புதிய பதிவுகள்
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
4 Posts - 3%
prajai
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
1 Post - 1%
சிவா
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
1 Post - 1%
bala_t
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
297 Posts - 42%
heezulia
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
6 Posts - 1%
prajai
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
4 Posts - 1%
manikavi
ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_m10ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?!


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 30, 2019 5:14 pm

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையிலான மத்திய வாரியம், 2018-19 நிதியாண்டுக்கான உபரித்தொகை ரூ.1,23,414 கோடி மற்றும் டிவிடெண்ட் தொகை ரூ.52,637 கோடி என இரண்டும் சேர்ந்து, ரூ.1.76 லட்சம் கோடியை வழங்குவதற்கு ஒப்புதல் தந்தது

பொருளாதார மந்தநிலை மற்றும் பணப்புழக்கத் தட்டுப்பாட்டால் நாட்டின் தொழில்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள், ஆள்குறைப்பு, உற்பத்தி நிறுத்தம் போன்ற செயல்பாடுகளின்மூலம் தங்களது நஷ்டத்தைச் சமாளிக்கும் முயற்சியில் இறங்கின. நிறுவனங்களின் ஜூன் வரையான காலாண்டு முடிவுகளும் மிக மோசமாக வந்ததையடுத்து, பங்குச்சந்தையும் பெரிய சரிவை நோக்கி பயணித்தது.

ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Vikatan%2F2019-08%2F3260ea10-6a36-4810-86ee-927f6a05f5c3%2FRBI_1_17170_16578__2_

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றை செயல்படுத்துவதற்கு நிதி ஆதாரம் தேவைப்பட்டது. இந்தச் சூழலில்தான், ரிசர்வ் வங்கி தன்வசமுள்ள உபரி நிதியான ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையிலான மத்திய வாரியம், 2018-19 நிதியாண்டுக்கான உபரித்தொகை ரூ.1,23,414 கோடி மற்றும் டிவிடெண்ட் தொகை ரூ.52,637 கோடி என இரண்டும் சேர்ந்து ரூ.1.76 லட்சம் கோடியை வழங்குவதற்கு ஒப்புதல் தந்தது.

முன்னதாக, ரிசர்வ் வங்கியின் வசமுள்ள உபரித்தொகையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கடந்த டிசம்பர் மாதம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி எவ்வளவு உபரி நிதியை வைத்துக்கொள்ளலாம், பணப்புழக்கத்துக்குத் தேவையான நிதி எவ்வளவு, மத்திய அரசுக்கு எவ்வளவு உபரி நிதியை வழங்கலாம் என்பது குறித்து அந்தக் குழு ஆய்வுசெய்யும் என்று கூறப்பட்டது.

ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Vikatan%2F2019-08%2F33765f24-dd75-4288-83e5-c2d7175fdcc6%2Fsakthikantha_dass

இந்தக் குழுவில், மத்திய அரசின் சார்பாக மத்திய நிதித்துறை செயலர் ராஜீவ்குமார் இடம்பெற்றிருந்தார். இந்தக் குழு, தனது ஆய்வறிக்கையை ஆகஸ்ட் 14-ம் தேதி ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது. அந்த ஆய்வறிக்கைகுறித்து கலந்தாய்வுசெய்து முடிவெடுப்பதற்காக, ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடியை வழங்குவதென்று முடிவெடுக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் உபரி நிதி என்பது, உலகிலுள்ள குறிப்பிட்ட சில நாடுகளின் மத்திய வங்கிகளின் நிதி கையிருப்பைக்கொண்டு கணக்கிடப்படும். மற்ற நாட்டு மத்திய வங்கிகளின் நிதி கையிருப்பு, 14 சதவிகிதமாக உள்ளது. நமது ரிசர்வ் வங்கியின் கையிருப்பு அதைவிட இருமடங்காக, அதாவது 28 சதவிகிதமாக உள்ளது. எனவே, உபரியாக உள்ள நிதியை வழங்கும்படி ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?! Vikatan%2F2019-08%2F8dbc4a88-8d9a-44a8-b2c8-c092e6eb7250%2Fvikatan_2019_06_798d6bbf_df6d_4078_b954_2078bdf07dee_159224_thumb

மத்திய அரசின் இந்த வேண்டுகோளை, அப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல் ஏற்க மறுத்தார். அது, பெரிய பிரச்னையானது. அதன்பின், 2018 நவம்பர் மாதம், ரிசர்வ் வங்கியின் நிதி நிலவரம்குறித்து ஆய்வு செய்வதற்காகக் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையின்பேரில்தான் தற்போது மிகப்பெரிய நிதி உதவியை வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது.

மத்திய அரசுக்கு, ரிசர்வ் வங்கி ஒவ்வொரு நிதியாண்டிலும் நிதியுதவி செய்வது வழக்கமான நடைமுறைதான். இருந்தாலும், முன்னெப்போதையும்விட, தற்போது வழங்க உள்ள தொகை மிகமிக அதிகம் என்பதால், அது பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.

கடந்த 2015-16 நிதியாண்டில், மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.65,876 கோடி நிதி அளித்தது. 2016-17 நிதியாண்டில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ரிசர்வ் வங்கியும் நிதிச் சிக்கலில் சிக்கியிருந்ததால், கடந்த நிதியாண்டைவிட பாதி அளவே (ரூ.30,659 கோடி) மத்திய அரசுக்கு வழங்கியது. 2017-18 நிதியாண்டில், சற்று கூடுதலாக ரூ.40,659 கோடி வழங்கப்பட்டது.

தற்போது, மிகப் பெரிய அளவிலான நிதி உதவியை அளிக்க ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது. `ஜிடிபி பற்றாக்குறை அளவு 3.3 சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டுக்கடன், வாகனக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி குறைக்கப்படும். வங்கிக்கடனை ஊக்குவிக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் பொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும்’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி ரிசர்வ் வங்கி வழங்கும் நிதி உதவியைக்கொண்டு, சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுமா?!

--நன்றி விகடன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 30, 2019 5:35 pm

நம்மிடம் இருந்து அரசு பெறுகிற  வரிகள் அந்தந்த துறைக்கு போகிறது.
ரிசர்வ் வங்கிக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது,பாலாஜி?

ரமணியன்  
@பாலாஜி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 30, 2019 5:56 pm


பணவியல் கொள்கையை அறிவித்து அதன் மூலம் பொருளாதாரத்தில் ஸ்திர தன்மையை நிலை நாட்டுகிறது. விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதும், வட்டி விகிதங்களை கட்டுபடுத்துவதும் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதும், ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு வினியோகம் செய்வதும் மற்றும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தை அமல்படுத்துவதும் ரிசர்வ் வங்கியின் தலையாய கடமை ஆகும்.


மத்திய, மாநில அரசுகள் தங்கள் வங்கி கணக்குகளை ரிசர்வ் வங்கியில் வைத்துள்ளன. மேலும் அனைத்து வங்கிகளும் தங்கள் கணக்குகளை சில நடைமுறை வசதிக்காக ரிசர்வ் வங்கியில் வைத்துள்ளன. இந்த கணக்கில் வைக்கப்படும் டெபாசிட் தொகைகளுக்கு ரிசர்வ் வங்கி வட்டி எதுவும் கொடுப்பதில்லை. அதற்கு ரிசர்வ் வங்கி சட்டத்திலும் இடமில்லை. ரிசர்வ் வங்கியில் மத்திய அரசின் முதலீடு ரூ.5 கோடி மட்டுமே. ரிசர்வ் வங்கியின் நூறு சதவீத பங்குகள் மத்திய அரசிடம் உள்ளன. ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கைகளை ஆய்வு செய்தால், கடந்த 5 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி கீழ்கண்ட தொகைகளை தனது நிகர லாபமாக மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது.

2017-18 ரூ.50,000 கோடி, 2016-17 ரூ.30,659 கோடி, 2015-16 ரூ.65,876 கோடி, 2014-15 ரூ.65,896 கோடி, 2013-14, ரூ.52,679 கோடி.

அப்படியென்றால் ரிசர்வ் வங்கியின் லாபம் எங்கிருந்து வருகிறது? இதை தெரிந்துகொள்வதற்கு முன்னர் ரிசர்வ் வங்கியின் சில முக்கிய பணிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கடன் பத்திரங்கள் விற்பனை மூலம் தொடர்ந்து கடன்கள் வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. 30.6.2018 உடன் முடிவடைந்த ஆண்டில் மத்திய அரசு ரூ.4,19,100 கோடிகளும், மாநில அரசுகள் ரூ.5,88,000 கோடிகளும் கடனாக பெற்றுள்ளன. இதற்கான கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி மூலமாக விற்பனை செய்கின்றன. ரிசர்வ் வங்கி இவ்வாறான கடன் பத்திரங்களை மற்ற வங்கிகளுக்கும் மற்றும் இன்சூரன்ஸ் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனங்கள் இவைகளுக்கு விற்பனை செய்கிறது. விற்பனையாகாத பத்திரங்களை ரிசர்வ் வங்கியே வாங்கிக்கொள்கிறது. சராசரியாக 10 முதல் 12 சதவீத கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்குகிறது. மேலும் வங்கிகள் தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கியில் கொடுத்து அதற்கு ஈடாக கடன் பெறுகின்றன. எனவே, கணிசமான கடன் பத்திரங்கள் ரிசர்வ் வங்கியிடம் உள்ளன. ரிசர்வ் வங்கியின் வசம் உள்ள பத்திரங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் வட்டி வழங்குகிறது. இது ரிசர்வ் வங்கியின் வருமானத்தில் பெரும்பகுதி ஆகும். கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வாங்கும் போது, ரிசர்வ் வங்கி தனது பணத்தைத்தான் மத்திய, மாநில அரசுகளுக்கு கடனாக வழங்குகிறது. இதில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கியின் பணம் வெளியே செல்லும்போது அது நாட்டில் பண புழக்கத்தை அதிகரித்து பண வீக்கத்துக்கு வழி வகுக்கும். மேலும், மத்திய அரசும், மாநில அரசுகளும் கடன் பத்திரங்கள் இல்லாமல் நேரடியாக ரிசர்வ் வங்கியிடம் வாங்கிய கடனுக்கு 30.6.2018-ல் செலுத்திய வட்டி ரூ.586 கோடி ஆகும். ரிசர்வ் வங்கிக்கு இவ்வாறாக வந்து சேரும் வட்டி வருமானம் என்பது மீண்டும் ரிசர்வ் வங்கியின் லாபமாக மத்திய அரசுக்கே போய் சேரும்.

இரண்டாவது, ரிசர்வ் வங்கியிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு 30.6.2018 அன்று ரூ.26,09,807 கோடி ஆகும். இவைகள் பெரும்பாலும் அமெரிக்க டாலராகவோ, ஐரோப்பாவின் யூரோ கரன்சி ஆகவோ உள்ளன. இவைகளை வெளிநாட்டு வங்கிகளிலும் மற்றும் வெளிநாட்டு அரசாங்கத்தின் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் ஆண்டுதோறும் வருமானம் கிடைக்கிறது. 30.6.2018 உடன் முடிவடைந்த ஆண்டில் இதன் மூலம் கிடைத்த வருமானம் ரூ.27,401 கோடிகள் ஆகும். இந்த அன்னிய செலாவணி எப்படி கையிருப்பாக ரிசர்வ் வங்கியிடம் வந்து சேர்ந்தது?. இதை எளிமையாக புரிந்துகொள்வோம். அன்னிய செலாவணி சந்தையில் (இங்கு சந்தை என்பது வங்கிகள், அன்னிய செலாவணியை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் அடங்கிய, சந்தை போன்ற ஒரு குறிப்பிட்ட இடம் இல்லாத, அமைப்பு) ஏற்றுமதி வணிகம் மூலமாகவும், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் மூலமாகவும், வெளிநாட்டு நிறுவனங்களில் வாங்கும் கடன்கள் மூலமாகவும் மற்றும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம் மூலமாகவும் அன்னிய செலாவணி சந்தையில் வந்து சேருகின்றன. இந்த அன்னிய செலாவணியை வாங்குபவர்கள் ஏற்றுமதியாளர்களும், அன்னிய கடன்களை திருப்பி செலுத்துபவர்களும், அன்னிய முதலீடு செய்பவர்களும் மற்றும் பலரும் ஆவார்கள். ஒரு பொருள் அதிகமாக சந்தைக்கு வரும்போது அதன் விலை குறையும் என்பது நியதி. அதேபோல் அமெரிக்க டாலர்கள் அதிக அளவில் சந்தைக்கு வரும்போது அதன் மதிப்பு (விலை) குறையும். உதாரணமாக ரூ.70-க்கு விற்ற அமெரிக்கா டாலர் ரூ.69 அல்லது ரூ.68-க்கு அல்லது அதற்கு கீழே விற்கும் நிலைமை வரும். இது நமது ஏற்றுமதி வணிகத்தை பாதிக்கும். எனவே, சந்தையில் அதிகமான டாலர் வரத்தை ரிசர்வ் வங்கி வாங்கிக்கொண்டு, டாலரின் விலையை சம நிலைப்படுத்தும். இவ்வாறுதான் அன்னிய செலாவணி ரிசர்வ் வங்கியின் இருப்பாக மாறுகிறது.

இப்போது நினைவு கூருங்கள். ரிசர்வ் வங்கியின் லாபம் உயர்கிறது என்றால் வங்கிகளும் மத்திய, மாநில அரசுகளும் அதிக கடன்களை ரிசர்வ் வங்கியில் இருந்து பெறுகின்றன மற்றும் அன்னிய செலாவணி சந்தையில் ஸ்திர தன்மை இல்லாமல் அன்னிய செலாவணியை ரிசர்வ் வங்கி வாங்குகிறது என்பதுதானே உண்மை. ரிசர்வ் வங்கியின் லாபம் குறைகிறது என்றால், மத்திய, மாநில அரசுகளும் மற்றும் வங்கிகளும் ரிசர்வ் வங்கியில் பத்திரங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கடன் வாங்குவதை குறைத்துக்கொண்டு தங்கள் நிதி நிலைமையை தாங்களே கவனித்துக்கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

அதுபோல, அன்னிய செலாவணி கையிருப்பு ஒரு குறிப்பிட்ட அளவு தேவைதான். அது சந்தையில் அமெரிக்க டாலரின் விலையில் ஸ்திரதன்மையை கொண்டு வர உதவும். ஆனால் அந்த தேவையான அளவு எவ்வளவு என்பதை நிர்ணயித்து, அதற்கு மேல் அன்னிய செலாவணியை வங்கிகளிடம் இருந்து வாங்க வேண்டிய நிலைமை இல்லை என்றால், சந்தையில் ஸ்திரதன்மை நிலவுகிறது என்றுதானே அர்த்தம். லாபம் குறைகிறது என்றால் மற்ற வங்கிகள்தான் கவலைப்பட வேண்டும். ரிசர்வ் வங்கி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த குறையும் லாபம் நாட்டுக்கு நல்லதையே செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வோம்.

- எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 30, 2019 7:23 pm

நன்றி நன்றி பாலாஜி .
கட்டுரை தெளிவாகவும் விளக்கமாகவும் இருந்தது.
ஸ்ரீ ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக