புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 5:22 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
33 Posts - 46%
heezulia
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
25 Posts - 35%
mohamed nizamudeen
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
5 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
2 Posts - 3%
mini
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
2 Posts - 3%
Barushree
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
1 Post - 1%
சுகவனேஷ்
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
1 Post - 1%
Saravananj
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
80 Posts - 44%
heezulia
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
78 Posts - 43%
mohamed nizamudeen
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
9 Posts - 5%
mini
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
3 Posts - 2%
prajai
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
2 Posts - 1%
Barushree
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_m10கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து  கண்டுபிடிக்கவில்லை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83422
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 08, 2020 11:14 am



*நான் Dr.P.மணி.நான் உயிர்தொழில் நுட்ப துறை
(Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர்
பட்டம் பெற்றுள்ளேன்.

இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி
மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி
வருகிறேன்

என்னிடம் என் மாணவர்கள் மற்றும் நண்பர்கள்
ஏன் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என
கேட்டனர். எனக்கு தெரிந்த அறிந்த உயிரியல் விளக்கம் ........

முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான்
வைரஸ். ஒரு ஆர்என்ஏ(நமது செல்களில் ஜீன் எனப்படும்
டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின்
அரைகுறை வடிவமான RNA) அதைச் சுற்றி ஒரு புரதம்
(Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறை
(ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை
பட்டால் இந்த உறை கறைந்து வைரஸ் அவுட்).

அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான்
கொரோனா வைரஸ். இந்த முட்களின் வேலை எளிதாக
எதிலும் ஒட்டிக் கொள்ளவதே. இந்த முட்களும் புரதத்தால்
ஆனவையே. கொரோனா வைரசில் இந்த முட்கள்
பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு
போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ்
எனப் பெயர்.

இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம்.
இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. இது ஒரு
முழுமையான ஒட்டுண்ணி. ஏதோ ஒரு உயிரினத்தின்
செல்லுக்குள் புகுந்து அந்த செல்லில் இருக்கும் திட, திரவப்
பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப்
பெருகுவது தான் வைரஸ்களின் வேலை.

செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில
நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.
இந்த வைரஸ் மூக்கு, வாய் அல்லது கண் வழியாக உள்ளே
நுழைந்தவுடன் முதலில் தொண்டப் பகுதியை தாக்குகிறது.
தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப்
பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும்
தொடங்குகிறது.

இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி
(Immune system) மோதலை தொடங்குகிறது. அந்த
மோதலின் அறிகுறி தான் காய்ச்சல். பெரும்பாலான
வைரஸ்கள் அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை
என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி
வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி
முயற்சிக்கிறது.*
----

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83422
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 08, 2020 11:14 am



இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை
நமது உடல் கொன்று விடுகிறது, கொரோனா வைரஸ்
உள்பட. நமது உடலின் Immune system ஒரு மாபெரும்
பாதுகாப்பு அரண். வைரஸோ, பாக்டீரியாவோ அல்லது
வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன்
அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை
வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது.

முதலாவது அந்த நுண்ணியிர் வெளியிடும் வேதியியல்
பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணியிரின் உருவம்.

இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டு
பிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள்
அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன.
வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம்
விடும் வேலைக்கு Macrophages, Neutrophils
போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள்
அனுப்புகின்றன.

ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ
உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட
அரண்கள் வேலையில் இறங்கும். அதில் ஒன்று
Innate lymphoid cells. இதன் ஒரு பிரிவான
T- Killer cellகளின் வேலை வைரஸ்களால்
பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி
உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது.

மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும்
செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. இது தான்
இதன் வேலை.அதே நேரத்தில் Macrophages,
Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத
வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும்
பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும்
வைரஸ்களை தாக்கும் செல்கள்.

இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம்
கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச்
சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில்
வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு
வைரஸ்களை கொல்லும்.

இந்த உடல் எதிர்ப்பு சக்தி ஒரு பக்கம் இருக்க...
தொண்டைப்பகுதியை அடைந்த கொரோனா வைரஸ்கள்
அடுத்ததாக நமது உடலை பாதிப்பது நுரையீரலை.
நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான
பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள்.

இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு,
துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும்.
இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில்
தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி
எடுக்கும். இன்த ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக
மாறும்.

அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது,
அந்த செல்லே வெடித்து மடியும். அந்த வெடிப்பில் இருந்து
கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த
செல்களை இதே போல தாக்கி அழித்து, பல்கிப் பெருகும்.

10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை இந்த
வைரஸ் ஆக்கிரமிக்கும்.இதுவரையும் கூட பிரச்சனை
அதிகமில்லை. ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது
உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல்
செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது
தான் பிரச்சனையே துவங்குகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83422
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 08, 2020 11:14 am



மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான்
மாறுபடுகிறது. இந்த கொரோனா வைரஸ், நமது உடலின்
எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும்
சேதப்படுகின்றன.

சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின்
ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.
நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல்
பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines)
எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான். ஜீன்கள்
பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான
சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை
பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள்,
கொரோனா வைரஸ்களுக்கு பதலாக உடலின் எதிர்ப்பு
சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும்.

அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை
தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல்
தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள்
வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும்
நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும்.

இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி,
அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட
தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். இந்த இடத்தில்
தான் மரணங்கள் நிகழ்கின்றன.

இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு
எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின்
முழு சக்தியும் அடங்கியுள்ளது. வைரசின் உருவத்தை
வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட
கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை
ஈட்டவில்லை.

இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள்
(Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை.
அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே
இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால்
இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை.

இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு
ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி
வருகிuது.

நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும்
மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல்
தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும்
கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன அல்லது உடலின்
Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை
உடலையே தயாரிக்க வைக்கின்றன.

ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி
சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த
மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில்
மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால்
குழம்பிப்போன T-killer cells, B cells-களும்
ஏற்கனவே கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும்
பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி
வருகின்றன.

ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு
சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த
உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.நல்ல உடல்
நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே
உள்ளது.

உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும்
குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில் நமது
உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டம் கொரோனா வைரஸை
தோற்கடித்துவிடுகிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும்
சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது. அதே
போல இதயக் கோளாறு, பி.பி உள்ளவர்களின் உடலில் நுண்ணிய
ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல்
வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும் போதி சக்தி
கிடைப்பதில்லை,

நோய் எதிர்ப்பு சக்தி உள்பட. ஆனால், சர்க்கரை அளவும் பிபியும்
மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு
பிரச்சனை இல்லை. இங்கேயும் உடலின் எதிர்ப்பு சக்தி
கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பது தான் நல்ல
செய்தி.
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்களா?

தெரியவில்லை.

35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி
கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த எச்ஐவி வைரசும் கொரோனா
வைரஸ் ரகத்தை சேர்ந்தது தான். அதுவும் நமது உடலின் எதிர்ப்பு
சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ் தான்.

ஆனால், கொரோனா மாதிரி எச்ஐவி இவ்வளவு சாதாராணமாக
இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை. அந்த வகையில்
கொரோனா தான் கொடூரம்.

அதற்குத் தான் வீட்டிலேயே முடங்க சொல்கிறார்கள்.

இன்னும் மருந்து இல்லாத நிலையில், இந்த நோயில் இருந்து
தப்பிப்பதே உசிதம்.இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே
இதற்கான இப்போதையே ஒரே மருந்து!
-
-----------------------------
வாட்ஸ் அப் பகிர்வு


avatar
Guest
Guest

PostGuest Wed Apr 08, 2020 4:19 pm

அங்கேயும் இங்கேயும் மாறுபடுகிறதே! குழப்பமாக இருக்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக