புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
40 Posts - 63%
heezulia
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
2 Posts - 3%
viyasan
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
232 Posts - 42%
heezulia
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
21 Posts - 4%
prajai
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_m10மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை}


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 7:34 am

மாடனும் கணேசனும்…{நகைச்சுவை கதை} Sm6
-
காவல்துறை புகார் மையத்திற்கு ஒரு தொலைப்பேசி
அழைப்பு வருகிறது.

"ஐயா... எங்கள் முன்னாடி கணேசன் சங்கிலியை
அறுத்துக் கிட்டு ஓடிட்டாங்கய்யா!''

"நீங்க யாரு? எங்கிருந்து பேசறீங்க?....
"கணேசன்' ங்கறது யாரு?''

"ஐயா.... எம்பேரு மாடனுங்க,..... மயிலாப்பூர் மாட வீதியிலேந்து
பேசறேங்க!''

" பொறுமையா, பதறாம நடந்ததைச் சொல்லுங்க! என்ன
நடந்தது? எப்படி நடந்தது? எங்க நடந்தது?''

மாடன் போனில், "ஐயா... மயிலாப்பூர் கோயில் திருவிழா நடந்து
கிட்டிருக்கு. நானும் எம்பையனும் திருவிழாவுக்கு வந்தோம்.
நாலு காசு கிடைக்கும்னு காத்துக் கிடந்தோம்.

சரியான கூட்டமுங்கோ, அலை அலையா... தாரைத் தப்பட்டை,
மேளம், பேண்டு வாத் திய வாத்தியம் வாத்தியம்னு ஜோரா
காது ஜவ்வு கிழியறாப் போல வாசிக்கிட்டு இருக்காங்க. அப்ப
எவனோ ஒரு வெடியக் கொளுத்திப் போட்டானுங்க!

ஜனங்க பயந்து போய் ஓட ஆரம்பிச்சாங்க! அந்தச் சமயம் பார்த்து,
கணேசன் செயினை அறுத்து கிட்டு ஓடிட்டானுங்க. ரொம்ப
நீளமானச் செயினுங்க. தடியா, ஸ்ட்ராங்கா வேற இருக்குமுங்க......
நல்ல எடை வேறேங்க!.... சங்கலியை அறுத்துக்கிட்டு
ஓடிப்புட்டாங்க! பதட்டமாப் போச்சுங்க!...''

"அது எப்படிய்யா செயினை அறுத்தவனோட பெயரை ஒன்னால
சரியாச் சொல்ல முடியுது? அவனை உனக்குத் தெரியுமா?....
ரெண்டு பேரும் கூட்டுக் களவானிகளா? அவனை மாட்டி விட்டுட்டு,
நீ தப்பிச்சுக்கலாம்னு பாக்குறயா?

"ஐயா, கணேசனை இந்த ஏரியாவில் தெரியாத ஆளுங்களே
கிடையாது. நாலு பேரு கூட ற இடத்துல அவன் கண்டிப்பா,
ஆஜராயிடுவானுங்க! கூட்டம் கூடினா அவனுக்கு லாட்டரி
அடிச்சாப் போல! அப்பத் தான் அவனுக்கு
எக்கச்சக்க கலெக்ஷன் கிடைக்கும்.''

"அப்ப கணேசனை ஒனக்கு நல்லாத் தெரியுங்கற! உன்னாலே
கணேசைப் புடிச்சுக்குடுக்க முடியும்னு சொல்லு! அவனைப்
புடிச்சுக் குடுத்தா உனக்குப் பதக்கம் கிடைக்க வழி பண்றேன்.
அந்த ஏரியாவுல "செயின் ஸ்நாச்சிங்' நாளுக்கு நாள்
அதிகமாயிட்டேப் போவுது. போலிசுக்கே தண்ணி காட்றாங்க
அவனுங்க!...''

"கண்டிப்பா உதவறேனுங்க...''

"அப்ப ஒன்னு பண்ணு, உடனே கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்குப்
போய் அதிகாரியைப் பாரு. இப்ப நீ மயிலாப்பூர் போலீஸ்
ஸ்டேஷன் பக்கத்துலதானே நிக்கற?

நானும் வயர்லெசுல அவங்களுக்கு விவரத்தைச் சொல்லிடறேன்!.
அங்க அவங்க தயாரா இருப்பாங்க.. கணேசனை சீக்கிரம்
பிடிச்சிடலாம்! சரி.. அவன் செயினை மொத்தமா அறுத்துகிட்டு
ஓடிட்டானா? இல்ல மிச்சம் மீதி துண்டு ஏதாச்சும் வெச்சுட்டுப்
போயிருக்கானா''

"ஐயா,... சரியாச் சொன்னீங்க!...... ஆமாங்க,.... அறுந்த செயின்ல
ஒரு துண்டு தெருவுல விழுந்து கிடக்குங்க! எடுத்து
வெச்சிருக்கேன்!''

"அப்ப அதைப் பாதுகாப்பா எடுத்து வெச்சுக்க!..... நாங்க வந்து
அதை வாங்கிக்கறோம்!..... அந்த திருடனோட கைரேகை
அதிலே பதிஞ்சிருக்கும்!.... அதை வெச்சுக் கண்டுபிடிச்சிடலாம்!''

"சரிங்கய்யா, நீங்கச் சொல்றபடியே செஞ்சுடரேனுங்க!...''

"அது சரி ... செயினோட சொந்தக்காரர் அங்கே இருக்காரா?....
இருந்தாருன்னா, நாங்க வரும் வரை அங்கயே நிக்கச் சொல்லு.''

"அந்தச் செயினோடச் சொந்தக்காரனே நான்தாங்க!''

"அப்ப நீ ஸ்டேஷனுக்கு வரும்போது, கையோட,
ஒரு புகாரை எழுதிக் கொடுத்துடு, மறக்காம!..''

"சரிங்க, அப்படியே பண்ணிடறேன்!''

மாடன் தாமதிக்காமல் அருகில் உள்ள மயிலாப்பூர் காவல்
நிலையத்திற்குச் செல்கிறார். காவல் துறை அதிகாரி மாடனைப்
பார்த்து,...."நீங்கதான் சங்கிலியை அறுத்துக்கிட்டு ஓடிட்டான்னு
போன் செஞசீங்களா? நீங்க செயினை அறுத்து கிட்டு
ஓடினவனை நேர்ல பாத்தீங்களா? தேவைப்பட்டா, சாட்சி சொல்ல,
கோர்ட்டுக்கு வருவீங்களா?''

"கண்டிப்பா வர்றேனுங்க!''
---------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2019 7:34 am




"அப்ப எங்க கூட ஜீப்புல ஏறுங்க. உடனே ஸ்பாட்டுக்குப் போய்,
பக்கத்துல ஏதாவது சி.சி.டி.வி யில் துப்பு கிடைக்குமான்னு
பார்க்கலாம்.''

ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள் மற்றும்
மாடன் எல்லோரும் புறப்படுகிறார்கள் !

போலீஸ் ஜீப் வேகமாக ஓடிக் கொண்டிருக்கையில் "ஓடுங்க,
ஓடுங்க" என்று கூப்பாடு போட்டுக் கொண்டே ஒரு கூட்டம்
ஆரவாரத்துடன் குறுக்கே நுழைந்தது. எல்லோரும் தாறுமாறாக
ஓடிக் கொண்டிருந்தனர். போலீஸ் ஜீப் பிரேக் போட்டு நின்றது.
இன்ஸ்பெக்டர் தலையை வெளியே நீட்டி....

"என்னப்பா, என்ன நடக்குது இங்க? ஏன் எல்லோரும் ஓடறீங்க?''
என்று கூட்டத்தில் ஒருவனை பார்த்துக் கேட்டார்.

"சார்... கணேசன் அறுத்த செயினோட, முரட்டுத் தனமா ஓடி
வர்றான். ரொம்ப கோவமா வேற இருக்கான் சார்!....வாட்ட
சாட்டமானவன் சார்!....மிதிச்சே கொன்னுடுவான் சார்!...''

இன்ஸ்பெக்டர் தலையைச் சொறிந்துகொண்டே, "கணேசன்
அவ்வளவு பெரிய ரவுடியா? போலீஸுக்கு எப்படி இவ்வளவு
நாட்களாக அவனைப் பத்தி தெரியமாப் போச்சு! திருடனுங்க
போட்டோவெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் ல ரெடியா இருக்கு.
ஆனால் கணேசன்ற போல எந்த அக்யூஸ்டும் இல்லையே!

யாரும்போலிஸ்காரங்களுக்கு தகவல் சொன்னா மாதிரி
தெரியலியே! விடக் கூடாது!..... ஒரே அமுக்கா அமுக்கிட
வேண்டியதுதான்! துப்பாக்கியை எடுத்து வைத்துக் கொண்டார்''

அதே சமயம் போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு தூரத்திலிருந்து ஒரு
விநோத ஒலி கேட்டது. பொதுவாக சென்னை போன்ற பெரு
நகரங்களில் அது போன்ற ஒலியை அவர் கேட்டதேயில்லை.
கூர்ந்து கவனித்தார். தூரத்திலிருந்து ஒரு யானை தன்னுடைய
தும்பிக்கையை வேகமாகச் சுழற்றியப்படியே பிளிரிக் கொண்டு,
குறுக்கே நின்று கொண்டிருந்த வண்டிகளையெல்லாம் புரட்டிப்
போட்டுக் கொண்டே வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தது.

யானையைக் கண்டவுடன் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டிருந்த
மாடன், "சார்... சார்... அவன் தான், நான் சொன்ன கணேசன்!''

இன்ஸ்பெக்டர் மாடன் காட்டிய திசையைப் பார்த்தார்.
அவருக்கு ஒரு யானை கண்களில் பட்டது!

மாடன் இன்ஸ்பெக்டரிடம், "பட்டாசு வெடிச்சத்தத்துல ரொம்ப
பயந்து போயிருக்கான் சார். அவனோட காலைப் பாருங்க சார்...
அறுந்த செயின்ல பாதி இன்னும் தொங்கிட்டிருக்கு. நீங்க
சொன்னபடியே மீதி செயினை மயிலாப்பூர் மாடவீதி ஓரமாக
ஒரு கோணிப்பையில் போட்டு பாதுகாப்பாக வச்சிருக்கேன்
சார். என்னைப் பார்த்துவிட்டால் பெட்டி பாம்பா அடங்கி
ஒடுங்கிடுவான் சார்!'' என்றான்.

இன்ஸ்பெக்டருக்கு தலை சுற்றியது.

"இவ்வளவு நேரமாக நீ கணேசன்.....கணேசன்னு சொன்னது
இந்த யானையைத் தானா?''

"ஆமாம் சார்... நான் ஒரு யானைப்பாகன் சார்!....சின்ன
வயசுலேந்து என் பிள்ளை மாதிரி வளர்க்குறேங்க. கணேசனுக்கு
அறிவு அதிகம் சார். கூட்டத்தைப் பார்த்து ரொம்ப மிரண்டு
போயிருக்கான் சார். இவன் செஞ்ச கலாட்டாவுல எனக்கு
மூணு மணி நேரம் கலெக்ஷன் பூடுச்சு சார்!''

இன்ஸ்பெக்டர் கைத்துப்பாக்கியை கோபத்துடன் உறையுள்
தள்ளினார்.

"தங்கச் செயினைத்தான் அறுத்துக்கிட்டு ஓடிட்டான்....
அவனை எனக்கு நன்றாகத் தெரியும். புடிச்சுத் தர்றேன்னு
இவன் சொன்னதை நம்பி வந்தா, கடைசியில் இரும்புச் செயினு...
அதையும் அறுத்துகிட்டு ஓடினது ஒரு யானை!.... ச்சே...
ஒரே நிமிஷத்துல போலீசை நல்லா ஏமாத்திட்டான்...''

கோபத்துடன்மாடனைப் பார்த்து,... "வேலைங்களை வுட்டு
போட்டு ஓம்பின்னாடி இப்படி சுத்தினா, இப்படித்தான் எங்களை
முட்டாளாக்கி விடுறதா? இதுக்கு என்ன தண்டனை
கிடைக்குமுன்னு உனக்குத் தெரியுமா?''

"ஐயா, மன்னிச்சுடுங்கய்யா! கணேசன் என் பிள்ளை மாதிரி!
அவன் இல்லாம என்னாலே ஒரு நாள் கூட இருக்கமுடியாதுங்க
ஐயா! அவனை எப்படியாவது கண்டுபிடிசுக் குடுப்பீங்கன்னுதான்
உங்க கிட்டே வந்தேன்!'' என்றான் மாடன் அப்பாவியாய்!''
-
------------------------------
By -சூடாமணி சடகோபன் |
சிறுவர் மணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2019 9:19 pm

நல்ல கதை புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக