புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_m10ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி)


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:26 pm

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Photo-1524024973431-2ad916746881
-


வீட்டில் இருக்கும் குட்டி ஆடு ஒரு
சுட்டி ஆடாகவே இருக்கும் !
மழையில் அது நனைந்தாலும்
சிலிர்த்து குதிக்கும் மகிழ்ச்சியில் !

ஆட்டுக்கு தெரியும் மழை அதை
நனைக்குமே தவிர சிதைக்காது ஒருபோதும்
என்று ...! மழை ஒரு ஓநாயும் அல்ல
ஆட்டுக் குட்டியை தனக்கு இரையாக்க !

ஆனால் எத்தனை எத்தனை ஓநாய்கள்
மனித வடிவில் நம் வீட்டு செல்லக்
குட்டிகளை ,பச்சிளம் பிஞ்சுகளை ,
குறி வைத்துக் குதற !

எத்தனை நாளைக்கு நாம் பொறுத்துக்
கொள்வது இந்த குரூர செயலை ?
நம் வீட்டு ஆட்டுக்குட்டிக்குத் தெரியும்
நாய் எது ஓநாய் எது என்று !

நம்ம வீட்டு செல்லக்குட்டிக்கு மட்டும்
அல்ல ...நமக்கே தெரிவதில்லையே
மனித வடிவில் மிருகம் யார் நம்
அருகில் என்று ?
-
-------------------------

- K .நடராஜன்
கவிதைமணி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:27 pm

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) Lamb-in-the-rain-tracy-saunders
---
பதுங்கு குழிகளா..? சவக்குழிகளா...? என்கிற அளவில்
அளவில்லாமல் அள்ளப்பட்டிருந்த மணல் ஆற்றினைப்
பக்குவமாய் கடந்து ஆடுகளை மேய்த்திருந்தேன் -
அக்கறையில் உள்ள மேய்ச்சல் நிலத்தினில்......

உச்சி வெயில்தனில் - இளைப்பாரவும் உணவருந்தவும்
இருந்த மரங்கள்யாவும்  ஏழ்மைக்கு விலைபோயிருந்தன -
வரவேண்டிய மழையும் - புதுவாகன ஓட்டிப்போல்
இடக்கரம் கைபோட்டு வலக்கரம் திரும்பிவிடுகிறது...

மாலையில் - தீடீரென மேகங்கள் சூழ்ந்ததால் -
மேய்த்த ஆடுகளோடு இல்லம் திரும்பினேன் -
இல்லமடைந்த பிறகு - ஆட்டுக்குட்டி ஒன்றுக்காணாமல் -
வந்தவழியிலும் - மணலெடுத்த குழிகளிலும் தேடிச்சென்றேன்...

அப்பொழுதுவந்த தீடீர்மழையானது  -ஆற்றினை நனைக்காமல்
'ஆட்டிக்குட்டியை நனைத்த மழை'யாகவே இருந்தது...
குழியிலகப்பட்ட ஆட்டினை மீட்டெடுத்துவிட்டேன் - ஆனால்
இன்றுவரையிலும் மீட்கமுடியவில்லை  என் ஆற்றினை...!!!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:27 pm


**
"மழையே" என் "மழையே"
ஒவ்வொரு துளிகளும் என் "உயிரே"
நனைந்தேன் நான் நனைந்தேன்!
மழை வரும் போதெல்லாம் நான் நனைந்தேன்!

மழையே என் மழையே
ஏன் நனைத்தாய் என் ஆட்டுக்குட்டியை -
எங்களின் வறுமை வாசலைத் திறக்கிறாயா!
ஆட்டுக் கொட்டகை ஓட்டை என்று!!

வாடினேன்! நான் வாடினேன்!
என் ஆட்டுக்குட்டி வாடுகையில்!
இச்சிறு மழையிலே உணர்ந்தேன் மழையால்
ஒரு ஜீவன் நடு நடுங்கயைிலே!
இறைவா கொடுத்திடு நீ கொடுத்திடு
உலக ஜீவன்களுக்கு
எதையும் அளவாய்.......

- செந்தில் குமார்.மு. ஓமன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:28 pm


மரகத புற்பரப்பில்
மணிக்கழுத்தை கவிழ்த்தபடி
ஆழ்ந்த மேய்ச்சலில்
மூழ்கிய அச்செம்மறியை!

நீல் வானின்
நிரமற்ற நீர்த்துளிகள்
ஆட்டுக்குட்டியின்
ரோம வயல்களில்
தூங்கி வழிந்த
வெண்ணிற மயிர்களை
சொட்டு சொட்டாய்
தட்டித் தட்டி எழுப்புகின்றன !

தூக்கம் களைந்த
வெள்ளை மயிர்கள்
சிங்கப் பிடரியாய்
சிலிர்த்தபடி,
கூதைக் காற்றில்
கூண்குருகி
நிச்சலமாய் நிற்கும்
அக்குட்டிக்கு
பாவமென்று போர்வைதனை
போத்திவிட்டுச் சென்ற
அந்த பேகன் யாரோ ?

அந்த அழகு செம்மறியை
நனைக்காத ஒவ்வொரு
மழைத்துளிகளும்
சபிக்கப்பட்டவைகள் !

-அம்பேத் ஜோசப்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:28 pm


வாடும் பயிர்கள்
நாடி நிற்கும் பருவமழைக்காக
நாளும் தாகம் தணிக்க
தேடி அலையும் விலங்குகள்
நாடுவதோ தண்ணீர்!

மாட்டுக் கொட்டிலில்
மயங்கி சோர்ந்து நின்றது
வெயிலின் கொடுமையில்
வெள்ளை ஆட்டுக்குட்டி!

அது விரும்பியது குளுமை
அங்கு வீசியது வெம்மை
ஆட்டுக்குட்டி ஏங்கியது
சொட்டுபோடும் மழைக்காக!

இடிமுழக்கம் காணும்
கோடைமழை கண்டு
ஆட்டுக்குட்டி துள்ளி ஓடி
மழைநீரில் நனைந்தது!

குடத்துடன் அலையும் மக்கள்
தாகம் தணிக்கும்
கோடைமழை கண்டு
குதுகூலம் கொள்வர்!

மழைத்துளிகள் கண்டபின்
குளுமை தேடி
கொடைக்கானல் ஊட்டி
மக்கள் அலையமாட்டார் !

குமுறும் கோடைமழை
வியர்வைத்துளிகளை
விரைவில் நலமுடன்
துடைக்கும் மழைத்துளிகள்!

- கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:29 pm


**

விரைந்தோடும் கருவுற்ற கார்முகில்கள்
காதலி(மரங்கள்) இல்லா வெற்றிடம் கண்டு
நெஞ்சம் குமுறி சிந்திய கண்ணீர்த் துளிகளே
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை !!

மழை பொய்த்து போக - மண் வறண்டு
சோலைவனங்களும் பாலைவனங்களாக
வெப்ப சலனத்தால் பெய்த மழை
ஆட்டுக்குட்டியை மட்டுமே நனைத்து சென்றதே !

வஞ்சகமாய் வீசிய வலையில் சிக்குண்ட நாம்
நஞ்சென தெரிந்தும் பெப்சி கோக்குக்கு அடிமையாக,
ஆழ்துளைக் கேணிகள் தரணியை ஆட்கொள்ள
நிலத்தடி நீர் வற்றி போனதே !

மண் குளிர் பொழியவும் மறந்ததே மழை !
பொய்த்த மழையும் தூவானமாக,
ஆட்டுக்குட்டியை நனைத்த மழையானதே !

- தனலட்சுமி பரமசிவம்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:30 pm



கருவறையில் தண்ணீர் குடத்தில்
என்னை பொத்தி வைத்தாள்,
பின்பு மார்பிலே கட்டி அணைத்தாள் ,

வளரும் பொழுது தன் கட்டுப்பாட்டுக்குள்
ஒரு ஆட்டுக்குட்டியாய் அணைத்து வைத்தாள்!

பருவ வயதில் என்னை என் போக்கில் விடு
நான் துள்ளி ஓடியபொழுது ,
வாழ்க்கையின் சுக துக்கம், நல்லது கேட்டது
என்னை தாக்கியது!

உணர்ந்தேன்,
இந்த ஆட்டுக்குட்டியையும் நனைத்தது மழை என!
அம்மாவின் ஆரவணைப்புக்கு ஏங்கினேன், மீண்டும்!!
-
------------------
- ப்ரியா ஸ்ரீதர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:30 pm



வாட்டும் வெயிலில் வதைந்தாலும் வரிந்தே புல்லைத் தான்மேயும் !
கூட்டும் கொடுமை என்றாலும் கூட்டுக் குள்ளே அடங்காது !
நோட்டம் விட்டே ஓடோடும் நொடியும் எங்கும் தங்காது !
ஆட்டுக் கூட்டம் அதனோடே அழகுக் குட்டி பலஓடும் !

அங்கும் இங்கும் கூட்டத்தில் அழகாய் ஓடி முந்திவரும் !
தொங்கும் மரத்தில் செடிகொடியில் துணிவாய் நின்றே தழைதின்னும் !
எங்கே பசுமை என்றேதான் எங்கும் ஓடி ஏமாறும் !
தங்க நிழலும் இல்லாமல் தவித்தே கத்தித் தடுமாறும் !

தண்ணீர் இன்றி ஊரெல்லாம் தவியாய்த் தானே தவிக்கிறது !
கண்ணீர் விட்டு மக்களுமே கலங்கி வானம் பார்க்கின்றார் !
கண்ணில் காணும் குளம்குட்டை காண வில்லை காய்ந்தெங்கும் !
மண்ணில் தண்ணீர் இல்லாமல் மாயும் உயிர்கள் கணக்கில்லை !

மண்ணில் உயிர்கள் படும்பாட்டை மனதில் எண்ணித் தான்வதைந்தே
கண்ணீர் விட்டு வானம்தான் கதறி மழையாய்ப் பெருகிற்றே !
அன்பு ஆட்டுக் குட்டியதும் அடடா மழையில் நனைந்தோடி
இன்பத் தோடு குதிக்கிறதே இனிதே குளித்து சிலிர்க்கிறதே !

- ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:31 pm


**

பூக்களின் கீழிருந்த காம்பினையும்,
மீசைக்குக் கீழிருந்த உதடுகளையும்,
கைகளால் குடைபிடிக்கப்பட்ட நெற்றியையும்,
சேலை முந்தானையால் மறைக்கப்பட்ட குழந்தையையும்,

நெகிழிப்பையால் மூடப்பட்ட இட்லிகளையும்,
குடைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த குண்டுமல்லியையும்,
மாடத்தில் எரிந்து கொண்டிருந்த நெய் விளக்கையும்,
தொப்பையின் நிழலில் ஒளிந்திருந்த கட்டை விரலையும்,

நனைக்காமலே போய் விட்டது
வா, வா, என்றழைத்த ஏழை
விவசாயியின் வேண்டுகோளை விலக்கியும்
வராதே, வராதே என்று வேண்டிக்கொண்ட
தெரு வியாபாரிகளின் வேண்டுதலை ஏற்றும்
வராமலே நின்று விட்டது
ஆட்டுக்குட்டியை நனைத்த மழை

- மகாலிங்கம் இரெத்தினவேலு, அவனியாபுரம்

**

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 7:31 pm

**

வெண்ணிற மயிர் சிலுப்பி
வெளிவந்த செம்மறிக்குட்டி
பச்சை வனாந்தரத்தில்
அங்குமிங்கும் திரிந்து மேய்கையில்!

செவ்வரக்கு வானம்
மெல்ல களைந்தோடி
கார்குழலின் இருளைவாங்கி
மேனி முழுதும் தடவிக்கொண்டன
நீர்க் கொப்பளங்கள் !

கொப்பளங்களுக்குள் இருக்கும்
நீர் மூட்டைகளின் முடிச்சு
மெல்ல அவிழ்கையில்
நுனிப்புல்லை கீறிமேயும்
அக்குட்டியும்,
புற்களை போத்திய
அந்த பச்சைக்காணியும்
தலை குளிக்கையில் !

அங்கே ! விழுந்து விழுந்து
உயிர் விடும், ஒவ்வொரு
மழைத்துளியையும் கண்டு
மெல்ல மெல்ல வெளிவருகின்றன
ஆட்டுக்குள் ஒளிந்திருந்த குளிரும் !
காட்டுக்குள் ஒளிந்திருந்த தளிரும் !

- அம்பேத் ஜோசப்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக