புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
15 Posts - 3%
prajai
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_m10ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 15, 2019 11:05 am

ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Ranu1565674728997

மாறியது.காலையில் மேற்கு வங்காளத்தில் ரனகாட் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ரானு மரியா மண்டல் என்ற பாட்டி மாலையில் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டு, பிரபல தொலைக்காட்சியில் ரியலிட்டி ஷோவில் பாட அழைக்கப்பட்டார்.

சிறு வயதில் இருந்தே பாடல்களைக் கேட்டு வந்த அவர் பாடியே பிச்சை எடுக்கத் தொடங்கினார். அவரை சமூக வலைத் தளங்கள் பிரபலமாக்கியது.



இதேபோல் தமிழ் நாட்டில் வீட்டு வேலை செய்து வந்த ரமணி அம்மாள் பாட்டி (சென்னை) பிரபலமாகி ராக் ஸ்டார் ரமணி அம்மாள் என அழைக்கப்பட்டார்.இவர் இறுதிச் சுற்றில் இரண்டாவது பரிசை வென்றார்.சில வெளி நாடுகளுக்கும் சென்று வந்தார். சில படங்களிலும் பாடினார்.
ஆனா….…………………?
சொல்லப்பட்ட பரிசுத் தொகை கிடைத்ததா?தொலைக்காட்சிகளில் போட்டியிட்டால் என்ன நடக்கும்? தொடக்கத்தில் எதுவும் சொல்லாமல் முடிந்ததும் நிபந்தனைகள் போடுவது ஏன்? ஐந்து லட்சம் + நிலம் வென்ற அவர் இப்போதும் பாத்திரம் கழுவுறாராம்.(இணையம்)
ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? Ramani-Ammal-696x392


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 15, 2019 2:17 pm

விஜய் தொலைக்காட்சி ஒரு ஏமாற்று நிறுவனம், சொல்லுவானுங்க ஆனா தர மாட்டானுங்க. நாசமாப் போனவனுங்க.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 15, 2019 4:27 pm


-
ஜீ தமிழ் சேனலின் சரிகமப நிகழ்ச்சியில் ராக் ஸ்டார் ரமணியம்மாள்
என்றொரு பாட்டி சும்மா கலக்கு, கலக்கு என்று கலக்கிக் கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை உலகம் முழுதுமே ரமணியம்மாளுக்கென
தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த இந்த ராக் ஸ்டார் ரமணியம்மாள்
பிறந்தது 1954 ஆம் வருடம். தற்போது 64 வயதாகும் ரமணியம்மாள் படித்தது
அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. சுமாராக ஆங்கிலம் பேச வரும்.

அவருக்குப் படிப்பில் ஆர்வம் இருந்தும், குடும்பச் சூழல் காரணமாக படிப்பைத் தொடரமுடியாமல் வீட்டு வேலை செய்து குடும்பம் நடத்த வேண்டியதாகி விட்டது. ரமணியம்மாளுக்குத் திருமணமான புதிதில் அவரது கணவர் பொறுப்புடன் இருந்திருக்கிறார்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதில் வீட்டின் பொருளாதாரச் சுமை மொத்தமும் ரமணியம்மாளின் தோளில் இறக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நாள் முழுதும் உழைத்து விட்டு வீடு திரும்பும் ரமணியம்மாளிடம் இருந்து அவர் சம்பாதித்து வரும் தொகையை வாங்கிச் சென்று குடிப்பதற்காக அவரது கணவர் காத்திருப்பாராம்.

அப்படி இருந்தும் ரமணியம்மாளால் ஏனோ தனது கணவரை குறைத்து மதிப்பிட முடியவில்லை. இன்று அவர் உயிருடன் இல்லாவிட்டாலும் மேலிருந்து நான் பாடுவதைக் கண்டு ரசித்துக் கொண்டே தான் இருப்பார் என்று கணவரைப் பற்றி நல்லவிதமாகவே குறிப்பிட விரும்புகிறார்.

ஏனென்றால், மனைவி சம்பாத்தித்துக் கொண்டு வரும் காசில் குடித்து விட்டு வரும் பொறுப்பில்லாத கணவராக இருந்த போதும் இவர்கள் இருவருக்குமிடையிலான அன்பில் அணுவளவும் குறையிருந்ததாகத் தெரியவில்லை. குடும்ப வறுமை காரணமாக பல வீடுகளில் வீட்டு வேலை செய்து விட்டு நடந்தே வீடு திரும்பக் கூடியவரான ரமணியம்மாளுக்காக இரவுகளில் வீட்டு வாசலிலேயே காத்திருப்பாராம் அவரது கணவர்.

அதற்கு... எவ்வளவு தாமதமானாலும் சரி, மனைவி வீடு திரும்பிய பிறகு அவரது கையால் உணவருந்த வேண்டும் என்ற விருப்பம் தான் காரணமாம். அந்த அன்பின் காரணமாகவே ரமணியம்மாளுக்குத் தன் கணவர் குடிப்பழக்கம் கொண்டவராக இருந்த போதும் அவரை வெறுக்கத் தோன்றியதில்லை என்கிறார்.

இளமையில் அவருக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்றால் அது எம்ஜிஆர்... இப்போதும் கூட இன்றையை ஹீரோக்களைக் காட்டிலும் எம்ஜிஆர் மட்டுமே தான் ரமணியம்மாளின் மனம் கவர்ந்த ஒரே ஹீரோ.

அது போலவே ரமணியம்மாளுக்குப் பிடித்த பாடல்கள் என்றால் அது கவிஞர் கண்ணதாசன் எழுதியவையே. வேலைக்குச் செல்லும் போது இடையில் கண்ணதாசன் பாடல்களைக் கேட்டால், நின்று பாடல்வரிகளைக் கேட்டு ரசித்து நன்றாக உள்வாங்கி கொண்டு முழுமையாக அந்தப் பாடலைக் கேட்டு விட்டுத்தான் செல்வாராம்.

அந்த அளவுக்கு கண்ணதாசன் பாடல்களின் பரம ரசிகை இவர். ரமணியம்மாளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களது உதவியுடன் தான் தனது 63 வது வயதில் ஜீ தமிழின், சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் பல மைல் தூரம் நடந்து வந்து வீட்டு வேலைகள் செய்யும் ரமணியம்மாளுக்கு ஒரு நிமிடம் கூட சோம்பி உட்காரப் பிடிக்காதாம். எல்லா நேரங்களுலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கவே தனக்கு மிகவும் விருப்பம் என்கிறார்.

ரமணியம்மாள். 2013 ஆம் ஆண்டில் விஜய் ஆண்டனி இசையில் வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படத்தில் வெள்ளக்குதிரை என்றொரு பாடலைப் பாடியிருக்கிறார். ஆனால், அதற்குப் பிறகு அவருக்கு பெரிதாகப் பாடல் வாய்ப்புகள் வராததால் மீண்டும் வீட்டு வேலைகளைச் செய்து வருமானம் ஈட்டி அதில் வாழ்க்கை நடத்தும் நிலையைத் தான் தொடர்ந்திருக்கிறார்.

குடும்பச் சூழல் காரணமாக வீட்டு வேலை செய்தாலும் ரமணியம்மாளுக்கு இசையின் மீது தீவிர ஈடுபாடு இருந்த காரணத்தால் கல்யாணக் கச்சேரிகளுக்குச் சென்று பாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

கடவுள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாகத் தனது இருப்பை உணர்த்துவார். இப்போது ரமணியம்மாளுக்கு ஜீ தமிழ் சேனலின் சரிகமப இசைப் போட்டி மூலம் உணர்த்தியிருக்கிறார் போலும். ரமணியம்மாளின் திறமையை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பெருமை அந்தச் சேனலைத்தான் சேரும்.

ரமணியம்மாளிடம் இருக்கும் மற்றொரு ஈர்க்கத் தக்க அம்சம்... அவரிடம் சொந்தமாக இட்டுக் கட்டிப் பாடும் திறமையும் நிறையவே இருக்கிறது. நடுவர்களைக் குறித்தோ, அல்லது உலகம் முழுக்க இவருக்கென பிரத்யேகமாக உருவாகி விட்ட ரசிகர்களுக்காகவோ ஃபேஸ்புக் லைவ் அல்லது இசைப்போட்டியின் ஊடாக ஏதாவது பாடுங்களேன் அம்மா என்று கேட்டால் போதும் தனக்குப் பிடித்த பழம் பாடல்களின் வரிகளை சூழலுக்கு ஏற்றார் போல் மாற்றிப் போட்டு இட்டுக் கட்டி சிறப்பாகப் பாடி முடித்து விடுகிறார். அதாவது எள் எனும் முன் எண்ணெயாக நிற்பது என்றொரு பழமொழி ரமணியம்மாளுக்குத் தான் பொருத்தம்.

அதோடுகூட தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை கொஞ்சமும் மேடைக் கூச்சம் இன்று மிக அருமையாக எண்டர்டெயின் திறமையும் அதாவது நடுவர்கள், பார்வையாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒட்டுமொத்த நபர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சிறப்பாகச் செயல்படவும் அவரால் முடிகிறது.

அந்த வகையில் ராக் ஸ்டார் ரமணியம்மாள் இன்றைய பெண்கள் முன்மாதிரியாகக் கொண்டாட வேண்டிய ஒருவரே!

ரமணி அம்மாவுக்கு சொத்து அவங்க பசங்கதான் அதுமட்டும் இல்லாமல் இந்த உலகங்களில் வாழும் தமிழ் நெஞ்சங்கலீல் மறக்கமுடியாத இடம்பித்ததுதான் ரமணி அம்மாவுக்கு மிக பெரிய சொத்து!
-


avatar
Guest
Guest

PostGuest Thu Aug 15, 2019 5:58 pm

மேலதிக விபரங்களுக்கு

ஒரு நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறுமா? 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக