புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
11 Posts - 34%
heezulia
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
10 Posts - 31%
Dr.S.Soundarapandian
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
6 Posts - 19%
i6appar
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
3 Posts - 9%
Jenila
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
104 Posts - 42%
ayyasamy ram
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
88 Posts - 36%
i6appar
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_m10மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 03, 2020 8:35 pm

மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை 


கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்!
- கடுகு -

என் அருமை மனைவி கமலாவுக்கு உள்ள எத்தனையோ நல்ல வழக்கங்களில் ஒன்று, தினமும் என்னைக் கேட்டு, எனக்கு இஷ்டமான சமையலைச் செய்வது. அதே சமயம் அவளுக்கு இஷ்டமான சமையலாகவும் அது அமைந்து விடும். எப்படி?

நேற்றுக் காலை நடந்த சம்பாஷணையை அப்படியே தருகிறேன். கமலாவின் ‘நோஹௌ’வை யாவரும் தெரிந்து கொள்ளட்டும்!

‘‘ஏன்னா, உங்களைத்தானே, இன்னிக்கு என்ன சமையல் செய்யட்டும்? வீட்டில் கத்தரிக்காய்தான் இருக்குது. கூட்டு செய்யட்டுமா?’’ என்று கேட்டாள்.

‘‘கூட்டா கமலா... வேண்டாம். எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு செய்யேன்’’ என்றேன்.

‘‘எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்புதானே, செய்துடறேன். ஆனால் ஓண்ணு, அப்புறம் ‘எங்கம்மா செய்யறமாதிரி இல்லை’ அப்படி இப்படின்னு ஆடக் கூடாது’’

‘‘வாயைத் திறக்காமல் சாப்பிடறேன்!’’

‘‘இல்லே, இப்படித்தான் சொல்வீங்க, அப்புறம் ஆயிரம் நங்கு நடிப்பீங்க... எண்ணெய்க் குழம்பு சமாசாரமே வேண்டாம்.’’

‘‘அப்படியானால் கத்திரிக்காயைச் சுட்டுப் புளி மசியல் செய்யேன்.’’

‘‘ஐயோ மசக்கையே! கேஸ் அடுப்புலே கத்தரிக்காயைச் சுட முடியுமா? அதற்குக் கரி அடுப்பு வேணும். வருஷத்திலே ஒரு நாள் கத்தரிக்காயைச் சுடுவதற்கு நான் கரி அடுப்பையும் ஒரு மூட்டைக் கரியையும் கட்டிக் காப்பாத்த வேண்டுமா?... 

உங்க அக்கா சரோஜாதான் இன்னும் கரி அடுப்பை வெச்சுண்டு இருக்கா... ஆயிரம் சம்பாதிச்சாலும் கேஸ் அடுப்பு வாங்க அவளுக்கு மனசு வராது... அக்காகிட்டே சீராடப் போகும் போது தினமும் சுட்டு மசியல் பண்ணிச் சாப்பிட்டு விட்டு வாங்க...’’

‘‘போகட்டும் கமலா, பொடி போட்டுக் கறி பண்ணிடு. அட்டகாசமாய் இருக்கும்.’’

‘‘வீட்டைத் தலைகீழாத் திருப்பினால் கூட ஒரு பிடி தனியா கிடையாது. நானும் நாலு நாளாகத் தனியா வாங்கிண்டு வாங்கோன்னு கத்திண்டு இருக்கேன். தனியா, சேர்ந்தான்னு பேத்தல் சிலேடை ஜோக் அடிச்சுண்டு மசமசன்னு உட்கார்ந்துண்டு இருந்தால் எப்படி பொடி போட்டுக் கறி பண்றது?’’

‘‘இப்போ என்னைக் கடைக்குத் தொரத்தாதே, கமலா... அப்போ, கத்தரிக்காயை வெறுமனே வதக்கி வச்சுடு.’’

‘‘வெறும் வதக்கல்தானே, ஆகா, பண்ணிடறேன். ஆனால் உங்கள் பொண்ணு இருக்காளே, ராங்கிக்காரி! வாயிலே வெக்க மாட்டாள். நறுக்கா இலையிலேருந்து ஒதுக்கிடுவா... இந்தப் பிடிவாதமெல்லாம் அப்படியே உங்கம்மா தான். 

கல்யாணம் ஆன புதுசுலே இப்படித்-தான் வதக்கலை உங்க அம்மா இலையிலே போட்டுட்-டேன். அப்படியே விஷம் மாதிரி அதை ஒதுக்கி வெச்-சுட்டதும் இல்லாம ஒரு ‘பாட்டு’ வேற பாடினாளே... எத்தனை வருஷமானாலும் மறக்குமா? அப்போ உங்கம்மா பாடினாள்... இப்போ உங்க பொண்ணு பாடுவா... 

தாராளமா வதக்கல் பண்றேன். பாட்டைக் கேட்கணும்னு என் தலையிலே எழுதியிருந்தால் அதை எந்த ரப்பராலும் அழிக்க முடியாது.’’

‘‘இதுக்காக ஏன் கண்ணைக் கசக்கறே, கமலா... கத்தரிக்காய் போட்டு மோர்க் குழம்பு பண்ணிவிடு.’’

‘‘ஐயோ... இந்த மனுஷருக்கு வர்ற யோசனையைப் போய் யாரிடம் சொல்வேன்! நேத்துச் சாயங்காலம் உங்க ஆபீஸ் பிரண்ட்ஸை இழுத்துண்டு வந்து காப்பி போடச் சொன் னீங்க... அதனால் நேத்து பால் ஷார்ட்... தயிர் தோய்க்கவே இல்லை. 

சாப்பிடறதுக்கே மோர், ஒன்ஸ்மோர் தான்! இந்த அழகில் மோர்க் குழம்பு, தயிர்ப் பச்சடி என்று சொல்றீங்க...!’’

‘‘விடு கமலா ரஸவாங்கி பண்ணிடேன்.’’

‘‘கோலி குண்டு சைஸ்லே கத்தரிக்காய் வாங்கிண்டு வந்திருக்கீங்க. நீள கத்தரிக்காயில்தான் பண்ண முடியும். குண்டு கத்தரிக்காயில் பண்ணால் வாயில் வைக்க வழங்காது. எனக்கென்ன பண்ணிடறேன்...’’

‘‘ரஸவாங்கி வேண்டாம் கமலா. கத்தரிக்காய்க் கூட்டு பண்ணிடு’’

‘‘கத்தரிக்காய் கூட்டா... ஊம், உங்க இஷ்டப்படியே கத்தரிக்காய் கூட்டு பண்றேன். உங்களுக்குப் பிடிச்சதைப் பண்றதை விட எனக்கு வேறு என்ன வேலை?’’

இப்படியாக நேற்று காலை ‘என்’ (அதாவது கமலாவின்) இஷ்டப்படியே கத்தரிக் காய் கூட்டு செய்தாள் கமலா.






ரமணியன் 


வாட்சப்  மறைந்த எழுத்தாளர் அகஸ்தியன் ஞாபகார்த்தமாக ஒரு நகைச்சுவை  1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக