புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_m10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 
9 Posts - 90%
mruthun
 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_m10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_m10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_m10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_m10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_m10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_m10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_m10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 
3 Posts - 2%
mruthun
 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_m10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_m10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_m10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_m10 எங்கே மனசாட்சியின் குரல்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே மனசாட்சியின் குரல்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 11:04 am


By ஆசிரியர் | தினமணி
=========================

ரத்தத்தை உறைய வைக்கிறது உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவமும், அதைத் தொடர்ந்து நடந்து வரும் நீதிக்கான போராட்டமும். பதவி பலம் உள்ளவர்களுக்கு எதிராக சாமானியக் குடிமகன் வழக்கைப் பதிவு செய்வதற்குக்கூட எதிர்கொள்ள வேண்டிய போராட்டத்தையும், அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் எப்படி அடிப்படை சட்ட நடைமுறைகளைக்கூட மாற்ற முடியும் என்பதையும் எடுத்துரைக்கிறது.

குல்தீப் சிங் செங்கர் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர். 2002 முதல் தொடர்ந்து நான்கு முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்.

ஒருமுறை சமாஜவாதி கட்சி உறுப்பினராகவும் இருந்தவர். வேலைக்காகப் பரிந்துரைக் கடிதம் கேட்டு ஒரு பெண் அவரிடம் சென்றார். அந்தப் பெண்ணை - அப்போது அவர் மைனர் - செங்கரும் அவரது சகோதரரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். இது நடந்தது கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனக்கிழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கிறார். அரசியல் செல்வாக்குடையவர்கள் என்று தெரிந்தும், செங்கருக்கும் அவரது சகோதரருக்கும் எதிராகக் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல் நிலையத்தினர், குற்றவாளிகளின் பெயரைக்கூட அதில் குறிப்பிடவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏறத்தாழ ஓராண்டாகியும் தாங்கள் கொடுத்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், அது குறித்து விளக்கம் கேட்க முற்பட்டார்

அந்தப் பெண்ணின் தந்தை. அதுதான் அவர் செய்த குற்றம். அவர்மீது பொய் வழக்கு சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த அந்தப் பெண்ணின் தந்தையை, செங்கரின் சகோதரரும், கூட்டாளியும் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.

போலீஸ் காவலில் இருந்த ஒருவர் ஏன், எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்துக்கூட முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

தனக்குக் காவல் துறையினரிடம் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்த அந்தப் பெண், உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னெளவுக்குச் சென்று, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டில் முன்னால் தீக்குளிக்க முற்பட்டபோதுதான், அந்தப் பிரச்னைக்கு ஊடக வெளிச்சம் கிடைத்தது.

மக்கள் மன்றம் அந்தப் பிரச்னை குறித்து நிமிர்ந்து உட்கார்ந்து சிந்திக்கத் தொடங்கியது. அந்த அளவுக்கு நமது சமுதாயம் மரத்துப்போயிருக்கிறது என்பதன் அடையாளம் இது.
பொது வெளியில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. செங்கர் கைது செய்யப்பட்டார். ஆனால், அந்த வழக்கை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சிபிஐ, அதைக் கிடப்பில் போட்டது.

அந்தப் பெண்ணுக்கு ஒரே ஆதரவாக இருந்த மாமாவின் மீது காவல் துறை ஒரு வழக்கை ஜோடித்து அவரை சிறையில் தள்ளியது.

ரேபரேலியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாமாவைச் சந்திக்க அந்தப் பெண்ணும், அவரது இரண்டு சித்திமார்களும், வழக்குரைஞரும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அந்தக் காரில் ஒரு லாரி பலமாக மோதி ஏற்படுத்திய விபத்தில் இரண்டு சித்திகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்தப் பெண்ணும் அவரது வழக்குரைஞரும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதுதான் சிபிஐ விழித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் விழித்துக் கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேச அரசு விழித்துக் கொண்டிருக்கிறது. ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய ஜனநாயகம் எப்படிச் செயல்படுகிறது என்பதன் அடையாளம் இது.

காரில் மோதிய வாகனத்தின் எண் பலகை அழிக்கப்பட்டிருக்கிறது. அந்த வாகனத்தின் வேகமும், விதிகளை மீறித் தவறான பாதையில் வந்து மோதியிருக்கும் விதமும் இதற்குப் பின்னால் சதி இருப்பதை உறுதி செய்கிறது.

ஆனால், உத்தரப் பிரதேச காவல் துறையைப் பொருத்தவரை, இது வெறும் சாலை விபத்தாகத்தான் தெரிகிறது. முதல் தகவல் அறிக்கையில் லாரியின் ஓட்டுநர் பெயரும், அந்த வாகனத்தின் உரிமையாளர் பெயரும்கூட இடம்பெறவில்லை என்பதை என்னவென்பது?

செங்கரின் ஆட்களால் தங்களுக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சம் குறித்தும், நீதி கேட்டும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அந்தப் பெண்ணின் தாயார் கடந்த ஜூலை 12-ஆம் தேதி எழுதிய கடிதம் அவரது பார்வைக்கே கொண்டு செல்லப்படவில்லை. கடந்த ஜனவரி மாதமே,

இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி கோரி அவர் எழுதிய மனுவும் தலைமை நீதிபதியிடம் போய்ச் சேரவில்லை. உச்சநீதிமன்றத்தின் நிலைமையே இப்படி என்றால், இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா இல்லை, மாஃபியா ஆட்சியா என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

உச்சநீதிமன்றம் தலையிட்டிருக்கிறது. வழக்கு தில்லிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கான இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. நரேந்திர மோடி அரசும், பாஜகவும் இந்தப் பிரச்னையை எப்படி கையாள்கிறது என்பதைப் பொருத்துத்தான் அவர்கள் மீதான நம்பகத்தன்மையும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் உறுதிப்படும்.


கடந்த மக்களவையில் 26% உறுப்பினர்கள் மீது கிரிமினல்
வழக்குகள் இருந்தன. 2019-இல் அமைந்த 17-ஆவது
மக்களவையில் 43% உறுப்பினர்கள் கிரிமினல் குற்றப்
பின்னணி உடையவர்கள். இவர்கள்தான் சட்டமியற்றுகிறார்கள்!


தினமணி


avatar
Guest
Guest

PostGuest Fri Aug 02, 2019 5:48 pm

 எங்கே மனசாட்சியின் குரல்? 1571444738
மனச்சாட்சிக்கு குரல் உண்டா?
மனச்சாட்சி ஒன்று மனிதனுக்கு உண்டா?
மனம் சாட்சியானால் அது அவனுக்குத்தான் சாதகமாக சாட்சி சொல்லும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக