புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_lcapநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_voting_barநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_rcap 
3 Posts - 75%
வேல்முருகன் காசி
நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_lcapநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_voting_barநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_lcapநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_voting_barநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_lcapநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_voting_barநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_rcap 
239 Posts - 38%
mohamed nizamudeen
நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_lcapநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_voting_barநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_lcapநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_voting_barநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_lcapநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_voting_barநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_rcap 
20 Posts - 3%
prajai
நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_lcapநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_voting_barநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_rcap 
13 Posts - 2%
Rathinavelu
நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_lcapநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_voting_barநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_lcapநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_voting_barநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_lcapநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_voting_barநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_lcapநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_voting_barநல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 18 Jan 2020 - 18:15

நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? Tamil-Daily-News-Paper_857921838761
-
சுகாதாரமான சூழலில் நாம் வசித்தால்தான் நோயின்றி
ஆரோக்யமாக வாழ முடியும். அதுபோலவே நமக்கு
மனநலமும், செயல் தூய்மையும் சிறந்து விளங்க
நல்லவர்களின் கூட்டுறவு அவசியம் தேவை.

முருகப் பெருமான் ‘இனியது எது?’ என்று கேட்க, ஒளவைப்
பெருமாட்டி ‘அறிஞர் தம்மைக் கனவிலும் நனவிலும்
காண்பதுதானே!’ என்பதையே இனியது என்று கூறினாள்.

ஆம்! நல்லவற்றின் நடுவில் நாம் எப்போதும், நாள்தோறும்
இருக்க வேண்டும்! கேட்பதும், சிந்திப்பதும், பாவிப்பதும்
நல்லவையாகவே அமைதல் வேண்டும்! இறைவனை
வழிபடுவதைக்கூட இரண்டாம் இடத்தில் வைத்து,
நல்லவர்களின் நட்பையே முதன்மைப்படுத்துகிறார் பட்டினத்தார்.

ஏன்? நல்லவர்களின் அறிவுரையால்தானே தெய்வ
வழிபாட்டின் சிறப்பே தெரிகிறது! எனவே ‘நல்லார்
இணக்கமும், நின் பூசை நேசமும்’ என்கிறார்.

அசுத்தநீர் தேங்கி, புதர் மண்டியுள்ள பயன்படுத்தப்படாத
நிலத்தில் பயிர் எப்படி செழித்து வளராதோ அப்படித்தான்
பெரியோர் தொடர்பு இன்றி சிற்றின்பம் சேர்ந்தவர்களின்
வாழ்வு சீரழிந்து விடும் என்கிற திருவள்ளுவர்

‘சிற்றினம் சேராமை’ என்று ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.
‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே! நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே! நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே! அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே.’


-என்று அனைத்து விதத்திலும் நல்லவற்றின் நடுவில் நாம்
இருக்க வேண்டிய அவசியத்தை அற்புதமாக
எடுத்துரைக்கின்றனர், நம் ஆன்றோர்கள். குருகுலம் ஒன்றில்
மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்பை நடத்திக்
கொண்டிருந்தார் ஆசிரியர்.

‘மாணவர்களே! எந்நாளும் நல்லவர்களுடனேயே நட்பு வைத்துக்
கொள்ள வேண்டும். தீயோர் சேர்க்கை அறவே கூடாது.
ஒருவனிடம் தீய குணங்கள் இருந்தாலும் நல்லவரின் கூட்டுறவு
அவனை மாற்றும். உயர்நிலைக்கு அவனை அழைத்துச் செல்லும்!’

ஒரு மாணாக்கன் எழுந்து கேட்டான்: ‘தீயவர்கள் கூட்டத்தில்
நல்லவன் ஒருவன் சேர்ந்து அவர்களை உயர்வாக்க முடியாதா?’
‘நல்லவன் தாழ்ந்தவர்களோடு சேர்ந்தால் அவனும் தீயவனாகவே
மாறிவிடுவான். தீயவற்றின் வலிமை அப்படிப்பட்டது என்பதை
செய்முறையில் உங்களுக்கு விளக்குகிறேன்’ என்றார் ஆசிரியர்.

வகுப்பறையில் பெரிய பாத்திரம் ஒன்றும், குடம் ஒன்றும்
வரவழைக்கப்பட்டன. ஆசிரியர் கேட்டார்: ‘முப்பது குடம் நீர்
ஊற்றினால்தான் இந்த பாத்திரம் முழுமை அடையும்.

இருபத்து ஒன்பது முறை குடத்தால் தண்ணீர் ஊற்றி ஒரு முறை
மட்டும் குடத்தில் பால் நிரப்பி ஊற்றினால் என்ன ஆகும்?’
‘பாத்திரம் முழுவதும் தண்ணீராகவே காணப்படும்.
நீருடன் பால் கலந்து தன் நிலையை இழக்கும்’ என்று பதில்
வந்தது. மீண்டும் ஆசிரியர் கேட்டார்,

‘சரி. இப்போது, இருபத்து ஒன்பது முறை பாலும், ஒருமுறை
தண்ணீரும் ஊற்றினால் என்ன ஆகும்?’ ‘பாத்திரம் முழுவதும்
பாலாகவே இருக்கும். ஒரு குடம் நீரும் பாலாகவே மாறும்.’
இந்த பதில்கள், வினா எழுப்பிய மாணவனைத் தெளிவு
படுத்தின.

செத்துப் போனவரின் சடலத்தை கொத்தித் தின்பதுதான்
காக்கைகளின் பழக்கம். ‘முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்’
என்று ஒரு பாடல் வரி உண்டு.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 18 Jan 2020 - 18:18


தீயதை விரும்பும் அக்காகம்கூட கற்பக மரச்சூழலில் இருந்தால்
அது அமுதத்தைத்தான் அருந்தும் என்று குறிப்பிடுகிறது
பழந்தமிழ்ப்பாடல் ஒன்று.

மேலானவற்றின் சங்கமத்தால் ஒருவன் தூய்மை அடைந்து
சிறப்பும் சேரப் பெறுவான் என்பதைக் ‘கற்பகத் தருவைச் சேர்ந்த
காகமும் அமுதம் உண்ணும்’ என்ற பாடல் வரிகள் நமக்கு
பாங்குற உணர்த்துகின்றன.

அரசர் ஒருவருக்கு உண்மைத் துறவி ஒருவரைப் பார்க்க வேண்டும்
என்கிற ஆர்வம் ஏற்பட்டது. ஆசைகளை அறவே துறப்பது அவ்வளவு
எளிதான காரியமல்ல. அதெப்படி ஆசை இல்லாமல் ஒருவர் இருக்க
முடியும்? அப்படிப்பட்ட நல்ல மகானை நாம் வணங்க வேண்டும்
என்கிற விருப்பம் அரசருக்கு எழவே அவர் தன் அமைச்சரை
அழைத்துச் சொன்னார்: ‘அமைச்சரே! போலிச் சாமியார் பலர்
இருக்கிறார்கள்.

நல்ல மகான் ஒருவரை நான் சந்தித்து ஆசி பெற ஏற்பாடு செய்யுங்கள்.’
பல இடங்களில், வெவ்வேறு ஊர்களில் தேடியும் உண்மைத் துறவி,
பணத்திற்கும், புகழுக்கும், வீண் பகட்டிற்கும் ஆசைப்படாத துறவி
அமைச்சருக்கு அகப்படவே இல்லை.

அதனால் அமைச்சர் நாடக நடிகர் ஒருவரை அணுகினார்.
‘தங்களுக்கு நான் இருபதாயிரம் ரூபாய் தருகிறேன். நம் நாட்டு
மன்னர் உங்களை வந்து சந்திக்கும்வரை நீங்கள் ஒரு துறவிபோல
நடிக்க வேண்டும். சரியாக வேடமிட்டுக்கொண்டு இந்த மரத்தடியில்
அமர்ந்து கொள்ளுங்கள்,’ என்றார்.

இருவருக்கும் இடையே ரகசியமான ஒப்பந்தம் உருவாயிற்று.
‘இன்னுமா உண்மைத் துறவி உங்களுக்கு அகப்படவில்லை?’ என்று
கேட்ட மன்னரிடம், அமைச்சர் ‘இப்போதுதான் அப்படிப்பட்ட
ஒருவரைக் கண்டுபிடித்தேன்,’ என்றார்.

அடுத்த வினாடியே அரசர் தன் மனைவி, குழந்தைகள்,
பரிவாரங்களுடன் புறப்பட்டார். அமைச்சர் தான் ஏற்பாடு
செய்திருந்த நபரைக் காட்டினார். அரசன் சாந்தம் தவழும் அவரின்
முக மண்டலத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

பாராளும் மன்னவர், பரிவாரங்கள், அமைச்சர், வந்திருந்த பெரியவர்கள்
எல்லோரும் நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் வீழ்ந்து ‘துறவி’யை
நமஸ்கரித்தனர். தங்கத் தாம்பாளத்தில் பொன்னும், பொருளும் வைத்து
ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக்கொண்டனர்.

‘எல்லாவற்றையும் துறந்து விட்ட எனக்கு இவை எதற்கு?
குடிமக்களுக்கு வழங்குங்கள்’ என்றார் நடிகர் துறவி!

நெடுநாள் ஆசை நிறைவேறிய மகிழ்வில் மன்னர் அரண்மனை
திரும்பினார். சிறிது நேரத்திற்குப் பிறகு துறவியிடம் வந்த அமைச்சர்
‘இந்தாருங்கள்! இருபதாயிரம் ரூபாய்’ என்றார்.

‘எல்லாவற்றையும் துறந்துவிட்ட எனக்கு இந்தப் பணம் எதற்கு?’
என்று கேட்டார் துறவி. ‘நாடக வசனம் போதும். சொன்னபடி இதோ
ரூபாய்’ என்றார் மந்திரி.

‘சில நிமிடம் நல்லவனாக நடித்ததற்கே நாட்டையாளும் மன்னவர்,
பரிவாரம் மற்றும் தாங்கள் ஆகிய எல்லோரும் என் காலில் விழுந்து
பணிந்தீர்களே! ஆசைகள் இல்லாமல் நல்ல துறவியாக
ஆகிவிடுவதுதான் எவ்வளவு உயர்வு, பெருமை என எண்ணி
உண்மையிலேயே நான் துறவி ஆகிவிட்டேன்!’ என்றார் நடிகர்!

நல்லதை நினை; நல்லதைச் சொல், நல்லதை செய்

என்கிறார் ஆஸ்கார் ஒயில்டு என்னும் அயல்நாட்டறிஞர்.

நல்லவற்றின் நடுவில் நாம் இருந்தால் வளரும் தலைமுறையும்
அதன் வழிப்படும். ஏனென்றால்
‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பிதான் இந்த நாடே இருக்குது!’

--
-------------------------------------
திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக