புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_m10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10 
48 Posts - 51%
heezulia
`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_m10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_m10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_m10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_m10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_m10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10 
48 Posts - 51%
heezulia
`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_m10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_m10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_m10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_m10`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 20, 2019 5:38 am

கபீரின் போதனைகள் இந்து, இஸ்லாமிய மதங்களைக்
கடந்து சீக்கிய மதத்திலும் இடம் பெற்றன. சீக்கியர்களின்
தெய்வமும் புனித நூலுமான 'குருகிரந்த சாஹிப்'பில்
இடம் பெற்றிருக்கின்றன.

ஆக, மூன்று மதங்களும் போற்றும் மகத்தான ஞானியாக
அருள்புரிகிறார்.
-
`அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர் Vikatan%2F2019-05%2Fc5c71ed0-0f5e-4d4d-a68c-7ffe59700386%2F131237_thumb
-
இந்திய தேசம் கண்ட மகா ஞானிகளில் ஒருவர்
கபீர்தாசர். எல்லா உயிர்களிலும் இறைவன் ஒளிர்கிறான்
என்பதை பல இடங்களில் மெய்ப்பித்த அவதாரப் புருஷர்.

1440-ம் ஆண்டு (1398-ம் ஆண்டு என்ற கருத்தும் உண்டு)
வாரணாசியில் கங்கைக்கரையில் பிறந்தவர் என்றும்,
இவரை தமால், ஜீஜா பீபி என்ற இஸ்லாமிய தம்பதிகள்
வளர்த்தனர் என்றும் இவரது சரிதை கூறுகிறது.

திருக்குரானைத் திறந்து பார்த்ததும் தென்பட்ட 'கபீர்'
என்ற சொல்லே இவருக்குப் பெயராகச் சூட்டப்பட்டது
. `கபீர்’ என்றால் `பெரிய’ என்று பொருள்.
ஸ்ரீமன் நாராயணரின் ஆணைப்படி ஸ்ரீசுகப்பிரம்மமே
கபீராக அவதரித்தார் என்றும் கூறப்படுகிறது.

நெசவாளி குடும்பத்தில் வளர்ந்த கபீர், இறையருளால்
நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்று
இறைவனைப் பாடி வளர்ந்துவந்தார். பாடுவதில் பெரு
விருப்பம் கொண்டிருந்ததால், நெசவு செய்வதில் சற்றும்
விருப்பமின்றி இருந்தார்.

இரவில் இவர் ஒரு முழம் நெய்தால், இவரது பாடலைக்
கேட்டபடியே இறைவன் ஒரு முழம் நெய்வாராம்.



கபீருக்கு குருவென்று ஒருவரும் இல்லை. இதனால்
இவருக்கு எழுதவும் படிக்கவும் தெரியாமல்போனது.
ஆனாலும், ஞானம் வளர்ந்தபடியே இருந்தது. தக்க
வயதில் இவருக்குத் திருமணமாகி மகனும் மகளும்
பிறந்தார்கள்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலும், இவருடைய மனம் ஆன்ம
ஞானத்தைத் தேடியபடி இருந்தது. அந்தத் தேடல் அவர்
இயற்றிய பாடல்களிலும் பிரதிபலித்தது. இஸ்லாமிய
முறைப்படி வளர்ந்தாலும், ராமரின்மீது பக்தி கொண்டு
வாழ்ந்தார்.

இரு மதங்களிலும் நிலவிய மூட நம்பிக்கைகளைக்
கண்டித்தார். இதனால் ஊர் மக்களால் தண்டிக்கப்பட்டார்.
இருந்தும் தன் நிலையிலிருந்து மாறவே இல்லை.

மகான் ராமானந்த தீர்த்தரின் சீடனாக ஆசைப்பட்டு அவரை
அணுகினார். ஆனால், தீர்த்தரின் சீடர்கள் அவரை உள்ளே
அனுமதிக்காமல் அனுப்பிவிட்டனர்.

அன்றிரவே ஸ்ரீராம, லட்சுமணர்கள் அந்த மடத்தைவிட்டுக்
கோபித்துக்கொண்டு போவதைப்போல தீர்த்தர் கனவு
கண்டார். உடனே அலறிக்கொண்டு, 'அவரை ஏன்
விரட்டினீர்கள்' என்று கங்கைக்கரை நோக்கி ஓடினார்.

ஓடிவரும் வழியில் படுத்துக்கொண்டிருந்த கபீரை மிதித்து
விட்டார் தீர்த்தர். அப்போது 'ராம ராம' என்று ஜபித்த
திருநாமமே கபீருக்கு முதல் வேத பாடமானது. ஒருமுறை
ராமானந்த தீர்த்தரை வாதத்துக்கு அழைத்தார் கோரக்கர்.
தனது ஆழ்ந்த குருபக்தியின் துணையுடன் கோரக்கரை
வாதத்தில் வெற்றிகொண்டார் கபீர்.

குருநாதர் மெச்சும் சீடனாக அவர் விளங்கினார்.
-
--------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 20, 2019 5:41 am



நெய்த துணிகளை விற்று வந்தால்தானே குடும்பத்தைப்
பராமரிக்க முடியும்? எனவே, கபீர்தாசர் தான் நெய்த
துணியை விற்கச் செல்வது வழக்கம். அப்படி ஒருநாள்
சென்றபோது மாயக் கண்ணனின் லீலையால் ஒரு
பெரியவர் அவரிடம் வந்து துணியை விலைக்குக்
கொடுக்கும்படி கேட்டார்.

விலை பேசிக்கொண்டிருந்தபோதே, அந்தப் பெரியவர்
துணியைப் பிடுங்கிக்கொண்டு செல்ல, அவரைத்
தொடர்ந்து ஓடிய கபீர், ''ஐயா, துணிக்கு விலை
கொடுங்கள்'' என்று கேட்டார். பெரியவர் பணம் கொடுக்க
மறுத்ததும், கபீர் பெரியவரிடமிருந்த துணியைப்
பிடுங்கினார்.

துணி இரண்டாகக் கிழிந்து ஒரு பாதி பெரியவரின்
கையிலும், மறு பாதி கபீரின் கையிலும் வந்துவிட்டது.
பெரியவரின் கையில் இருக்கும் துணிக்கான விலையை
மட்டுமாவது கொடுக்கும்படி கபீர் கேட்டார்.

அந்தப் பெரியவரோ, ''நான் இந்த வஸ்திரத்தை
கண்ணனுக்காகக் கேட்கிறேன். இதற்குப் பணம் கேட்காதே''
என்ற பெரியவர், கண்ணனின் பெருமைகளை விளக்கிக்
கூறியதுடன், ''இனி யார் வந்து கண்ணனின் பெயரைச்
சொல்லிக் கேட்டாலும் அவர்களுக்குத் துணியைக் கொடுத்து
விடு'' என்று கூறினார்.

கபீர் நெய்த துணிகளை விற்கச் செல்லும்போதெல்லாம்,
கண்ணனின் லீலையின் காரணமாக யாரேனும் ஒருவர்
வந்து கண்ணனின் பெயரைச் சொல்லி, துணியை வாங்கிச்
செல்வது வழக்கமாகிவிட்டது. இதனால் கபீருக்கு வருமானம்
இல்லாமல் குடும்பம் வறுமையில் தவித்தது.


ஒருமுறை கபீரின் வீட்டுக்கு இறைவனடியார்கள்
100 பேர் உணவு வேண்டி வந்தனர். வறுமையில் வாடிய கபீர்,
அவர்களின் பசியை எப்படியும் போக்க வேண்டும் என்று
எண்ணினார். எனவே, தன் மனைவியை ஒரு செல்வந்தரின்
வீட்டில் வீட்டு வேலை செய்வதற்கு ஒப்படைத்துவிட்டு,
அதன் மூலம் பெற்ற பணத்தைக்கொண்டு
இறைவனடியார்களுக்கு உணவிட்டார்.

அன்று இரவே ஓர் அரசு அதிகாரி, அந்தச் செல்வந்தரின்
வீட்டுக்குச் சென்று கபீரின் மனைவியை மீட்டு வந்து வீட்டில்
சேர்ப்பித்தார். மனைவி திரும்பி வந்ததைக் கண்டு கோபம்
கொண்ட கபீர், மனைவியை அடிக்கக் கையை ஓங்கினார்.

அப்போது அந்த அதிகாரி, ''நான்தான் உன் மனைவியை
மீட்டு வந்தேன். வேண்டுமானால் என்னை அடி'' என்று
கூறினார். கபீர் அவரை அடிக்கக் கையை ஓங்கியபோது,
அங்கே அந்த அதிகாரி காணவில்லை.

மாறாக ஶ்ரீராமர் காட்சி தந்தார். இறைவனின் தரிசனம்
கண்ட கபீர் கலங்கிப்போய் ராமனைத் தொழுது பாடல்கள்
புனைந்தார். இப்படி கபீரின் வாழ்வில் ஆயிரம் ஆயிரம்
சம்பவங்கள் இறையருளால் நடைபெற்றுக்கொண்டு
இருந்தன.

இதனால் பழுத்த ஆன்ம ஞானியாக விளங்கினார்
கபீர்தாசர். `எல்லா உயிரிலும் ஆண்டவன் உறைகிறான்;
அவன் எந்த ஆலயத்திலும் இல்லை' என்று உபதேசித்தார்.

கபீரின் மகன் கமாலும் சிறந்த ஞானியாக விளங்கினார்.
எழுதப் படிக்கத் தெரியாத கபீரின் பாடல்கள் மக்களின்
மனங்களில் ஆழப் பதிந்துவிட்டன.

வாரணாசியில் ஏழை எளிய மக்கள் இவருடைய பாடல்களை
மனப்பாடம் செய்துகொண்டார்கள். அதுவே பின்னாளில்
நூலாக வெளிவர உதவியது.

500 ஆண்டுகளுக்கு முன்னரே பல புரட்சிகரக் கருத்துகளைக்
கூறிய மகான் கபீர்தாசர். சீதா, ராம திவ்ய தரிசனத்தைப்
பலமுறை கண்டவர்.
-
----------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 20, 2019 5:45 am


``ஜபமாலையை உருட்டுகிறாய்
நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கொள்கிறாய்.
கற்றைச் சடாமுடியைக் கட்டிக்கொள்கிறாய்.
என்ன செய்தால் என்ன? உன் நெஞ்சில் ஈரம் இல்லை.
அன்பு இல்லை. நீ எப்படி இறைவனை அடைவாய்?’

---

என்று போலியான மதவாதிகளைக் கண்டித்து
பாடினார்.

1518-ம் ஆண்டு இவர் இறைவனைத் துதித்தவாறே
மறைந்தார். இருந்தபோது இவரைக் கொண்டாடாத
இந்து, இஸ்லாமிய மக்கள், இவரின் இறந்த உடல்
தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினர்.

ஒரு பெரியவர், ''ஏன் வீணாகச் சண்டையிட்டுக்
கொள்கிறீர்கள்? நீங்கள் இருவரும் தலா ஒரு
போர்வையைக் கொண்டு உடலைப் போர்த்திவிட்டுச்
செல்லுங்கள். இரண்டு நாள்கள் பொறுத்து வந்து
பாருங்கள்'' என்று கூறினார்.

அதன்படி இரு தரப்பினரும் உடலின் வலப் பகுதியையும்
இடப் பகுதியையும் போர்வை கொண்டு போர்த்தி
விட்டுச் சென்றனர். இரண்டு நாள்கள் கழித்து அவரது
திருவுடலை எடுத்துச் செல்ல வந்தனர்.

போர்வையை எடுத்ததும் அவர்கள் கண்ட காட்சி
ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. ஆம். கபீரின் உடல்
மறைந்து, அங்கே புத்தம் புது மலர்கள் இருந்தன.

ஆம், இறைவனுக்காகப் பாமாலைகள் பாடிப் பாடிப்
பரவசமடைந்த அவரது திருமேனி பூக்களாக உருமாறி
இருந்தன. இரு தரப்பினரும் மலர்களைக் கொண்டு
சென்றனர்.

கபீரின் போதனைகள் இந்து, இஸ்லாமிய மதங்களைக்
கடந்து சீக்கிய மதத்திலும் இடம் பெற்றன. சீக்கியர்களின்
தெய்வமும் புனித நூலுமான 'குருகிரந்த சாஹிப்'பில்
இடம்பெற்றிருக்கின்றன. ஆக, மூன்று மதங்களும்
போற்றும் மகத்தான ஞானியாக அருள்புரிகிறார்.

இவரது பாடல்கள் இன்றும் இந்திய தேசமெங்கும்
பாடப்படுகின்றன. எளிமையான ஆன்மிக கருத்துகளைக்
கொண்ட இவருடைய பாடல்கள் ரவீந்திரநாத் தாகூர்,
மகாத்மா காந்தி போன்ற பலரையும் கவர்ந்திழுத்தது.
கபீரின் வழியொற்றி வாழ்ந்த மக்கள் 'கபீர் பந்திக்கள்'
என்று வடக்கே வாழ்கிறார்கள்.

"நெசவு என்ன; பாவு என்ன?
போர்வை நெய்யும் நூல்கள்தான் என்ன?
எட்டு கமலங்கள், ஈரைந்து ராட்டினங்கள்!
ஐந்து மூலப் பொருள்கள். மூன்று போர்வை குணங்கள்.
எல்லாம் சேர்த்து பரமன் போர்வை செய்ய பத்து மாதங்கள்"


என்ற இவருடைய தத்துவப் பாடல் காந்தியைப் பெரிதும்
கவர்ந்த ஒன்று. சூபியிசம், சித்தர் பாடல்களைப்போலவே
பல பாடல்களை இயற்றி, ஆன்மிகம் தழைக்கச்
செய்ததுடன் மக்களின் மனங்களில் பேதங்களைக்
களைந்தவர் மகான் கபீர்தாசர்.

இந்த மகானைப் போற்றும் வகையில், மத்திய அரசின்
ஜவுளித்துறை சிறந்த நெசவாளருக்கான 'சந்த் கபீர்' விருதை
ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 'அன்பை வலியுறுத்தாத
சமயம் சமயமில்லை' என்று போதித்த மகா ஞானி கபீர்
அமரத்துவம் அடைந்த 500 வது ஆண்டு இது. அவருடைய
வாழ்வை, கருத்துகளை நெஞ்சில் ஏந்தி சக உயிர்களை
நேசிக்க வேண்டும் என்பதே அந்த ஞானியின் வாழ்க்கை
சொல்லும் பாடம்!
-
------------------------------------
மு.ஹரி காமராஜ்
நன்றி-விகடன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக