புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_m10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_m10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_m10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_m10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_m10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_m10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_m10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_m10பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 22, 2019 10:09 am

பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் Saaho_poster1xx
-
பிராந்திய, தேச எல்லையைத் தாண்டி சர்வதேச சந்தையைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இன்னொரு பிரம்மாண்ட திரைப்படம் இது. ஆனால், ஒரு மோசமான வீடியோ கேமின் இடையே சிக்கிக் கொண்ட உணர்வைத் தரும் இந்தத் திரைப்படத்தை 350 கோடியில் உருவான குப்பை எனலாம்.

பணத்தை வாரி இறைப்பதினால் மட்டுமே ஒரு நல்ல திரைப்படம் உருவாகி விடாது. அழுத்தமான கதையும் சுவாரசியமான திரைக்கதையும்தான் எந்நாளும் ராஜா என்கிற அதிமுக்கியமான விஷயத்தை இந்த மோசமான ஆக்கமும் உறுதி செய்கிறது.

‘பாகுபலி’யின் அட்டகாசமான வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. ஆனால் அத்தனையையும் ஒரே அடியால் கீழே வீழ்த்தி விட்டார் இயக்குநர் சுஜீத். இந்த வகையில் ஹீரோவை விட இவரே பலசாலி எனலாம்.

ஷங்கர், ராஜ்மெளலி போன்றவர்கள் எத்தனை புத்திசாலிகள் என்பதையும் இந்தத் திரைப்படம் மெய்ப்பிக்கிறது.

சர்வதேச அளவில் இயங்கும் ஒரு மாஃபியா குழுவின் தலைவர் ராய் (ஜாக்கி ஷெஃராப்). பாதுகாப்பு கருதி தன் தொழிலைச் சட்டப்பூர்வமானதாக மாற்றுவதற்காக இந்தியா வருகிறார். அமைச்சரை மிரட்டிக் கையெழுத்து வாங்குகிறார். ஆனால் ஒரு கார் விபத்தின் வழியாகக் கொல்லப்படுகிறார்.

ராயின் தலைமைப்பதவியில் அமர இதர கேங்க்ஸ்டர்கள் இடையே அதிகாரப் போட்டி நடக்கிறது. ராயின் மகன் (அருண்குமார்) வாரிசாக நுழைய இந்த மோதல் இன்னமும் சூடு பிடிக்கிறது. கொள்ளையர்களின் பெரும் நிதி ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில் சிக்கிக் கொள்கிறது. அதை வெளியே எடுக்க ‘பிளாக் பாக்ஸ்’ வேண்டும். அதைக் கைப்பற்றுவதற்கான சதித்திட்டங்களும் நடக்கின்றன.

இன்னொரு புறம் வேறொரு விஷயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்தின் வழியாக மும்பையில் பெருங்கொள்ளை ஒன்று நிகழ்கிறது. இதைக் கண்டுபிடிப்பதற்காக அண்டர்கவர் காவல்துறை அதிகாரியான அசோக் (பிரபாஸ்) நியமிக்கப்படுகிறார்.

இந்தப் பாதைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து பயணிப்பதே இதன் திரைக்கதை. இதில் அசலான காவல்அதிகாரி , திருடன், வாரிசு யார் என்பதையும் இடையே கலந்து கட்டி அடிக்கிறார்கள். வாய்ப்பாடு ஒப்பிக்கும் சிறுவன் போல கடகடவென்று ‘வாய்ஸ் ஓவரில்’ ஆரம்பிக்கும் துவக்கம் முதற்கொண்டு படம் நெடுக என்ன நடக்கிறதென்றே பெரும்பாலும் புரியவில்லை.

பண்டிகை சமயத்தில் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் முட்டி வலியுடன் மாட்டிக் கொண்ட அவஸ்தை. அத்தனை பாத்திரங்கள். அத்தனை நெரிசல்.

நல்ல உயரமும் திடகாத்திரமுமாக இருக்கிறார் பிரபாஸ். இவர் ஐந்து பேரை அடித்துத் துவம்சம் செய்கிறார் என்றால் கூட நம்பலாம். ஆனால் குக்கரில் ஐந்து விசில் வருவதற்குள் ஐநூறு கிங்கிரர்களை அநாவசியமாக அடித்து வீழ்த்துவதெல்லாம் காதில் பூச்சுற்றல். சாகசமெல்லாம் சரி. ஆனால் பிரபாஸின் முகத்தில் நடிப்பு என்பது பெரும்பாலும் வராமல் பிடிவாதம் பிடிக்கிறது.

ஹிந்தி வடிவமும் இருக்கிறது என்கிற காரணத்தினால் ஷ்ரத்தா கபூரை நாயகியாகப் போட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆந்திராவின் கோங்குரா சட்டினியையும் ரசகுல்லாவையும் ஒன்றாகக் கலந்தது போல் நாயகன் – நாயகி சேர்க்கை ஒட்டவேயில்லை.

நீல் நிதின் முகேஷ், சங்க்கி பாண்டே, முரளி சர்மா, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், டினு ஆனந்த், வெண்ணிலா கிஷோர் என்று இந்திய மேப்பில் தற்செயலாக கை வைத்து தேர்ந்தெடுத்தது போல ஏராளமான பாத்திரங்கள். ஆனால் ஒருவரும் மனத்தில் நிற்கவில்லை. அட்டகாசமான தோற்றத்தில் வரும் அருண் விஜய்யும் காவல்துறை அதிகாரியாக வரும் பிரகாஷ் பெலவாடியும் மட்டுமே சற்று தனித்துத் தெரிகிறார்கள்.

ஒவ்வொரு பிரேமிலும் ஆடம்பரம் தெறிக்கிறது. விலையுயர்ந்த ஆடைகள், குளிர்க்கண்ணாடிகள், கச்சிதமாக இருக்கும் சிக்கன உடை வசீகர அழகிகள், வாயில் புகையும் சுருட்டு, அந்தரத்தில் பறந்து சிதறும் கார்கள், அட்டகாசமான செட்கள் (சாபு சிரிலுக்கு ஒரு சபாஷ்) என்று எல்லாவற்றிலும் பணக்காரத்தனம். சாகசக் காட்சிகள் முதற்கொண்டு பல இடங்களில் நுட்பம் ஏராளமாக இறைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், ஆடம்பரமான உணவில் உப்பு இல்லாதது போல சுவாரசியமான திரைக்கதை என்கிற ஆதாரமான வஸ்து இதில் இல்லாததால் அனைத்துமே வீண்.

ஹாலிவுட் முதற்கொண்டு உலகெங்கும் தயாரிக்கப்படும் சாகசத் திரைப்படங்களைக் கவனித்தால் கதை என்பது ஒரு துளியாக இருக்கும். உதாரணத்திற்கு, கடத்தப்பட்ட தன் மகளை மீட்கப் புறப்படும் ராணுவ அதிகாரி என்பது போல. ஆனால் அதைப் பரபரப்பான திரைக்கதையின் மூலம் வளர்த்தெடுப்பார்கள்.

நாயகன் மீளவே முடியாதோ என்கிற அளவில் சிக்கல்கள், சவால்கள், திகைப்புகள் அவற்றில் அமைந்திருக்கும். நாயகன்தான் இறுதியில் வெல்வான் என்பது நமக்குத் தெரிந்தாலும் அந்த நேரத்தின் சூழ்நிலையில் நாமும் ஆட்படுவோம். பாத்திரங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் உணர்ச்சிகரமான பிணைப்பையும் இதில் உருவாக்கி விடுவார்கள். அவன் வெற்றி பெற வேண்டுமே என்று பார்வையாளர்களின் மனதில் ஒரு தவிப்பும் ஆவலும் உருவாகி விடும்.

இந்த அடிப்படையான விஷயங்கள் அனைத்துமே இந்தத் திரைப்படத்தில் இல்லை. யாருக்கோ, என்னவோ நடக்கிறது என்பது போல் ஒட்ட முடியாமல் அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது. மழை போல் பொழியும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இடையில் நாயகன் ரொமான்ஸ் செய்யும்போது கொலைவெறி ஏறுகிறது.

பாடல்கள் ஒன்றும் தேறவில்லை. அசந்தர்ப்பமான இடங்களில் வந்து கடுப்பேற்றுகிறது. ஆறுதலாக பின்னணி இசையில் ஜிப்ரான் மிரட்டியிருக்கிறார்.

ஒரு காட்சியில் பாராசூட்டைத் தூக்கிக் கடாசி விட்டு ஆபத்தான முறையில் பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்கிறார் நாயகன். ஏறத்தாழ தற்கொலை முயற்சிக்கு நிகரான சாகசம். எனக்கென்னமோ அந்த இடத்தில் தயாரிப்பாளர்தான் நினைவிற்கு வந்தார். நாயகன் மீண்டு விடுகிறான். ஆனால் தயாரிப்பாளரின் நிலைமைதான் என்னவாகுமோ?

‘ஆஹா.. ஓஹோ..’ என்று எதிர்பார்க்கப்பட்ட ‘சாஹோ’வில் வெற்று பிரம்மாண்டத்தைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை என்பதுதான் உண்மை.
-
By சுரேஷ் கண்ணன் | தினமணி

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 22, 2019 2:14 pm

பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் 1571444738
இதைத்தான் முந்தைய விமர்சனத்தில் சொல்லிட்டேனே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக