புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
75 Posts - 61%
heezulia
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
31 Posts - 25%
mohamed nizamudeen
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
70 Posts - 61%
heezulia
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_m10மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 10:07 am

மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்! Sm10
-
குழந்தைகளே நலமா….

நான் தான் பன்னீர் பேசறேன். எனது தாவரவியல் பெயர்
மில்லிங்டானியாஹார்டென்னிசிஸ்,
அறிவியல் பெயர் கயேட்டார்டா ஸ்பீசிஆச என்பதாகும்.
காஃபி குடும்பத்தைச் சேர்ந்தவன். தமிழகத்தில் காண்பதற்கு
மிக அரிதாகி விட்ட மரங்களுள் நானும் ஒருவன்.

எனக்கு மரமல்லி மரம், கார்க் ட்ரீ, மல்லி மரம் என வேறு பெயர்களும்
உண்டு. நான் செங்குத்தாக வளருவேன். என் இலை, பூ, வேர் அனைத்தும்
உங்களுக்கு பயன் தருபவை. என் இலை காண்பதற்கு முருகனின் வேல்
போன்ற வடிவத்திலிருக்கும்.

நான் முருகப் பெருமானுக்கு உகந்த மரமாவேன். சில திருக்கோயில்களில்
என் புஷ்பம் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு உகந்த மலராகவும் கருதப்படுகிறது.

என் நறுமணம் கொண்டே என்னை நீங்கள் அடையாளம் காணலாம்.
வெள்ளை நிறத்தில் அளவில் சற்று நீண்டு என் மலர் தரும் நறுமணம்
உங்கள் மனதுக்கு புத்துணர்வையும், அமைதியையும் தரும். மலர்கள்
பூக்கும் காலங்களில், என் மரத்தினடியில் பூ மெத்தைப் போல பரவி,
அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை நான் பரப்புவேன்.

பன்னீர் புஷ்பங்களை இயற்கையில் அருட்கொடை என்றே சொல்லலாம்.
சங்கக் காலத்தில் என் மலரின் பெயர் மெளவல். என் மலரின் அரும்புகளை
மகளிரின் பல் வரிசைக்கு உவமையாக காட்டியிருக்காங்க.

பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில், எதிர்மறை எண்ணங்கள் விலகி
தன்னம்பிக்கை எண்ணங்கள் உருவாகும், பன்னீர் புஷ்பங்கள் உடலுக்கும்,
மனதுக்கும் சக்தியைக் கொடுக்குமுன்னு அந்தக் காலத்தில் சொல்லி
வெச்சிருக்காங்க குழந்தைகளே. பொதுவாக, பன்னீர் மரங்கள் வீட்டில்
இருந்தாலோ பெண்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் நீங்கி விடும்
என்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2020 10:08 am


பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் என் அருமையை உணர்ந்திருக்காங்க.
அவங்க, விஷமாகும் உணவுகளால் ஏற்படும் நோய்களைப் போக்கவும்,
காய்ச்சலை கட்டுப்படுத்தவும், நுரைநீரல் டானிக்காவும் என் மரத்தின்
வேரை அரைத்து கஷாயமாக்கி பயன்படுத்தறாங்க.

என் மலரிலிருந்து ஆஸ்த்துமா நோயைப் போக்க மருந்து தயாரிக்கறாங்க.
தனி அடையாளம் கொண்ட என்னை நறுமணத்துக்காகவும், அழகுக்காகவும்,
வீட்டுத் தோட்டங்கள் தெருக்களில் வளர்க்கலாம். என் பூக்களில் இருந்து
பெறப்படும் சாறிலிருந்து தைலம் தயாரிக்கலாம் அல்லது அதனுடன் இனிப்பு
சுவை கலந்து குடித்தால் நல்ல ஆரோக்கியம் பெறலாம்.

இந்தத் தைலம் மூட்டு எலும்புகள், முதுகு வலிகள் போன்ற உடம்பில் ஏற்படும்
அனைத்து வலிகளுக்கும் சிறந்த நிவாரணி.

என் பூவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை முகத்திலோ உடம்பிலே
தேய்தால் சுருக்கங்கள், கருமை நிறம், தழும்புகள் நீங்கும். என் பூவை நீருடன்
சேர்த்து வேக வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனை தினம் அருந்தி வந்தால்
காய்ச்சல் வராது,

உங்களுக்கு நோய் எதிர்ப்பு திறனைக் கொடுக்கும் மற்றும்
சளி தொல்லையால் ஏற்படும் கோளாறுகள் வராது, எலும்புகளுக்கு
உறுதியைக் கொடுக்கும். என் காய்ந்த பன்னீர் மலர்களை, சாம்பிராணி
புகையிலிட்டு அந்த வாசனையை நீங்க சுவாசித்தீர்களேயானால் உங்களுக்கு
சுவாசப் பிரச்னையே இருக்காது.

என் மரத்தின் கிளைகள் மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால்
மருந்துகள் சேமிக்கப்படும் குப்பிகளில், காற்றை புகவிடாமல் தடுக்க
தக்கையாக பயன்படுத்தறாங்க. என் பட்டையை நீரிலிட்டு மூன்றில் ஒரு
பங்காக தண்ணீர் சுண்டி பருகி வந்தால், வயிற்றுப் போக்கு நீங்கும்.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்
வழங்கப்படும் திருநீற்றுப் பிரசாதம் என் இலையில் தான் வைத்து
வழங்கப்படுகிறது என்பது எனக்கு சூட்டிய மணி மகுடம்.

மேலும் தொன்மையான தருமை ஆதீனம் போன்ற சைவத் திருமடங்களிலும்,
சன்னிதானங்கள் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கும் போது திருநீற்றுப்
பிரசாதங்களை என் இலைகளிலேயே வைத்து வழங்குவர்.

நான் தஞ்சாவூர் மாவட்டம், திருச்சோற்றுத்துறை, அருள்மிகு சோற்றுத்துறை
நாதர், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, ஆரயண்யேஸ்வரர் ஆகிய
திருக்கோயில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன். நன்றி குழந்தைகளே,
மீண்டும் சந்திப்போம்.
-
---------------------------------

பா. இராதாகிருஷ்ணன்
நன்றி- சிறுவர்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக