புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆலயமணியின் ஓசையிலே! I_vote_lcapஆலயமணியின் ஓசையிலே! I_voting_barஆலயமணியின் ஓசையிலே! I_vote_rcap 
1 Post - 50%
வேல்முருகன் காசி
ஆலயமணியின் ஓசையிலே! I_vote_lcapஆலயமணியின் ஓசையிலே! I_voting_barஆலயமணியின் ஓசையிலே! I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலயமணியின் ஓசையிலே! I_vote_lcapஆலயமணியின் ஓசையிலே! I_voting_barஆலயமணியின் ஓசையிலே! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஆலயமணியின் ஓசையிலே! I_vote_lcapஆலயமணியின் ஓசையிலே! I_voting_barஆலயமணியின் ஓசையிலே! I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஆலயமணியின் ஓசையிலே! I_vote_lcapஆலயமணியின் ஓசையிலே! I_voting_barஆலயமணியின் ஓசையிலே! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆலயமணியின் ஓசையிலே! I_vote_lcapஆலயமணியின் ஓசையிலே! I_voting_barஆலயமணியின் ஓசையிலே! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆலயமணியின் ஓசையிலே! I_vote_lcapஆலயமணியின் ஓசையிலே! I_voting_barஆலயமணியின் ஓசையிலே! I_vote_rcap 
20 Posts - 3%
prajai
ஆலயமணியின் ஓசையிலே! I_vote_lcapஆலயமணியின் ஓசையிலே! I_voting_barஆலயமணியின் ஓசையிலே! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆலயமணியின் ஓசையிலே! I_vote_lcapஆலயமணியின் ஓசையிலே! I_voting_barஆலயமணியின் ஓசையிலே! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஆலயமணியின் ஓசையிலே! I_vote_lcapஆலயமணியின் ஓசையிலே! I_voting_barஆலயமணியின் ஓசையிலே! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆலயமணியின் ஓசையிலே! I_vote_lcapஆலயமணியின் ஓசையிலே! I_voting_barஆலயமணியின் ஓசையிலே! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆலயமணியின் ஓசையிலே! I_vote_lcapஆலயமணியின் ஓசையிலே! I_voting_barஆலயமணியின் ஓசையிலே! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலயமணியின் ஓசையிலே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 09, 2019 4:57 pm

ஆலயமணியின் ஓசையிலே! Sk1

திருக்கோயில்களில் வழிபாட்டின்போது பயன்படுத்தப்படும்
மங்கல ஒலி எழுப்பும் இசைக் கருவிகளில் ஒன்றாக மணி
பயன்படுத்தப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

கையில் பிடித்துக் கொண்டு அடிக்கப்படும் மணி, "கைமணி' என
அழைக்கப்படுகிறது. இதைத்தவிர "கொத்துமணி',"கண்டாமணி'
என்று பல வகைகள் ஆலய வழிபாட்டில் உள்ளன. கண்டாமணி'
என்பது ஆலயத்தில் வழிபாடு நடப்பதையும், நேரத்தை
அறிவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கைமணியின் பிடியின்
உச்சிப்பகுதியில், சிவன் கோயிலாக இருந்தால் "நந்தி'; பெருமாள்
கோயில் என்றால் "கருடன் அல்லது அனுமன்'; காளி-பிடாரி கோயில்
என்றால் "திரிசூலம்' காட்டப் பெற்றிருக்கும்.

பண்டை நாளில் கோயில்களில் வழிபாடு நடக்கும் பொழுது
கைமணி, எறிமணி, தூபமணி போன்றவற்றை செய்து அளிக்கவும்
தானம் அளிக்கப் பெற்றதை பல கோயில் கல்வெட்டுச் சான்றுகளின்
மூலம் அறிகிறோம்.

காளி, பைரவர், துர்க்கை போன்ற தெய்வத்திருமேனிகளில்
தனது கரங்களில் ஒன்றில் "மணியை' பிடித்திருப்பதைப் போன்று
சிற்ப வடிவங்களில் காணலாம். பழுவேட்டரையர்கள் எடுப்பித்த
மேலப்பழுவூர் அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருஹம் எனப்படும்
இரட்டைக் கோயிலில் கருவறை தேவகோட்டத்தில் உள்ள முருகன்
சிற்பத்தில், தனது மேற்கரத்தில் சூலத்துடன் கூடிய மணியை
தாங்கியிருப்பது தனிச்சிறப்பாக விளங்குகிறது.

திருக்கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேக வைபவத்தின்
போது வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படும் "கைமணிக்கு'
சிறப்பு வழிபாடு நடைபெறுவதைக் காணலாம்.

வைணவம் போற்றும் ஆச்சாரியர்களில் ஒருவரான சுவாமி
வேதாந்த தேசிகன், திருமலையில் எழுந்தருளி அருள்புரியும்
வெங்கடேசப் பெருமாளின் "திருக்கோயில் மணியின்' அம்சமாக
- அவதாரமாக சிறப்பித்துப் போற்றப்படுகிறார்.
-
---------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 09, 2019 4:59 pm



பல கோயில்களில் காணப்படும் மணிகள் அக்கோயிலின்
சிறப்பையும், வரலாற்றுப் பெருமையையும் எடுத்துக் கூறுவதில்
பெரும் பங்கு வகிக்கின்றன.

ராமேஸ்வரம் திருக்கோயிலுடன் நேபாள மன்னர்கள் நெருங்கிய
தொடர்பு கொண்டவர்கள். இக்கோயிலில் அழகிய வேலைப்பாடுடன்
காட்சி தரும் மணி நேபாள மன்னரால் 18-ஆம் நூற்றாண்டு
வழங்கப்பட்டதாகும்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில் உள்ள
திருக்குறுங்குடிகோயில் சிறப்பான வைணவ திருத்தலமாக
விளங்குகிறது. இக்கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு முன்பாக
பெரிய மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது.

திருவாங்கூர் மன்னர் ஆதித்யவர்மா 1949-இல் செய்தளித்த மணி
கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் மணியில் இச்செய்தி பாட்டாகப்
பொறிக்கப்பட்டுள்ளது. 500 ஆண்டுகளுக்கும் மேலாக இம்மணி தி
ருக்குறுங்குடி நம்பியின் புகழை ஒலித்துக்கொண்டே இருப்பது
நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.

திருச்சிராப்பள்ளி தாயுமான சுவாமி கோயிலில் வழிபாட்டில்
இருக்கும் மணியில் "திருச்சினாப்பள்ளி ஸ்ரீ தாயுமான சுவாமிமலை
நாத கண்டாமணி - சிவமயம்' என்று புடைப்பு எழுத்துக்களாகக்
காணப்படுகிறது.

மேலும் இது 1918-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் ரயில்வே
தொழிற்சாலையில் சிருங்டன் என்பவரின் மேற்பார்வையில் செய்யப்
பட்டது என்பதையும் அறிய முடிகிறது. திருச்சிராப்பள்ளி என்ற பெயர்,
அக்கால கட்டத்தில் "திருச்சினாப்பள்ளி' என்று ஆங்கிலேயர்களால்
அழைக்கப்பட்டு வந்ததையும் அறியமுடிகிறது.

சிதம்பரம் கோயிலில் வெவ்வேறு இடங்களில் மணிகள் பயன்
பாட்டில் இருந்து வருகின்றன. நடராசர் சந்நிதிக்கு அருகே ஒரு
மணியில், “வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினத்திலிருந்த தென் இந்திய ரயில்வே பட்டறையில்
செய்யப்பட்டு 1889-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டதை அறியமுடிகிறது.
இக்கோயிலில் உள்ள மற்றொரு மணியில் "சிதம்பரம் நடராஜர்
கண்டாமணி காரைக்குடி இளையத்தக் குடிக்கோயிலில்
ஒருக்கூருடையான மெய்யப்ப செட்டி மகன் செட்டியப்ப செட்டி
உபயம் 1884-ஆம் ஆண்டு வார்ப்பு ராமசுப்பய்யா ஆசாரி' என்று
பொறிக்கப்பட்டுள்ளது.

மணியினை வடித்து, வார்ப்பு செய்தவர் யார் என்ற குறிப்பினையும்
இம்மணியின் மூலம் அறிந்து கொள்கிறோம்.

சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலின் தென்பகுதியில்
உள்ள மணியில், "ராமசெயம் கலியுகாதி 4990- ஆம் ஆண்டு
சென்ற சர்வதாரி வருடம் தை மாதம் 24-ம் தேதி ஆடுர்
கலிராமகுமாரன் மங்களம் பிள்ளை சிதம்பரம் அம்பலவான பரதேசி
பண்ணப்பட்டு வைத்திய சுந்தரம் உபயம்' என்ற வாசகங்கள்
காணப்படுகின்றன.

சிதம்பரம் கோயிலில் சந்நிதி நுழைவாயிலின் இடப்புறம் உள்ள
பெரிய மணியில் "சிதம்பரம் ஆராய்ச்சிமணி - யாழ்ப்பாணம்
முழாய் சின்னப்பபிள்ளை உபயம் - 1884' என்று பொறிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் "முழாய்' என்ற பகுதியைச் சேர்ந்த சின்னப்பபிள்ளை
என்பவர் இம்மணியை செய்தளித்தார் என்பதை அறியமுடிகிறது.
நூறு ஆண்டுகள் மேற்பட்டும் இன்றும் வழிபாட்டு நேரத்தை
அறிவிப்பதற்கு இம்மணியினைப் பயன்படுத்தி வருகின்றனர்.
-
-------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 09, 2019 5:01 pm



ஜெர்மனியில் - பேசியெம் என்ற இடத்தில் உள்ள வார்ப்பு ஆலை
"மணிகள்' செய்வதில் ஒரு சிறப்பிடம் என்ற புகழ் பெற்று
விளங்கியிருக்கிறது. உலகின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து ம
ணிகள் வார்ப்பு செய்து அனுப்பப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் தொலையனூரில்
உள்ள பெரிய கருப்பண்ணசாமி கோயிலில் இரண்டு மணிகள்
காணப்படுகின்றன. ஒன்று 1922-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

மற்றொன்று 1992-ஆம் ஆண்டு, புதுவயல் என்ற ஊரைச் சேர்ந்த
சித.பெரியண்ணன் என்பவரால் உபயமாக செய்தளிக்கப்பட்டது.
இம்மணியும் ஜெர்மனியில் உள்ள ஆயஎ ஆஞஇஏமங என்ற
வார்ப்பு ஆலையில் வார்க்கப்பட்டதை அம்மணியின் மீது
காணப்படும் எழுத்துப் பொறிப்பினால் அறிய முடிகிறது.

சிதம்பரம் கோயிலில் தெற்கு நுழைவுவாயிலில் ஒரு மணி
காணப்படுகிறது. கோயிலில் மாலை வழிபாட்டின்போது இம்மணி
ஒலிக்கப்படுகிறது. இம்மணியின் மேல் காணப்படும் எழுத்துப்
பொறிப்பில் "1884-ஆம் ஆண்டு சிதம்பரம் கோயிலுக்கு உபயமாக
அளிக்கப்பட்டதை' அறியமுடிகிறது.

"சிதம்பரம் நடேசருக்கு சிங்கப்பூரில் தியம் கவுன்சில் தன் கம் சென்
உபயம் - தாரண வருடம்' என்ற எழுத்துக்கள் புடைப்பாகக் காணப்
படுகின்றன. இந்த மணி தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர்
கடல் கடந்து சிதம்பரம் கோயிலுக்கு தானமாக அளித்திருக்கும்
செய்தி சிறப்பானது.

ஆஸ்திரேலியா அருகில் உள்ள நியூசிலாந்து நாட்டில் தமிழ்
எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உடைந்த வெண்கல மணி ஒன்று
1836-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு தற்பொழுது அந்நாட்டு
அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இம்மணியில், முகைய்யதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி”
என்று புடைப்பு எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இம்மணி இடம்
பெற்றிருந்த கப்பல் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் புழக்கத்திலிருந்த
ஒரு வணிகக் கப்பலாக இருக்கக்கூடும் என்பது வரலாற்றுக்
குறிப்புகளால் தெரிய வருகிறது.

தமிழர்கள் கடல் வணிகத்தில் சிறப்புப் பெற்று விளங்கினர்
என்பதற்கு நியூசிலாந்து நாட்டில் கிடைத்த மணி சான்றாக
அமைகிறது.
-
---------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 09, 2019 5:03 pm


தஞ்சை மாவட்டத்தில் கடற்கரைப் பகுதியிலிருந்து வெண்கல மணி
ஒன்றும், சீன செப்புக்காசுகளும் கிடைத்துள்ளன. மணியின்
எதிரெதிர் பக்கங்களில் சீன எழுத்துக்கள் காணப்படுகின்றன.

சீன மொழியில் “பீன்-ஆங்” என்று அழைக்கின்றனர். ஜப்பானிய
மொழியில் இதனை “ஹீ-யான்” என அழைக்கின்றனர்.

இரண்டுக்கும் “சாந்தி” - அமைதி - சமாதானம் என்பது பொருள்.
சீன நாட்டுக்கும் தமிழகத்திற்கும் நல்ல நட்புறவு இருந்து வந்ததற்கும்,
கடல் சார் வரலாற்று ஆய்வுக்கும் முக்கிய சான்றாக விளங்குகிறது.

பூம்புகார் அருகே உள்ள தரங்கம்பாடி சங்க காலத்திலிருந்து
ஆங்கிலேயர் காலம் வரையிலான தொடர்ச்சியான வரலாற்றுடன்
விளங்குகிறது. பாண்டியர் கல்வெட்டில் இவ்வூர் "சடங்கன் பாடியான
குலசேகரபட்டினம்'” எனக் குறிக்கப்படுகிறது.

இங்குள்ள டேனிஷ் கோட்டை 1620-இல் தஞ்சையை ஆண்ட
ரகுநாதநாயக்கருடன் வணிக ஒப்பந்தம் செய்து கொண்டு,
இக்கோட்டையை டென்மார்க் நாட்டினர் அமைத்தனர். இங்குள்ள
சீயோன் தேவலாயத்தில் வைக்கப்பட்டுள்ள மணி டென்மார்க்
நாட்டுடன் கொண்டிருந்த தொடர்பினை எடுத்துக் கூறுகிறது.

கோயில் வழிபாட்டிற்காக அளிக்கப்பட்டிருந்தாலும், அதன் மேல்
பொறிக்கப்பட்டுள்ள எழுத்துப் பொறிப்பு அம்மணி எங்கு
வார்க்கப்பட்டது, யாரால் எந்த நாட்டைச் சேர்ந்தவர் அளித்தார்
என்ற செய்திகளைக் கூறுகிறது.

அனைத்து சமய ஆலயங்களில் காணப்படும் "மணிகள்' ஓர் சிறந்த
வரலாற்றுச் சான்றாக அமைகின்றன. சிறப்பாக கடற்கரை அருகில்
உள்ள ஆலயங்களில் காணப்படும் - வழிபாட்டில் இருக்கும்
மணிகளில் காணப்படும் எழுத்துப் பொறிப்புகளை ஆய்வு செய்தால்
மேலும் பல அரிய செய்திகளை அறியலாம்.

திருக்கோயில் மணிகள், இறைவழிபாட்டில் பங்குபெற்று
விளங்கினாலும் கோயில் மீது அன்பர்கள் கொண்டிருந்த
ஈடுபாட்டினையும் எடுத்துக் கூறும் வரலாற்றுச் சான்றுகளாகத் தி
கழ்கின்றன.

-
-------------------------------------

- கி. ஸ்ரீதரன் தொல்லியல் துறை (ஓய்வு), சென்னை
நன்றி- தினமணி




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக