புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
37 Posts - 40%
heezulia
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
1 Post - 1%
mruthun
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 30, 2020 6:14 am

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Tamil_News_large_2468066

வண்ணக் கோலங்கள் நம் வீட்டு வாசலை அலங்கரிக்க அன்றாடம் பூத்துக் குலுங்கும் தரைப் பூக்கள். அசையாத வண்ணத்துப் பூச்சிகள். கோலம் காண நம் வாசலுக்கே விரைந்து வரும் முதல் ரசிகன் சூரியனே. அதிகாலைப் பொழுதில் கண்களுக்கு விருந்தாகவும் மனதிற்கு மருந்தாகவும் வாசலில் வீசும் தெய்வீக மணம்.

சிந்தையும் செயலும் சங்கமிக்கும் யோகம்.மன அழுத்தம் நீங்க, நிதானம் பழக, முன்னோர்கள் நமக்களித்த மந்திரம். ஒருநொடியில் நம் வீட்டினை கோவிலாக மாற்றிடும் வினோதக் கலை. கால் பதித்து நடக்கும் நிலத்திற்கு நாம் செலுத்தும் மரியாதை. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திரு என சத்தமில்லாமல் சொல்லுமொரு சுகராகம் கோலம். மன விகாரங்களை நீங்கி மாதரை பணிவுடன் கைகூப்பி வணங்கச் செய்யும் அழகிய கவிதை.ஒரு நாளை மங்களகரமாகத் துவக்க வேண்டுமென இறைவன் நமக்கு கற்றுக் கொடுத்த முதல் பாடம். பாரதத்தின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் மவுன மொழி.அன்றாட வீட்டுச் சூழலை, உள்ளே ஊஞ்சலாடும் உணர்ச்சிகளை படம் பிடித்துக் காட்டும் அழகான வரைபடம். உலக வரைபடத்தில் காணமுடியாத அதிசயங்களை நம்முன் காட்டும் கண்ணாடி. அடுக்குமாடி கட்டடங்களாலும் அவசர வாழ்க்கையினாலும் நாம் தொலைத்து நிற்கும் அற்புத பொக்கிஷம்.


பாடங்கள் பல



ஏன் கோலங்கள் குறித்து இத்தனை சிந்தனைகள்? காரணம் அவை நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் பல. வாழ்க்கையை நாம் வாழ வேண்டிய முறையை நமக்கு உரைத்து மட்டுமல்ல உணர்த்திச் சொல்லும் வழிகாட்டி. கோலத்தை வேறொரு கோணத்திலிருந்து காண வேண்டும். ஒரு கை அசைவில் ஓசையின்றி விரைந்து பல புள்ளிகள் நடுவே புகுந்து புனிதம் கெடாது மீளும் வீர விளையாட்டே கோலம்.காண்பதற்கு பல நெளிவுகள், சுழிவுகள், சிக்கல்கள் தென்பட்டாலும் முதலும் முடிவும் மிக நேர்த்தியாக ஒன்று சேரும் விசித்திர வித்தை. கோலங்கள் என்றும் அழிவதில்லை. கோலம் ஈசனின் தெய்வீகக் கோலம்.


விதிமுறைகள்



வாழ்க்கையென்பதும் ஒரு அழகிய வண்ணக்கோலம்தான். வீர விளையாட்டுதான். அவ் விளையாட்டினை நாம் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கின்றோம். விதிமுறைகளின்றி விளையாட இயலாது. விதிமுறைகள் வெறும் சுவாரஸ்யத்திற்காக மட்டுமல்ல. அவை நம்மையும் நம் ஆற்றல்களையும் ஒழுங்குபடுத்தும் அதிசய மந்திரக் கோல். விதிமுறைகளில்லாத விளையாட்டு வெற்றுக் கூச்சலாகவும் பெருங் குழப்பமாகவும் முடியும்.வாழ்வில் சில விதிமுறைகளை நாம் பின்பற்றியே ஆகவேண்டும்; யாரும் விதிவிலக்கல்ல. ஏனெனில் இயற்கையின் நியதிகள் எல்லோருக்கும் பொதுவானது. எவருக்கும் அடிபணியாது. தன் பணியை இடையிடின்றி ஆற்றிக் கொண்டே இருக்கின்றது. இயற்கையின் இயக்கங்களை கூர்ந்து கவனித்தால் விதிமுறைகளை மீறாத ஒழுக்கமொன்றைக் காணலாம்.அவ்வியற்கை மனிதனுக்குள்ளும்,வெளியிலும் இயங்குகின்றது. அதை மதியாத போது அதன் எல்லைகளை மீறும் பொழுது அதன் விளைவுகளை சந்திக்கிறோம். தனிமனிதர்களுடைய பேராசைக்காக இயற்கை வளங்களை சூறையாடுகின்றோம். மாசு படுத்துகிறோம். அதன் மதிப்புணராது நகர்ந்து போகின்றோம். இயற்கையினுடைய பொறுமைக்கும் எல்லைகள் உண்டு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 30, 2020 6:14 am

ஐம்பெரும் சக்திகள்



இயற்கையை ஆகாயம், வாயு, அக்னி, நீர், நிலம் என ஐவகை சக்திகளாகப் பிரித்து தெய்வப் பெயர்களிட்டு வணங்குகிறோம். இந்த ஐந்தும் ஐம்பெரும் சக்திகளாகும். இவ்வுலகானது ஐம்பூதங்களையும் சார்ந்தே உள்ளது. இந்த இயற்கையை மதித்து போற்றி வழிபட்டால் அவை கைமாறாக அனைத்து வளங்களையும் கொடுக்கும். அவற்றை பகிர்ந்து வாழவேண்டும் என்கிறது பகவத்கீதை. வாழ்க்கையை வண்ணக் கோலமாக்கி வாழ இறைவன் நமக்கு வழங்கிய மூலப் பொருளே இயற்கை. அதை சிதைத்தால் வாழ்க்கை அலங்கோலமாகும். இச் சக்திகளைக் கொண்டே வாழ்க்கை என்னும் வண்ணக் கோலமிட வேண்டும். சரியாகக் கோலமிட்டால் முன்பு கோலம் குறித்துக் கூறியது தெளிவாய் புரியும். அத்தனை அனுபவங்களும் வண்ணக் கோலமாய் மின்னும். வாழ்க்கையெனும் விளையாட்டின் முதலும் முடிவுமாக உள்ள ஒரே விதிமுறை இயற்கையை அறிந்து அனுசரித்து அரவணைத்து வாழ்வதே. மற்ற விதிகளைத்தும் இதன் விரிவாக்கமே...


சாதனங்கள்



வெற்றி பெற வெறும் எண்ணங்களும் கனவுகளும் மட்டும் போதாது. செயல்படுத்துவதற்கு மாபெரும் ஆற்றல் தேவை. அவ்வாற்றல் நம்முள் இருப்பதை நாம் இனம் காண வேண்டும். இயற்கையின் ஆற்றல்கள் நம்மில் எவ்வாறு இயங்குகிறது; அதன் பயன் என்ன, அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் யாது என்பது குறித்து பள்ளிப் பாடங்களில் நாம் பயின்றதில்லை.வெற்றி பெறுவதற்கான பெரும் சாதனங்கள் யாது? முதலாவதாக ஐம்புலன்களுடன் கூடிய நம் உடல் (கண் செவி நாசி நாக்குமூவித ஆற்றல்களையும் ஒருங்கிணைத்து வெல்பவனே மாமனிதன்).உடலாய், மனதாய், மதியாய், இயங்குவது ஆகாயம் முதலிய ஐம்பெரும் சக்திகளே. புறத்தே நாம் காணும் பொருளனைத்தும் கூட ஐம் பூதங்களே. வெற்றி வேண்டுமெனில் முதலில் ஐம்புலன்களை ஆள வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 30, 2020 6:15 am

புலனடக்கம்



புலனடக்கத்தையே பிரம்மச்சரியம் என்பர். பிரம்மசரியம் என்பது பார்க்காது, கேட்காது அல்லது இல்லற வாழ்கையை வாழாமல் இருப்பதல்ல. எல்லா செயல்பாடுகளிலும் ஓர் எல்லை மீறாத கட்டுக் கோப்பான வாழ்க்கையே பிரம்மசரியம். பண்டைய குருகுலங்களில் இதற்கென பயிற்சிகள் இருந்தன.நம் ஆற்றல்களை பயனில்லாத விஷயங்களில், எண்ணங்களில், விரயம் செய்யாதிருக்கப் பழகுதல் தவம். ஐம்புலன்கள் தன் வசமிருந்தால் உலகம் நம் காலடியிலிருக்கும். 'ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் வேண்டும்' என்பார் வள்ளுவர்.ஐந்து புலன்களும் கட்டுக்கடங்காத ஐம்பெரும் சக்திகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. அச் சக்திகளை கவனமாக கையாள வேண்டும். அவை ஆக்கத்தின் உச்சியில் மட்டுமல்ல அழிவின் விளிம்பிலும் கொண்டு செல்லும்.“மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய” விலங்கு போலாகும் மனம் என்கிறது திருவாசகம்.இன்றைய சூழலில் வயது வரம்பு பேதமின்றி அனைவரின் கவனத்தையும் புலன்களையும் சீரழிக்க பல சக்திகள் நம்மெதிர் நிற்கின்றன.


போர்க்களம்


புறச்சூழல் போர்க்களமாய் உள்ளது. ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி. மறுபுறம் ஐம்புலங்களை எல்லாத் திசைகளிலும் ஈர்த்து அரை நொடியில் அடிமையாக்கி ஆர்ப்பரிக்க காத்திருக்கும் புறப்பொருட்கள். ஆகவே நமக்கென சில விதிமுறைகளை விதித்துக் கொள்ள வேண்டும். நல்ல பழக்கங்கள் பழகுவது கடினம். விடுவது சுலபம். தீய பழக்கங்கள் பழகுவது சுலபம். விடுவது கடினம். கோலமிடும் இடத்தை முதலில் சுத்தம் செய்வது போல் நம் இருப்பிடம், நட்பு வட்டம், ஈடுபடும் விஷயங்கள் இவற்றை மிக கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். உயர் விஷயங்களில் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு வர வேண்டும். ஐம்புலனாற்றல்களை வீண் செய்யாது ஒன்று திரட்டி சேமித்தால் அவ்வாற்றல் வலிமை, உற்சாகம், ஊக்கம், பகுத்தறியும் தன்மை என பல தளங்களில் விரியும். நம்மைப் புதியதோர் மனிதராக்கி புத்துணர்வு கொடுக்கும்.

அடங்கிய புலனே அழியாத அரிய செல்வம்.
புலன்கள் வசப்பட்டால் மனம் ஒருமுகப்படும்
அறிவு தெளிவுறும். தெளிந்த அறிவால் வாழ்வு
வண்ணக் கோலமாகும்.


வாருங்கள்! வாழ்வை வண்ணக் கோலமாக்கி வாழ்வாங்கு
வாழ்வோம்

.-- சுவாமி சிவயோகாநந்தாசின்மயா மிஷன், மதுரை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 30, 2020 11:38 am

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் 3838410834 வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் 103459460 வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக