உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதைby ஜாஹீதாபானு Today at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"மீண்டெழுந்து கொண்டிருக்கிறது ஒரு இராஜ கோபுரம்”
3 posters
"மீண்டெழுந்து கொண்டிருக்கிறது ஒரு இராஜ கோபுரம்”
"மீண்டெழுந்து கொண்டிருக்கிறது ஒரு இராஜ கோபுரம்”

திருச்சி நகரிலிருந்து துறையூர் போகும் வழியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருவெள்ளறை. புண்டரிகாட்ச பெருமாள், பங்கஜவள்ளி தாயார் எழுந்திருக்கும் இந்த திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்றான இது . திருவரங்கத்திற்கும் பழமையானது.
வரலாற்று குறிப்பில் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. வெண்மையான பாறையிலான மலை எனப்பொருள்பட வெள்ளறை என்ற இந்த அழகான கிராமம் காலப்போக்கில் திருவெள்ளறையாகியிருக்கிறது.
அந்த சின்ன கிராமத்தின் நடுவே வட்ட வடிவில் பெரிய கோட்டை மதில் சுவற்றிற்குள்ளே கோவில், இக்கோயில் பல்லவ மன்னன் நந்தி வர்மனின் கி.பி 805 ஆம் ஆண்டில் தொடங்கி மூன்றாம் நந்திவர்மன் சோழர்கள்,விஜயநகர மன்னர்கள் நாயகர்கள் என பல காலகட்டங்களில் இந்த கோயில் வளர்ந்திருப்பதை சோழர்கால கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.
மதுராந்தக உத்தம சோழன் கால கல்வெட்டுகளில் இந்த கோயில் "பெரிய ஸ்ரீ கோயில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலின் இரண்டாம் நுழைவாயிலில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி 1216) பொறிக்கப்பெற்ற கல்வெட்டில் காவேரி நாட்டை எப்படி தனதாக்கி கொண்டான் என்பதை விளக்கும் பாடல் இருக்கிறது.
தமிழகத்தில் எந்தக் கோவிலிலும் இல்லாத வகையில் இந்தக்கோவிலில் சன்னதிக்கு உத்தராயண வாசல் என்றும் தட்சிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன.
தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.. அதே பாதையில் தான் திரும்பவும் வேண்டும். ஆனால் இந்த அழகான கோவிலின் நுழை வாயிலான ராஜகோபுரம் பாதி எழுப்பப்பட்ட நிலையில் பாழடைந்து நின்றுகொண்டிருக்கிறது.
தொடரும்...

திருச்சி நகரிலிருந்து துறையூர் போகும் வழியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருவெள்ளறை. புண்டரிகாட்ச பெருமாள், பங்கஜவள்ளி தாயார் எழுந்திருக்கும் இந்த திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்றான இது . திருவரங்கத்திற்கும் பழமையானது.
வரலாற்று குறிப்பில் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. வெண்மையான பாறையிலான மலை எனப்பொருள்பட வெள்ளறை என்ற இந்த அழகான கிராமம் காலப்போக்கில் திருவெள்ளறையாகியிருக்கிறது.
அந்த சின்ன கிராமத்தின் நடுவே வட்ட வடிவில் பெரிய கோட்டை மதில் சுவற்றிற்குள்ளே கோவில், இக்கோயில் பல்லவ மன்னன் நந்தி வர்மனின் கி.பி 805 ஆம் ஆண்டில் தொடங்கி மூன்றாம் நந்திவர்மன் சோழர்கள்,விஜயநகர மன்னர்கள் நாயகர்கள் என பல காலகட்டங்களில் இந்த கோயில் வளர்ந்திருப்பதை சோழர்கால கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.
மதுராந்தக உத்தம சோழன் கால கல்வெட்டுகளில் இந்த கோயில் "பெரிய ஸ்ரீ கோயில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலின் இரண்டாம் நுழைவாயிலில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி 1216) பொறிக்கப்பெற்ற கல்வெட்டில் காவேரி நாட்டை எப்படி தனதாக்கி கொண்டான் என்பதை விளக்கும் பாடல் இருக்கிறது.
தமிழகத்தில் எந்தக் கோவிலிலும் இல்லாத வகையில் இந்தக்கோவிலில் சன்னதிக்கு உத்தராயண வாசல் என்றும் தட்சிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன.
தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.. அதே பாதையில் தான் திரும்பவும் வேண்டும். ஆனால் இந்த அழகான கோவிலின் நுழை வாயிலான ராஜகோபுரம் பாதி எழுப்பப்பட்ட நிலையில் பாழடைந்து நின்றுகொண்டிருக்கிறது.
தொடரும்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
சிவா likes this post
Re: "மீண்டெழுந்து கொண்டிருக்கிறது ஒரு இராஜ கோபுரம்”
.jpg)
சாளுக்கிய பாணியில் நிறுவப்பட்டு 800 வருடங்களுக்கும் மேலாக முழுமை பெறாமல் தோற்றப் பொலிவிழந்து நிற்கும் இந்த கோபுரத்தை நாம் ஏன் இப்போது முயற்சி செய்து கட்டி முடிக்க கூடாது? என்ற எண்ணம் கோவையிலிருந்து அடிக்கடி இங்கு வரும் பக்தர் திரு. ஜெயபாலுக்கு . எழுந்தது.
இவர் ஐஐடி யிலும் வெளிநாட்டிலும் படித்து ஸ்டீல் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற பொறியாளர். தொழில் அதிபரும் ஏற்றுமதியாளாருமான இவரும் கோவையில் ஒரு பெரிய மருத்தவமனையை நடத்தி வரும் இவரது சகோதரர் வேலுமணியும் தங்கள் சகோதரியின் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் இந்த கோபுரத்தை எழுப்பத் தீர்மானித்தனர்.
நிர்மாணப் பணிகள் செய்து கோவிலை மீண்டெழுப்புவதற்கு புரவலர்கள் பணம் செலவழிக்க தயாராகயிருந்தாலும், அரசின் அனுமதி கேட்ட கட்டத்திலிருந்தே சவால்கள் தொடங்கின. பெருமாள் கிழக்கு நோக்கியும் ராஜகோபுரம் வடக்கு நோக்கியும் இருப்பது தமிழக கோவில்களில் மரபு இல்லை.அதனால் இதை கட்டுவது சரியில்லை என்று சில குரல்கள் எழுந்தன.. பாஞ்சராத்திர ஆகம விதிகள், அந்த விதிகளின் விற்பனர்களிடம் இது தவறில்லை என்ற சான்றிதழ்கள், கடி, கிரியாபாதம் போன்ற ஸ்லோகங்கள், இவற்றுடன் துறையை அனுமதிக்கு அணுகினார்
இம்மாதிரி பழமையான கோவில்களை புதிப்பதாக சொல்லி பாழ்செய்து விடுவார்கள் என்பதால் அறநிலத்துறை தனியார்களை இப்பணிகளை செய்ய எளிதில் அனுமதிப்பதில்லை. தொடர்ந்த பல முயற்சிகளுக்குப் பின்னர் தான் அனுமதி கிடைத்திருக்கிறது. அறநிலையத்துறையின் பரிசோதனைகளுக்கு பின் இந்த கோபுரம் அது கட்டப்பட்டிருக்கும் பழங்கால முறைப்படி சுண்ணாம்பில்தான் கட்ட வேண்டும் பணிகளில் சிமிண்ட், கான்கிரீட் பயன்படுத்தக் கூடாது.
தொடரும்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: "மீண்டெழுந்து கொண்டிருக்கிறது ஒரு இராஜ கோபுரம்”

நடக்கும் போது கட்டிடம் அதிரக்கூடாது ஒவ்வொரு கட்டத்திலும் அறிக்கை அனுப்ப வேண்டும் போன்ற பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது. அனுமதிகளைப் பெற்ற திரு ஜெயபால் , கோபுரம் எழுப்பும் பணிகளை எங்கள் பொறுப்பில்தான் கட்டுவோம். அரசின் காண்ட்ராக்டர் வேண்டாம் என்ற வைத்த வேண்டுகோளை அறநிலத்துறை ஏற்றது ஆச்சரியம்.
பழமையான கோவில்களை மரபு வழியில் புதுப்பிக்கும், அதே சமயத்தில் நவீன தொழில் நுட்பங்களையும் புரிந்து கொண்டு பணிகளைச்செய்யும் வல்லுனரான ஒரு ஸ்தபதியை தேடிக்கொண்டிருந்த திரு ஜெயபாலுக்கு உதவியவர் ஸ்ரீரங்க கோவிலை திறம்பட நிர்வகித்து வரும் அறநிலையத்துறை இணை ஆணையர் திரு. ஜெயராமன். இதில் வல்லுனரான குமரகுருபரன் ஸ்தபதியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
முடிக்கப்படாமல் மொட்டைக்கோபுரமாக நின்றுகொண்டிருந்த இந்த கோபுரம் தான் அந்தக் கோவிலுக்குள் செல்லும் பிரதான வழி.
23 அடி அகலமுள்ள இந்த நுழைவாயில் கோபுரத்தின் உள் வாயில் 13 அடியாக குறுகியிருந்தது. ஆராய்ந்ததில் உட்புற கோவில்பகுதி சுண்ணாம்பு கலவையால் நிரப்பி அடைக்கப்பட்டு குறுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது. இது அன்னியர் படையெடுப்புகளிலிருந்து கோவிலை பாதுகாக்கவா? அல்லது கோபுரத்தின் அடிப்பகுதி வலுவிழந்திருப்பதினாலா? என்பது புரியவில்லை.
எழுப்பப்படப் போகும் எழு நிலை கோபுரங்களின் எடை 2500 டன் அளவிலிருக்கும். தொடங்கிய நிலையிலேயே இருக்கும் 12 நூற்றாண்டின் பழைய கோவிலின் அமைப்பு அதைத்தாங்குமா? என்ற கேள்வி எழுந்தது
இதை நவீன தொழில் நுட்பங்களுடன் சோதித்து அறிய திரு ஜெயபால் சென்னை ஐஐடியின் உதவியை நாடினார். இந்தப்பணி குறித்து அவர்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டார்.
தொடரும்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: "மீண்டெழுந்து கொண்டிருக்கிறது ஒரு இராஜ கோபுரம்”

சென்னை ஐஐடி முதல் முறையாக கோவில் பணிகளுக்காக இப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்று சோதனைகளை நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் செய்து இருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி பொறியாளர் குழு பல வகைகளில் சோதித்துப் பார்த்ததில் கோபுரம் ஒரு பாறையின் மேல் கட்டப்பட்டுள்ளது. கற்களும் நிலையாக இருக்கிறது. கோபுரத்தைப் பாதிக்காமல் தூண்களை மட்டும் சரிசெய்து ராஜகோபுரம் கட்ட முடியும் என சான்றிதழ் கொடுக்க வேலை ஆரம்பமாகிறது.
ஒரு கோபுரத்தின் முக்கியமான பகுதி அதன் கிழ் நிற்கும் நிலைக்கல் எனப்படும் பகுதி. அதன் மீது தான் கோபுரங்கள் எழுப்பப்படும். இந்தக்கல்லின் எடை 600 டன். . இந்த நிலைக்கற்களை வைப்பதற்கு அங்குள்ள பல சேதங்களைச் சரிசெய்ய வேண்டியிருந்தது. அடுத்து மேல் விதானம்.
கர்நாடகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட விதானக் கல்லை கமலம், அன்ன பட்சி என வடிவமைத்து, மேலே எண் கோணங்களாக செய்து விதானத்தை நிறுவியிருக்கிறார்கள் அடுத்த கட்டம் கோவிலின் நுழை வாயிலில் நிறுத்தப்படும் தூண்கள் பல நாள் உழைப்பில் உருவான உட்புற கல் தூண்களை கோபுரத்தின் உள்ளே நிறுத்துவது மிகப்பெரிய சவாலாகயிருந்திருக்கிறது.
அந்தப் பெரிய உயரமான தூண்களை நுழை வாயிலின் வழியே உள்ளே கொண்டு போய் திருப்பி நிறுத்த உள்ளே போதுமான இட வசதியில்லை. . ஒரு ராட்சத கிரேன் மூலம் அந்த தூண்களை ராஜகோபுரத்தின் வெளிப்பகுதியிலிருந்து அதைத்தாண்டி உட்புறமாக நெடுவாக்கில் கிரேன் மூலம் மெல்ல இறக்கிப் பொருத்தியிருக்கிறார்கள். இதில் அந்த கிரேனை வெளியிலிருந்து இயக்கும் ஆபரேட்டர் கோவிலின் உட்புறத்தில் தூண் எந்த இடத்தில் இறங்குகிறது என்பதைப் பார்க்க முடியாது, . ஆனாலும் ஒரு குழுவாக இயங்கி தூண்களை துல்லியமாக அதனிடத்தில் நிறுத்தியிருக்கிறார்கள்.
.சிமெண்ட் உபயோகிக்க கூடாது என்பது நிபந்தனை அல்லவா? பாரம்பரிய கட்டுமான பொறியியல் உத்திகளின் படி சுண்ணாம்பு தயாரிக்கும் முறையை தன் பாட்டனாரிடம் கற்ற ஸ்தபதி குமரகுருபரன் அதைத் தயாரிக்க வட்ட வடிவ செக்கும் அதை இழுக்க மாடுகளும் கேட்டிருக்கிறார். மாடுகள் இழுக்கும் ஒரு செக்கு என்ன வேகத்தில் ஓடுமோ அதே வேகத்தில் ஒடக்கூடிய மோட்டரில் இயங்கும் செக்கு ஒன்றை அமைத்து தந்திருக்கிறார் திரு ஜெயபால்.
தொடரும்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: "மீண்டெழுந்து கொண்டிருக்கிறது ஒரு இராஜ கோபுரம்”

சுண்ணாம்பு,மணலுடன் இயற்கை வழி விளைந்த காய்கனிகள் கலந்து அரைத்த மிக நுண்ணிய கட்டிட வேலைக்கான கலவையை தயாரிக்கிறோம் என்கிறார் ஸ்தபதி குமர குருபன். இதைப்போல் இந்த கோவிலில் கட்டும்போது பயன்படுத்த பட்ட செங்கற்கள் சிறியவை. இப்போது அந்த அளவில் தயாரிக்க படுவதில்லை. இந்தப்பணிக்காக பண்டைய கால செங்கற்களின் நீள அகல உயரங்களுடன் தயாரிக்கப் படுகிறது.
கோபுரம் மட்டுமில்லாமல் அதன் கதவுகளும் பாரம்பரிய முறையில் அமைய வேண்டும் என்பதற்காக கர்நாடகாவில் 300-400 ஆண்டுகள் பழமையான இலுப்பை மரங்கள் அடையாளம் காணப்பட்டு அவைகளை அறுக்கும் வசதிகள் இருக்கும் கடலூர் விருத்தாசலத்திற்கு கொண்டுவரப்பட்டு அறுக்கப்பட்டுள்ளது. இலுப்பை மரம் பாதிப்படையாமல் பாதுகாக்க சில ஃபார்முலாக்கள் ஆகமவிதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி பராமரித்து வைத்திருக்கிறார்கள் கோபுர பணி முடியும் நேரத்துக்குள் அதில் கதவுகள் தயாராகி விடும் கோபுரத்தில் எதை மாற்றினாலும் அதை குறித்திருந்த அந்த நாள், நட்சத்திரம், நேரத்திற்குள் முடிக்க வேண்டும். கற்தூண்கள் வேலை வேறு ஒரு இடத்தில் நடைபெற்றது. குறுகிய நேரத்திற்குள் கற்களை கொண்டுவருவது, தூண்களை நிறுத்துவது எல்லாம் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கிறது. பெருமாளுக்குச் சேர வேண்டியதை அவர் சரியாகச் செய்து கொள்கிறார் என்கிறார் அடக்கத்துடன் ஸ்தபதி..
இதுவரை பெருமாளின் அருளால் கோபுரம் மீண்டெழுந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி 7 நிலைகளையும் நிறுவி விடுவோம் என்ற நம்பிக்கை எழுந்திருக்கிறது. என்கிறார் புரவலர் ஜெயபால். கோவையிலிருக்கும் இவர் இந்த கிராமத்திற்கு வந்து தங்கி பணிகளைக் கவனிக்கிறார். மொத்த செலவு மதிப்பிடு, இதுவரை செலவழித்திருப்பது போன்றவற்றை பகிர்ந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மிகப் பெரியளவில் செலவாகிக்கொண்டிருக்கிறது என்பது நடந்து கொண்டிருக்கும் பணிகளிலிருந்து உணர முடிகிறது.
தொடரும்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: "மீண்டெழுந்து கொண்டிருக்கிறது ஒரு இராஜ கோபுரம்”

இது நாள் வரை குறுகிய வாயிலினால் கோவிலை விட்டு விழாக்காலங்களில் வெளியே வர முடியாத பெருமாள் இந்த ஆண்டு பல்லக்கில் வீதி வலம் வந்திருக்கிறார். அதைப் பார்த்ததில் உள்ளூர் மக்களுக்கு பேரானந்தம்..
இந்த எட்டம் நூற்றாண்டு கோபுரம் நிர்வாக திறமைமிக்க புரவலர்களின் பொருளுதவி, அனுபவசாலியான ஸ்பதியின் பட்டறிவு, ஐஐடி இன்ஜினியர்களின் தொழில்நுட்பம், எல்லம் இணைந்து உதவ இந்த கோவில் மீண்டெழுந்துகொண்டிருப்பது பக்கதர்களுக்கு மட்டுமில்லை, நமது பாரம்பரியத்தை பாதுகாக்க விரும்பும் ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியைத்தருகிறது.

நன்றி வாட்சப்....இந்த கட்டுரை தீபாவளி மலரில் கூட வந்துள்ளது

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: "மீண்டெழுந்து கொண்டிருக்கிறது ஒரு இராஜ கோபுரம்”


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: "மீண்டெழுந்து கொண்டிருக்கிறது ஒரு இராஜ கோபுரம்”


-
படங்கள் தெரியவில்லை
முடிந்தால், மீண்டும் பதிவேற்றவும்
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|