புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
4 Posts - 3%
bala_t
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
1 Post - 1%
prajai
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
1 Post - 1%
Kavithas
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
6 Posts - 1%
prajai
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
5 Posts - 1%
manikavi
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_m10இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 15, 2019 6:52 pm

இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல் _107369560_8d449f1e-6b47-47ca-bcf3-2e7c222b4507
-
கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய
11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள்
என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமாட்டீர்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் குழந்தைப் போராளியாக இருந்த
கௌரிக்கு இப்போது வயது 26. ரோஷன் போன்றவர்களைக் கொண்ட
அடக்குமுறை ஆட்சி என்று கூறப்பட்ட அரசுக்கு எதிராக போராடிய
இயக்கத்தைச் சேர்ந்தவர் அவர்.

``நான் சிங்களர்களைப் பார்த்ததோ அல்லது பேசியதோ கிடையாது''
என்கிறார் கௌரி. ``அவர்கள் கெட்டவர்கள், எங்களைக் கொன்று
விடுவார்கள் என்று நினைத்திருந்தோம்'' என்று அவர் கூறினார்.

ரோஷனை பொருத்தவரையில் விடுதலைப்புலிகள் வெறுப்புக்கு
உரியவர்களாக இருந்தனர். 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில்
அவர்களுடைய தாக்குதல்களால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்
என்பது அவர்களுடைய வெறுப்புக்குக் காரணம்.

``நாங்கள் ஒருவரை ஒருவர் எதிரியாகத்தான் பார்த்துக் கொண்டோம்''
என்று பி.பி.சி.யின் 'பிரிவினைகளைக் கடந்து' (Crossing Divides)
பகுதிக்கு அளித்த பேட்டியில் கூறினார் 29 வயதான ரோஷன்.

சிதறிவிட்ட பூமியில் மக்கள் ஒன்று சேருவது பற்றிய நிகழ்ச்சி அது``
ஆனால், இப்போது திருமணம் செய்து கொண்டு நாங்கள் மகிழ்ச்சியுடன்
இருக்கிறோம். எங்கள் காதலின் அடையாளம் தான் எங்களுடைய மகள்''
என்று ரோஷன் கூறினார்.

எனவே, வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும், குட்டி மகள்
செனுலி சமல்காவை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது போன்ற
கனவுகளைப் பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலைக்கான மாற்றத்தை
ஏற்படுத்தியது எது?


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 15, 2019 6:53 pm


`என் தோழியர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்'
பெரும்பான்மை சிங்களர்களின் தேசியவாத செயல்பாடுகள்
அதிகரித்ததால் ஏற்பட்ட கோபத்தில் - 1983ல் ஒரு தாக்குதலில்
13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து தமிழ்ப்
போராளிகளின் மோதல் இலங்கையில் ஆரம்பமானது.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகக்
கலவரங்கள் வெடித்தன. அதில் சிறுபான்மையினரான அவர்களில்
பல நூறு பேர் கொல்லப்பட்டனர்.

கௌரியின் வாழ்வில் மோதல் என்பது தொடர்ந்து நிகழ்ந்து
கொண்டிருந்த விஷயமாகிவிட்டது. ஆனால், 2009 ஜனவரியில்,
திரும்ப முடியாத வகையில் மாற்றம் ஏற்பட்டது. தன்னுடைய
மூத்த சகோதரர் சுப்ரமணியம் கண்ணன் ஓட்டிச் சென்ற
டிராக்டர் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கியது என்ற தகவல் வந்த
பிறகு அந்த மாற்றம் நிகழ்ந்தது.

வடக்கு இலங்கையில் விடுதலைப்புலிகள் வசமிருந்த விஷ்வமடு
என்ற அவருடைய கிராமத்திற்கு அருகே, அரசின் கட்டுப்பாட்டில்
இருந்த பகுதியில் இருந்து அந்த டிராக்டர் மீது தாக்குதல்
நடந்திருக்கிறது.

மனம் உடைந்த நிலையில், சகோதரரைத் தேடி சென்றபோது
போராளிகளிடம் சிக்கிக் கொண்டார். 16 வயதான கௌரிக்கு
அவர்கள் ஒரு வாரம் பயிற்சி அளித்து, போர்க்களத்துக்கு
அனுப்பிவிட்டனர்.

``மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்'' என்கிறார்
கௌரி. ``என் தோழியரில் ஒருவர் வெடிகுண்டு தாக்குதலுக்கு
ஆளானார். அவளைத் தூக்க நாங்கள் முயற்சி செய்தோம்.

ஆனால், அவள் சயனைடு குப்பியைக் கடித்து மரணம் அடைந்தார்.
மிக மோசமாகக் காயமடைந்துவிட்டதால் இனிமேல் உயிர்
பிழைப்பதில் அர்த்தமில்லை என்று சொல்லி அப்படி மரணித்து
விட்டாள்'' என்கிறார் கௌரி.

``நாங்கள் குளிப்பதற்கு வசதி கிடையாது. சரியான உணவு
கிடையாது. சில நேரங்களில், எதற்காக வாழ வேண்டும் என்று
எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்'' என்றும் கௌரி
குறிப்பிடுகிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 15, 2019 6:54 pm



ரோஷனுக்கு 14 வயதாக இருந்தபோது 2004ம் ஆண்டில்
அவருடைய வாழ்வில் உள்நாட்டுப் போரின் பாதிப்பு
நிகழ்ந்திருக்கிறது.

வவுனியா மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த
பகுதிக்கும், அரசு வசம் இருந்த பகுதிக்கும் இடையில் ரோஷனின்
குடும்பம் வசித்த கிராமத்தில் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின்
போது, விடுதலைப்புலிகளின் குண்டுவீச்சு தாக்குதல் நடந்திருக்கிறது.
-
பொதுமக்களும், ராணுவத்தினரும் அதில் கொல்லப்பட்டனர்.
அதன்பிறகு கோபமடைந்த நிலையில், தனது தந்தை மற்றும்
உறவினர்களுடன் மக்கள் பாதுகாப்புத்துறையினருடன் ரோஷன்
குடும்பத்தினர் சென்றுவிட்டனர்.

``ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் தாக்குதல்கள் பற்றி நாங்கள் கேள்விப்
பட்டோம்'' என்கிறார் அவர். போரில் தனது உறவு முறை சகோதரர்
ஒருவரை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். ``மக்கள் பயத்தில்
இருந்தார்கள். கொல்லப்படுவோம் என்ற அச்சம் காரணமாக,
குடும்பங்கள் ஒன்றாக பயணிக்காமல் இருந்தனர்'' என்றார் அவர்.

2009ல் போர் முடிவுக்கு வந்ததற்கு முன்னாள் ஏறத்தாழ 1,00,000 பேர்
கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோதக் கொலைகளுக்கு இரு தரப்புமே காரணம் என்று
2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில்
குற்றஞ்சாட்டப்பட்டது. துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகள்
உள்ளிட்ட குற்றச் செயல்களுக்குப் பாதுகாப்புப் படையினர் தான்
காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

குழந்தைகள் மற்றும் பருவ வயதை தாண்டியவர்களை போரில்
ஈடுபடுத்தியதாக விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டப்
பட்டிருந்தது.

கௌரி ஒரு மாதத்துக்கும் மேலாகப் போரில் ஈடுபட்டிருக்கிறார்.
அவருக்கு இருதயக் கோளாறு இருப்பதாக விடுதலைப்புலிகளின்
கமாண்டர்கள் அறிந்து, அவரை விடுவித்து விட்டனர். அதன் பிறகு
இலங்கை ராணுவத்திடம் அவர் தஞ்சமடைந்துவிட்டார்.

அரசு மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்ட முன்னாள் விடுதலைப்
புலி போராளிகளில் கௌரியும் ஒருவர்.

பிரிவினைக்கான கோரிக்கை குறித்து திருப்தி அடைந்திருந்த
போதிலும், சிங்களர்களுடன் காலத்தைக் கழித்தபோது, அவர்கள்
``மனிதாபிமானிகள்'' என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
இறுதியில் அவர் மக்கள் பாதுகாப்புத் துறையில் சேர்ந்தார்.

வடக்குப் பகுதியில் சமுதாய மக்களுக்கு அளிப்பதற்காக வேளாண்
பண்ணைகளை அதிகாரிகள் உருவாக்கினர். அவற்றில் ஒன்றான -
உடயன்கட்டு - பகுதியில் தான் தன்னுடைய எதிர்கால கணவரை
கௌரி சந்தித்தார்.

2013ல் கௌரி அங்கே பணியமர்த்தப்பட்ட போது, ரோஷன் அங்கு
ஏற்கெனவே ஓராண்டாக இருந்து வந்தார். தமிழ் பேசும் மக்களுடன்
தொடர்பு கொள்ள முடியாமல் அவருடைய நிலை பரிதாபகரமாக
இருந்தது.
-


அவருக்கு மொழி பெயர்த்துக் கூறிய, கௌரியுடன் பணியாற்றியது,
அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துவிட்டது.

``அவர் தனிமையாக உணர்ந்திருக்க வேண்டும்'' என்கிறார் கௌரி.
``அவர் நன்றாக இருக்கிறார் என்பதை உணர்த்த விரும்பினேன்.
எனவே வீட்டில் சமைத்த உணவை அவருக்கு எடுத்துச் செல்வேன்''
என்றும் அவர் தெரிவித்தார்.

வெகு விரைவிலேயே அவர்களுடைய உணர்வுகள் தெளிவாகி
விட்டன.

``அவருடைய அம்மாவைக் காட்டிலும் அதிகமாக அவரை நான்
நேசிப்பதாகக் கூறினேன்'' என்று கௌரி கூறினார்.

``நான் விடுமுறையில் சென்றபோது கௌரி அழுதிருக்கிறார்''
என்றார் ரோஷன். ``வாழ்க்கைக்குத் தேவையான பணம் என்னிடம்
இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய கௌரி
விரும்பியிருக்கிறார்'' என்றும் குறிப்பிட்டார்.

தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தியபோது, எதிர்ப்புகள்
இருந்தன. ``சிங்களப் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
நீ ஏன் தமிழ்ப் பெண் மீது நாட்டம் கொண்டிருக்கிறாய்?'' என்று
ரோஷனின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

ரோஷனின் தாயார் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்திருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்னர்
ஈடுபட்டிருந்த கௌரியின் சகோதரியும் இதை எதிர்த்திருக்கிறார்.
சிங்களரை மணப்பது, தமது சமுதாயத்தில் இருந்து கௌரியை
பிரித்துவிடும் என்றும், கௌரியை அவர் துன்புறுத்துவார் என்றும்
அவர் கருதியிருக்கிறார்.

இருவரும் பாசம் மற்றும் மரியாதை காட்டுவதைப் பார்த்து
இரண்டு தரப்பு குடும்பத்தினரும் மனம் மாறியிருக்கின்றனர்.
-
``கடைசியாக நல்லது நடந்தது'' என்கிறார் கௌரி.
செனுலி சமல்கா பிறந்ததில் ரோஷனின் தாயார் மகிழ்ச்சி
அடைந்தார் என்கிறார் கௌரி. ரோஷனின் தாயார் இப்போது
காலமாகிவிட்டார்.

``எங்களுடைய இளைய தேவதை எங்களை இன்னும் நெருக்கமாக்
கிவிட்டாள்'' என்கிறார் கௌரி.

இப்போதெல்லாம், தம்பதியினராக தன்னுடைய குடும்பத்தினருடன்
வாழ்வதாக கௌரி தெரிவித்தார். தன் சகோதரிக்கு ``பிடித்தமான
சகோதரராக'' ரோஷன் மாறிவிட்டார் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஜோடிக்கு 2014ல் திருமணம் நடைபெற்றது.
செனுலி சமல்காவை இந்து மற்றும் புத்த கோவில்களுக்கு அழைத்துச்
செல்கின்றனர். அவர்களைப் பொருத்த வரை பிரிவினை என்பது
கடந்த கால விஷயமாகிவிட்டது.

இருந்தபோதிலும், 250 பேர் கொல்லப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு
தாக்குதலைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்
வெடித்த நிலையில், நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம்
தொடங்கிவிடுமோ என்று இந்தத் தம்பதியினர் அஞ்சுகின்றனர்.

``ஒரு போரில் ஒரு தரப்பு மக்கள் மட்டும் மரணிக்கிறார்கள் என்பது
அல்ல'' என்கிறார் கௌரி. ``இனம் அல்லது மதம் வித்தியாசமின்றி
நிறைய பேர் கொல்லப்படுகிறார்கள்'' என்று அவர் குறிப்பிட்டார்.

``இன்னொரு போர் எங்களுக்கு வேண்டாம்'' என்கிறார் கௌரி.
-
-----------------------------
சுனெத் பெரெரா
நன்றி-பிபிசி-தமிழ்


avatar
Guest
Guest

PostGuest Sat Jun 15, 2019 9:52 pm

சமீபத்தில் நடந்த குண்டு தாக்குதலின் பின்னர் போர்காலத்தில் வன்னியில் இருந்த ராணுவ தளபதி இதே தொலைக்காட்சியில், பிபிசி,விடுதலைப் புலிகள் எந்த இடத்திலும் மக்களை கொல்லவோ தாக்கவோ முயற்சிக்கவில்லை எனவும்,அவர்களின் தாக்குதல் ராணுவத்துடனே தான் இருந்ததாகவும் தெரிவித்தார். இதையே மஹிந்தவும் பொன்சேகாவும் ஊடக நேர்காணலில் சொல்லி இருந்தனர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக