புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்க்க வழிகள் இருக்கு!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்க்க வழிகள் இருக்கு!
எஸ்.ஆர்.சோலை ராகவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், அணைகள், ஏரிகள், குளங்கள் என, அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தண்ணீரை சேமித்து வைக்க வசதி இல்லாததால், பல பகுதிகளில் தண்ணீர் வீணாகிறது. அதுமட்டுமின்றி, குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
அதுவும் அப்புறப்படுத்த முடியாமல் வீணாகிறது. எனவே, ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் தண்ணீர் எந்தெந்த பகுதிகளில் தேங்கி நிற்கிறது; அது, அப்புறப்படுத்த முடியாத நிலையில், நீண்ட நாட்களாக நிற்கிறதா என்பதை கண்டறிந்து, குறிப்பிட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைக்கலாம். தண்ணீர் தேங்கி, அப்புறப்படுத்த முடியாத நிலை உள்ள பகுதிகளில், தண்ணீர் தேங்கி நிற்கும் போதே, குறிப்பிட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு தோண்ட ஆரம்பிக்க வேண்டும். இதனால், தேங்கி நிற்கும் தண்ணீர், பூமிக்குள் செல்லும்.
சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு செல்லும். இந்த ஆழ்துளை கிணறுகள் குறைந்தபட்சம், 30 அடியிலிருந்து, 500 அடி வரை இருக்கலாம். இது, அமைக்கப்பட்ட பின், ஆழ்துளை கிணற்றில், எந்த உயிரினமும் விழுந்து விடாதபடி, பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும். தண்ணீர் மட்டும் கிணறுக்கு செல்லும் வகையில், வழி செய்து வைக்க வேண்டும்.தமிழகம் முழுவதும், ஆழ்துளை கிணறுகளை அமைக்கலாம்.
இந்த அமைப்பில் தேவைப்பட்டால், அடி பம்ப் வைத்தும், தண்ணீர் இறைத்துக் கொள்ள வசதிகள் செய்யலாம்.இப்போதிருந்தே, கடலில் மழைநீர் வீணாவதை தடுக்க, தடுப்பு அணைகள் கட்டி, தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். இதனால், நிரந்தரமாக தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும்!
தொடரும்....
எஸ்.ஆர்.சோலை ராகவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், அணைகள், ஏரிகள், குளங்கள் என, அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தண்ணீரை சேமித்து வைக்க வசதி இல்லாததால், பல பகுதிகளில் தண்ணீர் வீணாகிறது. அதுமட்டுமின்றி, குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
அதுவும் அப்புறப்படுத்த முடியாமல் வீணாகிறது. எனவே, ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் தண்ணீர் எந்தெந்த பகுதிகளில் தேங்கி நிற்கிறது; அது, அப்புறப்படுத்த முடியாத நிலையில், நீண்ட நாட்களாக நிற்கிறதா என்பதை கண்டறிந்து, குறிப்பிட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைக்கலாம். தண்ணீர் தேங்கி, அப்புறப்படுத்த முடியாத நிலை உள்ள பகுதிகளில், தண்ணீர் தேங்கி நிற்கும் போதே, குறிப்பிட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு தோண்ட ஆரம்பிக்க வேண்டும். இதனால், தேங்கி நிற்கும் தண்ணீர், பூமிக்குள் செல்லும்.
சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு செல்லும். இந்த ஆழ்துளை கிணறுகள் குறைந்தபட்சம், 30 அடியிலிருந்து, 500 அடி வரை இருக்கலாம். இது, அமைக்கப்பட்ட பின், ஆழ்துளை கிணற்றில், எந்த உயிரினமும் விழுந்து விடாதபடி, பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும். தண்ணீர் மட்டும் கிணறுக்கு செல்லும் வகையில், வழி செய்து வைக்க வேண்டும்.தமிழகம் முழுவதும், ஆழ்துளை கிணறுகளை அமைக்கலாம்.
இந்த அமைப்பில் தேவைப்பட்டால், அடி பம்ப் வைத்தும், தண்ணீர் இறைத்துக் கொள்ள வசதிகள் செய்யலாம்.இப்போதிருந்தே, கடலில் மழைநீர் வீணாவதை தடுக்க, தடுப்பு அணைகள் கட்டி, தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். இதனால், நிரந்தரமாக தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும்!
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது தானே இப்போதுள்ள நடைமுறை!
பி.ஸ்ரீபாதராஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தனியார் நிறுவனம், 20 மாநிலங்களில் மேற்கொண்ட ஆய்வு பற்றியும், அதன் முடிவுகளையும், பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன.
அதன்படி, லஞ்சம் பெறுவதில், ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்திலும், பீஹார் இரண்டாவது இடத்திலும், உத்தரபிரதேசம் மூன்றாவது இடத்திலும், தமிழகம் ஆறாவது இடத்திலும் உள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது; இது, சற்றே ஆறுதல் அளிக்கிறது. அடுத்த ஆண்டு, தமிழகம் முதலிடத்திற்கு வந்தாலும், ஆச்சரியப்படுவதிற்கில்லை.தமிழகத்தை பொறுத்தவரை, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பொதுமக்களில், 62 சதவீதத்தினர், தங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவு பெற, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனராம்.
கடந்த ஆண்டை விட, 10 சதவீதம் அதிகரித்து, தற்போது, 62 சதவீதமாக, லஞ்சம் அதிகரித்துள்ளது என, அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இன்னொரு அதிர்ச்சியான தகவல், லஞ்சம் கொடுத்த, 62 சதவீதத்தினரில், 35 சதவீத மக்கள் பல முறை லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறுகின்றனர்; 27 சதவீதம் சதவீதத்தினர், ஓரிரு சமயங்களில் மட்டுமே, லஞ்சம் கொடுத்ததாக தெரிவிக்கின்றனர் என, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கைப்படி, லஞ்சம் பெறுவதில், முதலிடத்தில் பத்திரப் பதிவு துறை, இரண்டாவது இடத்தில் உள்ளாட்சி அமைப்புகள், மூன்றாவது இடத்தில் காவல் துறை, அதற்கடுத்து விற்பனை வரி, போக்குவரத்து, மின்சாரத் துறையும் உள்ளன.இப்பொழுதெல்லாம், லஞ்சம் வாங்குவதை பல அதிகாரிகள் அவமானமாகவே கருதுவதில்லை. அது, அவர்களது தினசரி அலுவலக பணிகளில் ஓர் அங்கமாகி விட்டது.
எவ்வளவோ, திறமையான, நேர்மையான, பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகள் இருந்தாலும், அவர்களால் சுதந்திரமாக, சுயமாக செயல்பட முடிவதில்லை. நேர்மையாக செயல்பட முற்பட்டால், அரசியல் குறுக்கீடு அல்லது அச்சுறுத்தல் அல்லது 'டம்மி' இலாகாவுக்கு பணிமாற்றம் செய்யப்படுகின்றனர். இது தானே, இப்போது உள்ள நடைமுறை!
தொடரும்...
பி.ஸ்ரீபாதராஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தனியார் நிறுவனம், 20 மாநிலங்களில் மேற்கொண்ட ஆய்வு பற்றியும், அதன் முடிவுகளையும், பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன.
அதன்படி, லஞ்சம் பெறுவதில், ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்திலும், பீஹார் இரண்டாவது இடத்திலும், உத்தரபிரதேசம் மூன்றாவது இடத்திலும், தமிழகம் ஆறாவது இடத்திலும் உள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது; இது, சற்றே ஆறுதல் அளிக்கிறது. அடுத்த ஆண்டு, தமிழகம் முதலிடத்திற்கு வந்தாலும், ஆச்சரியப்படுவதிற்கில்லை.தமிழகத்தை பொறுத்தவரை, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பொதுமக்களில், 62 சதவீதத்தினர், தங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவு பெற, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனராம்.
கடந்த ஆண்டை விட, 10 சதவீதம் அதிகரித்து, தற்போது, 62 சதவீதமாக, லஞ்சம் அதிகரித்துள்ளது என, அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இன்னொரு அதிர்ச்சியான தகவல், லஞ்சம் கொடுத்த, 62 சதவீதத்தினரில், 35 சதவீத மக்கள் பல முறை லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறுகின்றனர்; 27 சதவீதம் சதவீதத்தினர், ஓரிரு சமயங்களில் மட்டுமே, லஞ்சம் கொடுத்ததாக தெரிவிக்கின்றனர் என, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கைப்படி, லஞ்சம் பெறுவதில், முதலிடத்தில் பத்திரப் பதிவு துறை, இரண்டாவது இடத்தில் உள்ளாட்சி அமைப்புகள், மூன்றாவது இடத்தில் காவல் துறை, அதற்கடுத்து விற்பனை வரி, போக்குவரத்து, மின்சாரத் துறையும் உள்ளன.இப்பொழுதெல்லாம், லஞ்சம் வாங்குவதை பல அதிகாரிகள் அவமானமாகவே கருதுவதில்லை. அது, அவர்களது தினசரி அலுவலக பணிகளில் ஓர் அங்கமாகி விட்டது.
எவ்வளவோ, திறமையான, நேர்மையான, பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகள் இருந்தாலும், அவர்களால் சுதந்திரமாக, சுயமாக செயல்பட முடிவதில்லை. நேர்மையாக செயல்பட முற்பட்டால், அரசியல் குறுக்கீடு அல்லது அச்சுறுத்தல் அல்லது 'டம்மி' இலாகாவுக்கு பணிமாற்றம் செய்யப்படுகின்றனர். இது தானே, இப்போது உள்ள நடைமுறை!
தொடரும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரசின் திட்டங்கள் வெற்றி பெற...!
பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பல அரசு பள்ளிகளில், ஆசிரியர்களே அமைச்சுப் பணியாளர்களாக, அலுவலக உதவியாளர்களாக, தட்டச்சர்களாக, 'அவதாரங்கள்' எடுத்து, பணியாற்றி வருவது, அரசுக்கு தெரியாதது அல்ல. அலுவலக பணியிலிருந்து, கருவூலப் பணி வரையும், தேர்தல் பணி தொடங்கி கணக்கெடுப்பு பணிகள் வரையும், ஆசிரியர்களை அரசு பயன்படுத்துகிறது. இதனால், கற்பித்தல் பணியை, அவர்களால் முழுமையாக செய்ய முடிவதில்லை.
பல அரசு உயர்நிலைப் பள்ளிகளில், இளநிலை உதவியாளர் முதல், இரவுக் காவலர் வரை, பணியிடங்கள், இன்று வரை உருவாக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, யோகா, கராத்தே கற்றுக் கொடுப்பது அவசியம். ஆனால், அதை கற்றுக் கொடுக்கக்கூடிய அளவிற்கு, பள்ளிகளில் போதிய பணியாளர்கள் இல்லை. அரசு பள்ளிகளில், கல்வி தரத்தை மேம்படுத்த, புதிய திட்டங்களை, தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது; இது வரவேற்கக்கூடியது. ஆனால், இந்த திட்டங்களை, களத்தில் முழுமையாக அமல்படுத்தக் கூடிய அளவில் பணியாளர்கள் எண்ணிக்கை, அரசு பள்ளிகளில் உள்ளதா என, தெரியாது.
எத்தனை அரசு பள்ளிகளில், குடிநீர் வசதிகள் முழுமையாக உள்ளன. எத்தனை பள்ளிகளில், சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், மாணவர்களுக்கு வழங்க முடியும்... இவற்றை முழுமையான ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகளை உருவாக்குவதில், அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். கல்வி மேம்பட வேண்டுமென, தமிழக அரசு நினைத்தால், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர்த்து, இதர பணிகள் வழங்க கூடாது.
ஆசிரியரல்லாத பல்வேறு பணிகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், இரவுக் காவலர், துப்புரவு பணியாளர் காலியாக உள்ள, 6,000 பணியிடங்களை நிரப்ப அரசு முடிவெடுத்துள்ளது; இதுவும், பாராட்டுக்குரியது. அனைத்து பள்ளிகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்கி, அவற்றை உடனடியாக நிரப்பினால் மட்டுமே, ஆசிரியர்களால் கற்பித்தல் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியும். ஆசிரியர்கள் மன நிம்மதியுடன், ஆர்வத்தோடு, கற்பித்தல் பணியில் ஈடுபட்டால் மட்டுமே, அரசின் திட்டங்கள் வெற்றி பெறும்!
நன்றி தினமலர்
பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பல அரசு பள்ளிகளில், ஆசிரியர்களே அமைச்சுப் பணியாளர்களாக, அலுவலக உதவியாளர்களாக, தட்டச்சர்களாக, 'அவதாரங்கள்' எடுத்து, பணியாற்றி வருவது, அரசுக்கு தெரியாதது அல்ல. அலுவலக பணியிலிருந்து, கருவூலப் பணி வரையும், தேர்தல் பணி தொடங்கி கணக்கெடுப்பு பணிகள் வரையும், ஆசிரியர்களை அரசு பயன்படுத்துகிறது. இதனால், கற்பித்தல் பணியை, அவர்களால் முழுமையாக செய்ய முடிவதில்லை.
பல அரசு உயர்நிலைப் பள்ளிகளில், இளநிலை உதவியாளர் முதல், இரவுக் காவலர் வரை, பணியிடங்கள், இன்று வரை உருவாக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, யோகா, கராத்தே கற்றுக் கொடுப்பது அவசியம். ஆனால், அதை கற்றுக் கொடுக்கக்கூடிய அளவிற்கு, பள்ளிகளில் போதிய பணியாளர்கள் இல்லை. அரசு பள்ளிகளில், கல்வி தரத்தை மேம்படுத்த, புதிய திட்டங்களை, தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது; இது வரவேற்கக்கூடியது. ஆனால், இந்த திட்டங்களை, களத்தில் முழுமையாக அமல்படுத்தக் கூடிய அளவில் பணியாளர்கள் எண்ணிக்கை, அரசு பள்ளிகளில் உள்ளதா என, தெரியாது.
எத்தனை அரசு பள்ளிகளில், குடிநீர் வசதிகள் முழுமையாக உள்ளன. எத்தனை பள்ளிகளில், சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், மாணவர்களுக்கு வழங்க முடியும்... இவற்றை முழுமையான ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகளை உருவாக்குவதில், அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். கல்வி மேம்பட வேண்டுமென, தமிழக அரசு நினைத்தால், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர்த்து, இதர பணிகள் வழங்க கூடாது.
ஆசிரியரல்லாத பல்வேறு பணிகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், இரவுக் காவலர், துப்புரவு பணியாளர் காலியாக உள்ள, 6,000 பணியிடங்களை நிரப்ப அரசு முடிவெடுத்துள்ளது; இதுவும், பாராட்டுக்குரியது. அனைத்து பள்ளிகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்கி, அவற்றை உடனடியாக நிரப்பினால் மட்டுமே, ஆசிரியர்களால் கற்பித்தல் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியும். ஆசிரியர்கள் மன நிம்மதியுடன், ஆர்வத்தோடு, கற்பித்தல் பணியில் ஈடுபட்டால் மட்டுமே, அரசின் திட்டங்கள் வெற்றி பெறும்!
நன்றி தினமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|