணமி திதி முதல் அமாவாசை திதி வரை ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு திதி நித்யா தேவிக்கு உரியது.

மகாநித்யாவாகிய அம்பிகையின் கலைகளில் தோன்றும்
பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பக்ஷத்திற்கும்
ஒரு நாளாக மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை
நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

இந்த திதி தேவிகளின் அடிப்படையில்தான் தெய்வங்களுக்கும்
தென்புலத்தார்க்கும் (இறந்த பெரியவர்கள்/முன்னோர்கள்)
வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

தெய்வங்களை கோகுலாஷ்டமி, ராம நவமி போன்ற
திதிகளிலும், தென்புலத்தார் கடன்களை அமாவாசை அல்லது
அவர்கள் இறந்த திதிகளிலும் இன்று வரை நாம் வழிபட்டு
வருகிறோம். ஆனால், அந்தந்த திதிகளுக்குரிய தேவதைகளை
நாம் வழிபடுவதில்லை.

அன்றன்றைய திதிகளை பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை
மறவாமல் நாம் வழிபட்டு வந்தால் நம்மை வறுமை அணுகாமல்
அனைத்து சங்கடங்களிலிருந்தும் நாம் விடுபடுவோம்.
இது சர்வ நிச்சயம்.

சுக்ல பக்ஷத்தில் 1ம் நித்யா தேவியிலிருந்தும் கிருஷ்ண
பக்ஷத்தில் 15ம் நித்யா தேவியிலிருந்தும் பூஜை செய்ய வேண்டும்.

அமாவாசை மற்றும் பவுர்ணமியன்று வாராஹி, மாதங்கியுடன்
கூடிய மஹாநித்யாவான லலிதாபரமேஸ்வரியை வழிபட வேண்டும்.

ஒவ்வொரு திதிக்கும் ஒரு தேவதை உண்டு. அமாவாசைக்கு
பித்ருக்கள், பிரதமைக்கு அக்னி, த்விதியைக்கு பிரம்மா,
த்ரிதியைக்கு பார்வதி,

சதுர்த்திக்கு கணபதி, பஞ்சமிக்கு நாகராஜா, சஷ்டிக்கு
முருகப்பெருமான், ஸப்தமிக்கு சூரியன், அஷ்டமிக்கு ஈசன்,
நவமிக்கு அஷ்டவசுக்கள், தசமிக்கு திக்கஜங்கள், ஏகாதசிக்கு
யமதர்மராஜன், த்வாதசிக்கு திருமால், த்ரயோதசிக்கு மன்மதன்,
சதுர்த்தசிக்கு கலிபுருஷன், பௌர்ணமிக்கு சந்திரன் போன்றோர்
தேவதைகளாக சொல்லப்பட்டுள்ளனர்.

தேவியை முறைப்படி வழிபடும் நவாவரண பூஜையிலும்
சுமங்கலி பூஜையிலும் திதி நித்யா பூஜை முக்கிய இடம் பெறுகிறது.
ஒவ்வொரு திதி தேவியைக் குறிக்கும் விதமாக 15 சுமங்கலிகளையும்
16வது நித்யாவான லலிதாபரமேஸ்வரியாக ஒரு சுமங்கலியையும்
பெரிய முக்கோணம் போட்டு காமேஸ்வரி முதல் சித்ரா வரை
பக்கத்திற்கு ஐவராக பிரதட்சிணமாக அமரவைக்கப்படுவர்.

பூஜை செய்யப்படும் அன்று எந்த திதியோ அந்த நித்யா தேவியின்
இடத்தில் உள்ள சுமங்கலிக்கு முதல் பூஜை செய்யப்படும்.

அமாவாசைக்குப் பின் அந்த பூஜை செய்யப்பட்டால்
காமேஸ்வரியிலிருந்து பிரதட்சிணமாகவும், பௌர்ணமிக்குப் பின்
அந்த பூஜை செய்யப்பட்டால் சித்ராவிலிருந்து அப்பிரதட்சிணமாகவும்
பூஜிக்கப்படுவர். ஒவ்வொரு நித்யா தேவிக்கும் அவரவர்க்குரிய
த்யானஸ்லோகம் சொல்லி ஆவாஹனம் செய்யப்பட்டு மூலமந்திரத்தால்
பூஜிக்கப்பட்டு பஞ்சோபசாரத்திலிருந்து தீபாராதனை வரை செய்யப்படும்.

‘பிரதிபன்முக்யராகாந்த திதிமண்டல பூஜிதா’ எனும் நாமாவை
அடிப்படையாகக் கொண்டே இப்பூஜை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82995
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 9:21 am

இந்த நித்யா தேவிகளைப் பற்றி லலிதாபாக்யோனத்தில்

‘‘அதகாமேஸ்வரி நித்யா நித்யா ச பகமாலினி
நித்யக்லின்னாபி ச ததா பேருண்டா வஹ்னிவாஸினி

மஹா வித்யேச்வரி தூதி த்வரிதா குலசுந்தரி
நித்யா நீலபதாகா ச விஜயா ஸர்வமங்களா
ஜ்வாலாமாலினிகா சித்ரேத்யேதா பஞ்சதசோதிதா’’


- என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேவிகளின் பூஜா விவரங்கள், த்யான ஸ்லோகங்கள்
போன்றவை தந்திரராஜம் எனும் நூலில் காணப்படுகின்றன.
இன்னமும் விஸ்தாரமான விவரங்கள் யோக வாஸிஷ்டம்,
வாஸிஷ்ட ஸம்ஹிதை, ஸனந்தன ஸம்ஹிதை போன்ற
நூல்களில் காணக்கிடைக்கின்றன. ஒவ்வொரு தேவியை
பூஜிக்கும்போதும் அவரவருக்குரிய சக்கரங்களாகிய
யந்திரங்களையும் சேர்த்து பூஜிப்பதும், விசேஷமான பலன்களை
அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூரிலுள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில்
ராஜராஜேஸ்வரி தேவி முன்னால் 16 படிகளைக் காணலாம்.
ஒவ்வொரு படிக்கும் ஒரு திதி நித்யா தேவியின் பெயரைச்
சூட்டி, அவரவருக்கான யந்திரத்தையும், தேவியையும் அருகே
உள்ள சுவரில் அந்தந்த படிக்கு நேர் மேலாக அமைத்திருக்கிறார்கள்.

இந்த அமைப்பினாலேயே ராஜராஜேஸ்வரி தேவியின் சந்நதி சக்தி
வாய்ந்ததாகத் திகழ்கிறது.

சென்னை மயிலை பச்சைப்பட்டு கோலவிழியம்மன் ட்ரஸ்ட்
ஆலயத்திலும் திதி நித்யா தேவியரை அவரவருக்குரிய வாகனங்கள்
மீது அமர்ந்த நிலையில் தரிசிக்கலாம்.

தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் பாதையில் உள்ள பண்ருட்டி கண்டிகை
எனும் இடத்தில் திதி நித்யா தேவியருக்கென ஓர் ஆலயம்
அமைந்துள்ளது. அங்கு 15 திதி நித்யா தேவியரும் வாராஹி, மாதங்கி
போன்றோரும் யந்திர வடிவில், மஹாமேருவாக விளங்கும்
லலிதாபரமேஸ்வரியைச் சுற்றிலும் இடம்பெற்று
திருவருட்பாலிக்கின்றனர்.

ஆதிசங்கரரால் பிரசித்தமான ‘சுபாகம தந்த்ர பஞ்சகம்’ என்ற நூலில்
இந்த தேவியர்களின் உபாசனை பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நூல் வசிஷ்டர், ஸனகர், ஸனந்தனர், ஸனத்குமாரர், சுகர் ஆகிய
ஐவருடைய பூஜா பத்ததியை விளக்கும் அதியற்புத நூலாகும்.

‘இது செய்ய எனக்கு சக்தி இல்லை’ என்று சொல்லித் தவிர்க்காமல்
அன்றாடம் அன்றன்றைய நித்யா தேவியை தியானம் செய்தால் நம்
அன்றாடைய வாழ்க்கையை பிரச்னைகள் இல்லாமல் நிர்மலமாகவும்
நிம்மதியாகவும் நடத்தலாம் என்பது உறுதி.
--

ந.பரணிகுமார்
நன்றி- குங்குமம் (ஆன்மிகம்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82995
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 9:23 am


‘சர்வம் சக்தி மயம்,’ ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’
என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருவருள் பாலிக்கும்
இந்த தேவியரை பற்றி தெரிந்து கொள்வோம்.

இத்தொடரில் ஒவ்வொரு நித்யா தேவியரின் தோற்றப்பொலிவு,
த்யான ஸ்லோகங்கள், காயத்ரி மந்திரம், மூலமந்திரம்,
மாத்ருகா அட்சர அர்ச்சனை, யந்த்ரம், அதன் விளக்கம்,
நைவேத்தியம், அந்தந்த தேவியரை வழிபடுவதால் ஏற்படும்
பலன்கள், அந்தந்த திதிகளில் பிறந்தவர்களின் குணநலன்கள்,
அத்திதியில் செய்யத்தக்கவை, அகத்தியர் அருளிய
இத்தேவியர்களின் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச துதிகள் ஆகியவை
தொகுத்து அளிக்கப்படுகின்றன.

1.காமேஸ்வரி நித்யாதேவிஇந்த அம்பிகை கோடி சூரியப்ரகாசம்
போன்று ஜொலிப்பவள். மாணிக்க மகுடம் தரித்தவள்.
தங்கத்தினாலான அட்டிகை, பதக்கங்கள், ஒளிரும் சங்கிலி,
ஒட்டியாணம், மோதிரம், கால்களில் கொலுசு அணிந்தவள்.
ரத்னாபரணங்கள் பூண்டு, பட்டாடை உடுத்தியவள்.

இந்த காமேஸ்வரி நித்யா தேவிக்கு ஆறு திருக்கரங்கள். முக்கண்கள்.
தலையில் சந்திரகலை தரித்திருக்கிறாள்.

புன்முறுவல் பூத்த முகத்தினள். கருணையை வெள்ளமெனப் பாய்ச்சும்
கண்களைக் கொண்டவள். கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில்,
மதனா, உன்மனா, தீபனா, மோகனா, ஸோஷனா எனும் ஐந்து
தேவதைகளாலான புஷ்பபாணங்கள், அமிர்தத்துடன் கூடிய ரத்ன
பாத்திரம், வரமுத்திரை தரித்தவள்.

ஆசைகள் அதிகமாகும் போது அது காமமாகிறது.
சுகத்திற்காகவே மோகமும் அது கிடைக்காதபோது துவேஷமுமாகிறது.
ஐம்புலன்கள் மூலமாக உலக விஷயங்களின் மீதுள்ள பற்று விஷய
போகங்களில் சுகம் மிகுந்திருப்பதாக கருதுவதால் சுகத்திற்காக
உலக விஷயங்களை நாடி அவற்றின் மீது பற்று கொள்வதை சிற்றின்பம்
என்கிறோம். உண்மையில் இந்த இனிப்பான இன்பம் நீடித்ததல்ல.

மிகச்சிறிய காலமே இருந்து மறைந்து விடும். இன்பமானவை இனிப்பாக
இருப்பதை கரும்பு மூலம் தேவி காட்டுகிறாள்.

ஆனால், காமேஸ்வரியை சரணடைய பேரின்பம் கிட்டும்.
பஞ்சேந்த்ரியங்களை தன் கையிலுள்ள பஞ்சபுஷ்பபாணங்களினால்
கட்டுப்படுத்துகிறாள். காமத்தால் மதம் பிடித்து தன்னையும்
மற்றவர் களையும் அழிக்க முயலும்போது தன் கரத்திலுள்ள
அங்குசத்தால் அடக்கி அமைதியை நிலை நாட்டுகிறாள்.

தன் திருவடியைப் பற்றுவோர்க்கு மரணபயத்தை நீங்கச் செய்கிறாள்.
பக்தர்களின் இதயக்கமலத்தில் விரும்பி வாசம் செய்யும் அம்பிகை இவள்.

காமேஸ்வரி என்றால் அழகான வடிவத்துடன் இருப்பவள்.
அல்லது விரும்பிய வடிவத்தை எடுக்கக்கூடியவள் என்று பொருள்.
கேட்கும் வரங்களை வாரி வழங்கும் பரம கருணை வடிவினள்
இத்தேவி. அன்னையின் நெற்றியில் கஸ்தூரி திலகங்கள் ஜொலிக்கின்றன.

வழிபடும் அன்பர்களின் மனதில் பரிவோடு நித்யவாஸம் செய்து
ஆத்ம சுகத்தையும் பேரின்பத்தையும் அருள்பவள். ஆத்மானுபவத்தில்
திளைப்போர்க்கு பேரொளி வடிவமாகக் காட்சி தருபவள்.

பாவிகளையும் தாய் போல் காப்பவள். அன்பர்களின் மனதிற்கு
இனியவள். மங்களங்கள் அருள்பவள். சௌந்தர்ய ரூபவதி.
ஜீவன்களின் பாபமூட்டையைத் தன் கடைக்கண் பார்வையாலேயே
சுடுபவள்.

மனிதர்களை வருத்தும் பாவங்களும், துன்பங்களும் இந்த தேவியை
நினைத்த மாத்திரத்திலேயே மறைந்து விடும். இந்த அம்பிகையை
வழிபடுவோர் புக்தி, முக்தி இரண்டையும் பெற்று பேரின்பப் பெருவாழ்வை
அடைவர் என்பது திண்ணம்.


pothigairrv இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக