புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
Page 1 of 1 •
இன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து வந்த கடிதம்
இந்தச் சந்தேகத்தைக் கிளப்பியது
நான் உயிரோடிருப்பதை இத்தனாம் தேதிக்குள் ஒரு
டாக்டரின் அத்தாட்சியடன் அவர்களுக்குத் தெரிவிக்கக்
கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு மாதாமாதம் இன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து
வந்து கொண்டிருந்த ரூபாய் இருநூறு கொஞ்ச நாளாக
வரவில்லை. சரி, ஏனோ நிறுத்தி விட்டார்கள்
போலிருக்கிறது, 200 ரூபாயை விசாரித்து அலைந்து
திரிவானேன் என்று சும்மா இருந்து விட்டேன்.
அந்தச் சமயத்தில்தான் ‘நான் உயிரோடு இருக்கிறேனா?’
என்று கேட்டு கடிதம் வந்தது.
எல்.ஐ.சி. விவகாரம் தெரிந்த என் உறவினரிடம் விஷயத்தைச்
சொன்னேன். ‘‘நீங்கள் உயிரோடு இருக்கும் வரை மாதம்
200 ரூபாய் கிடைக்க எல்.ஐ.சி.யுடன் ஒப்பந்தம் செய்து
கொண்டிருக்கிறீர்கள். ஆபீஸில் வேலை செய்து
கொண்டிருந்தபோது உங்கள் கிராஜுவிடி தொகையிலிருந்து
மாதம் கொஞ்சமாக இன்ஷுரன்ஸ் கம்பெனிக்குப் பணம்
செலுத்தியிருக்கிறார்கள்.
நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்கள் ஆயுள் பரியந்தம்
மாதாமாதம் 200 ரூபாய் தர ஒப்பந்தமாகியிருக்கிறது.
ஆகவேதான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா என்று
கேட்டிருக்கிறார்கள். ஒரு டாக்டரிடமிருந்தோ,
அரசு அதிகாரியிடமிருந்தோ நீங்கள் உயிரோடு இருப்பதற்குச்
சான்றுப் பத்திரம் (எக்ஸிஸ்டன்ஸி சர்டிபிகேட்) வாங்கி
அனுப்ப வேண்டும். அதைத்தான் அவர்கள்
கேட்டிருக்கிறார்கள்.’’
அவர் சொன்னவாறே செய்தேன். ஃபாரத்தைப் பூர்த்தி
செய்துகொண்டு எல்.ஐ.சி. போனேன். ஆனால் நான்
உயிரோடிருப்பதை அவர்கள் நம்பத் தயாராய் இல்லை.
நானே நானா என்று எனக்குச் சந்தேகம் ஏற்படுகிற அளவு
சந்தேகப்பட்டார்கள்.
எல்.ஐ.சி.க்கு எந்த ஜென்மத்திலோ நான் தந்த பாஸ்போர்ட்
போட்டோவில் என் முகமண்டலத்தில் தாடி, மீசை இல்லை.
அந்தக் காலத்தில் பிளேடுகள் கூர்மையாகவும்
மலிவாகவுமிருந்தன. எனக்குத் தினமும் ஷேவ் செய்து
கொள்வது பிடிக்கும். ஆகவே பழைய பாஸ்போர்ட் படத்தில்
கன்னங்கள் மழமழவென்றிருந்தன.
ஆனால் இப்பொழுதுதான் ரிடையர்ட் கேஸாச்சே...
‘நம்ம முகரக்கட்டையை யார் வந்து பார்க்கப் போகிறாங்க
அல்லது யார்கிட்டே கொண்டு போய் காட்டப் போகிறோம்’
என்று அஸால்ட்டாக இருந்ததால் தேன்கூடு கணக்காக
மொசமொசவென்று என் முகத்தில் தாடி தொங்கிக்
கொண்டிருந்தது. எனக்கே என்னை அடையாளம் தெரியாத
அளவு தாடி பெருகியிருந்தது.
தலையில் எவ்வளவு இடம் காலியாக இருக்கு? மேல்தளம்
பூரா மொஸைக் போட்டாற் போல் ஜம்மென்று இருக்கிறது.
அங்கே போய் நூறு ஐம்பது உட்காராதுகளோ? எல்லா முடியும்
மோவாயைச் சுற்றியே ஸெட்டிலாகி விட்டன.
வெயில் கருதியும், வழுக்கை கருதியும் எப்போதும் தலையில்
ஒரு தொப்பி போட்டிருப்பேன்.
நாளடைவில் அது தலையிலிருந்து கழற்றவே முடியாத அளவு
தலையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. (எனக்குத் தலைக்கனம்
கூடி அதனால் தொப்பி இறுகியிருக்கலாம் என்ற வாதத்தை
நான் ஏற்கவில்லை.) எனது ஆதி அடையாள அட்டையிலுள்ளது
போல் நான் மறுபடி புகைப்படம் எடுத்துக் கொள்ள
விரும்பினால் எனது புனித தாடி, மீசையை நீக்கிக் கொள்ள
வேண்டும்.
எனது சொந்தப் பிரச்னையில் அந்நியத் தலையீடாக அது
எனக்குத் தோன்றியது. ‘‘மூணு நாலு வருஷத்து அரியர்ஸ்
பணம் கணிசமாக வருமேடா’’ என்றார் உறவினர்.
சபலமாயிற்று. சலூனுக்குப் போய்த் தாடியை கஞ்சாச்
செடிகளை ஈவிரக்கமில்லாமல் போலீஸ் அழிப்பது போல்
அழித்தே விட்டேன். ஆறு வயசில் எனக்கொரு பயல்
இருக்கிறான். அவன் என்னைச் சில சமயம் டாடி என்றும்,
சில சமயம் தாடி என்றும் கூப்பிட்டு வந்தான்.
என் முகத்தில் தாடி இல்லாமல் அவன் என்னைப் பார்த்ததே
கிடையாது.
ஆகவே அவன் மதியம் பள்ளியிலிருந்து வந்தபோது அவனது
தாயாருடன் (அதாவது தாலிகட்டிய என் பெண்சாதியுடன்)
நான் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, ‘‘அப்பா! அப்பா!
அம்மா எந்த மாமாவுடைய கன்னத்தையோ தொடறாள்!’’
என்று கத்தியவாறு புழக்கடையில் நான் கீரைப் பாத்தியிடம்
இருப்பேன் என நினைத்து ஓடினான்.
‘நானே நான்’ என்று அவனுக்கு என்னை நிரூபிக்க ரொம்பக்
கஷ்டமாகப் போய் விட்டது. எனது பழைய பாஸ்போர்ட்
ஸ்கூல் சர்ட்டிபிகேட், பழைய அடையாள அட்டை, வாக்குச்
சீட்டு, ரேஷன் கார்ட் எல்லாம் காட்டி ‘நான் தாண்டா இது’
என்று நிரூபிக்க வேண்டியிருந்தது.
நண்பன் நாராயணன் கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் படித்து
பி.ஏ. பரீட்சை எழுத ஷெனாய் நகரில் உள்ள ஒரு பள்ளிக்குப்
போயிருந்தான். பரீட்சை எழுத பல வயதுகளில் பலதரப்பட்ட
மாணவர்கள் கூடியிருந்தார்கள். பெயிண்டர், தையல்காரர்,
மெக்கானிக் என்பதாகப் பல ரகம். ஒரொரு ஹாலிலும்
ஐம்பது பேர் பரீட்சை எழுதினார்கள்.
நாராயணனுடைய ஹாலை நிர்வ்கித்த அதிகாரி ரொம்பக்
கறார், கண்டிப்பானவர். மாணவர்களில் பலர் மாணவர்களாக
இல்லாமல் வயசாளிகளாக இருந்தனர்.
ஒரு ஆசாமி முரடராகத் தோற்றம் தந்தார். பரீட்சை
அதிகாரியை, ‘‘யோவ்! மணி அடிச்சாச்சு, பேப்பர் குடுய்யா’’
என்று உரக்க அதட்டினார்- டெஸ்க்கையும் பெரிசாகத்
தட்டியவாறு. ஏதோ ஒரு கெட்ட வார்த்தை வேறு- தொட்டுக்
கொள்ள ஊறுகாய் மாதிரி- அவர் வாயில் வந்து விழுந்தது.
கிழவரான பரீட்சை அதிகாரி அந்த ஆசாமியை முறைத்துப்
பார்த்துவிட்டு, அவனருகில் வந்தார். அவனைக் கோபமாகப்
பார்த்தார். பிறகு அவனுக்கு மட்டும் கேள்விப் பேப்பர் தராமல்
மற்றவர்களுக்குக் கொடு்த்து விட்டு நாற்காலியில் போய்
அமர்ந்து விட்டார்.
அந்த முரட்டு ஆசாமி மேலும் முரட்டுத்தனமாக,
‘‘யோவ்! இன்னாயா நீ பாட்டுக்கு உட்கார்ந்துட்டே. எனக்கு
கேள்விப் பேப்பர் தரலியே!’’ என்று கத்தினான். அவர்,
‘நீ மாணவனே அல்ல. வேறு யாரோ. ராங் அய்டென்டிடி!
நீயாக ஹாலை விட்டு வெளியேறுகிறாயா, வாட்ச்மேனை
விட்டு வெளியேற்றவா?’’ என்றார்.
அவன் மிரண்டு போய், ‘‘நான்தான் சார். நானே நான் சார்!’’
என்றான் சுருதி இறங்கி. அவனுடைய அய்டென்டிடி
சர்டிபிகேட்டில் ஒட்டியிருந்த போட்டோவில் அவன் தாடி
வைத்திருந்தான். இப்போது மழமழவென்று மழித்து
விட்டிருந்தான். ஆனாலும் அவன்தான் என்று அடையாளம்
தெரிந்தது.
ஆனால் அவன் ‘யோவ்’ போட்டு அவமரியாதையாக
எக்ஸாமினரை அழைத்ததால் அவர் கோபம் கொண்டு
அவனது அடையாளத்தை சந்தேகப்பட்டு பேப்பர்தர மறுத்து
விட்டார்.
‘‘போய் பிரின்ஸிபாலிடம் சொல்லு. அவர் ஓ.கே. சொன்னால்
உனக்கு பேப்பர் தருவேன்’’ என்று வம்பு பண்ணினார்.
அவன் பரீட்சையே எழுதாமல் திறந்த பேனாவை டெஸ்க் மீது
ஓங்கிக் குத்திவிட்டு வெளியேறி விட்டான்.
நீதி :
வாக்குச் சீட்டிலோ, அடையாள அட்டையிலோ உங்கள்
தோற்றம் எப்படி உள்ளதோ அதைப் போலவே நீங்கள்
இருப்பது உத்தமம்.
(நல்ல குணம் கூட மாறாமல் பழையபடியே இருந்தால்
இன்னும் உத்தமம்!)
-
---------------------------------
-‘சிரிக்காத மனமும் சிரிக்கும்’
(நகைச்சுவைக் கட்டுரைகள்) நூலிலிருந்து.
எழுதியவர் : திரு.பாக்கியம் ராமசாமி.
வெளியீடு : வானதி பதிப்பகம். விலை : ரூ.60
-
நன்றி-பால கணேஷ் (மின்னல் வரிகள்)
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
பாக்கியம் ராமசாமி
நகைச்சுவை பதிவுகளின் சூப்பர் ஹீரோ
நகைச்சுவை பதிவுகளின் சூப்பர் ஹீரோ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நகைச்சுவையுடன் சில அனுபவங்கள்!
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|