புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
91 Posts - 61%
heezulia
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
1 Post - 1%
viyasan
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
283 Posts - 45%
heezulia
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
19 Posts - 3%
prajai
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_m10மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் கேள்வி பதில்கள்


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2009 11:10 pm

First topic message reminder :

ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?


ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.

எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?


உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2009 5:41 pm

எனக்கு மூட்டுவலி கடந்த ஐந்து வருடமாக உள்ளது. இதற்கு என்னன்னமோ வைத்தியம் செய்து பார்த்துவிட்டேன். ஆனால் எனக்குள்ள நோயானது சிறிதுகூட குணமாகவில்லை. மூட்டுவலிக்கு என்ன காரணம்?

மூட்டுவலி வயதாவதன் காரணமாக வரலாம். நமது மூட்டுப்பகுதிகளில் உள்ள உராய்வு எண்ணெயானது உலர்ந்து போகும்போது மூட்டுவலியானது வரும். ஒரு சிலருக்கு பரம்பரையின் காரணமாகவும்கூட இந்த மூட்டு வலியானது வரலாம். இத்தகைய மூட்டுவலியானது மிகுந்த சிரமத்தை கொடுக்கக் கூடியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 4:07 pm

நான் காலையில் வெறும் வயிற்றில் பால் மற்றும் முட்டை சாப்பிடுவேன். ஆனால் எனக்கு சில நிமிடங்களில் முதுகில் ஒருவிதமான பிடிப்பு தோன்றுகிறது. வெறும் வயிற்றில் முட்டை சாப்பிட்டால் வாயுப்பிடிப்பு தோன்றுமா?


முட்டையிலுள்ள மஞ்சள் கருசெரிக்க சற்று கடிமான ஒன்றாகும். ஆகையால்தான் நமது உணவுமுறையில் முட்டை உட்கொள்ளும்பொழுது அத்துடன் மிளகு, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்த உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. மேலும் முட்டையை வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடும்பொழுது செரிமானப் பாதையில்சில வேதிமாற்றங்கள் நிகழ்வதால் நைட்ரஜன் வாயு அதிகப்பட்டு தசைப்பிடிப்பு தோன்றுகிறது. ஆகவே முட்டையுடன் வெங்காயம், சீரகம், மிளகு, மல்லி, மஞ்சள் ஆகியன சேர்த்து சாப்பிடுவது நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 22, 2009 1:44 am

எனக்கு வயது 31. நீரிழிவு இருக்கிறது. கல்யாணமாகி 5 வருடங்களாகியும் குழந்தை இல்லை. நீரிழிவு இருப்பதுதான் காரணம் என்கிறார்கள். எனக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லையா?

நீரிழிவு என்பது ஆண், பெண் இருவரையும், எந்த வயதினரையும் தாக்கலாம். தலையிலிருந்து, கால் வரை அத்தனை பாகங்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் விஷயம் அது. நீரிழிவால் பாதிக்கப் பட்டிருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. அப்படியே கருத்தரித்தாலும், பிரசவம் வரை, தாய்க்கும், சேய்க்கும் பல பிரச்னைகளை உண்டாக்கும். நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது முதல் விஷயம். அடுத்து உடல் பருமன் அதிகமாக இருந்தால், அதைக் குறைத்தே ஆக வேண்டும்.

சர்க்கரையின் அளவுக்கேற்ப, உங்கள் மருத்துவரிடம் கேட்டு, மாத்திரைகளோ, இன்சுலினோ எடுத்துக் கொள்ளுங்கள். கர்ப்பம் தரித்தால், வழக்கத்தைவிட சற்று அதிகமாக இன்சுலின் தேவைப்படலாம்.

கர்ப்ப காலம் முடிகிற வரை, மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பது நல்லது. பிரசவம் முடிந்ததும், சர்க்கரையின் அளவுக்கேற்ப, அதற்கான மருந்துகளைத் தொடர வேண்டியதும் முக்கியம்.

நீரிழிவு என்பது மரபணு சம்பந்தப்பட்டது என்பதால், உங்களிடமிருந்து, உங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் அது வரலாம்.இது தவிர, சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் நீரிழிவு ஏற்படும். அது தற்காலிகமானது. பிரசவத்துக்குப் பிறகு சரியாகி விடும்.

ஆனாலும் அதை அலட்சியப்படுத்தாமல், பிரத்யேக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவுக்கான மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து, சரியான எடையுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறினாலே உங்களுக்கு கர்ப்பம் தரிக்கும். கவலை வேண்டாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2009 1:08 am

மழைக்காலம் வந்தாலே எனக்கு தொண்டைக்கட்டு, இருமல் வந்துவிடுகிறது. இதற்கு ஏதேனும் மூலிகைப் பொடிகள் இருக்கிறதா?

அதிமதுரம், கற்கடாகசிங்கி இரண்டையும் சம அளவு எடுத்து மைய இடித்து, கால் பங்கு கற்கண்டுப் பொடி சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை வாயிலிட்டு சப்பி சாப்பிட இருமல், தொண்டைக்கட்டு நீங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 10:52 am

நான் காதலிக்கும் பெண்ணின் தாத்தா, அம்மா புற்றுநோயால் இறந்தவங்க. இதனால் அந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்துவைக்க என் பெற்றோர் மறுக்கின்றனர். புற்றுநோய் பரம்பரை வியாதியா? என் காதலியையும் புற்றுநோய் நிச்சயம் பாதிக்குமா? பரிசோதனை மூலம் புற்றுநோய் வரவே வராது என்று உறுதிப்படுத்த முடியுமா?


புற்றுநோய் என்பது பரம்பரை நோய் கிடையாது. சராசரி ஆரோக்கியத்துடன் இருக்கும் எல்லாரையம் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பெற்றோருக்கு இருந்தால், குறிப்பாக அம்மாவுக்குப் புற்றுநோய் இருந்தால் மகளைப் புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்பு 0.2 முதல் 0.3 சதவிகிதம் மட்டுமே அதிகம். அதற்கான அந்தப் பெண்ணுக்குக் கட்டாயம் புற்றுநோய் பாதிக்கும் என்று அர்த்தம் கிடையாது.

நீரழிவு நோய் போல நிச்சயம் பாதிக்கும் பரம்பரை நோய் கிடையாது புற்றுநோய். பொதுவாக புற்றுநோய்களுக்கான பரிசோதனை 10 வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் மேற்கொள்ளப்படும். எனவே பரம்பரைச் சிக்கல் கவலைகளை விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் உறுதியாக இருந்தால் உங்கள் காதலியைத் தாராளமாக மனைவியாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் அவருடைய 30 வயதுக்கு மேல் தவறாமல் பரிசோதித்துக் கொள்ளுங்கள்!



மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 05, 2009 8:16 pm

நெஞ்சுவலி ஏற்படும் எல்லோரும், "Isordil" என்ற மாத்திரையை நாக்கின் அடியில் வைக்கலாமா?


"Isordil" (ஐசார்டில்) என்பது "நைட்ரேட்" வகை மருந்தைச் சேர்ந்தது. இம்மாத்திரையை நாக்கின் அடியில் வைக்கும்போது இருதய ரத்தநாளங்களை விரைவாக, நன்கு விரிவடைய செய்கிறது. எனவே இருதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராகிறது. அத்துடன் நெஞ்சுவலியும் குறைகிறது.

இம்மாத்திரையின் முக்கியமான உபயோகம் என்னவென்றால், நடக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் மட்டுமே இதை பயன்படுத்தலாம். இவ்வியாதியை "Chronic Stable Angina' என்பர். மாரடைப்பு ஏற்படும்போது குறிப்பாக இருதயத்தின் அடிப்பகுதியை பாதிப்பதாக இருந்தால் இந்த மாத்திரையை அவசியம் உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் இந்த மாரடைப்பில் ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். அந்த தருணம் இம்மாத்திரையை உபயோகித்தால் இருதயத்திற்கு பல தீங்கு ஏற்படும். எனவே இம்மாத்திரையை டாக்டரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும். தற்போது "ஸ்பிரே' வடிவிலும் கிடைக்கிறது.



மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 05, 2009 8:19 pm

எனக்கு இரு ஆண்டுகளுக்கு முன் "ஆஞ்சியோ கிராம்' பரிசோதனை செய்து பார்த்ததில் சில இடங்களில் லேசான அடைப்பு இருப்பதால் பலூன் சிகிச்சையோ, பைபாஸ் சர்ஜரி சிகிச்சையோ தேவையில்லை என டாக்டர் தெரிவித்தார். தற்போது மீண்டும் நெஞ்சுவலி ஏற்படுகிறது. நான் மீண்டும் ஆஞ்சியோ கிராம் பரிசோதனையை எடுக்க முடியுமா?



ஆஞ்சியோ கிராம் என்பது இருதயத்தில் உள்ள ரத்தநாளங்களில் அடைப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறியும் முறை. இதில் கால் அல்லது கைகளில் உள்ள ரத்தநாளம் மூலம் நீண்ட குழாயை செலுத்தி, இருதயத்தில் உள்ள ரத்தநாளங்களில் மருந்து செலுத்தி, வெவ்வேறு கோணங்களில் படம் பிடிக்கும் முறை. இதில் அடைப்பு எந்த இடத்தில், எத்தனை சதவீதம் உள்ளது என கண்டறியலாம். இப்பரிசோதனை முடிவை வைத்து மருந்து மாத்திரை அல்லது பலூன் சிகிச்சை அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆஞ்சியோ கிராம் என்பது இ.சி.ஜி., போல ஒரு பரிசோதனையே. இதனை எத்தனை முறையும் எடுக்கலாம். ஒருமுறை ஆஞ்சியோ பரிசோதனை செய்தால், அது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்



மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 05, 2009 8:20 pm

எனக்கு 38 வயதாகிறது. மாரடைப்பு வந்து ஆஞ்சியோ பலூன் சிகிச்சை செய்து ஐந்து மாதங்களாகிறது. இருந்தாலும் அவ்வப்போது நெஞ்சு, முதுகு, இடதுகை பகுதிகளில் வலி ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்?

ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை என்பது இருதயத்தின் ரத்தநாள அடைப்பை பலூன் மூலம் விரிவடையச் செய்து அதற்கு மேல் "ஸ்பிரிங்' (ஸ்டென்ட்) பொருத்தும் சிகிச்சை முறை. ஆஞ்சியோ பிளாஸ்டி செய்தவருக்கு செய்த இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ திரும்பவும் அடைப்பு ஏற்படும் தன்மை உள்ளது. எனவே நீங்கள் டிரெட்மில் பரிசோதனை செய்வது நல்லது. இம்முடிவு நார்மல் என்று வந்தால் இந்த வலி தசைவலியாக இருக்கக் கூடும். உங்கள் டாக்டரிடம் சென்று அதற்கேற்ப சிகிச்சை பெறலாம்.



மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 03, 2010 6:16 pm

எனக்கு பத்து ஆண்டுகளுக்கு முன், பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. தற்போது எனது கொலஸ்ட்ரால் அளவு LDL 86 mgs, HDL அளவு 25 mgs என வந்துள்ளது. இது சரிதானா?

சர்ஜரி செய்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும், உங்கள் வாழ்க்கை முறையை சரியாக பார்த்துக் கொள்வது மிக முக்கியம். உணவில் எண்ணெயை தவிர்ப்பது, மனநிம்மதி, தினமும் வாக்கிங், ஒரு வேளைகூட தவறாமல் மருந்து உட்கொள்வது, ஆறு மாதத்திற்கு ஒருமுறை இருதய டாக்டரை சந்திப்பது அவசியம்.

உங்கள் கொலஸ்ட்ரால் அளவை பொருத்தவரை, LDLஎனும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு சரியாக உள்ளது. HDLஎனும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு மிக குறைவாக உள்ளதால், அதை அதிகரிக்க முயற்சி செய்வது அவசியம். தினமும் "வாக்கிங்' செல்ல வேண்டும்.

Niacin என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டால், நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கலாம். Statin வகை மாத்திரையில், Atorva statin என்ற மாத்திரை எடுத்துக்கொண்டால், அதை நிறுத்திவிட்டு, அதற்கு பதில் Rosuva statin என்ற மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.



மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 03, 2010 6:23 pm

எனக்கு பல ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. பாதங்களில் எரிச்சல், வலி ஏற்படுகிறது. இதற்கு ஏதும் சிகிச்சை உள்ளதா?

சர்க்கரை நோய் உடலின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் தன்மை உடையது. நீங்கள் குறிப்பிடும் பிரச்னையை, 'Diabetic Poly Neuro pathy என கூறலாம். இதற்கு சில நவீன மருந்துகள் வந்துள்ளன.

இவை, எரிச்சலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தன்மை உடையவை. இதுதவிர, சில களிம்புகள் கிடைக்கிறது. அதையும் உபயோகித்தால் ஓரளவு பலன் கிடைக்கும்.

இதனால் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே தவிர, முழுமையாக குணப்படுத்த முடியாது. இந்த பாதிப்பு மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது



மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக