புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_m10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_m10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10 
77 Posts - 36%
i6appar
‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_m10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_m10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_m10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_m10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_m10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_m10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_m10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_m10‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 11:00 am

பார்லிமென்டில், சோக ரசம் கூட, சமயத்தில், நகைச்சுவையாக
அமைந்து விடும்.

தமிழகத்தில், அரியலுாரில் நடந்த ரயில் விபத்தால் ஏற்பட்ட
மரணங்கள் குறித்து, தமிழக உறுப்பினர், வல்லத்தரசு என்பவர்,
விளக்கியதுடன் நிற்கவில்லை; தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

முகத்தில் துண்டைப் போட்டுக் கொண்டதால், சபாநாயகரை
பார்க்கவில்லை.

சபாநாயகர் எவ்வளவு வற்புறுத்தியும், அவர், அழுகையை
நிறுத்தவில்லை.
-
-------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 11:16 am

அரியலூர் ரயில் விபத்து 1956: கால வெள்ளத்தில் ஒரு பயணம்
-
‘அரசியல் சுவடுகள்’ நுாலிலிருந்து: (அரியலூர் ரயில் விபத்து 1956:) 198647
அநேக இரவுகளில் அந்த விபத்து எனக்குக் கனவாக வந்து பேயாட்டம் ஆடி
நிம்மதியைக் குலைத்தது உண்டு. ஆண்டுகள் ஐம்பதுக்கும் மேல் கடந்தாலும்
நினைவைவிட்டு அகலாத பயங்கரம்.

இந்தியாவில் நிகழ்ந்த கோரமான ரயில் விபத்துகளில், காலத்தால் முந்தைய
அரியலூர் ரயில் விபத்தைத்தான் குறிப்பிடுகிறேன். இப்போது அதை எழுதுவதன்
மூலம் என்னவாகும்?

என் நெஞ்சின் பாரம் கொஞ்சம் குறையும் என்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.

இந்தியாவையே உலுக்கிய அந்த விபத்து 1956 நவம்பர் 23-ல் நடந்தது. 142 பயணிகள்
இறந்தனர், 110 பேர் காயமடைந்தனர். ஏராளமானோர் காணாமல் போயினர்.
அந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்களில் நானும் ஒருத்தி.

மான் வண்டி ரயில்

அப்போது எனக்கு வயது 21. சென்னையில் தூத்துக்குடி விரைவு ரயிலில் என்னுடைய
அத்தையுடன் ஏறியிருந்தேன். இரவு 9.50 மணிக்கு ரயில் சென்னையிலிருந்து
புறப்பட்டது. மூர்மார்க்கெட்டில் வாங்கிய கிறிஸ்துமஸ் பரிசுப்பொருள்கள், ஆடைகள்,
தின்பண்டங்கள் ஆகியவற்றுடன் நாங்கள் அந்த ரயிலில் ஏறியிருந்தோம்.
அந்த நீராவி ரயிலையே சான்டா கிளாஸின் மான் வண்டியாகக் கற்பனை செய்து
மகிழ்ந்திருந்தேன்.

அந்த ரயிலில் மொத்தம் 13 பெட்டிகள். விருத்தாசலம் சந்திப்பு வந்தவுடன் கடைசி
பெட்டியைக் கழற்றிவிடுவார்கள். அது சேலம் மார்க்கத்தில் செல்லும் ரயிலுடன்
சேர்க்கப்படும். எஞ்சிய 12 பெட்டிகளுடன் ரயில் பயணத்தைத் தொடரும்.

நாங்கள் எட்டாவது பெட்டியில் இருந்தோம். எங்கள் வரிசையில் எங்களைத் தவிர
வேறு யாருமில்லை. லேசான இரவு ஆகாரத்துக்குப் பிறகு நாங்கள் ஆழ்ந்து தூங்க
ஆரம்பித்தோம். திடீரென்று ரயில் பெருத்த ஓசையுடன் குலுங்கி நின்றது.

அது சாதாரணமான குலுக்கல் அல்ல; அண்ட சராசரங்களும் வெடித்துச் சிதறியதைப்
போன்ற குலைநடுங்க வைக்கும் குலுக்கல். என்ன நடந்தது என்றே புரியவில்லை.
நீராவி என்ஜின் ஓலமிடும் ஓசை லேசாகக் கேட்டது

. “ஐயோ காப்பாத்துங்க” என்ற மரண ஓலம் காதுகளைத் துளைத்தன. “ஆ…” “ஊ…” என்று
ஒரே அலறல். அந்தக் கூச்சல்கள் எங்களுக்குள் பீதியை ஏற்படுத்தின. பெஞ்சிலிருந்து
தரையில் விழுந்த நாங்கள் சுதாரித்துக்கொண்டு எழுந்தோம்;

ரயில் பெட்டிக்கு வெளியே குதித்துவிட நான் வேகமாக முற்பட்டபோதுதான் என் அத்தை
வெளியே பார்த்துவிட்டு கத்தினார்: “ஜாய்ஸ், குதிக்காதே, நாம் ஆற்றின் மீது இப்போது
இருக்கிறோம்…”


மருதையாற்றின் சீற்றம்

அரியலூர் – கல்லாகம். இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கும் இடையில் மருதையாறு
ஓடுகிறது. அன்றைக்குச் சரியான மழை. மருதையாறு இரு கரைகளையும் அடைத்துக்
கொண்டு ஓடியிருந்திருக்கிறது. இரவு நேரம் கூடக்கூட வெள்ளப்பெருக்கு அதிகரித்து
நீர்மட்டம் உயர்ந்து ரயில் பாலத்தைத் தொட்டுக்கொண்டும் ரயில் பாதையை அரித்துக்
கொண்டும் ஓடியிருக்கிறது.

ரயில் பாலத்தை ஒட்டியிருந்த கரை சுமார் 20 அடி நீளத்துக்கு வெள்ளத்தால்
அரிக்கப்பட்டிருக்கிறது. பாலம் பலகீனமாக அதன் மோசமான முடிவுக்குக் காத்திருந்த
நிலையில்தான், எங்கள் ரயில் அதை நெருங்கியிருக்கிறது. இருள் கவிந்த இரவில்
வெள்ளம் பெருக்கெடுத்ததால் பாலத்துக்கு ஏற்பட்ட சேதம் ரயில்வே நிர்வாகத்துக்குத்
தெரியவில்லை.

அரியலூர் நிலையத்திலிருந்து புறப்பட்டு சுமார் இரண்டு மைல்கள் தாண்டிய ரயில்,
மருதையாற்றுப் பாலத்தின் மீது பாதையைவிட்டு இறங்கி தடம் புரண்டது. ரயிலின்
நீராவி என்ஜினும், ஏழு ரயில் பெட்டிகளும் அப்படியே ஆற்றுக்குள் சரிந்தன;
ஒரு பார்சல் வேனும் இதில் அடக்கம்.

எட்டாவது பெட்டி பாதையைவிட்டு முறுக்கிக்கொண்டு தடம் புரண்டிருந்தது.
கடைசி நான்கு பெட்டிகள் அப்படியே தண்டவாளத்தின் மீது நின்றன

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 11:18 am


உயிர்ப் போராட்டம்

கூற்றுவனின் பாசக்கயிற்றில் சிக்கிக்கொண்ட பொம்மையைப் போல, நான் அந்த
ரயில் பெட்டிக்குள்ளேயே அச்சத்திலும் பீதியிலும் உறைந்திருக்கிறேன். கைக்கடிகாரம்
அப்போது அதிகாலை மணி 5.30 என்று காட்டுகிறது. ரயில் பெட்டி ஜன்னல் வழியாக
வெளியே பார்த்தால், ஆக்ரோஷமான மருதையாறு நொப்பும் நுரையுமாக
ஆவேசத்துடன் பாய்ந்துகொண்டிருந்தது.

மரங்கள், செடிகொடிகள், ரயிலில் வந்தவர்களின் மூட்டைகள், ரயில் பெட்டியில்
ஏற்றியிருந்த கட்டுகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என உயிரற்ற சடலங்கள்
ஆற்றுநீரில் விழுந்தும் மூழ்கியும் மேலே கிளம்பியும் அப்படியும் இப்படியும்
அலைக்கழிக்கப்பட்டும் அச்சமூட்டுகின்றன.

மனதுக்குள் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு ரயில் பெட்டிக்கு வெளியே தலையை
நீட்டிப் பார்த்தபோது ரயிலின் கார்டு, அந்தப் பாலத்தின் ஓரத்திலிருந்த ஒரு கல் மீது
நின்றபடி எங்களைப் பார்த்து ஏதோ கத்தினார்.
“வெளியே வாருங்கள், உங்கள் பெட்டி தடம் புரண்டிருக்கிறது…”

உடனே என்னுடைய அத்தை என்னைப் பார்த்து, “என் பின்னாலேயே வா” என்று உரக்கக்
கத்திவிட்டு அந்த ரயில் பெட்டியைவிட்டு வெளியேறத் தயாரானார். அச்சத்திலும்
அதிர்ச்சியிலும் உறைந்த நான் “என்னால் முடியாது” என்று அழுதுகொண்டே அவரைக்
கட்டிக்கொண்டேன். என் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அத்தை மிகவும்
சிரமப்பட்டு ரயில் பெட்டியின் கைப்பிடியைத் திருகி கதவைத் திறந்தார்.

ஓர் அடி நூறு மைல்

பிறகு ஆற்றின் மீது தொங்கியபடி நின்ற அந்தப் பெட்டியின் படிகளில் வெகு கவனமாகக்
கால்களை வைத்து மெதுவாகக் கீழே இறங்கினார். பிறகு அடுத்த பெட்டியின் ஜன்னல்,
அதற்கடுத்த ஜன்னல் என்று ஒவ்வொன்றாகத் தொற்றித்தொற்றி, தாவித்தாவி அந்த
ரயிலின் கடைசிப் பகுதி நோக்கி முன்னேறினார்.

அவரைப் போலவே நானும் ஜன்னல்களைப் பற்றி தாவித்தாவி அவரைப் பின்தொடர்ந்தேன்.
ஜன்னல் ஜன்னலாகத் தாவியபோது இதயம் படபடவென அடித்துக்கொண்டது, பற்கள்
கடகடவென தந்தியடித்தன. எங்காவது ஓரிடத்தில் கைப்பிடியை நழுவவிட்டாலும் ஆற்றில்
விழ வேண்டியதுதான் என்பதால் மனதில் பீதியும் அச்சமும் நிரம்பியிருந்தது. எடுத்துவைத்த
ஒவ்வொரு அடியும் நூறு மைல் பயணமாக உணர்த்தின.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 11:22 am

அச்சத்திலும் பீதியிலும் வேகவேகமாக பெட்டிக்குப் பெட்டி தாவியதாலும்
பழக்கம் இல்லாததாலும் பெட்டியின் கம்பிகள் அறுத்து கைகளில் தோல்
உரிந்து காயம் ஏற்பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது.
கால்முட்டிகளும் ரணமாகி வீங்கத் தொடங்கின.

சாவை உணர்தல்

டென்னிஸனின் 'தி சார்ஜ் ஆஃப் த லைட் பிரிகேட்' கவிதையில் உள்ள
“சாவின் பள்ளத்தாக்கில் நான் நடந்தேன்” என்ற வரிகள் நினைவுக்கு
வருகின்றன. எங்களிருவரைப் போலவே வேறு சில பயணிகளும் ஜன்னல்
ஜன்னலாகத் தாவி ரயில் பெட்டியின் கடைசிப் பகுதிக்கு வந்தார்கள்.

ஒருவழியாக மண்ணைத் தொட்டபோது அழுகை நெஞ்சை அடைத்தது.
யாரும் பேசிக்கொள்ளவில்லை. ரயில் பாதையின் இருபுறங்களிலும்
சீறிவரும் வெள்ளத்துக்கு இடையே, மீட்டுச் செல்ல வருவோருக்காகக்
காத்திருக்கத் தொடங்கினோம்.

ஆற்றில் அந்த வெள்ளத்தின் சீற்றம் படிப்படியாகத் தணிய சுமார் நான்கு
மணி நேரம் ஆனது. வெள்ளம் அடங்கி ஆற்றின் இரு கரைகளுக்குள்
ஒடுங்கி ஆறு பழையபடி ஓடத் தொடங்கியபோது ஆற்றங்கரைகளில்
ஆங்காங்கே சொருகியிருந்த சடலங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன.

நீர்மட்டத்துக்கு மேலே வருவதும் பிறகு நீரில் மூழ்குவதும், நீரில் அப்படியும்
இப்படியும் அலைக்கழிக்கப்படுவதுமாக இருந்தன. மீட்பு ரயில் எங்களை
அழைத்துச் செல்ல வந்தது.

யார் இந்த ஜாய்ஸ்?


அரியலூர் விபத்து நடந்த காலகட்டத்தில் பொன்மலை ரயில்வே
பள்ளிக்கூடத்தில் கிளார்க்காகப் பணிபுரிந்தவர் ஜாய்ஸ்

தெற்கு ரயில்வேயில் கார்டாகப் பணிபுரிந்த கிளாரன்ஸ் வர்ணம்
என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர், பிறகு மதுரையில்
குடியேறினார். இரு குழந்தைகள்.

1982-ல் விருப்ப ஓய்வுபெற்றவர் கணவர் கிளாரன்ஸ் வர்ணத்தின்
மரணத்துக்குப் பிறகு, 1996-ல் ஜாய்ஸ் ஆஸ்திரேலியாவில்
குடியேறினார். மெல்போர்னில் தன் பிள்ளைகளுடன் வசிக்கிறார்.

அரியலூர் விபத்து ஜாய்ஸை ரொம்பவே படுத்தியது. விபத்துக்குப்
பிறகு ரயில் என்றாலே அலற ஆரம்பித்தார். தூக்கத்தில் அடிக்கடி
விபத்தைக் கண்டு நடுக்கத்துக்குள்ளானவர்

தூக்கத்தில் நடக்கும் பாதிப்புக்கும் ஆளானார். காலம் செல்ல
செல்ல ரயில் பயம் குறைந்து அரியலூரை ரயிலில் கடக்கும்
அளவுக்கு தன் மனதை பலப்படுத்திக்கொண்டாலும் இந்த
எண்பது வயதிலும் ரயிலைப் பார்க்கும்போது அவர் கண்கள்
நனைகின்றன.
-------------------
இந்து தமிழ் திசை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக