புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை Poll_c10திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை Poll_m10திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை Poll_c10திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை Poll_m10திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை Poll_c10திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை Poll_m10திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை Poll_c10திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை Poll_m10திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 06, 2020 4:35 pm

இந்த திரியில் உள்ள திரைப்பட பாடல்கள்:-
--------------------

சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி – சபாஷ் மீனா
-
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ - உழவன்
-
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் - காதலிக்க நேரமில்லை
-
சரவண பொய்கையில் நீராடி - இது சத்தியம்
-
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை-
படித்தால் மட்டும் போதுமா
-
காத்திருந்த கண்களே - மோட்டார் சுந்தரம்பிள்ளை
--
உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
-வேங்கை
-
உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல - இதயக்கமலர்
-
என்னை தாலாட்ட வருவாளோ - காதலுக்கு மரியாதை
-
ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே-
-தை பிறந்தால் வழ பிறக்கும்
---------------




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 06, 2020 4:36 pm


சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி – எந்தன்


பாடல்: சித்திரம் பேசுதடி
திரைப்படம்: சபாஷ் மீனா
பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
ஆண்டு: 1958

-
----------------------------


சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி – எந்தன்
சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி – எந்தன்
சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி – எந்தன்
சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி
முத்துச் சரங்களைப் போல்
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி

சித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி

தாவும் கொடி மேலே
தாவும் கொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே
தாவும் கொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே
பாவையுன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடி
பாவையுன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடி

சித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி

என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன்
என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன்
இன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே
இன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே

சித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 06, 2020 4:37 pm


பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ


படம் : உழவன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

------------------


பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ  (பெண்ணல்ல)

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ  (பெண்ணல்ல)

தென்றலைப் போல நடப்பவள்
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு..
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி (பெண்ணல்ல)

சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தைப் போல இருப்பவள்
வெல்லப் பாகைப் போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனைப் பூமுடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 06, 2020 4:38 pm

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
-

படம் : காதலிக்க நேரமில்லை
இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர் : பி.சுசீலா, PB ஸ்ரீநிவாஸ்
பாடல் வரிகள் : கண்ணதாசன்

-

--
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
ஆஹா… பொன்னான கைபட்டு புண்ணான கன்னங்களே
லாலால லாலால லாலா

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கன்னங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை…

தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா.. சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள்..
மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன்..
அது போதாதென்றாள்…
போதாதென்றாள்…

அனுபவம் புதுமை
அவளிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கன்னங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை…

கண்ணென்ன கண்ணென்று அருகினில் அவன் வந்தான்
கண்ணென்ன கண்ணென்று அருகினில் அவன் வந்தான்
ஆஹா.. பெண்ணென்ன பெண்ணென்று என்னென்ன கதை சொன்னான்
இது போதாதென்றேன்..
இனி கூடாதென்றான்
இன்னும் மீதம் என்றேன்..
அது நாளை என்றான்
நாளை என்றான்…
அனுபவம் புதுமை…

சிஙகாரத் தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம்
ஆஹா..சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்
அவள் எங்கே என்றாள்..
நான் இங்கே நின்றேன்
அவள் அங்கே வந்தாள்..
நாங்கள் எங்கோ சென்றோம்
எங்கோ சென்றோம்…

பனி போல் குளிர்ந்தது கனி போல் இனித்ததம்மா
ஆஹா.. மழை போல் விழுந்தது மலராய் மலர்ந்ததம்மா
ஒரு தூக்கம் இல்லை..
வெறும் ஏக்கம் இல்லை
பிறர் பார்க்கும் வரை எங்கள் பிரிவும் இல்லை
பிரிவும் இல்லை

அனுபவம் புதுமை
அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
ஆஹா.. பொன்னான கைபட்டு புண்ணான கன்னங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 06, 2020 4:42 pm


சரவண பொய்கையில் நீராடி


திரைப்படம் : இது சத்தியம்
இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர் : பி.சுசீலா
பாடல் : கண்ணதாசன்

--------------

-
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அன்னலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ…

சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்

சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 06, 2020 4:43 pm


பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை


படம்: படித்தால் மட்டும் போதுமா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடகர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

-
----------------------------------------


பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா

பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரக் கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்

துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும்… கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன்… அங்கே… கண்டேன்… வந்தேன்

பெண் ஒன்று கண்டேன்
பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா

நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை

உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை

என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் விழியில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்

நீயின்றி நான் இல்லை
நானின்றி நீ இல்லையே
சென்றேன்… கண்டேன்… வந்தேன்

பூ ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா

பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா

படம்: படித்தால் மட்டும் போதுமா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடகர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 06, 2020 4:55 pm


-
மோட்டார் சுந்தரம் பிள்ளை
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: பி.சுசீலா, பி.பி. ஸ்ரீநிவாஸ்


காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?

மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன - அவன்
வருகையினால் இந்த இதழ்களின் மீது புன்னகை விளைந்ததென்ன?
பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ? - ஒரு
தலைவனை அழைத்துத் தனியிடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ?
தருகின்ற மனதல்லவோ?

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

கைவிரலாலே தொடுவதிலே இந்தப் பூமுகம் சிவந்ததென்ன? இரு
கைகளினால் நீ முகம் மறைத்தாலே வையகம் இருண்டதென்ன
செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன - என்னை
அருகினில் அழைத்து இருகரம் அணைத்து மய்க்கத்தைக் கொடுப்பதென்ன?
மயக்கத்தைக் கொடுப்பதென்ன?

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
லாலலாலா லல்லல்லா லாலலல்லா லல்லல்லா
லாலலாலா லாலாலா லாலலாலா லாலல்லா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 11, 2020 11:58 pm

திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை Venghai_dhanush_thamana001+%252810%2529
-

படம்: வேங்கை
இசை: தேவி ஸ்ரீபிரசாத்
பாடல்: விவேகா
பாடியவர்கள்: தேவி ஸ்ரீபிரசாத், கார்த்திகேயன்
------------------------------

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே... ஓ ஒ ஒ ஓ கொல்லாதே.....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்... ஓ ஒ

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

காத்திருப்பேன் காத்திருப்பேன், ஆறு மாசம் தான்...,
கண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான்...,
என்னமோ நடக்குது,
இதயம் வலிக்குது,
மனசு தவிக்குது...
உன்னோடய வார்த்தைக்காக.....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே... கொல்லாதே.....

சின்னபுள்ள நேசம் இது, பச்சபுள்ள பாசம் இது,
என் மனசை தாக்கியது முன்னால.... முன்னால...
ஜாதி மதம் பாக்கலையே சம்மதத்தை கேக்கலயே..
காதல் என்று ஆகிடுச்சு தன்னாலே... தன்னாலே....

நெசமா... நெசமா நெஞ்ச்சுக்குள்ள நான் ஒளிஞ்சேன் உன்னோடய வார்த்தைக்காக....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே...

வெடடருவாள் தூக்கிகிட்டு வெட்டிப்பயல் போலிருந்தேன்
வெட்கப்பட்டு நான் நடந்தேன், உன்னாலே... உன்னாலே...
கட்டைகம்பை தூக்கிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன்..
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னாலே...

புதுசா... புதுசா... மாறிருக்கேன் தேறிருக்கேன் உன்னேடய பார்வையாலே....

என்ன சொல்ல போறாய்....நீ
என்ன சொல்ல போறாய்....
எப்ப சொல்ல போறாய்... நீ
எப்ப சொல்ல போறாய்...

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ள...,
வீணாக இவன் மனசை கிள்ளாதே....
3 மாசம், 6 மாசம் காத்திருக்கும் பயபுள்ள...
நீயாக இவன் மனசை கொல்லாதே...
நீ கொல்லாதே...



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

படம்: இதயக்கமலம்
பாடியவர்: பி சுசீலா
இசை: கே வி மகாதேவன்
கவிஞர் :கண்ணதாசன்

-
----------------------------

உன்னைக்காணாத
கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத
நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத
சொல்லும் சொல்லல்ல....

நீ இல்லாமல்
நானும்நானல்ல
நீ இல்லாமல்
நானும்நானல (உன்னைக்காணாத...2)

இதில்நீ ஒரு பாதி
நான் ஒரு பாதி
இதில் யார் பிரிந்தாலும்
வேதனை பாதி............(2)

காலங்கள் மாறும்
காட்சிகள் மாறும்
காதலின்முன்னே
நீயும்நானும்வேறல்ல...

உன்னைக்காணாத
கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத
நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத
சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல்
நானும்நானல்ல
நீ இல்லாமல்
நானும்நானல்ல

ஒரு தெய்வம் இல்லாமல்
கோவிலும் இல்லை
ஒரு கோவில் இல்லாமல்
தீபமும் இல்லை ...(2 )

நீ எந்தன் கோவில்
நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே
நீயும் நானும் வேறல்ல.....
உன்னைக்காணாத.........
======================

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 24, 2020 6:18 am


படம் : காதலுக்கு மரியாதை
பாடல் : என்னை தாலாட்ட
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பழனி பாரதி
பாடியவர்கள் : ஹரிஹரன்

-
-------------------------------------------

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

=====

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக