புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_m10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_m10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_m10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_m10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_m10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_m10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_m10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
20 Posts - 3%
prajai
விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_m10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_m10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_m10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_m10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_m10விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 23, 2020 6:03 am

விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள் 202001230419531289_Bombs-at-airport-Engineer-arrest-in-Bangalore-Police-_SECVPF

பெங்களூரு,

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரத்தில் பெங்களூரு போலீசில் நேற்று என்ஜினீயர் சரணடைந்தார். அவரை போலீசார் மங்களூரு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவின் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டர் அருகே கடந்த 20-ந்தேதி பை ஒன்றில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இது குறித்து தகவல் அறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அவற்றை கைப்பற்றி செயலிழக்க வைத்தனர். இதன்மூலம் மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க முயன்ற சதி முறியடிக்கப்பட்டது.


நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார், விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஆட்டோவில் வந்து வெடிகுண்டுகள் இருந்த பையை அங்கு வைத்து சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரையும், அவருக்கு பின்னால் இருக்கும் கும்பலையும் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதற்காக மர்மநபரின் புகைப்படத்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

இதில் அந்த நபர் உடுப்பி மாவட்டம் மணிப்பால் அருகே கே.எச்.பி. காலனியை சேர்ந்த ஆதித்யா ராவ் என்ற என்ஜினீயர் என தெரியவந்தது. உடனே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் ஆதித்யா ராவின் தந்தை, உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஆதித்யா ராவ் நேற்று காலை 8.30 மணியளவில் பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்தார். மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை வைத்தது தான்தான் என்றும், அந்த விவகாரத்தில் போலீசில் சரணடைய வந்திருப்பதாகவும் போலீசாரிடம் அவர் கூறியதாக தெரிகிறது.

இதையறிந்த உயர் அதிகாரிகள் அருகில் உள்ள அல்சூர்கேட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த அல்சூர்கேட் போலீசார் ஆதித்யா ராவை வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் அவரை கைது செய்தனர். பின்னர் இது குறித்து மங்களூரு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் மங்களூரு உதவி போலீஸ் கமிஷனர் பெல்லியப்பா தலைமையிலான போலீசார், விமானம் மூலம் பெங்களூரு சென்றனர். அவர்களிடம் அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் வைத்து ஆதித்யா ராவை பெங்களூரு போலீசார் ஒப்படைத்தனர். முன்னதாக தனியார் மருத்துவமனையில் ஆதித்யா ராவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

பின்னர் பெங்களூரு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் ஆதித்யா ராவ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மங்களூருவுக்கு கொண்டுசென்று விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து, அவரை பலத்த பாதுகாப்புடன் மங்களூருவுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆதித்யா ராவ் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவர் என்ஜினீயர் மட்டுமின்றி எம்.பி.ஏ. பட்டதாரியும் ஆவார். ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கும், சிட்டி ரெயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார்.

இதில் சிக்பள்ளாப்பூர் சிறையில் 9 மாதம் சிறைவாசம் அனுபவித்த பின்பு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளியே வந்திருந்தார். பின்னர் கடந்த ஒரு மாதமாக மங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் வேலை செய்துள்ளார். தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத விரக்தியில் விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தது தொியவந்துள்ளது.

இதற்காக ஆன்லைன் மூலம் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். யூடியூப் மூலம் வெடிகுண்டுகள் தயாரிப்பது எப்படி? என்பதை அறிந்து கொண்டுள்ளார். அதன்மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வெடிகுண்டு தயாரித்ததும், வெடிகுண்டு தயாரித்தபோது அவரது கையில் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர் எதற்காக மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை வைத்தார்? இந்த சம்பவத்திற்கு பின்னால் வேறு யாரும் உள்ளார்களா? போன்றவை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஆதித்யா ராவுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக அவரது சகோதரர் அக்‌ஷத் ராவ் கூறுகையில், ‘ஆதித்யாராவ் எனது மூத்த சகோதரர். கடந்த முறை அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தபோது அவருக்கு அறிவுரை கூறினோம். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டோம். அவருடன் நாங்கள் எந்த தொடர்பிலும் இல்லை. அவருடைய செயலுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. கடந்த 2 ஆண்டுகளாகவே நாங்கள் அவருடன் தொடர்பில் இல்லை. அவரிடம் இருந்து பிரிந்துதான் நாங்கள் வாழ்கிறோம்’ என்று தெரிவித்தார்.

விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் என்ஜினீயர் கைது செய்யப்பட்ட சம்பவம் மங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக