புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
59 Posts - 46%
ayyasamy ram
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
52 Posts - 41%
mohamed nizamudeen
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
3 Posts - 2%
prajai
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
418 Posts - 48%
heezulia
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
295 Posts - 34%
Dr.S.Soundarapandian
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
28 Posts - 3%
prajai
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_m10உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!


   
   
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Jan 06, 2010 7:57 pm

தமிழக மக்கள் பொதுவாகவே உணர்ச்சிகரமானவர்கள் அது சந்தோசமாகட்டும் வருத்தமாகட்டும் கோபமாகட்டும் அனைவரது எண்ணங்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். இதற்க்கு எடுத்துக்காட்டாக நமது தேர்தலையே கூறலாம்.

ராஜிவ் இறந்த போது ஒட்டு மொத்தமாக ஜெ க்கு ஒட்டு போட்டார்கள். பின் அவர் அடித்த வெளிப்படையான கொள்ளையை ஆடம்பரத்தை பார்த்து நொந்துபோய் ஒட்டுமொத்தமாக தோற்கடித்தார்கள்.

பின்னர் கலைஞரை குண்டு கட்டாக தூக்கி சென்றதை பார்த்து கொந்தளித்து பாராளுமன்ற தேர்தலில் 40/40 க்கு திமுக விற்கு கொடுத்தார்கள். இதை போல ஒட்டுமொத்த மக்களும் ஒரே மாதிரி தான் சிந்திக்கிறார்கள், மாற்றி சிந்திப்பவர்கள் ஒட்டு போடுவதில்லை ;-) தற்போது இது மாறி வருகிறது, ஜெ கலைஞர் அரசை மைனாரிட்டி!!! அரசு என்று கூறும் அளவிற்கு.


பதிவுலகத்திலையும் அவ்வாறே உள்ளது, ஏதாவது எதிர்ப்பு என்றால் எல்லோரும் சேர்ந்து கும்முவது ஆதரவு என்றால் கண்மூடித்தனமாக ஆதரவு தருவது.

நானும் இதை போலவே முன்பு இருந்தேன், எந்த விசயமாக இருந்தாலும் உடனே உணர்ச்சிவசப்படுவேன், கோபப்படுவேன் ஏன் என்று பொறுமையாக யோசிப்பது கிடையாது, சுர்ர்ருனு கோபம் வரும்.. அதனால் நானும் அவசரத்தில் உடனே ஒரு சில பதிவு போட்டு இருக்கிறேன். பின் ஒரு நாள் கழித்து கோபம் தணிந்து ச்சே! தேவையில்லாம அவசரப்பட்டுட்டோமோ! என்று வருத்தப்பட்டு இருக்கிறேன்.

என்கிட்டே உள்ள ஒரு நல்ல பழக்கம் தவறுகளை தொடர்ந்து செய்வதில்லை, கிடைக்கும் அனுபவத்தில் இருந்து தவறுகளை உடனடியாக திருத்திக்கொள்வேன், அதே போல இப்படி உணர்ச்சிவசப்பட்டதால் ஏற்பட்ட தவறுகளை சரியாக இனம் கண்டு என்னை மாற்றிக்கொண்டேன் மாற்றிக்கொண்டு இருக்கிறேன்.

எப்போதுமே உணர்ச்சிவசப்படுவதால் நாம் மேலும் மேலும் தவறு தான் செய்கிறோமே தவிர நாம் அதனால் செய்யும் தவறை உணருவதில்லை, நம் எதிர்ப்பை காட்டி விட்டதாகவே நினைத்து பெருமிதம் கொள்கிறோம்.

வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு போகவேண்டும் என்றால் முதலில் அளவிற்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவதை நிறுத்த வேண்டும். எதுவும் அளவோடு புரிந்து கொண்ட உணர்வோடு இருப்பதே சரியான செயலாக இருக்கும். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கறமாதிரி ஆத்திரத்தில் இருப்பவனுக்கு தன் முன்னே இருப்பது எல்லாமே தவறாகத்தான் தோன்றும், விளக்கினாலும் மண்டையில் ஏறாது.

விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள பழகவில்லை என்றால் நாம் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டியது தான். ஒன்று நம் தரப்பு நியாயத்தை பொறுமையாக கூற வேண்டும் அல்லது ஒதுக்கி தள்ள வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் புழுங்கி கொண்டு கோபப்பட்டுக்கொண்டு இருப்பதில் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நம் செயல் நம் மனசாட்சிக்கு நியாயமாக இருந்தால் போதும் யாரும் யாரையும் திருப்தி படுத்த (முடியாது) வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை.

சமூகத்தில் பல சம்பவங்கள் நடக்கிறது அவை கோபம் தரக்கூடியதாகவும் இருக்கலாம், சந்தோசம் தரக்கூடியதாகவும் இருக்கலாம். கோபம் தரக்கூடிய செய்தி என்று ஒன்று இருந்தால் அதை அனைவரும் உடனே கண்டபடி விமர்சிக்கிறோம், அதில் உள்ள உண்மை என்ன! உடனே அவ்வாறு விமர்சிக்கலாமா!! என்ற எதையும் நாம் ஆராய்வதில்லை.


நம்முடைய முதல் எண்ணம், கிடைத்த செய்தியை வைத்து உடனே காரசாரமாக விமர்சிக்க வேண்டும், இரண்டு நாள் கழித்து பார்த்தால் வரும் செய்தி நாம் பொங்கியதற்கு சம்பந்தமே இல்லாமல் மாறி இருக்கும், இருந்தாலும் நாம் திட்டினது திட்டினது தான். இதே கொஞ்சம் அமைதி காத்து இருந்தால் நமக்கு கொஞ்சம் யோசிக்க அவகாசம் கிடைத்து இருக்கும், நியாயமான விமர்சனமாக கொடுத்து இருக்கலாம். இதனால் எனக்கு தெரிந்து கிடைக்கும் ஒரே ஆதாயம் "ஹிட்ஸ்" மட்டுமே!!. போதை மருந்தாவது அதை பயன்படுத்தவர்களை மட்டுமே பாதிக்கிறது, இந்த "ஹிட்ஸ்" போதை அடுத்தவர்களை தான் அதிகம் பாதிக்கிறது.

எடுத்துக்காட்டாக நோபல் பரிசு பெற்ற திரு வெங்கட்ராமன் அவர்கள் கொடுத்த பேட்டியை பார்த்து இந்தியர்களை அவமானப்படுத்தி விட்டார் அப்படி கூறி விட்டார் இப்படி கூறி விட்டார் என்று கொந்தளித்து அனைவரும் பதிவு இட்டார்கள். அவர் பக்கம் உள்ள நியாயத்தை யாருமே கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவர் செய்த தவறு, தான் கூற நினைத்ததை வெளிப்படையாக கூறியதே. இதை புரிந்து எழுதியவர்கள் ஒரு சிலரே. அதில் பொறுமையாக அனைத்து பக்கமும் விமர்சித்து நடுநிலையாக எழுதி இருந்தது திரு பாலா சார் அவர்கள் மட்டுமே!

அப்படின்னா நாம கோபத்தையே காட்டக்கூடாதா! சொரணை இல்லாம இருப்பதா!! என்னய்யா இது அரைவேக்காட்டுத்தனமா இருக்கு! என்று நினைக்கிறீர்களா? நியாயமான கேள்வி தான். கோபம் இல்லை என்றால் அப்புறம் என்ன இருக்கு! அதுவும் இந்த காலத்தில் இதெல்லாம் இல்லை என்றால் நம்மை மஞ்ச மாக்கானாக நினைத்து விடுவார்கள். அப்புறம் என்னதாங்க பண்ணுறது! கோபப்படுங்க... ஆனால் கோபம் சரியாக புரிந்து கொண்டதாக இருக்கணும். கோபத்துடன் ஒருவரை கண்டபடி திட்டி விட்டு பின் அது தவறு என்று தெரிந்து என்ன பயன்...திட்டியது திட்டியது தானே! அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் ஏற்பட்டது ஏற்பட்டது தானே!


நாம் செய்தது தவறு என்று தெரிந்தும் வீம்புக்கு நம்மை நியாயப்படுத்தி பேசலாம், ஆனால் உண்மை என்ன என்பதை நாம் அறிவோம், நம் மனசாட்சி அறியும். சரி தவறு செய்து விட்டோம்! ஏற்றுக்கொள்ள தன்மானம் இடம் கொடுக்கவில்லை... ம்ம்ம் என்ன பண்ணுறது! விட்டு தள்ளுங்கள், ரொம்ப நல்லவனாக இருக்க வேண்டும் என்பதில்லை அடுத்த முறை தவறை திருத்திக்கொள்ளுங்கள், அப்போதும் சரி செய்யாமல் இப்படித்தான் இருப்பேன் என்றால் இழப்பு நமக்கு தான்.

பதிவுலகத்தில் ஒவ்வொரு பதிவு எழுதும் போது ஒவ்வொரு அனுபவம் கிடைக்கிறது, அட! பின்னூட்டத்தில் கூட கிடைக்குதப்பா! பல மாற்று கருத்துக்கள் கிடைக்கிறது. நாம் இப்படி எழுதி இருக்க கூடாது மாற்றி கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் அனுபவத்தை பெறுகிறேன்...எனக்கு கிடைத்த அனுபவங்கள் அளப்பரியது. தவறுகளில் இருந்து பாடங்கள் கற்று கொள்கிறேன். அதை அவமானமாக நினைப்பதில்லை, திருந்தி அல்லது திருத்தி கொள்ள கிடைத்த சந்தர்ப்பமாகவே கருதுகிறேன்.


கோபத்துடன், யோசிக்காமல் எடுக்கப்படும் எந்த முடிவும் விமர்சனமும் சரியாக இருக்காது, அதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. முன்பெல்லாம் எனக்கு பிடிக்காத விசயங்களை படித்தால் கோபம் வரும் அதிகமாக உணர்ச்சிவசப்படுவேன். தற்போது அப்படியா! சரி என்ற அளவிலே எடுத்துக்கொள்ள எனது அனுபவங்கள் உதவுகின்றன. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள பழகி (கொண்டு)இருக்கிறேன். மற்றவர்கள் கருத்தையும் மதிக்க கற்றுக்கொண்டு இருக்கிறேன். இவை அனைத்தும் பதிவு எழுத ஆரம்பித்த பிறகே கிடைத்தது.

"காதலன்" படத்துல ஒரு வசனம் வரும் கோபமோ சந்தோசமோ கொஞ்சம் பொறுமையாக இருங்க என்று...அது உண்மையில் யாருக்கு பொருந்துமோ இல்லையோ நம் பதிவுலகத்திற்கு சரியாக பொருந்தும் :-) எதா இருந்தாலும் உடனே தைய தக்கான்னு குதிக்க வேண்டியது, அப்புறம் தவறு என்று தெரிந்த பிறகு திருட்டு முழி முழிக்க வேண்டியது.

ஒரு சிலர் தாங்கள் செய்யும் தவறுகளை உடனே கண்டு பிடித்து விடுவார்கள், அடுத்த முறை நேராமல் பார்த்துக்கொள்வார்கள். ஒரு சிலருக்கு மற்றவர்கள் சுட்டிகாட்டினால் மட்டுமே தங்கள் தவறு புரியும். ஒரு சிலர் மற்றவர்கள் சுட்டி காட்டினாலும் ஏற்றுக்கொள்ளாமல் தாம் கூறுவது தான் சரி என்று கூறுவார்கள்.



உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை! Riki

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக