புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
100 Posts - 49%
heezulia
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
7 Posts - 3%
prajai
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 1%
Barushree
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 1%
cordiac
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
227 Posts - 52%
heezulia
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
18 Posts - 4%
prajai
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 0%
Barushree
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_m10 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 9:00 pm

படம்- சங்கமம்
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடல் :வைரமுத்து
குரல்கள் : ஜானகி - உன்னிகிருஷ்ணன்
வருடம் :  1999

------------------------
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Capture

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

( மார்கழி திங்கள்...

இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

( மார்கழி திங்கள்

சூடித் தந்த சுடர்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆ...ஆ... ஆ...காதல் ஜோதி கலையும் ஜோதி…ஆ..ஆ..ஆ…
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா….

( மார்கழி திங்கள்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 9:02 pm

இசை : இளையராஜா
பாடல் : கவிஞர் வாலி
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜானகி
வருடம் : 1986

படம்- மெல்லத் திறந்தது கதவு
--
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Maxresdefault
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்... மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடித்தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 9:02 pm

இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடல் : வைரமுத்து
குரல்கள் : உன்னிமேனன் - ஜானகி
வருடம் : 1999

படம்- ஜோடி
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு 189d9-jodi

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனாமையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

( காதல் கடிதம்...

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எதன் உயிரல்லோ...
பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கிறேன்

( காதல் கடிதம்...

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா

( காதல் கடிதம்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 9:04 pm

படம்- எஜமான்
இசை : இளையராஜா
பாடல் : கவிஞர் வாலி
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜானகி
வருடம் : 1993
-

---------------------
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு 58468472_276684713272770_3608196917113915253_n.jpg?_nc_ht=scontent-lga3-1.cdninstagram
நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

( நிலவே முகங்காட்டு...

பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா

நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின் நீரென்றால்
தினம் குடிப்பவன் நானே

மாலையோடு நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா

மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே

இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 9:05 pm


படம்- கன்னத்தில் முத்தமிட்டால்
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடல் : வைரமுத்து
குரல்கள் : சின்மயி
வருடம் : 2000

-
------------------
 திரைப்பாடல் வரிகள் - தொடர்பதிவு Maxresdefault

ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
வானம் முடியும் இடம் நீதானே
காற்றைப்போல நீ வந்தாயே
சுவாசமாகி நீ நின்றாயே
மார்பில் ஊரும் உயிரே


( ஒரு தெய்வம் தந்த...

எனது சொந்தம் நீ எனது பகையும் நீ
காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ
பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ
மரணம் ஈன்ற ஜனனம் நீ....

( ஒரு தெய்வம் தந்த...

எனது செல்வம் நீ எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவின் கண்ணீர் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவின் கண்ணீர் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ....

( ஒரு தெய்வம் தந்த...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 9:06 pm


படம்- வசீகரா
இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்
பாடல் :
குரல்கள் : ஹரிஹரன் - சின்மயி
வருடம் : 2002

-----------------

ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்த்தாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூடி உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும் காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே

( ஒரு தடவை...

நெருங்க நினைக்கும் நினைவை மறக்க
நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம் வேரை என்ன செய்வாய்
தரையை உடைத்து முளைக்கும் போது அன்பே எங்கு செல்வாய்
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம்
மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்

( ஒரு தடவை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 9:08 pm


படம்- அன்பே சிவம்
இசை : வித்யாசாகர்
பாடல் : வைரமுத்து
குரல்கள் : விஜய் பிரகாஷ் - சாதனா சர்கம்
வருடம் : 2002

---------------------

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல்சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

( பூவாசம் புறப்படும்...

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்
என் நெஞ்சத்தின் நிறம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...

( பூவாசம் புறப்படும்...

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞம் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா...

( பூவாசம் புறப்படும்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 9:09 pm

படம்- ரன்
இசை : வித்யாசாகர்
பாடல் : அறிவுமதி
குரல்கள் : ஹரிஹரன் - சாதனா சர்கம்
வருடம் : 2002

-
----------------------
பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

( பொய் சொல்லக்கூடாது…

அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத் தோண்டி பதியம் போட்டுக் கொண்டேன்
கண்டவுடன் எனையே தின்றதடி விழியே
என்னைவிட்டுத் தனியே சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழிச்சுடரே
நட்சத்திரப் பயிரே
ரெக்கை கட்டி வா நிலவே

பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

( பொய் சொல்லக்கூடாது…

ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணே
நீ ஒற்றைத் துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டேன் அழகே
நெற்றிமுடி வழியே தப்பிவந்தேன் வெளியே
அடி பொத்திவைத்த புயலே
தத்தளிக்கும் திமிரே
வெட்கம் விட்டு வா நிலவே

நில் என்று கண்டித்தாய்
உள் சென்று தண்டித்தாய்
சொல் என்று கெஞ்சத்தான்
சொல்லாமல் வஞ்சித்தாய்

( பொய் சொல்லக்கூடாது…


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 9:10 pm


படம்- அழகி
இசை : இளையராஜா
பாடல் : பழனிபாரதி
குரல்கள் : சாதனா சர்கம்
வருடம் : 2001

--------------------

பாட்டுச் சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டுக் கொள்ள கிட்டவந்து மங்களம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டிவந்த ரெட்டைக் குழந்தையடி..
சந்தனத்து சிந்து ஒன்று கட்டிக் கொண்டு மெட்டொன்று தந்ததடி....

( பாட்டுச் சொல்லி...

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யாரறிவார்...
வாழ்க்கை செல்லும் பாதைதனை யாருரைப்பார்
இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒளி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை

( பாட்டுச் சொல்லி...

புதிய இசைக் கதவு இன்று திறந்ததம்மா
செவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வமதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தியதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம்பருவம் அது எண்ண எண்ண மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கைப்பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை

( பாட்டுச் சொல்லி...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 9:11 pm

படம்- கண்ட நாள்முதல்
இசை : யுவன்ஷங்கர் ராஜா பாடல் :
குரல்கள் : சங்கர் மகாதேவன் - சாதனா சர்கம்
வருடம் : 2005
-

--------------------------

மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக் காலம்
கடும் பனி வாடைக் காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே
ஓ மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ
மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே

ஓ கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம்
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா
இனி எதிரிகள் என்று எவரும் இல்லை
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே...
இது நீரின் தோளில் கைப்போடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவை இல்லையே

( மேற்கே மேற்கே மேற்கே...

வாசல் கதவை யாரோ தட்டும் ஓசைக் கேட்டால்
நீதான் என்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ...
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமா

( மேற்கே மேற்கே மேற்கே...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக